மருத்துவத்துறையில் பல புதிய கண்டுபிடிப்புகள் தொடர்ந்து கொண்டுதானிருக்கின்றன. இவற்றால் வைத்தியர்கள் தமது சிகிச்சைகளை இலகுவாகவும் மேம்பட்ட முறையிலும் வழங்கக்கூடியதாக இருப்பதுடன் நோயாளிகளும் சிறந்ததொரு பரிகாரத்தைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாகவும் உள்ளது.
இவ்வகையான நவீன தொழில்நுட்ப சத்திரசிகிச்சை முறை தான் லப்பிரஸ்கோப்பி சத்திரசிகிச்சை (Laparoscopy) ஆகும். இந்த நவீன சத்திரசிகிச்சை முறையான லப்பிரஸ்கோப்பி பெண் நோயியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எவரும் சத்திரசிகிச்சை என்றவுடன் பல விடயங்களை யோசித்து தயங்குவது வழமை. ஏற்படப்போகும் காயத்தின் அளவு, வைத்தியசாலையில் தங்க வேண்டி வரும் நாட்களின் எண்ணிக்கை, வலி, சத்திர சிகிச்சையின் பின் மீண்டும் அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப எடுக்கும் நாட்கள், சிரமங்கள் போன்றமை அவ்விடயங்களாகும்.
ஆனால் லப்பிரஸ்கோப்பி சத்திர சிகிச்சை மேற்குறிப்பிட்ட சிக்கல்கள் எதுவுமில்லாது எல்லோராலும் விரும்பப்படுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான சத்திர சிகிச்சையாக உள்ளது.
ஏனெனில் இவ்வகை சத்திர சிகிச்சையின் போது வயிற்றில் பெரிய காயங்கள் ஏற்படுவதில்லை. வைத்தியசாலையில் நாட்கணக்கில் தங்க வேண்டிய அவசியமில்லை. ஒரே நாளில் வீடு செல்லக்கூடியதாக உள்ளது. சத்திரசிகிச்சையின் பின்னர் ஏற்படும் வலி மிகக்குறைவாக இருப்பதுடன் ஒரு சில நாட்களில் மீண்டும் தமது அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பக்கூடியதாகவும் இருக்கின்றது.
அதிலும் பெண்கள் தமது அழகிலும் உடலமைப்பிலும் அதிக அக்கறை செலுத்துபவர்கள். ஆதலால் பெரிய காயத்தழும்புகள் அடையாளங்கள் அற்ற அந்த நவீன சத்திரசிகிச்சையை அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
லப்பிரஸ்கோப்பி சத்திரசிகிச்சை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது?
லப்பிரஸ்கோப்பி சத்திர சிகிச்சையின் போது ஒருவரை முழுதாக மயக்கமடையச் செய்ய வேண்டும். பின்னர் அவரது தொப்புள் பகுதியில் சிறியதொரு துளையைப் போட்டு அதற்கூடாக ஒரு சிறிய குழாய்போன்ற புகைப்படக் கருவியை உட்செலுத்தி பின்னர் அதிலிருந்து இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தொலைக்காட்சியில் வயிற்றுள் இருக்கும் நிலைவரத்தைப் பார்க்க முடியும். தொலைக்காட்சியில் தெரியும் படத்தை மையமாக வைத்து தேவைப்படும் ஏனைய உபகரணங்களை உட்செலுத்தி மேற்கொள்ள வேண்டிய சத்திர சிகிச்சையை செய்யக்கூடியதாக உள்ளது. இதற்கான நேரம் சத்திர சிகிச்சையின் வகையைப் பொறுத்து 15நிமிடத்திலிருந்து 45நிமிடங்கள் வரை வேறுபடும். சத்திரசிகிச்சை முடிவடைந்து உணர்வு திரும்பியபின் அதே நாளில் கூடுதலானவர்கள் வீடு திரும்பக்கூடியதாக உள்ளது.
பெண் நோயியலில் லப்பிரஸ்கோப்பி முறையின் பங்களிப்பு என்ன?
பெண் நோயியலில் உள்ள நோய்கள் எல்லாவற்றுக்கும் தீர்வுகள் இந்த லப்பிரஸ்கோப்பி முறை மூலம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இதன்மூலம் பெரிய காயத்தழும்புகளை ஏற்படுத்தும் திறந்து செய்யப்படும் பாரம்பரிய சத்திர சிகிச்சைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.
பின்வரும் தேவைகளுக்காக பெண் நோயியலில் லப்பிரஸ்கோப்பி பாவிக்கப்படுகின்றது.
* பெண்களில் நீண்ட காலமாக அடி வயிற்றில் இருந்து வரும் வலி அல்லது நோவைக் கண்டறிவதில் சிரமங்கள் இருக்கலாம். இதன்போது நாம் லப்பிரஸ்கோப்பி மூலம் தொப்புள் பகுதியில் ஒரு துளையைப் போட்டு அதனூடாக உபகரணத்தை உட்செலுத்தி உள்ளிருக்கும் நிலவரங்களையும் வயிற்று வலிக்கான காரணத்தையும் கண்டறியக் கூடியதாக இருக்கின்றது. சிலவேளைகளில்
இப்பரிசோதனையில் எதுவும் கண்டறியப்படாமல் உள் உறுப்புகள் யாவும் பிரச்சினைகளற்று சாதாரணமாக இருப்பின் இது குறித்து பெண்ணுக்கு நாம் ஆறுதல் கூறும்போது அவருக்கு தனது வயிற்று வலி தொடர்பான சந்தேகமும் பயமும் நீங்கி தமக்கு எவ்விதமான பெரிய நோயும் இல்லை என மனரீதியாக ஆறுதல் அடைவதுடன் வயிற்றுவலிப் பிரச்சினையும் தீர்க்கப்படுகின்றது.
* பெண்களில் ஏற்படும் ஓவரியன் சிஸ்ற் அல்லது சூலக கட்டிகள் வயது எல்லை இன்றிக் கலங்க வைக்கும் விடயமாகவே இருந்து வருகின்றது. அதிலும் இந்த சூலகக் கட்டிகள் 16 – 18 வயது இளம் பெண்களைக் கூட விட்டுவைப்பதில்லை. இவ்வாறு சூலகக் கட்டிகளால் அவதியுறும் பெண்களில் அவற்றை அகற்றவேண்டும் என நாம் முடிவெடுத்தால் அதற்கு லப்பிரஸ்கோப்பி சத்திர சிகிச்சை மிகவும் பயனளிக்கின்றது. இம்முறை மூலம் இளம் பெண்களுக்கு சிகிச்சையளிக்கும் போது அவர்களது வயிற்றில் பெரிய வெட்டுக்காயங்கள் அடையாளங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது. இதனால் அவர்களின் பிந்திய மண வாழ்க்கையில் அவர்களுக்கு ஏதோ நோய் இருந்துள்ளது. பெரிய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது போன்ற மற்றவரது தவறான கற்பனை அபிப்பிராயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க முடியும்.
* நடுத்தர வயதுடைய பெண்களில் மாதவிடாய்க் காலங்களில் தாங்க முடியாத அடிவயிற்று வலி சிலரில் ஏற்படுகின்றது. இந்த வயிற்றுவலி மாதவிடாய் தொடங்கிய ஓரிரு நாட்களுக்கு முன்னர் தொடங்கி தொடர்ந்து மாதவிடாய் வரும் நாட்கள் அனைத்தும் நீடிக்கும். இவ்வாறானவர்களில் எண்டோமெற்றியோசிஸ் அல்லது அடிவயிற்றில் ஏற்பட்ட நுண்ணுயிர்த் தொற்றுக்காரணமாக இருக்கலாம்.
எண்டோமெற்றியோசிஸ் என்பது பெண்களில் கர்ப்பப்பையின் உள்ளே இருக்கும் இழையங்கள் போன்று கர்ப்பப்பையின் வெளியேயும் புண்கள் போன்று காணப்படுவதனால் உள்ளுறுப்புக்களை ஒன்றோடொன்று ஒட்டி நோவையும் வலியையும் ஏற்படுத்தும். இதனை ஸ்கேன் பரிசோதனை மூலமும் கண்டறிய முடியாது.
இதனால் லப்பிரஸ்கோப்பி முறைதான் நிலைமையை நேரில் பார்த்து உறுதிப்படுத்த உதவுகின்றது. அத்துடன் இம்முறை மூலம் இந்நோய்க்கான சிகிச்சைகளையும் தீர்வுகளையும் வழங்கக் கூடியதாகவுள்ளது.
குழந்தைப் பாக்கியம் தாமதமடைபவர்களில் லப்பிரஸ்கோப்பி சத்திரசிகிச்சை முக்கிய பங்கு வகிக்கின்றது.
* இவர்களுக்கு இது ஒரு தாரகமந்திரமாக உள்ளது. அதாவது இவர்களில் குழந்தைப்பாக்கியம் தாமதமடைவதற்கான காரணங்களைக் கண்டறியும் போது பலோப்பியன் குழாய்களில் அடைப்புக்கள் உள்ளனவா? எனப் பார்க்கவேண்டும். இதற்கு லப்பிரஸ்கோப்பி முறை மூலம் மைப்பதார்த்தம் பலோப்பிய் குழாய் வழியாக செல்வதை அவதானித்து அறியலாம்.
*மேலும் எண்டோமெற்றியோசிஸ் நோய் இவர்களில் கூடுதலாகக் காணப்படும் போதும் லப்பிரஸ் கோப்பி மூலம் சிகிச்சையளிக்கலாம்.
* பைப்புரோயிட் (Fibroids) கட்டிகள் இருப்பவர்களில் அவற்றை அகற்றவும் லப்பிரஸ்கோப்பி முறை உதவுகின்றது. சூலகங்களில் முட்டை வளர்ச்சியடைந்து வெளியேறாமல் இருக்கும் பொலிசிஸ்ரிக் ஓவரி நோய்க்கு சூலகங்களில் சிறிய துளைகள் போடுவதற்கும் லப்பிரஸ்கோப்பி முறை உதவுகின்றது.
* கருத்தரித்தவர்களில் ஆரம்ப கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பையினுள் தங்க வேண்டிய கரு கர்ப்பப்பைக்கு வெளியே பலோப்பியன் குழாய்களில் தங்கும் நிலை சிலரில் ஏற்படுகின்றது. ( Ectopic Pregnancy) இவர்களில் இந்நிலையினை வெடிப்பதற்கு முன்னர் கண்டறிந்தால் இதற்கான சத்திரசிகிச்சையாக இதனை அகற்றுதல் லப்பிரஸ்கோப்பி முறை மூலம் இலகுவாக மேற்கொள்ள முடியும். இல்லாவிடின் இது வெடித்து மேலும் சிக்கல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
* கர்ப்பப்பை அகற்றுதல் மற்றும் கர்ப்பப்பை தொடர்பான கட்டிகளான பைபுரோயிட் கட்டிகள் அகற்றுதல் என்பனவும் லப்பிரஸ்கோப்பி மூலம் செய்யக்கூடியதாகவுள்ளது.
இவ்வாறு லப்பிரஸ்கோப்பி நவீன சத்திரசிகிச்சை பெண் நோயியல் சிகிச்சை முறைகளில் பெரிதும் உதவுகின்றது.
இம்முறை மூலம் பெரிய காயங்கள் ஏற்படுவதில்லை. வைத்தியசாலையிலிருந்து ஒரே நாளில் வீடு செல்லலாம். பின்னர் விரைவில் தமது அன்றாட கருமங்களுக்குத் திரும்பலாம்.
இவை மட்டுமல்ல இம்முறை மூலமான சிகிச்சைக்கு செலவீனங்களும் வைத்தியசாலைக் கட்டணங்களும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.
இவ்வாறு பல நன்மைகள் இருப்பதால் இம்முறை தற்போது எல்லோராலும் பேசப்படுவதாகவும் பலராலும் வரவேற்கப்படுவதுமாகக் காணப்படுகின்றது.
இவ்வகையான நவீன தொழில்நுட்ப சத்திரசிகிச்சை முறை தான் லப்பிரஸ்கோப்பி சத்திரசிகிச்சை (Laparoscopy) ஆகும். இந்த நவீன சத்திரசிகிச்சை முறையான லப்பிரஸ்கோப்பி பெண் நோயியலில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது எவரும் சத்திரசிகிச்சை என்றவுடன் பல விடயங்களை யோசித்து தயங்குவது வழமை. ஏற்படப்போகும் காயத்தின் அளவு, வைத்தியசாலையில் தங்க வேண்டி வரும் நாட்களின் எண்ணிக்கை, வலி, சத்திர சிகிச்சையின் பின் மீண்டும் அன்றாட வாழ்க்கைக்கு திரும்ப எடுக்கும் நாட்கள், சிரமங்கள் போன்றமை அவ்விடயங்களாகும்.
ஆனால் லப்பிரஸ்கோப்பி சத்திர சிகிச்சை மேற்குறிப்பிட்ட சிக்கல்கள் எதுவுமில்லாது எல்லோராலும் விரும்பப்படுவதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுமான சத்திர சிகிச்சையாக உள்ளது.
ஏனெனில் இவ்வகை சத்திர சிகிச்சையின் போது வயிற்றில் பெரிய காயங்கள் ஏற்படுவதில்லை. வைத்தியசாலையில் நாட்கணக்கில் தங்க வேண்டிய அவசியமில்லை. ஒரே நாளில் வீடு செல்லக்கூடியதாக உள்ளது. சத்திரசிகிச்சையின் பின்னர் ஏற்படும் வலி மிகக்குறைவாக இருப்பதுடன் ஒரு சில நாட்களில் மீண்டும் தமது அன்றாட வாழ்க்கைக்குத் திரும்பக்கூடியதாகவும் இருக்கின்றது.
அதிலும் பெண்கள் தமது அழகிலும் உடலமைப்பிலும் அதிக அக்கறை செலுத்துபவர்கள். ஆதலால் பெரிய காயத்தழும்புகள் அடையாளங்கள் அற்ற அந்த நவீன சத்திரசிகிச்சையை அவர்கள் பெரிதும் விரும்புகின்றனர்.
லப்பிரஸ்கோப்பி சத்திரசிகிச்சை எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது?
லப்பிரஸ்கோப்பி சத்திர சிகிச்சையின் போது ஒருவரை முழுதாக மயக்கமடையச் செய்ய வேண்டும். பின்னர் அவரது தொப்புள் பகுதியில் சிறியதொரு துளையைப் போட்டு அதற்கூடாக ஒரு சிறிய குழாய்போன்ற புகைப்படக் கருவியை உட்செலுத்தி பின்னர் அதிலிருந்து இணைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கும் தொலைக்காட்சியில் வயிற்றுள் இருக்கும் நிலைவரத்தைப் பார்க்க முடியும். தொலைக்காட்சியில் தெரியும் படத்தை மையமாக வைத்து தேவைப்படும் ஏனைய உபகரணங்களை உட்செலுத்தி மேற்கொள்ள வேண்டிய சத்திர சிகிச்சையை செய்யக்கூடியதாக உள்ளது. இதற்கான நேரம் சத்திர சிகிச்சையின் வகையைப் பொறுத்து 15நிமிடத்திலிருந்து 45நிமிடங்கள் வரை வேறுபடும். சத்திரசிகிச்சை முடிவடைந்து உணர்வு திரும்பியபின் அதே நாளில் கூடுதலானவர்கள் வீடு திரும்பக்கூடியதாக உள்ளது.
பெண் நோயியலில் லப்பிரஸ்கோப்பி முறையின் பங்களிப்பு என்ன?
பெண் நோயியலில் உள்ள நோய்கள் எல்லாவற்றுக்கும் தீர்வுகள் இந்த லப்பிரஸ்கோப்பி முறை மூலம் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கின்றது. இதன்மூலம் பெரிய காயத்தழும்புகளை ஏற்படுத்தும் திறந்து செய்யப்படும் பாரம்பரிய சத்திர சிகிச்சைகளை தவிர்த்துக் கொள்ளலாம்.
பின்வரும் தேவைகளுக்காக பெண் நோயியலில் லப்பிரஸ்கோப்பி பாவிக்கப்படுகின்றது.
* பெண்களில் நீண்ட காலமாக அடி வயிற்றில் இருந்து வரும் வலி அல்லது நோவைக் கண்டறிவதில் சிரமங்கள் இருக்கலாம். இதன்போது நாம் லப்பிரஸ்கோப்பி மூலம் தொப்புள் பகுதியில் ஒரு துளையைப் போட்டு அதனூடாக உபகரணத்தை உட்செலுத்தி உள்ளிருக்கும் நிலவரங்களையும் வயிற்று வலிக்கான காரணத்தையும் கண்டறியக் கூடியதாக இருக்கின்றது. சிலவேளைகளில்
இப்பரிசோதனையில் எதுவும் கண்டறியப்படாமல் உள் உறுப்புகள் யாவும் பிரச்சினைகளற்று சாதாரணமாக இருப்பின் இது குறித்து பெண்ணுக்கு நாம் ஆறுதல் கூறும்போது அவருக்கு தனது வயிற்று வலி தொடர்பான சந்தேகமும் பயமும் நீங்கி தமக்கு எவ்விதமான பெரிய நோயும் இல்லை என மனரீதியாக ஆறுதல் அடைவதுடன் வயிற்றுவலிப் பிரச்சினையும் தீர்க்கப்படுகின்றது.
* பெண்களில் ஏற்படும் ஓவரியன் சிஸ்ற் அல்லது சூலக கட்டிகள் வயது எல்லை இன்றிக் கலங்க வைக்கும் விடயமாகவே இருந்து வருகின்றது. அதிலும் இந்த சூலகக் கட்டிகள் 16 – 18 வயது இளம் பெண்களைக் கூட விட்டுவைப்பதில்லை. இவ்வாறு சூலகக் கட்டிகளால் அவதியுறும் பெண்களில் அவற்றை அகற்றவேண்டும் என நாம் முடிவெடுத்தால் அதற்கு லப்பிரஸ்கோப்பி சத்திர சிகிச்சை மிகவும் பயனளிக்கின்றது. இம்முறை மூலம் இளம் பெண்களுக்கு சிகிச்சையளிக்கும் போது அவர்களது வயிற்றில் பெரிய வெட்டுக்காயங்கள் அடையாளங்கள் ஏற்படுவது தவிர்க்கப்படுகின்றது. இதனால் அவர்களின் பிந்திய மண வாழ்க்கையில் அவர்களுக்கு ஏதோ நோய் இருந்துள்ளது. பெரிய சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது போன்ற மற்றவரது தவறான கற்பனை அபிப்பிராயங்களிலிருந்து அவர்களைப் பாதுகாக்க முடியும்.
* நடுத்தர வயதுடைய பெண்களில் மாதவிடாய்க் காலங்களில் தாங்க முடியாத அடிவயிற்று வலி சிலரில் ஏற்படுகின்றது. இந்த வயிற்றுவலி மாதவிடாய் தொடங்கிய ஓரிரு நாட்களுக்கு முன்னர் தொடங்கி தொடர்ந்து மாதவிடாய் வரும் நாட்கள் அனைத்தும் நீடிக்கும். இவ்வாறானவர்களில் எண்டோமெற்றியோசிஸ் அல்லது அடிவயிற்றில் ஏற்பட்ட நுண்ணுயிர்த் தொற்றுக்காரணமாக இருக்கலாம்.
எண்டோமெற்றியோசிஸ் என்பது பெண்களில் கர்ப்பப்பையின் உள்ளே இருக்கும் இழையங்கள் போன்று கர்ப்பப்பையின் வெளியேயும் புண்கள் போன்று காணப்படுவதனால் உள்ளுறுப்புக்களை ஒன்றோடொன்று ஒட்டி நோவையும் வலியையும் ஏற்படுத்தும். இதனை ஸ்கேன் பரிசோதனை மூலமும் கண்டறிய முடியாது.
இதனால் லப்பிரஸ்கோப்பி முறைதான் நிலைமையை நேரில் பார்த்து உறுதிப்படுத்த உதவுகின்றது. அத்துடன் இம்முறை மூலம் இந்நோய்க்கான சிகிச்சைகளையும் தீர்வுகளையும் வழங்கக் கூடியதாகவுள்ளது.
குழந்தைப் பாக்கியம் தாமதமடைபவர்களில் லப்பிரஸ்கோப்பி சத்திரசிகிச்சை முக்கிய பங்கு வகிக்கின்றது.
* இவர்களுக்கு இது ஒரு தாரகமந்திரமாக உள்ளது. அதாவது இவர்களில் குழந்தைப்பாக்கியம் தாமதமடைவதற்கான காரணங்களைக் கண்டறியும் போது பலோப்பியன் குழாய்களில் அடைப்புக்கள் உள்ளனவா? எனப் பார்க்கவேண்டும். இதற்கு லப்பிரஸ்கோப்பி முறை மூலம் மைப்பதார்த்தம் பலோப்பிய் குழாய் வழியாக செல்வதை அவதானித்து அறியலாம்.
*மேலும் எண்டோமெற்றியோசிஸ் நோய் இவர்களில் கூடுதலாகக் காணப்படும் போதும் லப்பிரஸ் கோப்பி மூலம் சிகிச்சையளிக்கலாம்.
* பைப்புரோயிட் (Fibroids) கட்டிகள் இருப்பவர்களில் அவற்றை அகற்றவும் லப்பிரஸ்கோப்பி முறை உதவுகின்றது. சூலகங்களில் முட்டை வளர்ச்சியடைந்து வெளியேறாமல் இருக்கும் பொலிசிஸ்ரிக் ஓவரி நோய்க்கு சூலகங்களில் சிறிய துளைகள் போடுவதற்கும் லப்பிரஸ்கோப்பி முறை உதவுகின்றது.
* கருத்தரித்தவர்களில் ஆரம்ப கர்ப்ப காலத்தில் கர்ப்பப்பையினுள் தங்க வேண்டிய கரு கர்ப்பப்பைக்கு வெளியே பலோப்பியன் குழாய்களில் தங்கும் நிலை சிலரில் ஏற்படுகின்றது. ( Ectopic Pregnancy) இவர்களில் இந்நிலையினை வெடிப்பதற்கு முன்னர் கண்டறிந்தால் இதற்கான சத்திரசிகிச்சையாக இதனை அகற்றுதல் லப்பிரஸ்கோப்பி முறை மூலம் இலகுவாக மேற்கொள்ள முடியும். இல்லாவிடின் இது வெடித்து மேலும் சிக்கல் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
* கர்ப்பப்பை அகற்றுதல் மற்றும் கர்ப்பப்பை தொடர்பான கட்டிகளான பைபுரோயிட் கட்டிகள் அகற்றுதல் என்பனவும் லப்பிரஸ்கோப்பி மூலம் செய்யக்கூடியதாகவுள்ளது.
இவ்வாறு லப்பிரஸ்கோப்பி நவீன சத்திரசிகிச்சை பெண் நோயியல் சிகிச்சை முறைகளில் பெரிதும் உதவுகின்றது.
இம்முறை மூலம் பெரிய காயங்கள் ஏற்படுவதில்லை. வைத்தியசாலையிலிருந்து ஒரே நாளில் வீடு செல்லலாம். பின்னர் விரைவில் தமது அன்றாட கருமங்களுக்குத் திரும்பலாம்.
இவை மட்டுமல்ல இம்முறை மூலமான சிகிச்சைக்கு செலவீனங்களும் வைத்தியசாலைக் கட்டணங்களும் ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.
இவ்வாறு பல நன்மைகள் இருப்பதால் இம்முறை தற்போது எல்லோராலும் பேசப்படுவதாகவும் பலராலும் வரவேற்கப்படுவதுமாகக் காணப்படுகின்றது.
டாக்டர் கு.சுஜாகரன்,
மகப்பேற்று பெண்நோயியல்
சத்திர சிகிச்சை நிபுணர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக