முப்பது வயதிற்கு மேற்பட்ட பெண்மணி ஒருவருக்கு இதயப்பாதிப்பு இருக்கிறது. இவர் தாய்மைப்பேறு அடைய விரும்புகிறார். ஆனால் மருத்துவர்கள் பிரசவத்தின் போது உயிருக்கு ஆபத்து ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக எச்சக்கிறார்கள். அப்பெண்மணிக்கு எம்மாதிரியான ஆலோசனையை வழங்குகிறீர்கள்?
பொதுவாக, திருமணமான பெண்களுக்கு, இதயம் தொடர்பாக ஏதேனும் பாதிப்புகள் இருந்தால், அவர்களை தாய்மைப்பேறு அடையவேண்டாம் என்று தான் எச்சரிக்கிறோம். ஏனெனில், இத்தகைய பெண்களுக்கு, பிரசவ தருணத்தின்போது உயிழப்பு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறு அதிகம். இருப்பினும், இதயப் பாதிப்பை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். ஒன்று, இதயத்திற்கு இரத்தத்தை எடுத்துச்செல்லும் இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு. மற்றொன்று இதயத்தில் இருக்கும் நான்கு வால்வுகளின் செயற்பாடுகளில் ஏற்படும் மாற்றங்கள்.
அதாவது, சிறிய வயதில் ருமாடி டிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, முறையான சிகிச்சையை மேற்கொள்ளாமல் விட்டவர்களுக்கு, இதயத்தில் உள்ள நான்கு வால்வுகளிலோ அல்லது ஏதேனும் ஒன்றிலோ அதன் வளர்ச்சி இயல்பாக நடைபெறாமல் போய்விடும். இதனை உரிய தருணத்தில் கண்டறியாமல் இருந்தால், பிரவசநேரத்தின்போது, தாய்மார்களுக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு, தாயும் சேயும் சேர்ந்தே கூட மரணமடைய வாய்ப்பு உண்டு. இதே தருணத்தில் இதய வால்வுகள் சரியான முறையில் வளர்ச்சியடையாமல் சுருங்கி இருந்து, அதனை, தாய் கருவை சுமக்க ஆரம்பித்த பதினாறு வாரங்களுக்குள் கண்டறிந்தால், அந்தக் குழந்தையை சத்திர சிகிச்சை மூலம் அகற்றி, தாயின் உயிரைக் காப்பாற்றுகிறோம்.
ஆனால் கரு பதினாறு வாரங்களைக் கடந்து விட்டால், அவர்களை அதியுயர் தொடர் கண்காணிப்பில் வைத்து, பிரசவத்தை மேற்கொள்கிறோம். இதற்கு, அவர்கள் அனுமதிக்கப்பட்டிருக்கும் மருத்துவமனை சகல நவீன தொழில்நுட்ப வசதியுடன், அனுபவம்வாய்ந்த மருத்துவ நிபுணர்களையும் தன்னகத்தே கொண்டிருக்கவேண்டும்.
ஏனெனில், அத்தகைய தருணங்களில் மகப்பேறு நிபுணர்களுடன் கலந்தாலோசித்து, இதய சத்திர சிகிச்சை நிபுணர்கள், தாயின் இதயத்தில் சுருங்கியி ருக்கும் இதய வால்வை, பலூன் போன்ற ஒரு முறை மூலம் (B T M C ) தற்காலிகமாக செயல்பட வைத்து, பிரசவத்தை மேற்கொள்ளச் செய்யவேண்டியிருக்கும். எனவே, கரு உண்டான உடன் முழுமையான பரிசோதனையைச் செய்துகொள்ளவேண்டும் என்று பரிந்துரைக்கிறோம்.
எத்தகைய நிலையில் உள்ளவர்களுக்கு E E C P என்ற சிகிச்சை முறை பயன்படும்?
பைபாஸ் சர்ஜரி செய்யமுடியாதவர்களுக்கும், பைபாஸ் சர்ஜரி ஒத்துக்கொள்ளாதவர்களுக்கும், பைபாஸ் செய்தும் அடைப்பு உள்ளவர்களுக்கும் செய்யப்படும் சிகிச்சையே இது. இம்றையில் இரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை, மற்றொரு குழாய் முலம் ஒரு மருந்தினை வேகமாகச் செலுத்தி, அடைப்பை அகற்றுவார்கள்.
இந்த சிகிச்சையின் வெற்றி வீதம் குறித்து உறுதியாகச் சொல்ல இயலாது. இருப்பினும் இந்த சிகிச்சையின் மூலம் சிறந்த நிவாரணத்தைப் பெற இயலும்.
பேஸ்மெக்கர் பொருத்தப்படும் நபர்களின் வாழ்க்கை நடைமுறையை மாற்றியமைத்துக்கொள்ள வலியுறுத்தப்படுவது ஏன்?
இதயக்கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களை மீண்டும் இயல்புநிலைக்கு கொண்டு வருவதற்காகத்தான் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் பேஸ்மேக்கர் கருவி பொருத்திக் கொண்டவர்கள், ஓட்டப்பயிற்சி கூட எடுத்துக்கொள்ளலாம். அந்தவகையில் நவீன பேஸ்மேக்கர் கருவி தயாரிக்கப்பட்டு, பொருத்தப்படுகிறது. எனவே இந்தக் கருவியால் இயல்பான வாழ்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்பட வாய்ப்பில்லை. இருப்பினும் அதிக அழுத்தள்ள மின்மாற்றிகள் (440 வோல்ட் ட்ரான்ஸ்ஃபோர்மர்) இருக்கு மிடத்திலும், விமானநிலையங்களில் சக்தி வாய்ந்த இலத்திரனியல் பரிசோதனைச் சாவடிகளிலும் சற்று எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.
மாரடைப்பை முன்கூட்டியே தெந்து கொள்ள இயலுமா? அதற்கு எத்தகைய பசோதனையைச் செய்துகொள்ளவேண்டும்?
ஒரு ஆண்டிற்கு முன்னாலோ அல்லது ஒரு மாதத்திற்கு முன்னாலோ அதற்கான அறிகுறி தெயவரும். நிச்சயமாக அதற்கான . சாப்பிட்டவுடன் இதயத்தில் சிறிய அளவில் வலி ஏற்படுவதாக உணர்ந்தால் அது அல்ஸர் எனப்படும் குடற்புண்ணிற்கான அறிகுறி.
அதே தருணத்தில் சாப்பிட்டு முப்பது நிமிடம் கழித்து இதயத்தில் வலி ஏற்பட்டால் அது மாரடைப்பு ஏற்படுவதற்கான அறிகுறி.
நடக்கும்போதோ அல்லது மாடிப்படி ஏறும் போதோ அல்லது எடையைத் தூக்கும்போதோ நெஞ்சில்வலி ஏற்பட்டால் அது நெஞ்சுவலி தான் என்பதையும், மாரடைப்பு வருவதற்கான அறிகுறி என்பதையும் உணருங்கள். ஒரு சிலருக்கு இடதுபக்க கை, தாடை, பல் போன்ற பகுதிகளில் வலி ஏற்பட்டால் கூட அது மாரடைப்பிற்கான அறிகுறியாகவே எடுத்துக்கொண்டு, உரிய சிகிச்சையை மேற்கொள்ளவேண்டும்.
நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இவ்வகையான அறிகுறிகள் தெரிவதில் சிக்கல்கள் இருப்பதால், அவர்கள் மட்டும் ஆண்டுதோறும் தவறாமல் ட்ரெட் மில் பரிசோதனையைச் செய்து, மாரடைப்புக்கான வாய்ப்பு இருக்கிறதா? என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.
மாரடைப்பு வந்தபின் அதனை குணப்படுத்தி, இயங்க வைத்தாலும், அவை முன்பு போல் செயல்படுவதில்லை என்பதை உணர்ந்து, அறிகுறிகள் தெரிந்தவுடன் அதற்கான பரிசோதனைகளைச் செய்து, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பதே நன்று.
முதுமையடையும்போது கண்கள்பாதிக்கப்படுவது போல், இதயம் முதுமையால் பாதிக்கப்படுமா?
முதுமையின் காரணமாக இதயத் தில் உள்ள வால்வுகள் தளர்ச்சியடையும். ஏனெனில் உடலில் சேரும் சுண்ணாம்புச் சத்து இதயத்தில் உள்ள வால் வுகளின் சுவர்களில் ஒட்டிக்கொண்டு அதன் வேகமான இயங்கு தன்மையைப் பாதிக்கிறது. இம்மாதியான தருணங்களில் மருத்துவர்களைக் கலந்தோசித் தால், அவர்களின் பரிந்துரையின் பேரில் மருந்து, மாத்திரைகளை முறையாக எடுத்துக்கொண்டால், இதய வால்வுப் பகுதியில் சுண்ணாம்பு ஒட்டுவதைக் குறைக்க இயலும்.
றேடியல் அஞ்சியோகிறாம் என்ற சிகிச்சையின் சிறப்பம்சம் என்ன?
எளிமையானது. பாதுகாப்பானது. குறைவான கால அவகாச சிகிச்சையைக் கொண்டது. துல்லியமானது. பயம் கிடையாது. இதயத்தில் உள்ள குறைபாடுகளை உடனடியாகக் கண்டறியலாம்.
இதய நோய் சிகிச்சை நிபுணர் டொக்டர். பி.மதன்மோகன்
சந்திப்பு.புகழ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக