குறிப்பாக ஆழிப் பேரலை நிவாரண நிதி கோரி வெளிநாடுகளுக்கு பயணித்து இருந்த புலி முக்கியஸ்தர்கள் ஆறு பேருடன் இவரும் கூடவே சென்றிருக்கின்றமை அம்பலம் ஆகி உள்ளது. கனேடிய அதிகாரிகள் இது குறித்து இவர் மீது நேற்று விசாரணை நடத்தினர்.
இவர் புலிப் பிரமுகர்களுடன் வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருந்தமையை ஆரம்பத்தில் மறுத்து விட்டார். ஆயினும் அதிகாரிகள் ஆதாரபூர்வமாக நிரூபித்தமையை அடுத்து ஒப்புக் கொண்டார்.
இருப்பினும் சுதந்திர ஊடகவியலாளராகவே அப்பயணத்தில் ஈடுபட்டிருந்தார் என்றும் அதற்காக அவர் புலிகளின் உயர் மட்டக் குழுவைச் சேர்ந்தவர் அல்லர் என்றும் குறிப்பிட்டிருக்கின்றார். இவரை பாதுகாப்புக் காரணங்களுக்காகத் தொடர்ந்தும் தடுத்து வைக்க கனடா தீர்மானித்துள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக