34 வருடங்களின் முன் மரணமடைந்த அகதா கிறிஸ்ரியின் தீவிர ரசிகையான பிரித்தானியாவைச் சேர்ந்த ஜெனிபர் கிரான்ட், ஏல விற்பனையொன்றில் மேற்படி பெட்டியை 100 ஸ்ரேலிங் பவுணுக்கு வாங்கினார்.
இந்த உலோகப் பெட்டி வழமைக்கு மாறாக அதிக பாரத்துடன் இருப்பது ஜெனிபருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.
எனினும் அவருக்கு அப்பெட்டியை திறப்பதற்கு பொருத்தமான திறப்பு ஒன்று இல்லாததால் அப்பெட்டியை கடந்த மூன்று வருடங்களாக அவர் திறக்காது வைத்திருந்தார்.
இந்நிலையில் கடந்த வாரம் அவர் தனது நண் பர் ஒருவரிடம் மேற்படி பெட்டியை திறக்க உதவுமாறு கோரியுள்ளார்.
அந்நண்பர் பெட்டியின் இரு பூட்டுக்களையும் திறக்கவும் உள்ளே அகதா கிறிஸ்ரியின் குடும்ப நகைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் 50 தங்க நாணயங்கள், அகதா கிறிஸ்ரியின் தாயாரின் வைரம் பதிக்கப் பட்ட திருமண நிச்சயதார்த்த மோதிரம் என் பன உள்ளடங்கலான பெறுமதி மிக்க பொருட்கள் இருந்தன.
மேற்படி உலோகப் பெட்டியில் அகதா கிறிஸ்ரியின் தாயாரான கிளாரா மார்க்ரெட் மிலரை குறிக்கும் வகையில் "சி.எம்.எம்.'என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்டன.
(மேற்குறிப்பிட்ட கதை நம்பக்கூடியதாக இல்லை)





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக