கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் என்றால் என்ன?
பெண்களின் கர்ப்பப்பை வாசல் பகுதியான சேர்விக்ஸிலிருந்து உருவாகும் புற்றுநோய் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் எனப்படுகின்றது. இவை கூடுதலாக 30 இலிருந்து 40 வயதுடைய பெண்களில் ஏற்படுகின்றது. சில வேளைகளில் வயது கூடிய பெண்களிலும் ஏற்படுகின்றது. ஆனால் 25 வயதிற்கு குறைவான பெண்களில் இது மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் தோன்றுவதற்கான காரணம்
தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்ற அல்லது ஈடுபட்ட எந்த பெண்ணிலும் பப்பிலோமோ வைரஸ் (HPV) எனப்படும் வைரஸின் தொற்று கர்ப்பப்பை வாசலில் ஏற்படுவது வழக்கம்.
ஆனால், எமது உடலிலுள்ள எதிர்ப்புச்சக்திகள் இந்த வைரஸை எதிர்த்து அழித்து விடுகின்றன. ஒரு சிறிய பகுதி பெண்களில் (10%) இந்த எதிர்ப்பு சக்தி சரியாக தொழிற்படாததினால் பப்பிலோமா வைரஸ் கர்ப்பப்பை வாசல் கலங்களிலேயே தேங்கி அவற்றின் கட்டமைப்பை மாற்றி பல வருடங்களில் புற்றுநோயாக உருவெடுக்கும். புகை பிடிக்கும் பழக்கமுடையவர்கள் மிக இளம் வயதிலேயே தாம்பத்திய உறவை ஆரம்பித்தவர்கள், பாலியல் துர்நடத்தையுடையவர்கள் போன்றவர்களில் இந்த மாற்றம் சற்று வீரியமாக நடைபெறும். ஆனால் பெரும்பாலான மக்கள் நினைப்பது என்னவென்றால் மேற்குறிப்பிட்ட பெண்களில் மட்டுமே இந்நோய் ஏற்படும் என்பதுதான். உண்மை என்னவென்றால், எந்தக்குடும்பப் பெண்ணுக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோயின் நோய் அறிகுறிகள்
இதன் ஆரம்பத்தில் எந்நோய் அறிகுறியும் காணப்படாது. இப்புற்றுநோய் சற்று பெரிதாக வளருகின்ற போது ஏற்படும் முதல் அறிகுறி அசாதாரண இரத்தப்போக்குடனான மாதவிடாய். அதாவது மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாட்களில் இரத்தப்போக்கு, தாம்பத்திய உறவுக்கு பின்னரான இரத்தப்போக்கு, மாதவிடாய் முடிவுற்று மெனோபோஸ் நிலையை அடைந்த பெண்களில் பின்னர் ஏற்படும்.இரத்தப்போக்கு, சிலவேளைகளில் இந்த புற்றுநோய் துர்மணமுடைய திரவக்கசிவையும் தோற்றுவிக்கும். அத்துடன் நோயின் பிந்திய நிலையில் அடிவயிற்றுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகின்றது?
பெண்களது அடிவயிற்றைப் பரிசோதித்து கர்ப்பப்பையில் அசாதாரண தன்மைகள் இருப்பதாக சந்தேகித்தால் அவ்வாறான அசாதாரண பகுதிகளிலிருந்து சிறிய இழையங்களை பரிசோதனைக்காக எடுத்து இந்த நோயை உறுதிப்படுத்தலாம். மேலும் கொல்பொஸ்கொ எனப்படும் பூதக்கண்ணாடி வில்லைகள் கொண்ட கருவி மூலம் இவ்வாறான அசாதாரண மாற்றங்களை மிக நுணுக்கமாக அவதானித்து இழையங்களைப் பரிசோதித்தும் இந்நோயை உறுதிப்படுத்தலாம். இந்தப் புற்றுநோய் எந்தளவிற்கு வளர்ந்துள்ளது எனவும் அருகிலுள்ள நிணநீர் முடிச்சுக்களை எவ்வாறு தாக்கியுள்ளது எனவும் எவ்வாறு அருகிலுள்ள உறுப்புக்களுக்கு பரவியுள்ளது எனவும் சி.டி ஸ்கேன் பயன்படுத்தி உறுதிப்படுத்தலாம்.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய்க்கு எவ்வாறான சிகிச்சைகள் உள்ளன?
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய்க்கு இரு வழிகளில் சிகிச்சை வழங்கப்படும். அதாவது சத்திர சிகிச்சை மற்றும் கதிர்வீச்சி சிகிச்சை. இது ஒரு பெண்ணின் வயது, அவரது புற்றுநோயின் உக்கிரத்தன்மை, அவரது தேக ஆரோக்கியம் மற்றும் பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் என்பவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.
பொதுவாக இப்புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் சத்திரசிகிச்சை வெற்றியளிக்கப்படும். ஆனால் இந்நோய் சற்றுப்பிந்திய நிலையில் அறியப்பட்டால் கதிர்வீச்சு சிகிச்சையே பொருத்தமானது.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் வருமுன் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
இந்த புற்றுநோய் வந்த பின் சிகிச்சையளித்தும் பலன்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுவதனால் இதனை வருமுன் தடுப்பதே சிறந்தது. இவ்வாறு வருமுன் தடுப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுகின்ற அல்லது ஈடுபட்ட எந்தவொரு பெண்ணும் ஒழுங்காக கர்ப்பப்பை வாசல் பரிசோதனையான பப்டெஸ்ட்டை செய்வது அவசியம்.
இந்த பரிசோதனை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை 65 வயதுவரை செய்வது சிறந்தது. இந்த பரிசோதனையினை பெண்கள் அனைவரும் அறிந்திருந்து நீங்களாகவே முன்வந்து செய்வதன் மூலம் இந்நோயை இலகுவாக வெற்றி கொள்ளலாம். அவ்வாறான பரிசோதனையில் உங்களுக்கு ஏதாவது அசாதாரண மாற்றங்கள் கர்ப்பப்பை வாசலில் இருப்பதாக கண்டறியப்பட்டால் மிகவும் எளிமையான சிகிச்சைகள் மூலம் இந்த நோயை வராமல் தடுத்து விடலாம்.
கர்ப்பப்பை வாசல்புற்றுநோயை கண்டறிய மேற்கொள்ளும் பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது?
இது ஒரு வைத்திய நிபுணரின் ஆலோசனை கூடத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்காக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவோ அல்லது மயக்கமடையச் செய்யவோ தேவையில்லை. அத்துடன் இதன்போது ஒரு வலியோ நோவோ ஏற்படுவதில்லை. இதற்காக எடுக்கப்படும் நேரம் 5 நிமிடங்களாகவே இருக்கும். இப்பரிசோதனையின் பின் நீங்கள் உடனடியாகவே வீடு செல்லக்கூடியதாக இருக்கும். பின்னர் இரு கிழமைகளில் உங்கள் பரிசோதனையின் பெறுபேறுகளை உங்கள் வைத்திய நிபுணருடன் கலந்தாலோசிக்கக் கூடியதாக இருக்கும்.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய்க்கான தடுப்பூசியின் பங்களிப்பு
இந்தப் புற்றுநோய் ஒரு வைரஸின் தாக் கத்தினாலேயே உருவாகின்றது. இவ்வைரஸ் தொற்றைத் தடுக்கும் தடுப்பூசிகள் இந் நோயை பெரிதளவில் தடுத்துவிடும். மேலை நாடுகளில் இந்த தடுப்பூசி (13 –16) வயதுடைய இளம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. எமது நாட்டிலும் இத்தடுப்பூசி பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் வைத்தியசாலைகளில் தற்போது பாவனையிலுள்ளது. மிக விரைவில் அரச வைத்தியசாலைகளிலும் ஆரம்பிக்கப்படலாம்.
டொக்டர்.கு.சுஜாகரன்
பெண்களின் கர்ப்பப்பை வாசல் பகுதியான சேர்விக்ஸிலிருந்து உருவாகும் புற்றுநோய் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் எனப்படுகின்றது. இவை கூடுதலாக 30 இலிருந்து 40 வயதுடைய பெண்களில் ஏற்படுகின்றது. சில வேளைகளில் வயது கூடிய பெண்களிலும் ஏற்படுகின்றது. ஆனால் 25 வயதிற்கு குறைவான பெண்களில் இது மிக மிக அரிதாகவே காணப்படுகின்றது.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் தோன்றுவதற்கான காரணம்
தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்ற அல்லது ஈடுபட்ட எந்த பெண்ணிலும் பப்பிலோமோ வைரஸ் (HPV) எனப்படும் வைரஸின் தொற்று கர்ப்பப்பை வாசலில் ஏற்படுவது வழக்கம்.
ஆனால், எமது உடலிலுள்ள எதிர்ப்புச்சக்திகள் இந்த வைரஸை எதிர்த்து அழித்து விடுகின்றன. ஒரு சிறிய பகுதி பெண்களில் (10%) இந்த எதிர்ப்பு சக்தி சரியாக தொழிற்படாததினால் பப்பிலோமா வைரஸ் கர்ப்பப்பை வாசல் கலங்களிலேயே தேங்கி அவற்றின் கட்டமைப்பை மாற்றி பல வருடங்களில் புற்றுநோயாக உருவெடுக்கும். புகை பிடிக்கும் பழக்கமுடையவர்கள் மிக இளம் வயதிலேயே தாம்பத்திய உறவை ஆரம்பித்தவர்கள், பாலியல் துர்நடத்தையுடையவர்கள் போன்றவர்களில் இந்த மாற்றம் சற்று வீரியமாக நடைபெறும். ஆனால் பெரும்பாலான மக்கள் நினைப்பது என்னவென்றால் மேற்குறிப்பிட்ட பெண்களில் மட்டுமே இந்நோய் ஏற்படும் என்பதுதான். உண்மை என்னவென்றால், எந்தக்குடும்பப் பெண்ணுக்கும் இந்நோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோயின் நோய் அறிகுறிகள்
இதன் ஆரம்பத்தில் எந்நோய் அறிகுறியும் காணப்படாது. இப்புற்றுநோய் சற்று பெரிதாக வளருகின்ற போது ஏற்படும் முதல் அறிகுறி அசாதாரண இரத்தப்போக்குடனான மாதவிடாய். அதாவது மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாட்களில் இரத்தப்போக்கு, தாம்பத்திய உறவுக்கு பின்னரான இரத்தப்போக்கு, மாதவிடாய் முடிவுற்று மெனோபோஸ் நிலையை அடைந்த பெண்களில் பின்னர் ஏற்படும்.இரத்தப்போக்கு, சிலவேளைகளில் இந்த புற்றுநோய் துர்மணமுடைய திரவக்கசிவையும் தோற்றுவிக்கும். அத்துடன் நோயின் பிந்திய நிலையில் அடிவயிற்றுவலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகின்றது?
பெண்களது அடிவயிற்றைப் பரிசோதித்து கர்ப்பப்பையில் அசாதாரண தன்மைகள் இருப்பதாக சந்தேகித்தால் அவ்வாறான அசாதாரண பகுதிகளிலிருந்து சிறிய இழையங்களை பரிசோதனைக்காக எடுத்து இந்த நோயை உறுதிப்படுத்தலாம். மேலும் கொல்பொஸ்கொ எனப்படும் பூதக்கண்ணாடி வில்லைகள் கொண்ட கருவி மூலம் இவ்வாறான அசாதாரண மாற்றங்களை மிக நுணுக்கமாக அவதானித்து இழையங்களைப் பரிசோதித்தும் இந்நோயை உறுதிப்படுத்தலாம். இந்தப் புற்றுநோய் எந்தளவிற்கு வளர்ந்துள்ளது எனவும் அருகிலுள்ள நிணநீர் முடிச்சுக்களை எவ்வாறு தாக்கியுள்ளது எனவும் எவ்வாறு அருகிலுள்ள உறுப்புக்களுக்கு பரவியுள்ளது எனவும் சி.டி ஸ்கேன் பயன்படுத்தி உறுதிப்படுத்தலாம்.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய்க்கு எவ்வாறான சிகிச்சைகள் உள்ளன?
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய்க்கு இரு வழிகளில் சிகிச்சை வழங்கப்படும். அதாவது சத்திர சிகிச்சை மற்றும் கதிர்வீச்சி சிகிச்சை. இது ஒரு பெண்ணின் வயது, அவரது புற்றுநோயின் உக்கிரத்தன்மை, அவரது தேக ஆரோக்கியம் மற்றும் பெண்ணின் தனிப்பட்ட விருப்பம் என்பவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.
பொதுவாக இப்புற்றுநோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் சத்திரசிகிச்சை வெற்றியளிக்கப்படும். ஆனால் இந்நோய் சற்றுப்பிந்திய நிலையில் அறியப்பட்டால் கதிர்வீச்சு சிகிச்சையே பொருத்தமானது.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் வருமுன் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
இந்த புற்றுநோய் வந்த பின் சிகிச்சையளித்தும் பலன்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுவதனால் இதனை வருமுன் தடுப்பதே சிறந்தது. இவ்வாறு வருமுன் தடுப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்னவென்றால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுகின்ற அல்லது ஈடுபட்ட எந்தவொரு பெண்ணும் ஒழுங்காக கர்ப்பப்பை வாசல் பரிசோதனையான பப்டெஸ்ட்டை செய்வது அவசியம்.
இந்த பரிசோதனை மூன்று வருடங்களுக்கு ஒருமுறை 65 வயதுவரை செய்வது சிறந்தது. இந்த பரிசோதனையினை பெண்கள் அனைவரும் அறிந்திருந்து நீங்களாகவே முன்வந்து செய்வதன் மூலம் இந்நோயை இலகுவாக வெற்றி கொள்ளலாம். அவ்வாறான பரிசோதனையில் உங்களுக்கு ஏதாவது அசாதாரண மாற்றங்கள் கர்ப்பப்பை வாசலில் இருப்பதாக கண்டறியப்பட்டால் மிகவும் எளிமையான சிகிச்சைகள் மூலம் இந்த நோயை வராமல் தடுத்து விடலாம்.
கர்ப்பப்பை வாசல்புற்றுநோயை கண்டறிய மேற்கொள்ளும் பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது?
இது ஒரு வைத்திய நிபுணரின் ஆலோசனை கூடத்தில் மேற்கொள்ளப்படுகின்றது. இதற்காக நீங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவோ அல்லது மயக்கமடையச் செய்யவோ தேவையில்லை. அத்துடன் இதன்போது ஒரு வலியோ நோவோ ஏற்படுவதில்லை. இதற்காக எடுக்கப்படும் நேரம் 5 நிமிடங்களாகவே இருக்கும். இப்பரிசோதனையின் பின் நீங்கள் உடனடியாகவே வீடு செல்லக்கூடியதாக இருக்கும். பின்னர் இரு கிழமைகளில் உங்கள் பரிசோதனையின் பெறுபேறுகளை உங்கள் வைத்திய நிபுணருடன் கலந்தாலோசிக்கக் கூடியதாக இருக்கும்.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய்க்கான தடுப்பூசியின் பங்களிப்பு
இந்தப் புற்றுநோய் ஒரு வைரஸின் தாக் கத்தினாலேயே உருவாகின்றது. இவ்வைரஸ் தொற்றைத் தடுக்கும் தடுப்பூசிகள் இந் நோயை பெரிதளவில் தடுத்துவிடும். மேலை நாடுகளில் இந்த தடுப்பூசி (13 –16) வயதுடைய இளம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. எமது நாட்டிலும் இத்தடுப்பூசி பதிவு செய்யப்பட்டுள்ளது. தனியார் வைத்தியசாலைகளில் தற்போது பாவனையிலுள்ளது. மிக விரைவில் அரச வைத்தியசாலைகளிலும் ஆரம்பிக்கப்படலாம்.
டொக்டர்.கு.சுஜாகரன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக