சனி, 11 மார்ச், 2017

ஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை..!!

பெண்கள் பலமுறை உச்சகட்டத்தை அனுபவிக்க கிளைட்டோரிஸ் உறுப்புதான் உதவியாக இருக்கிறது.

ஒரு ஆண் உறுப்பின் நுனியில் இருக்கும் அத்தனை உணர்ச்சி நரம்புகளும் பெண்ணின் கிளைட்டோரிஸிலும் உண்டு. அதனால்தான், அதை வளராத ஆண் உறுப்பு என்பார்கள்.



உச்சகட்டத்தின்போது, ரத்தம் பாய்ந்து இந்த கிளைட்டோரிஸ் அதிக விறைப்பும், கெட்டித்தன்மையும் அடைகிறது.

இந்த விறைப்புத்தன்மை உச்சகட்டம் முடிந்த பிறகு, ஆண் உறுப்பைப்போல் உடனடியாகத் தளர்ந்துவிடுவதில்லை. அதனால்தான், பெண்களால் தொடர்ந்து பலமுறை உச்சகட்டத்தை அடைய முடிகிறது.

உச்சகட்டத்தில் பெண்களிடம் இருந்து விந்து போன்ற திரவம் வெளிவருகிறது என்பதை பல மருத்துவர்களே ஏற்றுக்கொள்வதில்லை.

அவர்களது வாதத்தின்படி, உறவுக்கு முன் உருவாகும் திரவத்துடன் சிறுநீர்ப்பையில் இருந்து விழும் துளிகளே விந்துபோல் வெளியாகிறது என்கிறார்கள்.

ஆனால், உச்சகட்டத்தில் வெளிவரும் பெண் விந்துவில், ஆண் விந்துக்குரிய அனைத்து மூலப்பொருள்களும் (உயிரணு தவிர) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

உறவில் ஈடுபடும் ஒவ்வொரு பெண்ணும் உச்சகட்டத்தின்போது திரவம் கசிவதை உணர முடிவதால், பெண்ணுக்கும் விந்து வெளியேற்றம் உண்டு என்பதுதான் உண்மை.

உச்சகட்டத்தின்போது ஆணை பெண் இறுக்கமாகக் கட்டிக்கொள்வதும், உறுப்பை வெளியேற்ற விடாமல் தன்னுள்ளே அடக்கிக்கொள்ள நினைப்பதும், தன்னை மறந்து பல்வேறு வகையான ஒலி எழுப்புவதும் நிகழ்கிறது.

ஆண்களும் இந்தப் பரவச நிலையில் தன்னை மறந்து இன்ப உலகில் செல்கின்றனர்.

ஆண்கள், இந்தப் பரவச நிலையில் அரை நிமிடங்கள் வரை இருக்கிறார்கள். பெண்கள், இந்த பரவச நிலையை ஒன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை அனுபவிக்க இயலும்.

ஆசைக்கு அடுத்த நிலை…

செக்ஸ் ஆசை தோன்றியதும், ஆண்-பெண் இருவருமே உச்சகட்ட இன்பத்தை அடைய வேண்டும் என்பதை நோக்கியே செயல்படத் தொடங்குகிறார்கள்.

உச்சகட்டத்தைப் பல்வேறு விதங்களில் அடையமுடியும் என்பதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

ஆண்கள் உச்சகட்டத்தை அடையும் வழிமுறைகள்

* ஆண்-பெண் உறுப்புகள் மூலம் செயல்படும் இயல்பான கலவி

* பெண் அல்லது ஆணின் ஆசனவாய்ப் புணர்ச்சி

* வாய்வழிப் புணர்ச்சி

* சுய இன்பம்

* செக்ஸ் படங்கள், காட்சிகள் பார்ப்பது போன்றவற்றின் மூலம் உச்சகட்டம் அடைய முடிகிறது.

இந்த செக்ஸ் செயல்பாடுகளின் கடைசிக் கட்டமாக விந்து வெளியேற்றம் நிகழ்கிறது. இதுவே ஆண்களுக்கு உச்சகட்டமாகும்.

பெண்கள் உச்சகட்டத்தை அடையும் வழிமுறைகள் 

ஆண்களைவிட பெண்கள் பல்வேறு வழிமுறைகளில் உச்சகட்ட இன்பத்தை அடைய முடிகிறது.

* இயல்பான பெண் உறுப்பில் ஆண் உறுப்பை நுழைக்கும் கலவி

* பெண் உறுப்புகளைச் சுவைத்தல்

* சுய இன்பம்

* பல்வேறு பொருள்களைப் பயன்படுத்தி இன்பம் காணுதல்

* கை, கால், வாய் போன்றவற்றின் மூலம் புற விளையாட்டுகள்

* பிற பெண்ணுடன் கலந்து இன்பம் அனுபவித்தல்

* பி.டி.எஸ்.எம். எனப்படும் துன்பத்தை அனுபவித்து இன்பம் காணுதல்.

பெண்களுக்கும் விந்து வெளியேற்றம் உச்சகட்டத்தை அறிவிப்பதாக இருந்தாலும், அடுத்தடுத்து பல்வேறு உச்சகட்டங்களை அடைய முடியும்.

இதுதவிர ஆண்-பெண் இருவரும் கனவு காணுதல், கற்பனை செய்தல், செக்ஸ் கதைகள் பேசுதல் மூலமாகவும் உச்சகட்ட இன்பத்தை அடைய முடியும்.

உச்சகட்ட இன்பத்தைத் தொடமுடியாத ஆணும், பெண்ணும் இன்பம் அடைந்துவிட்டதாகப் பொய்யான உச்சகட்டத்தை அனுபவிக்கிறார்கள் என்கிறது ஓர் ஆய்வு.

அதாவது, உச்சகட்டத்தை அடையாமலே, இன்பநிலை அடைந்ததுபோல் கத்துவது, கட்டி அணைப்பது, துடிப்பதுபோல் நடிப்பார்கள். சமீபத்திய ஓர் ஆய்வின்படி, சுமார் 52 சதவீத பெண்கள் பொய்யான உச்சகட்டம் அடைவதாகத் தெரிவித்துள்ளனர்.

17 சதவீத பெண்கள் மட்டுமே கலவியின்போது உண்மையில் உச்சகட்டம் அடைந்துள்ளனர்.

உச்சகட்டம் அடையாமலே அடைந்ததாக ஏன் சொல்கிறார்கள்?

கலவியைத் தொடர்ந்து நீடிக்க விரும்பாமல் அல்லது இனியும் உச்சகட்டம் நிகழ வாய்ப்பு இல்லை என்று கருதும் பெண்கள் இப்படி பொய்யாக உச்சகட்டத்தை அறிவித்துவிடுகிறார்கள்.

மேலும், செக்ஸில் ஆர்வம் இல்லாதவர்கள், ஆணின் கலவி முறையில் திருப்தி அடையாதவர்கள், ஆண்களுக்கு முறையான எழுச்சி, விந்து வெளியேற்றம் இருந்தால்கூட உச்சகட்ட இன்பம் அனுபவிக்காமல் இருப்பது உண்டு.

ஆண்களைப் பொறுத்தவரை இதை ஒரு நோயாகக் கருதி சிகிச்சை அளிக்கும்போது, இன்பம் பெற வழி உண்டாகும்.

செக்ஸ் தடைகள்

ஆண்-பெண் இருவரது உடலும் எந்த நேரமும் எல்லா காலமும் உறவுக்கு ஏற்றதாக இருக்கும் என்றாலும், பல்வேறு புறச்சூழல் மற்றும் உடல், மனக் குறைபாடு காரணமாக இன்பம் அனுபவிப்பதில் சில தடைகள் இருக்கவே செய்யும்.

அவற்றைத் தம்பதியர் இருவரும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியமாகும்.

உறவுக்குத் தயார் இல்லாத நிலையில், வற்புறுத்துதல் மிகப்பெரிய மனக்கசப்பை உருவாக்குவதுடன், கலவி அனுபவத்தையும் வெறுக்கச் செய்துவிடும்.

ஆசை இருப்பது ஒரு நிலை என்றால், அதை அனுபவிக்கத் தூண்டுவது அடுத்த நிலை.

ஆசை ஏற்படாத நிலையில் கலவிக்கு அழைக்கவோ, அனுபவிக்கவோ கூடாது. கீழ்க்கண்ட பல்வேறு காரணங்களால் செக்ஸ் அனுபவிக்க ஆர்வம் இல்லாமல் இருக்கலாம்.

* உடல் அசதி

* மன அழுத்தம்

* மாதவிலக்கு

* உடல் நலமின்மை

* தம்பதிகளுக்குள் சண்டை

* அதிக போதை

* கடந்த முறை செக்ஸில் நடந்த மோசமான நிகழ்வு

* தொடர்ந்து ஒரே நிலையில் உறவுகொள்வதில் ஆர்வம் இன்மை.

மேற்கண்ட காரணங்களால், செக்ஸை தவிர்க்க நினைக்கும்போது விலகி நிற்பதே நல்லது.

ஆனால் மனம், உடல் நலத்தைச் சீரமைக்க உடலுறவால் முடியும் என்பதால், மேற்கண்டவற்றை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு தன்னுடைய இணையைச் சந்தோஷம் அடைய வைத்து, இந்தச் சிக்கலில் இருந்து செக்ஸ் மூலம் விடுதலை வாங்கித்தரவும் முடியும்.

ஆனால், செக்ஸ் ஆசையைத் தூண்டிவிடுதல் முக்கியக் கட்டமாக இருக்க வேண்டும்.

இதற்கு ஆண் அல்லது பெண் மிகவும் பொறுமையாக உழைக்க வேண்டியது அவசியம். ஒரு சிலருக்கு தொட்டாலே உணர்ச்சி தூண்டப்பட்டுவிடும்.

இன்னும் சிலருக்கு நீண்ட காலம் பிடிக்கலாம். தன்னுடைய இணை எப்படிப்பட்டவர் என்பதை அறிந்து அதன்படி அவரை அணுகி இன்பத்துக்கு அழைப்பதுதான் சரியான வழியாகும்.

ஆரம்ப காலத்தில், செக்ஸ் என்பது குழந்தை பெறுவதற்கான செயல்பாடாகத்தான் கருதப்பட்டது. மருத்துவமும் அப்படித்தான் பார்த்தது.

பிறகுதான், செக்ஸ் செயல்பாடுகள் பிரித்து அறியப்பட்டன. அவற்றில் முதலாவது, செக்ஸ் ஆர்வம். அடுத்தது, செக்ஸ் செயல்பாடு. மூன்றாவது, உச்சகட்டமான விந்து வெளியேற்றம் என்று பிரித்தனர்.

இப்போது உச்சகட்டத்துக்கு அடுத்த ரிலாக்ஸ் நிலையையும் ஆராய்ந்து வருகிறார்கள்.

அதாவது, செக்ஸ் ஆர்வத்தின்போது மனத்தில், உடலில் தோன்றிய அத்தனை டென்ஷனில் இருந்தும் விந்து வெளியேற்றம் மூலம் உச்சகட்டத்தில் விடுதலை கிடைக்கிறது.

இந்தச் சமயத்தில், ஆண் வெறுமனே ரிலாக்ஸ் அனுபவித்தாலும், பெண்களால் மேலும் மேலும் உச்சகட்டம் அடைய வாய்ப்பு இருக்கிறது என்பதால், இதுவும் முக்கிய நிலையாகக் கருதப்படுகிறது.

பெண்ணை அதிக அளவில் உச்சகட்டத்துக்கு ஆளாக்க வேண்டியது ஆணின் கடமை.

தனக்கு உச்சகட்டம் வந்தபிறகு, கலவியில் இருந்து ஒதுங்கிக்கொள்ளாமல், அவளை செக்ஸ் உறவில் முழுமையான திருப்தி அடையச் செய்ய வேண்டும் என்கிறது செக்ஸ்மருத்துவம்.

பெண்ணைத் திருப்தி அடையச்செய்வது நீண்டதொரு பயணம் என்பதால், முதலில் ஆண்களின் உச்சகட்ட இன்பத்தைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

ஆண்களில் பெரும்பாலோர் அவசரக்காரர்கள், சுயநலமிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஏன் இந்த நிலை என்றால் அவர்களது உடல் அமைப்பு அப்படித்தான் இருக்கிறது என்ற உண்மையைப் பெண் அறிந்துகொள்ள வேண்டும்.

அப்போதுதான் அந்த உடலைத் தன்வசப்படுத்த முடியும்.

செக்ஸ் ஒரு கலை என்பதை அறிந்து, அதை முறைப்படி முழுமையாக அனுபவிக்கும்போது கிடைக்கும் இன்பம் இருக்கிறதே, அதுதான் இந்தப் பூவுலகின் சொர்க்கம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல