கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்குதல் ஒரு முக்கிய பிரச்சினை. கர்ப்பம் தரித்த 100 பெண்களை எடுத்தால் அதில் ஒருவருக்கு இந்நிலை ஏற்படுகின்றது. கருக்கட்டிய முட்டையானது கர்ப்பப்பையிற்கு வெளியே தங்கி வளருவதால் கர்ப்பப்பையிற்கு வெளியேயான கருத்தரித்தல் நிலை (Ectopic) ஏற்படுகின்றது. இது கூடுதலாக கர்ப்பப்பையின் இரு புறத்திலும் காணப்படும் பலோப்பியன் குழாய்களில் ஏற்படுகின்றது. இவ்வாறான கரு வளரும்போது வயிற்று வலியையும் இரத்தப் போக்கையும் ஏற்படுத்துகின்றது. இதற்கு சரியான நேரத்தில் துரிதமாக சிகிச்சையளிக்காமல் விடின் இது வெடித்து வயிற்றினுள் அதிகூடிய இரத்த பெருக்கை ஏற்படுத்தி கர்ப்பிணித்தாய்க்கு மயக்கத்தையும் மரணத்தையும் ஏற்படுத்தும். இவ்வாறு இது ஒரு ஆபத்தான பிரச்சினையாக இருப்பதால் இது குறித்து மக்கள் அறிந்திருப்பது அவசியம்.
கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்கக் காரணம் என்ன?
கருக்கட்டிய முட்டை சாதாரண 4, 5 நாட்களில் பலோப்பியன் குழாய் வழியாக சூலகத்திலிருந்து கர்ப்பப்பையை நோக்கி பயணிக்கும் பின்னர் இக்கரு கர்ப்பப்பையினுள் தங்கி வளருவது வழக்கம். ஆனால் பலோப்பியன் குழாய்களில் அடைப்புக்களோ அல்லது சாதாரண சீர்குலைந்த நிலைகளோ இருப்பின் இக்கருக்கட்டிய முட்டை பலோப்பியன் குழாயினுள்ளேயே தங்கி வளர ஆரம்பிக்கும். இவ்வாறு பலோப்பியன் குழாய்களில் அடைப்புக்களும் அசாதாரண தன்மைகளும் ஏற்படக் காரணம் அடிவயிற்றிலேற்பட்ட கிருமித்தொற்றும் மற்றும் எண்டோமெற்றியோசிஸ் போன்ற நிலைகளும் பொறுப்பாக இருக்கும்.
கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்கும் எக்ரோபித் (Ectopic) நிலை எவ்வாறான வழிகளில் கண்டறியப்படும்?
கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்குவதாக சந்தேகித்தால் முதலில் அப்பெண்ணிற்கு கருத்தரித்தலை உறுதிப்படுத்தும் சிறுநீர்பரிசோதனையும் ஸ்கான் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். இந்த ஸ்கான் பரிசோதனையில் கருத்தரித்தல் உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணிற்கு கர்ப்பப்பையானது வெறுமையாக இருப்பின் கரு வெளியே எங்கேயோ தங்கியுள்ளதாக சந்தேகிக்க வேண்டும். பின்னர் அவரின் நோய் அறிகுறிகளின் உக்கிரத்தைப் பொறுத்து மேற்கொண்டு அவருக்குரிய சிகிச்சை தீர்மானிக்கப்படும். அதாவது நோய் அறிகுறிகள் தீவிரமில்லாது இருப்பின் மேற்கொண்டு ஒழுங்கான இரத்த பரிசோதனையில் HCG இன் அளவுகளைக் கணிப்பிடுவதன் மூலம் இந்நிலையை உறுதிப்படுத்தலாம். ஆனால் நோய் அறிகுறிகள் தீவிரமாகவும் உடல் நிலை ஆபத்தான நிலையிலும் இருப்பின் உடனடி சத்திர சிகிச்சைகள் இதற்கு தீர்வாக அமையும்.
கர்பப்பைக்கு வெளியே கரு தங்கும்போது எவ்வாறான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்?
கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்கியவர் எந்த நிலையில் வைத்தியசாலைக்கு வருகின்றார் என்பது முக்கியம். அதாவது பலோப்பியன் குழாயில் தங்கிய கரு வெடிப்பதற்கு முன்னரா? அல்லது வெடித்து வயிற்றினுள் அதிகளவு குருதிப்பெருக்கு ஏற்பட்டு வருகிறாரா? என்பதுதான் சிகிச்சை முறைகளைத் தீர்மானிக்கும்.
பலோப்பியன் குழாயில் தங்கிய கரு வெடிப்பதற்கு முன்னர் வந்தால் இவற்றை சிலவேளைகளில் இவற்றின் பருமன் மிக சிறிதாக இருப்பின் Methotrexate என்ற ஊசி மூலம் சிகிச்சை வழங்கப்படும். ஆனால் இந்த ஊசி மூலம் வழங்கப்படும் சிகிச்சைக்கு பெண்கள் தொடர்ச்சியாக வைத்தியசாலைக்கு வந்து இரத்தத்தில் HCG இன் அளவைப் பார்ப்பது அவசியம். அத்துடன் இம்முறை சிலவேளைகளில் வெற்றியளிப்பதுமில்லை. இவ்வாறு வெடிக்கும் முன்னர் வரும் பலோப்பியன் குழாயில் தங்கிய கருவிற்கு சிறந்த சிகிச்சையாக வயிற்றில் சிறு துளை போடப்பட்டு செய்யப்படும் லப்பிரஸ்கோப்பி (Laparoscopy) சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்படும். இதன்போது பாதிக்கப்பட்ட அந்த பலோப்பியன் குழாயை கருவுடன் சேர்த்து அகற்ற முடியும். சிலவேளைகளில் பெண்ணில் காணப்படும் இரண்டு பலோப்பியன் குழாய்களில் மற்றைய குழாயும் ஆலோக்கியமற்ற குழாயாக தோற்றமளிப்பின் இப்பாதிக்கப்பட்ட குழாயை முற்றாக அகற்றாது அதன் கருவை மட்டும் அகற்றி அந்த குழாயை தங்க வைப்பது அவசியமாகின்றது.இவ்வாறு பலோப்பியன் குழாயில் கரு தங்கியவர்கள் ஆபத்தான நிலையில் குழாய் வெடித்து அதிகளவான குருதிப்பெருக்கை வயிற்றினுள் ஏற்படுத்தி வருகின்றபோது இவர்களுக்கு லப்பிரஸ்கோப்பி சிகிச்சை மேற்கொள்ள முடியாது.
இதற்கு மாறாக வயிற்றைப் பெரிதளவில் வெட்டி திறந்து செய்யப்படும் லப்பிரட்டமி (Laparotomy) முறை மூலமே சிகிச்சையளிக்க வேண்டும். இதன்போது வெடித்த குழாயை முற்றாக அகற்ற வேண்டும். அத்துடன் அவர்களது குருதி இழப்பை ஈடு செய்ய குருதி ஏற்ற வேண்டிய நிலைகளும் உள்ளது.
கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்கி சிகிச்சைகள் எடுத்தவர் மீண்டும் கருத்தரிக்க முடியுமா?
கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்கி சிகிச்சைகள் பெற்றவர்கள் மூன்று மாத காலம் ஓய்வெடுத்து தமது உடல் நிலையை திடமாக்கிய பின்னர் இயற்கையாக கருத்தரிக்க முடியும். அதாவது இவர்களுக்கு ஒரு பலோப்பியன் குழாய் அகற்றப்பட்டு இருந்தாலும் மற்றைய பலோப்பியன் குழாய் இருப்பதனால் அவர்களால் எத்தனை முறை வேண்டுமானாலும் இயற்கையாக கருத்தரிக்க முடியும். அவ்வாறு கருத்தரித்தவர்கள் சாதாரண கர்ப்ப காலத்தை தொடர்ந்து சாதாரண பிரசவத்தை மேற்கொள்ள முடியும்.
பலோப்பியன் குழாயில் கருத்தங்கியவர்களுக்கு மீண்டும் இந்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதா ?
பலோப்பியன் குழாயில் கரு தங்கி சிகிச்சை பெற்றவர்கள் மீண்டும் கருத்தரிக்கும் போது மீண்டும் அவ்வாறு நடைபெற ஒரு சிறிய வாய்ப்புள்ளது. ஆகையால் இவ்வாறானவர்கள் மீண்டும் கருத்தரித்தவுடன் ஒரு வைத்திய நிபுணரை சந்தித்து ஸ்கான் பரிசோதனை மூலம் கர்ப்பப்பைக்கு உள்ளேயா? வெளியேயா? தங்கியுள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்குதல் எவ்வாறானவர்களில் கூடுதலாக ஏற்படுகின்றது?
அடிவயிற்றில் கிருமித்தொற்று ஏற்பட்டவர்களில் பலோப்பியன் குழாய்கள் அசாதாரண தன்மையை காட்டுவதால் இந்நிலை கூடுதலாக ஏற்பட வாய்ப்புள்ளது. பலோப்பியன் குழாய் அடைப்புகளுக்காக சிகிச்சைகள் மேற்கொண்டவர்கள் மற்றும் கருத்தடை சத்திர சிகிச்சையை மீண்டும் குழந்தை வேண்டுமென்பதற்காக மறுசீரமைத்தவர்கள் என்பவர்களில் கூடுதலாக ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே கடந்த காலங்களில் கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்கியவர்களில் மீண்டும் இந்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இதற்கான சந்தர்ப்பம் குறைவு. ஏனெனில் கூடுதலானவர்கள் சாதாரண கர்ப்பக்காலத்தையும் சாதாரண பிரசவத்தையும் மேற்கொள்வதை காணக்கூடியதாகவுள்ளது.
குழந்தைப்பாக்கியம் தாமதமடைபவர்களில் சிகிச்சையின் போது செயற்கை முறைக் கருக்கட்டலை மேற்கொள்கின்றோம். இதன்போது கர்ப்பப்பைக்கு வெளியில் கரு தங்க வாய்ப்புள்ளது. குடும்ப கட்டுப்பாட்டு முறையாக லூப் (Loop) கர்ப்பப்பையினுள் போட்டிருக்கும் சிலரிலும் கர்ப்பப்பைக்கு வெளியில் கரு தங்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்குவது ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய முக்கிய பிரச்சினை. இதனால் கர்ப்பக்காலத்தில் முதல் 1-2 மாத காலப்பகுதியில் அடி வயிற்று வலி ஏற்பட்டால் வைத்திய ஆலோசனையை நாடுவது இன்றியமையாதது. இதன்போது இதற்கான வாய்ப்புக்களேதும் உள்ளதா? எனப்பார்க்க முடியும்.
கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்கக் காரணம் என்ன?
கருக்கட்டிய முட்டை சாதாரண 4, 5 நாட்களில் பலோப்பியன் குழாய் வழியாக சூலகத்திலிருந்து கர்ப்பப்பையை நோக்கி பயணிக்கும் பின்னர் இக்கரு கர்ப்பப்பையினுள் தங்கி வளருவது வழக்கம். ஆனால் பலோப்பியன் குழாய்களில் அடைப்புக்களோ அல்லது சாதாரண சீர்குலைந்த நிலைகளோ இருப்பின் இக்கருக்கட்டிய முட்டை பலோப்பியன் குழாயினுள்ளேயே தங்கி வளர ஆரம்பிக்கும். இவ்வாறு பலோப்பியன் குழாய்களில் அடைப்புக்களும் அசாதாரண தன்மைகளும் ஏற்படக் காரணம் அடிவயிற்றிலேற்பட்ட கிருமித்தொற்றும் மற்றும் எண்டோமெற்றியோசிஸ் போன்ற நிலைகளும் பொறுப்பாக இருக்கும்.
கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்கும் எக்ரோபித் (Ectopic) நிலை எவ்வாறான வழிகளில் கண்டறியப்படும்?
கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்குவதாக சந்தேகித்தால் முதலில் அப்பெண்ணிற்கு கருத்தரித்தலை உறுதிப்படுத்தும் சிறுநீர்பரிசோதனையும் ஸ்கான் பரிசோதனையும் மேற்கொள்ளப்படும். இந்த ஸ்கான் பரிசோதனையில் கருத்தரித்தல் உறுதிப்படுத்தப்பட்ட பெண்ணிற்கு கர்ப்பப்பையானது வெறுமையாக இருப்பின் கரு வெளியே எங்கேயோ தங்கியுள்ளதாக சந்தேகிக்க வேண்டும். பின்னர் அவரின் நோய் அறிகுறிகளின் உக்கிரத்தைப் பொறுத்து மேற்கொண்டு அவருக்குரிய சிகிச்சை தீர்மானிக்கப்படும். அதாவது நோய் அறிகுறிகள் தீவிரமில்லாது இருப்பின் மேற்கொண்டு ஒழுங்கான இரத்த பரிசோதனையில் HCG இன் அளவுகளைக் கணிப்பிடுவதன் மூலம் இந்நிலையை உறுதிப்படுத்தலாம். ஆனால் நோய் அறிகுறிகள் தீவிரமாகவும் உடல் நிலை ஆபத்தான நிலையிலும் இருப்பின் உடனடி சத்திர சிகிச்சைகள் இதற்கு தீர்வாக அமையும்.
கர்பப்பைக்கு வெளியே கரு தங்கும்போது எவ்வாறான சிகிச்சைகள் மேற்கொள்ளப்படும்?
கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்கியவர் எந்த நிலையில் வைத்தியசாலைக்கு வருகின்றார் என்பது முக்கியம். அதாவது பலோப்பியன் குழாயில் தங்கிய கரு வெடிப்பதற்கு முன்னரா? அல்லது வெடித்து வயிற்றினுள் அதிகளவு குருதிப்பெருக்கு ஏற்பட்டு வருகிறாரா? என்பதுதான் சிகிச்சை முறைகளைத் தீர்மானிக்கும்.
பலோப்பியன் குழாயில் தங்கிய கரு வெடிப்பதற்கு முன்னர் வந்தால் இவற்றை சிலவேளைகளில் இவற்றின் பருமன் மிக சிறிதாக இருப்பின் Methotrexate என்ற ஊசி மூலம் சிகிச்சை வழங்கப்படும். ஆனால் இந்த ஊசி மூலம் வழங்கப்படும் சிகிச்சைக்கு பெண்கள் தொடர்ச்சியாக வைத்தியசாலைக்கு வந்து இரத்தத்தில் HCG இன் அளவைப் பார்ப்பது அவசியம். அத்துடன் இம்முறை சிலவேளைகளில் வெற்றியளிப்பதுமில்லை. இவ்வாறு வெடிக்கும் முன்னர் வரும் பலோப்பியன் குழாயில் தங்கிய கருவிற்கு சிறந்த சிகிச்சையாக வயிற்றில் சிறு துளை போடப்பட்டு செய்யப்படும் லப்பிரஸ்கோப்பி (Laparoscopy) சிகிச்சை மூலம் மேற்கொள்ளப்படும். இதன்போது பாதிக்கப்பட்ட அந்த பலோப்பியன் குழாயை கருவுடன் சேர்த்து அகற்ற முடியும். சிலவேளைகளில் பெண்ணில் காணப்படும் இரண்டு பலோப்பியன் குழாய்களில் மற்றைய குழாயும் ஆலோக்கியமற்ற குழாயாக தோற்றமளிப்பின் இப்பாதிக்கப்பட்ட குழாயை முற்றாக அகற்றாது அதன் கருவை மட்டும் அகற்றி அந்த குழாயை தங்க வைப்பது அவசியமாகின்றது.இவ்வாறு பலோப்பியன் குழாயில் கரு தங்கியவர்கள் ஆபத்தான நிலையில் குழாய் வெடித்து அதிகளவான குருதிப்பெருக்கை வயிற்றினுள் ஏற்படுத்தி வருகின்றபோது இவர்களுக்கு லப்பிரஸ்கோப்பி சிகிச்சை மேற்கொள்ள முடியாது.
இதற்கு மாறாக வயிற்றைப் பெரிதளவில் வெட்டி திறந்து செய்யப்படும் லப்பிரட்டமி (Laparotomy) முறை மூலமே சிகிச்சையளிக்க வேண்டும். இதன்போது வெடித்த குழாயை முற்றாக அகற்ற வேண்டும். அத்துடன் அவர்களது குருதி இழப்பை ஈடு செய்ய குருதி ஏற்ற வேண்டிய நிலைகளும் உள்ளது.
கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்கி சிகிச்சைகள் எடுத்தவர் மீண்டும் கருத்தரிக்க முடியுமா?
கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்கி சிகிச்சைகள் பெற்றவர்கள் மூன்று மாத காலம் ஓய்வெடுத்து தமது உடல் நிலையை திடமாக்கிய பின்னர் இயற்கையாக கருத்தரிக்க முடியும். அதாவது இவர்களுக்கு ஒரு பலோப்பியன் குழாய் அகற்றப்பட்டு இருந்தாலும் மற்றைய பலோப்பியன் குழாய் இருப்பதனால் அவர்களால் எத்தனை முறை வேண்டுமானாலும் இயற்கையாக கருத்தரிக்க முடியும். அவ்வாறு கருத்தரித்தவர்கள் சாதாரண கர்ப்ப காலத்தை தொடர்ந்து சாதாரண பிரசவத்தை மேற்கொள்ள முடியும்.
பலோப்பியன் குழாயில் கருத்தங்கியவர்களுக்கு மீண்டும் இந்நிலை ஏற்பட வாய்ப்புள்ளதா ?
பலோப்பியன் குழாயில் கரு தங்கி சிகிச்சை பெற்றவர்கள் மீண்டும் கருத்தரிக்கும் போது மீண்டும் அவ்வாறு நடைபெற ஒரு சிறிய வாய்ப்புள்ளது. ஆகையால் இவ்வாறானவர்கள் மீண்டும் கருத்தரித்தவுடன் ஒரு வைத்திய நிபுணரை சந்தித்து ஸ்கான் பரிசோதனை மூலம் கர்ப்பப்பைக்கு உள்ளேயா? வெளியேயா? தங்கியுள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்குதல் எவ்வாறானவர்களில் கூடுதலாக ஏற்படுகின்றது?
அடிவயிற்றில் கிருமித்தொற்று ஏற்பட்டவர்களில் பலோப்பியன் குழாய்கள் அசாதாரண தன்மையை காட்டுவதால் இந்நிலை கூடுதலாக ஏற்பட வாய்ப்புள்ளது. பலோப்பியன் குழாய் அடைப்புகளுக்காக சிகிச்சைகள் மேற்கொண்டவர்கள் மற்றும் கருத்தடை சத்திர சிகிச்சையை மீண்டும் குழந்தை வேண்டுமென்பதற்காக மறுசீரமைத்தவர்கள் என்பவர்களில் கூடுதலாக ஏற்பட வாய்ப்புள்ளது.
ஏற்கனவே கடந்த காலங்களில் கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்கியவர்களில் மீண்டும் இந்நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால் இதற்கான சந்தர்ப்பம் குறைவு. ஏனெனில் கூடுதலானவர்கள் சாதாரண கர்ப்பக்காலத்தையும் சாதாரண பிரசவத்தையும் மேற்கொள்வதை காணக்கூடியதாகவுள்ளது.
குழந்தைப்பாக்கியம் தாமதமடைபவர்களில் சிகிச்சையின் போது செயற்கை முறைக் கருக்கட்டலை மேற்கொள்கின்றோம். இதன்போது கர்ப்பப்பைக்கு வெளியில் கரு தங்க வாய்ப்புள்ளது. குடும்ப கட்டுப்பாட்டு முறையாக லூப் (Loop) கர்ப்பப்பையினுள் போட்டிருக்கும் சிலரிலும் கர்ப்பப்பைக்கு வெளியில் கரு தங்கும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது.
எனவே, கர்ப்பப்பைக்கு வெளியே கரு தங்குவது ஆரம்ப கர்ப்ப காலத்தில் ஏற்படக்கூடிய முக்கிய பிரச்சினை. இதனால் கர்ப்பக்காலத்தில் முதல் 1-2 மாத காலப்பகுதியில் அடி வயிற்று வலி ஏற்பட்டால் வைத்திய ஆலோசனையை நாடுவது இன்றியமையாதது. இதன்போது இதற்கான வாய்ப்புக்களேதும் உள்ளதா? எனப்பார்க்க முடியும்.






































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக