ஜூலியானா லோபஸ் எனும் இந்த அழகுராணி யுவதி சீனாவுக்கு கொகேய்ன் எனும் போதைப்பொருளை கடத்திச் சென்றதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
அவரை சீன அதிகாரிகள் கடந்த மாதம் 18 ஆம் திகதி கைது செய்தனர்.
22 வயதான ஜூலியானா லோபஸ், கொலம்பியா வின் வடமேற்கு பிராந்தியமொன் றின் அழகுரணி போட்டியொன்றில் முதலிடம் பெற்று முடிசூட்டப்பட்டவர். கடந்த வாரம் மிஸ் வேர்ல்ட் கொலம்பிய அழகுராணி போட்டியி லும் அவர் பங்குபற்றவிருந்தார்.
ஆனால், தற்போது அவர் சீன சிறைச்சாலையொன்றில் விளக்கமறியல் கைதியாக உள்ளார்.
மடிக்கணினியொன்றுக்குள் வைத்து போதைப்பொருளை கடத்தி வந்ததாக சீன அதிகாரி கள் அவர்மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
சீனாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு ஆயுள்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக பாரிஸ் நகரில் வைத்து தம்முடன் ஜூலியானா தொடர்புகொண்டார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் அவர் மின்னஞ்சல்களுக்கோ, பேஸ்புக், வட்ஸ் அப் மூலமான அழைப்புகளுக்கோ பதிலளிக்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
ஜூலியானா லோபஸ், சீனாவுக்குச் சென்றமை இது முதல் தடவை அல்லவென அவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர்.
சீனாவுக்குச் சென்று ஆடைகள், பைகள் முதலானவற்றை வாங்கிக்கொண்டுவந்து கொலம்பியாவில் விற்பனை செய்வதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார் எனவும் இந்தத் தடவையும் அதற்காகவே அவர் சீனாவுக்குச் சென்றார் எனவும் ஜூலியானாவின் நண்பரான லிஸ் ஹெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
“அவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார் என இதயம் கூறுகிறது. அவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுபடுவார் என நம்புகிறேன்” எனவும் லிஸ் ஹெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவியான ஜூலியானா, கொலம்பியாவில் மொடல்கள், நட்சத்திரங்கள் பங்குபற்றும் கால்பந்தாட்ட அணியொன்றி லும் அங்கம் வகித்துவந்தார்.
தற்போது ஜூலியானா லோபஸின் விடுதலைக்கான நடவடிக்கைக்காக சீனாவுக்குச் செல்வதற்கு அவரின் தாயார் திட்டமிட்டுள்ளார்.
இப்பயணத்திற்காகவும் ஜூலியானாவுக்கான சட்டத்தரணியொருவரை நியமிப்பதற்காகவும் தம்மிடம் போதிய பணம் இல்லாததால் தமது வீட்டை விற்பனை செய்வதற்கு அவரின் பெற்றோர் தீர்மானித்துள்ளனராம்.
ஜூலியானாவின் தாயார் சீனாவுக்குச் செல்வதற்கு நிதி திரட்டுவதற்காக கண்காட்சி கால்பந்தாட்டப் போட்டியொன்று நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனச் சிறைச்சாலைகளில் நூற்றுக்கும் அதிகமான கொலம்பிய பிரஜைகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் தொடர் பான குற்றச்சாட்டுகளுக்காக சிறையிலடைக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது
அவரை சீன அதிகாரிகள் கடந்த மாதம் 18 ஆம் திகதி கைது செய்தனர்.
22 வயதான ஜூலியானா லோபஸ், கொலம்பியா வின் வடமேற்கு பிராந்தியமொன் றின் அழகுரணி போட்டியொன்றில் முதலிடம் பெற்று முடிசூட்டப்பட்டவர். கடந்த வாரம் மிஸ் வேர்ல்ட் கொலம்பிய அழகுராணி போட்டியி லும் அவர் பங்குபற்றவிருந்தார்.
ஆனால், தற்போது அவர் சீன சிறைச்சாலையொன்றில் விளக்கமறியல் கைதியாக உள்ளார்.
மடிக்கணினியொன்றுக்குள் வைத்து போதைப்பொருளை கடத்தி வந்ததாக சீன அதிகாரி கள் அவர்மீது குற்றம் சுமத்தியுள்ளனர்.
சீனாவில் போதைப்பொருள் கடத்தல் குற்றங்களுக்கு ஆயுள்தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
இறுதியாக பாரிஸ் நகரில் வைத்து தம்முடன் ஜூலியானா தொடர்புகொண்டார் என அவரின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதன்பின் அவர் மின்னஞ்சல்களுக்கோ, பேஸ்புக், வட்ஸ் அப் மூலமான அழைப்புகளுக்கோ பதிலளிக்கவில்லை என அவர்கள் கூறுகின்றனர்.
ஜூலியானா லோபஸ், சீனாவுக்குச் சென்றமை இது முதல் தடவை அல்லவென அவரின் குடும்பத்தினரும் நண்பர்களும் தெரிவித்துள்ளனர்.
சீனாவுக்குச் சென்று ஆடைகள், பைகள் முதலானவற்றை வாங்கிக்கொண்டுவந்து கொலம்பியாவில் விற்பனை செய்வதை அவர் வழக்கமாக கொண்டிருந்தார் எனவும் இந்தத் தடவையும் அதற்காகவே அவர் சீனாவுக்குச் சென்றார் எனவும் ஜூலியானாவின் நண்பரான லிஸ் ஹெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
“அவர் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருக்க மாட்டார் என இதயம் கூறுகிறது. அவர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுபடுவார் என நம்புகிறேன்” எனவும் லிஸ் ஹெர்னாண்டஸ் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவியான ஜூலியானா, கொலம்பியாவில் மொடல்கள், நட்சத்திரங்கள் பங்குபற்றும் கால்பந்தாட்ட அணியொன்றி லும் அங்கம் வகித்துவந்தார்.
தற்போது ஜூலியானா லோபஸின் விடுதலைக்கான நடவடிக்கைக்காக சீனாவுக்குச் செல்வதற்கு அவரின் தாயார் திட்டமிட்டுள்ளார்.
இப்பயணத்திற்காகவும் ஜூலியானாவுக்கான சட்டத்தரணியொருவரை நியமிப்பதற்காகவும் தம்மிடம் போதிய பணம் இல்லாததால் தமது வீட்டை விற்பனை செய்வதற்கு அவரின் பெற்றோர் தீர்மானித்துள்ளனராம்.
ஜூலியானாவின் தாயார் சீனாவுக்குச் செல்வதற்கு நிதி திரட்டுவதற்காக கண்காட்சி கால்பந்தாட்டப் போட்டியொன்று நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனச் சிறைச்சாலைகளில் நூற்றுக்கும் அதிகமான கொலம்பிய பிரஜைகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் போதைப்பொருள் தொடர் பான குற்றச்சாட்டுகளுக்காக சிறையிலடைக்கப்பட்டவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக