ஜாதகங்களிலே அமைகின்ற வினைப்பயன்களுக்கு நாம் எப்படி ஆளாகின்றோம். ஜோதிட ஆரம்ப ஸ்லோகம் ஒன்று உண்டு. அதிலே ஒரு வரியானது 'பதவீபூர்வ புண்ணியானம் லிக்யதே ஜன்ம பத்திரிகா' எமது முன்னோர் செய்த வினைகள் எம்மைச் சூழும். நாம் செய்யும் வினை எமது சந்ததியைச் சூழும். இதை நாம் முதலில் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும்.
ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் வளமிகு பயிர்களை நாட்டி சீராக வளர்த்துப் பாருங்கள். எல்லாப் பயிர்களும் நிறைவானதாக வளர்ந்து வரும் நிலையைப் பெறாது. ஒரு பகுதி நன்றாக வரும், ஒரு பகுதி பட்டுப்போகும். அதை விடவும் நீங்கள் கண்ணும் கருத்துமாய், அபூர்வமாய் வளர்க்க பாடுபட்டாலும், விலங்குகள், பூச்சிகள், பறவைகள் என ஏதோ ஒரு விதத்தில் சில பயிர்களுக்கு வளர முடியாத நிலை அமைந்துவிடும்.
இதற்கு நாம் என்ன சொல்ல முடியும். யாரை குறை கூற முடியும். பயிரிட்ட மண் வளத்தையா அல்லது பராமரிப்பில் ஏற்படும் கவலையீனத்தையா? எல்லா பயிர்களும் கெட்டுப்போனால் மண் வளத்தை குறை கூறலாம். எல்லாப் பயிர்களும் அழிந்து போனால் பராமரிப்பை குறை கூறலாம். இரண்டும் சரியாக இருந்தும் சில பயிர்கள் அழிந்துபோக, பட்டுப்போக, பயனற்றுப்போக, யார் காரணம். இதுதான் நாம் எம்மோடு கொண்டுவரும் வினை.
ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே ஜாதகம் கொண்டு எத்தனையோ ஆயிரம் பேர் பிறக்கின்றார்கள்.
அத்தனை பேருக்கும் ஒரே பலாபலன் அமைந்து விடுவதில்லை. ஒருவர் கோடீஸ்வரராக வாழ்வார். ஒருவர் நாட்டை ஆள்வார். ஒருவர் பரம ஏழையாக இருப்பர். ஒரு சிலர் பிறந்த உடனேயே இவ்வுலகைவிட்டு உயிர் நீத்து இருப்பார். இப்படியாக பலதரப்பட்ட சூட்சுமங்கள் எங்களின் வாழ்விலே உண்டு. எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் உண்டு. அவற்றை உணர்ந்து அறியக்கூடிய பரிபக்குவம் நாம் பெறுகின்ற நிலை வருவதற்குள் எமது ஆயுட்காலம் முடிந்துவிடும். ஏனெனில், மனிதனுக்கே உரிய பலவீனங்களினால் நாம் சூழப் பெறுகின்றோம்.
பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும். இதை பலவீனம் என்று சொல்வதைவிட, ஆசை என்று சொல்லலாம். மண், பொன், பெண், மது, பதவி, புகழ் என்கின்ற வரையறைக்குள் மனிதன் அகப்பட்டுக்கொள்வதன் மூலம் இந்த விடயங்களில் பற்று அதிகமாகி, மிருகக்குணம் கொண்டோராய் மாறி விடுகின்றனர்.
எதில் அதிக பற்று வைக்கின்றோமோ அதுவே எமக்கு அதிக அசுர குணத்தை தந்து விடுகின்றது.
ஜாதக ரீதியாக ஒருவரின் பூர்வ புண்ணிய கர்ம வினை அறிய பஞ்சமஸ்தானம் எனப்படும் 5ஆம் பாவமும் விரய அயனஸ்தானம் எனப்படுகின்ற 12ஆம் பாவம், சுகஸ்தானம் எனும் 4ஆம் பாவம், பாக்கியஸ்தானம் எனும் 9ஆம் பாவம் என்பன எங்களின் வினைகளை அறியும் நிலைகளை தீர்மானிக்கும் ஸ்தானங்களாக அமைகின்றன.
மேற்படி பாவங்களின் ஆதிபத்திய கிரகநிலைகள், பாவக் கிரகங்களாகவும், மறைவு ஸ்தான நிலைகளில் நீசம்பெற்று அமைவனவாகவும் இருக்கும் நிலையில் அல்லது மேற்படி பாவங்களில் பாவக்கிரகங்களின் சேர்க்கை அமையும்போது, நமது வினை ஆரம்பமாகும்.
சுகஸ்தானம் தாயின் நிலை. பாக்கியஸ்தானம் தந்தையின் நிலை. இவை இரண்டும் சிறப்பாக அமைய வேண்டியது மிகவும் முக்கியமானது.
ஒருவரின் ஜாதகப் பலனுக்கு ஏற்ப அவரின் வாழ்வியல் வழிகாட்டல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
பாவங்களும், வினைகளும், சூழ்ந்த நிலையிலே பிறந்தாலும் நல்ல வழிகாட்டல் அமைகின்றபோது, அதனூடாகவே ஓரளவு அனுகூலங்களை பெறக்கூடியதாய் இருக்கும்.
நல்ல சூழலில் எமது வாழ்வியல் அமையும் போது அந்த நல்ல விடயங்களை எமது வினைப்பயன் காரணமாக எமது மனம் ஏற்க மறுத்து நின்றாலும், பார்ப்பதும், கேட்பதும், நல்லவையாக இருக்கும்போது பூவோடு சேர்ந்த நாரும் கமழும் எனும் நிலை அங்கே மலரும்.
எனவே நாம் செய்யும் பாவங்கள் எம் சந்ததியைச் சூழும். எமது பிள்ளைகளுக்கு சொத்துகள், சுகங்கள் சேர்த்துவைக்க வேண்டும் என்கின்ற பிரயத்தனம், பிரயாசம், எல்லோருக்கும் உண்டு. அதை நல்ல வழியிலே சேகரித்து உங்கள் பிள்ளைகளுக்கு புண்ணியம், தர்மம் இவற்றைச் சேர்த்து வையுங்கள்.
வாழ்வில் நமக்கு நல்ல சிந்தனை, நல்ல புத்தி வந்து சேர்வதற்கு ஜோதிட ரீதியாக சில உபாயங்கள் உண்டு. பொதுவாக சில லக்கினம், ராசி உடையவர்கள் அதிகமான பிரச்சினைகளை சந்திக்கின்ற சூழலில் தவறுகள் பலவும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி விடுகின்றனர்.
இதற்கு அவர்களுக்கு அமைகின்ற கிரக நிலையே காரணமாகின்றது. அவற்றை நிவர்த்தி செய்ய முதலில் செய்யும் தவறுக்கு ஈடாக நன்மைகள் செய்து விடுங்கள்.
நல்லவர்கள் இருக்கும் இடத்திலே நன்மைகள் நிறைந்து பொழிந்து விளங்கும். அவரை சார்ந்தவர்களும் நல்ல எண்ணம் பெறுவார்கள். இதையே தர்மம் என்கின்றோம். இந்த தர்மம் நிலைக்க வேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காக மகாபாரதத்திலே கிருஷ்ணபரமாத்மா எத்தனை விதமான இராஜ தந்திரங்களை கையாண்டார்.
ஜோதிட ரீதியாக வாக்குஸ்தானம் எனப்படும் இரண்டாம் இடம், மனம், வாக்கு, குடும்பம் போன்ற நிலைகளுக்கு காரணியாகின்றது.
எனவே, இந்த நிலையிலே எமது வினைப்பயன் எம்மோடு ஒட்டிக்கொள்ளும் நிலை உண்டு. ஆகவே ஜோதிட ரீதியாக 2ஆம், 4ஆம், 5ஆம், 9ஆம், 12ஆம் பாவ நிலைகளும், அது சார்ந்த கிரக சாரங்களும் ஆதிபத்திய கிரகங்களும் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை.
இவற்றினிலே அமைகின்ற கிரகங்களின் தன்மையானது எம்மை பாவச் செயல்களுக்கு ஊக்குவிக்கின்ற தன்மைகளைக் கொடுக்கும்.
மேற்படி பாவங்களில், சனீஸ்வரன், ராகு, கேது, சுக்கிரன் போன்ற கிரகங்களின் தன்மை நமது வினைப்பயன்களை விருத்தி பெற வைக்கின்றன.
எப்போதும் எமது தேவைக்கு ஏற்ப நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும். அளவிற்கு மிகுதியானால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது எமது முன்னோர் அனுபவித்துக் கூறிய முதுமொழியாகும். எதற்கும் நாம் ஒரு 'வரையறை' வைத்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுப்பாடு நமக்கு எல்லா நிலைகளிலும் நம்மை பாதுகாத்துக் கொள்கின்றது. ஒரு கிரகம் சுபக்கிரகமாக இருந்தாலும் அந்தக் கிரகத்தோடு சேரும் பாவக் கிரகங்கள் இந்த சுபக்கிரகத்தின் நற்பலன்களையும் தடை செய்யும்.
சூரியன் 6, 8, 12 எனும் மறைவுஸ்தானம் அமைந்தால் வினைப்பயன் அதிகம் சேரும். சந்திரன் இடபம், மிதுனம், கடகம், விருட்சிகம், மகரம் ராசியில் அமைவதனால் வினைப்பயன் தொடரும். செவ்வாய் 6, 8, 12 எனும் நிலையிலும் சூரியனோடு சேர்க்கையும், நீச நிலை பெற்றாலும் வினைப்பயன் சேரும். புதன் பகை, நீசம் பெறும் ஸ்தானம் மத்திமம்.
வினைப்பலனுக்கு வித்திடும் குருபகவான் ஜாதக நிலையிலே பகை, நீசம், அஸ்தங்கதம் பெற்று அமைந்தால் தொடரும் வினைப்பயன். சுக்கிரன் கிரக நிலையிலே தனித்து பகை, நீசம் பெற்று அமைந்தால் மேற்படி வினைப்பயன் சேரும் நிலை அமையும். அடுத்து சனீஸ்வரன் இவர் ஜாதக நிலையில் பகை, நீச்சம் பெற்றாலும் சந்திரனுக்கு 1ஆம், 2ஆம், 4ஆம், 7ஆம், 8ஆம், 12ஆம் இடங்களில் அமைந்தால் வினைப்பயன் பற்றிடும்.
அடுத்து சர்ப்பகிரகங்களான ராகு, கேது ஜாதகத்தில் ராகுவுடன் சூரியன், குரு சேர்க்கையும் 1ஆம், 4ஆம், 7ஆம், 10ஆம் இடம் வினைப்பயனை வேண்டித்தரும்.
அடுத்து கேது இவர் ஜாதக அமைப்பில் விரயஸ்தானம் அமைந்தால் அதுவே அந்த ஜாதகர் கடைசிப்பிறவி மறுபிறப்பின்றி மோட்சம் பெறுவார் என்பது கேது நல்ல அமைப்பாக அமைந்தால் இதுவே பாவக்கிரக சேர்க்கை பெற்றால் வினைப்பயன் பற்றி விடும்.
எனவே முடிந்தளவிற்கு நாம் நல்வினை செய்தால் எம் சந்ததிக்கு நன்மை அமைவதுடன் எமது பாவ வினைகளும் குன்றிவிடும். நன்றே செய்க இன்றே செய்க!
துன்னையூர் கலாநிதி
ராம். தேவலோகேஸ்வரக்
குருக்கள்
ஒரே நேரத்தில், ஒரே இடத்தில் வளமிகு பயிர்களை நாட்டி சீராக வளர்த்துப் பாருங்கள். எல்லாப் பயிர்களும் நிறைவானதாக வளர்ந்து வரும் நிலையைப் பெறாது. ஒரு பகுதி நன்றாக வரும், ஒரு பகுதி பட்டுப்போகும். அதை விடவும் நீங்கள் கண்ணும் கருத்துமாய், அபூர்வமாய் வளர்க்க பாடுபட்டாலும், விலங்குகள், பூச்சிகள், பறவைகள் என ஏதோ ஒரு விதத்தில் சில பயிர்களுக்கு வளர முடியாத நிலை அமைந்துவிடும்.
இதற்கு நாம் என்ன சொல்ல முடியும். யாரை குறை கூற முடியும். பயிரிட்ட மண் வளத்தையா அல்லது பராமரிப்பில் ஏற்படும் கவலையீனத்தையா? எல்லா பயிர்களும் கெட்டுப்போனால் மண் வளத்தை குறை கூறலாம். எல்லாப் பயிர்களும் அழிந்து போனால் பராமரிப்பை குறை கூறலாம். இரண்டும் சரியாக இருந்தும் சில பயிர்கள் அழிந்துபோக, பட்டுப்போக, பயனற்றுப்போக, யார் காரணம். இதுதான் நாம் எம்மோடு கொண்டுவரும் வினை.
ஒரே நாளில் ஒரே நேரத்தில் ஒரே ஜாதகம் கொண்டு எத்தனையோ ஆயிரம் பேர் பிறக்கின்றார்கள்.
அத்தனை பேருக்கும் ஒரே பலாபலன் அமைந்து விடுவதில்லை. ஒருவர் கோடீஸ்வரராக வாழ்வார். ஒருவர் நாட்டை ஆள்வார். ஒருவர் பரம ஏழையாக இருப்பர். ஒரு சிலர் பிறந்த உடனேயே இவ்வுலகைவிட்டு உயிர் நீத்து இருப்பார். இப்படியாக பலதரப்பட்ட சூட்சுமங்கள் எங்களின் வாழ்விலே உண்டு. எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் உண்டு. அவற்றை உணர்ந்து அறியக்கூடிய பரிபக்குவம் நாம் பெறுகின்ற நிலை வருவதற்குள் எமது ஆயுட்காலம் முடிந்துவிடும். ஏனெனில், மனிதனுக்கே உரிய பலவீனங்களினால் நாம் சூழப் பெறுகின்றோம்.
பிறக்கின்ற ஒவ்வொரு மனிதனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும். இதை பலவீனம் என்று சொல்வதைவிட, ஆசை என்று சொல்லலாம். மண், பொன், பெண், மது, பதவி, புகழ் என்கின்ற வரையறைக்குள் மனிதன் அகப்பட்டுக்கொள்வதன் மூலம் இந்த விடயங்களில் பற்று அதிகமாகி, மிருகக்குணம் கொண்டோராய் மாறி விடுகின்றனர்.
எதில் அதிக பற்று வைக்கின்றோமோ அதுவே எமக்கு அதிக அசுர குணத்தை தந்து விடுகின்றது.
ஜாதக ரீதியாக ஒருவரின் பூர்வ புண்ணிய கர்ம வினை அறிய பஞ்சமஸ்தானம் எனப்படும் 5ஆம் பாவமும் விரய அயனஸ்தானம் எனப்படுகின்ற 12ஆம் பாவம், சுகஸ்தானம் எனும் 4ஆம் பாவம், பாக்கியஸ்தானம் எனும் 9ஆம் பாவம் என்பன எங்களின் வினைகளை அறியும் நிலைகளை தீர்மானிக்கும் ஸ்தானங்களாக அமைகின்றன.
மேற்படி பாவங்களின் ஆதிபத்திய கிரகநிலைகள், பாவக் கிரகங்களாகவும், மறைவு ஸ்தான நிலைகளில் நீசம்பெற்று அமைவனவாகவும் இருக்கும் நிலையில் அல்லது மேற்படி பாவங்களில் பாவக்கிரகங்களின் சேர்க்கை அமையும்போது, நமது வினை ஆரம்பமாகும்.
சுகஸ்தானம் தாயின் நிலை. பாக்கியஸ்தானம் தந்தையின் நிலை. இவை இரண்டும் சிறப்பாக அமைய வேண்டியது மிகவும் முக்கியமானது.
ஒருவரின் ஜாதகப் பலனுக்கு ஏற்ப அவரின் வாழ்வியல் வழிகாட்டல் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
பாவங்களும், வினைகளும், சூழ்ந்த நிலையிலே பிறந்தாலும் நல்ல வழிகாட்டல் அமைகின்றபோது, அதனூடாகவே ஓரளவு அனுகூலங்களை பெறக்கூடியதாய் இருக்கும்.
நல்ல சூழலில் எமது வாழ்வியல் அமையும் போது அந்த நல்ல விடயங்களை எமது வினைப்பயன் காரணமாக எமது மனம் ஏற்க மறுத்து நின்றாலும், பார்ப்பதும், கேட்பதும், நல்லவையாக இருக்கும்போது பூவோடு சேர்ந்த நாரும் கமழும் எனும் நிலை அங்கே மலரும்.
எனவே நாம் செய்யும் பாவங்கள் எம் சந்ததியைச் சூழும். எமது பிள்ளைகளுக்கு சொத்துகள், சுகங்கள் சேர்த்துவைக்க வேண்டும் என்கின்ற பிரயத்தனம், பிரயாசம், எல்லோருக்கும் உண்டு. அதை நல்ல வழியிலே சேகரித்து உங்கள் பிள்ளைகளுக்கு புண்ணியம், தர்மம் இவற்றைச் சேர்த்து வையுங்கள்.
வாழ்வில் நமக்கு நல்ல சிந்தனை, நல்ல புத்தி வந்து சேர்வதற்கு ஜோதிட ரீதியாக சில உபாயங்கள் உண்டு. பொதுவாக சில லக்கினம், ராசி உடையவர்கள் அதிகமான பிரச்சினைகளை சந்திக்கின்ற சூழலில் தவறுகள் பலவும் செய்ய வேண்டிய நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி விடுகின்றனர்.
இதற்கு அவர்களுக்கு அமைகின்ற கிரக நிலையே காரணமாகின்றது. அவற்றை நிவர்த்தி செய்ய முதலில் செய்யும் தவறுக்கு ஈடாக நன்மைகள் செய்து விடுங்கள்.
நல்லவர்கள் இருக்கும் இடத்திலே நன்மைகள் நிறைந்து பொழிந்து விளங்கும். அவரை சார்ந்தவர்களும் நல்ல எண்ணம் பெறுவார்கள். இதையே தர்மம் என்கின்றோம். இந்த தர்மம் நிலைக்க வேண்டும் என்கின்ற ஒரே காரணத்திற்காக மகாபாரதத்திலே கிருஷ்ணபரமாத்மா எத்தனை விதமான இராஜ தந்திரங்களை கையாண்டார்.
ஜோதிட ரீதியாக வாக்குஸ்தானம் எனப்படும் இரண்டாம் இடம், மனம், வாக்கு, குடும்பம் போன்ற நிலைகளுக்கு காரணியாகின்றது.
எனவே, இந்த நிலையிலே எமது வினைப்பயன் எம்மோடு ஒட்டிக்கொள்ளும் நிலை உண்டு. ஆகவே ஜோதிட ரீதியாக 2ஆம், 4ஆம், 5ஆம், 9ஆம், 12ஆம் பாவ நிலைகளும், அது சார்ந்த கிரக சாரங்களும் ஆதிபத்திய கிரகங்களும் மிகவும் முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை.
இவற்றினிலே அமைகின்ற கிரகங்களின் தன்மையானது எம்மை பாவச் செயல்களுக்கு ஊக்குவிக்கின்ற தன்மைகளைக் கொடுக்கும்.
மேற்படி பாவங்களில், சனீஸ்வரன், ராகு, கேது, சுக்கிரன் போன்ற கிரகங்களின் தன்மை நமது வினைப்பயன்களை விருத்தி பெற வைக்கின்றன.
எப்போதும் எமது தேவைக்கு ஏற்ப நாம் வாழ பழகிக்கொள்ள வேண்டும். அளவிற்கு மிகுதியானால் அமிர்தமும் நஞ்சாகும் என்பது எமது முன்னோர் அனுபவித்துக் கூறிய முதுமொழியாகும். எதற்கும் நாம் ஒரு 'வரையறை' வைத்து வாழப் பழகிக்கொள்ள வேண்டும்.
இந்தக் கட்டுப்பாடு நமக்கு எல்லா நிலைகளிலும் நம்மை பாதுகாத்துக் கொள்கின்றது. ஒரு கிரகம் சுபக்கிரகமாக இருந்தாலும் அந்தக் கிரகத்தோடு சேரும் பாவக் கிரகங்கள் இந்த சுபக்கிரகத்தின் நற்பலன்களையும் தடை செய்யும்.
சூரியன் 6, 8, 12 எனும் மறைவுஸ்தானம் அமைந்தால் வினைப்பயன் அதிகம் சேரும். சந்திரன் இடபம், மிதுனம், கடகம், விருட்சிகம், மகரம் ராசியில் அமைவதனால் வினைப்பயன் தொடரும். செவ்வாய் 6, 8, 12 எனும் நிலையிலும் சூரியனோடு சேர்க்கையும், நீச நிலை பெற்றாலும் வினைப்பயன் சேரும். புதன் பகை, நீசம் பெறும் ஸ்தானம் மத்திமம்.
வினைப்பலனுக்கு வித்திடும் குருபகவான் ஜாதக நிலையிலே பகை, நீசம், அஸ்தங்கதம் பெற்று அமைந்தால் தொடரும் வினைப்பயன். சுக்கிரன் கிரக நிலையிலே தனித்து பகை, நீசம் பெற்று அமைந்தால் மேற்படி வினைப்பயன் சேரும் நிலை அமையும். அடுத்து சனீஸ்வரன் இவர் ஜாதக நிலையில் பகை, நீச்சம் பெற்றாலும் சந்திரனுக்கு 1ஆம், 2ஆம், 4ஆம், 7ஆம், 8ஆம், 12ஆம் இடங்களில் அமைந்தால் வினைப்பயன் பற்றிடும்.
அடுத்து சர்ப்பகிரகங்களான ராகு, கேது ஜாதகத்தில் ராகுவுடன் சூரியன், குரு சேர்க்கையும் 1ஆம், 4ஆம், 7ஆம், 10ஆம் இடம் வினைப்பயனை வேண்டித்தரும்.
அடுத்து கேது இவர் ஜாதக அமைப்பில் விரயஸ்தானம் அமைந்தால் அதுவே அந்த ஜாதகர் கடைசிப்பிறவி மறுபிறப்பின்றி மோட்சம் பெறுவார் என்பது கேது நல்ல அமைப்பாக அமைந்தால் இதுவே பாவக்கிரக சேர்க்கை பெற்றால் வினைப்பயன் பற்றி விடும்.
எனவே முடிந்தளவிற்கு நாம் நல்வினை செய்தால் எம் சந்ததிக்கு நன்மை அமைவதுடன் எமது பாவ வினைகளும் குன்றிவிடும். நன்றே செய்க இன்றே செய்க!
துன்னையூர் கலாநிதி
ராம். தேவலோகேஸ்வரக்
குருக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக