விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிரிழப்பதற்கு முன்பதாகவே யுத்தம் முடி வடைந்துவிட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ அறிவித்திருந்தார். ஆனால் போர் முடிந்ததாக அறிவிக்கப்பட்ட 2009 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் திகதியன்றும் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடனேயே இருந்தார் என்று அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத்பொன்சேகா நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
யுத்தத்தை வெற்றி கொண்ட பெருமையை தாம் அடைந்து கொள்வதற்காக திட்டமிட்டு என்னை வெளிநாட்டுக்கு அனுப்பினார்கள். நான் நாடுதிரும்பியவுடன் என்னை அலரிமாளிகைக்கு அழைத்து முப்படைகளின் தளபதி என்ற பதவியிலிருந்து விலகுமாறும் அழுத்தத்துடன் தெரிவித்தனர் எனவும் பீல்ட் மார்ஷல் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெளிநாடொன்றிலிருந்து நாடு திரும்பிய மஹிந்த ராஜபக் ஷ யுத்த வெற்றியை தன்வசப்படுத்தும் நோக்கில் மண்ணைத் தொட்டு முத்தமிட்டார். அத்துடன் கோத்தபாய ராஜபக் ஷவும் யுத்த வெற்றியை தன்வசப்படுத்திக்கொள்ளும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
1990 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து விலகியவர் எவ்வாறு யுத்த வெற்றிக் கீரிடத்திற்கு உரிமைக் கோர முடியும் எனவும் சரத்பொன்சேகா கேள்வியெழுப்பினார்.
வௌ்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் உண்மையைக் கண்டறிய கட்டாயம் விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டத்திட்டங்களைப் பின்பற்றியே யுத்தத்தை முன்னெடுத்தோம். ஆனால் சட்டங்களை மீறியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஈடுபட வேண்டியது அவசியம் எனவும் பீல்ட் மார்ஷல் பொன்சேகா குறிப்பிட்டார்.
விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்குபற்றல்கள் தொடர்பில் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வெ ளிநாட்டவர்கள் விசாரணைகளில் பங்கேற்பதானது விசாரணையின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் எனவும் சரத்பொன்சேகா பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் அங்கீகரித்துக்கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் பீல்ட் மார்ஷல் மேற்கண்டவாறு கூறினார்.
சரத் பொன்சேகா தொடர்ந்து உரையாற்றுகையில்
இந்த நாட்டு மக்கள் கடந்த காலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தார்கள். பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பல இடர்பாடுகளுக்குள் பயணிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க கலால் வரியினால் நாட்டிற்கு வருமானம் கிடைப்பதாக தெரிவித்திருந்தார்.
கலால் வரியினால் வருமானம் கிடைப்பதை நாம் பெருமையாகக் கொள்ள முடியாது. அதனால் மகிழ்ச்சியடைய முடியாது. காரணம் எமது நாட்டில் மதுபான பாவனையாளர்கள் காணப்படுகின்றனர். மதுபானங்கள் ஊடாகவே அதிகளவான கலால் வரி வருமானம் கிடைக்கின்றது ஆகவே அதனைக் கருத்திற்கொள்ள வேண்டும்.
மேற்குலக நாடுகளை முன்னுதாரணமாகக் காட்டுவதற்கு அதிருப்திகளைத் தெரிவிக்கும் உறுப்பினர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்த நாடுகளில் எவரும் குடித்துவிட்டு வீதிகளில் விழுந்து கிடப்பது கிடையாது. அங்கு சட்டம், ஒழுங்கு காணப்படுகின்றது.
அதனை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். கடந்தகாலங்களில் எதனோல் கொள்கலன் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டமை கண்டறியப்பட்டன. இதன் ஊடாக சட்டவிரோதமான மது உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையே இலக்காகக் கொண்டிருந்தார்கள். ஆகவே சட்ட விரோத மதுபான உற்பத்தி ஒழிக்கப்படவேண்டும் என்பதை இத்தருணத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
முறையற்ற வகையில் பதவி வகிக்கவில்லை
எனது பெற்றோர்கள் ஆசிரியர்கள். நான் இராணுவத்தில் இணைந்து கொண்டேன். அதில் பெரும் பதவிகளை வகிக்க வேண்டுமென நான் இலக்குகளை கொண்டிருக்கவில்லை. எனது பணிகளை சரியான முறையாக முன்னெடுக்க வேண்டுமென்பதையே இலக்காக கொண்டிருந்தேன்.
அதற்கமைய இராணுவத்தினரின் நற்பெயரை பாதுகாத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தேன். அவ்வாறான நிலையில் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தை முறையாக நடத்தவில்லையென என்மீது குற்றம் சாட்டுகின்றார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் நான் நேர்மையாக முறையாக பதவி நியமனத்தைப் பெற்றிருக்கவில்லையெனக் கூறியுள்ளார்கள்.
எனது ஓய்வு வயதெல்லையை அடைந்தபோது உரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு என்னை இராணுவத்தளபதியாக நியமித்ததோடு ஓய்வு பெறும் வயதெல்லையும் 60 வருடங்களாக மாற்றப்பட்டது. இதுதான் உண்மை நிலையாகும். ஆனால் ராஜபக்ஷக்களின் அவதூறு பிரசாரத்தின் காரணமாக மக்கள் திசை திருப்பப்பட்டார்கள்.
நாட்டுத் தலைவர்கள் கடந்த காலத்தில் எமது ஜாதகத்தை இரகசியமாகப்பெற்று ஜோதிடர்களிடம் காணப்பிப்பார்கள். எமது எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்வார்கள்.
அதனை வைத்துக் கொண்டே தமது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். என்னைப் பொறுத்தவரையில் வெளிநாடுகளின் தூதுவராக, பாதுகாப்பு செயலாளராக பதவிவகிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கவில்லை.
இராணுவத்தின் உயர்பதவியைக் கூட எண்ணியிருக்கவில்லை. எனது கடமையை செவ்வனே செய்தேன். தாயைப்போல் தாய்நாட்டையும் நேசித்தேன். காலம் நிறைவடைந்தவுடன் ஓய்வுபெற்றுக் கொள்வதே நோக்கமாகவும் இருந்தது. ஆனால் அதற்கான சந்தர்ப்பங்களை கடந்த ஆட்சியாளர்கள் வழங்கியிருக்கவில்லை.
நெருக்கடியான நிலை
யுத்தம் உக்கிரமடைந்தபோது இராணுவத்தளபாடங்கள் சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டன. அதற்கான நிதி வழங்கப்படுவதாகக் கூறி கடன் அடிப்படையிலேயே அவைபெறப்பட்டன. எனினும் பலமோசடிகள் யுத்தத்தைக் காரணம் காட்டி இடம்பெற்றுள்ளன. யுத்தத்திற்காக 82 பில்லியன் ரூபாவே செலவிடப்பட்டுள்ளது.
130 மில்லி மீற்றர் ரவைகளை வாங்குவதற்கு 850 டொலர் செலுத்தப்பட்டது. ஆனால் அதில் 400 டொலர் மோசடி இடம் பெற்றுள்ளது. நாற்பது ரவைகளைக் கொண்ட பல்குழல் பீரங்கி இல்லாத நிலையில் யுத்தத்தை ஆரம்பித்தோம். 2008 ஆம் ஆண்டு ஒரேயொரு பல்குழல் பீரங்கியுடன் யுத்தத்தை முன்னெடுத்தோம். பாகிஸ்தான் இராணுவத்தளபதியுடன் நானே பேச்சுக்களை நடத்தி பல்குழல் பீரங்கிகளை 60 பில்லியன்களைச் செலுத்தி பெற்றுக்கொண்டு யுத்தத்தை முன்னெடுத்திருந்தோம்.
இவ்வாறு பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு முகங்கொடுத்துவரும் யுத்தத்தை முன்னெடுத்திருந்தோம். ஆனால் அந்த யுத்தத்தை காரணம் காட்டி மோசடிகளை மேற்கொண்டுள்ளார்கள்.
தேர்தல் மோசடி
2005, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் மோசடிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக 2005 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிதி வழங்கி ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதற்கு மகிந்த ராஜபக் ஷ செயற்பட்டிருந்தார்.
பஷில் ராஜபக் ஷவுடன் நான் உரையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதை நிறுத்துவதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியதாகக் கூறினார். குறித்த நிதியானது விடுதலைப்புலிகளின் கடற்படைக்கு கப்பல்களை மலேசியாவிலிருந்து கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதன் போது மலையகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் எம்முடன் இருந்தார். அவரைப் பார்த்து உங்களுடைய மக்களையும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதற்கு அனுமதிக்க வேண்டாமென பிரபாகரன் கோரியுள்ளதாக பஷில் ராஜபக் ஷ கூறினார். இவ்வாறு 2005 ஆம் ஆண்டு புலிகளுக்கு நிதி வழங்கியே தேர்தலில் வெற்றி பெற்றனர்.
அதேபோன்று 2010 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மாத்தளை, கம்பளை, கண்டி உட்பட பல தேர்தல் வாக்கெண்னும் நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வாக்கெண்ணும் சீட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
அப்போதைய தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பாக உண்மையைக் கூற முடியாது அச்சத்துடன் தற்போது வரையில் உள்ளார். 2005, 2010 தேர்தலில் மோசடிகளை செய்தே வெற்றிபெற்றார்கள். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் அவ்வாறான மோசடிகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார்கள். சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் மக்களின் வெறுப்பால் அதனை மேற்கொள்ள முடியாது போனது.
மைத்திரிக்கும் திட்டம்
இந்த தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தோல்வியடைந்திருந்தால் அவரை பழிதீர்க்கும் வகையில் சிறையில் அடைக்கும் திட்டங்களையும் வகுத்திருந்தார்கள். ஆனால் மக்கள் அதற்கு இடமளிக்கவில்லை. 65 இலட்சம் மக்கள் ஆணையை வழங்கி ராஜபக் ஷவின் குடும்ப ஆட்சியை அகற்றினார்கள்.
சர்வதிகாரத்திற்கு முற்றுப்புள்ளியை வைத்தார்கள். மாத்தறையின் மந்திரவாதியை வைத்து ஏதே செய்வதற்கும் முனைந்திருந்தார்கள். அண்மைக்காலமாக எனது தொண்டை சரியில்லை. மந்திரவாதியின் செயற்பாடுகள் காரணமோ எனத் தெரியாது.
முறையற்ற குற்றச்சாட்டுகளும் பழிவாங்கும் தீர்ப்புகளும்
இவ்வாறிக்கையில் 2010 ஆம் ஆண்டு தேர்தல் நிறைவடைந்ததும் என்னைக் கைது செய்தார்கள். இராணுவ நீதிமன்றத்தை அமைத்தார்கள். இராணுவ நீதிமன்றம் அமைக்கப்படும் போது என்னை விடவும் உயர்ந்த பதவிகளைக் கொண்ட அதிகாரிகளே நியமிக்கப்பட வேண்டும். மாறாக எனது பதவிநிலையிலும் குறைந்த அதிகாரிகளே விசாரணையாளர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
என்மீது கேள்விப்பத்திர முறைகேடு தொடர்பாகவே வழக்கு தாக்கல் செய்தார்கள். எனது மருமகன் மீது குற்றம் சாட்டினார்கள். இராணுவச் சட்டத்தின் பிரிவு 35 இன் பிரகாரம் என்மீது குற்றம் காணப்பட்டால் என்னை பதவி நிலை நீக்க முடியும். ஆனால் எனது பதவி நிலைகளை பறித்தார்கள். தனுக திலகரட்ணவின் மீது முறையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிடியாணை பிறப்பித்தார்கள்.
அதுமட்டுமன்றி எனக்கு எதிர்த்தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மாமனார் என்ற வகையில் அவரின் செயற்பாடுகள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டுமென வாதிட்டதை ஏற்று தீர்ப்பளித்தார்கள். அச்சட்டத்தரணியும் உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக பதவியுயர்வு பெற்றார். இவ்வாறுதான் நீதித்துறையை அவர்கள் கையாண்டார்கள். இதற்காக வெட்கப்பட வேண்டும்.
அரசியல் பழிவாங்கல்
அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பஷில் ராஜபக் ஷ சரத்பொன்சேகா மட்டுமே அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானதாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.
நான் மட்டுமல்ல இராணுவத்தில் அர்ப்பணிப்பு மிக்க சேவையை வழங்கிய 35 சிரேஷ்ட உறுப்பினர்களை வீட்டுக்கு வலிந்து அனுப்பினார்கள். தலா பத்து ஜெனரல்களும் பிரிகேடியர்களும் உள்ளடங்குகின்றனர். அவர்களில் இருவர் தொழில்வாய்ப்புக்காக பலதர இடங்களுக்கு சென்றார்கள். தற்போது மாரடைப்பால் உயிரிழந்துவிட்டனர். இவ்வாறு திட்டமிட்ட பழிவாங்கல்கள் தொடர்ந்திருந்தன.
கௌரவத்தை பெற முழுமையான முயற்சி
யுத்த வெற்றியை முழுமையாகத் தாமே பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்தார்கள். இரு வருடங்களும் ஒன்பது மாதங்களுமாக நான் தலைமையேற்று வழிநடத்திய யுத்தத்தை இறுதி மாதத்தில் என்னை மீள அழைத்தார்கள்.
24 மணி நேரமும் நான் பணியாற்றுவதால் சிரமங்களை எதிர்கொள்வதாக கூறிய கோத்தபாய ராஜபக் ஷ வன்னியில் கடமையாற்றிய இரண்டாம் நிலை அதிகாரியிடம் பொறுப்பாக ஒப்படைத்திருந்தார்.
அதற்கு அடுத்த வாரத்தில் யுத்த தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக சீனாவுக்கு நான் சென்றிருந்தேன். விடுதலைப்புலிகள் கடலுக்கும் களப்புக்கும் இடையில் சிக்க வைக்கப்பட்டிருந்த அத்தருணத்தில் மேஜர் பிரிகேடியர் யுத்தத்தை வழி நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை. சாதாரண சார்ஜனிடம் ஒருவராலேயே யுத்தத்தை முன்னெடுத்திருக்க முடியும்.
மே 18 ஆம் திகதி வெளிநாடொன்றிலிருந்து வருகை தந்து மண்ணை மஹிந்த ராஜபக் ஷ முத்தமிட்டபோது பிரபாகரன் இறந்திருக்கவில்லை. யுத்தம் நிறைவடைந்த திகதி கூட ராஜபக் ஷவினருக்கு தெரியாது. இரண்டு வருடங்கள் ஒன்பது மாதங்களாக சட்ட திட்டங்களுக்கு அமைவாக முன்னெடுத்துச் செல்லப்பட்டு யுத்தத்தை இறுதி தருணத்தில் சிக்கலுக்குள் உள்ளாகும் நிலைமை ஏற்படுத்திவிட்டார்கள்.
மோசமான முறையில் முன்னெடுக்கப்பட்டு யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுவதற்கான நிலைமைகளை ஏற்படுத்திவிட்டார்கள். இதனால் தான் வெள்ளைக் கொடி சர்ச்சையும் எழுந்துள்ளது. இறுதி யுத்தத்தின் இறுதி தருணத்தில் என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். வெள்ளைக்கொடி விவகாரத்தில் நடந்ததென்பது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.
சர்வதேச கண்காணிப்பாளர்களின் விசாரணையை முன்னெடுத்து இராணுவத்தின் மீது படிந்துள்ள கறை போக்கப்பட வேண்டும். இவ்விடயத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது.
குற்றச்சாட்டுகள் எழுவதற்கு காரணம்
1991 ஆம் ஆண்டு ரஞ்சன் விஜேவர்தனவின் கால்களில் விழுந்து உயிர்த் தஞ்சம் கோரி அமெரிக்காவுக்கு கோத்தபாய சென்றிருந்தார். அங்கு சென்று கராஜில் தான் பணிபுரிந்தார். இரும்பு ஓட்டுனராக செயற்பட்டார். அவ்வாறு இருந்த சமையத்தில் அவருடைய துவிச்சக்கர வண்டியை ஏணியுடன் கட்டி வைத்திருந்தபோது இரண்டையும் திருடிச் சென்றதால் கஷ்டங்களுக்கு முகங் கொடுத்தாக கூறியிருக்கின்றார்.
இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் இரண்டறை இலட்சம் இராணுவத்தினருக்கு கட்டளைகளை வழங்க முடியுமா? தொழில்வான்மை இல்லாத இவர்கள் எவ்வாறு இராணுவத்தினரை வழி நடத்த முடியும். 35 வருடங்களாக இராணுவத்தில் சேவையாற்றியே கட்டளை இடும் தகுதியை நான் பெற்றிருந்தேன்.
இவ்வாறான நிலையில் இருந்தவரே யுத்த வெற்றியை தனதாக்க வேண்டும் என கங்கணம் கட்டி செயற்பட்டார். கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிறந்த சத்திர சிகிச்சை நிபுணர் இருக்கின்றார். அவரின் சத்திர சிகிச்சைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் சுகாதார அமைச்சரை பாராட்ட முடியாது.
அர்ஜுன ரணதுங்க உலக கிண்ணத்தை வெற்றி கொண்டு வந்தபோது ஜனாதிபதியை கௌரவிக்க முடியாது. அண்மையில் இலங்கை அணி தோற்றபோது தயாசிறியை குற்றஞ்சாட்ட முடியாது. களத்தில் இருந்து பணியாற்றுபவர்களுக்குக் கௌரவம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு மாறாக சர்வாதிகாரத்துடன் தாம் கௌரவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனைப் பயன்படுத்தி இந்த நாட்டின் மன்னர் ஆட்சியை நிலை நிறுத்தி குடும்பாதிக்கத்தை வலுப்படுத்த முனைந்தார்கள்.
ஆனால் அனைத்துமே தலைகீழாக மாறியுள்ளன. ஆட்சியில் பலமும் அதிகாரமும் தொடர்ந்து இருக்குமென கருதினார்கள். இன்பமும் துன்பமும் வண்டியின் சக்கரங்கள் என்பதை மறந்துவிட்டார்கள். மக்கள் பீதியுடன் வாழ முடியாது என்பதை உணர்ந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். தற்போது அரசியல் அநாதைகளாகி விட்டனர்.
கொள்ளை
எமது நாட்டின் பொருளாதாரம் இன்று பாரிய நெருக்கடியில் உள்ளது. இதற்கு கடந்த ஆட்சியாளர்களே காரணமாக உள்ளார்கள். சீனாவிடமிருந்து எமது பொருளாதாரத்தை முன்னெடுப்பதாக கூறியபோதும் அதனை சூறையாடி உள்ளனர்.
ஒரு டொலர களவாடியிருந்தாலும் வயிற்றை வெட்டிக் கொள்வதாக மஹிந்த ராஜபக் ஷ கூறியிருந்தார். ஒரு டொலர் அல்ல 90 மில்லியன் ரூபாவை களவாடியுள்ளார்கள்.
ரடா நிறுவனத்தின் ஊடாக எமில்காந்தனுக்கு வழங்கியுள்ளார்கள். அதற்கான சாட்சிகளை அவர் விரைவில் முன்வைப்பார் . பீகொக் மாளிகையை வேறொருவரின் பெயரில் பதிவு செய்துள்ளார்கள்.
சுனாமி நிதியில் மோசடிகளை மஹிந்த ராஜபக் ஷ மேற்கொண்டிருந்தார். அவரை விடுதலையளித்தது உதவிக்கென எனது தேர்தல் மேடையில் சரத் என் சில்வா பகிரங்கமாகவே தெரிவித்திருக்கின்றார்.
இவற்றை விட விகாரைகளின் கப்பம் பெற்றுள்ளார்கள். பல பில்லியன்களை வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளார்கள். சில் ஆடைகளை 50 ரூபாவிற்கு இறக்குமதி செய்து 250 ரூபாவாக விலை பதித்துள்ளார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள் வயிற்றை அல்லது கழுத்தை அறுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவை நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்குவதற்கு காத்திருப்பது அவசியம்.இவற்றை விட 137 கிலோ கிராம் தங்கம் இறுதி யுத்தத்தில் பெறப்பட்டதாக கூறப்பட்ட பதிவுகள் உள்ளன.
அது தவறானது. இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் 220 கிலோ கிராம் தங்கத்தை நான் அனுப்பியிருந்தேன். அதன்போது உரிமையாளர்களின் பெயரும் காணப்பட்டது. இரு வாரங்களின் பின்னர் நான் அந்த களத்திலிருந்து விலகியிருந்த நிலையில் 400 முதல் 500 வரையிலான கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டிருந்தது.
கோரிக்கை
தேசத்தை அழிக்க முனைந்தவர்கள் இன்று ஆட்சியதிகாரமற்று நெருக்கடிகளுடன் இருக்கின்றார்கள். தம்மை பழிவாங்குவதாக கூறுகின்றார்கள். அன்று நான் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டேன். எனது மனைவி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனது பிள்ளைகள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்கள். மருமகன் 5 வருடங்கள் மறைந்து வாழ்ந்தார். இவை பழிவாங்கல்கள். தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைதுகள் இடம்பெறுகின்றபோது பிள்ளைகளைத் தண்டிக்காதீர்கள் தன்னை கைது செய்யுங்கள் என கண்ணீர் வடிக்கின்றனர்.
சாட்சியளிப்பதற்கு நீதிபதிகளின் வாயில்கள் ஊடாக வருகை தந்தவர்கள் இன்று நீதிமன்ற வளாகத்தில் தனித்து நின்று வழக்குகளுக்காக காத்திருக்கின்றார்கள். யாரும் பழிவாங்கப்பட வேண்டுமென்பது எமது நோக்கமல்ல. உண்மைகள் கண்டறியப்பட்ட வேண்டும்.
லசந்த, தாஜுதீன், ரவிராஜ், எக்னெலிகொட ஆகியவர்களின் மரணங்கள் காணாமல் போதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக சந்தேகங்களும் சாட்சியங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகின்றன. அன்றைய ஆட்சியாளர்களுக்கு தெரியாது எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பட்டிருக்கமாட்டாது.
இச்சம்பவங்கள் அனைத்தும் ஒரு நபருடனேயே தொடர்புபட்டுள்ளது. குழுவொன்றே மேற்கொண்டுள்ளது. லசந்தவின் விடயத்தில் என் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அது தவறானது. புனையப்பட்டது. ஆகவே அவ்விடயங்கள் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட வே்ணடும்.
தற்போது மஹிந்த ராஜபக் ஷவை ஆதரித்துக் கொண்டு கோத்தபய ராஜபக் ஷவின் தலைமையில் அரசியல் கட்சியை ஏற்படுத்தி ஆட்சியை அமைக்கலாம் என ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.
ஆனால் அது இயலாத காரியம். இரவில் விழுந்த குழியில் பகலில் விழுவதற்கு முயலாதீர்கள். நாட்டின் எதிர்கால சுபீட்சத்திற்காக ஒன்றிணைந்து செயற்படுங்கள் என்றார்.
யுத்தத்தை வெற்றி கொண்ட பெருமையை தாம் அடைந்து கொள்வதற்காக திட்டமிட்டு என்னை வெளிநாட்டுக்கு அனுப்பினார்கள். நான் நாடுதிரும்பியவுடன் என்னை அலரிமாளிகைக்கு அழைத்து முப்படைகளின் தளபதி என்ற பதவியிலிருந்து விலகுமாறும் அழுத்தத்துடன் தெரிவித்தனர் எனவும் பீல்ட் மார்ஷல் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வெளிநாடொன்றிலிருந்து நாடு திரும்பிய மஹிந்த ராஜபக் ஷ யுத்த வெற்றியை தன்வசப்படுத்தும் நோக்கில் மண்ணைத் தொட்டு முத்தமிட்டார். அத்துடன் கோத்தபாய ராஜபக் ஷவும் யுத்த வெற்றியை தன்வசப்படுத்திக்கொள்ளும் பிரயத்தனத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
1990 ஆம் ஆண்டு இராணுவத்திலிருந்து விலகியவர் எவ்வாறு யுத்த வெற்றிக் கீரிடத்திற்கு உரிமைக் கோர முடியும் எனவும் சரத்பொன்சேகா கேள்வியெழுப்பினார்.
வௌ்ளைக் கொடி விவகாரம் தொடர்பில் உண்மையைக் கண்டறிய கட்டாயம் விசாரணை நடத்தப்பட வேண்டும். சட்டத்திட்டங்களைப் பின்பற்றியே யுத்தத்தை முன்னெடுத்தோம். ஆனால் சட்டங்களை மீறியவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும். போர்க்குற்ற விசாரணையில் சர்வதேச கண்காணிப்பாளர்கள் மற்றும் ஆலோசகர்கள் ஈடுபட வேண்டியது அவசியம் எனவும் பீல்ட் மார்ஷல் பொன்சேகா குறிப்பிட்டார்.
விசாரணைகளில் சர்வதேசத்தின் பங்குபற்றல்கள் தொடர்பில் யாரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வெ ளிநாட்டவர்கள் விசாரணைகளில் பங்கேற்பதானது விசாரணையின் நம்பிக்கையை அதிகரிக்கச் செய்யும் எனவும் சரத்பொன்சேகா பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற உற்பத்தி (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் கீழ் கட்டளைகள் அங்கீகரித்துக்கொள்வதற்கான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் பீல்ட் மார்ஷல் மேற்கண்டவாறு கூறினார்.
சரத் பொன்சேகா தொடர்ந்து உரையாற்றுகையில்
இந்த நாட்டு மக்கள் கடந்த காலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்தார்கள். பாரதூரமான பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. பல இடர்பாடுகளுக்குள் பயணிக்க வேண்டிய நிலைமை காணப்படுகின்றது. நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்க கலால் வரியினால் நாட்டிற்கு வருமானம் கிடைப்பதாக தெரிவித்திருந்தார்.
கலால் வரியினால் வருமானம் கிடைப்பதை நாம் பெருமையாகக் கொள்ள முடியாது. அதனால் மகிழ்ச்சியடைய முடியாது. காரணம் எமது நாட்டில் மதுபான பாவனையாளர்கள் காணப்படுகின்றனர். மதுபானங்கள் ஊடாகவே அதிகளவான கலால் வரி வருமானம் கிடைக்கின்றது ஆகவே அதனைக் கருத்திற்கொள்ள வேண்டும்.
மேற்குலக நாடுகளை முன்னுதாரணமாகக் காட்டுவதற்கு அதிருப்திகளைத் தெரிவிக்கும் உறுப்பினர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும். அந்த நாடுகளில் எவரும் குடித்துவிட்டு வீதிகளில் விழுந்து கிடப்பது கிடையாது. அங்கு சட்டம், ஒழுங்கு காணப்படுகின்றது.
அதனை முன்னுதாரணமாகக் கொள்ள வேண்டும். கடந்தகாலங்களில் எதனோல் கொள்கலன் சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்டமை கண்டறியப்பட்டன. இதன் ஊடாக சட்டவிரோதமான மது உற்பத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதையே இலக்காகக் கொண்டிருந்தார்கள். ஆகவே சட்ட விரோத மதுபான உற்பத்தி ஒழிக்கப்படவேண்டும் என்பதை இத்தருணத்தில் கேட்டுக்கொள்கின்றேன்.
முறையற்ற வகையில் பதவி வகிக்கவில்லை
எனது பெற்றோர்கள் ஆசிரியர்கள். நான் இராணுவத்தில் இணைந்து கொண்டேன். அதில் பெரும் பதவிகளை வகிக்க வேண்டுமென நான் இலக்குகளை கொண்டிருக்கவில்லை. எனது பணிகளை சரியான முறையாக முன்னெடுக்க வேண்டுமென்பதையே இலக்காக கொண்டிருந்தேன்.
அதற்கமைய இராணுவத்தினரின் நற்பெயரை பாதுகாத்து அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தேன். அவ்வாறான நிலையில் அமெரிக்கா போன்ற நாடுகளில் சுகபோக வாழ்க்கையை வாழ்ந்தவர்கள் யுத்தம் நிறைவடைந்த பின்னர் இராணுவத்தை முறையாக நடத்தவில்லையென என்மீது குற்றம் சாட்டுகின்றார்கள்.
முன்னாள் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் நான் நேர்மையாக முறையாக பதவி நியமனத்தைப் பெற்றிருக்கவில்லையெனக் கூறியுள்ளார்கள்.
எனது ஓய்வு வயதெல்லையை அடைந்தபோது உரிய வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டு என்னை இராணுவத்தளபதியாக நியமித்ததோடு ஓய்வு பெறும் வயதெல்லையும் 60 வருடங்களாக மாற்றப்பட்டது. இதுதான் உண்மை நிலையாகும். ஆனால் ராஜபக்ஷக்களின் அவதூறு பிரசாரத்தின் காரணமாக மக்கள் திசை திருப்பப்பட்டார்கள்.
நாட்டுத் தலைவர்கள் கடந்த காலத்தில் எமது ஜாதகத்தை இரகசியமாகப்பெற்று ஜோதிடர்களிடம் காணப்பிப்பார்கள். எமது எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதை அறிந்து கொள்வார்கள்.
அதனை வைத்துக் கொண்டே தமது நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள். என்னைப் பொறுத்தவரையில் வெளிநாடுகளின் தூதுவராக, பாதுகாப்பு செயலாளராக பதவிவகிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பைக் கொண்டிருக்கவில்லை.
இராணுவத்தின் உயர்பதவியைக் கூட எண்ணியிருக்கவில்லை. எனது கடமையை செவ்வனே செய்தேன். தாயைப்போல் தாய்நாட்டையும் நேசித்தேன். காலம் நிறைவடைந்தவுடன் ஓய்வுபெற்றுக் கொள்வதே நோக்கமாகவும் இருந்தது. ஆனால் அதற்கான சந்தர்ப்பங்களை கடந்த ஆட்சியாளர்கள் வழங்கியிருக்கவில்லை.
நெருக்கடியான நிலை
யுத்தம் உக்கிரமடைந்தபோது இராணுவத்தளபாடங்கள் சீனாவிலிருந்து கொள்வனவு செய்யப்பட்டன. அதற்கான நிதி வழங்கப்படுவதாகக் கூறி கடன் அடிப்படையிலேயே அவைபெறப்பட்டன. எனினும் பலமோசடிகள் யுத்தத்தைக் காரணம் காட்டி இடம்பெற்றுள்ளன. யுத்தத்திற்காக 82 பில்லியன் ரூபாவே செலவிடப்பட்டுள்ளது.
130 மில்லி மீற்றர் ரவைகளை வாங்குவதற்கு 850 டொலர் செலுத்தப்பட்டது. ஆனால் அதில் 400 டொலர் மோசடி இடம் பெற்றுள்ளது. நாற்பது ரவைகளைக் கொண்ட பல்குழல் பீரங்கி இல்லாத நிலையில் யுத்தத்தை ஆரம்பித்தோம். 2008 ஆம் ஆண்டு ஒரேயொரு பல்குழல் பீரங்கியுடன் யுத்தத்தை முன்னெடுத்தோம். பாகிஸ்தான் இராணுவத்தளபதியுடன் நானே பேச்சுக்களை நடத்தி பல்குழல் பீரங்கிகளை 60 பில்லியன்களைச் செலுத்தி பெற்றுக்கொண்டு யுத்தத்தை முன்னெடுத்திருந்தோம்.
இவ்வாறு பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வரும் சவால்களுக்கு முகங்கொடுத்துவரும் யுத்தத்தை முன்னெடுத்திருந்தோம். ஆனால் அந்த யுத்தத்தை காரணம் காட்டி மோசடிகளை மேற்கொண்டுள்ளார்கள்.
தேர்தல் மோசடி
2005, 2010 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களில் மோசடிகள் இடம் பெற்றுள்ளன. குறிப்பாக 2005 ஆம் ஆண்டு விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு நிதி வழங்கி ரணில் விக்கிரமசிங்கவை தோற்கடிப்பதற்கு மகிந்த ராஜபக் ஷ செயற்பட்டிருந்தார்.
பஷில் ராஜபக் ஷவுடன் நான் உரையாற்றிக் கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமிழ் மக்கள் வாக்களிப்பதை நிறுத்துவதற்கு 2 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுதலைப்புலிகளுக்கு வழங்கியதாகக் கூறினார். குறித்த நிதியானது விடுதலைப்புலிகளின் கடற்படைக்கு கப்பல்களை மலேசியாவிலிருந்து கொள்வனவு செய்வதற்காக வழங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதன் போது மலையகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர் ஒருவர் எம்முடன் இருந்தார். அவரைப் பார்த்து உங்களுடைய மக்களையும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு வாக்களிப்பதற்கு அனுமதிக்க வேண்டாமென பிரபாகரன் கோரியுள்ளதாக பஷில் ராஜபக் ஷ கூறினார். இவ்வாறு 2005 ஆம் ஆண்டு புலிகளுக்கு நிதி வழங்கியே தேர்தலில் வெற்றி பெற்றனர்.
அதேபோன்று 2010 ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் மாத்தளை, கம்பளை, கண்டி உட்பட பல தேர்தல் வாக்கெண்னும் நிலையங்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. வாக்கெண்ணும் சீட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
அப்போதைய தேர்தல்கள் ஆணையாளர் இது தொடர்பாக உண்மையைக் கூற முடியாது அச்சத்துடன் தற்போது வரையில் உள்ளார். 2005, 2010 தேர்தலில் மோசடிகளை செய்தே வெற்றிபெற்றார்கள். 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும் அவ்வாறான மோசடிகளை மேற்கொள்வதற்கு திட்டமிட்டிருந்தார்கள். சர்வதேச கண்காணிப்பாளர்களின் பிரசன்னம் மக்களின் வெறுப்பால் அதனை மேற்கொள்ள முடியாது போனது.
மைத்திரிக்கும் திட்டம்
இந்த தேர்தலில் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேன தோல்வியடைந்திருந்தால் அவரை பழிதீர்க்கும் வகையில் சிறையில் அடைக்கும் திட்டங்களையும் வகுத்திருந்தார்கள். ஆனால் மக்கள் அதற்கு இடமளிக்கவில்லை. 65 இலட்சம் மக்கள் ஆணையை வழங்கி ராஜபக் ஷவின் குடும்ப ஆட்சியை அகற்றினார்கள்.
சர்வதிகாரத்திற்கு முற்றுப்புள்ளியை வைத்தார்கள். மாத்தறையின் மந்திரவாதியை வைத்து ஏதே செய்வதற்கும் முனைந்திருந்தார்கள். அண்மைக்காலமாக எனது தொண்டை சரியில்லை. மந்திரவாதியின் செயற்பாடுகள் காரணமோ எனத் தெரியாது.
முறையற்ற குற்றச்சாட்டுகளும் பழிவாங்கும் தீர்ப்புகளும்
இவ்வாறிக்கையில் 2010 ஆம் ஆண்டு தேர்தல் நிறைவடைந்ததும் என்னைக் கைது செய்தார்கள். இராணுவ நீதிமன்றத்தை அமைத்தார்கள். இராணுவ நீதிமன்றம் அமைக்கப்படும் போது என்னை விடவும் உயர்ந்த பதவிகளைக் கொண்ட அதிகாரிகளே நியமிக்கப்பட வேண்டும். மாறாக எனது பதவிநிலையிலும் குறைந்த அதிகாரிகளே விசாரணையாளர்களாக நியமிக்கப்பட்டார்கள்.
என்மீது கேள்விப்பத்திர முறைகேடு தொடர்பாகவே வழக்கு தாக்கல் செய்தார்கள். எனது மருமகன் மீது குற்றம் சாட்டினார்கள். இராணுவச் சட்டத்தின் பிரிவு 35 இன் பிரகாரம் என்மீது குற்றம் காணப்பட்டால் என்னை பதவி நிலை நீக்க முடியும். ஆனால் எனது பதவி நிலைகளை பறித்தார்கள். தனுக திலகரட்ணவின் மீது முறையற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து பிடியாணை பிறப்பித்தார்கள்.
அதுமட்டுமன்றி எனக்கு எதிர்த்தரப்பில் ஆஜரான சட்டத்தரணி மாமனார் என்ற வகையில் அவரின் செயற்பாடுகள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டுமென வாதிட்டதை ஏற்று தீர்ப்பளித்தார்கள். அச்சட்டத்தரணியும் உயர்நீதிமன்ற சட்டத்தரணியாக பதவியுயர்வு பெற்றார். இவ்வாறுதான் நீதித்துறையை அவர்கள் கையாண்டார்கள். இதற்காக வெட்கப்பட வேண்டும்.
அரசியல் பழிவாங்கல்
அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட பஷில் ராஜபக் ஷ சரத்பொன்சேகா மட்டுமே அரசியல் பழிவாங்கல்களுக்கு உள்ளானதாக ஏற்றுக் கொண்டிருக்கின்றார்.
நான் மட்டுமல்ல இராணுவத்தில் அர்ப்பணிப்பு மிக்க சேவையை வழங்கிய 35 சிரேஷ்ட உறுப்பினர்களை வீட்டுக்கு வலிந்து அனுப்பினார்கள். தலா பத்து ஜெனரல்களும் பிரிகேடியர்களும் உள்ளடங்குகின்றனர். அவர்களில் இருவர் தொழில்வாய்ப்புக்காக பலதர இடங்களுக்கு சென்றார்கள். தற்போது மாரடைப்பால் உயிரிழந்துவிட்டனர். இவ்வாறு திட்டமிட்ட பழிவாங்கல்கள் தொடர்ந்திருந்தன.
கௌரவத்தை பெற முழுமையான முயற்சி
யுத்த வெற்றியை முழுமையாகத் தாமே பெற்றுக் கொள்ள வேண்டும் என நினைத்தார்கள். இரு வருடங்களும் ஒன்பது மாதங்களுமாக நான் தலைமையேற்று வழிநடத்திய யுத்தத்தை இறுதி மாதத்தில் என்னை மீள அழைத்தார்கள்.
24 மணி நேரமும் நான் பணியாற்றுவதால் சிரமங்களை எதிர்கொள்வதாக கூறிய கோத்தபாய ராஜபக் ஷ வன்னியில் கடமையாற்றிய இரண்டாம் நிலை அதிகாரியிடம் பொறுப்பாக ஒப்படைத்திருந்தார்.
அதற்கு அடுத்த வாரத்தில் யுத்த தளபாடங்களை கொள்வனவு செய்வதற்காக சீனாவுக்கு நான் சென்றிருந்தேன். விடுதலைப்புலிகள் கடலுக்கும் களப்புக்கும் இடையில் சிக்க வைக்கப்பட்டிருந்த அத்தருணத்தில் மேஜர் பிரிகேடியர் யுத்தத்தை வழி நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை. சாதாரண சார்ஜனிடம் ஒருவராலேயே யுத்தத்தை முன்னெடுத்திருக்க முடியும்.
மே 18 ஆம் திகதி வெளிநாடொன்றிலிருந்து வருகை தந்து மண்ணை மஹிந்த ராஜபக் ஷ முத்தமிட்டபோது பிரபாகரன் இறந்திருக்கவில்லை. யுத்தம் நிறைவடைந்த திகதி கூட ராஜபக் ஷவினருக்கு தெரியாது. இரண்டு வருடங்கள் ஒன்பது மாதங்களாக சட்ட திட்டங்களுக்கு அமைவாக முன்னெடுத்துச் செல்லப்பட்டு யுத்தத்தை இறுதி தருணத்தில் சிக்கலுக்குள் உள்ளாகும் நிலைமை ஏற்படுத்திவிட்டார்கள்.
மோசமான முறையில் முன்னெடுக்கப்பட்டு யுத்தக் குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக விமர்சனங்கள் எழுவதற்கான நிலைமைகளை ஏற்படுத்திவிட்டார்கள். இதனால் தான் வெள்ளைக் கொடி சர்ச்சையும் எழுந்துள்ளது. இறுதி யுத்தத்தின் இறுதி தருணத்தில் என்ன நடந்தது என்பது கண்டறியப்பட வேண்டும். வெள்ளைக்கொடி விவகாரத்தில் நடந்ததென்பது மக்களுக்கு தெரியப்படுத்தப்பட வேண்டும். பக்கச்சார்பற்ற நியாயமான விசாரணை முன்னெடுக்கப்பட வேண்டும்.
சர்வதேச கண்காணிப்பாளர்களின் விசாரணையை முன்னெடுத்து இராணுவத்தின் மீது படிந்துள்ள கறை போக்கப்பட வேண்டும். இவ்விடயத்திலிருந்து விலகிச் செல்ல முடியாது.
குற்றச்சாட்டுகள் எழுவதற்கு காரணம்
1991 ஆம் ஆண்டு ரஞ்சன் விஜேவர்தனவின் கால்களில் விழுந்து உயிர்த் தஞ்சம் கோரி அமெரிக்காவுக்கு கோத்தபாய சென்றிருந்தார். அங்கு சென்று கராஜில் தான் பணிபுரிந்தார். இரும்பு ஓட்டுனராக செயற்பட்டார். அவ்வாறு இருந்த சமையத்தில் அவருடைய துவிச்சக்கர வண்டியை ஏணியுடன் கட்டி வைத்திருந்தபோது இரண்டையும் திருடிச் சென்றதால் கஷ்டங்களுக்கு முகங் கொடுத்தாக கூறியிருக்கின்றார்.
இவ்வாறு தப்பிச் சென்றவர்கள் இரண்டறை இலட்சம் இராணுவத்தினருக்கு கட்டளைகளை வழங்க முடியுமா? தொழில்வான்மை இல்லாத இவர்கள் எவ்வாறு இராணுவத்தினரை வழி நடத்த முடியும். 35 வருடங்களாக இராணுவத்தில் சேவையாற்றியே கட்டளை இடும் தகுதியை நான் பெற்றிருந்தேன்.
இவ்வாறான நிலையில் இருந்தவரே யுத்த வெற்றியை தனதாக்க வேண்டும் என கங்கணம் கட்டி செயற்பட்டார். கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிறந்த சத்திர சிகிச்சை நிபுணர் இருக்கின்றார். அவரின் சத்திர சிகிச்சைகள் வெற்றியளிக்கும் பட்சத்தில் சுகாதார அமைச்சரை பாராட்ட முடியாது.
அர்ஜுன ரணதுங்க உலக கிண்ணத்தை வெற்றி கொண்டு வந்தபோது ஜனாதிபதியை கௌரவிக்க முடியாது. அண்மையில் இலங்கை அணி தோற்றபோது தயாசிறியை குற்றஞ்சாட்ட முடியாது. களத்தில் இருந்து பணியாற்றுபவர்களுக்குக் கௌரவம் வழங்கப்பட வேண்டும்.
ஆனால் அதற்கு மாறாக சர்வாதிகாரத்துடன் தாம் கௌரவத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனைப் பயன்படுத்தி இந்த நாட்டின் மன்னர் ஆட்சியை நிலை நிறுத்தி குடும்பாதிக்கத்தை வலுப்படுத்த முனைந்தார்கள்.
ஆனால் அனைத்துமே தலைகீழாக மாறியுள்ளன. ஆட்சியில் பலமும் அதிகாரமும் தொடர்ந்து இருக்குமென கருதினார்கள். இன்பமும் துன்பமும் வண்டியின் சக்கரங்கள் என்பதை மறந்துவிட்டார்கள். மக்கள் பீதியுடன் வாழ முடியாது என்பதை உணர்ந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளார்கள். தற்போது அரசியல் அநாதைகளாகி விட்டனர்.
கொள்ளை
எமது நாட்டின் பொருளாதாரம் இன்று பாரிய நெருக்கடியில் உள்ளது. இதற்கு கடந்த ஆட்சியாளர்களே காரணமாக உள்ளார்கள். சீனாவிடமிருந்து எமது பொருளாதாரத்தை முன்னெடுப்பதாக கூறியபோதும் அதனை சூறையாடி உள்ளனர்.
ஒரு டொலர களவாடியிருந்தாலும் வயிற்றை வெட்டிக் கொள்வதாக மஹிந்த ராஜபக் ஷ கூறியிருந்தார். ஒரு டொலர் அல்ல 90 மில்லியன் ரூபாவை களவாடியுள்ளார்கள்.
ரடா நிறுவனத்தின் ஊடாக எமில்காந்தனுக்கு வழங்கியுள்ளார்கள். அதற்கான சாட்சிகளை அவர் விரைவில் முன்வைப்பார் . பீகொக் மாளிகையை வேறொருவரின் பெயரில் பதிவு செய்துள்ளார்கள்.
சுனாமி நிதியில் மோசடிகளை மஹிந்த ராஜபக் ஷ மேற்கொண்டிருந்தார். அவரை விடுதலையளித்தது உதவிக்கென எனது தேர்தல் மேடையில் சரத் என் சில்வா பகிரங்கமாகவே தெரிவித்திருக்கின்றார்.
இவற்றை விட விகாரைகளின் கப்பம் பெற்றுள்ளார்கள். பல பில்லியன்களை வங்கிகளில் வைப்பிலிட்டுள்ளார்கள். சில் ஆடைகளை 50 ரூபாவிற்கு இறக்குமதி செய்து 250 ரூபாவாக விலை பதித்துள்ளார்கள்.
இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொண்டவர்கள் வயிற்றை அல்லது கழுத்தை அறுத்துக்கொள்ள வேண்டும். ஆனால் அவை நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்குவதற்கு காத்திருப்பது அவசியம்.இவற்றை விட 137 கிலோ கிராம் தங்கம் இறுதி யுத்தத்தில் பெறப்பட்டதாக கூறப்பட்ட பதிவுகள் உள்ளன.
அது தவறானது. இறுதி யுத்தம் நிறைவடைந்த பின்னர் 220 கிலோ கிராம் தங்கத்தை நான் அனுப்பியிருந்தேன். அதன்போது உரிமையாளர்களின் பெயரும் காணப்பட்டது. இரு வாரங்களின் பின்னர் நான் அந்த களத்திலிருந்து விலகியிருந்த நிலையில் 400 முதல் 500 வரையிலான கிலோ கிராம் தங்கம் மீட்கப்பட்டிருந்தது.
கோரிக்கை
தேசத்தை அழிக்க முனைந்தவர்கள் இன்று ஆட்சியதிகாரமற்று நெருக்கடிகளுடன் இருக்கின்றார்கள். தம்மை பழிவாங்குவதாக கூறுகின்றார்கள். அன்று நான் கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டேன். எனது மனைவி நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
எனது பிள்ளைகள் விமான நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்கள். மருமகன் 5 வருடங்கள் மறைந்து வாழ்ந்தார். இவை பழிவாங்கல்கள். தற்போது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு கைதுகள் இடம்பெறுகின்றபோது பிள்ளைகளைத் தண்டிக்காதீர்கள் தன்னை கைது செய்யுங்கள் என கண்ணீர் வடிக்கின்றனர்.
சாட்சியளிப்பதற்கு நீதிபதிகளின் வாயில்கள் ஊடாக வருகை தந்தவர்கள் இன்று நீதிமன்ற வளாகத்தில் தனித்து நின்று வழக்குகளுக்காக காத்திருக்கின்றார்கள். யாரும் பழிவாங்கப்பட வேண்டுமென்பது எமது நோக்கமல்ல. உண்மைகள் கண்டறியப்பட்ட வேண்டும்.
லசந்த, தாஜுதீன், ரவிராஜ், எக்னெலிகொட ஆகியவர்களின் மரணங்கள் காணாமல் போதல் சம்பவங்களுடன் தொடர்புபட்டதாக சந்தேகங்களும் சாட்சியங்கள் தொடர்பான தகவல்களும் வெளியாகின்றன. அன்றைய ஆட்சியாளர்களுக்கு தெரியாது எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்கப்பட்டிருக்கமாட்டாது.
இச்சம்பவங்கள் அனைத்தும் ஒரு நபருடனேயே தொடர்புபட்டுள்ளது. குழுவொன்றே மேற்கொண்டுள்ளது. லசந்தவின் விடயத்தில் என் மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகின்றது. அது தவறானது. புனையப்பட்டது. ஆகவே அவ்விடயங்கள் தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு உண்மைகள் கண்டறியப்பட்டு தண்டனைகள் வழங்கப்பட வே்ணடும்.
தற்போது மஹிந்த ராஜபக் ஷவை ஆதரித்துக் கொண்டு கோத்தபய ராஜபக் ஷவின் தலைமையில் அரசியல் கட்சியை ஏற்படுத்தி ஆட்சியை அமைக்கலாம் என ஒரு தரப்பினர் கருதுகின்றனர்.
ஆனால் அது இயலாத காரியம். இரவில் விழுந்த குழியில் பகலில் விழுவதற்கு முயலாதீர்கள். நாட்டின் எதிர்கால சுபீட்சத்திற்காக ஒன்றிணைந்து செயற்படுங்கள் என்றார்.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக