பொலிவிழந்த சருமம்: சரும வறட்சி மற்றும் சரும சுருக்கத்தால் அவஸ்தைப்படுகிறீர்களா? முகப்பரு முகத்தின் அழகைக் கெடுக்கிறதா? இதனால் இதனைப் போக்குவதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டுள்ளீர்களா? அதிலும் இயற்கை பொருட்களைக் கொண்டு முயற்சிக்காமல், கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த அழகுப் பொருட்களைப் பயன்படுத்துகிறீர்களா? இப்படி கெமிக்கல் பொருட்களை முயற்சித்து சரும பிரச்சினைகள் நீங்கவில்லை என்று கவ.ைலப்பட்டால் எப்படி? ஆம், எவ்வளவு தான் கெமிக்கல் கலந்து அழகுப் பொருட்கள் சரும பிரச்சினைகளை உடனே போக்கினாலும், அவை தற்காலிகமாகத் தான் இருக்கும். எப்படியெனில், சரும பிரச்சினைகளைப் போக்குவதற்கு தினமும் பயன்படுத்தும் அழகு பொருட்களை ஒருநாள் பயன் படுத்தத் தவறினாலும் சரும பிரச்சினைகள் மீண்டும் தொடங்கும்.
எனவே இத்தகைய பிரச்சினைகளைப் போக்குவதற்கு இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நீக்குவதற்கு போராடினால், நிச்சயம் சரும பிரச்சினைகள் நீங்குவதோடு, சருமத்தின் அழகும் அதிகரித்து, சருமம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும். அதற்கு எந்த பொருட்களை, எப்படி பயன்படுத்த வேண்டுமென்று தெரியாமல் முழிக்கிறீர்களா? அத்தகையவர்கள் இதைப் படித்து முயற்சித்து அழகாக மின்னுங்கள்...
புதினா: புதினாவை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும். அதற்கு புதினா சாற்றை சருமத்தில் தேய்த்து,சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் அழற்சி இருந்தாலும் அவை அனைத்தும் குணமாகிவிடும்.
தண்ணீர் :சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில்,முதலில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஏனெனில் உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டாலும் சரும வறட்சி ஏற்படும்.
பப்பாளி :விற்றமின் சி அதிகம் நிறைந்த பப்பாளியை அரைத்து சருமத்தில் தடவினாலோ அல்லது அதனை சாப்பிட்டாலும், சருமம் மின்னும். ஏனெனில் அதில் உள்ள பாப்பைன் என்னும் நொதியானது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பழுதடைந்த செல்களை புதுப்பிக்கும்.
மஞ்சள் தூள் : பெண்களின் பாரம்பரிய அழகுப் பொருளான மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்து கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டால்,சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கி சருமம் வெள்ளையாகும்.
வால்நட்ஸ்: மூக்கு மற்றும் தாடையைச் சுற்றியிருக்கும் இறந்த செல்களை போக்குவதற்கு, வால்நட்ஸை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் அழுக்கின்றி சுத்தமாக இருக்கும்.
அரிசி மா : சரும சுருக்கங்களைப் போக்குவதற்கு, அரிசி மாவில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி, முகத்திற்கு மாஸ்க் போட்டு, உலர விட்டு, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
வேப்பிலை: பிம்பிள் மற்றும் முகப்பருக்கள் உள்ளவர்கள், அதனைப் போக்குவதற்கு, வேப்பிலையில் தயிர் ஊற்றி நன்கு அரைத்து, சருமத்திற்கு தடவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வருவது மிகவும் நல்லது.
தேங்காய்த் தண்ணீர்: தேங்காய் நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால்,சருமத்தில் உள்ள தழும்புகள் மறைய ஆரம்பிக்கும். அதிலும் அம்மையால் ஏற்படும் தழும்புகள் அல்லது பிம்பிள் தழும்புகள் போன்ற எவையானாலும்,தேங்காய் தண்ணீர் கொண்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
வெள்ளரிக்காய்: தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், சரும வறட்சி நீங்குவதோடு, பிம்பிள் வருவதைத் தவிர்க்கலாம். இல்லாவிட்டால், வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, மாஸ்க் போடலாம்.
எலுமிச்சை :சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது எலுமிச்சையை பயன்படுத்துவது தான். மேலும் எலுமிச்சை சருமத்தின் கருமையைப் போக்கவல்லது. எனவே இரவில் படுக்கும் முன், எலுமிச்சை சாற்றை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவி, பின் ஏதேனும் ஒரு எண்ணெயால் சருமத்தை மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
வெந்தயம்: வெந்தயம் கூந்தல் பிரச்சினைகளை மட்டுமின்றி, சரும பிரச்சினைகளையும் போக்க வல்லது. அதிலும் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மாஸ்க் போட்டால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
ஷாம்பெயின் : ஷாம்பெயின் பானத்தைக் கொண்டும்,சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் சீக்கிரம் அழகான சருமத்தைப் பெற வேண்டுமெனில், இந்த முறையைப் பயன்படுத்தலாம். அதற்கு ஷாம்பெயின் பானத்தை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
கடலை மா: எப்படி அரிசி மாவு சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவியாக உள்ளதோ, அதை விட மிகவும் சிறந்த அழகு பராமரிப்பு பொருள் தான் கடலை மா அதற்கு கடலை மாவை,ரோஸ் வோட்டரில் கலந்து வாரத்திற்கு இரண்டு முறை கழுத்து மற்றும் முகத்திற்கு தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை எளிதில் நீங்கிவிடும்.
பாதாம்: பாதாமை அரைத்து பொடி செய்து,அதில் சிறிது பாதாம் எண்ணெய் ஊற்றி, சருமத்திற்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து சாதாரணமாக குளிர்ந்த நீரில் மட்டும் கழுவி, பின் ெகாட்டன் கொண்டு முகத்தை துடைத்தால், முகம் பொலிவோடு காணப்படும்.
பூண்டு: பூண்டில் அன்டி-பக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், அதனை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவினால், சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
தேன்: சருமத்தில் உள்ள பிம்பிளை எளிதில் போக்க வேண்டுமெனில், தேனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
கற்றாழை: கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமம் மென்மையாவதோடு, சருமத்தில் உள்ள தழும்புகள் நீங்கி, சருமம் அழகாக இருக்கும்.
தக்காளிச் சாறு: காய்கறிகளில் ஒன்றான தக்காளியும் சரும பிரச்சினைகளைப் போக்கக் கூடியது. அதற்கு முதலில் செய்ய வேண்டியதெல்லாம், தக்காளி சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
தயிர்: சரும வறட்சியை நீக்க ஒரு சிறந்த முறையென்றால், தயிரை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், அதன் பலன் நன்கு புலப்படும்.
அஸ்பிரின் :அஸ்பிரின் மாத்திரையும் சரும பிரச்சினைகளைப் போக்க வல்லது. அதிலும் அந்த மாத்திரையை பொடி செய்து, தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்தால், வெள்ளைப் புள்ளிகள் மற்றும் இறந்த செல்கள் எளிதில் நீங்கிவிடும்.
சருமப்பொலிவுக்கு கை கொடுக்கும் ரெட் வைன்…
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பானங்களில் ரெட் வைனும் ஒன்று என்று தெரியும். மேலும் ஆய்வு ஒன்றிலும் ரெட் ைவயின் சாப்பிட்டால், இதய நோய் வருவதைத் தவிர்க்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ரெட் ைவயினை அளவாக சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாகவும், அதுவே அளவுக்கு மீறினால், மோசமான விளைவையும் சந்திக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல், அக்காலத்தில் எல்லாம் ரெட் ைவன் ஒரு மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால் தான் இன்றும் ப்ரெஞ்ச் மக்கள், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, தினமும் அளவான அளவில் ரெட் ைவனை சாப்பிட்டு வருகின்றனர். இத்தகைய ரெட் ைவன் உடலுக்கு மட்டும் நன்மைகளைத் தருவதில்லை. சருமம் மற்றும் கூந்தலுக்கும் பல நன்மைகளைத் தருகிறது. அதனால் தான் அதனைப் பருகுபவர்களின் சருமம் மென்மையாகவும், பொலிவோடும் இருக்கிறது. அதற்காக இதனை பருகினால் தான் அழகைப் பெற முடியும் என்று சொல்லவில்லை. அழகாக வெளிப்படுவதற்கு ரெட் வைன் கொண்டு சருமத்தைப் பராமரிக்கலாம். மேலும் தற்போது ரெட் ைவன் ஃபேஷியல் என்ற ஒன்றும் பிரபலமாக உள்ளது. பல பெண்களும் அந்த ைவன் ஃபேஷியலை மேற்கொள்ள விரும்புகிறார்கள். இத்தகைய ஃபேஷியலை பணம் இருப்போர் மேற்கொள்ளலாம். ஆனால் பணம் இல்லாதவர்கள் நிலைமை என்ன? எனவே தான் ரெட் ைவனைக் கொண்டு வீட்டிலேயே எப்படி சருமத்தையும், கூந்தலையும் அழகாக பராமரிக்கலாம் என்று இங்கு விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, ரெட் ைவனை வாங்கி, எளிதாக அழகை மேம்படுத்துங்கள்.
முகப்பரு: முகப்பருவால் அவஸ்தைப்படுபவர்கள், ரெட் வைனை சருமத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால்,சருமத்தில் உள்ள முகப்பருக்கள் விரைவில் நீங்கிவிடும்.
முதுமைத் தோற்றம்: ரெட் ைவனில் அன்டி-அக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் இருப்பதால்வ இதனை சருமத்திற்கு பயன்படுத்துவதால் முதுமைத் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.
பொலிவிழந்த சருமம்: பொலிவிழந்த சருமம் நன்கு அழகாகக் காணப்பட வேண்டுமெனில், தினமும் ரெட் வைனைக் கொண்டு சருமத்தை 10 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும்.
வறட்சியான சருமம்: சிலருக்கு சரும வறட்சியானது அதிகம் இருக்கும். அத்தகைய வறட்சியைப் போக்க வேண்டுமெனில், ரெட் ைவன் கொண்டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, சருமமானது இறுக்கமடைந்து காணப்படும்.
கருமையான சருமம்: சிலரது சருமத்தில் இறந்த செல்களானது அதிகம் இருப்பதால், சருமமானது கருமையாகக் காணப்படும். அத்தகையவர்கள், ரெட் ைவனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களானது முற்றிலும் வெளியேறி, கருமை நீங்கும்.

எனவே இத்தகைய பிரச்சினைகளைப் போக்குவதற்கு இயற்கைப் பொருட்களைப் பயன்படுத்தி நீக்குவதற்கு போராடினால், நிச்சயம் சரும பிரச்சினைகள் நீங்குவதோடு, சருமத்தின் அழகும் அதிகரித்து, சருமம் பொலிவோடு பளிச்சென்று காணப்படும். அதற்கு எந்த பொருட்களை, எப்படி பயன்படுத்த வேண்டுமென்று தெரியாமல் முழிக்கிறீர்களா? அத்தகையவர்கள் இதைப் படித்து முயற்சித்து அழகாக மின்னுங்கள்...
புதினா: புதினாவை சருமத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் பொலிவாக இருக்கும். அதற்கு புதினா சாற்றை சருமத்தில் தேய்த்து,சிறிது நேரம் மசாஜ் செய்து கழுவ வேண்டும். இதனால் சருமத்தில் அழற்சி இருந்தாலும் அவை அனைத்தும் குணமாகிவிடும்.
தண்ணீர் :சருமத்தில் வறட்சி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில்,முதலில் தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும். ஏனெனில் உடலில் போதிய அளவு நீர்ச்சத்து இல்லாவிட்டாலும் சரும வறட்சி ஏற்படும்.
பப்பாளி :விற்றமின் சி அதிகம் நிறைந்த பப்பாளியை அரைத்து சருமத்தில் தடவினாலோ அல்லது அதனை சாப்பிட்டாலும், சருமம் மின்னும். ஏனெனில் அதில் உள்ள பாப்பைன் என்னும் நொதியானது, சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் பழுதடைந்த செல்களை புதுப்பிக்கும்.
மஞ்சள் தூள் : பெண்களின் பாரம்பரிய அழகுப் பொருளான மஞ்சள் தூளை பாலுடன் சேர்த்து கலந்து முகத்திற்கு மாஸ்க் போட்டால்,சருமத்தில் உள்ள கருமைகள் நீங்கி சருமம் வெள்ளையாகும்.
வால்நட்ஸ்: மூக்கு மற்றும் தாடையைச் சுற்றியிருக்கும் இறந்த செல்களை போக்குவதற்கு, வால்நட்ஸை அரைத்து பேஸ்ட் செய்து, சருமத்தில் தடவி ஸ்கரப் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, சருமம் அழுக்கின்றி சுத்தமாக இருக்கும்.
அரிசி மா : சரும சுருக்கங்களைப் போக்குவதற்கு, அரிசி மாவில் வெதுவெதுப்பான பாலை ஊற்றி, முகத்திற்கு மாஸ்க் போட்டு, உலர விட்டு, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
வேப்பிலை: பிம்பிள் மற்றும் முகப்பருக்கள் உள்ளவர்கள், அதனைப் போக்குவதற்கு, வேப்பிலையில் தயிர் ஊற்றி நன்கு அரைத்து, சருமத்திற்கு தடவ வேண்டும். இதனை வாரத்திற்கு இரண்டு முறை செய்து வருவது மிகவும் நல்லது.
தேங்காய்த் தண்ணீர்: தேங்காய் நீரைக் கொண்டு முகத்தைக் கழுவினால்,சருமத்தில் உள்ள தழும்புகள் மறைய ஆரம்பிக்கும். அதிலும் அம்மையால் ஏற்படும் தழும்புகள் அல்லது பிம்பிள் தழும்புகள் போன்ற எவையானாலும்,தேங்காய் தண்ணீர் கொண்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
வெள்ளரிக்காய்: தினமும் ஒரு வெள்ளரிக்காயை சாப்பிட்டு வந்தால், சரும வறட்சி நீங்குவதோடு, பிம்பிள் வருவதைத் தவிர்க்கலாம். இல்லாவிட்டால், வெள்ளரிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, மாஸ்க் போடலாம்.
எலுமிச்சை :சருமத்தில் உள்ள அழுக்குகளைப் போக்குவதற்கு ஒரு சிறந்த வழியென்றால், அது எலுமிச்சையை பயன்படுத்துவது தான். மேலும் எலுமிச்சை சருமத்தின் கருமையைப் போக்கவல்லது. எனவே இரவில் படுக்கும் முன், எலுமிச்சை சாற்றை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவி, பின் ஏதேனும் ஒரு எண்ணெயால் சருமத்தை மசாஜ் செய்து கொள்ள வேண்டும்.
வெந்தயம்: வெந்தயம் கூந்தல் பிரச்சினைகளை மட்டுமின்றி, சரும பிரச்சினைகளையும் போக்க வல்லது. அதிலும் வெந்தயத்தை ஊற வைத்து அரைத்து, பால் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து மாஸ்க் போட்டால், கரும்புள்ளிகள் நீங்கிவிடும்.
ஷாம்பெயின் : ஷாம்பெயின் பானத்தைக் கொண்டும்,சருமத்தை பொலிவாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் சீக்கிரம் அழகான சருமத்தைப் பெற வேண்டுமெனில், இந்த முறையைப் பயன்படுத்தலாம். அதற்கு ஷாம்பெயின் பானத்தை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
கடலை மா: எப்படி அரிசி மாவு சருமத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவியாக உள்ளதோ, அதை விட மிகவும் சிறந்த அழகு பராமரிப்பு பொருள் தான் கடலை மா அதற்கு கடலை மாவை,ரோஸ் வோட்டரில் கலந்து வாரத்திற்கு இரண்டு முறை கழுத்து மற்றும் முகத்திற்கு தடவி மாஸ்க் போட்டு வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் மற்றும் கரும்புள்ளிகள் போன்றவை எளிதில் நீங்கிவிடும்.
பாதாம்: பாதாமை அரைத்து பொடி செய்து,அதில் சிறிது பாதாம் எண்ணெய் ஊற்றி, சருமத்திற்கு தடவி 15 நிமிடம் ஊற வைத்து சாதாரணமாக குளிர்ந்த நீரில் மட்டும் கழுவி, பின் ெகாட்டன் கொண்டு முகத்தை துடைத்தால், முகம் பொலிவோடு காணப்படும்.
பூண்டு: பூண்டில் அன்டி-பக்டீரியல் பொருள் அதிகம் இருப்பதால், அதனை சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து முகத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவினால், சருமத்தில் ஏற்படும் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கிவிடும்.
தேன்: சருமத்தில் உள்ள பிம்பிளை எளிதில் போக்க வேண்டுமெனில், தேனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து, 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.
கற்றாழை: கற்றாழையின் ஜெல்லை சருமத்திற்கு தடவி மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமம் மென்மையாவதோடு, சருமத்தில் உள்ள தழும்புகள் நீங்கி, சருமம் அழகாக இருக்கும்.
தக்காளிச் சாறு: காய்கறிகளில் ஒன்றான தக்காளியும் சரும பிரச்சினைகளைப் போக்கக் கூடியது. அதற்கு முதலில் செய்ய வேண்டியதெல்லாம், தக்காளி சாற்றினை முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவ வேண்டும்.
தயிர்: சரும வறட்சியை நீக்க ஒரு சிறந்த முறையென்றால், தயிரை சருமத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை ஒரு மாதத்திற்கு தொடர்ந்து செய்து வந்தால், அதன் பலன் நன்கு புலப்படும்.
அஸ்பிரின் :அஸ்பிரின் மாத்திரையும் சரும பிரச்சினைகளைப் போக்க வல்லது. அதிலும் அந்த மாத்திரையை பொடி செய்து, தண்ணீர் சேர்த்து கலந்து, முகத்திற்கு தடவி ஸ்கரப் செய்தால், வெள்ளைப் புள்ளிகள் மற்றும் இறந்த செல்கள் எளிதில் நீங்கிவிடும்.
சருமப்பொலிவுக்கு கை கொடுக்கும் ரெட் வைன்…
உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும் பானங்களில் ரெட் வைனும் ஒன்று என்று தெரியும். மேலும் ஆய்வு ஒன்றிலும் ரெட் ைவயின் சாப்பிட்டால், இதய நோய் வருவதைத் தவிர்க்கலாம் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதிலும் ரெட் ைவயினை அளவாக சாப்பிட்டு வந்தால், உடலை ஆரோக்கியமாகவும், அதுவே அளவுக்கு மீறினால், மோசமான விளைவையும் சந்திக்கக்கூடும். அதுமட்டுமல்லாமல், அக்காலத்தில் எல்லாம் ரெட் ைவன் ஒரு மருத்துவப் பொருளாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. அதனால் தான் இன்றும் ப்ரெஞ்ச் மக்கள், உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதற்கு, தினமும் அளவான அளவில் ரெட் ைவனை சாப்பிட்டு வருகின்றனர். இத்தகைய ரெட் ைவன் உடலுக்கு மட்டும் நன்மைகளைத் தருவதில்லை. சருமம் மற்றும் கூந்தலுக்கும் பல நன்மைகளைத் தருகிறது. அதனால் தான் அதனைப் பருகுபவர்களின் சருமம் மென்மையாகவும், பொலிவோடும் இருக்கிறது. அதற்காக இதனை பருகினால் தான் அழகைப் பெற முடியும் என்று சொல்லவில்லை. அழகாக வெளிப்படுவதற்கு ரெட் வைன் கொண்டு சருமத்தைப் பராமரிக்கலாம். மேலும் தற்போது ரெட் ைவன் ஃபேஷியல் என்ற ஒன்றும் பிரபலமாக உள்ளது. பல பெண்களும் அந்த ைவன் ஃபேஷியலை மேற்கொள்ள விரும்புகிறார்கள். இத்தகைய ஃபேஷியலை பணம் இருப்போர் மேற்கொள்ளலாம். ஆனால் பணம் இல்லாதவர்கள் நிலைமை என்ன? எனவே தான் ரெட் ைவனைக் கொண்டு வீட்டிலேயே எப்படி சருமத்தையும், கூந்தலையும் அழகாக பராமரிக்கலாம் என்று இங்கு விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அதைப் படித்து, ரெட் ைவனை வாங்கி, எளிதாக அழகை மேம்படுத்துங்கள்.
முகப்பரு: முகப்பருவால் அவஸ்தைப்படுபவர்கள், ரெட் வைனை சருமத்தில் தடவி மசாஜ் செய்து ஊற வைத்து கழுவினால்,சருமத்தில் உள்ள முகப்பருக்கள் விரைவில் நீங்கிவிடும்.
முதுமைத் தோற்றம்: ரெட் ைவனில் அன்டி-அக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாலிஃபீனால்கள் அதிகம் இருப்பதால்வ இதனை சருமத்திற்கு பயன்படுத்துவதால் முதுமைத் தோற்றத்தில் இருந்து விடுபடலாம்.
பொலிவிழந்த சருமம்: பொலிவிழந்த சருமம் நன்கு அழகாகக் காணப்பட வேண்டுமெனில், தினமும் ரெட் வைனைக் கொண்டு சருமத்தை 10 நிமிடம் மசாஜ் செய்து வர வேண்டும்.
வறட்சியான சருமம்: சிலருக்கு சரும வறட்சியானது அதிகம் இருக்கும். அத்தகைய வறட்சியைப் போக்க வேண்டுமெனில், ரெட் ைவன் கொண்டு மசாஜ் செய்தால், வறட்சி நீங்குவதோடு, சருமமானது இறுக்கமடைந்து காணப்படும்.
கருமையான சருமம்: சிலரது சருமத்தில் இறந்த செல்களானது அதிகம் இருப்பதால், சருமமானது கருமையாகக் காணப்படும். அத்தகையவர்கள், ரெட் ைவனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து கழுவி வந்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்களானது முற்றிலும் வெளியேறி, கருமை நீங்கும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக