ஓர் இலகுவான சோதிட விளக்கம்
ஆணோ பெண்ணோ, அவரது தாம்பத்திய வாழ்வு செழிப்பாகவும் இன்பமாகவும் இருக்க வேண்டுமானால் அவரது சாதகத்தில் 3,7,11 ஆகிய வீடுகள் வலுவானவையாக அமைந்திருக்க வேண்டியது அவசியம்!
அறம், பொருள் , இன்பம், என்னும் மூன்றினுள் இன்பமாகிய காமமே மிகவும் சக்திவாய்ந்தது. ஆசை, விரக்தி, இன்பம்,துன்பம், நட்பு, பகை, பாசம், துறவு, இலாபம் நஷ்டம், துயரம், களிப்பு பலவற்றிற்கும் காமமே தூண்டுதலாக இருக்கிறது!
ஒரு சாதகத்தின் கிரகநிலை அதன் இலக்கினத்தை முதன்மையாகக் கொண்டு கணிக்கப்பட்டாலும், பொதுவான கோசார பார்வையில் இராசிச் சக்கரமென்பது மேடராசியை முதன்மையாகக் கொண்டே ஆரம்பிக்கப்படுகின்றது. இது தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளில் சூரியன் மேடராசியில் பிரவேசிப்பதால் கொண்டாடப்படுகின்ற தமிழ்ப்புத்தாண்டை முதன்மைப்படுத்தி ஏற்பட்ட வழக்கமேயல்லாது மேடத்தை பிரதானப்படுத்தியோ அன்றி மீனத்தை கடைநிலைப்படுத்தியோ காட்டும் தரப்படுத்தல் அல்ல.
இந்தவகையில் இராசிச் சக்கரத்தில் மேடத்திலிருந்து எண்ணிவரும் மூன்றாமிடத்தைக் கவனியுங்கள். மிதுனம் என்று அதற்குப் பெயர். மிதுனம் என்ற சொல் மைதுனம் அல்லது காமனின்ப நுகர்ச்சி என்னும் பொருளைத் தருவதையும் நினைவில் கொள்ளுங்கள். இந்த மிதுனம் எவ்வாறு குறிக்கப்படுகின்றது?
ஆண்மை, ஆசை, வலிமை, உறுதி ஆகியவற்றைக்காட்ட வேண்டிய தாம்பத்திய வாழ்க்கையிலே மிதுனம் எனப்படும் இந்த மூன்றாமிடமானது சப்தம ஸ்தானமாகிய ஏழாமிடத்தின் திரிகோணஸ்தானமாகவும் (பாக்கிய வீடு) விளங்குவதைக் கவனியுங்கள். ஆகவே சப்தம ஸ்தானம் எனப்படும் களத்திர வீடாகிய ஏழாமிடத்தினால் அடையக் கூடிய தாம்பத்திய உறவிலே அளவற்ற இன்பமும் திருப்தியும் பெருக வேண்டுமானால் அதற்கு இந்த பாக்கிய ஸ்தானமான மூன்றாமிடமும் பலம் பெற்றதாய் அமைந்திருக்க வேண்டியது அவசியம்.
புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழும் குடும்ப சுகத்துக்கும் காதலும் காமமும் சம விகிதத்தில் கலந்த களத்திர சுகத்துக்கும் காரணமான சுக்கிர பகவானுக்கு அதனாற்றான் இராசிச் சக்கரத்தில் இரண்டாமிடத்தையும் ஏழாமிடத்தையும் தந்து சோதிட சாத்திரத்தின் மூல கர்த்தாக்கள் சிறப்பித்திருக்கிறார்கள்.கட்டிளம் காளை போன்ற ஆண்மையும் (இடபம்) எதிலும் அதிகம் பற்று வைக்காமல் தராசு போல எதையும் சம அளவில் காட்டியபடி நடந்து கொள்ளும் நிதானமும் (துலாம் )இல்லறவாழ்வின் இன்றியமையாத தேவைகள் என்பதை இது காட்டுகிறதல்லவா?
மூன்றாமிடமானது ஏழாமிடத்தினால் அனுபவிக்கப்படுகின்ற இன்பத்தினால் ஒருவர் அடைகின்ற ஆத்ம சந்தோஷத்தையும் (தாம்பத்திய சுகம்) திருப்தியையும் இதனால் நமக்குத் தெளிவாக உணர்த்தும் என்று கூறலாம். ஏழாமிடத்தின் பஞ்சமஸ்தானமாகிய பதினோராமிடம் ,ஏழாமிடத்தால் அனுபவிக்கும் நமது மனமாகிய உள்ளத்திற்குக் கிடைக்கும் இன்பத்தையும் மன நிறைவையும் உணர்த்தும் என்பதை நாம் அறிய வேண்டும்.
புருஷார்த்தம் என்பது சோதிட நூல்களில் அதிகமாகப் பாவிக்கப்படும் ஒரு பதமாகும். புருஷார்த்தங்கள் என்றால் ஒரு மனித உயிர் அடையக்கூடிய அடைய வேண்டிய நன்மைகள் என்று பொருள். இவற்றை நான்காக வகைப்படுத்தியிருக்கின்றார்கள். பெரியோர்கள் அவை தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்பதாகும். தமிழ்ச் சான்றோர் இவற்றை அறம்,பொருள், இன்பம், வீடு என்று நான்கு பேறுகளாகக் கூறியுள்ளார்கள்.
இந்த நான்கில் தர்மம், அர்த்தம், காமம், என்னும் மூன்றும் அதாவது அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் இப்போது எடுத்துள்ள இந்த உடம்போடு கூடிய பிறவியிலேயே நம்மால் அடையக் கூடியவை மோட்சம் அல்லது வீடு என்பது நம் ஆன்மா இந்த உடலைக் கழித்து விட்ட பின்னால் அதனால் மட்டுமே அடையக் கூடியது. முதல் மூன்று தர்மங்களையும் நாம் எவ்வளவு சிறப்பாக நடத்துகிறோமோ, அதற்குத்தக்கபடி நான்காவதான வீடு பேறும் நமக்குக் கிடைக்கும்.
இவற்றுள் அதாவது இந்த அறம், பொருள், இன்பம் என்ற மூன்றினுள் காமமே மிகவும் சக்திவாய்ந்தது. ஆசை, விரக்தி, இன்பம், துன்பம், நட்பு, களிப்பு போன்றவற்றிற்கும் காமமே தூண்டுதலாக இருக்கின்றது காமத்தை நெறிப்படுத்தி வாழ்வது நெறியோடு செய்து அடைவது பொருளாகும். இரண்டிலும் நெறி ஒழுக்கம் வேண்டும். ஆனால், இந்த உணர்வுகள் நல்லவை கெட்டவை எல்லாமே தெய்வீக சக்திகளின் சங்கல்பத்துக்கு அவைகளின் செல்வாக்கிற்குட்பட்டே நிகழ்கின்றன என்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
இந்த நான்கு புருஷார்த்தங்களும் வேதாந்த சித்தாந்த விசாரணைகளில் மட்டுமே விளக்கப்படுவன அல்ல. சோதிட சாத்திரத்திலும் இவற்றை அறியும் மரபை நம் முன்னோர்கள் வகுத்துக் காட்டியிருக்கின்றார்கள். அதன்படி இலக்கினத்திலிருந்து எண்ணிவரும் 1ஆம் 5ஆம் 9ஆம் இடங்கள் தர்மத்தைக் குறிக்கும் திரிகோண ஸ்தானங்களாகும். அதுமாதிரி 2, 6,10 ஆகிய இடங்கள் அர்த்தத்தையும் 3, 7, 11 ஆகிய இடங்கள் காமத்தையும் 4, 8, 12 ஆகிய இடங்கள் மோட்சத்தையும் குறிக்கும் திரிகோண ஸ்தானங்களாகக் கருதப்படும்.
ஒரு சாதகத்தை நன்றாக ஆராய்ந்தோமானால் ஒவ்வொருவரினதும் வாழ்விலும் இந்த நான்கு புருஷார்த்தங்களும் எவ்விதம் விளங்கும் என்பதைக் கணக்கிட்டுக் கூறிவிடலாம். இத்திரிகோணஸ்தானங்கள் ஒன்று மற்றொன்றின் செல்வாக்கைச் சார்ந்து நின்று ஒருவரின் வாழ்வை நிர்ணயித்து நடத்திச் செல்லக் கூடியவையென்று சான்றோர்கள் சொல்வதை நாமும் கவனித்து நடந்து கொள்வதே வாழ்வில் நன்மைகளை அறிமுகப்படுத்தும்.
நமது வாழ்வானது மூன்று நிலைகளில் நடக்கிறதென்பது தத்துவமும் இன்றைய அறிவியலும் ஒப்புக்கொண்ட உண்மையாகும். அவை உடல் தொடர்பான உளநலம் தொடர்பான, உயிர் தொடர்பான வாழ்வு என்பதாகும். உடலை விட உள்ளம் வலிமையானது. உள்ளம் உடலையும் தன் சக்திக்கு உட்பட்டு நடக்க வைக்கும் வலிமை கொண்டது. உள்ளத்தை விட உயிர் வலிமையானது. உயிர் உள்ளத்தை இயங்க வைக்கக்கூடியது. உள்ளத்தை ஏவிச் செலுத்தி உடலையும் இயங்கச் செய்யும் ஆற்றல் பெற்றது.
எனவே உயிராற்றல் பெருகினால் உள்ளத்தின் சக்திபெருகும். உடலின் வலிமையும் மிகுதியாகும்.
உயிராற்றலை பெருக்குவதற்கு வழிகாட்டவே ஆன்மஞான நூல்கள் அனைத்தும் தோன்றின. இந்த உடல், உள்ளம், உயிர் மூன்றினதும் சக்திகள் நம் ஒவ்வொருவரிடமும் எவ்விதம் அமைந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியுமா இதற்கு சோதிட மரபுகளில் வழியிருக்கிறதா என்று கேட்டால் நமது சோதிட மேதைகள் அதற்கும் வழிகாட்டியிருக்கிறார்கள். ஒருவரின் சாதகத்தை எடுத்துக்கொண்டால் அதிலுள்ள பன்னிரு வீடுகளிலும் 1, 4, 7,10 ஆகிய வீடுகளை ஆராய்ந்தால் அவரது உடல்வளமும் போக்கும் பற்றிய தன்மையைக் கண்டு விடலாம். 2, 5, 8,11 ஆகிய வீடுகளை ஆராய்ந்தால் அவரது உள்ளத்தின் தன்மையையும் வலிமையையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம். 3, 6, 9, 12 ஆகிய வீடுகளை ஆராய்ந்தால் அவரது உயிரின் இயல்பையும் சக்தியின் வேகத்தையும் அது போகும் போக்கினையும் புரிந்து கொள்ளலாம். இவை ஒவ்வொன்றும் ஒன்று மற்றொன்றின் கேந்திரத்தானமாக இருப்பவை. ஒன்று மற்றொன்றின் சக்தியை தன்னுடைய அமைப்பால் ஏற்றபடி உருவாக்கவும் முயல்பவை. இவற்றை ஊன்றி ஆராய்ந்தால் ஒருவரின் உடல்வளம் மனவளம் ஆத்மநலம் ஆகிய மூன்றையுமே நிர்ணயித்துக் கூறலாம் என்பதும் சோதிட சாத்திரத்தின் முடிவாகும்.
நான்கு புருஷார்த்தங்களுள் காமம் என்னும் இன்பவாழ்வைக் குறிக்கும் திரிகோணஸ்தானங்கள் ஒருவரின் சாதகத்திலுள்ள 3, 7, 11 ஆம் இடங்க.ௌன்று நாம் ஏற்கனவே கூறினோம். இந்த மூன்று இடங்களையும் நலம் அடுத்து வகைப்படுத்திய உடல் உள்ளம் உயிர் என்பவற்றின் கேந்திர ஸ்தானங்களோடு இப்போது பொருந்திப் பார்ப்போம்.
அவ்விதம் பார்க்கும்போது மூன்றாமிடம் உயிர்த்தொடர்பு கொண்டது என்பதையும் ஏழாமிடம் உடலோடு உள்ளத்தொடர்பும் கொண்டது என்பதையும் நாம் அறியலாம். இதன்மூலம் காமம் என்னும் இன்பமானது உயிர், உள்ளம், உடல் என்ற மூன்றாலும் அனுபவிக்கக் கூடியதென்பது நமக்கு விளங்கும்.
இவற்றுள் மூன்றாமிடத்தால் கணித்தறியப்படும் காமவாழ்வு அல்லது இன்பவாழ்வு உயிர் அல்லது ஆன்ம இன்பத்தின் அளவைக் காட்டுவதாகும். ஏழாமிடத்தால் கணித்தறியப்படும் காமத்தின் தன்மையானது உடல் தொடர்பாக அமையக்கூடிய இன்பத்தின் அளவைக் குறிப்பதாகும். 11ஆமிடத்தால் கணித்தறியப்படும் காமத்தின் தன்மையானது, உள்ளத்தின் தொடர்பாக அமையக்கூடிய இன்பத்தின் போக்கைத் தெரிவிப்பதாகும். இந்த மூன்றிடமும் சாதகமாக இருக்கும் ஒருவரின் தாம்பத்திய வாழ்வு உடல், உள்ளம் ,ஆன்மா ஆகிய மூன்று நிலைகளிலும் நிறைவான இன்பத்தைத் தருவதாயிருக்கும்.
ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவரவரது வாழ்வில் தாம்பத்திய சுகம் செழிப்பாகவும் இன்பகரமாகவும் இருக்க வேண்டுமானால் அவரவர் சாதகத்திலுள்ள 3, 7, 11 ஆகிய இடங்கள் செழுமையாக அமைந்திருக்கின்றனவா என்று அவசியம் பார்க்க வேண்டும்.
மூன்றாமிடத்தின் அமைப்பைப் பொறு த்தே ஒருவரது தாம்பத்திய வாழ்வில் ஆன்ம திருப்தியும் ஏழாமிடத்தின் அமைப்பையொட்டியே கணவன் அல்லது மனைவியோடு அனுபவிக்கும் உடலுறவின் திருப்தியும் 11 ஆமிடத்தின் அமைப்பைப் பொறுத்தே அவரது தாம்பத்திய வாழ்வில் திருப்தியும் போக பாக்கியங்களால் மனநிறைவும் ஏற்படும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இந்த இடங்களில் ஒன்று நன்றாக அமைந்து மற்றது நன்றாக அமையாவிட்டாலும் அந்த நிலையில் திருப்தியும் மற்றநிலைகளில் அதிருப்தியும் நிலவும் என்று கூறலாம். இது விடயத்தில் பலரிடமும் நாம் ஆய்ந்தறிந்த அனுபவம் இதற்குச் சான்றாகும்.
ஆணோ பெண்ணோ, அவரது தாம்பத்திய வாழ்வு செழிப்பாகவும் இன்பமாகவும் இருக்க வேண்டுமானால் அவரது சாதகத்தில் 3,7,11 ஆகிய வீடுகள் வலுவானவையாக அமைந்திருக்க வேண்டியது அவசியம்!
அறம், பொருள் , இன்பம், என்னும் மூன்றினுள் இன்பமாகிய காமமே மிகவும் சக்திவாய்ந்தது. ஆசை, விரக்தி, இன்பம்,துன்பம், நட்பு, பகை, பாசம், துறவு, இலாபம் நஷ்டம், துயரம், களிப்பு பலவற்றிற்கும் காமமே தூண்டுதலாக இருக்கிறது!
ஒரு சாதகத்தின் கிரகநிலை அதன் இலக்கினத்தை முதன்மையாகக் கொண்டு கணிக்கப்பட்டாலும், பொதுவான கோசார பார்வையில் இராசிச் சக்கரமென்பது மேடராசியை முதன்மையாகக் கொண்டே ஆரம்பிக்கப்படுகின்றது. இது தமிழ்ப் புத்தாண்டின் முதல் மாதமான சித்திரை மாதத்தின் முதல் நாளில் சூரியன் மேடராசியில் பிரவேசிப்பதால் கொண்டாடப்படுகின்ற தமிழ்ப்புத்தாண்டை முதன்மைப்படுத்தி ஏற்பட்ட வழக்கமேயல்லாது மேடத்தை பிரதானப்படுத்தியோ அன்றி மீனத்தை கடைநிலைப்படுத்தியோ காட்டும் தரப்படுத்தல் அல்ல.
இந்தவகையில் இராசிச் சக்கரத்தில் மேடத்திலிருந்து எண்ணிவரும் மூன்றாமிடத்தைக் கவனியுங்கள். மிதுனம் என்று அதற்குப் பெயர். மிதுனம் என்ற சொல் மைதுனம் அல்லது காமனின்ப நுகர்ச்சி என்னும் பொருளைத் தருவதையும் நினைவில் கொள்ளுங்கள். இந்த மிதுனம் எவ்வாறு குறிக்கப்படுகின்றது?
ஆண்மை, ஆசை, வலிமை, உறுதி ஆகியவற்றைக்காட்ட வேண்டிய தாம்பத்திய வாழ்க்கையிலே மிதுனம் எனப்படும் இந்த மூன்றாமிடமானது சப்தம ஸ்தானமாகிய ஏழாமிடத்தின் திரிகோணஸ்தானமாகவும் (பாக்கிய வீடு) விளங்குவதைக் கவனியுங்கள். ஆகவே சப்தம ஸ்தானம் எனப்படும் களத்திர வீடாகிய ஏழாமிடத்தினால் அடையக் கூடிய தாம்பத்திய உறவிலே அளவற்ற இன்பமும் திருப்தியும் பெருக வேண்டுமானால் அதற்கு இந்த பாக்கிய ஸ்தானமான மூன்றாமிடமும் பலம் பெற்றதாய் அமைந்திருக்க வேண்டியது அவசியம்.
புரிந்து கொண்டு விட்டுக்கொடுத்து வாழும் குடும்ப சுகத்துக்கும் காதலும் காமமும் சம விகிதத்தில் கலந்த களத்திர சுகத்துக்கும் காரணமான சுக்கிர பகவானுக்கு அதனாற்றான் இராசிச் சக்கரத்தில் இரண்டாமிடத்தையும் ஏழாமிடத்தையும் தந்து சோதிட சாத்திரத்தின் மூல கர்த்தாக்கள் சிறப்பித்திருக்கிறார்கள்.கட்டிளம் காளை போன்ற ஆண்மையும் (இடபம்) எதிலும் அதிகம் பற்று வைக்காமல் தராசு போல எதையும் சம அளவில் காட்டியபடி நடந்து கொள்ளும் நிதானமும் (துலாம் )இல்லறவாழ்வின் இன்றியமையாத தேவைகள் என்பதை இது காட்டுகிறதல்லவா?
மூன்றாமிடமானது ஏழாமிடத்தினால் அனுபவிக்கப்படுகின்ற இன்பத்தினால் ஒருவர் அடைகின்ற ஆத்ம சந்தோஷத்தையும் (தாம்பத்திய சுகம்) திருப்தியையும் இதனால் நமக்குத் தெளிவாக உணர்த்தும் என்று கூறலாம். ஏழாமிடத்தின் பஞ்சமஸ்தானமாகிய பதினோராமிடம் ,ஏழாமிடத்தால் அனுபவிக்கும் நமது மனமாகிய உள்ளத்திற்குக் கிடைக்கும் இன்பத்தையும் மன நிறைவையும் உணர்த்தும் என்பதை நாம் அறிய வேண்டும்.
புருஷார்த்தம் என்பது சோதிட நூல்களில் அதிகமாகப் பாவிக்கப்படும் ஒரு பதமாகும். புருஷார்த்தங்கள் என்றால் ஒரு மனித உயிர் அடையக்கூடிய அடைய வேண்டிய நன்மைகள் என்று பொருள். இவற்றை நான்காக வகைப்படுத்தியிருக்கின்றார்கள். பெரியோர்கள் அவை தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்பதாகும். தமிழ்ச் சான்றோர் இவற்றை அறம்,பொருள், இன்பம், வீடு என்று நான்கு பேறுகளாகக் கூறியுள்ளார்கள்.
இந்த நான்கில் தர்மம், அர்த்தம், காமம், என்னும் மூன்றும் அதாவது அறம் பொருள் இன்பம் என்னும் மூன்றும் இப்போது எடுத்துள்ள இந்த உடம்போடு கூடிய பிறவியிலேயே நம்மால் அடையக் கூடியவை மோட்சம் அல்லது வீடு என்பது நம் ஆன்மா இந்த உடலைக் கழித்து விட்ட பின்னால் அதனால் மட்டுமே அடையக் கூடியது. முதல் மூன்று தர்மங்களையும் நாம் எவ்வளவு சிறப்பாக நடத்துகிறோமோ, அதற்குத்தக்கபடி நான்காவதான வீடு பேறும் நமக்குக் கிடைக்கும்.
இவற்றுள் அதாவது இந்த அறம், பொருள், இன்பம் என்ற மூன்றினுள் காமமே மிகவும் சக்திவாய்ந்தது. ஆசை, விரக்தி, இன்பம், துன்பம், நட்பு, களிப்பு போன்றவற்றிற்கும் காமமே தூண்டுதலாக இருக்கின்றது காமத்தை நெறிப்படுத்தி வாழ்வது நெறியோடு செய்து அடைவது பொருளாகும். இரண்டிலும் நெறி ஒழுக்கம் வேண்டும். ஆனால், இந்த உணர்வுகள் நல்லவை கெட்டவை எல்லாமே தெய்வீக சக்திகளின் சங்கல்பத்துக்கு அவைகளின் செல்வாக்கிற்குட்பட்டே நிகழ்கின்றன என்பதை நாம் விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.
இந்த நான்கு புருஷார்த்தங்களும் வேதாந்த சித்தாந்த விசாரணைகளில் மட்டுமே விளக்கப்படுவன அல்ல. சோதிட சாத்திரத்திலும் இவற்றை அறியும் மரபை நம் முன்னோர்கள் வகுத்துக் காட்டியிருக்கின்றார்கள். அதன்படி இலக்கினத்திலிருந்து எண்ணிவரும் 1ஆம் 5ஆம் 9ஆம் இடங்கள் தர்மத்தைக் குறிக்கும் திரிகோண ஸ்தானங்களாகும். அதுமாதிரி 2, 6,10 ஆகிய இடங்கள் அர்த்தத்தையும் 3, 7, 11 ஆகிய இடங்கள் காமத்தையும் 4, 8, 12 ஆகிய இடங்கள் மோட்சத்தையும் குறிக்கும் திரிகோண ஸ்தானங்களாகக் கருதப்படும்.
ஒரு சாதகத்தை நன்றாக ஆராய்ந்தோமானால் ஒவ்வொருவரினதும் வாழ்விலும் இந்த நான்கு புருஷார்த்தங்களும் எவ்விதம் விளங்கும் என்பதைக் கணக்கிட்டுக் கூறிவிடலாம். இத்திரிகோணஸ்தானங்கள் ஒன்று மற்றொன்றின் செல்வாக்கைச் சார்ந்து நின்று ஒருவரின் வாழ்வை நிர்ணயித்து நடத்திச் செல்லக் கூடியவையென்று சான்றோர்கள் சொல்வதை நாமும் கவனித்து நடந்து கொள்வதே வாழ்வில் நன்மைகளை அறிமுகப்படுத்தும்.
நமது வாழ்வானது மூன்று நிலைகளில் நடக்கிறதென்பது தத்துவமும் இன்றைய அறிவியலும் ஒப்புக்கொண்ட உண்மையாகும். அவை உடல் தொடர்பான உளநலம் தொடர்பான, உயிர் தொடர்பான வாழ்வு என்பதாகும். உடலை விட உள்ளம் வலிமையானது. உள்ளம் உடலையும் தன் சக்திக்கு உட்பட்டு நடக்க வைக்கும் வலிமை கொண்டது. உள்ளத்தை விட உயிர் வலிமையானது. உயிர் உள்ளத்தை இயங்க வைக்கக்கூடியது. உள்ளத்தை ஏவிச் செலுத்தி உடலையும் இயங்கச் செய்யும் ஆற்றல் பெற்றது.
எனவே உயிராற்றல் பெருகினால் உள்ளத்தின் சக்திபெருகும். உடலின் வலிமையும் மிகுதியாகும்.
உயிராற்றலை பெருக்குவதற்கு வழிகாட்டவே ஆன்மஞான நூல்கள் அனைத்தும் தோன்றின. இந்த உடல், உள்ளம், உயிர் மூன்றினதும் சக்திகள் நம் ஒவ்வொருவரிடமும் எவ்விதம் அமைந்துள்ளன என்பதை அறிந்து கொள்ள முடியுமா இதற்கு சோதிட மரபுகளில் வழியிருக்கிறதா என்று கேட்டால் நமது சோதிட மேதைகள் அதற்கும் வழிகாட்டியிருக்கிறார்கள். ஒருவரின் சாதகத்தை எடுத்துக்கொண்டால் அதிலுள்ள பன்னிரு வீடுகளிலும் 1, 4, 7,10 ஆகிய வீடுகளை ஆராய்ந்தால் அவரது உடல்வளமும் போக்கும் பற்றிய தன்மையைக் கண்டு விடலாம். 2, 5, 8,11 ஆகிய வீடுகளை ஆராய்ந்தால் அவரது உள்ளத்தின் தன்மையையும் வலிமையையும் பற்றித் தெரிந்து கொள்ளலாம். 3, 6, 9, 12 ஆகிய வீடுகளை ஆராய்ந்தால் அவரது உயிரின் இயல்பையும் சக்தியின் வேகத்தையும் அது போகும் போக்கினையும் புரிந்து கொள்ளலாம். இவை ஒவ்வொன்றும் ஒன்று மற்றொன்றின் கேந்திரத்தானமாக இருப்பவை. ஒன்று மற்றொன்றின் சக்தியை தன்னுடைய அமைப்பால் ஏற்றபடி உருவாக்கவும் முயல்பவை. இவற்றை ஊன்றி ஆராய்ந்தால் ஒருவரின் உடல்வளம் மனவளம் ஆத்மநலம் ஆகிய மூன்றையுமே நிர்ணயித்துக் கூறலாம் என்பதும் சோதிட சாத்திரத்தின் முடிவாகும்.
நான்கு புருஷார்த்தங்களுள் காமம் என்னும் இன்பவாழ்வைக் குறிக்கும் திரிகோணஸ்தானங்கள் ஒருவரின் சாதகத்திலுள்ள 3, 7, 11 ஆம் இடங்க.ௌன்று நாம் ஏற்கனவே கூறினோம். இந்த மூன்று இடங்களையும் நலம் அடுத்து வகைப்படுத்திய உடல் உள்ளம் உயிர் என்பவற்றின் கேந்திர ஸ்தானங்களோடு இப்போது பொருந்திப் பார்ப்போம்.
அவ்விதம் பார்க்கும்போது மூன்றாமிடம் உயிர்த்தொடர்பு கொண்டது என்பதையும் ஏழாமிடம் உடலோடு உள்ளத்தொடர்பும் கொண்டது என்பதையும் நாம் அறியலாம். இதன்மூலம் காமம் என்னும் இன்பமானது உயிர், உள்ளம், உடல் என்ற மூன்றாலும் அனுபவிக்கக் கூடியதென்பது நமக்கு விளங்கும்.
இவற்றுள் மூன்றாமிடத்தால் கணித்தறியப்படும் காமவாழ்வு அல்லது இன்பவாழ்வு உயிர் அல்லது ஆன்ம இன்பத்தின் அளவைக் காட்டுவதாகும். ஏழாமிடத்தால் கணித்தறியப்படும் காமத்தின் தன்மையானது உடல் தொடர்பாக அமையக்கூடிய இன்பத்தின் அளவைக் குறிப்பதாகும். 11ஆமிடத்தால் கணித்தறியப்படும் காமத்தின் தன்மையானது, உள்ளத்தின் தொடர்பாக அமையக்கூடிய இன்பத்தின் போக்கைத் தெரிவிப்பதாகும். இந்த மூன்றிடமும் சாதகமாக இருக்கும் ஒருவரின் தாம்பத்திய வாழ்வு உடல், உள்ளம் ,ஆன்மா ஆகிய மூன்று நிலைகளிலும் நிறைவான இன்பத்தைத் தருவதாயிருக்கும்.
ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி அவரவரது வாழ்வில் தாம்பத்திய சுகம் செழிப்பாகவும் இன்பகரமாகவும் இருக்க வேண்டுமானால் அவரவர் சாதகத்திலுள்ள 3, 7, 11 ஆகிய இடங்கள் செழுமையாக அமைந்திருக்கின்றனவா என்று அவசியம் பார்க்க வேண்டும்.
மூன்றாமிடத்தின் அமைப்பைப் பொறு த்தே ஒருவரது தாம்பத்திய வாழ்வில் ஆன்ம திருப்தியும் ஏழாமிடத்தின் அமைப்பையொட்டியே கணவன் அல்லது மனைவியோடு அனுபவிக்கும் உடலுறவின் திருப்தியும் 11 ஆமிடத்தின் அமைப்பைப் பொறுத்தே அவரது தாம்பத்திய வாழ்வில் திருப்தியும் போக பாக்கியங்களால் மனநிறைவும் ஏற்படும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டும்.
இந்த இடங்களில் ஒன்று நன்றாக அமைந்து மற்றது நன்றாக அமையாவிட்டாலும் அந்த நிலையில் திருப்தியும் மற்றநிலைகளில் அதிருப்தியும் நிலவும் என்று கூறலாம். இது விடயத்தில் பலரிடமும் நாம் ஆய்ந்தறிந்த அனுபவம் இதற்குச் சான்றாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக