மகாத்மா காந்தி 1948 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30 ஆம் திகதி பிரார்த்தனைக்குச் செல்லும் வழியில் இந்து மத வெறியன் ஒருவனால் கண்முன் நேரே சுடப்பட்டு “ஹே ராம்” என்று முணங்கிய வண்ணம் இறையடி சேர்ந்து 66 வருடங்களாகிவிட்டன.
மகாத்மா காந்தி 1869 ஆம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதி இந்தியாவின் குஜ ராத் மாநிலத்தில் “போர்பந்தர்” என்ற நகரில் கரம்சாந்த் காந்தி, புத்திலிபாய் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
காந்தி தனது ஏழு வயதில் பள்ளிப்படிப் பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதை ஒத்த கஸ்தூரிபாயை மணந்தார். பிற் காலத்தில் அவர்கள் நான்கு ஆண் மகன் களைப் பெற்றெடுத்தனர். ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ் தாஸ் (1900). தனது 16ஆவது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார். தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பரிஸ்டர் (Barrister) எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாபிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று வெற்றிடம் இருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார்.
அச்சமயம் தென்னாபிரிக்காவில் ஆங்கி லேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. அதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாபிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், எதிர்காலத்தில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது.
அங்குள்ள நேடல் மாகாணத்தின் டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதி மன்றத்தை விட்டு உடனே வெளியேறினார்.
பிறகு ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் புகையிரத முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் புகையிரத நிலை யத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.
தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நேடல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர்.
காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க் கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ஆம் ஆண்டு நேடல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நேடல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
1906 ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாக் கிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அஹிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாபிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.
தென்னாபிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத் தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கி ரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரஸில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
1930 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாக் கிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி 1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி அன்று 78 சத்தியாக் கிரகிகளுடன் அஹமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.
23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும், இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாக் கிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ஆம் ஆண்டு நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு “போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது காந்தி சொன்ன வாக்கியம் “செய் அல்லது செத்து மடி” ஆகும்.
பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்துக்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்டது அவருக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. இந்த இருபெரும் சமூகத்தினரின் நல்லிணக்கத்திற்காக தன் வாழ்நாளில் பெரும் பாலான நாட்களைச் செலவழித்தார்.
1945ஆம் ஆண்டில், பாரத நாட்டை இரு துண்டுகளாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இருநாடுகளாக பிரிப்பது என்ற யோசனையை பிரிட்டிஷார் முன்வைத்தனர். அதுதொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் சமாதான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
மதத்தின் அடிப்படையில் இந்தியாவை துண்டாட முனைந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், அதற்காக மவுன்ட்பேட்டன் திட்டம் என்ற ஒரு திட்டத்தை 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வந்தனர்.
இதற்கு காந்திஜி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், இந்த இரண்டு மதத்தினரும் நாட்டின் பல நகரங்களில் மோதிக் கொண்டதில் ஏராளமானோர் இறந்தனர். இது, காந்திஜிக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. கல்கத்தா மற்றும் டில்லியில் நடந்த மதக்கலவரங்களைக் கண்டித்தும், மக்கள் அமைதி வழிக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தியும் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
பாரத நாடு இந்தியா -– பாகிஸ்தான் என்று இருவேறு நாடுகளாக கூறுபோடப்பட்டபோது உருவான மதக் கலவரத்தை இராணுவத்தாலோ, காவல்துறையினராலோ அடக்க முடியவில்லை. ஆனால் மகாத்மாவின் உண் ணா நோன்பு வாயிலாக விடுத்த அமைதி செய்தி இரத்த வெறியில் திளைத்த மக்களின் உணர்வுகளை சமாதானத்தை நோக்கி தட்டி எழுப்பியது. கிழக்கே நவ்காளியில் நடந்த மத படுகொலைகளையும், மேற்கே பஞ்சாப் பகுதியில் நடந்த மத வெறியாட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவந்தது.
தனது சாத்வீக போராட்டத்தை விடுதலைக்கான ஆயுதமாக மட்டுமே காந்தி பயன்படுத்தி நிறுத்திக் கொள்ளவில்லை. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 55 கோடி ரூபாவை பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை கொடுக்க மறுத்த போது, மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி அவர்களை ஒப்புக்கொள்ளச் செய்தார். பிரிவினையை மகாத்மா காந்தி ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் பிரிவினையை ஏற்றுக் கொண்டவர்களை அதற்குரிய நியாயமான நடைமுறைகளை தனது சாத்வீக போராட்டத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளச் செய்தார் மகாத்மா.
விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப பேச்சுவார்த்தையின்படி பாகிஸ் தான் தனி நாடாக வேண்டும் என்பதில் கராச்சியை சேர்ந்த முகம்மது அலி ஜின்னா மிகவும் பிடிவாதமாக இருந்தார்.
ஹைதராபாத்தை சேர்ந்த ஜவஹர்லால் நேருவின் மிக நெருங்கிய நண்பரான ஜாகிர் ஹூசைன் பாகிஸ்தான் பிரிபடாத பாரதமாக விளங்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார்.
பாகிஸ்தானின் முகம்மது அலி ஜின்னாவும் இந்தியாவின் ஜாகிர் ஹூசைனும் கருத்து மோதல்களில் கடும் சொற்போரில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் தனி நாடாக பிரிவதை காந்தி, ஜவஹர்லால் நேரு, ஜாகிர் ஹூசைன் போன்றோர் விரும்பவில்லை. பாகிஸ்தான் பிரிவினையை கொண்டு வந்த பிரிட்டிஷாருக்கு பாகிஸ்தானை பிரிப்பதா இல்லையா என்ற ஒரு பிரச்சினை ஏற்பட்டது.
பிரிட்டிஷாருக்கும் காந்தி, ஜவஹர்லால் நேரு, முகம்மது அலி ஜின்னா, ஜாகிர் ஹூசைன் உட்பட்ட முக்கியஸ்தர்களுக்கும் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிரிட்டிஷாரிடம் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை கூறியிருந்த போதிலும் மகாத்மா காந்தியின் கருத்தையே ஏற்றனர். பாகிஸ்தான் பிரிபடுவதை விரும்பாத மகாத்மா காந்தி நேர்மையுடன் பாகிஸ்தானை தனி நாடாக ஆக்குவதற்கு பிரிட்டிஷாரிடம் ஆலோசனை கூறினார். மகாத்மா காந்தி ஒருகணம் நேர்மை தவறின் பாகிஸ்தான் எனும் நாடு உதயமாகி இருக்காது. இந்தியாவின் ஒரு மிகப் பெரிய மாநிலமாக இருந்திருக்கும்.
இது போன்ற பல போராட்டங்களின் முடி வில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் நாள் பாகிஸ்தான் சுதந்திர நாடாக மலர்ந்தது. இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் 1961 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி காந்தி தபால்தலையை வெளியிட்ட நாடு தன் வாழ்நாளில் மிதிக்காத நாடான அமெரிக்கா ஆகும். அவரின் 28,835 நாட்களில் 2,338 நாட்கள் சிறையில் கழித்தார். வெளியில் இருந்த நாட்களிலும் உணவருந்திய நாட்கள் வெகு குறைவு. 28 முறை உண்ணாவிரதம் இருந்துள்ளார். குறைந்தபட்சம் ஒருநாள் தொடக்கம் 12 நாட்கள் வரை அவர் உணவு அருந்தாமல் தன்னைத்தானே வருத்தியுள் ளார்.
நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, மார்டின் லூதர்கிங், ஆங் சான் சூகி, அடால்ஃபோ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு முக்கியக் காரணம், காந் திய வழியைப் பின்பற்றியதுதான் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். ஆனால், காந்திக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை!. காந்தியின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந் துக்களுக்கும், இந்தியாவிற்கும் எதிரானதாக வும், முஸ்லிம்களுக்கு ஆதரவானதாகவும் இருப்பதாகவே கருதிய இந்துமத தீவிரவாதி கள் காந்தியை சுட்டுக்கொன்றனர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்திய தன் காரணமாக மகாத்மா காந்தி "சுதந்திர இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படு கிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் வேறு சில நாட்டு விடுதலை இயக்கங்களுக் கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
அல்ஹாஜ் எம்.எப்.எம் இக்பால்,
யாழ்ப்பாணம்.
மகாத்மா காந்தி 1869 ஆம் ஆண்டு ஒக்டோபர் இரண்டாம் திகதி இந்தியாவின் குஜ ராத் மாநிலத்தில் “போர்பந்தர்” என்ற நகரில் கரம்சாந்த் காந்தி, புத்திலிபாய் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார்.
காந்தி தனது ஏழு வயதில் பள்ளிப்படிப் பில் ஒரு சுமாரான மாணவனாகவே காணப்பட்டார். காந்தி தனது 13ஆம் வயதில் தம் வயதை ஒத்த கஸ்தூரிபாயை மணந்தார். பிற் காலத்தில் அவர்கள் நான்கு ஆண் மகன் களைப் பெற்றெடுத்தனர். ஹரிலால் (1888), மணிலால் (1892), ராம்தாஸ் (1897), தேவ் தாஸ் (1900). தனது 16ஆவது வயதில் காந்தி தன் தந்தையை இழந்தார். தனது 18ஆம் வயதில் பள்ளிப்படிப்பு முடிந்த பிறகு பரிஸ்டர் (Barrister) எனப்படும் வழக்கறிஞர் படிப்பிற்காக காந்தி இங்கிலாந்து சென்றார். தன் படிப்பை வெற்றிகரமாக முடித்து தாயகம் திரும்பிய காந்தி பம்பாயில் சிறிது காலம் வழக்கறிஞராக பணியாற்றினார். இது வெற்றிகரமாக அமையாததால் தன் அண்ணன் இருப்பிடமான ராஜ்கோட்டிற்கு சென்ற காந்தி, அங்கேயுள்ள நீதிமன்றத்தில் வழக்காட வருபவர்களின் படிவங்களை நிரப்பும் எளிய பணியில் ஈடுபட்டார். ஆனால் அங்கிருந்த ஆங்கிலேய அதிகாரியிடம் ஏற்பட்ட சிறிய தகராறால் இவ்வேலையும் பறிபோனது. இச்சமயத்தில் தென்னாபிரிக்காவில் தன் தகுதிக்கேற்ற வேலை ஒன்று வெற்றிடம் இருப்பதாக அறிந்த காந்தி, 1893 ஏப்ரல் மாதம் அப்துல்லாஹ் அன் கோ எனும் இந்திய நிறுவனம் ஒன்றின் உதவியுடன் உடனே அங்கு பயணமானார்.
அச்சமயம் தென்னாபிரிக்காவில் ஆங்கி லேயர் ஆட்சியில் நிறவெறியும் இனப்பாகுபாடும் மிகுந்து இருந்தது. அதுவரை அரசியல் ஈடுபாடில்லாது தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டுமே கவனித்து வந்த இளைஞராயிருந்தார் காந்தி. தென்னாபிரிக்காவில் அவருக்கேற்பட்ட அனுபவங்கள், எதிர்காலத்தில் அவரை ஒரு மாபெரும் அரசியல் சக்தியாக உருவாக்க உதவியது.
அங்குள்ள நேடல் மாகாணத்தின் டர்பன் நகரில் உள்ள நீதிமன்றத்தில் ஒருநாள் இந்திய வழக்கப்படி தலைப்பாகை அணிந்து வழக்காடச்சென்ற காந்தியிடம் அத்தலைப்பாகையை விலக்குமாறு நீதிமன்றத்தின் நீதிபதி உத்தரவிட்டார். காந்தியோ இவ்வுத்தரவை எதிர்க்கும் பொருட்டு நீதி மன்றத்தை விட்டு உடனே வெளியேறினார்.
பிறகு ஒரு நாள் பிரிட்டோரியா செல்வதற்காக தகுந்த பயணச்சீட்டுடன் புகையிரத முதல் வகுப்புப் பெட்டியில் பயணம் செய்த காந்தி, அவர் ஒரு வெள்ளையர் இல்லை என்ற காரணத்திற்காக, ஆங்கிலேய அதிகாரி ஒருவரால் புகையிரத நிலை யத்தில் பெட்டியிலிருந்து தூக்கி எறியப்பட்டார். வெள்ளையர் அல்லாத ஒரே காரணத்தால் இது போன்று பல இன்னல்களை காந்தி அனுபவித்தார். இதன் மூலம் தென்னாபிரிக்காவின் கறுப்பின மக்களும் அங்கே குடியேறிய இந்தியர்களும் படும் இன்னல்களை காந்தி நன்குணர்ந்தார்.
தனது ஒப்பந்தக்காலம் முடிவடைந்து இந்தியா திரும்ப காந்தி தயாரானபோது, அங்குள்ள இந்தியரின் வாக்குரிமையைப் பறிக்கும் தீர்மானத்தை நேடல் சட்டப்பேரவை இயற்ற இருப்பதாக செய்தித்தாளில் படித்தறிந்தார். இதை எதிர்க்குமாறு காந்தி அவரது இந்திய நண்பர்களிடம் அறிவுறுத்தினார். அவர்களோ, தங்களிடம் இதற்குத் தேவையான சட்ட அறிவு இல்லையெனக் கூறி, காந்தியின் உதவியை நாடினர்.
காந்தியும் அவர்கள் வேண்டுகோளுக்கு இணங்கி, தன் தாயகம் திரும்பும் முடிவை மாற்றிக்கொண்டு இத்தீர்மானத்தை எதிர்க் கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். இதில் அவர் வெற்றி பெறாவிட்டாலும் அங்குள்ள இந்தியர்களிடம் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தினார். பிறகு 1894ஆம் ஆண்டு நேடல் இந்திய காங்கிரஸ் என்ற பெயரில் கட்சி தொடங்கி அதற்கு அவரே பொறுப்பாளரானார். இதன் மூலம் நேடல் மாகாணத்திலிருந்த இந்தியர் அனைவரையும் ஒன்று திரட்டி, அவர்களை தங்கள் உரிமைக்காக குரலெழுப்ப ஊக்கப்படுத்தினார்.
1906 ஆம் ஆண்டு ஜோகார்னஸ்பேக் நகரில் நடந்த ஒரு போராட்டத்தில் முதன்முறையாக சத்தியாக் கிரகம் எனப்படும் அறவழிப்போராட்டத்தை பயன்படுத்தினார். அஹிம்சை, ஒத்துழையாமை, கொடுக்கப்படும் தண்டனையை ஏற்றல் ஆகிய கொள்கைகள் இவ்வறவழிப் போராட்டத்தின் பண்புகளாகும். இந்த காலகட்டத்தில் காந்தியும் அவருடன் சேர்ந்து போராடியோரும் பலமுறை சிறை சென்றனர். தொடக்கத்தில் ஆங்கில அரசாங்கம் இவர்களை எளிதாக அடக்கியது போல் தோன்றியது. பின்னர் பொதுமக்களும் ஆங்கில அரசாங்கமும் இவர்களின் உண்மையான மற்றும் நேர்மையான வாதங்களை புரிந்துகொண்டு இவர்களுடைய கோரிக்கைகளை ஏற்கும் நிலை ஏற்பட்டது. இவ்வாறு தனது அறவழிப் போராட்டத்தின் மூலம் தென்னாபிரிக்க வாழ் இந்தியரின் சமூக நிலையை மேம்படுத்தும் முயற்சியில் வெற்றி கண்ட காந்தி தாயகம் திரும்பினார்.
தென்னாபிரிக்காவில் காந்தி தலைமையேற்று நடத்திய போராட்டங்களைப் பற்றி இந்திய மக்கள் அறிந்திருந்தனர். காந்திக்கு, கோபால கிருஷ்ண கோகலே, ரவீந்திரநாத் தாகூர் போன்றோருடன் நட்பு ஏற்பட்டது. காந்தி இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத் தில் சேர்ந்து ஆங்கிலேயர்க்கு எதிரான விடுதலைப் போராட்டத்தில் முழு வீச்சில் ஈடுபட்டார்.
1921 ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கி ரஸ் இயக்கத்தின் தலைவராக காந்தி தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமையேற்றவுடன் காங்கிரஸில் பல மாற்றங்களை அறிமுகப்படுத்தி இயக்கத்திற்கு புத்துயிர் ஊட்டினார். அறப்போராட்ட வழிமுறைகளையும் சுதேசி போன்ற கொள்கைகளையும் வலியுறுத்தி காங்கிரஸ் இயக்கத்தை இந்தியாவின் மாபெரும் விடுதலை இயக்கமாக்கினார்.
1930 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதத்தில் ஆங்கிலேய அரசு, இந்தியாவில் இந்தியர்களால் தயாரிக்கப்படும் உப்புக்கு வரி விதித்தது. மேலும், இந்தியாவில் இந்தியரால் தயாரிக்கப்படும் உப்பை பிரிட்டிஷ் அரசாங்கத்தை தவிர வேறு யாரும் விற்கக் கூடாது என்ற சட்டத்தையும் இயற்றியது. இதை விலக்கிக் கொள்ளுமாறு காந்தி பிரிட்டிஷாரிடம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. சத்தியாக் கிரக முறையில் இதை எதிர்க்க முடிவெடுத்த காந்தி 1930 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 2 ஆம் திகதி அன்று 78 சத்தியாக் கிரகிகளுடன் அஹமதாபாத்திலிருந்து குஜராத் கடலோரத்தில் இருந்த தண்டி நோக்கி 240 மைல் நடைப் பயணத்தை துவக்கினார்.
23 நாட்கள் நடைப் பயணத்திற்குப் பிறகு, தன் சகாக்களுடன் தண்டி கடற்கரை வந்து சேர்ந்த காந்தி, அங்கிருந்த கடல் நீரை காய்ச்சி உப்பு தயாரித்து பிரிட்டிஷ் சட்டத்திற்கு எதிராக பகிரங்கமாக பொதுமக்களுக்கு விநியோகித்தார். மேலும், இந்தியாவில் கடலோரத்தில் இருந்த அனைத்து இந்தியர்களையும் இது போல் உப்பு தயாரித்து பயன்படுத்தச் சொன்னார். இந்தியாவின் பல இடங்களில் இது போல் நடந்தது காந்தி உட்பட பல்லாயிரக் கணக்கான இந்தியர்கள் சிறையிலடைக்கப்பட்டனர்.
வேறு வழியில்லாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் காந்தியுடன் பேச்சு வார்த்தை நடத்தி இறுதியில் வரியை நீக்கிக் கொண்டது. உப்பு சத்தியாக் கிரகம் என்று அழைக்கப்படும் இந்நிகழ்வு இந்திய விடுதலைப் போராட்ட சரித்திரத்தில் ஒரு திருப்புமுனையாக கருதப்படுகிறது. 1942ஆம் ஆண்டு நடைபெற்ற “வெள்ளையனே வெளியேறு “போராட்டத்திலும் காந்தி பெரும் பங்கு வகித்தார். வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின்போது காந்தி சொன்ன வாக்கியம் “செய் அல்லது செத்து மடி” ஆகும்.
பாகிஸ்தான் பிரிவினையின் போது இந்துக்களும் முஸ்லிம்களும் மோதிக் கொண்டது அவருக்கு மிகுந்த மன வருத்தத்தை அளித்தது. இந்த இருபெரும் சமூகத்தினரின் நல்லிணக்கத்திற்காக தன் வாழ்நாளில் பெரும் பாலான நாட்களைச் செலவழித்தார்.
1945ஆம் ஆண்டில், பாரத நாட்டை இரு துண்டுகளாக, இந்தியா மற்றும் பாகிஸ்தான் என்ற இருநாடுகளாக பிரிப்பது என்ற யோசனையை பிரிட்டிஷார் முன்வைத்தனர். அதுதொடர்பான பேச்சுவார்த்தைகளிலும் சமாதான முயற்சிகளிலும் அவர்கள் ஈடுபட்டனர்.
மதத்தின் அடிப்படையில் இந்தியாவை துண்டாட முனைந்த பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், அதற்காக மவுன்ட்பேட்டன் திட்டம் என்ற ஒரு திட்டத்தை 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் கொண்டு வந்தனர்.
இதற்கு காந்திஜி எதிர்ப்பு தெரிவித்தார். இந்நிலையில், இந்த இரண்டு மதத்தினரும் நாட்டின் பல நகரங்களில் மோதிக் கொண்டதில் ஏராளமானோர் இறந்தனர். இது, காந்திஜிக்கு மிகுந்த வருத்தத்தைக் கொடுத்தது. கல்கத்தா மற்றும் டில்லியில் நடந்த மதக்கலவரங்களைக் கண்டித்தும், மக்கள் அமைதி வழிக்குத் திரும்ப வேண்டும் என வலியுறுத்தியும் காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்.
பாரத நாடு இந்தியா -– பாகிஸ்தான் என்று இருவேறு நாடுகளாக கூறுபோடப்பட்டபோது உருவான மதக் கலவரத்தை இராணுவத்தாலோ, காவல்துறையினராலோ அடக்க முடியவில்லை. ஆனால் மகாத்மாவின் உண் ணா நோன்பு வாயிலாக விடுத்த அமைதி செய்தி இரத்த வெறியில் திளைத்த மக்களின் உணர்வுகளை சமாதானத்தை நோக்கி தட்டி எழுப்பியது. கிழக்கே நவ்காளியில் நடந்த மத படுகொலைகளையும், மேற்கே பஞ்சாப் பகுதியில் நடந்த மத வெறியாட்டத்தையும் முடிவுக்கு கொண்டுவந்தது.
தனது சாத்வீக போராட்டத்தை விடுதலைக்கான ஆயுதமாக மட்டுமே காந்தி பயன்படுத்தி நிறுத்திக் கொள்ளவில்லை. பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு வழங்க வேண்டிய 55 கோடி ரூபாவை பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான அமைச்சரவை கொடுக்க மறுத்த போது, மீண்டும் உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கி அவர்களை ஒப்புக்கொள்ளச் செய்தார். பிரிவினையை மகாத்மா காந்தி ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் பிரிவினையை ஏற்றுக் கொண்டவர்களை அதற்குரிய நியாயமான நடைமுறைகளை தனது சாத்வீக போராட்டத்தின் மூலம் ஏற்றுக்கொள்ளச் செய்தார் மகாத்மா.
விடுதலைப் போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில், விடுதலைப் போராட்டத்தின் ஆரம்ப பேச்சுவார்த்தையின்படி பாகிஸ் தான் தனி நாடாக வேண்டும் என்பதில் கராச்சியை சேர்ந்த முகம்மது அலி ஜின்னா மிகவும் பிடிவாதமாக இருந்தார்.
ஹைதராபாத்தை சேர்ந்த ஜவஹர்லால் நேருவின் மிக நெருங்கிய நண்பரான ஜாகிர் ஹூசைன் பாகிஸ்தான் பிரிபடாத பாரதமாக விளங்க வேண்டுமென்பதில் பிடிவாதமாக இருந்தார்.
பாகிஸ்தானின் முகம்மது அலி ஜின்னாவும் இந்தியாவின் ஜாகிர் ஹூசைனும் கருத்து மோதல்களில் கடும் சொற்போரில் ஈடுபட்டனர். பாகிஸ்தான் தனி நாடாக பிரிவதை காந்தி, ஜவஹர்லால் நேரு, ஜாகிர் ஹூசைன் போன்றோர் விரும்பவில்லை. பாகிஸ்தான் பிரிவினையை கொண்டு வந்த பிரிட்டிஷாருக்கு பாகிஸ்தானை பிரிப்பதா இல்லையா என்ற ஒரு பிரச்சினை ஏற்பட்டது.
பிரிட்டிஷாருக்கும் காந்தி, ஜவஹர்லால் நேரு, முகம்மது அலி ஜின்னா, ஜாகிர் ஹூசைன் உட்பட்ட முக்கியஸ்தர்களுக்கும் முக்கிய பேச்சுவார்த்தை நடைபெற்றது. பிரிட்டிஷாரிடம் ஒவ்வொருவரும் தங்களது கருத்துக்களை கூறியிருந்த போதிலும் மகாத்மா காந்தியின் கருத்தையே ஏற்றனர். பாகிஸ்தான் பிரிபடுவதை விரும்பாத மகாத்மா காந்தி நேர்மையுடன் பாகிஸ்தானை தனி நாடாக ஆக்குவதற்கு பிரிட்டிஷாரிடம் ஆலோசனை கூறினார். மகாத்மா காந்தி ஒருகணம் நேர்மை தவறின் பாகிஸ்தான் எனும் நாடு உதயமாகி இருக்காது. இந்தியாவின் ஒரு மிகப் பெரிய மாநிலமாக இருந்திருக்கும்.
இது போன்ற பல போராட்டங்களின் முடி வில் 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் இந்தியா சுதந்திர நாடாக மலர்ந்தது. 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14 ஆம் நாள் பாகிஸ்தான் சுதந்திர நாடாக மலர்ந்தது. இந்தியாவுக்கு வெளியே முதன்முதலில் 1961 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி காந்தி தபால்தலையை வெளியிட்ட நாடு தன் வாழ்நாளில் மிதிக்காத நாடான அமெரிக்கா ஆகும். அவரின் 28,835 நாட்களில் 2,338 நாட்கள் சிறையில் கழித்தார். வெளியில் இருந்த நாட்களிலும் உணவருந்திய நாட்கள் வெகு குறைவு. 28 முறை உண்ணாவிரதம் இருந்துள்ளார். குறைந்தபட்சம் ஒருநாள் தொடக்கம் 12 நாட்கள் வரை அவர் உணவு அருந்தாமல் தன்னைத்தானே வருத்தியுள் ளார்.
நெல்சன் மண்டேலா, தலாய் லாமா, மார்டின் லூதர்கிங், ஆங் சான் சூகி, அடால்ஃபோ பெரேஸ் எஸ்க்யூவெல் ஆகிய ஐந்து உலகத் தலைவர்கள் நோபல் பரிசு பெற்றதற்கு முக்கியக் காரணம், காந் திய வழியைப் பின்பற்றியதுதான் என்று ஒப்புதல் அளித்திருக்கிறார்கள். ஆனால், காந்திக்கு நோபல் பரிசு கிடைக்கவில்லை!. காந்தியின் ஒவ்வொரு நடவடிக்கையும் இந் துக்களுக்கும், இந்தியாவிற்கும் எதிரானதாக வும், முஸ்லிம்களுக்கு ஆதரவானதாகவும் இருப்பதாகவே கருதிய இந்துமத தீவிரவாதி கள் காந்தியை சுட்டுக்கொன்றனர்.
இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்திய தன் காரணமாக மகாத்மா காந்தி "சுதந்திர இந்தியாவின் தந்தை" என்று அழைக்கப்படு கிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் வேறு சில நாட்டு விடுதலை இயக்கங்களுக் கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.
அல்ஹாஜ் எம்.எப்.எம் இக்பால்,
யாழ்ப்பாணம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக