இந்தியப் பெருங்கடலில் சுமார் 1,192 தீவுகளைக் கொண்ட சிறிய நாடான மாலைதீவில் அண்மையில் நடந்து வரும் சம்பவங்கள், அயல் நாடான இந்தியாவை மட்டுமன்றி, இலங்கைக்கும் கூட சில ஆபத்தான சமிக்ஞைகளை வெளிப்படுத்தியிருக்கின்றது.
மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் பயணம் செய்த படகில் கடந்த செப்டெம்பர் மாதம் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் அங்கு பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
ஜனாதிபதி அப்துல்லா யாமீன் ஹஜ் யாத்திரையை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது. இதில் மாலைதீவு ஜனாதிபதியின் மனைவிக்கு சிறியளவில் காயம் ஏற்பட்டது.
அசாதாரணமான இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த இலங்கை, சீனா, சவூதி அரேபியா, அமெரிக்கா என்று பல நாடுகள் உதவ முன்வந்தன.
விசாரணைகளுக்கு உதவ, குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு அனுபவம் மிக்க அதிகாரிகளை இலங்கை அரசாங்கம் உடனடியாகவே மாலைதீவுக்கு அனுப்பி வைத்தது.
அவர்கள் மேற்கொண்ட விசாரணையின் முடிவில், நிகழ்ந்தது குண்டுவெடிப்பே என்று உறுதி செய்தனர்.
சவூதி அரேபிய புலனாய்வுப் பிரிவும் அவ்வாறே அறிக்கை கொடுத்தது.
ஆனால் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவான எவ்.பி.ஐ, குண்டு வெடிப்பு நடக்கவில்லை என்றும் தொழில்நுட்பக் கோளாறு தான் என்றும் அறிக்கை கொடுத்தது.
2008ஆம் ஆண்டு நடந்த தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய முகமட் நசீட் அரசாங்கத்தை, இராணுவத்தின் உதவியுடன் அப்துல்லா யாமீன் கவிழ்த்ததில் இருந்தே, மாலைதீவில் அரசியல் வன்முறைகள் நிகழ்ந்து வந்தன.
மாலைதீவின் முன்னாள் அதிபர் நஷீட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 13 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் சூழலால் மாலைதீவில் இருந்து பலரும் இலங்கையில் அடைக்கலம் தேடியுள்ளனர்.
இருநாடுகளுக்கும் இடையிலான நெருக் கம், புவியியல் சூழல் என்பன, அங்குள்ள அரசியல் அதிருப்தியாளர்கள் பலரும், இலங்கையை நோக்கி வரத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை.
மாலைதீவு ஜனாதிபதியின் படகில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் தொடர்ச்சியாக மாலைதீவின் துணை அதிகாரியாக இருந்த அகமட் அதீப் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது நெருங்கிய நண்பரான- இந்த சதியில் தொடர்புடையவர் எனக் கருதப்படும் 18 வயது மாலைதீவு இளைஞர் ஒருவரை, கொழும்பில் தங்கியிருந்த வீட்டில் வைத்து கைது செய்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் அண்மையில் நாடு கடத்தியிருந்தனர்.
இந்த நாடு கடத்தல் சம்பவம் சட்ட நெறிமுறைகளுக்கு முரணானது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இலங்கையில் குற்றம் எதையும் இழைக்காத ஒருவர் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மாலைதீவு தூதரகம் விடுத்த வேண்டுகோளின்படியே குறிப்பிட்ட நபரைக் கைது செய்து நாடு கடத்தியதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் கூறியுள்ளது.
ஆனால் அது அரசாங்கத்துக்கு - குறிப்பாக வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியாமல் நடந்திருப்பது தான் ஆச்சரியம்.
பொதுவாக, இத்தகைய நாடுகடத்தல்கள், இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாகவே கையாளப்பட வேண்டும்.
அத்தகைய இராஜதந்திர வழிமுறைகளைப் பின்பற்றாமல், நேரடியாகவே பொலிஸ் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு மாலைதீவு தூதுவர் இந்த காரியத்தை சாதித்திருக்கிறார்.
இது இலங்கை அரசாங்கத்தை கடுமையாக சினங்கொள்ள வைத்திருக்கிறது.
வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட மாலைதீவு தூதுவர், இந்த விவகாரம் தொடர்பாக கண்டிக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கிடையே வெளிவிவகார அமைச்சை எரிச்சலடையச் செய்யும் இன்னொரு சம்பவமும் இடம்பெற்றிருக்கிறது.
கடந்த 24 ஆம் திகதி மாலைதீவு விமான நிலையத்தில் வைத்து இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய மதுஷங்க என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஒரு வாரம் கழித்தே, மாலைதீவு ஊடகங்கள் இதுபற்றி செய்தியை வெளியிட்டன.
குறிப்பிட்ட நபர், இலங்கை இராணுவத்தில் குறிபார்த்துச் சுடும் அணியில் முன்னர் பணியாற்றியவர் என்றும், அவர் மாலைதீவு ஜனாதிபதியைக் கொல்ல முயன்றதாகவும், அந்த நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை அளித்தது.
காரணம், குறிப்பிட்ட கைது தொடர்பாக மாலைதீவு அரசாங்கம் முறைப்படி தெரியப்படுத்தவில்லை.
அதேவேளை. இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் கூலிப்படையாக செயற்பட முனைந்து கைது செய்யப்பட்டால் அதன் விபரீதங்களுக்கு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டிய நிலை இருந்தது.
இந்தநிலையில் மாலைதீவில் கைது செய்யப்பட்டவர் இராணுவத்திலோ, விமானப்படை மற்றும் கடற்படையிலோ பணியாற்றியவர் அல்ல என்று உறுதி செய்தது பாதுகாப்பு அமைச்சு.
அவர் மாலபேயைச் சேர்ந்த ஒரு கருவாட்டு வர்த்தகர் என்றும் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட அவரது விளக்கமறியலை மாலைதீவு நீதிமன்றம் நீடித்திருக்கிறது.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்னதாகவே, மாலைதீவில் ஆளரவமற்ற தீவு ஒன்றில் இருந்து துப்பாக்கிகள், சினைப்பர் துப்பாக்கியில் பொருத்தும் சாதனங்கள், ரவைகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
இதனையடுத்தே, மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் ஒரு சினைப்பர் வீரர் என்று மாலைதீவு ஊடகங்கள் கதை கட்டின..
முதலில் அவரை முன்னாள் இராணுவச் சிப்பாய் என்று அறிமுகப்படுத்திய மாலைதீவு ஊடகங்கள், பின்னர், மாலைதீவு ஜனாதிபதியை கொலை செய்வதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளி என்று இப்போது கூறிவருகின்றன.
இந்தநிலையில் மாலைதீவு ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தார்.
அதற்கு இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கவலையும் கண்டனமும் தெரிவித்த நிலையில் ஆறு நாட்களின் பின்னர் இந்த அவசரகாலச்சட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
இப்போது, அரசியல் உறுதிப்பாடு உள்ள இடமாக அடையாளப்படுத்தப்பட முடியாத நிலையை அடைந்திருக்கிறது மாலைதீவு.
இலங்கைத் தீவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது.
மாலைதீவுக்கு இலங்கைக்கும் இடையிலான நெருக்கம், இந்த தாக்கத்துக்கு முக்கிய காரணம்.
மாலைதீவு ஜனாதிபதியைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டு உண்மையானால், அதில் இலங்கையர்களின் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டால், அரசாங்கத்துக்கும் அது சிக்கலான ஒரு விடயம் தான்.
ஏற்கனவே 1988ஆம் ஆண்டு, புளொட் அமைப்பு மாலைதீவு அரசியல் புள்ளி ஒருவரின் கூலிப்படையாகச் செயற்பட்டு, அங்கு ஆட்சிக்கவிழ்ப்புக்கு முயற்சித்தது.
அதற்கிடையில் இந்தியா தனது படைகளை அனுப்பி, அந்த ஆட்சிக்கவிழ்ப்புத் திட்டத்தை முறியடித்ததுடன், அதில் ஈடுபட்ட புளொட் உறுப்பினர்களையும் கைது செய்தது.
அவர்கள் பின்னர் கொழும்புக்கு அனுப்பப்பட்டு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
பின்னர், அவர்களை புளொட் தலைவர் சித்தார்த்தன் அரசாங்கத்துடன் பேசி விடுவித்திருந்தார்.
மாலைதீவின் அரசியல் உறுதிப்பாடு ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஆயுதக் கிளர்ச்சிக்கான சூழ்நிலைகள் மெதுவாகத் தென்படுகின்றன.
இதனை அமெரிக்காவோ, இந்தியாவோ, சீனாவோ விரும்பப் போவதில்லை. இலங்கையும் கூட அதனை விரும்பாது.
ஏனென்றால், இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் அமைதிக்கு ஆபத்தானது.
இலங்கையைப் பொறுத்தவரையில் அத்தகையதொரு கிளர்ச்சியின் விளைவை நேரடியாகவே அனுபவிக்க நேரிடலாம்.
இதனால் இலங்கை அரசாங்கம் மாலைதீவு விவகாரத்தை கவனமாகவே கையாள முனையும்.
ஆனால், இருநாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டு வரும் இடைவெளி, இலங்கைக்கு சாதகமான ஒன்றாக இருக்காது என்றே கருதப்படுகிறது.
-ஹரிகரன்
வீரகேசரி
மாலைதீவு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் பயணம் செய்த படகில் கடந்த செப்டெம்பர் மாதம் நிகழ்ந்த வெடிப்புச் சம்பவம் அங்கு பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியிருக்கிறது.
ஜனாதிபதி அப்துல்லா யாமீன் ஹஜ் யாத்திரையை முடித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்த போது இந்தச் சம்பவம் நடந்தது. இதில் மாலைதீவு ஜனாதிபதியின் மனைவிக்கு சிறியளவில் காயம் ஏற்பட்டது.
அசாதாரணமான இந்த வெடிப்புச் சம்பவம் குறித்து விசாரணை நடத்த இலங்கை, சீனா, சவூதி அரேபியா, அமெரிக்கா என்று பல நாடுகள் உதவ முன்வந்தன.
விசாரணைகளுக்கு உதவ, குற்றப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த இரண்டு அனுபவம் மிக்க அதிகாரிகளை இலங்கை அரசாங்கம் உடனடியாகவே மாலைதீவுக்கு அனுப்பி வைத்தது.
அவர்கள் மேற்கொண்ட விசாரணையின் முடிவில், நிகழ்ந்தது குண்டுவெடிப்பே என்று உறுதி செய்தனர்.
சவூதி அரேபிய புலனாய்வுப் பிரிவும் அவ்வாறே அறிக்கை கொடுத்தது.
ஆனால் அமெரிக்கப் புலனாய்வுப் பிரிவான எவ்.பி.ஐ, குண்டு வெடிப்பு நடக்கவில்லை என்றும் தொழில்நுட்பக் கோளாறு தான் என்றும் அறிக்கை கொடுத்தது.
2008ஆம் ஆண்டு நடந்த தேர்தல் மூலம் ஆட்சியைக் கைப்பற்றிய முகமட் நசீட் அரசாங்கத்தை, இராணுவத்தின் உதவியுடன் அப்துல்லா யாமீன் கவிழ்த்ததில் இருந்தே, மாலைதீவில் அரசியல் வன்முறைகள் நிகழ்ந்து வந்தன.
மாலைதீவின் முன்னாள் அதிபர் நஷீட் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு 13 ஆண்டு சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசியல் சூழலால் மாலைதீவில் இருந்து பலரும் இலங்கையில் அடைக்கலம் தேடியுள்ளனர்.
இருநாடுகளுக்கும் இடையிலான நெருக் கம், புவியியல் சூழல் என்பன, அங்குள்ள அரசியல் அதிருப்தியாளர்கள் பலரும், இலங்கையை நோக்கி வரத் தொடங்கியதில் ஆச்சரியமில்லை.
மாலைதீவு ஜனாதிபதியின் படகில் நிகழ்ந்த குண்டுவெடிப்புச் சம்பவத்தின் தொடர்ச்சியாக மாலைதீவின் துணை அதிகாரியாக இருந்த அகமட் அதீப் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரது நெருங்கிய நண்பரான- இந்த சதியில் தொடர்புடையவர் எனக் கருதப்படும் 18 வயது மாலைதீவு இளைஞர் ஒருவரை, கொழும்பில் தங்கியிருந்த வீட்டில் வைத்து கைது செய்த குடிவரவு குடியகல்வு திணைக்களத்தினர் அண்மையில் நாடு கடத்தியிருந்தனர்.
இந்த நாடு கடத்தல் சம்பவம் சட்ட நெறிமுறைகளுக்கு முரணானது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இலங்கையில் குற்றம் எதையும் இழைக்காத ஒருவர் எவ்வாறு நாடு கடத்தப்பட்டார்? என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
மாலைதீவு தூதரகம் விடுத்த வேண்டுகோளின்படியே குறிப்பிட்ட நபரைக் கைது செய்து நாடு கடத்தியதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் கூறியுள்ளது.
ஆனால் அது அரசாங்கத்துக்கு - குறிப்பாக வெளிவிவகார அமைச்சுக்குத் தெரியாமல் நடந்திருப்பது தான் ஆச்சரியம்.
பொதுவாக, இத்தகைய நாடுகடத்தல்கள், இராஜதந்திர வழிமுறைகளின் ஊடாகவே கையாளப்பட வேண்டும்.
அத்தகைய இராஜதந்திர வழிமுறைகளைப் பின்பற்றாமல், நேரடியாகவே பொலிஸ் மற்றும் குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துடன் தொடர்பு கொண்டு மாலைதீவு தூதுவர் இந்த காரியத்தை சாதித்திருக்கிறார்.
இது இலங்கை அரசாங்கத்தை கடுமையாக சினங்கொள்ள வைத்திருக்கிறது.
வெளிவிவகார அமைச்சுக்கு அழைக்கப்பட்ட மாலைதீவு தூதுவர், இந்த விவகாரம் தொடர்பாக கண்டிக்கப்பட்டிருக்கிறார்.
இதற்கிடையே வெளிவிவகார அமைச்சை எரிச்சலடையச் செய்யும் இன்னொரு சம்பவமும் இடம்பெற்றிருக்கிறது.
கடந்த 24 ஆம் திகதி மாலைதீவு விமான நிலையத்தில் வைத்து இலங்கையைச் சேர்ந்த 27 வயதுடைய மதுஷங்க என்பவர் கைது செய்யப்பட்டார்.
ஒரு வாரம் கழித்தே, மாலைதீவு ஊடகங்கள் இதுபற்றி செய்தியை வெளியிட்டன.
குறிப்பிட்ட நபர், இலங்கை இராணுவத்தில் குறிபார்த்துச் சுடும் அணியில் முன்னர் பணியாற்றியவர் என்றும், அவர் மாலைதீவு ஜனாதிபதியைக் கொல்ல முயன்றதாகவும், அந்த நாட்டு ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இது இலங்கை அரசாங்கத்துக்கு அதிர்ச்சியை அளித்தது.
காரணம், குறிப்பிட்ட கைது தொடர்பாக மாலைதீவு அரசாங்கம் முறைப்படி தெரியப்படுத்தவில்லை.
அதேவேளை. இராணுவத்தில் பணியாற்றிய ஒருவர் கூலிப்படையாக செயற்பட முனைந்து கைது செய்யப்பட்டால் அதன் விபரீதங்களுக்கு அரசாங்கமும் பொறுப்புக்கூற வேண்டிய நிலை இருந்தது.
இந்தநிலையில் மாலைதீவில் கைது செய்யப்பட்டவர் இராணுவத்திலோ, விமானப்படை மற்றும் கடற்படையிலோ பணியாற்றியவர் அல்ல என்று உறுதி செய்தது பாதுகாப்பு அமைச்சு.
அவர் மாலபேயைச் சேர்ந்த ஒரு கருவாட்டு வர்த்தகர் என்றும் கூறப்படுகிறது.
ஆரம்பத்தில் 15 நாட்கள் காவலில் வைக்கப்பட்ட அவரது விளக்கமறியலை மாலைதீவு நீதிமன்றம் நீடித்திருக்கிறது.
இந்தச் சம்பவம் நடப்பதற்கு சில நாட்கள் முன்னதாகவே, மாலைதீவில் ஆளரவமற்ற தீவு ஒன்றில் இருந்து துப்பாக்கிகள், சினைப்பர் துப்பாக்கியில் பொருத்தும் சாதனங்கள், ரவைகள் மற்றும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன.
இதனையடுத்தே, மாலைதீவில் கைது செய்யப்பட்ட இலங்கை இளைஞர் ஒரு சினைப்பர் வீரர் என்று மாலைதீவு ஊடகங்கள் கதை கட்டின..
முதலில் அவரை முன்னாள் இராணுவச் சிப்பாய் என்று அறிமுகப்படுத்திய மாலைதீவு ஊடகங்கள், பின்னர், மாலைதீவு ஜனாதிபதியை கொலை செய்வதற்காக கூலிக்கு அமர்த்தப்பட்ட கொலையாளி என்று இப்போது கூறிவருகின்றன.
இந்தநிலையில் மாலைதீவு ஜனாதிபதி அவசரகாலச் சட்டத்தை நடைமுறைப்படுத்தியிருந்தார்.
அதற்கு இலங்கை, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கவலையும் கண்டனமும் தெரிவித்த நிலையில் ஆறு நாட்களின் பின்னர் இந்த அவசரகாலச்சட்டம் விலக்கி கொள்ளப்பட்டுள்ளது.
இப்போது, அரசியல் உறுதிப்பாடு உள்ள இடமாக அடையாளப்படுத்தப்பட முடியாத நிலையை அடைந்திருக்கிறது மாலைதீவு.
இலங்கைத் தீவிலும் இதன் தாக்கம் எதிரொலிக்கிறது.
மாலைதீவுக்கு இலங்கைக்கும் இடையிலான நெருக்கம், இந்த தாக்கத்துக்கு முக்கிய காரணம்.
மாலைதீவு ஜனாதிபதியைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டு உண்மையானால், அதில் இலங்கையர்களின் தொடர்பு உறுதிப்படுத்தப்பட்டால், அரசாங்கத்துக்கும் அது சிக்கலான ஒரு விடயம் தான்.
ஏற்கனவே 1988ஆம் ஆண்டு, புளொட் அமைப்பு மாலைதீவு அரசியல் புள்ளி ஒருவரின் கூலிப்படையாகச் செயற்பட்டு, அங்கு ஆட்சிக்கவிழ்ப்புக்கு முயற்சித்தது.
அதற்கிடையில் இந்தியா தனது படைகளை அனுப்பி, அந்த ஆட்சிக்கவிழ்ப்புத் திட்டத்தை முறியடித்ததுடன், அதில் ஈடுபட்ட புளொட் உறுப்பினர்களையும் கைது செய்தது.
அவர்கள் பின்னர் கொழும்புக்கு அனுப்பப்பட்டு ஆயுள் தண்டனையும் வழங்கப்பட்டது.
பின்னர், அவர்களை புளொட் தலைவர் சித்தார்த்தன் அரசாங்கத்துடன் பேசி விடுவித்திருந்தார்.
மாலைதீவின் அரசியல் உறுதிப்பாடு ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு ஆயுதக் கிளர்ச்சிக்கான சூழ்நிலைகள் மெதுவாகத் தென்படுகின்றன.
இதனை அமெரிக்காவோ, இந்தியாவோ, சீனாவோ விரும்பப் போவதில்லை. இலங்கையும் கூட அதனை விரும்பாது.
ஏனென்றால், இது இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் அமைதிக்கு ஆபத்தானது.
இலங்கையைப் பொறுத்தவரையில் அத்தகையதொரு கிளர்ச்சியின் விளைவை நேரடியாகவே அனுபவிக்க நேரிடலாம்.
இதனால் இலங்கை அரசாங்கம் மாலைதீவு விவகாரத்தை கவனமாகவே கையாள முனையும்.
ஆனால், இருநாடுகளுக்கும் இடையில் ஏற்பட்டு வரும் இடைவெளி, இலங்கைக்கு சாதகமான ஒன்றாக இருக்காது என்றே கருதப்படுகிறது.
-ஹரிகரன்
வீரகேசரி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக