திங்கள், 15 பிப்ரவரி, 2010

எந்த மாதிரியான பெண்களைச் சேரக்கூடாது?

கணவனிடத்தில் உண்மையான அன்பில்லாதவள், அவன் கேட்கும் கேள்விக்குத் தக்க பதில் கூறாமல், மறுத்து மறுத்துப் பேசுவாள். அவனது நண்பர்களைக் கண்டால் கலகம் செய்வாள். அவர்களது நட்பு பற்றி அலட்சியமாகப் பேசுவாள். கணவன் ஆசையோடு அள்ளி அணைக்க நெருங்கும் போது, அவனைப் புறக்கணிப்பாள். அவன் அதையும் மீறி வலுக்கட்டாயமாக, அவளுக்கு முத்தம் கொடுத்தால், அறுவெறுப்பு உணர்ச்சியோடு, முத்தமிட்ட இடத்தைத் துடைத்துக்கொண்டு கோபம் அடைவாள். அன்போடு அணைக்கும் அவன் கையை ஏதோ ஒரு விஷப்பாம்பைப் பார்ப்பது போலப் பார்ப்பாள்.
அவனைக்காணும் போதெல்லாம், ஏதோ ஒரு எதிரியைப் பார்ப்பது போலப் பார்ப்பாள்.

கணவன் படுக்கை அறைக்கு வரும் முன்பே தான் அங்கு சென்று படுத்திருப்பாள். அவன் அங்கு வந்து அவளை நெருங்கி இழுத்தால், முதுகைக்காட்டிக் கொண்டு படுப்பாள். அடிக்கடி, ஆற்றாமையால் பெருமூச்சு விட்டுக்கொள்வாள். கிட்ட நெருங்கினால் முழங்கையால் இடித்துத் தள்ளுவாள். தன் கணவனிடம் கூட தனது மேனி அழகைக் காட்டிக்கொள்ள விருப்பம் இல்லாதவளாய், பெரிய ஆடை அணிந்து, அங்கத்தை சுத்தமாக மறைத்துக்கொள்வாள். அவன் அவளைக்கூடிக்கலக்க விருப்பம் தெரிவித்தால், உன் தகுதிக்கு வேறு எவளையாவது போய் கூடிக் கலந்து கொள் என எக்காளமாகப் பேசுவாள். கணவன், படுக்கையில் அமர்ந்து வெற்றிலை மடித்துக்கொடுத்தால், அதை வாங்கி ஆசையோடு தின்னாமல், அவன் கையிலிருந்த படியே தட்டி, அது மண்மீது படும்படிச்செய்வாள்.

அவன் அவளிடத்தில் இனிமையான சொற்களைப் பேசும்போது, ஈவு இரக்கமின்றி, கொடூரமான வார்த்தைகளை அள்ளி வீசுவாள். கணவன் உண்மையிலேயே எந்தத் தவறும் செய்யாமல் இருந்தாலும் அவன் மீது பொய்க்குற்றம் சாட்டி, அவதூறு பேசுவாள். இது போன்ற நடத்தைகளைக் கொண்டிருக்கும் பெண்ணிடம் ஒரு ஆண் எந்தச் சூழ்நிலையிலும் சேர்க்கை வைத்துக்கொள்ளக்கூடாது என எச்சரிக்கிறது காமசூத்திரம்.

தவிர, எந்தெந்தப் பெண்கள் உடலுறவு கொள்ளத் தகுதியற்றவள் என்பதையும் காமசூத்திரம் கோடிட்டுக்காட்டுகிறது....அவர்கள் எப்படிப்பட்ட பெண்கள் எனக் கொஞ்சம் பார்க்கலாமா...?

மாதவிலக்காகி இருக்கும் பெண்கள், குழந்தை பெற்ற (புதிதாக) பெண்கள், கர்ப்பிணிப்பெண்கள், வெகு தூரம் நடந்து அலுத்துப்போனவள், தன்னை மறக்கும்படி மதுபானம் அருந்தி போதையில் மிதக்கும் பெண், நாட்டியம் ஆடிக் களைப்புடன் இருப்பவள், கொடிய பால்வினை நோயால் பீடிக்கப்பட்டவள், 6 மாதக் கர்ப்பிணியாக இருக்கும் பெண், கணவனை விட்டு, உடலுறவுக்காக அடுத்த ஆண்களை நாடும் பெண்கள், அதிகப்பசியால் வருந்துபவள், பருவம் அடையாத பெண்கள், உடலில் துர்நாற்றம் வீசும் பெண்கள், வயதில் கணவனை விட மூத்தவள், கணவனிடத்தில் எப்போதும் கோபமாகப் பேசுபவள், இது போன்ற நடத்தையை உடைய பெண்களை ஆண்கள் ஒரு போதும் கூடிக்கலக்கக்கூடாது என்கிறது காமசூத்திரம்.

Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல