சனி, 1 ஜனவரி, 2011

300 விதமான அரிசி ரகங்களை உருவாக்கிய குர்தேவ்

உலக அளவில் 300 விதமான அரிசி ரகங்களை உருவாக்கி சாதனை படைத்தவர் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்தேவ் சிங்குஷ் என்ற விவசாய விஞ்ஞானி. குறுகிய காலத்தில் அதிக மகசூல் அளிக்கு நெல் பயிர்களை கண்டுபிடித்ததற்காக, ஜப்பான் நாட்டின் உயரிய விருது 2000ல் வழங்கப்பட்டது.

உலகத்தில் பஞ்சம் ஏற்படாமல் பசுமை புரட்சிக்கு வித்திட்ட இந்த விஞ்ஞானியின் சாதனையைப் பாராட்டி, இஸ்ரேல் நாடும் இவருக்கு விருது வழங்கி பாராட்டியுள்ளது.

பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், விவசாய குடும்பத்தில் பிறந்த குர்தேவ் சிங், இளம் பருவத்தில் தனது தந்தைக்கு உதவியாக விவசாய வேலைகளை செய்து வந்தார். கோதுமை விதைகளை விதைப்பது, நிலத்தை உழுவது, அறுவடை செய்வது போன்றவற்றில் ஈடுபட்டதால், இவருக்கு விவசாயத்தை பற்றிய அடிப்படை அறிவு அதிகமாக இருந்தது.

படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்தார் உயர்நிலைப் பள்ளியில் இவர் அதிக மதிப்பெண் பெற்றதால், பல்கலைக்கழக படிப்பிலும் சிறந்து விளங்கினார். பஞ்சாப் விவசாய பல்கலைக் கழகத்தில் படித்த போது அதிக மதிப்பெண் பெறுவதில் முதல் மூன்று மாணவர்களில் ஒருவராக திகழ்ந்தார்.

கடந்த 55ல் பட்டப்படிப்பை முடித்தார். மேற்படிப்பு படிக்க வாய்ப்பு இருந்ததால், உறவினர்களிடம் கடன் வாங்கி பிரித்தானியாவிற்கு படிக்க சென்றார். பிரித்தானியாவில் உள்ள கரும்பாலையில் 18 மாதங்கள் வேலைபார்த்து, கணிசமான பணத்தை சேர்த்தார். இந்த பணத்தைக் கொண்டு அமெரிக்கா சென்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்றார்.

ஆராய்ச்சி படிப்பை முடித்த பின், தாயகம் திரும்பிய குர்தேவ் சிங், ஹர்வந்த்கவுர் என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு நான்கு குழந்தைகள் பிறந்தன. கடந்த 67ல் பிலிப்பைன்சில் உள்ள சர்வதேச அரிசி ஆராய்ச்சி மையத்தில் குர்தேவ் சிங் சேர்ந்தார். ஏராளமான அரிசிரகங்களை உருவாக்கி பல நாடுகளில் பஞ்சம் ஏற்படாமல் காப்பாற்றினார்.

ஒரு ஹெக்டயருக்கு ஒன்று முதல் இரண்டு தொன் தானிய உற்பத்தி என்றிருந்ததை மாற்றி, குட்டை ரக பயிர்களை உருவாக்கி ஹெக்டயருக்கு 10 தொன் தானிய உற்பத்தியை உருவாக்கி காட்டினார். அரிசி உற்பத்தி செய்யும் 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று உற்பத்தி ஆலோசனைகளை வழங்கினார். ஆராய்ச்சி மாணவர்களுக்காக பாடம் நடத்தினார்.

ஜப்பான், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகள் வழங்கிய விருதுகள் மூலம் இவருக்கு மூன்றரைக் கோடி ரூபாய் கிடைத்தது. இதை தங்கள் வசதிக்காக பயன்படுத்த வேண்டாம் என கூறி, இவரது மனைவி ஹர்வந்த் கவுர், இந்த பணத்தை பஞ்சாப் விவசாய பல்கலைக்கழகத்துக்கு அளிக்க உதவினார்.
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல