பெண்களை தாக்கும் புற்று நோய்களில் முதல் இடத்தை பிடிப்பது மார்பகப்புற்றுநோய். அடுத்ததாக கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் உள்ளது.
இப்புற்று நோய் தொடர்பான விளக்கங்கள் கண்டறியும் பரிசோதனைகள், தடுப்பு முறைகள் பற்றி தெளிவுபடுத்துவதன் மூலம் இந்நோய்த்தாக்கத்தைக் குறைப்பது எமது கடமையாகும்.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்ற அல்லது ஈடுபட்ட எந்தப் பெண்ணிலும் பப்பிலோமா வைரஸ் (HPV) எனப்படும் வைரஸின் தொற்று கர்ப்பப்பை வாசலில் ஏற்படுவது வழக்கம். ஆனால் எமது உடலிலுள்ள எதிர்ப்பு சக்திகள் இந்த வைரஸை எதிர்த்து அழித்து விடுகின்றன. ஒரு சிறிய பகுதி பெண்களில் (10%) இந்த எதிர்ப்பு சக்தி சரியாகத் தொழிற்படாததால் பப்பிலோமா வைரஸ் கர்ப்பப்பை வாசல் கலங்களிலேயே தேங்கி அவற்றின் கட்டமைப்பை சீர்குலைத்து பல வருடங்களில் புற்றுநோயாக உருவெடுக்கும்.
புகைபிடிக்கும் பழக்கமுடையவர்கள், மிக இளம் வயதிலேயே தாம்பத்திய உறவை ஆரம்பித்தவர்கள், பாலியல் துர்நடத்தை உடையவர்கள் போன்றவர்களில் இம்மாற்றம் சற்று வீரியமாக நடைபெறும்.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோயின் நோய் அறிகுறிகள்
இந்நோயின் ஆரம்ப காலப்பகுதியில் எவ்வித அறிகுறிகளையும் காட்டாது. இப்புற்று நோய் சற்று பெரிதாக வளருகின்ற போது ஏற்படக்கூடிய முதல் அறிகுறி அசாதாரண இரத்தப்போக்குடனான மாதவிடாய் அதாவது மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாட்களில் இரத்தப்போக்கு, தாம்பத்திய உறவுக்கு பின்னரான இரத்தப்போக்கு, மாதவிடாய் முடிவுற்று மெனோபோஸ் (menopause) நிலையை அடைந்த பெண்களில் பின்னர் ஏற்படும் இரத்தப்போக்கு சிலவேளைகளில் இப்புற்று நோய் துர்மணமுடைய திரவக்கசிவையும் ஏற்படுத்தும். அத்துடன் நோயின் பிந்திய காலப்பகுதியில் அடிவயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகின்றது?
பெண்களது அடிவயிற்றைப் பரிசோதித்து கர்ப்பப்பையில் அசாதாரண தன்மைகள் இருப்பதாக சந்தேகித்தால் அவ்வாறான அசாதாரண பகுதியிலிருந்து சிறிய இழையங்களை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி நோயை உறுதிப்படுத்தலாம்.
மேலும் கொல்பொஸ்கோப்பி எனப்படும் பூதக்கண்ணாடி வில்லைகள் கொண்ட கருவி மூலம் இவ்வாறான அசாதாரண மாற்றங்களை மிக நுணுக்கமாக அவதானித்து இழையங்களைப் பரிசோதித்து இந்நோயை உறுதிப்படுத்தலாம். மற்றும் இப்புற்று நோய் எந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இக் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய்க்குரிய சிகிச்சைகள்
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய்க்கு இருவழிகளில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அதாவது சத்திர சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை இச்சிகிச்சையானது பெண்ணின் வயது, அவரது புற்றுநோய் உக்கிரத்தன்மை, அவரது தேக ஆரோக்கிய நிலை மற்றும் அவரது தனிப்பட்ட விருப்பம் என்பவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.
பொதுவாக இப்புற்று நோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் சத்திர சிகிச்சை வெற்றியளிக்கும். ஆனால் இந்நோய் சற்றுப் பிந்திய நிலையில் அறியப்பட்டால் கதிர்வீச்சு சிகிச்சையே பொருத்தமானது.
கர்ப்பப்பை வாசல் புற்று நோய் வருமுன் தடுத்தல்
இப்புற்று நோய் வந்தபின் சிகிச்சையளித்தும் பலன்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுவதனால் இதனை வருமுன் தடுப்பதே சிறந்தது. இவ்வாறு வருமுன் தடுப்பதற்கு தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுகின்ற அல்லது ஈடுபட்ட எந்தவொரு பெண்ணும் ஒழுங்காக கர்ப்பப்பை வாசல் பரிசோதனையான பப் டெஸ்டை செய்வது அவசியம்.
இந்தப் பரிசோதனையை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை 65 வயது வரை செய்வது சிறந்தது. இந்தப் பரிசோதனையை பெண்கள் அனைவரும் அறிந்திருந்து தாங்களாகவே முன்வந்து செய்வதன் மூலம் இந்நோயை இலகுவாக வெற்றி கொள்ளலாம்.
அவ்வாறான பரிசோதனையில் ஏதாவது அசாதாரண நிலைகள் கர்ப்பப்பை வாசலில் இருப்பது கண்டறியப்பட்டால் மிகவும் எளிமையான சிகிச்சைகள் மூலம் இந்த நோய் வராமல் தடுத்து விடலாம்.
கர்ப்பப்பை வாசல் புற்று நோயை கண்டறிய மேற்கொள்ளும் பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
இது ஒரு வைத்திய நிபுணரின் ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவோ அல்லது உங்களை மயக்கமடையச் செய்யவோ தேவையில்லை.
அத்துடன் இதன் போது ஒரு வலியோ நோவோ ஏற்படாது. இதற்காக எடுக்கும் நேரம் 5 நிமிடங்களாக இருக்கும். இதன் பின் நீங்கள் உடனடியாக வீடு செல்லக்கூடியதாக இருக்கும்
இதன் பின் இரண்டு கிழமைகளில் இப்பரிசோதனை பெறுபேறுகளை வைத்திய நிபுணருடன் நீங்கள் கலந்தாலோசிக்கக் கூடியதாக இருக்கும்.
இப்புற்றுநோய்க்கான தடுப்பூசியின் பங்களிப்பு
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் ஒரு வைரஸின் தாக்கத்தினாலேயே உருவாகின்றது.
இவ்வைரஸ் தொற்றை தடுக்கும் தடுப்பூசிகள் இந்நோயைப் பெரிதளவில் தடுத்து விடும். மேலை நாடுகளில் இத்தடுப்பூசி 13- -16 வயதுடைய இளம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. எமது நாட்டிலும் இத்தடுப்பூசி தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
இப்புற்று நோய் தொடர்பான விளக்கங்கள் கண்டறியும் பரிசோதனைகள், தடுப்பு முறைகள் பற்றி தெளிவுபடுத்துவதன் மூலம் இந்நோய்த்தாக்கத்தைக் குறைப்பது எமது கடமையாகும்.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் ஏற்படுவதற்கான காரணங்கள்
தாம்பத்திய உறவில் ஈடுபடுகின்ற அல்லது ஈடுபட்ட எந்தப் பெண்ணிலும் பப்பிலோமா வைரஸ் (HPV) எனப்படும் வைரஸின் தொற்று கர்ப்பப்பை வாசலில் ஏற்படுவது வழக்கம். ஆனால் எமது உடலிலுள்ள எதிர்ப்பு சக்திகள் இந்த வைரஸை எதிர்த்து அழித்து விடுகின்றன. ஒரு சிறிய பகுதி பெண்களில் (10%) இந்த எதிர்ப்பு சக்தி சரியாகத் தொழிற்படாததால் பப்பிலோமா வைரஸ் கர்ப்பப்பை வாசல் கலங்களிலேயே தேங்கி அவற்றின் கட்டமைப்பை சீர்குலைத்து பல வருடங்களில் புற்றுநோயாக உருவெடுக்கும்.
புகைபிடிக்கும் பழக்கமுடையவர்கள், மிக இளம் வயதிலேயே தாம்பத்திய உறவை ஆரம்பித்தவர்கள், பாலியல் துர்நடத்தை உடையவர்கள் போன்றவர்களில் இம்மாற்றம் சற்று வீரியமாக நடைபெறும்.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோயின் நோய் அறிகுறிகள்
இந்நோயின் ஆரம்ப காலப்பகுதியில் எவ்வித அறிகுறிகளையும் காட்டாது. இப்புற்று நோய் சற்று பெரிதாக வளருகின்ற போது ஏற்படக்கூடிய முதல் அறிகுறி அசாதாரண இரத்தப்போக்குடனான மாதவிடாய் அதாவது மாதவிடாய்க்கு இடைப்பட்ட நாட்களில் இரத்தப்போக்கு, தாம்பத்திய உறவுக்கு பின்னரான இரத்தப்போக்கு, மாதவிடாய் முடிவுற்று மெனோபோஸ் (menopause) நிலையை அடைந்த பெண்களில் பின்னர் ஏற்படும் இரத்தப்போக்கு சிலவேளைகளில் இப்புற்று நோய் துர்மணமுடைய திரவக்கசிவையும் ஏற்படுத்தும். அத்துடன் நோயின் பிந்திய காலப்பகுதியில் அடிவயிற்று வலி ஏற்பட வாய்ப்புள்ளது.
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் எவ்வாறு கண்டுபிடிக்கப்படுகின்றது?
பெண்களது அடிவயிற்றைப் பரிசோதித்து கர்ப்பப்பையில் அசாதாரண தன்மைகள் இருப்பதாக சந்தேகித்தால் அவ்வாறான அசாதாரண பகுதியிலிருந்து சிறிய இழையங்களை எடுத்து பரிசோதனைக்காக அனுப்பி நோயை உறுதிப்படுத்தலாம்.
மேலும் கொல்பொஸ்கோப்பி எனப்படும் பூதக்கண்ணாடி வில்லைகள் கொண்ட கருவி மூலம் இவ்வாறான அசாதாரண மாற்றங்களை மிக நுணுக்கமாக அவதானித்து இழையங்களைப் பரிசோதித்து இந்நோயை உறுதிப்படுத்தலாம். மற்றும் இப்புற்று நோய் எந்தளவுக்கு வளர்ந்துள்ளது என்பதையும் அறிந்து கொள்ளலாம்.
இக் கர்ப்பப்பை வாசல் புற்றுநோய்க்குரிய சிகிச்சைகள்
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய்க்கு இருவழிகளில் சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. அதாவது சத்திர சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை இச்சிகிச்சையானது பெண்ணின் வயது, அவரது புற்றுநோய் உக்கிரத்தன்மை, அவரது தேக ஆரோக்கிய நிலை மற்றும் அவரது தனிப்பட்ட விருப்பம் என்பவற்றைப் பொறுத்து தீர்மானிக்கப்படும்.
பொதுவாக இப்புற்று நோய் ஆரம்ப நிலையில் கண்டறியப்பட்டால் சத்திர சிகிச்சை வெற்றியளிக்கும். ஆனால் இந்நோய் சற்றுப் பிந்திய நிலையில் அறியப்பட்டால் கதிர்வீச்சு சிகிச்சையே பொருத்தமானது.
கர்ப்பப்பை வாசல் புற்று நோய் வருமுன் தடுத்தல்
இப்புற்று நோய் வந்தபின் சிகிச்சையளித்தும் பலன்கள் மட்டுப்படுத்தப்பட்டதாகவே காணப்படுவதனால் இதனை வருமுன் தடுப்பதே சிறந்தது. இவ்வாறு வருமுன் தடுப்பதற்கு தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபடுகின்ற அல்லது ஈடுபட்ட எந்தவொரு பெண்ணும் ஒழுங்காக கர்ப்பப்பை வாசல் பரிசோதனையான பப் டெஸ்டை செய்வது அவசியம்.
இந்தப் பரிசோதனையை மூன்று வருடங்களுக்கு ஒரு முறை 65 வயது வரை செய்வது சிறந்தது. இந்தப் பரிசோதனையை பெண்கள் அனைவரும் அறிந்திருந்து தாங்களாகவே முன்வந்து செய்வதன் மூலம் இந்நோயை இலகுவாக வெற்றி கொள்ளலாம்.
அவ்வாறான பரிசோதனையில் ஏதாவது அசாதாரண நிலைகள் கர்ப்பப்பை வாசலில் இருப்பது கண்டறியப்பட்டால் மிகவும் எளிமையான சிகிச்சைகள் மூலம் இந்த நோய் வராமல் தடுத்து விடலாம்.
கர்ப்பப்பை வாசல் புற்று நோயை கண்டறிய மேற்கொள்ளும் பரிசோதனை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?
இது ஒரு வைத்திய நிபுணரின் ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படவோ அல்லது உங்களை மயக்கமடையச் செய்யவோ தேவையில்லை.
அத்துடன் இதன் போது ஒரு வலியோ நோவோ ஏற்படாது. இதற்காக எடுக்கும் நேரம் 5 நிமிடங்களாக இருக்கும். இதன் பின் நீங்கள் உடனடியாக வீடு செல்லக்கூடியதாக இருக்கும்
இதன் பின் இரண்டு கிழமைகளில் இப்பரிசோதனை பெறுபேறுகளை வைத்திய நிபுணருடன் நீங்கள் கலந்தாலோசிக்கக் கூடியதாக இருக்கும்.
இப்புற்றுநோய்க்கான தடுப்பூசியின் பங்களிப்பு
கர்ப்பப்பை வாசல் புற்றுநோய் ஒரு வைரஸின் தாக்கத்தினாலேயே உருவாகின்றது.
இவ்வைரஸ் தொற்றை தடுக்கும் தடுப்பூசிகள் இந்நோயைப் பெரிதளவில் தடுத்து விடும். மேலை நாடுகளில் இத்தடுப்பூசி 13- -16 வயதுடைய இளம் பெண்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. எமது நாட்டிலும் இத்தடுப்பூசி தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக