நியூயார்க்: சமீபத்திய பரபரப்புகள் மூலம் விளம்பரம் செய்து கொள்வதும் ஒரு வகை வியாபார யுக்தி தான். அந்தவகையில், சாம்சங் மொபைல் நிறுவனம் தனது வாட்டர் புரூப் தன்மையை நிரூபிக்கும் வகையில் ஐஸ் பக்கெட் சவாலை மேற்கொண்டு பரபரப்பை உண்டாக்கியுள்ளது.
இணைய உலகின் இப்போதைய ட்ரென்ட் ஐஸ் பக்கெட் சவால் தான். ஏ.எல்.எஸ். நோய் தொடர்பான விழிப்புணார்வை ஏற்படுத்துவதற்காக ஏ.எல்.எஸ். அமைப்பு அறிமுகப் படுத்தியது தான் இந்த ஐஸ்பக்கெட் சவால்.
இந்தச் சவாலில் தோற்பவர்கள் இந்த அமைப்பிற்கு நிதி தர வேண்டும். இந்த நிதி ரூ. 100 கோடியைத் தாண்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறாக இந்தச் சவாலில் ஜெயிப்பவர்கள் வேறு மூவரை இந்தச் சவாலை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்க வேண்டும்.
இந்நிலையில், சாம்சங் மொபைல் போன் இந்த ஐஸ் பக்கெட் சவாலை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய அறிமுகமான சாம்சங் காலெக்ஸி எஸ் 5 ஸ்மார்ட் போன் நீரினால் பாதிப்படையாதது. அதனை நிரூபிக்கும் வகையில் இந்த போன் ஐஸ் பக்கெட் சவால் செய்துள்ளது.
இது தொடர்பான வீடியோவில் சாம்சங் காலெக்ஸி போன் ஐஸ் தண்ணியில் குளித்தும் ஒன்றும் ஆகாமல் அப்படியே உள்ளது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த வீடியோஅவை சுமார் 28 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
பின்னர், சாம்சங் போனானது இதே சவாலை நீங்களும் செய்து காட்டுங்கள் பார்க்கலாம் என ஐபோன் 5 எஸ், நோக்கியா லூமியா 930 மற்றும் எச்டிஎஸ் ஒன் 8 ஆகியவற்றிற்கு சவால் விடுத்துள்ளது.
நல்ல நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் இந்த ஐஸ் பக்கெட் சவாலை, இப்படி விளம்பர நோக்கில் பயன்படுத்தலாமா என்ற கேள்விக்கும் விமர்சனத்திற்கும் சாம்சங் இலக்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது..
இணைய உலகின் இப்போதைய ட்ரென்ட் ஐஸ் பக்கெட் சவால் தான். ஏ.எல்.எஸ். நோய் தொடர்பான விழிப்புணார்வை ஏற்படுத்துவதற்காக ஏ.எல்.எஸ். அமைப்பு அறிமுகப் படுத்தியது தான் இந்த ஐஸ்பக்கெட் சவால்.
இந்தச் சவாலில் தோற்பவர்கள் இந்த அமைப்பிற்கு நிதி தர வேண்டும். இந்த நிதி ரூ. 100 கோடியைத் தாண்டி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மாறாக இந்தச் சவாலில் ஜெயிப்பவர்கள் வேறு மூவரை இந்தச் சவாலை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்க வேண்டும்.
இந்நிலையில், சாம்சங் மொபைல் போன் இந்த ஐஸ் பக்கெட் சவாலை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பான வீடியோ யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனத்தின் புதிய அறிமுகமான சாம்சங் காலெக்ஸி எஸ் 5 ஸ்மார்ட் போன் நீரினால் பாதிப்படையாதது. அதனை நிரூபிக்கும் வகையில் இந்த போன் ஐஸ் பக்கெட் சவால் செய்துள்ளது.
இது தொடர்பான வீடியோவில் சாம்சங் காலெக்ஸி போன் ஐஸ் தண்ணியில் குளித்தும் ஒன்றும் ஆகாமல் அப்படியே உள்ளது போன்ற காட்சிகள் உள்ளன. இந்த வீடியோஅவை சுமார் 28 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர்.
பின்னர், சாம்சங் போனானது இதே சவாலை நீங்களும் செய்து காட்டுங்கள் பார்க்கலாம் என ஐபோன் 5 எஸ், நோக்கியா லூமியா 930 மற்றும் எச்டிஎஸ் ஒன் 8 ஆகியவற்றிற்கு சவால் விடுத்துள்ளது.
நல்ல நோக்கத்திற்காக மேற்கொள்ளப்படும் இந்த ஐஸ் பக்கெட் சவாலை, இப்படி விளம்பர நோக்கில் பயன்படுத்தலாமா என்ற கேள்விக்கும் விமர்சனத்திற்கும் சாம்சங் இலக்காகியுள்ளது குறிப்பிடத்தக்கது..





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக