பொதுநலவாய நாடுகளின் தலைவர்களின் உச்சி மாநாடு காரணமாக கடந்த வாரம் கொழும்பு களை கட்டியிருந்தது. மாநாட்டுக்கு எத்தனை தலைவர்கள் வருவார்கள்? அவர்களை எப்படி வரவேற்பது? என்றெல்லாம் உச்சி மாநாட்டு வரவேற்பாளர்கள் தலையைப் பிய்த்துக் கொண்டார்கள். இந்தத் தலைவர்களின் வருகை காரணமாக அடிக்கடி வீதிகள் மூடப்பட்டமை வேறு, போக்குவரத்தில் ஈடுபட்டோரைப் பெரும் பாடாய்ப் படுத்திவிட்டது.
இருந்தபோதிலும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கினதும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனின் வருகையும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்று கூறலாம். இறுதியில் ஒருவாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டுக்கு வருகை தராமல் தன்னைத் தவிர்த்துக் கொண்டார். இதற்கு ஒரு வார காலத்துக்கு முன்னராகவே பிரமதர் வருவாரா? மாட்டாரா? என்று பெரும் பந்தயத்தில் இரு நாட்டினதும் அரசியல் வல்லுநர்கள், இராஜதந்திரிகள், புத்திஜீவிகள் எனப் பலரும் ஈடுபட்டனர். பிராந்திய நலனுக்காக இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று ஒரு சாராரும், இல்லை தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கைக்கு விஜயம் செய்யக் கூடாது என்று மறுசாராரும் வரிந்து கட்டிக் கொண்டு வாதிட்டனர். இறுதியில் காரணம் எதுவுமே கூறாமல் பிரதமர் மன்மோகன் சிங் தவிர்த்துக் கொண்டார்.
இவரது இலங்கை விஜயம் தொடர்பில் பாதகமான கருத்துக்களை முன்வைத்த இந்திய ஊடகங்கள் சில பிரதமர் தனது விஜயத்தைக் கைவிட்டு விட்டார் என்று அறிந்ததும் ஒரே அடியாக ‘பல்டி’ அடித்தது மாத்திரமன்றி, பிரதமர் போயிருக்கலாம், யாழ்ப்பாணத்துக்கும் சென்று பார்த்திருக்கலாம் என்றெல்லாம் தங்கள் கருத்துக்களை வெளியிடத் தொடங்கிவிட்டன. எதுவோ, இந்தியப் பிரதமர் இலங்கை வராது போனது தொடர்ந்தும் பேசப்படும் விவகாரமாகிவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை. இந்நிலையில் பொதுநலவாய மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் கட்டாயம் வந்திருக்க வேண்டும். ஆனால் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளாமை தொடர்பில் எம்மைவிட இந்தியாவே கவலையடைய வேண்டும். இலங்கை கவலையடைய வேண்டியதில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தெரிவித்திருந்தார்.
மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரின் வருகை தராமல் போனது மிகுந்த கவலையளிக்கும் விடயமாகவே இலங்கை தரப்பால் நோக்கப்பட்ட போதிலும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், மாநாட்டுக்கு சாதகமான கருத்துக்களை முன்வைத்தமை இலங்கை அதிகாரிகள் மட்டத்தில் ஆறுதல் அளிக்கும் ஒன்றாக அமைந்திருந்தது. மாநாட்டில் இந்தியா பங்கேற்பது என்ற முடிவு சரியானது என்று கூறிய அவர், தனது நிலைப்பாட்டையும் நியாயப்படுத்தியிருந்தார்.
இவ்வாறான போக்குகளுக்கு மத்தியில், பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் பங்குகொள்ளும் வகையில் உறவுக்காரர் வந்திருக்கலாம். உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள் காரணமாக அவர் வருகை தரவில்லை என்பதை புரியக் கூடியதாக உள்ளது. இத்தகைய நிலையில் தானாக இருப்பினும் அத்தகைய முடிவொன்றைத்தான் எடுத்திருப்பேன் என்று தனது ஆதங்கத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெளியிட்டுள்ளார்.
எதுவாக இருப்பினும், இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு சென்று நிலைமைகளைக் கண்டறியும் நிகழ்ச்சி நிரலுடன் இலங்கைக்கு வருகை தந்திருக்கலாம் என்று இன்றும் வாதிடுவோர் இருக்கவே செய்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவை பின்தள்ளி விட்டு கமரூன் கதாநாயகன் ஆகிவிட்டார். அவரது இலங்கை விஜயம் கூட நன்மைக்குத்தான் என்று பேசப்படும் வகையில் நிலைமை அமைந்து விட்டது.
மறுபுறம் பிரிட்டிஷ் பிரதமர் கமரூனின் வருகையானது இறுதியில் “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற நிலைமையை ஏற்படுத்திவிட்டது என்றுதான் கூற வேண்டும். அதாவது பிரிட்டிஷ் பிரதமர் இலங்கை வருவதற்கு முன்னரே புலம் பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்ததுடன் தனது இலங்கை விஜயத்தின் போது போர்க்குற்றங்கள் தொடர்பில் குரல் எழுப்புவேன் என கூறியிருந்ததாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. இந்நிலையில் பிரிட்டிஷ் பிரமதர் டேவிட் கமரூன் இலங்கையில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையையும் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
முன்னதாக, பிரிட்டிஷ் பிரதமர் இராஜ தந்திர நெறிமுறைகளை மீறிவிட்டார் என அரச தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது விமானத்தில் இலங்கைக்கு வந்திறங்கிய அவர், விமான நிலையத்தில் உள்ள தேசிய வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட மறுத்துவிட்டார்.
அதேபோன்று, அவருக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நடனத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கிருந்து புறப்பட அவருக்கென வழங்கிய சொகுசு வாகனத்தில் பயணத்தை மேற்கொள்ளாது பிறிதொரு வாகனத்திலேயே பயணம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதுமாத்திரமன்றி, கொழும்பில் பொதுநலவாய மாநாடு தொடர்பில் நடைபெறவிருந்த முக்கிய கூட்டத்தில் பங்குபற்றுவதைத் தவிர்த்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாமுக்குச் சென்ற சமயம் முகாம்களைக் காட்டுவதற்காக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த பிரதான உள்ளூர் அதிகாரியை அவர் ஓரம் கட்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இராஜதந்திர நெறிமுறைகளை பிரிட்டன் மிகவும் உறுதியாக கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பிரிட்டிஷ் பிரதமரின் இந்த நடவடிக்கை மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரச தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் பிரதமர் அங்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்தியதுடன், வலிகாமம் வடக்கிலுள்ள அகதி முகாம் ஒன்றுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களுடன் நேரடியாக உரையாடி அவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளையும் கேட்டறிந்து கொண்டார். இதனையடுத்து கொழும்பு திரும்பிய டேவிட் கமரூன் செய்தியாளர் மாநாடு ஒன்றையும் நடத்தியிருந்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த சுயாதீன விசாரணையை அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்யாவிட்டால், ஐ.நா.மனித உரிமை பேரவையுடன் இணைந்து சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோருவோம் என்று தெரிவித்தார்.
அத்துடன் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிப்படையான சுயாதீனமான மற்றும் நம்பகரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பிரிட்டிஷ் பிரதமரின் இந்த உரை மிகுந்த சர்ச்சையைக் கிளப்பும் வகையில் அமைந்திருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் உடனடியாகக் கூட்டப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனக் கூறியிருந்தார். அன்றைய தினம் மாலை கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கண்ணாடி வீட்டுக்குள் இருந்து எவரும் கற்களை எறியக் கூடாது. இலங்கை ஏற்கெனவே சுயாதீனமான குழுவைக் கொண்டே நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. எமது நாட்டிலும் சுயாதீனமான நிபுணர்கள் உள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.
இதேவேளை கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கற்களை எறியக் கூடாது என பிரிட்டிஷ் பிரதமருக்கா கூறினீர்கள் என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, நான் எந்த நாட்டையும் எவரையும் எதனையும் பெயர் கூறி குறிப்பிடவில்லை எனக் கூறிவிட்டார். இவ்வாறானதோர் சூழலில் டேவிட் கமரூனின் உரை ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்ததைப் போன்று ஜனாதிபதியின் உரையும் முக்கிய இடத்தைப் பிடிக்கத் தவறவில்லை.
இதன் தொடர்ச்சியாக மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட விசாரணைகளில் அதிகமானவை இராணுவத்தின் தலைமையிலேயே இடம்பெற்றுள்ளதால் அவை முற்றுமுழுதாக சுயாதீன தன்மை கொண்டதாக அமையவில்லை எனப் பிரிட்டிஷ் பிரதமர் மீண்டும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று தாயகம் திரும்பிய நிலையில் இலங்கைக்கான தனது விஜயம் குறித்து திங்களன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்து மாநாட்டின் நிறைவேற்றுக் கூட்டத் தொடர் நிறைவடைவதற்கு முன்பே பிரித்தானியப் பிரதமர் வடக்குக்குப் பயணித்தமையானது “உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தமைக்கு ஒப்பான செயலாகும்” என தேசிய சுதந்திர முன்னணி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, பொதுநலவாய மாநாடு தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் ஐ.தே.கட்சி, பொதுநலவாய மாநாட்டின் மூலம் நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக் கொடுக்கும் செயலை அரசாங்கமே செய்துள்ளது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இன்றும் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களைப் பாதுகாக்காது மாநாட்டை நடத்துவதா நல்லாட்சி? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒரு வகையில் வெறும் அரசியல் நோக்குடனான கருத்தாகவே இதனையும் நோக்க வேண்டியுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக பொதுநலவாய மாநாடு நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துவிட்ட போதிலும் மறுபுறம் நெருக்கடியானதோர் சூழலை உருவாக்கியுள்ளதாகவே அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனின் கருத்துக்கள் எதிர்காலத்தில் எந்த வகையான தாக்கத்தைக் கொடுக்கப் போகின்றன என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
டேவிட் கமரூனின் கருத்துக்களை குறைத்து மதிப்பிடக் கூடாது எனத் தெரிவித்துள்ள கலாநிதி தயான் ஜயதிலக, அரசாங்கம் இப்போதிருந்தே இதற்கு முகம்கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியாக தயாராக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஒருவகையில் பொதுநலவாய மாநாட்டுக்கு கனேடிய மற்றும் இந்தியப் பிரதமர்கள் வருகை தராமை இலங்கை அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியதை விடவும் கமரூனின் வருகை மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்திவிட்டதாகவே அரச தரப்பினரை எண்ணச் செய்துவிட்டது என்று கூறலாம். எதுவாக இருப்பினும் மேலை நாட்டுத் தலைவர்களின் கூற்றுக்கள் கேட்பதற்கு ஆறுதலாக இருக்குமே தவிர அதனால் ஆகப்போவது எதுவுமில்லை என்பதே யதார்த்தம்.

இருந்தபோதிலும், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கினதும் பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனின் வருகையும் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று என்று கூறலாம். இறுதியில் ஒருவாறு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் மாநாட்டுக்கு வருகை தராமல் தன்னைத் தவிர்த்துக் கொண்டார். இதற்கு ஒரு வார காலத்துக்கு முன்னராகவே பிரமதர் வருவாரா? மாட்டாரா? என்று பெரும் பந்தயத்தில் இரு நாட்டினதும் அரசியல் வல்லுநர்கள், இராஜதந்திரிகள், புத்திஜீவிகள் எனப் பலரும் ஈடுபட்டனர். பிராந்திய நலனுக்காக இந்தியப் பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்ய வேண்டும் என்று ஒரு சாராரும், இல்லை தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இலங்கைக்கு விஜயம் செய்யக் கூடாது என்று மறுசாராரும் வரிந்து கட்டிக் கொண்டு வாதிட்டனர். இறுதியில் காரணம் எதுவுமே கூறாமல் பிரதமர் மன்மோகன் சிங் தவிர்த்துக் கொண்டார்.
இவரது இலங்கை விஜயம் தொடர்பில் பாதகமான கருத்துக்களை முன்வைத்த இந்திய ஊடகங்கள் சில பிரதமர் தனது விஜயத்தைக் கைவிட்டு விட்டார் என்று அறிந்ததும் ஒரே அடியாக ‘பல்டி’ அடித்தது மாத்திரமன்றி, பிரதமர் போயிருக்கலாம், யாழ்ப்பாணத்துக்கும் சென்று பார்த்திருக்கலாம் என்றெல்லாம் தங்கள் கருத்துக்களை வெளியிடத் தொடங்கிவிட்டன. எதுவோ, இந்தியப் பிரதமர் இலங்கை வராது போனது தொடர்ந்தும் பேசப்படும் விவகாரமாகிவிட்டது என்பதை மறுப்பதற்கில்லை. இந்நிலையில் பொதுநலவாய மாநாட்டுக்கு இந்தியப் பிரதமர் கட்டாயம் வந்திருக்க வேண்டும். ஆனால் இந்தியப் பிரதமர் கலந்துகொள்ளாமை தொடர்பில் எம்மைவிட இந்தியாவே கவலையடைய வேண்டும். இலங்கை கவலையடைய வேண்டியதில்லை என பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக் ஷ தெரிவித்திருந்தார்.
மாநாட்டுக்கு இந்தியப் பிரதமரின் வருகை தராமல் போனது மிகுந்த கவலையளிக்கும் விடயமாகவே இலங்கை தரப்பால் நோக்கப்பட்ட போதிலும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், மாநாட்டுக்கு சாதகமான கருத்துக்களை முன்வைத்தமை இலங்கை அதிகாரிகள் மட்டத்தில் ஆறுதல் அளிக்கும் ஒன்றாக அமைந்திருந்தது. மாநாட்டில் இந்தியா பங்கேற்பது என்ற முடிவு சரியானது என்று கூறிய அவர், தனது நிலைப்பாட்டையும் நியாயப்படுத்தியிருந்தார்.
இவ்வாறான போக்குகளுக்கு மத்தியில், பொதுநலவாய தலைவர்களின் மாநாட்டில் பங்குகொள்ளும் வகையில் உறவுக்காரர் வந்திருக்கலாம். உள்நாட்டு அரசியல் நெருக்கடிகள் காரணமாக அவர் வருகை தரவில்லை என்பதை புரியக் கூடியதாக உள்ளது. இத்தகைய நிலையில் தானாக இருப்பினும் அத்தகைய முடிவொன்றைத்தான் எடுத்திருப்பேன் என்று தனது ஆதங்கத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வெளியிட்டுள்ளார்.
எதுவாக இருப்பினும், இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்துக்கு சென்று நிலைமைகளைக் கண்டறியும் நிகழ்ச்சி நிரலுடன் இலங்கைக்கு வருகை தந்திருக்கலாம் என்று இன்றும் வாதிடுவோர் இருக்கவே செய்கின்றனர்.
இதில் வேடிக்கை என்னவென்றால் இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவை பின்தள்ளி விட்டு கமரூன் கதாநாயகன் ஆகிவிட்டார். அவரது இலங்கை விஜயம் கூட நன்மைக்குத்தான் என்று பேசப்படும் வகையில் நிலைமை அமைந்து விட்டது.
மறுபுறம் பிரிட்டிஷ் பிரதமர் கமரூனின் வருகையானது இறுதியில் “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற நிலைமையை ஏற்படுத்திவிட்டது என்றுதான் கூற வேண்டும். அதாவது பிரிட்டிஷ் பிரதமர் இலங்கை வருவதற்கு முன்னரே புலம் பெயர் தமிழ் மக்களின் பிரதிநிதிகளை சந்தித்ததுடன் தனது இலங்கை விஜயத்தின் போது போர்க்குற்றங்கள் தொடர்பில் குரல் எழுப்புவேன் என கூறியிருந்ததாகச் செய்திகள் வெளிவந்திருந்தன. இந்நிலையில் பிரிட்டிஷ் பிரமதர் டேவிட் கமரூன் இலங்கையில் தெரிவித்த கருத்துக்கள் பெரும் சர்ச்சையையும் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளன.
முன்னதாக, பிரிட்டிஷ் பிரதமர் இராஜ தந்திர நெறிமுறைகளை மீறிவிட்டார் என அரச தரப்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. அதாவது விமானத்தில் இலங்கைக்கு வந்திறங்கிய அவர், விமான நிலையத்தில் உள்ள தேசிய வருகைப் பதிவேட்டில் கையொப்பமிட மறுத்துவிட்டார்.
அதேபோன்று, அவருக்காக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த வரவேற்பு நடனத்தையும் அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. அங்கிருந்து புறப்பட அவருக்கென வழங்கிய சொகுசு வாகனத்தில் பயணத்தை மேற்கொள்ளாது பிறிதொரு வாகனத்திலேயே பயணம் செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதுமாத்திரமன்றி, கொழும்பில் பொதுநலவாய மாநாடு தொடர்பில் நடைபெறவிருந்த முக்கிய கூட்டத்தில் பங்குபற்றுவதைத் தவிர்த்து யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்ததாகவும் குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
மேலும் இடம்பெயர்ந்தோர் தங்கியிருந்த முகாமுக்குச் சென்ற சமயம் முகாம்களைக் காட்டுவதற்காக ஒழுங்குபடுத்தப்பட்டிருந்த பிரதான உள்ளூர் அதிகாரியை அவர் ஓரம் கட்டிவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இராஜதந்திர நெறிமுறைகளை பிரிட்டன் மிகவும் உறுதியாக கடைப்பிடிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் பிரிட்டிஷ் பிரதமரின் இந்த நடவடிக்கை மிகுந்த விசனத்தை ஏற்படுத்தியுள்ளதாக அரச தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்த பிரிட்டிஷ் பிரதமர் அங்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் பேச்சு நடத்தியதுடன், வலிகாமம் வடக்கிலுள்ள அகதி முகாம் ஒன்றுக்கு விஜயம் செய்து அங்குள்ள மக்களுடன் நேரடியாக உரையாடி அவர்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளையும் கேட்டறிந்து கொண்டார். இதனையடுத்து கொழும்பு திரும்பிய டேவிட் கமரூன் செய்தியாளர் மாநாடு ஒன்றையும் நடத்தியிருந்தார்.
இந்த செய்தியாளர் மாநாட்டில் இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்த சுயாதீன விசாரணையை அடுத்த வருடம் மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்யாவிட்டால், ஐ.நா.மனித உரிமை பேரவையுடன் இணைந்து சர்வதேச சுயாதீன விசாரணையைக் கோருவோம் என்று தெரிவித்தார்.
அத்துடன் யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் வெளிப்படையான சுயாதீனமான மற்றும் நம்பகரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என தாம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
பிரிட்டிஷ் பிரதமரின் இந்த உரை மிகுந்த சர்ச்சையைக் கிளப்பும் வகையில் அமைந்திருந்தது. இதற்குப் பதிலளிக்கும் வகையில் உடனடியாகக் கூட்டப்பட்ட செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சர்வதேச விசாரணையை இலங்கை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை எனக் கூறியிருந்தார். அன்றைய தினம் மாலை கொழும்பு பண்டாரநாயக்க மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கண்ணாடி வீட்டுக்குள் இருந்து எவரும் கற்களை எறியக் கூடாது. இலங்கை ஏற்கெனவே சுயாதீனமான குழுவைக் கொண்டே நல்லிணக்க ஆணைக்குழுவை நியமித்தது. எமது நாட்டிலும் சுயாதீனமான நிபுணர்கள் உள்ளனர் என்று தெரிவித்திருந்தார்.
இதேவேளை கண்ணாடி வீட்டுக்குள் இருந்து கற்களை எறியக் கூடாது என பிரிட்டிஷ் பிரதமருக்கா கூறினீர்கள் என செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, நான் எந்த நாட்டையும் எவரையும் எதனையும் பெயர் கூறி குறிப்பிடவில்லை எனக் கூறிவிட்டார். இவ்வாறானதோர் சூழலில் டேவிட் கமரூனின் உரை ஊடகங்களில் முக்கிய இடத்தைப் பிடித்ததைப் போன்று ஜனாதிபதியின் உரையும் முக்கிய இடத்தைப் பிடிக்கத் தவறவில்லை.
இதன் தொடர்ச்சியாக மனித உரிமைகள் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்த இலங்கை அரசாங்கத்தினால் நடத்தப்பட்ட விசாரணைகளில் அதிகமானவை இராணுவத்தின் தலைமையிலேயே இடம்பெற்றுள்ளதால் அவை முற்றுமுழுதாக சுயாதீன தன்மை கொண்டதாக அமையவில்லை எனப் பிரிட்டிஷ் பிரதமர் மீண்டும் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறன்று தாயகம் திரும்பிய நிலையில் இலங்கைக்கான தனது விஜயம் குறித்து திங்களன்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஆற்றிய விசேட உரையின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இதேவேளை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு அனைத்து வரப்பிரசாதங்களையும் அனுபவித்து மாநாட்டின் நிறைவேற்றுக் கூட்டத் தொடர் நிறைவடைவதற்கு முன்பே பிரித்தானியப் பிரதமர் வடக்குக்குப் பயணித்தமையானது “உண்ட வீட்டுக்கு இரண்டகம் செய்தமைக்கு ஒப்பான செயலாகும்” என தேசிய சுதந்திர முன்னணி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளது.
இது ஒருபுறமிருக்க, பொதுநலவாய மாநாடு தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் ஐ.தே.கட்சி, பொதுநலவாய மாநாட்டின் மூலம் நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக் கொடுக்கும் செயலை அரசாங்கமே செய்துள்ளது. பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இன்றும் முகாம்களில் வாழ்கின்றனர். அவர்களைப் பாதுகாக்காது மாநாட்டை நடத்துவதா நல்லாட்சி? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
ஒரு வகையில் வெறும் அரசியல் நோக்குடனான கருத்தாகவே இதனையும் நோக்க வேண்டியுள்ளது. இவை அனைத்துக்கும் மேலாக பொதுநலவாய மாநாடு நாட்டுக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துவிட்ட போதிலும் மறுபுறம் நெருக்கடியானதோர் சூழலை உருவாக்கியுள்ளதாகவே அரசியல் அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளனர்.
குறிப்பாக, பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கமரூனின் கருத்துக்கள் எதிர்காலத்தில் எந்த வகையான தாக்கத்தைக் கொடுக்கப் போகின்றன என்பது சிந்திக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
டேவிட் கமரூனின் கருத்துக்களை குறைத்து மதிப்பிடக் கூடாது எனத் தெரிவித்துள்ள கலாநிதி தயான் ஜயதிலக, அரசாங்கம் இப்போதிருந்தே இதற்கு முகம்கொடுப்பதற்கு இராஜதந்திர ரீதியாக தயாராக வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
ஒருவகையில் பொதுநலவாய மாநாட்டுக்கு கனேடிய மற்றும் இந்தியப் பிரதமர்கள் வருகை தராமை இலங்கை அரசுக்கு விசனத்தை ஏற்படுத்தியதை விடவும் கமரூனின் வருகை மிகுந்த நெருக்கடியை ஏற்படுத்திவிட்டதாகவே அரச தரப்பினரை எண்ணச் செய்துவிட்டது என்று கூறலாம். எதுவாக இருப்பினும் மேலை நாட்டுத் தலைவர்களின் கூற்றுக்கள் கேட்பதற்கு ஆறுதலாக இருக்குமே தவிர அதனால் ஆகப்போவது எதுவுமில்லை என்பதே யதார்த்தம்.





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக