கோவில் புளியோதரையை வீட்டிலேயே எளிய முறையில் செய்யலாம். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
உதிராக வடித்து ஆற வைத்த சாதம் - 2 கப்
புளி - 100 கிராம்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - 2 ஸ்பூன்
நல்லெண்ணெய் - 1 1/2 டேபிள்ஸ்பூன்
தாளிக்க :
காய்ந்த மிளகாய் - 6
கடலைப்பருப்பு - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு - 1 டீஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பில்லை - சிறிது
வறுத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன்
வறுத்து பொடிக்க வேண்டியவை :
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
கடலைப்பருப்பு - 1/2 டேபிள்ஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
செய்முறை :
* ஆற வைத்த சாதத்தை நல்லெண்ணெய் ஊற்றி கிளறி விடவும்.
* புளியை கெட்டியாக 1 கப் அளவுக்கு கரைத்து அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை போட்டு தாளித்து புளியை ஊற்றி கொதிக்க விடவும்.
* பொடிக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு வாசனை வரும் வரை வறுத்து ஆறவைத்து பொடித்து கொள்ளவும்.
* புளி பச்சை வாசனை போய் திக்கான பதம் வந்து எண்ணெய் ஓரங்களில் பிரிய ஆரம்பித்ததும் பொடித்த பொடியில் 3/4 டேபிள்ஸ்பூன் தூவி 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
* புளிக்காய்ச்சல் ஆறியதும் சாதத்தில் ஊற்றி நன்கு கிளறி விடவும்.
* 1 மணி நேரம் கழித்து சாப்பிட்டால் சுவையோ சுவை.
குறிப்பு :
* மீதமிருக்கும் பொடியை வறுவல் ,வத்தக் குழம்புக்கு பயன்படுத்தலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக