[தமிழில் அம்மா பகவான் பக்திப் பாமாலை. கல்கி பகவான் பாடல். தமிழ்.]
வரிகள்: குரு என்கிறோம் கல்கி இவர் என்கிறோம் பரமாத்ம அவதாரம் இது என்கிறோம் அவதாரம் நடமாடும் திருமண்ணிலே - அட அநியாயம் அதிகாரம் தொடர்கின்றதேன்? பகவான்கள் சொகுசாக வாழும் போதிலே - பலர் பசியோடும் வலியோடும் சாகநேர்வதேன்? எளியோர்கள் துயர் தீர்க்கப் போராடினான் -யேசு வலியோடு வதை தாங்கிக் கொலையாகினான் நபிநாதன் சனத்தோடு சேர்ந்து வாழ்ந்தவன் - புத்தன் தெருவெங்கும் பிச்சைதான் வாங்கி உண்டவன் பலகோடிச் செலவோடு மாளிகைகளாம் -இவன் பட்டாடை படுக்கைக்கு லட்சலட்சமாம் உழைக்காத ஊதாரி இவன் அல்லவா? - இந்த எருமைக்கு செருப்பாலே பதில் சொல்லவா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக