வெள்ளி, 16 ஏப்ரல், 2010

பிறழ்ந்த பழமொழிகள்

பந்திக்கு முந்தணும்! படைக்கு பிந்தணும்!!

பந்தினா, ஒன்று கூடல். அது ஊர்க் கூட்டமாவும் இருக்கலாம். போருக்கான ஆயத்தக் கூட்டமாவும் இருக்கலாம். சமபந்தினா, எல்லாரும் ஒரே அணியா ஏற்றத்தாழ்வு இல்லாம கூடுறது. அப்படிப்பட்ட ஒன்றுகூடல் எதுவானாலும் உடனடியா போகணும்.

படை அப்படீன்னா படைப்பது. படைப்பாளி, படையல், படையப்பன் இதெல்லாம் 'படை'யிலிருந்து வந்த சொற்கள். ஆக, குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் வழி விட்டு, படையலுக்கு பிந்தணும். இதுதான் இந்த பழமொழியோட சாராம்சம். அது மருவி, நேர் எதிர் அர்த்தம் தர்ற மாதிரி நாம பாவிக்க கூடாது.

வீட்டுக்கு வீடு வாசப்படி

'மேன்மையான வாழ்க்கை'ங்ற வீட்டுக்கு 'ஆன்மீகம்'ங்ற வீடு வாசற்ப்படி. அடுத்த வீட்டு பிரச்சினைகள் மாதிரி தான் நம்ம வீட்டு பிரச்சினைகளும்னு அர்த்தம் இல்லை.

கல்லைக் கண்டா, நாயைக் காணோம்! நாயைக் கண்டா, கல்லைக் காணோம்!!

செதுக்கி வச்சிருக்கும் நாய் போன்ற சிலையை, கலை கண்ணோட்டத்துல பாத்தா,நாய் தோற்றம் தெரியும்.கல்லா நினைச்சுப்பாத்தா நாய் தெரியாது. அதான்,'கல்லைக் கண்டா நாயைக் காணோம்.நாயைக் கண்டா கல்லைக் காணோம்'ங்றது. தெருவில் இருக்கிற நாயையும் கல்லையும் இணைச்சி அர்த்தம் கொள்ளக்கூடாது நாம. இதையே தான் திருமூலர் சொல்கிறார்:

மரத்தில் மறைந்தது மாமதயானை; மரத்தை
மறைத்தது மாமதயானை!


மரத்தை கண் கொண்டு பார்த்தால், யானை தெரியாது. யானையை மனதில் இருத்தி பார்த்தால்,யானையின் பின் இருக்கும் பெரிய மரம் தெரியாது.

பெண் புத்தி, பின் புத்தி

சலிப்பின் காரணமாகவும் அலுப்பு காரணமாகவும் பெண்களை வசை பாடுறதுக்குன்னே சிலர் இந்த பழமொழிய பயன்படுத்துவாங்க. ஆனா, பொருள் அதுவல்ல. பாட்டி, தாய், அக்கா, தங்கை, மனையாள்னு எல்லாருமே பின் வருவன அறிந்து செயல்படும் ஆற்றல் இருப்பதால், ஒட்டுமொத்த பெண் குலத்தின் புத்தியும் பின் வருவன தெரியும் புத்தி உடையவர்கள் என்றார்கள் தமிழ்ச்சான்றோர்.

பசிக்கு பனங்காயத் தின்னு

பசி எடுத்தால் பனங்காய தின்னுவது என்பது மட்டும் பொருள் அல்ல. பசி எடுத்தால் பனங்காயை வேண்டுமானாலும் தின்னலாம், ஆனால் யாசித்துச் சாப்பிடுவது சுயமரியாதைக்கு இழுக்கு.


புண்பட்ட மனத்தை, புக விட்டு ஆத்து

'ஏண்டா பீடி சிகரெட் குடிச்சே சாவறே'னு கேட்டா, நம்மாளு சொல்லுவான், 'வள்ளுவர் என்னா சொல்லி இருக்கார்? புண்பட்ட மனத்தை, புக விட்டு ஆத்துனு சொல்லி இருக்காருல்லே? அதான்'. நாம புகைப் பிடிக்கிறதுக்கு இந்த பழமொழி தானா கிடைச்சுது? ஆனா, விசயம் அதுவல்ல. புண்பட்ட தன் மனத்தை பிடித்த வேறொன்றில் புக விட்டு ஆற்றிக்கொள் என்பது அர்த்தம்.


விருந்தும் மருந்தும் மூணு நாள்

வழக்கத்தில சொல்லுறது பெரும்பாலும் என்னன்னா,
உபசரிப்பு குறுகிய காலத்துக்குதான்னு. அத சுட்டி
காட்டுறதுக்கு இத சொல்லுவாங்க. ஆனா, இந்த பழமொழி
என்ன சொல்லுதுன்னு பாத்தீங்கன்னா,குளிர்ந்த நாட்களான
திங்கள், புதன் மற்றும் வெள்ளிக் கிழமைகள் விருந்து
படைப்பதற்கும், ஞாயிறு செவ்வாய் வியாழன் ஆகிய
வெப்ப நாட்கள் மருந்து உட்கொள்வதற்கும் சரியான நாட்கள்.
அந்த நாட்களில உணவைக் கொறச்சி கூட சாப்பிடலாம்.
அதான் இந்த மூணு நாட்கள விரதம் இருக்க
தேர்ந்தெடுப்பாங்க. அது போக,சனிக்கிழமைய நீராடுவதற்கு
தலைக்கு எண்ணை வெச்சு). தேர்ந்தெடுத்தாங்க. அதான்
விருந்து மூணு நாள்,மருந்து மூணு நாள்!!!

இடத்தக் குடுத்தா, மடத்தப் புடுங்குவான்

ஒரு ஆள இருக்கவிட்டா, நம்ம கிட்ட இருக்குறத புடுங்கிகிட்டு போய்டுவாங்கங்ற அர்த்தத்தில இந்த பழமொழிய பாவிப்பாங்க. ஆனா, பழமொழி சொல்லுது பாருங்க "அறிவூட்டுற 'குரு'க்கு நம்ம மனசுல இடத்தக் குடுத்தா, மடமைங்ற அறிவின்மைய அவர் பிடுங்கிவிடுவாரு"ன்னு.

பூராடத்தாள் கழுத்துல நூல் ஆடாது!

எந்த சோதிடத்துலயும், பெரும்பாலான சனங்க நினைக்கிற மாதிரி, 'பூராட நட்சத்திர பெண்களுக்கு மாங்கல்ய பாக்கியம் நெலைக்காது'னு சொல்லலையாம். மாறா, நேர் எதிரா சொல்லி இருக்காங்களாம். ஆமாங்க, பூராட நட்சத்திர பொம்பளைக கழுத்துல இருக்குற தாலி ஆட்டம் காணாதுங்றதுதான் 'இந்த பூராடத்தாள் கழுத்துல நூல் ஆடாது'ன்னு சொல்லுறது.

அடி ஒதவுற மாதிரி, அண்ணன் தம்பி ஒதவ மாட்டாங்க!

அடின்னா கை காலால எத்துறது இல்லைங்க. அவங்க போற அடிய( வழியை)தொடர்ந்து போய் வாழ்க்கைல முன்னேறுறதக் காட்டிலும் அண்ணன் தம்பி ஒதவி செய்யுறதுல சிறப்பு, பலன் குறைவு தான். அதுதான், 'அடி ஒதவுற மாதிரி அண்ணன் தம்பி ஒதவ மாட்டாங்க'.

களவும் கற்று, மற!

ஏங்க, 'கடினப்பட்டு வித்தையக் கத்து, அப்புறம் மறந்துரு'ன்னு யாராவது சொல்லுவாங்களா? அது அப்படி இல்லீங்க. களவும் கத்தும் அற! களவாடுறதும் கத்துவதும்(மத்தவங்களை ஏசுறதும் புறம் பேசுறதும்) விட்டொழி (அற).
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல