வியாழன், 12 ஜூலை, 2018

தாய்லாந்து குகையும், அது பற்றிய கதையும்: 5 கேள்வி, பதில்

தாய்லாந்து சிறுவர்களும் அவர்களது கால்பந்து பயிற்சியாளரும் தாம் லுவாங் மலைக் குகைக்குள் இருந்து 17 நாட்களுக்குப் பிறகு மீட்கப்பட்டுள்ளனர்.


அந்த குகை மற்றும் அந்த சிறுவர்கள் குறித்த தகவல்களை 5 கேள்வி, பதில்கள் வடிவில் வழங்குகிறோம்.

ஏன் அந்த சிறுவர்கள் குகைக்குள் சென்றார்கள்?

இதுவரை சரியான பதில் தெரியாத கேள்வி இது. ஏன் அவர்கள் ஜூன் 23, சனிக்கிழமை அந்த குகைக்குள் சென்றார்கள் என்பதை யாராலும் சரியாக விளக்க முடியவில்லை.

பிபிசி-தாய் சேவை செய்தியாளர்கள் தரும் தகவலின்படி, இந்த சிறுவர்கள் குழுவினர் காலை 10 மணிக்கு கால்பந்தாட்ட பயிற்சிக்காக கூடியுள்ளனர். அவர்களது துணை பயிற்சியாளர் எகாபொல், 10.42 மணிக்கு அவர்கள் கால்பந்தாட்ட பயிற்சி செய்வதை ஃபேஸ்புக்கில் நேரலை செய்திருக்கிறார்.

உள்ளூர் நேரப்படி மதியம் 3 மணிக்கு தாம் லுவாங் - குன் நம் நங்னான் தேசிய பூங்காவின் ஊழியர் 11 மிதிவண்டிகள் குகையின் நுழைவாயிலில் நிற்பதை கண்டிருக்கிறார். இதனால் சந்தேகித்து விசாரித்து இருக்கிறார். பின்னர், குகையில் சிக்கி உள்ள ஒரு சிறுவனின் பெற்றோர், தங்கள் மகனை தொடர்பு கொள்ள முடியவில்லை என பூங்கா நிர்வாகத்திடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

அந்த சிறுவர்களை தேடும் பணி உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணிக்கு தொடங்கியது.

கேம் என்ற மற்றொரு சிறுவன் அந்த கால்பந்தாட்ட அணியை சேர்ந்தவர். ஆனால், அன்று அவர் அந்த சிறுவர்களுடன் குகைக்குள் செல்லவில்லை. அவர் உள்ளூர் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த நேர்காணலில், அந்த குகைக்கு முன்பே மூன்று முறை சென்று இருக்கிறோம். ஆனால், எப்போதும் தாங்கள் மழை காலத்தில் சென்றதில்லை என்று கூறி இருக்கிறார்.

மேலும் அவர், "எப்போதும் அந்த குகைக்குள் செல்லும்போது முன்னெச்சரிக்கை ஏற்பாட்டுடன்தான் செல்வோம். அனைவராலும் அந்த குகைக்குள் செல்ல முடியுமா என்று சோதிப்போம். குகைக்குள் செல்வதற்கு முன்பு உணவு உண்டுவிடுவோம்" என்று முந்தைய அனுபவங்களை விளக்கி உள்ளார்.

தனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால்தான் அவர்களுடன் அன்று குகைக்குள் செல்லவில்லை என்கிறார் கேம். அவர், "எங்கள் பயிற்சியின் ஒரு பகுதியாக நாங்கள் அந்த குகைக்குள் செல்வோம். எங்கள் அணியில் ஒருவருக்கு பிறந்தநாள் வருகிறது. அவருக்கு இன்ப அதிர்ச்சி அளிப்பதற்காக அவர்கள் குகைக்குள் சென்று இருக்கலாம்" என்கிறார்.

அந்த அணியின் துணை பயிற்சியாளர் எகாபொல் அந்த குகையிலிருந்து கடிதம் ஒன்றை எழுதி இருந்தார். அதில் தனது பாட்டியை கவலை கொள்ள வேண்டாம் என்று குறிப்பிட்டு இருந்தார். அனைவரின் ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துள்ள அவர், சிறுவர்களின் பெற்றோரிடம் மன்னிப்பும் கேட்டு இருந்தார்.

எப்படி அவர்கள் குகைக்குள் சிக்கிக் கொண்டார்கள்?

அந்த குகைக்குள் சிறுவர்கள் சென்ற சில நிமிடங்களில் மழை பெய்ய தொடங்குகிறது. அந்தப் பகுதியில் உருவான காட்டுவெள்ளம், குகையின் நுழைவாயில் வழியாக குகையில் பாய்கிறது.

இதையடுத்து அந்த சிறுவர்களும் அவர்களது பயிற்சியாளரும் பாதுகாப்பான மற்றும் உயரமான பகுதியை தேடி உள்ளே சென்றார்கள். தாய்லாந்தின் நான்காவது பெரிய குகையான இந்த குகையின் மொத்த நீளம் 10,316 மீட்டர்.

அந்த குகையில் சிக்கி உள்ள சிறுவர்களின் பெயர் வயது மற்றும் அவர்களின் கனவு என்ன?

பிபிசியிடம் பேசிய இந்த அணியின் பயிற்சியாளர் நோப்பராட் கண்டாவோங், "இந்த அணியினர் அனைவருக்கும் தாய்லாந்து தேசிய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவு இருந்தது" என்கிறார்.

இந்த குகை குறித்த நாட்டுப்புற கதை என்ன?

இந்த குகை குறித்து பல நாட்டுப்புற கதைகள் உள்ளன. இந்த குகை பெரும்பாலானவர்களால், 'தாம் லுவாங் குன் நும் நங் நன்' என்று அழைக்கப்படுகிறது. இதன் பொருள், 'ஆறு ஒன்றுக்கு பிறப்பிடமாக இருக்கும் தூங்கும் பெண்ணின் பெரும் குகை'. இதன் பின்னால் ஒரு கதையும் உள்ளது.

சீனாவின் தெற்கு பகுதியில் உள்ள சியாங் ரூங் என்னும் நகரத்தின் இளவரசியாக இருந்தவர், குதிரைகாரர் ஒருவருடன் காதல் கொண்டு கர்ப்பமானார்.

பெண்ணின் தந்தைக்கு அஞ்சி அங்கிருந்து தெற்கு நோக்கி பயணித்த இருவரும் ஒரு மலை பகுதியை அடைந்தனர்.

இளவரசியை காக்க சொல்லிவிட்டு உணவு தேட சென்ற அவரது காதலனை, இளவரசியின் தந்தையின் ஆட்கள் கண்டுபிடித்து கொன்றுவிட்டனர்.

அவருக்காக காத்திருந்த இளவரசி, ஒரு கட்டத்தில் தன் காதலர் இனி வரபோவதில்லை என்பதை உணர்ந்து கொண்டை ஊசியினால் தன்னைதானே குத்தி மாய்த்துக் கொள்கிறார்.

அவரது உடல் ஒரு மலையாகவும், அவரிடமிருந்து வழிந்தோடிய குருதி ஆறாகவும் மாறியது என்கிறது அந்த பழங்கதை.

இதற்கு முன்னதாக யாராவது அங்கு சென்று சிக்கிக் கொண்டுள்ளார்களா?

ஆம் என்கின்றன உள்ளூர் ஊடகங்கள்.

முன்னாள் உள்ளூர் சமூக தலைவர் இன்சோர்ன் கேவ்சொம்பாங் சொன்ன ஒரு தகவலை அவை குறிப்பிடுகின்றன.

"வெளிநாட்டு பயணி ஒருவர் 1986 ஆம் ஆண்டு அந்த குகைக்குள் சென்று சிக்கிக் கொண்டார். ஏழு நாள் வரை அந்த குகைக்குள்ளேயே இருந்ததார். பின்னர் அவர் பத்திரமாக மீட்கப்பட்டார்" என்கிறது அந்த தகவல்.

ஆனால், அந்த சமயத்தில் இப்போது பெய்வதை போல மழையெல்லாம் பெய்யவில்லை.

அதன்பின், 2016 ஆகஸ்ட் மாதம் சீனர் ஒருவர் அந்த குகைக்குள் சென்று சிக்கி மீட்கப்பட்டார்.

BBC Tamil 


தாய்லாந்து குகை: சிறுவர்கள் சிக்கியது முதல் மீட்டது வரை

 தாய்லாந்து குகை: மயக்க மருந்து கொடுத்து மீட்கப்பட்டார்களா சிறுவர்கள்?

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல