புதன், 5 நவம்பர், 2014

கணவரை இராணுவத்தினர் ஏற்றிச்செல்லும் புகைப்படம் வீரகேசரியில் பிரசுரமாகியுள்ளது : மனைவி ஆணைக்குழுமுன் மன்றாட்டம்

இறுதி யுத்­தத்­தின்­போது பொது மன்­னிப்பு வழங்­கப்­ப­டு­மென இரா­ணுவம் அறி­வித்­த­தற்கு அமைய ஒப்­ப­டைக்­கப்­பட்ட தனது கண­வரை தற்­பொ­ழு­து­வரை காண­வில்லை எனவும் இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைத்­த­பின்னர், வாக­னத்தில் ஏற்றிச் செல்­லப்­ப­டு­கின்ற புகைப்­ப­ட­மொன்று கடந்த 2009.7.24 அன்று வீர­கே­சரிப் பத்­தி­ரி­கையின் முன்­பக்­கத்தில் பிர­சு­ரிக்­கப்­பட்­டுள்­ள­தெ­னவும் இரு பிள்­ளை­களின் தாயார் ஒருவர் ஆணைக்­கு­ழுவின் முன்­னி­லையில் கதறி அழுது தனது கண­வரை மீட்டுத் தரு­மாறு நேற்றுக் கோரி­யுள்ளார்.




கற்­றுக்­கொண்ட பாடங்கள் மற்றும் நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­க­ளுக்­க­மைய ஜனா­தி­ப­தியால் நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் விசா­ர­ணைகள் முல்­லைத்­தீவில் மூன்­றா­வது நாளாக நேற்று ஒட்­டு­சுட்­டானில் இடம்­பெற்­றது.

இந்த விசா­ர­ணை­க­ளின்­போது விடு­தலைப் புலி­களின் அமைப்பின் ராதா வான் காப்பு படைப் பிரிவைச் சேர்ந்த கோணேஸ் என்­ப­வ­ரு­டைய மனை­வி­யான பத்­ம­ரஞ்­சினி சாட்­சி­ய­ம­ளிக்­கை­யி­லேயே இவ்­வாறு ஆணைக்­கு­ழு­விடம் கோரி­யி­ருந்தார்.

அவர் தொடர்ந்து சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

வன்­னியில் இடம்­பெற்ற இறுதி யுத்­தத்­தின்­போது கடந்த2009.5.18 அன்று நானும் எனது கண­வரும் இரு குழந்­தை­களும் இரா­ணுவக் கட்­டுப்­பாட்­டுப்­ப­கு­திக்குள் வட்­டு­வாகல் ஊடாக உட்­பி­ர­வே­சித்தோம். இதன்­போது இரா­ணு­வத்­தினர் விடு­தலைப் புலிகள் அமைப்பில் இணைந்து செயற்­பட்­ட­வர்­களை தம்­மிடம் சர­ண­டை­யு­மாறும் அவர்­க­ளுக்குப் பொது மன்­னிப்பு வழங்­கப்­ப­டு­மெ­னவும் ஒலி பெருக்­கி­களில் அறி­வித்­தனர்.

இந்த அறி­வித்­த­லுக்­க­மைய முல்­லைத்­தீவு செல்­வ­புரம் பகு­தியில் வைத்து நானும் எனது கண­வ­ரான ராதா படை­ய­ணியைச் சேர்ந்த நட­ராஜா சச்­சி­தா­னந்தம் (கோணேஸ் அப்­பொ­ழுது வயது 41) என்­ப­வரை இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைத்தேன். அதன்­பின்னர் இரா­ணு­வத்­தினர் எனது கண­வ­ரையும் மேலும் சில­ரையும் வாகனம் ஒன்றில் ஏற்றிச் சென்­றனர். இவ்­வாறு எனது கண­வரை ஏனை­ய­வர்­க­ளுடன் வாக­னத்தில் ஏற்றிச் செல்­கின்ற போது பிடிக்­கப்­பட்ட புகைப்­ப­ட­மொன்று கடந்த 2009.7.24 அன்று வீர­கே­சரி பத்­தி­ரி­கையின் முன்­பக்­கத்தில் பிர­சு­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. எனவே எனது கண­வரை மீட்டுத் தாருங்கள் என்றார்.

செஞ்­சி­லுவைச் சங்­கத்தின் சரக்குக் கப்­பலில் ஏற்­றப்­பட்­ட­வர்­களைக் காண­வில்லை.

கற்­சி­லை­ம­டுவைச் சேர்ந்த கந்­தையா ராச­மணி என்ற பெண் சாட்­சி­ம­ளிக்­கையில்,

எனது மக­னான கந்­தையா சந்­தி­ர­சே­கரம் (அப்­பொ­ழுது வயது 39) என்ற இரு பிள்­ளை­களின் தந்தை இறுதி யுத்­தத்­தின்­போது புதுக்­கு­டி­யி­ருப்புப் பகு­தியில் காய­ம­டைந்­தி­ருந்தார். இவரை புதுக்­கு­டி­யி­ருப்பு அர­சினர் வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சைக்­காகச் சேர்த்­தி­ருந்தோம். அங்கு ஷெல் தாக்­குதல் அதி­க­ரித்த நிலையில் மாத்­தளன் பாட­சா­லையில் இயங்­கிய பாட­சா­லைக்கு மாற்­றி­னார்கள். அங்கும் ஷெல் தாக்­குதல் அதி­க­ரித்­தி­ருந்த நிலையில் செஞ்­சி­லுவைச் சங்­கத்தின் சரக்குக் கப்­பலில் ஏற்றி திரு­கோ­ண­மலைப் பகு­திக்கு சிகிச்­சைக்­காக அனுப்­பி­யி­ருந்­தனர்.

அதன்­பின்னர் நாம் இரா­ணுவக் கட்­டுப்­பாட்டுப் பகு­திக்குள் வந்து எனது மகனைத் தேடினோம். ஆனால் அவரைத் தற்­பொ­ழுது வரைக் காண­வில்லை. எனவே அவரை மீட்டுத் தாருங்கள் என கதறி அழு­த­வாறு ஆணைக்­கு­ழு­விடம் கோரிக்கை விடுத்தார்.

இறந்­ததை தெரி­விக்­காமல் மரணச் சான்­றி­தழை வழங்­கு­கின்­றனர்.

முல்­லைத்­தீவு கரு­நாட்­டுக்­கே­ணியைச் சேர்ந்த ஒரு பிள்­ளையின் தாயா­ரான ஜெய­மலர் என்ற பெண் சாட்­சி­ய­ம­ளிக்­கையில்,

இறுதி யுத்தம் இடம்­பெற்­ற­பொ­ழுது 2009.5.17 அன்று நானும் எனது கண­வரும் எனது பிள்­ளையும் வட்­டு­வாகல் பகுதி ஊடாக இரா­ணுவக் கட்­டுப்­பாட்டுப் பகு­திக்குள் வரு­வ­தற்கு முயற்­சித்தோம். அப்­பொ­ழுது எனது கண­வ­ரான துரை­சிங்கம் ஜெயக்­கு­மா­ருக்கு (அப்­பொ­ழுது வயது 35) ஷெல் தாக்­கு­த­லினால் சிறு காயம் ஏற்­பட்­டது. இதனால் அவரை சிகிச்­சைக்­காக இரா­ணு­வத்­திடம் ஒப்­ப­டைத்தோம். இதன்­பின்னர் நானும் எனது பிள்­ளையும் இடைத்­தங்கல் முகா­முக்குச் சென்று தங்­கி­யி­ருந்தோம். அங்கு எங்­க­ளுக்கு கெப்­பி­டிப்­பொ­லாவ நீதி­மன்­றத்­தி­லி­ருந்து அறி­வித்தல் ஒன்று அனுப்­பப்­பட்­டி­ருந்­தது. அந்த அறி­வித்­த­லுக்கு அமைய எனது கண­வரை இறந்து விட்­ட­தாக மரணச் சான்­றிதழ் எனக்கு தரப்­பட்­டுள்­ளது.

ஆனால் எனது கண­வ­ருக்கு இறப்பு ஏற்­ப­டக்­கூ­டிய சந்­தர்ப்பம் இல்லை என்­பது எனக்கு நன்கு தெரியும். எனவே அவரை மீட்டுத் தாருங்கள் என குறித்த பெண் ஆணைக்­கு­ழு­விடம் கோரிக்கை விடுத்தார்.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கரைத்துறைப்பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற ஆணைக்குழுவின் விசாரணைகளில் அழைக்கப்பட்ட 57 பேரில் 44 பேர் சாட்சியமளித்துள்ளனர். இதேபோல் மறுநாள் திங்கட்கிழமை அங்கு நடைபெற்ற விசாரணைகளில் அழைக்கப்பட்ட 57 பேரில் 38 பேர் சாட்சியமளித்துள்ளனர்.

இதேபோல் நேற்று ஒட்டுசுட்டானில் நடைபெற்ற விசாரணைகளில் சாட்சிமளிப்பதற்காக 67 பேருக்கு அழைப்புக்கள் அனுப்பப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீரகேசரி

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல