குவைத்தில் எஜமானர்களால் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட பெண் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை பெற்ற நிலையில் உயிரிழந்தார்
குவைத்தில் பணிப் பெண்ணாக தொழில்புரிந்த போது வீட்டு உரிமையாளர்களால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நொச்சியாகம நொகுன்னேவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முள்ளந்தண்டு உடைபட்டு நடமாட முடியாத நிலையில் குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்ட சுஜானி ராஜபக் ஷ (32) என்ற, இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த நான்காம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2014 ஆம் ஆண்டு அநுராதபுரத்திலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற அவர் தாக்குதலுகுள்ளாகி அந்நாட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அதன்பின்னர் அவர் கொழும்பு தேசிய மற்றும் அநுராதபுரம் பொது வைத்தியசாலைகளில் சுமார் 5 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் உயிரிழந்தவரின் சகோதரி தெரிவிக்கையில், தனது தங்கை கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் குவைத் சென்றிருந்த நிலையில் இரண்டு மாதங்களாக அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கபெற்றிருக்கவில்லை.
அதன் பின்னர் அவரது கணவரும் தந்தையும் அநுராதபுரத்திலுள்ள முகவர் நிலையத்தை அணுகி தங்கை தொடர்பில் தகவல்களை பெற்று அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர், பணியாற்றும் வீட்டின் எஜமானர்கள் தன்னைத் தாக்கி கொடூரமாக சித்திரவதை செய்வதாகவும் உடனடியாக நாடு திரும்ப வழி செய்யுமாறும் கோரியிருந்தார்.
அதனையடுத்து, கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்தபோதும் எவ்வித தகவல்களும் கிடைத்திருக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 2015.12. 02 ஆம் திகதியன்று அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டிலுள்ள இலங்கையர்கள் சிலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
அத்தினத்தில் தங்கை வைத்தியசாலையில் அனுமதியாகி 22 நாட்கள் கழிந்திருந்தன.
வீடு தேடிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரின் உதவியுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் தங்கை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டிருந்த போதிலும் அவரால் நடமாட முடியாதவாறு முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டிருந்தது.
சுஜானி பணியாற்றி வந்த வீட்டில் உடைகளை சரியாக கழுவவில்லை என்பதற்காக நான்கு தும்புத்தடிகள் முறியும் அளவுக்கு அவரை அவ்வீட்டு எஜமானி தாக்கியுள்ளார்.
அதன்பின்னர் அவ்வீட்டின் எஜமானன், சுஜானியை உதைத்து கடுமையாக தாக்கியதோடு அவ்வீட்டின் இரண்டாவது மாடியின் படிக்கட்டுகளில் உருட்டிவிட்டதாகவும் அதன்பின்னர் தான் சுஜானி கண்விழித்துப் பார்க்கையில் பொலிஸார் உதவியுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டமை தனது தங்கை சுஜானிக்கு தெரியவந்ததாக சுஜானியின் சகோதரி தெரிவித்தார்.
இந்நிலையில் நாடு திரும்பிய அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் கடந்த 5 மாதங்களாக கடும் சிரமத்துக்கு மத்தியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் உயிரிழந்தார்.
குவைத்தில் பணிப் பெண்ணாக தொழில்புரிந்த போது வீட்டு உரிமையாளர்களால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நொச்சியாகம நொகுன்னேவ பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முள்ளந்தண்டு உடைபட்டு நடமாட முடியாத நிலையில் குவைத்திலிருந்து அழைத்து வரப்பட்ட சுஜானி ராஜபக் ஷ (32) என்ற, இரு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு அநுராதபுரம் பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த நான்காம் திகதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
2014 ஆம் ஆண்டு அநுராதபுரத்திலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிலையம் ஒன்றின் ஊடாக குவைத்துக்கு பணிப்பெண்ணாக சென்ற அவர் தாக்குதலுகுள்ளாகி அந்நாட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் அதன்பின்னர் அவர் கொழும்பு தேசிய மற்றும் அநுராதபுரம் பொது வைத்தியசாலைகளில் சுமார் 5 மாதங்களாக சிகிச்சை பெற்றுவந்ததாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் உயிரிழந்தவரின் சகோதரி தெரிவிக்கையில், தனது தங்கை கடந்த 2014 ஆம் ஆண்டு டிசம்பரில் குவைத் சென்றிருந்த நிலையில் இரண்டு மாதங்களாக அவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கபெற்றிருக்கவில்லை.
அதன் பின்னர் அவரது கணவரும் தந்தையும் அநுராதபுரத்திலுள்ள முகவர் நிலையத்தை அணுகி தங்கை தொடர்பில் தகவல்களை பெற்று அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவர், பணியாற்றும் வீட்டின் எஜமானர்கள் தன்னைத் தாக்கி கொடூரமாக சித்திரவதை செய்வதாகவும் உடனடியாக நாடு திரும்ப வழி செய்யுமாறும் கோரியிருந்தார்.
அதனையடுத்து, கொழும்பிலுள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் முறைப்பாடு செய்தபோதும் எவ்வித தகவல்களும் கிடைத்திருக்கவில்லை.
இந்நிலையில், கடந்த 2015.12. 02 ஆம் திகதியன்று அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டிலுள்ள இலங்கையர்கள் சிலர் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தனர்.
அத்தினத்தில் தங்கை வைத்தியசாலையில் அனுமதியாகி 22 நாட்கள் கழிந்திருந்தன.
வீடு தேடிவந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தினரின் உதவியுடன் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பரில் தங்கை இலங்கைக்கு அழைத்துவரப்பட்டிருந்த போதிலும் அவரால் நடமாட முடியாதவாறு முள்ளந்தண்டு பாதிக்கப்பட்டிருந்தது.
சுஜானி பணியாற்றி வந்த வீட்டில் உடைகளை சரியாக கழுவவில்லை என்பதற்காக நான்கு தும்புத்தடிகள் முறியும் அளவுக்கு அவரை அவ்வீட்டு எஜமானி தாக்கியுள்ளார்.
அதன்பின்னர் அவ்வீட்டின் எஜமானன், சுஜானியை உதைத்து கடுமையாக தாக்கியதோடு அவ்வீட்டின் இரண்டாவது மாடியின் படிக்கட்டுகளில் உருட்டிவிட்டதாகவும் அதன்பின்னர் தான் சுஜானி கண்விழித்துப் பார்க்கையில் பொலிஸார் உதவியுடன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டமை தனது தங்கை சுஜானிக்கு தெரியவந்ததாக சுஜானியின் சகோதரி தெரிவித்தார்.
இந்நிலையில் நாடு திரும்பிய அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் கடந்த 5 மாதங்களாக கடும் சிரமத்துக்கு மத்தியில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் கடந்த வியாழக்கிழமை அவர் உயிரிழந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக