மலேசியாவில் நித்தியானந்தாவின் ஆன்மிக தத்துவ போதனைகளை பரப்புவதற்காக கோலாலம்பூர் தமான் தேசா கொம்பக்கில் ஆசிரமம் ஒன்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது.
மலேசியாவில் நித்யானந்தாவுக்கு சுமார் 400க்கும் மேற்பட்ட தீவிர பக்தர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இந்த மையத்தில் தியானம் மற்றும் சொற்பொழிவுகளை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் கடந்த வாரம் நடிகை ரஞ்சிதாவும், நித்யானந்தாவும் படுக்கையில் புரளும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நித்யானந்தா சாமியார் மீது செக்ஸ் குற்றச்சாட்டுகளோடு, கொலை, நில அபகரிப்பு என பல்வேறு புகார் கள் கூறப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே தமிழகம் மற்றும் கர்நாடகாவில் நித்யானந்தாவின் ஆசிரமங்கள் பல்வேறு இடங்களில் அடித்து நொறுக்கப்பட்டன.
மலேசியாவில் உள்ள ஆசிரமத்துக்கும் இந்த புகார்கள் குறித்து விளக்கம் கேட்டு தினந்தோறும் ஏராளமான தொலைபேசி அழைப்புகள் வந்தவண்ணம் இருந்தன.
புகார்கள் குறித்து நித்யானந்தா தரப்பில் தெளிவான விளக்கம் அளிக்கப்படாத நிலையில், பக்தர்களின் கேள்விகளை இங்குள்ள ஆஸ்ரம நிர்வாகிகளால் சமாளிக்க முடியவில்லை.
இதனால், மலேசியாவில் உள்ள இந்து சங்கத்தின் அறிவுரைப்படி தற்காலிகமாக ஆஸ்ரமத்தை மூடுவதாக ஆசிரம செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.
நித்யானந்தருக்கு நான் செய்தது சேவை!- ரஞ்சிதா திடீர் பேட்டி
நித்யானந்தாவுக்கு நான் சேவைதான் செய்தேன். காலைப் பிடித்துவிடுவதும், மாத்திரை கொடுப்பதும், சாப்பிட உணவு கொடுப்பதும் தவறா.. அதில் ஏதேதோ சேர்த்து நீலப்படமாக்கிவிட்டார்கள்!, என்று ஆவேசப்பட்டுள்ளார் நடிகை ரஞ்சிதா.
நித்யானந்த சாமியாருடன் ரஞ்சிதா படுக்கையில் உருண்டு புரண்ட காட்சிகள் தொலைக்காட்சியில் வெளியாகி, போலிச் சாமியாரின் முகத்திரையை விலக்கிக் காட்டியது.
இந்த வீடியோ வெளியான கையோடு சாமியாரும் ரஞ்சிதாவும் தலைமறைவாகிவிட்டனர்.
கும்பமேளாவில் சாமியார் இருப்பதாக அவரது ஆசிரமத்தினர் கூறியுள்ளனர். வீடியோவில் சாமியாருடன் இருப்பவர் ரஞ்சிதாதான் என்றும் அவர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ரஞ்சிதா எங்கிருக்கிறார் என்று தெரியாமல் இருந்தது. இப்போது அவர் கேரளாவில் ரகசிய இடமொன்றில் தங்கியிருப்பது தெரிய வந்துள்ளது. அவர் செல்போன் மூலம் குமுதம் ரிப்போர்டர் இதழுக்கு பேட்டியளித்துள்ளார். அந்தப் பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
அந்த வீடியோவில் இருப்பது நீங்கள்தானே?
ஆமாம். நான்தான். ஆனால் அதை மிகைப்படுத்தி ஏதேதோ சேர்த்துள்ளனர். எனக்கு நித்யானந்தர் மீது மதிப்பும் மரியாதையும் உண்டு. அது ஊருக்கே தெரியும். அவரது கொள்கைகள், ஆன்மீக உரைகளால் கவரப்பட்டவள் நான். எனக்கு பல ஆண்டுகளாக இருந்த வீஸிங் தொல்லையை ஒரே நாளில் குணப்படுத்தியவர் அவர்... அன்று முதல் அவரது பக்தை ஆகிவிட்டேன்...
அந்த ஆபாச காட்சிகள்...
காலைப் பிடித்து விடுவதும் மாத்திரை கொடுப்பதும் உணவு தருவதும் ஒரு பணிவிடைதானே.. அத்துடன் ஏதேதோ சேர்த்து ஒரு நீலப்படம் அளவுக்கு கொண்டு வந்துவிட்டார்கள்.
சாமியாரை மிரட்டி பணம் பறிக்கத்தான் இப்படிச் செய்தீர்களாமே?
நான் நல்ல குடும்பத்தில் பிறந்தவள். பணத்துக்காக நானே இப்படியெல்லாம் படமெடுத்தேன் என்று மீடியா சொல்வதை என்னால் தாங்க முடியவில்லை. பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன. எந்த ஒரு பெண்ணாவது தன்னைத்தானே இப்படி எடுத்துக் கொள்வாளா?
உங்கள் கணவர் ராகேஷை ஏன் விவாகரத்து செய்தீர்கள்?
பத்திரிகை- டிவிக்களில்தான் இப்படி சொல்கிறார்கள். ஏன் இப்படி? எனக்கும் என் கணவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை.
நடந்த உண்மையை வெளிச்சத்துக்கு வந்து நீங்களே சொல்லலாமே?
அதான் இப்போது சொல்லிட்டேனே... நித்யானந்தா மகாஞானி. அடுத்த இரண்டு வாரங்களில் எல்லாவற்றையும் விவரமாகச் சொல்வார். தயவு செய்து மீடியாக்கள் என்னை மேலும் காயப்படுத்தாதீர்கள்..."
-இவ்வாறு கூறியுள்ளார் ரஞ்சிதா.
Thatstamil




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக