ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

உள்நாட்டு விசாரணை களையிழந்தது ஏன்?

வடக்கு, கிழக்கில் போர் இடம்­பெற்ற கால­கட்­டத்தில் காணா­மற்­போ­ன­வர்கள் குறித்து விசா­ரிக்க நிய­மிக்­கப்­பட்ட ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழு­வுக்கு, ஆலோ­சனை வழங்­கு­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்ட, சர்­வ­தேச சட்ட நிபு­ணர்­களின் குழு­வுக்கு அர­சாங்கம் எதிர்­பார்த்­தது போன்ற வர­வேற்புக் கிடைக்­க­வில்லை.

அர­சாங்­கத்தின் இந்த முடி­வுக்கு உள்­நாட்டில் கூட, ஆத­ரவு பெற முடி­யாது போயுள்­ளது. வெளி­நா­டுகள் குறிப்­பாக மேற்­கு­லக நாடுகள் இதனைப் பெரி­ய­தொரு விட­ய­மா­கவே எடுத்துக் கொள்­ள­வில்லை.

இந்த நிபுணர் குழு பற்­றிய அறி­விப்பை அர­சாங்கம் வெளி­யிட்டு மூன்று வாரங்­க­ளுக்கு மேலா­கி­விட்­டது.

ஆனாலும், எந்­த­வொரு நாடோ, ஐ.நாவோ, தாமாக வாய்­தி­றந்து இதனை வர­வேற்­க­வில்லை.



இலங்கை அர­சாங்­கத்தின் நெருங்­கிய நட்பு நாடுகள் அல்­லது ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மானம் கொண்­டு­வ­ரப்­பட்ட வேளை அதனை எதிர்த்த அல்­லது நடு­நிலை வகித்த நாடுகள் கூட வர­வேற்புத் தெரி­விக்­க­வில்லை.

போர்க்­குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பாக, சர்­வ­தேச விசா­ர­ணைக்கு வலி­யு­றுத்­திய நாடுகள் ஒன்றும், ஆரம்­பத்­தி­லேயே அதற்­கான அழுத்­தங்­களைக் கொடுக்­க­வில்லை.

ஆரம்­பத்தில் அந்த நாடுகள், நம்­ப­க­மான, சுதந்­தி­ர­மான உள்­நாட்டு விசா­ர­ணைக்கே அழுத்தம் கொடுத்­தி­ருந்­தன.

அந்த முயற்சி பய­னற்றுப் போன பின்னர் தான், மேற்­கு­லக நாடு­களின் கவனம் சர்­வ­தேச விசா­ர­ணையின் பக்கம் திரும்­பி­யது.

சர்­வ­தேச விசா­ர­ணையை வலி­யு­றுத்தி ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் கடந்த மார்ச் மாதம் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மா­னத்தில் கூட நம்­ப­க­மான, சுதந்­தி­ர­மான உள்­நாட்டு விசா­ர­ணையை ஊக்­கு­விப்­ப­தான வாச­கங்கள் இடம்­பெற்­றி­ருந்­தன. ஆனால், இப்­போது போர்க்­குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­ற­னவா என்­பதை விசா­ரிக்கும் உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை இலங்கை அர­சாங்கம் அதுவும், சர்­வ­தேச சட்ட நிபு­ணர்­களின் ஆலோ­சனைக் குழுவின் வழி­காட்­ட­லுடன் நிய­மித்­துள்ள போதிலும், சர்­வ­தேச சமூகம் அதனை வர­வேற்­க­வில்லை.

இது பல­ருக்கும் புதி­ரான விட­ய­மா­கவே இருக்­கி­றது. ஆரம்­பத்தில் நம்­ப­க­மான, சுதந்­தி­ர­மான உள்­நாட்டு விசா­ர­ணை­களை நடத்­து­மாறு வலி­யு­றுத்­திய போது, இலங்கை அர­சாங்கம் கூட அதனை ஏற்றுக் கொள்­ள­வில்லை. மேற்­கு­லக நாடுகள், உள்­நாட்டு விசா­ர­ணையை வலி­யு­றுத்­தி­யது 2012 மார்ச் மாதம் கொண்டு வரப்­பட்ட முத­லா­வது பிரே­ர­ணையின் போது தான் என்று கருதக் கூடாது.

2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி போர் முடி­வுக்குக் கொண்டு வரப்­பட்டு விட்­ட­தாக, இலங்கை அர­சாங்கம் அறி­வித்­த­வுடன், அதற்கு வாழ்த்துத் தெரி­வித்த போதே, பொறுப்­புக்­கூ­றலை வலி­யு­றுத்த தொடங்­கி­யி­ருந்­தது அமெ­ரிக்கா.

அதற்குப் பின்னர், அமெ­ரிக்கா ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­திலும் பொறுப்புக் கூறும் பொறி­முறை ஒன்றை உரு­வாக்­கும்­படி, தொடர்ச்­சி­யாக அர­சாங்­கத்தை வலி­யு­றுத்தி வந்­தது. ஆனால், எதற்­குமே அர­சாங்கம் மசி­யாமல் தனது பிடி­வா­தத்தில் உறு­தி­யாக இருந்து வந்­தது.

போரின் போது எந்த மீறல்­களும் நடக்­க­வில்லை என்றும், போரில் பொது­மக்கள் ஒருவர் கூடக் கொல்­லப்­ப­ட­வில்லை என்­றுமே அர­சாங்கம் கூறி­யது. ஆனால் அழுத்­தங்கள் அதி­க­ரித்த நிலையில், வேறு வழி­யின்றி 2010ஆம் ஆண்டு ஒரு நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவை அமைக்க முடிவு செய்­தது அர­சாங்கம். அந்த முடி­வுக்கு சர்­வ­தேச சமூகம் பெரும் வர­வேற்புக் கொடுத்­தது.

பின்னர் அதன் அறிக்­கையை நடை­மு­றைப்­ப­டுத்­தாமல், காலத்தை இழுத்­த­டித்த போது, மீண்டும் மேற்­கு­லகின் அழுத்­தங்கள் தீவி­ர­ம­டைந்­தன.

ஆனாலும், நல்­லி­ணக்க ஆணைக்­கு­ழுவின் பரிந்­து­ரை­களை முழு­மை­யாக நடை­மு­றைப்­ப­டுத்த முடி­யாது என்றும், அது ஒன்றும் பைபிள் அல்ல என்றும் கூறிய அர­சாங்கம், உள்­நாட்டு விசா­ர­ணை­களை நடத்த மறுத்­தது.

பின்னர், ஒரு­கட்­டத்தில், ஜெனீ­வாவில் இலங்­கைக்கு எதி­ரான தீர்­மானம் கொண்­டு­வர அமெ­ரிக்கா தயா­ரா­கி­றது என்று அறிந்­ததும், இரா­ணுவ நீதி­மன்றம் ஒன்றை அமைத்து நிலை­மையைச் சமா­ளிக்க முயன்­றது. அந்த இரா­ணுவ நீதி­மன்­றத்தின் முதற்­கட்ட அறிக்­கையை சர்­வ­தேச சமூகம் கண்டு கொள்­ள­வே­யில்லை.

ஏனென்றால், அது நம்­ப­க­மா­ன­தா­கவோ, சுதந்­தி­ர­மா­ன­தா­கவோ, வெளிப்­ப­டைத்­தன்மை கொண்­ட­தா­கவோ இருக்­க­வில்லை. அர­சாங்­கமும் கூட அந்த அறிக்­கையைப் பகி­ரங்­கப்­ப­டுத்­த­வில்லை.

அது­போ­தா­தென்று, இரா­ணுவ நீதி­மன்­றத்தின் இரண்­டா­வது கட்ட விசா­ரணை நடப்­ப­தாக அர­சாங்கம் அறி­வித்து, ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கும் மேலா­கி­விட்­டது.

ஆனால், அந்த விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிக்­கப்­ப­ட­வே­யில்லை.

இத்­த­கைய நிலையில், ஜெனீவா அழுத்­தங்கள் தீவி­ர­ம­டைந்த ஒரு கட்­டத்தில் கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் காணா­மற்­போனோர் குறித்த விசா­ர­ணை­களை நடத்­து­வ­தற்கு ஜனா­தி­பதி ஆணைக்­குழு நிய­மிக்­கப்­பட்­டது. அத­னையும், சர்­வ­தேச சமூகம் வர­வேற்­றி­ருந்­தது.

அதற்குப் பின்­னரும் கூட, அதா­வது, கடந்த மார்ச் மாதம். ஜெனீ­வாவில் சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அழைப்பு விடும் தீர்­மானம் கொண்டு வரப்­பட்­ட­போது கூட, உள்­நாட்டு விசா­ர­ணைக்கும் அழைப்பு விடுக்­கப்­பட்­டது.

அப்­போது, அர­சாங்கம் அத­னையும் நிரா­க­ரித்­தி­ருந்­தது. அந்த தீர்­மா­னத்தை முழு­மை­யாக நிரா­க­ரிப்­ப­தாகக் கூறிய அர­சாங்­கமே இப்­போது, ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வை­யினால் விசா­ரணைகள் தொடங்­கப்­பட்­டுள்ள நிலை யில், உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­முறை ஒன்றை உரு­வாக்­கி­யுள்­ளது.

காணா­மற்­போனோர் குறித்து விசா­ரிக்கும் முன்னாள் நீதி­பதி மக்ஸ்வெல் பராக்­கி­ரம பர­ண­கம தலை­மை­யி­லான ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவே, போர்க்­குற்­றங்கள், மனித உரிமை மீறல்கள் இடம்­பெற்­றதா என்றும் விசா­ரிக்கும் என்று அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.

அந்தக் குழு­வுக்கு மேலும் சர்­வ­தேச அங்­கீ­கா­ரத்தை ஏற்­ப­டுத்திக் கொடுப்­ப­தற்­கா­கவே, வெளி­நாட்டு நிபு­ணர்­களைக் கொண்ட ஆலோ­சனைக் குழு­வொன்­றையும் அர­சாங்கம் நிய­மித்­தது.

சர்­வ­தேச விசா­ர­ணை­களை வலு­வி­ழக்க வைப்­ப­தற்­காக, அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­பட்ட இந்த முயற்­சிக்கு சர்­வ­தேச சமூகம் ஆத­ர­வ­ளிக்­க­வில்லை.

இந்­த­நி­லையில், மேலும், மூன்று ஆலோ­சனை நிபு­ணர்­களை நிய­மிக்­க­வுள்­ள­தாகத் தகவல் வெளி­யா­கி­யுள்­ளது.

இந்­தியா, ஜப்பான், பாகிஸ்தான் ஆகிய நாடு­க­ளி­லி­ருந்து இந்த நிபு­ணர்கள் நிய­மிக்­கப்­ப­ட­வுள்­ளனர்.

ஐ.நா. மனித உரிமை ஆணை­யாளர் நவ­நீ­தம்­பிள்ளை, தமது நிபு­ணர்­களை நிய­மிக்­கும்­போது, ஆசிய, ஆபி­ரிக்க நாடு­களைச் சேர்ந்­த­வர்­க­ளுக்கு முன்­னு­ரிமை கொடுக்­கவே முனைந்தார்.

பாகிஸ்­தானைச் சேர்ந்த அஸ்மா ஜஹாங்­கீ­ருக்கு அவர் இட­ம­ளித்தார். அது அந்தக் குழுவின் நம்­ப­கத்­தன்­மையை அதி­க­ரிப்­ப­தற்­கான முயற்­சி­யாகும். ஆனால், அர­சாங்கம், தமது முதற்­கட்ட நிபுணர் குழு தெரி­வின்­போது, மேற்கு நாடு­களைத் திருப்­திப்­ப­டுத்திக் கொள்­வ­தி­லேயே கவனம் செலுத்­தி­யது. அதனால், பிரித்­தா­னிய, அமெ­ரிக்க நிபு­ணர்­க­ளையே தெரிவு செய்தார் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்் ஷ ஆசிய நாடு­களின் நிபு­ணர்­களை அந்தக் குழுவில் நிய­மிக்­க­வில்லை.

ஜப்­பானைச் சேர்ந்த ஒரு நிபு­ணரை உள்­ள­டக்க வெளி­வி­வ­கார அமைச்சு முயற்­சி­களை மேற்­கொண்ட போதும், அதற்­கி­டையில், நிபுணர் குழு அறி­விப்பு வெளி­யி­டப்­பட்­டது.

அது ஜப்­பா­னிய தூத­ரக அதி­கா­ரி­க­ளுக்கு விச­னத்தை ஏற்­ப­டுத்­தி­ய­தா­கவும், பின்னர், ஜனா­தி­பதி அதனை அறிந்து கொண்டு அமைச்சர் பீரிஸ் மூலம், அவர்­களை சமா­தா­னப்­ப­டுத்­தி­ய­தா­கவும் கூறப்­பட்­டது.

இப்­போது ஜப்பான் உள்­ளிட்ட நாடு­களின் நிபு­ணர்­க­ளுக்கு, ஆலோ­சனைக் குழுவில் இட­ம­ளிக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்­தியா, ஜப்பான், பாகிஸ்தான் இந்த மூன்று நாடு­க­ளுமே, இலங்கை மீதான சர்­வ­தேச விசா­ர­ணை­களை எதிர்த்து வரு­பவை. ஐ.நாவிலும் அதற்கு வெளி­யிலும் ஆத­ரவு அளித்து வரு­கின்ற நாடுகள்.

இந்த நாடு­களின் அழுத்­தங்­களின் பேரில் தான், அர­சாங்கம் உள்­நாட்டு விசா­ரணைப் பொறி­மு­றையை அமைக்க இணங்­கி­யது என்று ஐ.தே.க. குற்­றம்­சாட்­டு­கி­றது.

மேற்­கு­லக நாடு­களின் அழுத்­தங்­க­ளினால் தான், முன்­னைய விசா­ரணைக் குழுக்­களை அமைத்­தது அர­சாங்கம்.

ஆனாலும், மேற்­கு­லக நாடு­களின் அழுத்­தங்­க­ளுக்கு அடி­ப­ணிந்து உள்­நாட்டு விசா­ர­ணையை மேற்­கொள்ள அர­சாங்கம் தயா­ராக இருக்­க­வில்லை. எனினும், இலங்­கையை ஆத­ரித்த நட்பு நாடுகள் உள்­நாட்டு விசா­ர­ணைக்கு அழுத்தம் கொடுத்தபோது வேறு வழி அர­சாங்­கத்­துக்கு இருக்­க­வில்லை.

அடுத்த கட்­ட­மாக, ஐ.நா. விசா­ரணை அறிக்கை பாது­காப்புச் சபைக்கே வரும் என்றும், உள்­நாட்டு விசா­ர­ணையை ஆரம்­பிக்­காது போனால், அங்கு தம்மால் உதவ முடி­யாது என்று ரஷ்யா, இந்­தியா, உள்­ளிட்ட நாடுகள் கூறி­ய­தா­கவும் ஐ.தே.க. தெரி­வித்­துள்­ளது. அதற்குப் பயந்து உள்­நாட்டு விசா­ர­ணையை அர­சாங்கம் ஆரம்­பித்­துள்­ள­தாக ஐ.தே.க. தரப்பில் குற்­றம்­சாட்­டப்­ப­டு­கி­றது.

இது எந்­த­ள­வுக்கு உண்மை என்று தெரி­ய­வில்லை. ஆனால், சர்­வ­தேச விசா­ர­ணையின் அழுத்­தங்கள் அதி­க­ரித்து வந்த நிலையில், உள்­நாட்டு விசா­ரணை ஒன்றை மேற்­கொள்­வதே சரி­யான வழி­மு­றை­யாக இருந்­தது மட்­டு­மன்றி, வேறு தெரி­வு­களும் அர­சாங்­கத்­துக்கு இருக்­க­வில்லை.

உள்­நாட்டு விசா­ரணை நடக்­கி­றது என்று கூறி சிறிது காலத்தை இழுத்­த­டிப்­ப­தற்கு, அர­சாங்­கத்­துக்கு இது கைகொ­டுக்கும்.

எனவே, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரி­மைகள் பேர­வையில் சர்­வ­தேச விசா­ரணை அறிக்கை சமர்ப்­பிக்­கப்­பட்­டாலும் கூட, மேல் நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­ப­தற்கு இந்த உள்­நாட்டு விசா­ரணை ஒரு சிறிய தடையை ஏற்­ப­டுத்தும்.

இதனைக் கருத்தில் கொண்டே இலங்­கையின் நட்பு நாடுகள் இந்த உள்­நாட்டு விசா­ர­ணைக்குத் தூண்­டி­யுள்­ள­தாகத் தெரி­கி­றது.

இதனை உணர்ந்து கொண்­டதால் தான், மேற்­கு­லக நாடுகள் இந்த விசா­ரணைக் குழு அமைக்­கப்­பட்­டதை வர­வேற்­க­வில்லை. அதே­வேளை, உள்­நாட்­டிலும் கூட அர­சாங்­கத்தின் இந்த முடிவு வர­வேற்பை ஏற்­ப­டுத்­த­வில்லை.

காரணம் என்­ன­வென்றால், அர­சாங்­கமே முன்னர் இதனை நிரா­க­ரித்­து­விட்டு இப்­போது அதற்கு இணங்­கு­கி­றது என்றால், அதில் ஏதோ சூட்சுமம் இருக்கிறது என்ற சந்தேகம்தான்.

சர்­வ­தேச விசா­ரணை கோரும், ஜெனீவா தீர்­மா­னத்தின் 10ஆவது பிரிவைத்தான் எதிர்த்­தோமே தவிர, அந்த தீர்­மா­னத்தில் உள்­நாட்டு விசா­ர­ணையை வலி­யு­றுத்தும் 2ஆவது பிரிவை எதிர்க்­க­வில்லை, அதன்­ப­டியே உள்­நாட்டு விசா­ர­ணையை ஆரம்­பித்­துள்ளோம் என்று கூறி­யி­ருக்­கிறார் அமைச்சர் பீரிஸ். ஆக, சர்­வ­தேச விசா­ரணை என்ற விடயம் இல்­லா­விட்டால், ஜெனீவா தீர்­மா­னத்தை ஆத­ரித்­தி­ருப்போம் என்பது போலுள்ளது அவரது கதை. அவ்வாறாயின், அரசாங்கம் எதற்காக 2012, 2013ஆம் ஆண்டு தீர்மானங்களை எதிர்த்தது என்பது புதிரான விடயம்.

இந்த இரட்டைப் போக்குத் தான், இந்த விவகாரத்தில் அரசாங்கத்தில் உள்ள அதற்கு வெளியே உள்ள கட்சிகளினது ஆதரவைக் கூடப் பெற முடியாததற்குக் காரணம்.

கபில்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல