அறிகுறி
ஒருவருக்கு மஞ்சள் காமாலை' என்றால் வாந்தி, குமட்டல், பசியின்மை, உடல் சோர்வு, வயிற்றின் வலதுபக்க மேல்பாகத்தில் வலி, மூட்டுவலி, வயிறுவீக்கம், காய்ச்சல், இரத்தக் கசிவு என ஒன்பது விதமான அறிகுறிகள் காணப்படும். கண்ணின் வெள்ளைப்படலத்திலும், நாக்கின் அடிப்பகுதியிலும் மஞ்சளாக இருக்கும். உடலும் மெலிந்து காணப்படும்.
மஞ்சள் காமாலை என்பது அடைப்புக் காமாலை என்றும், அடைப்பில்லா காமாலை என்றும் இருவகைப்படும். அடைப்புக் காமாலையில் கணையக் கோளாறு, பித்தக் குழாய் கற்கள், பித்தக்குழாய் புற்றுநோய் என்ற மூன்று உட்பிரிவும், அடைப்பில்லா காமாலையில் வைரஸ் கிருமிகள் மதுபானம் பக்டீரியாக்கள் (தைபோய்ட் காய்ச்சல்), மலேரியா என்ற ஒட்டுண்ணிகள், மருந்துகள், மதுபானம் அருந்துவதால் ஏற்படுகிறது.
கொழுப்புச் சத்துள்ள உணவை நாம் உட்கொள்ளும்போது அதை ஜீரணிப்பதற்காக கல்லீரல் பித்தநீரை சுரக்கிறது. இந்த நீர் பித்தப்பைக்கு குழாய் மூலம் வருகிறது. இந்த பித்தக்குழாயில் கல் மற்றும் கேன்சர் கட்டி களாய் அடைப்பு ஏற்படலாம். அப்படி அடைப்பு ஏற்பட்டால் பித்தநீர் கல்லீரலிலேயே தேங்கி இரத்தத்தில் கலந்துவிடுகிறது. இதனால் மஞ்சள் காமாலை ஏற்படுகிறது. இது அடைப்பு காமாலை எனப்படுகிறது.
கல்லீரலை தாக்கும் என்ற பலவகையான வைரஸ்களாலும் மஞ்சள் காமாலை ஏற்படலாம். மலேரியாக் காய்ச்சல், தைபோயிட் காய்ச்சல் வந்தாலும் கல்லீரல் பாதிக்கப்பட்டு மஞ்சள் காமாலை வரலாம். மதுபானங்கள் அருந்துவதன் மூலமாகவும் மஞ்சள் காமாலை நேரிடலாம்.
மஞ்சள் காமாலை அறிகுறி மற்றும் சிகிச்சை முறைகள்
அடைப்புக் காமாலை, அடைப்பில்லாக் காமாலை ஆகிய இரண்டுக்கும் சிகிச்சை முறைகள் வேறுபடும். வயிற்றின் மேல்பாகத்தில் அதிக வலி, விஷக்காய்ச்சல் ஆகியன அடைப்பு காமாலைக்கான அறிகுறியாகும்.
இரத்தப்பசோதனை மற்றும் ஸ்கேன் மூலமாக இரண்டு காமாலைகளையும் வேறுபடுத்த முடியும். பொதுவாக மக்கள் பிலிரூபினின் அளவை மட்டும் இரத்தத்தில் பார்த்தால் போதுமானது என்று எண்ணுகிறார்கள். இது தவறானது. பிலிரூபின் அளவு மட்டுமின்றி கல்லீரலின் வேலை செய்யும் திறனையும் அறிய வேண்டும்.
அல்ட்ரா சவுண்டு ஸ்கேன் மூலமாக பித்தக் குழாயில் உள்ள கற்கள், கட்டிகள் போன்ற வற்றை துல்லியமாக கண்டறிந்து சிகிச்சை யளிக்க முடியும். எந்தவகை மஞ்சள் காமாலை என்பதை அறியாமல் கீழ்க்காய்நெல்லி போன்ற மருந்துகளை சுயமாகச் சாப்பிட்டுவிட்டு நோய் முற்றிய நிலையில் மருத்துவமனைக்கு வருவதால்தான் சிகிச்சை பலனில்லாமல் போகிறது.
எண்டோஸ்கோப் மூலமாகவோ அல்லது அறுவை சிகிச்சை மூலமாகவோ அடைப்புக் காமாலையை குணப்படுத்த வாய்ப்பிருக்கிறது. பித்தக்குழாய் கற்களால் ஏற்படும் காமாலையை சரிசெய்ய முன்பு அறுவை சிகிச்சை தேவைப்பட்டது. ஆனால் இன்றைய அதிநவீன விஞ்ஞான வளர்ச்சியில் எண் டோஸ்கோப் மூலம் என்ற அதிநவீன சிகிச்சை முறையால் கல்லை ஆபரேஷன் செய்யாமலேயே வெளியே எடுத்துவிடலாம்.
புற்றுநோயினால் பித்தக்குழாயில் அடைப்பு ஏற்பட்டால் ஸ்டென்ட்' எனும் செயற்கைக் குழாயை எண்டோஸ்கோப் மூலம் பித்தக் குழாயின் உள்ளே பொருத்தி குழாய் சுருக் கத்தை நீக்கி மஞ்சள் காமாலையை குறைக் கலாம்.
சிகிச்சை முறைகள் கல்லீரல் சுருக்க நோயினால் உணவுக்குழாயில் உள்ள இரத்தக்குழாய்களில் இரத்தக்கசிவு ஏற்பட்டு, ஆபத்தான நிலை உருவாகலாம். சில ஆண்டுகளுக்கு முன்பு இரத்தவாந்திக்கு வயிற்றில் அறுவை சிகிச்சை செய்து சிகிச்சை அளிக்க வேண்டியதிருந்தது. இதனால் உய ருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்புகளும் மிகுதியாக இருந்தன. ஆனால் தற்போதைய மருத்துவ வளர்ச்சியினால் எண்டோஸ்கோப் மூலம் இரத்த வாந்தியை தடுக்க பேண்டிங்க்ளு இன்ஜெக்ஷன் போன்ற நவீன சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. ஆஸ்பின் போன்ற தலைவலி மாத்திரைகளை அடிக்கடி உட்கொள் வதாலும் இரத்தவாந்தி ஏற்படலாம். அவற்றையும் எண்டோஸ்கோப்பி மூலம் குணப்படுத்த முடியும்.
எப்படி பரவுகிறது?
வைரஸ் மற்றும் கிருமிகளால் ஏற்படும் மஞ்சள் காமாலை, அசுத்தமான நீரையும், ஈ மொய்த்த தின்பண்டங்களை உட்கொள்வதால் பரவுகிறது. சாக்கடை நீர் கலந்த குடிநீர் மற்றும் அசுத்தமான நீரை குடிப்பவர்களுக்கும் இந்த ஆபத்து ஏற்படும்.
வைரஸ் மற்றும் வகை கிருமிகள் ஒரு நபடமிருந்து மற்றொருவருக்கு எப்படி பரவுகிறது என்பதை பார்ப்போம்.
1. பலறை, பலருக்கு பயன்படுத்திய ஊசியை உபயோகப்படுத்தும் போது,
2.நோயால் பாதிக்கப்பட்ட இரத்தம் கொண்ட தாயிடமிருந்து குழந்தைக்கும், நோயால் பாதிக்கப்பட்டவன் இரத்தம் கொண்ட வருடன் உடலுறவு கொள்பவருக்கும், போதை ஊசி போட்டுக்கொள்பவர்களுக்கு மேற்கண்ட விபரீதங்கள் நேரிடலாம். இதில் B' வைரஸ் மிகவும் அபாயகரமானது. ஹெபடைட்டிஸ் B' ஒரு உயிர்க்கொல்லியாகும். இது கல்லீரல் சுருக்க நோய்களின் அறிகுறிகளை ஏற்படுத்தும். இந்நோய் முற்றினால் பசியின்மை, கால்வீக்கம், வயிறு வீக்கம் போன்றவையும் ஏற்படும். முற்றிய நிலையில் இரத்தவாந்தி, புற்றுநோயும் வரும்.
தடுப்பு நடவடிக்கை மஞ்சள் காமாலை உள்ளவர்களுக்கு உணவுக் கட்டுப்பாடு அவசியமான ஒன்று. ஆனால் எந்தவகையான மஞ்சள் காமாலை ஏற்பட்டுள்ளது? கல்லீரல் வியாதி எந்த நிலையில் இருக்கிறது? என்பதை அறிந்த பின்னரே தகுந்த உணவு முறையை பின்பற்ற வேண்டும்.
ஹெபடைட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்ட வர்கள் மாச்சத்துக்கள் அதிகமாக உள்ள பொருட்களையும், புரதச்சத்து மற்றும் கொழுப் புச்சத்து குறைந்த உணவையும் உட்கொள்ளுங்கள். மாமிச உணவு வகைகளை முற்றிலும் தவிர்ப்பது மிகவும் நல்லது. உப்பு, காரம் வகைகளை அளவோடு சேர்த்துக்கொள்ளுங்கள். பச்சைக்காய்கறிகள் மற்றும் கீரைகளை அதிகமாக சாப்பிடலாம். ஹெபடைட்டிஸ் A மற்றும் B தடுப்பூசி மூலம் விரட்டியடிக்கலாம்.
B' க்கு தடுப்பு ஊசி போடுவதன் மூலம் D' வைரஸும் நம்மை அண்டாது. ஆனால் C மற்றும் E தடுப்பு ஊசியே கிடையாது.
B' வைரஸ் தாக்கியிருந்தால் ஒன்றுதல் 6 மாதங்கள் வரை மூன்று ஊசி போட்டுக் கொள்ள வேண்டும்.
A' வைரஸ் என்றால் 6 மாதங்கள் என்ற முறையில் ஊசிப் போட்டுக்கொள்ள வேண் டும்.
உரிய இடைவெளியில் தடுப்பூசி போடவில்லை என்றால் உரிய பயன் கிடைக்காது.
வரும் முன் காப்போம்
மஞ்சள் காமாலையை அறவே தடுப்பது அவசியமானதாகும். அதற்கு நன்கு காய்ச்சி, வடிகட்டிய நீரை பருகுங்கள். வெளியூர் மற்றும் உள்ளூர் பயணங்களிலும் காய்ச்சிய நீரையே பருகுங்கள். வீதியோரங்களில் விற்கும் கண்ட தின்பண்டங்களையும், ஈமொய்க்கும் பண்டங்களையும் கண்டு விலகி ஓடுங்கள்.
நகங்களை, கைகளை நன்கு சுத்தமாக வைத்திருங்கள். மலம் கழிந்த பின்னர் கைகளை நன்றாக சுத்தம் செய்யுங்கள். பச்சைக்காய் கறிகளை முறையில் உட்கொள்வது இன்றைய பேஷனாக உள்ளது. அந்த காய்கறிகள் நன்கு சுத்தப்படுத்தப்பட்டுள்ளதா? என்பதையும் அறிந்துகொள்வது நல்லது. மேற்கண்ட வழிறைகளை பின்பற்றுங்கள். மஞ்சள் காமாலை நோய் உங்களை கண்டு விலகி ஓடலாம்.




































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக