கர்ப்பம் தரித்து தமது குழந்தையை பிரசவித்து எடுத்து பார்த்து வளர்க்க ஒரு தாய் எத்தனை கனவுகள் காண்பாள். அத்தனைக்கும் அவர் அனுபவிக்கும் துன்பங்களும் சோதனைகளும் எத்தனை என்பது அந்தப் பெண்ணுக்குத்தான் தெரியும். இவற்றில் மன ரீதியான வேதனைகள் உடல்ரீதியான வேதனைகள் என பலவற்றையும் கர்ப்ப காலம் முழுவதும் சுமந்து இறுதியில் தனது வயிற்றில் சுமக்கும் சிசுவை எப்படி வெளியில் எடுப்பது என்ற கேள்வி தான் மனதில் இருக்கும்.
இந்த குழந்தைப்பிரசவமானது சாதாரண சுகப்பிரசவம் என்றால் சிறந்தது. சிக்கல்கள் எதுவும் வராது என்றுதான் யாரும் நினைப்பார்கள். இதுவே ஒரு சிசேரியன் பிரசவமானால் தாய்க்கு பல வேதனைகளும் கஷ்டங்களும் அதிகம் எனத்தான் தாயோ அல்லது குடும்பத்தினரும் நினைப்பார்கள். இதற்கமையவே பெண்களும் குடும்பத்தினரும் சிசேரியன் பிரசவம் என்ற வார்த்தையை கேட்டு முகம் சுளிப்பதும் சாதாரண சுகப்பிரசவம் என்றவுடன் முகம் மலர்ந்து புன்னகை பூப்பதும் வழமையான விடயங்கள்.
இவ்வாறான கருத்துடையவர்களாக மக்கள் இருக்கும் போது அவர்களை திருப்திப்படுத்துவது எமது கடமையாக எடுக்க வேண்டும். இதற்கமைய வேறொரு வைத்தியசாலையில் சிசேரியன் பிரசவம் தான் செய்யப்பட வேண்டும் உங்களுக்கு என உறுதியாக கூறப்பட்டால் மனம் நொந்து பின்னர் அதேகுழந்தையை சாதாரண சுகப்பிரசவம் மூலம் எமது வைத்தியசாலையில் பிரசவித்து மகிழ்ச்சியாக சென்ற தம்பதிகளின் உண்மைச் சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
பேருவளை என்ற ஊரிலிருந்து 27 வயதுடைய பெண்ணொருவர் தனது இரண்டாவது குழந்தைப்பிரசவத்துக்காக மைல்கள் பல கடந்து கொழும்பு வந்தார். கொழும்பில் தனக்கு சிறப்பான சிகிச்சையும் சேவையும் கிடைக்குமென நினைத்து வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தப்பெண்ணுக்கு முதல் பிரசவம் சாதாரண சுகப் பிரசவமாக நடந்திருந்தாலும் பிறந்த குழந்தை ஒரு மாத காலத்தில் நோய் காணரமாக இறந்து விட்டது. ஒரு வருட கால இடைவெளியின் பின்னர் இந்தப்பெண் இரண்டாவது தடவை கர்ப்பம் தரித்து இம்முறை பிரசவத்துக்காக சென்றிருந்தார். இம்முறை கர்ப்ப காலத்தில் எந்த சிக்கல்களும் இருக்கவில்லை.
எனினும் முதல் குழந்தை சுகப்பிரசவமாக பிரசவிக்கப்பட்டாலும் பின்னர் ஏற்பட்ட நோய் காரணமாகத்தான் இறந்தது. அந்தக் குழந்தையின் இறப்புக்கும் பிரசவ முறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனினும் முதல் குழந்தை இறந்து விட்டதால் இந்தக் குழந்தையை பிரசவிக்க சிக்கல்கள் இல்லாமல் சிசேரியன் பிரசவம் செய்ய வேண்டும் என்றுதான் அவர் சென்றிருந்த வைத்தியசாலையில் கூறியிருந்தார்கள்.
ஆனால் அந்த பெண்ணுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ சிசேரியன் பிரசவம் என்ற வார்த்தையே பயமாகத்தான் இருந்தது. அவர்கள் தமக்கு சிசேரியன் செய்யப்படுவதால் சம்மதம் இல்லாதவர்களாகத்தான் இருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் முதல் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்ததால் இரண்டாவது பிரசவமும் சாதாரண சுகப்பிரசவமாக முடியும் தானே என்று கருதினார்கள்.
ஆனால் அந்த கர்ப்பிணி பெண்ணை பார்த்த வைத்தியர்கள் முதல் குழந்தை இறந்து விட்டது. எனவே இந்த இரண்டாவது குழந்தையை பிரசவ நேரத்தில் எவ்வித ஆபத்தும் வரவிடாமல் சிசேரியன் செய்வதே உங்களுக்கு சிறந்தது என்ற கருத்தில் உறுதியாக இருந்தார்கள்.
இவ்வாறு குழந்தையை பிரசவிக்கப்ப போகும் பெண்ணுக்கும் பிரசவத்தை மேற்கொள்ளப்போகும் வைத்தியர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளும் வேறுபட்ட விளக்கங்களும் இருந்ததால் இரு பகுதியினரும் திருப்தியற்ற நிலையில் முறிவடைந்தார்கள். அதாவது அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவரை கூட்டிக்கொண்டு வேறொரு வைத்தியசாலைக்கு செல்வோம் என்ற தீர்மானத்தை எடுத்தார்கள். அதன் படி இறுதியில் எமது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக வந்து அனுமதித்தார்கள்.
இவர்களது விபரங்களை பார்த்த போது நானும் கருதினேன் முதல் குழந்தை இறந்ததுக்கும் பிரவச முறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றுதான். அந்தக்குழந்தை பிறந்து ஒரு மாதத்தின் பின் ஏற்பட்ட வேறொரு நோயினால்தான் இறந்தது. எனவே இதற்காக பிரசவ முறையை மாற்ற வேண்டிய தேவை இல்லை.
சிசேரியன் பிரசவத்தினால் இந்தப் பெண் அனுபவிக்கப்போகும் துன்பம் வலி என்பன சாதாரண பிரசவத்தை விட அதிகமாகத்தான் இருக்கும். அத்துடன் பெண்ணின் விருப்பத்துக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. எனவே நாம் முடிவெடுத்தோம். சாதாரண சுகப்பிரசவம் தான் இந்த இரண்டாவது குழந்தையை பிரசவிக்க கூடிய சரியான முறை. இதன்படி பிரசவம் மேற்கொள்ளும் வேளையில் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு ஏதாவது பாதிப்புக்கள் வருவது போல் இருதய துடிப்புக்கள் மூலம் அறிந்தால் அவசரமாக சிசேரியன் செய்ய முடியும் இல்லா விட்டால் சாதாரண சுகப்பிரசவத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்யலாம்.
இதற்கு அப்பெண்ணும் அவரது குடும்பத்தினரும் பூரண சம்மதம் தெரிவித்தார்கள். எமது திறமையும் அனுபவமும் நிறைந்த தாதிமார்களும் இதற்கு உறுதியாக இருந்து இதனை சாதாரண சுகப் பிரசவமாக இறுதிவரை கொண்டு செல்ல தயாராக இருந்தனர்.
இதற்கமைய நாம் சின்ரோ மருந்துகள் மூலம் பிரசவ வலியை வர வைத்து பிரசவம் நடைபெறும் அறையில் வயிற்றில் இருக்கும் சிசுவின் இருதய துடிப்பு மாற்றங்களை ஒவ்வொரு நிமிடமும் எமது கருவிகள் மூலம் அவதானித்தோம். இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியத்தை நூற்றுக்கு நூறு வீதம் உறுதி செய்தோம்.
இதன்படி பிரசவ வலியானது மெது மெதுவாக கூடி அந்த ??????தாங்கி அதனை தாய்க்கு உணர விடாமல் செய்யக்கூடிய ஊசிகளையும் வழங்கி அப்பெண்ணை பிரசவ நேரத்தில் சிரமங்கள் இல்லாது பார்த்து கொண்டோம். இதனையடுத்தே 4 மணி நேரத்தின் பின் சாதாரண சுகப் பிரசவம் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தோம்.
இதன் போது தாயினதும் குடும்பத்தினரினதும் முகங்களில் அளவு கடந்த மகிழ்ச்சியை காண முடிந்தது. இதற்கு பின்னர் நான் கருதினேன். பிரசவ முறையில் சாதாரண சுகப்பிரசவம் என்பது சொல்லில் இருப்பது போல் சுகமான பிரசவ முறைதான். ஆனால் சிறந்த மருத்துவ தாதிமார்கள் உதவியுடன் சரியான கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டால் சிக்கல்கள் இல்லாமல் நிறைவு செய்ய முடியும்.
எனவே இந்த அனுபவம் மூலம் நாங்கள் சிலவேளைகளில் சிசேரியன் பிரசவம் என கூறுவது வைத்தியர்களை பொறுத்த வரையில் ஒரு இலகுவான விடயமாக இருந்தாலும் பிரசவத்திற்கு வரும் தாய்க்கோ குடும்பத்துக்கோ எந்த அளவு சிந்திக்க வைக்கின்றது என புரிகின்றது. ஆகையால் பிரசவங்களை முடிந்த வரை பாதுகாப்பான சாதாரண சுகப் பிரசவமாக மாற்றியமைக்க அனுபவங்களையும் தொழில் நுட்ப வசதிகளையும் பாவித்து இறுதி வரை முயற்சிப்போம்.
Dr. கு. சுஜாகரன்
நியூலங்கா மகப்பேற்று மருத்துவமனை
பம்பலப்பிட்டி
இந்த குழந்தைப்பிரசவமானது சாதாரண சுகப்பிரசவம் என்றால் சிறந்தது. சிக்கல்கள் எதுவும் வராது என்றுதான் யாரும் நினைப்பார்கள். இதுவே ஒரு சிசேரியன் பிரசவமானால் தாய்க்கு பல வேதனைகளும் கஷ்டங்களும் அதிகம் எனத்தான் தாயோ அல்லது குடும்பத்தினரும் நினைப்பார்கள். இதற்கமையவே பெண்களும் குடும்பத்தினரும் சிசேரியன் பிரசவம் என்ற வார்த்தையை கேட்டு முகம் சுளிப்பதும் சாதாரண சுகப்பிரசவம் என்றவுடன் முகம் மலர்ந்து புன்னகை பூப்பதும் வழமையான விடயங்கள்.
இவ்வாறான கருத்துடையவர்களாக மக்கள் இருக்கும் போது அவர்களை திருப்திப்படுத்துவது எமது கடமையாக எடுக்க வேண்டும். இதற்கமைய வேறொரு வைத்தியசாலையில் சிசேரியன் பிரசவம் தான் செய்யப்பட வேண்டும் உங்களுக்கு என உறுதியாக கூறப்பட்டால் மனம் நொந்து பின்னர் அதேகுழந்தையை சாதாரண சுகப்பிரசவம் மூலம் எமது வைத்தியசாலையில் பிரசவித்து மகிழ்ச்சியாக சென்ற தம்பதிகளின் உண்மைச் சம்பவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
பேருவளை என்ற ஊரிலிருந்து 27 வயதுடைய பெண்ணொருவர் தனது இரண்டாவது குழந்தைப்பிரசவத்துக்காக மைல்கள் பல கடந்து கொழும்பு வந்தார். கொழும்பில் தனக்கு சிறப்பான சிகிச்சையும் சேவையும் கிடைக்குமென நினைத்து வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டார்.
இந்தப்பெண்ணுக்கு முதல் பிரசவம் சாதாரண சுகப் பிரசவமாக நடந்திருந்தாலும் பிறந்த குழந்தை ஒரு மாத காலத்தில் நோய் காணரமாக இறந்து விட்டது. ஒரு வருட கால இடைவெளியின் பின்னர் இந்தப்பெண் இரண்டாவது தடவை கர்ப்பம் தரித்து இம்முறை பிரசவத்துக்காக சென்றிருந்தார். இம்முறை கர்ப்ப காலத்தில் எந்த சிக்கல்களும் இருக்கவில்லை.
எனினும் முதல் குழந்தை சுகப்பிரசவமாக பிரசவிக்கப்பட்டாலும் பின்னர் ஏற்பட்ட நோய் காரணமாகத்தான் இறந்தது. அந்தக் குழந்தையின் இறப்புக்கும் பிரசவ முறைக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனினும் முதல் குழந்தை இறந்து விட்டதால் இந்தக் குழந்தையை பிரசவிக்க சிக்கல்கள் இல்லாமல் சிசேரியன் பிரசவம் செய்ய வேண்டும் என்றுதான் அவர் சென்றிருந்த வைத்தியசாலையில் கூறியிருந்தார்கள்.
ஆனால் அந்த பெண்ணுக்கோ அவரது குடும்பத்தினருக்கோ சிசேரியன் பிரசவம் என்ற வார்த்தையே பயமாகத்தான் இருந்தது. அவர்கள் தமக்கு சிசேரியன் செய்யப்படுவதால் சம்மதம் இல்லாதவர்களாகத்தான் இருந்தார்கள். அவர்களைப் பொறுத்த வரையில் முதல் குழந்தை சுகப்பிரசவமாக பிறந்ததால் இரண்டாவது பிரசவமும் சாதாரண சுகப்பிரசவமாக முடியும் தானே என்று கருதினார்கள்.
ஆனால் அந்த கர்ப்பிணி பெண்ணை பார்த்த வைத்தியர்கள் முதல் குழந்தை இறந்து விட்டது. எனவே இந்த இரண்டாவது குழந்தையை பிரசவ நேரத்தில் எவ்வித ஆபத்தும் வரவிடாமல் சிசேரியன் செய்வதே உங்களுக்கு சிறந்தது என்ற கருத்தில் உறுதியாக இருந்தார்கள்.
இவ்வாறு குழந்தையை பிரசவிக்கப்ப போகும் பெண்ணுக்கும் பிரசவத்தை மேற்கொள்ளப்போகும் வைத்தியர்களுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகளும் வேறுபட்ட விளக்கங்களும் இருந்ததால் இரு பகுதியினரும் திருப்தியற்ற நிலையில் முறிவடைந்தார்கள். அதாவது அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் அவரை கூட்டிக்கொண்டு வேறொரு வைத்தியசாலைக்கு செல்வோம் என்ற தீர்மானத்தை எடுத்தார்கள். அதன் படி இறுதியில் எமது வைத்தியசாலையில் பிரசவத்திற்காக வந்து அனுமதித்தார்கள்.
இவர்களது விபரங்களை பார்த்த போது நானும் கருதினேன் முதல் குழந்தை இறந்ததுக்கும் பிரவச முறைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்றுதான். அந்தக்குழந்தை பிறந்து ஒரு மாதத்தின் பின் ஏற்பட்ட வேறொரு நோயினால்தான் இறந்தது. எனவே இதற்காக பிரசவ முறையை மாற்ற வேண்டிய தேவை இல்லை.
சிசேரியன் பிரசவத்தினால் இந்தப் பெண் அனுபவிக்கப்போகும் துன்பம் வலி என்பன சாதாரண பிரசவத்தை விட அதிகமாகத்தான் இருக்கும். அத்துடன் பெண்ணின் விருப்பத்துக்கும் மதிப்புக் கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. எனவே நாம் முடிவெடுத்தோம். சாதாரண சுகப்பிரசவம் தான் இந்த இரண்டாவது குழந்தையை பிரசவிக்க கூடிய சரியான முறை. இதன்படி பிரசவம் மேற்கொள்ளும் வேளையில் குழந்தையின் ஆரோக்கியத்துக்கு ஏதாவது பாதிப்புக்கள் வருவது போல் இருதய துடிப்புக்கள் மூலம் அறிந்தால் அவசரமாக சிசேரியன் செய்ய முடியும் இல்லா விட்டால் சாதாரண சுகப்பிரசவத்தை வெற்றிகரமாக பூர்த்தி செய்யலாம்.
இதற்கு அப்பெண்ணும் அவரது குடும்பத்தினரும் பூரண சம்மதம் தெரிவித்தார்கள். எமது திறமையும் அனுபவமும் நிறைந்த தாதிமார்களும் இதற்கு உறுதியாக இருந்து இதனை சாதாரண சுகப் பிரசவமாக இறுதிவரை கொண்டு செல்ல தயாராக இருந்தனர்.
இதற்கமைய நாம் சின்ரோ மருந்துகள் மூலம் பிரசவ வலியை வர வைத்து பிரசவம் நடைபெறும் அறையில் வயிற்றில் இருக்கும் சிசுவின் இருதய துடிப்பு மாற்றங்களை ஒவ்வொரு நிமிடமும் எமது கருவிகள் மூலம் அவதானித்தோம். இதன் மூலம் குழந்தையின் ஆரோக்கியத்தை நூற்றுக்கு நூறு வீதம் உறுதி செய்தோம்.
இதன்படி பிரசவ வலியானது மெது மெதுவாக கூடி அந்த ??????தாங்கி அதனை தாய்க்கு உணர விடாமல் செய்யக்கூடிய ஊசிகளையும் வழங்கி அப்பெண்ணை பிரசவ நேரத்தில் சிரமங்கள் இல்லாது பார்த்து கொண்டோம். இதனையடுத்தே 4 மணி நேரத்தின் பின் சாதாரண சுகப் பிரசவம் மூலம் ஆரோக்கியமான குழந்தையை பெற்றெடுத்தோம்.
இதன் போது தாயினதும் குடும்பத்தினரினதும் முகங்களில் அளவு கடந்த மகிழ்ச்சியை காண முடிந்தது. இதற்கு பின்னர் நான் கருதினேன். பிரசவ முறையில் சாதாரண சுகப்பிரசவம் என்பது சொல்லில் இருப்பது போல் சுகமான பிரசவ முறைதான். ஆனால் சிறந்த மருத்துவ தாதிமார்கள் உதவியுடன் சரியான கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட்டால் சிக்கல்கள் இல்லாமல் நிறைவு செய்ய முடியும்.
எனவே இந்த அனுபவம் மூலம் நாங்கள் சிலவேளைகளில் சிசேரியன் பிரசவம் என கூறுவது வைத்தியர்களை பொறுத்த வரையில் ஒரு இலகுவான விடயமாக இருந்தாலும் பிரசவத்திற்கு வரும் தாய்க்கோ குடும்பத்துக்கோ எந்த அளவு சிந்திக்க வைக்கின்றது என புரிகின்றது. ஆகையால் பிரசவங்களை முடிந்த வரை பாதுகாப்பான சாதாரண சுகப் பிரசவமாக மாற்றியமைக்க அனுபவங்களையும் தொழில் நுட்ப வசதிகளையும் பாவித்து இறுதி வரை முயற்சிப்போம்.
Dr. கு. சுஜாகரன்
நியூலங்கா மகப்பேற்று மருத்துவமனை
பம்பலப்பிட்டி

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக