தெற்காசிய நாடுகள் வித்தியாசமானவை. இங்கு ஜனநாயகம் இருப்பது போல் தோன்றும். ஆனால் இருக்காது.
இந்த நாடுகள் சுயாதீனமாக இயங்குவது போலவும் தோன்றும். உன்னிப்பாக ஆராய்ந்தால், அவற்றின் இறையாண்மையை வல்லரசுகள் குத்தகைக்கு எடுத்திருப்பது விளங்கும்.
இந்த நாடுகளின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிப்பவை வல்லரசுகளின் பிராந்திய அரசியல் பூகோளவியல் நலன்கள் தான்.
இந்தக் கருத்தை விபரிப்பதற்கு மாலைதீவை விடவும் மிகச்சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
கடந்த சனிக்கிழமை மாலைதீவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அப்துல்லா யாமீன் வெற்றி பெற்றிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் நஷீத் தோல்வி கண்டிருக்கிறார்.
மாலைதீவு மக்கள் எதை எதிர்பார்த்தார்களோ அது கிடைத்திருக்கிறது என்று யாமீன் கூறியிருக்கிறார். மக்களின் தீர்ப்பை மதித்து தோல்வியை ஏற்றுக் கொள்வதாக நஷீத் அறிவித்திருக்கிறார்.
இதைப் பார்த்தால் எல்லாம் நல்லதாக நடந்திருக்கிறது என்று எண்ணத் தோன்றலாம். மாலைதீவின் சமீபத்திய வரலாற்றை ஆராய்ந்தால், அது அப்படியல்ல என்பது புலப்படும்.
மாலைதீவிற்கு ஜனநாயகம் புதியது. 2008ஆம் ஆண்டு தான் புதிய அரசியல் யாப்பும், பல கட்சிகள் போட்டியிடக் கூடிய தேர்தல் முறையும் அறிமுகம் செய்யப்பட்டன.
அந்நாட்டை 30 வருடகாலங்கள் இரும்புக் கரத்தால் நிர்வகித்த மைமூன் அப்துல் கையூமின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் அது சாத்தியப்பட்டது.
புதிய அரசியல் யாப்பு ஜனாதிபதித் தேர்தலுக்கு இடமளிக்கிறது. தேர்தலில் பலரும் போட்டியிடலாம். 50 சதவீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெறாத பட்சத்தில் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும். முதற்சுற்றில் ஆகக்கூடுதலான வாக்குகளைப் பெற்றவரும், இரண்டாவது இடத்தில் இருப்பவரும் போட்டியிடுவார்கள்.
2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்று மாலைதீவின் ஜனாதிபதியாக தெரிவானவர், மொஹம்மட் நஷீத். அவர் கடந்தாண்டு முற்பகுதியில் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய சம்பவங்களை அடுத்து பதவி விலகியிருந்தார்.
ஜனாதிபதி நஷீத்திற்கும், நீதிமன்றத்திற்கும் இடையிலான முறுகல் நிலை காரணமாக அவர் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது.
மாலைதீவு அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த மதப்பிரமுகர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட பிரதம நீதியரசரைக் கைது செய்யுமாறு நஷீத் உத்தரவிட்டதால், மாலைதீவின் இராணுவம் அவரை தடுப்புக் காவலில் அடைத்து வைத்தது.
குறித்த மதப்பிரமுகர் கையூமின் விசுவாசி என்பது வேறு விடயம். மாலைதீவின் அரச படைகளில் கையூமின் கொள்கைகளை ஆராதிப்பவர்கள் அதிகம் என்பதையும் மறந்து விட முடியாது.
தமக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட சதிப்புரட்சி, தாம் பதவி விலகக்கூடிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியதென நஷீத் குறிப்பிட்டிருந்தார்.
நஷீத்தைத் தொடர்ந்து ஆட்சி நிர்வாகத்தைப் பொறுப்பேற்று மாலைதீவை ஆட்சி செய்தவர் துணை ஜனாதிபதி மொஹம்மட் வாஹித்.
தேர்தலை நடத்தி அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யுமாறு மாலைதீவு மக்கள் அவருக்கு அழுத்தம் கொடுத்தார்கள். சர்வதேச சமூகமும் தான்.
தேர்தலை ஒழுங்காக நடத்தியிருந்தால் கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருப்பார்.
ஆனால், நீதிமன்றத்திற்கும் நஷீத்திற்கும் இடையிலான பழைய பகையின் காரணமாக மூன்று தடவைகள் வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மாலைதீவு மக்களுக்கு ஏற்பட்டது.
முதலில் செப்டெம்பர் ஏழாம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நஷீத் 45.5 சதவீத வாக்குகளுடன் முதலிடம் பெற்றார். யாமின் இரண்டாவது இடத்திற்கு தெரிவானார். எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாததால் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பிற்கு மக்கள் தயாரானார்கள்.
ஆனால், நீதிமன்றம் தேர்தல் மோசடிகளைக் காரணம் காட்டி பெறுபேறுகளை இரத்துச் செய்தது. இதன் காரணமாக, செப்டெம்பர் 28ஆம் திகதி இரண்டாவது சுற்று வாக்கெடுப்பையும் நடத்த முடியாமல் போனது.
மீண்டும் ஒக்டோபர் 19ஆம் திகதி தேர்தலை நடத்த சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகி இருந்தன. இதிலும் நஷீத்திற்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருந்த நிலையில், பொலிஸார் தேர்தல் செயலகத்தை முற்றுகையிட்டார்கள். தேர்தல் விதிமுறைகளில் குளறுபடி இருப்பதாகக் கூறி வாக்கெடுப்பை முடக்கினார்கள்.
மறுபடியும் கடந்த ஒன்பதாம் திகதி மறு வாக்கெடுப்பு நடந்தது. அதில் நஷீத் மீண்டும் வெற்றி வெற்றார். நஷீத்திற்கு 47 சதவீத வாக்குகளும், யாமீனிற்கு 29 சதவீத வாக்குகளும் கிடைத்தன. மூன்றாவது வேட்பாளர் காசிம் இப்ராஹிம் 23 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
முதற்சுற்று வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற நஷீத்திற்கு இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் 48 சதவீத வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. யாமீன் 51 சதவீத வாக்குகளை எடுத்தார்.
முன்னைய தேர்தல்களில் நஷீத்தை கிட்டவும் நெருங்க முடியாத யாமீன், இரண்டாவது சுற்றில் கூடுதல் வாக்குகளுடன் வெற்றி பெற்ற சமயத்தில் நீதிமன்றம் பெறுபேறுகளை இரத்துச் செய்யவில்லை. மறுவாக்கெடுப்பை நடத்துமாறு உத்தரவிடவும் இல்லை.
இரண்டாவது சுற்றில் காசிம் இப்ராஹிமின் ஆதரவு கிடைத்ததால் வெற்றி சாத்தியப்பட்டதாக அவர் கூறினாலும், இந்த முடிவு பலரது புருவங்களை உயர்த்தியதில் வியப்பில்லை.
மாலைதீவின் உள்நாட்டு அரசியல் ஒருபுறம் இருக்கட்டும். நஷீத்தை ஓரங்கட்டும் முயற்சிகளின் முன்னிலையில் அமெரிக்காவும், பிராந்திய வல்லரசுகளான இந்தியா, சீனா ஆகிய நாடுகளும் கடைப்பிடித்த மௌனம் தான் ஆச்சரியத்தைத் தருகிறது.
அன்று நஷீத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு வாஹித் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட சமயத்தில், அதனை சதிப்புரட்சியென அமெரிக்காவோ, இந்தியாவோ கண்டிக்கவில்லை. மாறாக, அமெரிக்காவைத் தொடர்ந்து, அது ஜனநாயக நிலைமாற்றம் என்றே இந்தியாவும் வர்ணித்தது. இன்று யாமீன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதைப் பாராட்டி இந்திய பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்திருக்கிறார்.
இங்கு தான் பிராந்திய நலன்கள் என்ற விடயம் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த நூற்றாண்டில் யாரும் கவனிக்கப்படாத தேசமாக இருந்த மாலைதீவு, இன்று உலக அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய மூன்று நாடுகளின் பலப்பரீட்சை மேடையாக இருக்கிறதென்றால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
இன்று சீனாவும், இந்தியாவும் அமெரிக்காவின் பொருளாதார வல்லமைக்கு சவால் விடுக்கக்கூடியவையாக வளர்ந்து வருவது முதற்காரணம். 2001 செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா முன்னெடுத்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் இரண்டாம் காரணம்.
முதற்காரணத்தை ஆராய்வோம். சமகால பொருளாதார உலகில் கோலோச்ச விரும்பும் எந்தவொரு நாடும், எரிபொருள் மற்றும் கப்பல் போக்குவரத்து வணிகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகிறது. இன்று உலக நாடுகளுக்குத் தேவையான எரிபொருளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை ஆராய்ந்தால், 80 சதவீதமான கப்பல் போக்குவரத்து இந்து மா சமுத்திரத்தின் ஊடாகவே நிகழ்கிறது. அது மாலைதீவை அண்டிய கடற்பரப்பாகும்.
இந்த கடற்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் மாத்திரமே எதிர்காலத்தில் பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்பதை அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் அறிந்து வைத்திருக்கின்றன.
இந்த மூன்று நாடுகளும் பல்வேறு அரசியல் காரணங்களின் அடிப்படையில் நேரடி மோதலுக்குள் இறங்காவிட்டாலும் மாலைதீவையும், இலங்கையையும் தமக்குரிய வல்லாதிக்கப் போட்டியின் களமாக பயன்படுத்தி வருவது வெளிப்படையான விடயம்.
இன்று மாலைதீவின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சீனா உதவி செய்கையில், மாலைதீவின் எல்லைப்பாதுகாப்பு முயற்சிகளில் உதவும் நோக்கத்துடன் குடிவரவைக் கையாளும் திட்டமொன்றை வழங்கியிருக்கிறது.
இங்கு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியில், இந்தியா அமெரிக்காவின் பக்கம் சாய்வதற்கு காரணம் இருக்கிறது. பிராந்திய நலன்கள் என்று வரும்போது சீனா தோற்கடிக்கப்படுவதையே இந்தியா விரும்பும்.
இன்று சுவாரஷ்யமானதொரு விடயத்தைக் கூறியாக வேண்டும்.
மேலோட்டமாக நோக்கினால், அமெரிக்காவின் தெரிவு மொஹம்மட் நஷீத் என்பதாகத் தோன்றும். ஏனெனில், அவர் மதச்சார்பின்மையை நாடுபவராகவும், மேற்குலகின் நண்பராகவும் திகழ்கிறார். மாறாக, அப்துல் கையூமின் சகோதரார் மாலைதீவு சமூகம் இஸ்லாமிய மயமாவதை விரும்புகிறார்.
ஆழமாக ஆராய்ந்தால், அப்துல் கையூமின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர் மாலைதீவை ஆட்சி செய்வதையே அமெரிக்கா விரும்புகிறது என்பது தெரியவரும். ஏனெனில், அப்துல் கையூம் இஸ்லாத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவராக இருந்தாலும், அவர் அமெரிக்கா தொடுத்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவு அளித்திருந்தார்.
இங்கு இன்னொரு விடயமும் முக்கியத்துவம் பெறுகிறது.
அது நஷீத்தைத் தொடர்ந்து மாலைதீவை ஆட்சி செய்த மொஹம்மட் வாஹித்திற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள தொடர்பு. உண்மையில், சான் பிரான்ஸிஸ்கோவில் கல்வி கற்று அமெரிக்காவின் கிரீன் கார்ட் வைத்திருக்கும் வாஹித்தின் ஆட்சி காலத்தில் தான், மாலைதீவில் அமெரிக்கா வலுவாக கால்பதித்து. மாலைதீவிற்கு PISCES என்ற குடிவரவு கண்காணிப்புத் திட்டத்தைப் பெற்றுக் கொடுத்ததும், பயங்கரவாத தடுப்பு நிபுணர்களை அனுப்பி வைத்ததும், பிளக்ஸ்ரோன் என்ற விமானக் கம்பனி மாலைதீவில் கால்பதித்ததும் அவரது ஆட்சிகாலத்தில் தான்.
செப்டெம்பர் ஏழாம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில் அமெரிக்காவின் பூரண ஆசியுடன் களமிறங்கிய வாஹித், ஐந்து சதவீத வாக்குகளைப் பெற்று போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். அவர் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கும் பட்சத்தில், மாலைதீவின் தேர்தல் நடைமுறையிலும் செல்வாக்கு செலுத்தி அவரை அடுத்த ஜனாதிபதியாக மாற்றும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கக்கூடும்.
செப்டெம்பர் ஏழாம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில் அமெரிக்காவின் பூரண ஆசியுடன் களமிறங்கிய வாஹித், ஐந்து சதவீத வாக்குகளைப் பெற்று போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். அவர் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கும் பட்சத்தில், மாலைதீவின் தேர்தல் நடைமுறையிலும் செல்வாக்கு செலுத்தி அவரை அடுத்த ஜனாதிபதியாக மாற்றும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கக்கூடும்.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை

இந்த நாடுகள் சுயாதீனமாக இயங்குவது போலவும் தோன்றும். உன்னிப்பாக ஆராய்ந்தால், அவற்றின் இறையாண்மையை வல்லரசுகள் குத்தகைக்கு எடுத்திருப்பது விளங்கும்.
இந்த நாடுகளின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிப்பவை வல்லரசுகளின் பிராந்திய அரசியல் பூகோளவியல் நலன்கள் தான்.
இந்தக் கருத்தை விபரிப்பதற்கு மாலைதீவை விடவும் மிகச்சிறந்த உதாரணம் இருக்க முடியாது.
கடந்த சனிக்கிழமை மாலைதீவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் அப்துல்லா யாமீன் வெற்றி பெற்றிருக்கிறார். முன்னாள் ஜனாதிபதி மொஹம்மட் நஷீத் தோல்வி கண்டிருக்கிறார்.
மாலைதீவு மக்கள் எதை எதிர்பார்த்தார்களோ அது கிடைத்திருக்கிறது என்று யாமீன் கூறியிருக்கிறார். மக்களின் தீர்ப்பை மதித்து தோல்வியை ஏற்றுக் கொள்வதாக நஷீத் அறிவித்திருக்கிறார்.
இதைப் பார்த்தால் எல்லாம் நல்லதாக நடந்திருக்கிறது என்று எண்ணத் தோன்றலாம். மாலைதீவின் சமீபத்திய வரலாற்றை ஆராய்ந்தால், அது அப்படியல்ல என்பது புலப்படும்.
மாலைதீவிற்கு ஜனநாயகம் புதியது. 2008ஆம் ஆண்டு தான் புதிய அரசியல் யாப்பும், பல கட்சிகள் போட்டியிடக் கூடிய தேர்தல் முறையும் அறிமுகம் செய்யப்பட்டன.
அந்நாட்டை 30 வருடகாலங்கள் இரும்புக் கரத்தால் நிர்வகித்த மைமூன் அப்துல் கையூமின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் அது சாத்தியப்பட்டது.
புதிய அரசியல் யாப்பு ஜனாதிபதித் தேர்தலுக்கு இடமளிக்கிறது. தேர்தலில் பலரும் போட்டியிடலாம். 50 சதவீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.
எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேலான வாக்குகளைப் பெறாத பட்சத்தில் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பு நடத்தப்படும். முதற்சுற்றில் ஆகக்கூடுதலான வாக்குகளைப் பெற்றவரும், இரண்டாவது இடத்தில் இருப்பவரும் போட்டியிடுவார்கள்.
2008 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்று மாலைதீவின் ஜனாதிபதியாக தெரிவானவர், மொஹம்மட் நஷீத். அவர் கடந்தாண்டு முற்பகுதியில் நிகழ்ந்த சர்ச்சைக்குரிய சம்பவங்களை அடுத்து பதவி விலகியிருந்தார்.
ஜனாதிபதி நஷீத்திற்கும், நீதிமன்றத்திற்கும் இடையிலான முறுகல் நிலை காரணமாக அவர் பதவி விலக வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியது.
மாலைதீவு அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த மதப்பிரமுகர் ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவரை விடுதலை செய்யுமாறு உத்தரவிட்ட பிரதம நீதியரசரைக் கைது செய்யுமாறு நஷீத் உத்தரவிட்டதால், மாலைதீவின் இராணுவம் அவரை தடுப்புக் காவலில் அடைத்து வைத்தது.
குறித்த மதப்பிரமுகர் கையூமின் விசுவாசி என்பது வேறு விடயம். மாலைதீவின் அரச படைகளில் கையூமின் கொள்கைகளை ஆராதிப்பவர்கள் அதிகம் என்பதையும் மறந்து விட முடியாது.
தமக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட சதிப்புரட்சி, தாம் பதவி விலகக்கூடிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியதென நஷீத் குறிப்பிட்டிருந்தார்.
நஷீத்தைத் தொடர்ந்து ஆட்சி நிர்வாகத்தைப் பொறுப்பேற்று மாலைதீவை ஆட்சி செய்தவர் துணை ஜனாதிபதி மொஹம்மட் வாஹித்.
தேர்தலை நடத்தி அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்யுமாறு மாலைதீவு மக்கள் அவருக்கு அழுத்தம் கொடுத்தார்கள். சர்வதேச சமூகமும் தான்.
தேர்தலை ஒழுங்காக நடத்தியிருந்தால் கடந்த செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி தெரிவு செய்யப்பட்டிருப்பார்.
ஆனால், நீதிமன்றத்திற்கும் நஷீத்திற்கும் இடையிலான பழைய பகையின் காரணமாக மூன்று தடவைகள் வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தம் மாலைதீவு மக்களுக்கு ஏற்பட்டது.
முதலில் செப்டெம்பர் ஏழாம் திகதி வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நஷீத் 45.5 சதவீத வாக்குகளுடன் முதலிடம் பெற்றார். யாமின் இரண்டாவது இடத்திற்கு தெரிவானார். எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறாததால் இரண்டாவது சுற்று வாக்கெடுப்பிற்கு மக்கள் தயாரானார்கள்.
ஆனால், நீதிமன்றம் தேர்தல் மோசடிகளைக் காரணம் காட்டி பெறுபேறுகளை இரத்துச் செய்தது. இதன் காரணமாக, செப்டெம்பர் 28ஆம் திகதி இரண்டாவது சுற்று வாக்கெடுப்பையும் நடத்த முடியாமல் போனது.
மீண்டும் ஒக்டோபர் 19ஆம் திகதி தேர்தலை நடத்த சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகி இருந்தன. இதிலும் நஷீத்திற்கு வெற்றி வாய்ப்புக்கள் அதிகமாக இருந்த நிலையில், பொலிஸார் தேர்தல் செயலகத்தை முற்றுகையிட்டார்கள். தேர்தல் விதிமுறைகளில் குளறுபடி இருப்பதாகக் கூறி வாக்கெடுப்பை முடக்கினார்கள்.
மறுபடியும் கடந்த ஒன்பதாம் திகதி மறு வாக்கெடுப்பு நடந்தது. அதில் நஷீத் மீண்டும் வெற்றி வெற்றார். நஷீத்திற்கு 47 சதவீத வாக்குகளும், யாமீனிற்கு 29 சதவீத வாக்குகளும் கிடைத்தன. மூன்றாவது வேட்பாளர் காசிம் இப்ராஹிம் 23 சதவீத வாக்குகளைப் பெற்றார்.
முதற்சுற்று வாக்கெடுப்பில் முதலிடம் பெற்ற நஷீத்திற்கு இரண்டாவது சுற்று வாக்கெடுப்பில் 48 சதவீத வாக்குகள் மாத்திரமே கிடைத்தன. யாமீன் 51 சதவீத வாக்குகளை எடுத்தார்.
முன்னைய தேர்தல்களில் நஷீத்தை கிட்டவும் நெருங்க முடியாத யாமீன், இரண்டாவது சுற்றில் கூடுதல் வாக்குகளுடன் வெற்றி பெற்ற சமயத்தில் நீதிமன்றம் பெறுபேறுகளை இரத்துச் செய்யவில்லை. மறுவாக்கெடுப்பை நடத்துமாறு உத்தரவிடவும் இல்லை.
இரண்டாவது சுற்றில் காசிம் இப்ராஹிமின் ஆதரவு கிடைத்ததால் வெற்றி சாத்தியப்பட்டதாக அவர் கூறினாலும், இந்த முடிவு பலரது புருவங்களை உயர்த்தியதில் வியப்பில்லை.
மாலைதீவின் உள்நாட்டு அரசியல் ஒருபுறம் இருக்கட்டும். நஷீத்தை ஓரங்கட்டும் முயற்சிகளின் முன்னிலையில் அமெரிக்காவும், பிராந்திய வல்லரசுகளான இந்தியா, சீனா ஆகிய நாடுகளும் கடைப்பிடித்த மௌனம் தான் ஆச்சரியத்தைத் தருகிறது.
அன்று நஷீத் ஆட்சி கவிழ்க்கப்பட்டு வாஹித் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட சமயத்தில், அதனை சதிப்புரட்சியென அமெரிக்காவோ, இந்தியாவோ கண்டிக்கவில்லை. மாறாக, அமெரிக்காவைத் தொடர்ந்து, அது ஜனநாயக நிலைமாற்றம் என்றே இந்தியாவும் வர்ணித்தது. இன்று யாமீன் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளதைப் பாராட்டி இந்திய பிரதமர் வாழ்த்துச் செய்தி அனுப்பி வைத்திருக்கிறார்.
இங்கு தான் பிராந்திய நலன்கள் என்ற விடயம் முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த நூற்றாண்டில் யாரும் கவனிக்கப்படாத தேசமாக இருந்த மாலைதீவு, இன்று உலக அரசியலில் செல்வாக்கு செலுத்தக்கூடிய மூன்று நாடுகளின் பலப்பரீட்சை மேடையாக இருக்கிறதென்றால் அதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன.
இன்று சீனாவும், இந்தியாவும் அமெரிக்காவின் பொருளாதார வல்லமைக்கு சவால் விடுக்கக்கூடியவையாக வளர்ந்து வருவது முதற்காரணம். 2001 செப்டெம்பர் 11 தாக்குதலுக்குப் பின்னர் அமெரிக்கா முன்னெடுத்த பயங்கரவாதத்திற்கு எதிரான போர் இரண்டாம் காரணம்.
முதற்காரணத்தை ஆராய்வோம். சமகால பொருளாதார உலகில் கோலோச்ச விரும்பும் எந்தவொரு நாடும், எரிபொருள் மற்றும் கப்பல் போக்குவரத்து வணிகத்தை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது அவசியமாகிறது. இன்று உலக நாடுகளுக்குத் தேவையான எரிபொருளை ஏற்றிச் செல்லும் கப்பல்களை ஆராய்ந்தால், 80 சதவீதமான கப்பல் போக்குவரத்து இந்து மா சமுத்திரத்தின் ஊடாகவே நிகழ்கிறது. அது மாலைதீவை அண்டிய கடற்பரப்பாகும்.
இந்த கடற்பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துக் கொண்டால் மாத்திரமே எதிர்காலத்தில் பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என்பதை அமெரிக்கா, சீனா, இந்தியா ஆகிய நாடுகள் அறிந்து வைத்திருக்கின்றன.
இந்த மூன்று நாடுகளும் பல்வேறு அரசியல் காரணங்களின் அடிப்படையில் நேரடி மோதலுக்குள் இறங்காவிட்டாலும் மாலைதீவையும், இலங்கையையும் தமக்குரிய வல்லாதிக்கப் போட்டியின் களமாக பயன்படுத்தி வருவது வெளிப்படையான விடயம்.
இன்று மாலைதீவின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கு சீனா உதவி செய்கையில், மாலைதீவின் எல்லைப்பாதுகாப்பு முயற்சிகளில் உதவும் நோக்கத்துடன் குடிவரவைக் கையாளும் திட்டமொன்றை வழங்கியிருக்கிறது.
இங்கு அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான போட்டியில், இந்தியா அமெரிக்காவின் பக்கம் சாய்வதற்கு காரணம் இருக்கிறது. பிராந்திய நலன்கள் என்று வரும்போது சீனா தோற்கடிக்கப்படுவதையே இந்தியா விரும்பும்.
இன்று சுவாரஷ்யமானதொரு விடயத்தைக் கூறியாக வேண்டும்.
மேலோட்டமாக நோக்கினால், அமெரிக்காவின் தெரிவு மொஹம்மட் நஷீத் என்பதாகத் தோன்றும். ஏனெனில், அவர் மதச்சார்பின்மையை நாடுபவராகவும், மேற்குலகின் நண்பராகவும் திகழ்கிறார். மாறாக, அப்துல் கையூமின் சகோதரார் மாலைதீவு சமூகம் இஸ்லாமிய மயமாவதை விரும்புகிறார்.
ஆழமாக ஆராய்ந்தால், அப்துல் கையூமின் குடும்பத்தைச் சேர்ந்தவர் ஒருவர் மாலைதீவை ஆட்சி செய்வதையே அமெரிக்கா விரும்புகிறது என்பது தெரியவரும். ஏனெனில், அப்துல் கையூம் இஸ்லாத்திற்கு முக்கியத்துவம் அளிப்பவராக இருந்தாலும், அவர் அமெரிக்கா தொடுத்த பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தத்திற்கு ஆதரவு அளித்திருந்தார்.
இங்கு இன்னொரு விடயமும் முக்கியத்துவம் பெறுகிறது.
அது நஷீத்தைத் தொடர்ந்து மாலைதீவை ஆட்சி செய்த மொஹம்மட் வாஹித்திற்கும் அமெரிக்காவிற்கும் உள்ள தொடர்பு. உண்மையில், சான் பிரான்ஸிஸ்கோவில் கல்வி கற்று அமெரிக்காவின் கிரீன் கார்ட் வைத்திருக்கும் வாஹித்தின் ஆட்சி காலத்தில் தான், மாலைதீவில் அமெரிக்கா வலுவாக கால்பதித்து. மாலைதீவிற்கு PISCES என்ற குடிவரவு கண்காணிப்புத் திட்டத்தைப் பெற்றுக் கொடுத்ததும், பயங்கரவாத தடுப்பு நிபுணர்களை அனுப்பி வைத்ததும், பிளக்ஸ்ரோன் என்ற விமானக் கம்பனி மாலைதீவில் கால்பதித்ததும் அவரது ஆட்சிகாலத்தில் தான்.
செப்டெம்பர் ஏழாம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில் அமெரிக்காவின் பூரண ஆசியுடன் களமிறங்கிய வாஹித், ஐந்து சதவீத வாக்குகளைப் பெற்று போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். அவர் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கும் பட்சத்தில், மாலைதீவின் தேர்தல் நடைமுறையிலும் செல்வாக்கு செலுத்தி அவரை அடுத்த ஜனாதிபதியாக மாற்றும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கக்கூடும்.
செப்டெம்பர் ஏழாம் திகதி நடத்தப்பட்ட தேர்தலில் அமெரிக்காவின் பூரண ஆசியுடன் களமிறங்கிய வாஹித், ஐந்து சதவீத வாக்குகளைப் பெற்று போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். அவர் சற்று அதிகமான வாக்குகளைப் பெற்றிருக்கும் பட்சத்தில், மாலைதீவின் தேர்தல் நடைமுறையிலும் செல்வாக்கு செலுத்தி அவரை அடுத்த ஜனாதிபதியாக மாற்றும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டிருக்கக்கூடும்.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை





































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக