மலேஷிய விமானச் சேவையின் எம்.எச் - 17 விமானம் 17-ஆம் திகதி ஜூலை மாதம் உக்ரேனின் கிழக்குப் பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட முன்னர் நான்கு பயணிகள் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன. 1973ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி லிபியப் பயணிகள் விமானச் சேவையின் பறப்பு -114 இஸ்ரேலிய விமானப் படையினால் சினாய் பாலைவனத்தில் வைத்துச் சுட்டுவீழ்த்தப்பட்டது. 1978-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20ஆம் திகதி தென் கொரிய விமானச் சேவையின் பறப்பு - 902 பரிஸில் இருந்து சியோல் நோக்கிப் பறந்து கொண்டிருக்கையில் திசை மாறி சோவியத் பிராந்தியத்தினுள் நுழைந்த படியால் சோவியத் படையினர் அதைத் தரையிறங்கச் செய்து அதன் மீது சுட்டனர். அதில் இருவர் கொல்லப்பட்டனர்.
1983ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி மீண்டும் கொரிய விமானச் சேவையின் பறப்பு – -007 சோவியத் பிராந்தியத்தினுள் தவறுதலாக நுழைந்ததால் அது சுட்டு வீழ்த்தப்பட்டு எல்லாப் பயணிகளும் (269) கொல்லப்பட்டனர். ஈரான் - ஈராக் போர் நடந்து கொண்டிருக்கையில் 1988ஆம் ஆண்டு ஜுலை மாதம் 3ஆம் திகதி வளை குடாவில் நிலை கொண்டிருந்த அமெரிக்கக் கடற்படைக் கப்பல் அதனை நோக்கி வந்த ஈரானிய பயணிகள் விமானச் சேவையின் பறப்பு – -655 ஈரானின் போர் விமானம் எனக் கருதி சுட்டு வீழ்த்தியது. இன்று வரை அமெரிக்கா இது தவறுதலாக நடந்தது எனச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஈரான் அது பயணிகள் விமானம் என்று தெரிந்தே செய்யப்பட்டது என்கின்றது. இதில் சம்பந்தப்பட்ட அமெரிக்கக் கடற்படையின் கப்டன் தான் ஒரு போதும் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
உக்ரேனியக் கிளர்ச்சிக்காரர்களிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள்
அண்மைக் காலங்களாக உலகெங்கும் உள்ள பல விடுதலை இயக்கங்கள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை எடுப்பதற்கு பல ஆண்டுகளாக பல முயற்சிகள் எடுத்துத் தோல்வியடைந்துள்ளன. ஆனால், தொடங்கி ஓராண்டு கூடப் பூர்த்தி செய்யாத உக்ரேனியக் கிளர்ச்சிக்காரர்களிடம் எப்படி விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கிடைத்தன? Malaysia Airlines Flight –17 விமானம் விழுந்த இடத்திற்கு சர்வதேச விசாரணைக் குழுவினரை செல்லவிடாமல் ரஷ்ய சார்பினராகக் கருதப்படும் உக்ரேனியக் கிளர்ச்சிக்காரர்கள் தடுத்தது ஏன்? என்ற கேள்விகள் எழுகின்றன.
மலேஷிய விமானத்தின் கெடுகாலம் – கிழக்கே சூலம்
Malaysia Airlines Flight –17 மலேஷிய நேரப்படி 2014 ஜூலை 17ஆம் திகதி மாலை 6.-15 மணிக்கு நெதர்லாந்தின் அம்ஸ்ரடம் விமான நிலையத்தில் இருந்து 283 பயணிகளுடனும் 15 பணியாளர்களுடனும் புறப்படுகின்றது. நான்கு மணித்தியாலங்கள் கழித்து அந்த விமானம் உக்ரேனின் ரஷ்யாவிற்கு அண்மித்த எல்லையில் பறந்து கொண்டிருக்கும் போது உக்ரேனிய விமானக் கட்டுப்பாட்டகம் Malaysia Airlines Flight – 17உடனான தொடர்புகளை இழக்கின்றது. இத் தொடர்புத் துண்டிப்பு மலேஷிய விமானச் சேவைக்கு அறிவிக்கப் படுகின்றது. இரவு 11.-40இற்கு Malaysia Airlines Flight –17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து செயற்படும் Interfax செய்தி முகவரகம் செய்தி வெளியிடுகின்றது
சுட்டது யார்?
Malaysia Airlines Flight –17விமானத்தை யார் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது தொடர்பான சர்ச்சை விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட மறுநாளே ஆரம்பித்து விட்டது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனின் டொனெட்ஸ்க் (Donets) பிராந்தியத்தில் ரஷ்யர்களே அதிகமாக வாழ்கின்றார்கள். இவர்கள் தமக்கென ஒரு தனி நாடு வேண்டும் என்று கிளர்ச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை Self-defence forces of the Donetsk People’s Republic என அழைப்பார்கள்.
இவர்களுக்கு ரஷ்ய அரசின் ஆதரவு உண்டு. உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியதுடன் இணைந்து செயற்படாமல் ரஷ்யாவின் யூரோ - ஏசியன் ஒன்றியத்தில் இணைந்து செயற்பட வேண்டும் என உக்ரேனை ரஷ்யா நிர்ப்பந்தித்து வருகின்றது. இதனால் உக்ரேனில் வாழும் ரஷ்யர்கள் உக்ரேனிய அரசுக்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்து வருகின்றார்கள். ஏற்கனவே உக்ரேனின் ஒரு பிராந்தியமான கிறிமியா ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. Malaysia Airlines Flight –17விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட டொனெட்ஸ்க் (Donets) பிராந்தியம் உக்ரேன் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. அவர்கள் ஏற்கனவே உக்ரேனிய அரச படையினரின் ஆறுக்கு மேற்பட்ட விமானங்களைச் சுட்டு வீழ்த்தி உள்ளனர். உக்ரேனிய உள்நாட்டுக் குழப்பம் தொடங்கியதில் இருந்து உக்ரேனிய அரச படைகள் எந்த ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வீசியதில்லை.
விமானப் பிரச்சினைகள் நிறைந்த உக்ரேன்
ரஷ்ய மிக்-–29 விமானம் ஒன்று உக்ரேனின் Su-–25M1 போர் விமானத்தை ஜூலை மாதம் 16ஆம் திகதி (மலேஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதிற்கு முதல் நாள்) சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படுகின்றது. இதைத் தொடர்ந்து உக்ரேனிய வான்பரப்பில் உக்ரேனிய விமானப் படையின் Su–-27 விமானங்கள் பல பாதுகாப்புப் பறப்புக்கள் செய்யத் தொடங்கின. ஈரானின் விமானத்துறை நிபுணர் ஒருவர் உக்ரேனின் படை விமானங்கள் மலேஷிய விமானத்திற்கு பாதுகாப்பு வழங்கும் முகமாக உடன் பறந்து சென்றிருக்கலாம். இதனால் மலேஷிய விமானத்தை சுட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என்கின்றார். மலேஷியாவின் MH–17 ஒரு போயிங் 777 விமானம்ஆகும். உக்ரேனிய விமானப் படையினரின் விமானங்களுடன் ஒப்பிடுகையில் போயிங் 777 மிகவும் பெரிய விமானமாகும். போயிங் 777 விமானத்தை ஒரு பயிற்சி பெற்ற ஏவுகணைச் செலுத்துனரால் இலகுவாக ஒரு பயணி விமானம் என அடையாளம் காண முடியும். மலேஷியாவின் MH–17 உக்ரேனிற்கு மேலாகப் பறக்கும் போது அதற்குப் பாதுகாப்பாக உக்ரேனின் விமானப் படையின் Su-–27 போர் விமானங்கள் பறந்து சென்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது எங்க ஏரியா உள்ளே வராதே!
விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட இடத்திற்கு முதலில் எவரையும் அனுமதிக்காத ரஷ்யக் கிளர்ச்சியாளர்கள், அங்கிருந்து இறந்த சடலங்களையும் பல தடயங்களையும் அப்புறப்படுத்தினர். விமானத்தின் கறுப்புப் பெட்டியைக் கையளிப்பதில் முதலில் தாமதம் ஏற்பட்டது. அது ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் எனச் செய்திகள் பரவிய பின்னர் அது விசாரிக்க வந்தவர்களிடம் கையளிக்கப்பட்டது. விமானம் சுட்டு வீழ்த்தியது தொடர்பான ஒரு விசாரணைக்காக உக்ரேனிய அரச படையினருக்கும் டொனெட்ஸ்க் குடியரசின் தற்பாதுகாப்புப் படையினருக்கும் (Self-defence forces of the Donetsk People’s Republic) இடையில் ஒரு போர் நிறுத்தம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது,
ஆனால், அது நடைபெறவில்லை. சர்வதேச விசாரணைக் குழு ஒன்றிற்கு உக்ரேனில் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் இருக்கும் பிரதேசத்தில் விமானம் விழுந்த இடத்தில் கட்டுப்பாடற்ற முறையில் விசாரணை செய்ய அனுமதிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானம் ஜூலை 21ஆம் திகதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வீழ்ந்த விமானத்தில் பயணித்தவர்களின் இறந்த சடலங்களை உக்ரேனின் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் எடுத்துச் சென்று ஒரு தொடரூந்து வண்டியின் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் வைத்திருந்தனர். அந்த சடலங்களில் இருக்கும் உலோகத் துண்டுகளை அகற்றுவதற்கு அப்படிச் செய்தார்கள் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. அந்த உலோகத் துண்டுகளை வைத்து விமானம் ஏவுகணைகளால் சுட்டு விழ்த்தப் பட்டதாக நிரூபிக்க முடியும். விமானத்தின் கறுப்புப் பெட்டி 21ஆம் திகதியே கையளிக்கப்பட்டது.
திசை மாறிய பறவை - வடக்கே சூலம்
Malaysia Airlines Flight –17 விமானம் உக்ரேனின் தென் பகுதியூடாகப் பறப்பதாக இருந்தது. ஆனால் அது வழிமாறி உக்ரேனின் வட கிழக்குப் பகுதிக்கு மேலால் பறந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. சில வல்லரசு நாடுகள் பயணிகள் விமானங்களில் ஒளிப்பதிவுக் கருவிகளைப் பொருத்தி அந்த விமானங்களை வழிதவறிச் செல்வது போல் பிரச்சினைக்கு உரிய அல்லது படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களுக்கு மேலாகப் பறக்கச் செய்வார்கள். Malaysia Airlines Flight 17 விமானத்திற்கும் இப்படி நடந்ததா? ஆனால் ஐரோப்பிய விமான ஓட்டிகளின் ஒன்றியத்தின் (European Cockpit Association) தலைவர் தான் இதே காலப்பகுதிகளில் உக்ரேனூடாகப் பறக்கும் போது மோசமான கால நிலை காரணமாக தானும் KLM விமானங்களை வழமையான பாதையில் இருந்து வடக்குப் பக்கமாக விலகிப் பறந்ததுண்டு என்கின்றார். பிரித்தானிய விமானச் சேவைகள் தமது பறப்புக்களை உக்ரேனூடாகச் செய்வதில்லை.
காட்டிக் கொடுக்கும் சமூக வலைத்தளப் பதிவு
Malaysia Airlines Flight – 17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதன் பின்னர் ரஷ்யாவின் ஆதரவுடன் செயற்படும் உக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்களில் ஒருவர், தாம் உக்ரேனிய விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாகப் ஒருபதிவு இட்டிருந்தார். பின்னர் அந்தப் பதிவை அழித்து விட்டார்.
காட்டிக் கொடுக்கும் படங்கள்
மலேஷிய விமானத்தைச் சுட்டதாகக் கருதப்படும் Buk SA-–11 launcher என்னும் நிலத்தில் இருந்து விண்ணிற்கு ஏவுகணைகளை ஏவும் வண்டிகள் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களின் பகுதியின் நின்ற படங்களும் பின்னர் அவை ரஷ்யாவிற்கு மாற்றப்பட்டு நிற்கும் படங்களும் வெளிவந்துள்ளன.
உக்ரேனிய அரசின் ஒலிப்பதிவு
உக்ரேனிய அரசுக்கு எதிராகச் செயற்படும் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களின் உரையாடல்களை தாம் இடைமறித்து ஒட்டுக் கேட்ட போது அவர்கள் ஒரு பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக உரையாடியதாக உக்ரேனிய அரசு சொல்கின்றது. உக்ரேனிய அரசு வெளிவிட்ட உரையாடல் மொழிபெயர்ப்பு இப்படி இருக்கின்றது:
"We have just shot down a plane. It's 100 percent a passenger aircraft It's totally The pieces are falling right into yards. There are no weapons on the site. Absolutely nothing. Civilian items, medicinal stuff, towels, toilet paper." நாம் இப்போது ஒரு 100வீதம் பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்திவிட்டோம். இது முழுமையான…….(சொல்லக்கூடாத சொல்). இங்கு துண்டுகள் வீழ்ந்தவண்ணம் இருக்கின்றன. விழுந்த இடத்தில் ஒரு படைக்கலனும் இல்லை. எதுவுமே இல்லை. குடிமக்கள் பொருட்களான மருந்துகள், துவாய்கள், கழிப்பறைக் கடுதாசிகள் மட்டுமே.
செய்மதிப்படங்கள்
ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கப்பட்ட செய்மதிப் படங்களில் விமானம் வீழ்த்தப்பட்ட இடத்தில் இருந்து தரையில் இருந்து விண்ணை நோக்கி ஏவுகணைகள் புகை கக்கிக் கொண்டு பாய்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரிக்கப் போனவர்கள் அமெரிக்கக் கைப்பொம்மைகளாம்.
உக்ரேனில் மலேஷிய விமானம் விழுந்த பகுதிக்கு விசாரிக்கச் சென்ற Organization for Security and Cooperation in Europe (OSCE) அமைப்பினர் அமெரிக்காவின் கைப்பொம்மைகள் என்கின்றனர் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள்.
ரஷ்யாவிற்குப் பின்னடைவு
மலேஷிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டமை உக்ரேனை தன்வசமாக்கும் ரஷ்யாவின் முயற்சிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது என்கின்றன மேற்கு நாட்டு ஊடகங்கள். 1983ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தென் கொரியாவின் பயணிகள் விமானத்தைச் சுட்டு விழுத்திய பின்னர் சோவியத் ஒன்றியம் வலுவிழந்து வீழ்ச்சியடைந்தது. அது போல இப்போது ரஷ்யாவிற்கும் நடக்கும் என்கின்றன சில ஊடகங்கள். தென் கொரிய Korean Airlines Boeing 747 விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மிருகத்தனமான செயல் எனக் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தால் கண்டித்தார். "It was an act of barbarism, born of a society which wantonly disregards individual rights and value of human life and seeks constantly to expand and dominate other nations." என்பது அவர் பாவித்த வார்த்தை. அப்போது சோவியத் ஒன்றியம் தாம் அனுப்பிய சமிக்ஞைகளை தென் கொரிய விமானம் புறக்கணித்ததாகச் சொன்னது. பின்னர் அது பொய் என நிரூபணமானது.
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை.
ஏற்கனவே கிறிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்தமைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடையை விதித்திருந்தன. மலேஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டததைத் தொடர்ந்து மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது பற்றி ஆலோசித்து வருகின்றன. இனிவரும் பொருளாதாரத் தடையை ஆசியன் நாடுகளையும் இணைத்துக் கொண்டு செய்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு. தற்போது உல கிற்குத் தேவைப் படும் பொருளாதார வளர்ச்சிக்கு பொருளா தாரத் தடைகள் உகந்தவை அல்ல.
–வேல் தர்மா
1983ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதலாம் திகதி மீண்டும் கொரிய விமானச் சேவையின் பறப்பு – -007 சோவியத் பிராந்தியத்தினுள் தவறுதலாக நுழைந்ததால் அது சுட்டு வீழ்த்தப்பட்டு எல்லாப் பயணிகளும் (269) கொல்லப்பட்டனர். ஈரான் - ஈராக் போர் நடந்து கொண்டிருக்கையில் 1988ஆம் ஆண்டு ஜுலை மாதம் 3ஆம் திகதி வளை குடாவில் நிலை கொண்டிருந்த அமெரிக்கக் கடற்படைக் கப்பல் அதனை நோக்கி வந்த ஈரானிய பயணிகள் விமானச் சேவையின் பறப்பு – -655 ஈரானின் போர் விமானம் எனக் கருதி சுட்டு வீழ்த்தியது. இன்று வரை அமெரிக்கா இது தவறுதலாக நடந்தது எனச் சொல்லிக் கொண்டிருக்கின்றது. ஈரான் அது பயணிகள் விமானம் என்று தெரிந்தே செய்யப்பட்டது என்கின்றது. இதில் சம்பந்தப்பட்ட அமெரிக்கக் கடற்படையின் கப்டன் தான் ஒரு போதும் மன்னிப்புக் கேட்க மாட்டேன் என்று சொல்லிவிட்டார்.
உக்ரேனியக் கிளர்ச்சிக்காரர்களிடம் விமான எதிர்ப்பு ஏவுகணைகள்
அண்மைக் காலங்களாக உலகெங்கும் உள்ள பல விடுதலை இயக்கங்கள் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை எடுப்பதற்கு பல ஆண்டுகளாக பல முயற்சிகள் எடுத்துத் தோல்வியடைந்துள்ளன. ஆனால், தொடங்கி ஓராண்டு கூடப் பூர்த்தி செய்யாத உக்ரேனியக் கிளர்ச்சிக்காரர்களிடம் எப்படி விமான எதிர்ப்பு ஏவுகணைகள் கிடைத்தன? Malaysia Airlines Flight –17 விமானம் விழுந்த இடத்திற்கு சர்வதேச விசாரணைக் குழுவினரை செல்லவிடாமல் ரஷ்ய சார்பினராகக் கருதப்படும் உக்ரேனியக் கிளர்ச்சிக்காரர்கள் தடுத்தது ஏன்? என்ற கேள்விகள் எழுகின்றன.
மலேஷிய விமானத்தின் கெடுகாலம் – கிழக்கே சூலம்
Malaysia Airlines Flight –17 மலேஷிய நேரப்படி 2014 ஜூலை 17ஆம் திகதி மாலை 6.-15 மணிக்கு நெதர்லாந்தின் அம்ஸ்ரடம் விமான நிலையத்தில் இருந்து 283 பயணிகளுடனும் 15 பணியாளர்களுடனும் புறப்படுகின்றது. நான்கு மணித்தியாலங்கள் கழித்து அந்த விமானம் உக்ரேனின் ரஷ்யாவிற்கு அண்மித்த எல்லையில் பறந்து கொண்டிருக்கும் போது உக்ரேனிய விமானக் கட்டுப்பாட்டகம் Malaysia Airlines Flight – 17உடனான தொடர்புகளை இழக்கின்றது. இத் தொடர்புத் துண்டிப்பு மலேஷிய விமானச் சேவைக்கு அறிவிக்கப் படுகின்றது. இரவு 11.-40இற்கு Malaysia Airlines Flight –17 விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவிலிருந்து செயற்படும் Interfax செய்தி முகவரகம் செய்தி வெளியிடுகின்றது
சுட்டது யார்?
Malaysia Airlines Flight –17விமானத்தை யார் சுட்டு வீழ்த்தினார்கள் என்பது தொடர்பான சர்ச்சை விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட மறுநாளே ஆரம்பித்து விட்டது. விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனின் டொனெட்ஸ்க் (Donets) பிராந்தியத்தில் ரஷ்யர்களே அதிகமாக வாழ்கின்றார்கள். இவர்கள் தமக்கென ஒரு தனி நாடு வேண்டும் என்று கிளர்ச்சி செய்து கொண்டிருக்கின்றார்கள். இவர்களை Self-defence forces of the Donetsk People’s Republic என அழைப்பார்கள்.
இவர்களுக்கு ரஷ்ய அரசின் ஆதரவு உண்டு. உக்ரேன் ஐரோப்பிய ஒன்றியதுடன் இணைந்து செயற்படாமல் ரஷ்யாவின் யூரோ - ஏசியன் ஒன்றியத்தில் இணைந்து செயற்பட வேண்டும் என உக்ரேனை ரஷ்யா நிர்ப்பந்தித்து வருகின்றது. இதனால் உக்ரேனில் வாழும் ரஷ்யர்கள் உக்ரேனிய அரசுக்கு எதிராக பெரும் கிளர்ச்சி செய்து வருகின்றார்கள். ஏற்கனவே உக்ரேனின் ஒரு பிராந்தியமான கிறிமியா ரஷ்யாவுடன் இணைக்கப்பட்டு விட்டது. Malaysia Airlines Flight –17விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட டொனெட்ஸ்க் (Donets) பிராந்தியம் உக்ரேன் அரசுக்கு எதிராகக் கிளர்ச்சி செய்பவர்களின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றது. அவர்கள் ஏற்கனவே உக்ரேனிய அரச படையினரின் ஆறுக்கு மேற்பட்ட விமானங்களைச் சுட்டு வீழ்த்தி உள்ளனர். உக்ரேனிய உள்நாட்டுக் குழப்பம் தொடங்கியதில் இருந்து உக்ரேனிய அரச படைகள் எந்த ஒரு விமான எதிர்ப்பு ஏவுகணைகளையும் வீசியதில்லை.
விமானப் பிரச்சினைகள் நிறைந்த உக்ரேன்
ரஷ்ய மிக்-–29 விமானம் ஒன்று உக்ரேனின் Su-–25M1 போர் விமானத்தை ஜூலை மாதம் 16ஆம் திகதி (மலேஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதிற்கு முதல் நாள்) சுட்டு வீழ்த்தியதாகச் சொல்லப்படுகின்றது. இதைத் தொடர்ந்து உக்ரேனிய வான்பரப்பில் உக்ரேனிய விமானப் படையின் Su–-27 விமானங்கள் பல பாதுகாப்புப் பறப்புக்கள் செய்யத் தொடங்கின. ஈரானின் விமானத்துறை நிபுணர் ஒருவர் உக்ரேனின் படை விமானங்கள் மலேஷிய விமானத்திற்கு பாதுகாப்பு வழங்கும் முகமாக உடன் பறந்து சென்றிருக்கலாம். இதனால் மலேஷிய விமானத்தை சுட வேண்டிய நிலைமை ஏற்பட்டிருக்கலாம் என்கின்றார். மலேஷியாவின் MH–17 ஒரு போயிங் 777 விமானம்ஆகும். உக்ரேனிய விமானப் படையினரின் விமானங்களுடன் ஒப்பிடுகையில் போயிங் 777 மிகவும் பெரிய விமானமாகும். போயிங் 777 விமானத்தை ஒரு பயிற்சி பெற்ற ஏவுகணைச் செலுத்துனரால் இலகுவாக ஒரு பயணி விமானம் என அடையாளம் காண முடியும். மலேஷியாவின் MH–17 உக்ரேனிற்கு மேலாகப் பறக்கும் போது அதற்குப் பாதுகாப்பாக உக்ரேனின் விமானப் படையின் Su-–27 போர் விமானங்கள் பறந்து சென்றதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
இது எங்க ஏரியா உள்ளே வராதே!
விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட இடத்திற்கு முதலில் எவரையும் அனுமதிக்காத ரஷ்யக் கிளர்ச்சியாளர்கள், அங்கிருந்து இறந்த சடலங்களையும் பல தடயங்களையும் அப்புறப்படுத்தினர். விமானத்தின் கறுப்புப் பெட்டியைக் கையளிப்பதில் முதலில் தாமதம் ஏற்பட்டது. அது ரஷ்யாவிற்கு அனுப்பப்பட்டிருக்கலாம் எனச் செய்திகள் பரவிய பின்னர் அது விசாரிக்க வந்தவர்களிடம் கையளிக்கப்பட்டது. விமானம் சுட்டு வீழ்த்தியது தொடர்பான ஒரு விசாரணைக்காக உக்ரேனிய அரச படையினருக்கும் டொனெட்ஸ்க் குடியரசின் தற்பாதுகாப்புப் படையினருக்கும் (Self-defence forces of the Donetsk People’s Republic) இடையில் ஒரு போர் நிறுத்தம் வேண்டும் என வலியுறுத்தப்பட்டது,
ஆனால், அது நடைபெறவில்லை. சர்வதேச விசாரணைக் குழு ஒன்றிற்கு உக்ரேனில் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் இருக்கும் பிரதேசத்தில் விமானம் விழுந்த இடத்தில் கட்டுப்பாடற்ற முறையில் விசாரணை செய்ய அனுமதிக்கும் முகமாக ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையில் ஒரு தீர்மானம் ஜூலை 21ஆம் திகதி ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. வீழ்ந்த விமானத்தில் பயணித்தவர்களின் இறந்த சடலங்களை உக்ரேனின் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள் எடுத்துச் சென்று ஒரு தொடரூந்து வண்டியின் குளிரூட்டப்பட்ட அறைகளுக்குள் வைத்திருந்தனர். அந்த சடலங்களில் இருக்கும் உலோகத் துண்டுகளை அகற்றுவதற்கு அப்படிச் செய்தார்கள் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது. அந்த உலோகத் துண்டுகளை வைத்து விமானம் ஏவுகணைகளால் சுட்டு விழ்த்தப் பட்டதாக நிரூபிக்க முடியும். விமானத்தின் கறுப்புப் பெட்டி 21ஆம் திகதியே கையளிக்கப்பட்டது.
திசை மாறிய பறவை - வடக்கே சூலம்
Malaysia Airlines Flight –17 விமானம் உக்ரேனின் தென் பகுதியூடாகப் பறப்பதாக இருந்தது. ஆனால் அது வழிமாறி உக்ரேனின் வட கிழக்குப் பகுதிக்கு மேலால் பறந்தது ஏன் என்ற கேள்வியும் எழுந்தது. சில வல்லரசு நாடுகள் பயணிகள் விமானங்களில் ஒளிப்பதிவுக் கருவிகளைப் பொருத்தி அந்த விமானங்களை வழிதவறிச் செல்வது போல் பிரச்சினைக்கு உரிய அல்லது படைத்துறை முக்கியத்துவம் வாய்ந்த பிரதேசங்களுக்கு மேலாகப் பறக்கச் செய்வார்கள். Malaysia Airlines Flight 17 விமானத்திற்கும் இப்படி நடந்ததா? ஆனால் ஐரோப்பிய விமான ஓட்டிகளின் ஒன்றியத்தின் (European Cockpit Association) தலைவர் தான் இதே காலப்பகுதிகளில் உக்ரேனூடாகப் பறக்கும் போது மோசமான கால நிலை காரணமாக தானும் KLM விமானங்களை வழமையான பாதையில் இருந்து வடக்குப் பக்கமாக விலகிப் பறந்ததுண்டு என்கின்றார். பிரித்தானிய விமானச் சேவைகள் தமது பறப்புக்களை உக்ரேனூடாகச் செய்வதில்லை.
காட்டிக் கொடுக்கும் சமூக வலைத்தளப் பதிவு
Malaysia Airlines Flight – 17 விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டதன் பின்னர் ரஷ்யாவின் ஆதரவுடன் செயற்படும் உக்ரேன் அரசுக்கு எதிரான கிளர்ச்சிக்காரர்களின் தலைவர்களில் ஒருவர், தாம் உக்ரேனிய விமானம் ஒன்றை சுட்டு வீழ்த்தியதாகப் ஒருபதிவு இட்டிருந்தார். பின்னர் அந்தப் பதிவை அழித்து விட்டார்.
காட்டிக் கொடுக்கும் படங்கள்
மலேஷிய விமானத்தைச் சுட்டதாகக் கருதப்படும் Buk SA-–11 launcher என்னும் நிலத்தில் இருந்து விண்ணிற்கு ஏவுகணைகளை ஏவும் வண்டிகள் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களின் பகுதியின் நின்ற படங்களும் பின்னர் அவை ரஷ்யாவிற்கு மாற்றப்பட்டு நிற்கும் படங்களும் வெளிவந்துள்ளன.
உக்ரேனிய அரசின் ஒலிப்பதிவு
உக்ரேனிய அரசுக்கு எதிராகச் செயற்படும் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்களின் உரையாடல்களை தாம் இடைமறித்து ஒட்டுக் கேட்ட போது அவர்கள் ஒரு பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதாக உரையாடியதாக உக்ரேனிய அரசு சொல்கின்றது. உக்ரேனிய அரசு வெளிவிட்ட உரையாடல் மொழிபெயர்ப்பு இப்படி இருக்கின்றது:
"We have just shot down a plane. It's 100 percent a passenger aircraft It's totally The pieces are falling right into yards. There are no weapons on the site. Absolutely nothing. Civilian items, medicinal stuff, towels, toilet paper." நாம் இப்போது ஒரு 100வீதம் பயணிகள் விமானத்தைச் சுட்டு வீழ்த்திவிட்டோம். இது முழுமையான…….(சொல்லக்கூடாத சொல்). இங்கு துண்டுகள் வீழ்ந்தவண்ணம் இருக்கின்றன. விழுந்த இடத்தில் ஒரு படைக்கலனும் இல்லை. எதுவுமே இல்லை. குடிமக்கள் பொருட்களான மருந்துகள், துவாய்கள், கழிப்பறைக் கடுதாசிகள் மட்டுமே.
செய்மதிப்படங்கள்
ஐ.நா. சபையில் சமர்ப்பிக்கப்பட்ட செய்மதிப் படங்களில் விமானம் வீழ்த்தப்பட்ட இடத்தில் இருந்து தரையில் இருந்து விண்ணை நோக்கி ஏவுகணைகள் புகை கக்கிக் கொண்டு பாய்வது பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரிக்கப் போனவர்கள் அமெரிக்கக் கைப்பொம்மைகளாம்.
உக்ரேனில் மலேஷிய விமானம் விழுந்த பகுதிக்கு விசாரிக்கச் சென்ற Organization for Security and Cooperation in Europe (OSCE) அமைப்பினர் அமெரிக்காவின் கைப்பொம்மைகள் என்கின்றனர் ரஷ்ய ஆதரவுக் கிளர்ச்சிக்காரர்கள்.
ரஷ்யாவிற்குப் பின்னடைவு
மலேஷிய விமானம் சுட்டு வீழ்த்தப் பட்டமை உக்ரேனை தன்வசமாக்கும் ரஷ்யாவின் முயற்சிக்குப் பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது என்கின்றன மேற்கு நாட்டு ஊடகங்கள். 1983ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியம் தென் கொரியாவின் பயணிகள் விமானத்தைச் சுட்டு விழுத்திய பின்னர் சோவியத் ஒன்றியம் வலுவிழந்து வீழ்ச்சியடைந்தது. அது போல இப்போது ரஷ்யாவிற்கும் நடக்கும் என்கின்றன சில ஊடகங்கள். தென் கொரிய Korean Airlines Boeing 747 விமானத்தைச் சுட்டு வீழ்த்தியதை அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ரொனால்ட் ரீகன் மிருகத்தனமான செயல் எனக் கடுமையான வார்த்தைப் பிரயோகத்தால் கண்டித்தார். "It was an act of barbarism, born of a society which wantonly disregards individual rights and value of human life and seeks constantly to expand and dominate other nations." என்பது அவர் பாவித்த வார்த்தை. அப்போது சோவியத் ஒன்றியம் தாம் அனுப்பிய சமிக்ஞைகளை தென் கொரிய விமானம் புறக்கணித்ததாகச் சொன்னது. பின்னர் அது பொய் என நிரூபணமானது.
ரஷ்யாவிற்கு எதிரான பொருளாதாரத் தடை.
ஏற்கனவே கிறிமியாவை ரஷ்யா தன்னுடன் இணைத்தமைக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் வட அமெரிக்க நாடுகளும் ரஷ்யாவிற்கு எதிராக மட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரத் தடையை விதித்திருந்தன. மலேஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டததைத் தொடர்ந்து மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்பது பற்றி ஆலோசித்து வருகின்றன. இனிவரும் பொருளாதாரத் தடையை ஆசியன் நாடுகளையும் இணைத்துக் கொண்டு செய்வதற்கு வாய்ப்புக்கள் உண்டு. தற்போது உல கிற்குத் தேவைப் படும் பொருளாதார வளர்ச்சிக்கு பொருளா தாரத் தடைகள் உகந்தவை அல்ல.
–வேல் தர்மா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக