நாட்டில் இறுதி யுத்தத்தின்போதும் அதன் பின்னரும் கடத்தப்பட்டவர்கள், காணாமல் போனவர்களின் நிலை தொடர்பில் அறிய முடியாது அவர்களது உறவினர்கள் தொடர்ந்தும் தவித்து வருகின்றனர். காணாமல்போன தமது உறவுகள் மீளவும் திரும்பி வருவார்கள் என்ற நம்பிக்கையில் அந்த மக்கள் நாள்தோறும் கண்ணீருடன் வாழ்நாளை கழித்து வருகின்றனர்.
இவ்வாறு கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து உரிய தீர்வு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை யுத்தம் முடிந்த காலப்பகுதியிலிருந்து எழுந்திருந்தது. இறுதி யுத்த காலத்தில் வகை தொகையின்றி தமிழ் இளைஞர், யுவதிகள் கைதுசெய்யப்பட்டதுடன் வெள்ளை வேன்களிலும் கடத்தப்பட்டனர். இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் உயிருடன் உள்ளார்களா? அல்லது இல்லையா என்பது தொடர்பில்கூட அறிய முடியாதநிலை காணப்படுகின்றது.
கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல்போனவர்கள் இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பரவலாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால் அவ்வாறான இரகசிய முகாம்கள் எதுவும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கூறி வந்தது. இந்தநிலையில் இரகசிய முகாம்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சில தகவல்களை தெரிவித்துள்ளதுடன் அந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு உடனடியாக ஆராய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
உலக நடப்புக்கள் எதுவும் அறியப்படாத வகையில் திருகோணமலை கடற்படை முகாமில் 35 குடும்பங்களும் அதே இடத்தில் கோத்தா முகாம் என்று அழைக்கப்படுகின்ற பிறிதொரு முகாமில் 700 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இவர்களுக்கு என்ன நடந்தது என்றும் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனரா? அவர்கள் இருக்கின்றனரா? இல்லாது செய்யப்பட்டு விட்டனரா என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தி, அங்கு சென்று ஆராய வேண்டும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருக்கின்றார்.
இதனைவிட நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு காணாமல்போனோரைக் கண்டுபிடிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு எத்தகைய தகவல்களை திரட்டியுள்ளது என்பதையும் எத்தனை பேரை கண்டுபிடித்தது என்ற தகவல்களையும் பாராளுமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. கோரியிருக்கின்றார் .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இந்த தகவலானது காணாமல் போனோரது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. திருகோணமலை கடற்படை தளத்திலுள்ள முகாமில் 35 குடும்பங்களும் அங்குள்ள கோத்தா முகாமில் 700 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கின்றது.
நாட்டில் கடத்தப்பட்டவர்கள், காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கு, கிழக்கு உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விசாரணை நடத்தியுள்ளது. அந்த ஆணைக்குழுவின் காலம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதுவரை அந்த ஆணைக்குழுவானது தனது இடைக்கால அறிக்கையைக்கூட சமர்ப்பிக்கவில்லை. இந்தநிலையில்தான் ஆணைக்குழுவின் அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டியதன் அவசியத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வலியுறுத்தியிருக்கின்றது.
திருகோணமலை கடற்படைத் தளத்தில் 35 குடும்பங்கள் மற்றும் 700 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இதுகுறித்து புதிய அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப்போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். உண்மையிலேயே திருகோணமலை கடற்படைத் தளத்தில் உலக நடப்புக்கள் எதுவும் அறியப்படாதவகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை பாரதூரமானதொரு விடயமாகும். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் தமது உறவினர்களும் அடங்குவார்களா என்று காணாமல்போனவர்களது உறவினர்கள் ஏங்கித் தவிக்கும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
எனவே, இந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு உரிய விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். திருமலைக் கடற்படைத் தளத்தில் இவ்வாறானவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆராயவேண்டும். இவ்வாறு இரசிய முகாம்களை நடத்தி மக்களை தடுத்து வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திருகோணமலை கடற்படைத்தளத்தில் இவ்வாறானவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பதை பாதுகாப்பு அமைச்சின் விசாரணைகள் மூலம் அறிந்துகொள்ளலாம். 2010ஆம் ஆண்டு தெஹிவளையில் வைத்து 5 மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். இவ்வாறு கடத்தப்பட்ட மாணவர்கள் திருகோணமலை கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அந்த மாணவர்களது பெற்றோர்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த மாணவர்கள் ஐவர் மீதான ஆட்கொணர்வு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அந்த விசாரணையும் இடம்பெறுகின்றது.
தற்போது திருகோணமலை கடற்படைத் தளத்தில் 35 குடும்பங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் அங்குள்ள கோத்தா முகாமில் 700 பேர் தடுத்துவைக்கப்பட்டிருந்த தகவலானது ஐந்து மாணவர்களும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனரா என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறை ஒன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் விசாரணை நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசாங்கம் தற்போது ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு உறுதியளித்துள்ளது. இதற்கிணங்க இலங்கை தொடர்பான ஐ.நா.வின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
தென்னாபிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவைப் போன்ற உள்ளக விசாரணை பொறிமுறைச் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்குமென்று அமைச்சரவையில் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கின்றார். இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்போது திருகோணமலை கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் உரிய வகையில் விசாரிக்கப்பட வேண்டும்.
அரசாங்கமானது பொறுப்புக்கூறும் விடயத்தில் அக்கறை செலுத்தப்படும் என்று உறுதியளித்திருக்கின்றது. கடந்த அரசாங்கமானது உள்ளக விசாரணைகளை உரிய வகையில் முன்னெடுக்காமையால்தான் சர்வதேச விசாரணை இடம்பெற்றது. தற்போது புதிய அரசாங்கத்துக்கு சந்தர்ப்பமொன்று வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியது அரசின் கடமையாகும். நாட்டில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கும் உரிய தீர்வினைக் காண அரசாங்கம் முன்வரவேண்டும்.
இதன் மூலமே தமது உறவுகளைத் தொலைத்துவிட்டு பரிதவிக்கும் மக்களுக்கு அரசாங்கமானது பதில்கூற முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
இவ்வாறு கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல்போனோருக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து உரிய தீர்வு வழங்கப்படவேண்டும் என்ற கோரிக்கை யுத்தம் முடிந்த காலப்பகுதியிலிருந்து எழுந்திருந்தது. இறுதி யுத்த காலத்தில் வகை தொகையின்றி தமிழ் இளைஞர், யுவதிகள் கைதுசெய்யப்பட்டதுடன் வெள்ளை வேன்களிலும் கடத்தப்பட்டனர். இவ்வாறு கடத்தப்பட்டவர்கள் உயிருடன் உள்ளார்களா? அல்லது இல்லையா என்பது தொடர்பில்கூட அறிய முடியாதநிலை காணப்படுகின்றது.
கடத்தப்பட்டவர்கள் மற்றும் காணாமல்போனவர்கள் இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்று பரவலாக சந்தேகங்கள் எழுப்பப்பட்டு வந்தன. ஆனால் அவ்வாறான இரகசிய முகாம்கள் எதுவும் இல்லை என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் கூறி வந்தது. இந்தநிலையில் இரகசிய முகாம்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் சில தகவல்களை தெரிவித்துள்ளதுடன் அந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு உடனடியாக ஆராய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்திருக்கின்றது.
உலக நடப்புக்கள் எதுவும் அறியப்படாத வகையில் திருகோணமலை கடற்படை முகாமில் 35 குடும்பங்களும் அதே இடத்தில் கோத்தா முகாம் என்று அழைக்கப்படுகின்ற பிறிதொரு முகாமில் 700 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் இவர்களுக்கு என்ன நடந்தது என்றும் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்கள் சித்திரவதை செய்யப்பட்டனரா? அவர்கள் இருக்கின்றனரா? இல்லாது செய்யப்பட்டு விட்டனரா என்பது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு கவனம் செலுத்தி, அங்கு சென்று ஆராய வேண்டும் என்றும் அவர் பாராளுமன்றத்தில் வலியுறுத்தியிருக்கின்றார்.
இதனைவிட நாட்டில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர். இவ்வாறு காணாமல்போனோரைக் கண்டுபிடிப்பதற்கென நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு எத்தகைய தகவல்களை திரட்டியுள்ளது என்பதையும் எத்தனை பேரை கண்டுபிடித்தது என்ற தகவல்களையும் பாராளுமன்றத்தில் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் எம்.பி. கோரியிருக்கின்றார் .
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஷ் பிரேமச்சந்திரனின் இந்த தகவலானது காணாமல் போனோரது உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. திருகோணமலை கடற்படை தளத்திலுள்ள முகாமில் 35 குடும்பங்களும் அங்குள்ள கோத்தா முகாமில் 700 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால் அவர்களுக்கு என்ன நடந்தது என்ற கேள்வி தற்போது எழுந்திருக்கின்றது.
நாட்டில் கடத்தப்பட்டவர்கள், காணாமல்போனவர்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கு நியமிக்கப்பட்டிருந்த ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கு, கிழக்கு உட்பட பல்வேறு பகுதிகளுக்கும் சென்று விசாரணை நடத்தியுள்ளது. அந்த ஆணைக்குழுவின் காலம் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டு வருகின்றது. ஆனால் இதுவரை அந்த ஆணைக்குழுவானது தனது இடைக்கால அறிக்கையைக்கூட சமர்ப்பிக்கவில்லை. இந்தநிலையில்தான் ஆணைக்குழுவின் அறிக்கையினை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவேண்டியதன் அவசியத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது வலியுறுத்தியிருக்கின்றது.
திருகோணமலை கடற்படைத் தளத்தில் 35 குடும்பங்கள் மற்றும் 700 பேரும் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியிருக்கின்றது. இதுகுறித்து புதிய அரசாங்கம் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விவகாரம் தொடர்பில் உடனடியாக பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேனவின் கவனத்துக்கு கொண்டுவரப்படும் என்று பொது மக்கள் பாதுகாப்பு மற்றும் கிறிஸ்தவ மத விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க பாராளுமன்றத்தில் தெரிவித்திருக்கின்றார்.
கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் மற்றும் காணாமல் போனவர்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப்போவதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருக்கின்றார். உண்மையிலேயே திருகோணமலை கடற்படைத் தளத்தில் உலக நடப்புக்கள் எதுவும் அறியப்படாதவகையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்தமை பாரதூரமானதொரு விடயமாகும். இவ்வாறு தடுத்துவைக்கப்பட்டிருந்தவர்களில் தமது உறவினர்களும் அடங்குவார்களா என்று காணாமல்போனவர்களது உறவினர்கள் ஏங்கித் தவிக்கும் நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது.
எனவே, இந்த விவகாரம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு உரிய விசாரணைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும். திருமலைக் கடற்படைத் தளத்தில் இவ்வாறானவர்கள் தடுத்துவைக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆராயவேண்டும். இவ்வாறு இரசிய முகாம்களை நடத்தி மக்களை தடுத்து வைத்திருந்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
திருகோணமலை கடற்படைத்தளத்தில் இவ்வாறானவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என்பதை பாதுகாப்பு அமைச்சின் விசாரணைகள் மூலம் அறிந்துகொள்ளலாம். 2010ஆம் ஆண்டு தெஹிவளையில் வைத்து 5 மாணவர்கள் கடத்திச் செல்லப்பட்டிருந்தனர். இவ்வாறு கடத்தப்பட்ட மாணவர்கள் திருகோணமலை கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அந்த மாணவர்களது பெற்றோர்களுக்கு அறிவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்த மாணவர்கள் ஐவர் மீதான ஆட்கொணர்வு மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றது. இவ்விடயம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றத்துக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அந்த விசாரணையும் இடம்பெறுகின்றது.
தற்போது திருகோணமலை கடற்படைத் தளத்தில் 35 குடும்பங்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததுடன் அங்குள்ள கோத்தா முகாமில் 700 பேர் தடுத்துவைக்கப்பட்டிருந்த தகவலானது ஐந்து மாணவர்களும் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தனரா என்ற சந்தேகத்தை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்திருக்கின்றது.
இலங்கையில் இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற யுத்தக் குற்றச்சாட்டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்ளகப் பொறிமுறை ஒன்று அமைக்கப்பட்டு அதன் மூலம் விசாரணை நடத்தப்படும் என்று ஜனாதிபதி மைத்திரிபால தலைமையிலான அரசாங்கம் தற்போது ஐ.நா. மனித உரிமைப் பேரவைக்கு உறுதியளித்துள்ளது. இதற்கிணங்க இலங்கை தொடர்பான ஐ.நா.வின் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்படுவது எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரையில் ஒத்திவைக்கப்பட்டிருக்கின்றது.
தென்னாபிரிக்காவின் உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவைப் போன்ற உள்ளக விசாரணை பொறிமுறைச் செயற்பாட்டை அரசாங்கம் முன்னெடுக்குமென்று அமைச்சரவையில் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்திருக்கின்றார். இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமைகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படும்போது திருகோணமலை கடற்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பிலும் உரிய வகையில் விசாரிக்கப்பட வேண்டும்.
அரசாங்கமானது பொறுப்புக்கூறும் விடயத்தில் அக்கறை செலுத்தப்படும் என்று உறுதியளித்திருக்கின்றது. கடந்த அரசாங்கமானது உள்ளக விசாரணைகளை உரிய வகையில் முன்னெடுக்காமையால்தான் சர்வதேச விசாரணை இடம்பெற்றது. தற்போது புதிய அரசாங்கத்துக்கு சந்தர்ப்பமொன்று வழங்கப்பட்டிருக்கின்றது. எனவே இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்புக்கூற வேண்டியது அரசின் கடமையாகும். நாட்டில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்கள் தொடர்பான பிரச்சினைக்கும் உரிய தீர்வினைக் காண அரசாங்கம் முன்வரவேண்டும்.
இதன் மூலமே தமது உறவுகளைத் தொலைத்துவிட்டு பரிதவிக்கும் மக்களுக்கு அரசாங்கமானது பதில்கூற முடியும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக