ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

இஸ்ரேலி­யர்­களின் பாதையும் தேவையும்

image source: google
கடவுள் மோசஸ் மூலம் இஸ்ரேலியர்களுக்கு கொடுத்த பூமி என்பது கட்டுக்கதை!

தான் ஆட்சிசெய்த நாடுகளுக்கு சுதந்திரம் கொடுத்து அந்த நாடுகளை அந்த நாட்டு மக்களே ஆளும்படி செய்த பிரித்தானியா பலஸ்தீனத்தின் ஆட்சிப் பொறுப்பை ஐ.நாவிடம் கையளித்தது. பலஸ்தீனத்தில் ஓர் இஸ்லாமிய அரசு உருவாகாமல் தடுக்கும் நோக்குடனேயே இப்படிச் செய்யப்பட்டது.

இஸ்­ரே­லி­யர்­களின் ஹிப்ரூ மொழி உல­கி­லேயே தொன்மை வாய்ந்த மொழி­களுள் ஒன்­றாகும். இஸ்­ரே­லி­யர்­களைப் பொறுத்­த­வரை அவர்கள் ஆண்ட பரம்­பரை என்­பதும் தாம் மீளவும் ஆள வேண்டும் என்­பதும் அவர்­க­ளது தலை­யாய கொள்­கை­க­ளாக பத்­தொன்­பதாம் நூற்­றாண்டின் பிற்­ப­கு­தியில் இருந்து கடைப்­பி­டித்து வரு­கின்­றனர். தாம் பலஸ்­தீனப் பிர­தே­சத்தில் மூவா­யிரம் ஆண்­டு­க­ளுக்கு மேலாக வாழ்ந்து வரு­வ­தாக இஸ்­ரே­லி­யர்கள் நம்­பு­கின்­றனர். இஸ்­ரேலில் தோண்டும் இடங்­களில் எல்லாம் கிடைக்கும் நாண­யங்கள், மட்­பாண்­டங் கள், புர­ாதன நக­ரங்கள் எல்லாம் இந்த மண் எங்கள் சொந்த மண் எனப் பறை­சாற்­று­கின்­றன என்­கின்­றனர் இஸ்­ரே­லி­யர்கள்.



கி.மு. 1272 மோசஸ் எகிப்தில் அடி­மை­க­ளாக இருந்த இஸ்­ரே­லி­யர்­களை மீட்டார். அவர் இஸ்­ரே­லி­யர்­களை அழைத்துக் கொண்டு ஜோர்­தா­னிய நதியைக் கடந்து அதன் மேற்குப் புற­மா­கவும் ஜோர்தான் நதிக்கும் மத்­திய தரைக்­க­ட­லுக்கும் இடை யில் உள்ள நிலப்­ப­ரப்பை இஸ்­ரே­லி­யர்­க ளின் நாடாக்­கினார். இஸ்­ரே­லி­யர்கள் கட­வுளின் பிள்­ளைகள் என்றும் இஸ்ரேல் கட­வுளால் இஸ்­ரே­லி­யர்­க­ளுக்குக் கொடுக்­கப்­பட்ட புனித பூமி எனவும் இஸ்­ரே­லி­யர்கள் கூறு­கின்­றார்கள். கி.மு 1079ஆம் ஆண்டில் இருந்த தமது மன்­னர்­களின் பட்­டியல் இஸ்­ரே­லி­யர்­க­ளிடம் உண்டு. அப்­போது சௌல் என்னும் மன்னர் பரம்­ப­ரை­யினர் ஆட்சி செய்­தனர். இஸ்­ரே­லிய மன்­னர்­களில் வீரம் மிக்­க­வ­ராகக் கரு­தப்­ப­டு­பவர் கி.மு 1079ஆம் ஆண்டில் இருந்து 1007ஆம் ஆண்­டு­வரை ஆண்ட டேவிட் என்னும் மன்­ன­ராகும். இள­வ­யதில் இருந்து ஆட்சி செய்த மன்னர் டேவிட் ஜெரு­சலம் நகரை இஸ்­ரே­லி­யர்­களின் தலை­ந­க­ராக்­கி னார். ஜெரு­சலம் நகரில் உள்ள சியோன் மலையில் டேவிட் மன்னர் ஒரு கோட்­டையை அமைத்தார். இதனால் ஜெரு­சலம் நகரும் சியோன் மலையும் இஸ்­ரே­லி­யர்­களின் புனித நிலை­யங்­க­ளா­கின.

இஸ்­ரே­லி­யர்­களின் வீழ்ச்சி

இஸ்­ரே­லி­யர்­களின் அரசு கிறிஸ்­து­விற்கு முன்னர் 796ஆம் ஆண்டில் இரண்­டாகப் பிளவு பட்­டது. அதன் வட­ப­கு­தியை கி.மு 55ஆம் ஆண்டு அசீ­ரியப் பேர­ரசு கைப்­பற்­றி­யது. கி.மு 422ஆம் ஆண்டு பபி­லோ­னி­யர்கள் இஸ்­ரேலைக் கைப்­பற்றி அவர்­களின் புனித ஆல­யத்தை அழித்­தனர்.

இஸ்­ரே­லி­யர்கள் பலர் அவர்­க­ளது மண்ணில் இருந்து விரட்­டப்­பட்­டனர். கி.மு 352இல் மீண்டும் இஸ்­ரே­லி­யர்கள் தமது நாட்­டிற்கு வந்து மீண்டும் தமது ஆல­யத்தைக் கட்டி எழுப்­பினர். ஆனால் நாற்­பது ஆண்­டு­களின் பின்னர் கிரேக்கர் இஸ்­ரேலைக் கைப்­பற்­றினர். பின்னர் கி.மு 63ஆம் ஆண்டு ரோமப் பேர­ரசு இஸ்­ரேலை ஆக்­கி­ர­மித்­தது.

மீண்டும் இஸ்­ரே­லி­யர்­களின் புனித ஆலயம் இடிக்­கப்­பட்­டது. கி.பி 638ஆம் ஆண்டு இஸ்­லா­மி­யர்கள் கலிபா உமரின் தலை­மையில் இஸ்­ரேலைக் கைப்­பற்­றி னர். 1299ஆம் ஆண்டு உது­மா­னியப் பேர­ரசு இஸ்­ரேலைக் கைப்­பற்­றி­யது.

உது­மா­னியப் பேர­ர­சினால் ஆளப்­பட் டுக் கொண்­டி­ருக்கும் போது இஸ்­ரே­லியர் கள் தமக்கு என ஓர் அரசு உரு­வாக்க வேண்டும் எனத் தீவி­ர­மாகச் சிந்­திக்கத் தொடங்­கி­னார்கள். இச்சிந்­தனை சியோ­னி சம் என்னும் பெயர் பெற்­றது. ஆனால் இஸ்­லா­மிய மதம் தோன்­றிய நாளில் இருந்து உது­மா­னியப் பேர­ரசின் ஆட்சி நடந்து கொண்­டி­ருக்கும் வரை இஸ்­ரே­லி­யர்­களும் அர­புக்­களும் ஒற்­று­மை­யா­கவே வாழ்ந்து வந்­தனர். ஒருவர் வீட்டின் விறாந்­தையில் மற்­றவர் அமர்ந்து இருந்து ஒன்­றாக உரை­யாடிக் கொண்­டி­ருப்­பது எங்கும் காணக் கூடிய ஒன்­றா­கவே இருந்­தது. இஸ்­லா­மி­யர்கள் ஜெரு­ச­லத்தைக் கைப்­பற்ற முன்னர் அதை ஆண்­ட­வர்கள் அங்­கி­ருந்த இஸ்­ரே­லி­யர்­களின் ஆல­யத்தை இடித்து அங்கு குப்­பை­களைக் கொட்­டும்­படி அரச ஆணை பிறப்­பிக்­கப்­பட்­டி­ருந்­தது. ஆனால் இஸ்­லா­மிய ஆட்­சி­யா­ளர்கள் அதை துப்­பு­ர­வாக்கி தமது வணக்­கஸ்­த­லத்தை அமைத்­தனர். அதில் கிறிஸ்­த­வர்­களைத் தாக்கி வாசகங்கள் எழு­தப்­பட்­டன.

பிரித்து ஆண்ட பிரித்­தா­னியா

உது­மா­னியப் பேர­ரசின் கீழ் ஜோர்தான் நதிக்கும் மத்­திய தரைக்­க­ட­லுக்கும் இடை ப்­பட்ட நிலப்­ப­ரப்பில் வாழ்ந்த இஸ்­ரே­லி­யர்கள் அங்கு தமக்கு என ஒரு இஸ்­ரே­லிய அரசு உரு­வாக்க வேண்டும் என எண்­ணி­யி­ருக்­கையில் அங்கு பெரும்­பான்­மை­யாக வாழ்ந்த இஸ்­லா­மிய மதத்தைப் பின்­பற்றும் அர­புக்கள் தமக்கென ஒரு பலஸ்­தீ­னிய அரசு உரு­வாக்க வேண்டும் என எண்ணிக் கொண்­டி­ருந்­தனர். முதலாம் உது­மா­னியப் பேர­ர­சிடம் இருந்து அரபு நாடு­களை கைப்­பற்ற முயன்ற பிரித்­தா­னியா இரு தரப்­பி­ன­ருக்கும் அரசு அமைக்க உத­வு­வ­தாகச் சொல்லி உது­மா­னியப் பேர­ர­சுக்கு எதி­ரான போரில் தம்­முடன் அர­புக்­க­ளையும் இஸ்­ரே­லி­யர்­க­ளையும் இணைய வைத்­தது. இதன் பின்­னர்தான் அரபு இஸ்ரேல் மோதல் ஆரம்­ப­மா­னது.

அனு­தா­பத்தை புவிசார் அர­சி­ய­லாக்­கிய மேற்கு நாடுகள்

இரண்டாம் உலகப் போரின் போது நாஜிப்­ப­டை­களால் இஸ்­ரே­லி­யர்கள் பெரு­ ம­ளவில் கொல்­லப்­பட்ட போது உல­கெங் கும் அவர்கள் மீது உரு­வான அனு­தா­ப த்தை தமக்குச் சாத­க­மாக மேற்கு நாடு கள் பயன்­ப­டுத்­தின. கத்­தோ­லிக்­கர்­களின் புனித நிலை­ய­மான பெத்­த­லகேம் அரபு இஸ்­லா ­மி­யர்­களின் பெரும்­பான்­மை­யி­ன­ராக வாழும் இட­மாக மாறி­யது.

இதை மாற்­றி­ய­மைக்க இஸ்­ரே­லி­யர்­களை அங்கு குடி­யேற்றி அவர்­க­ளுக்கு என ஒரு நாடு உரு­வாக்க மேற்கு நாடுகள் திட்­ட­மிட்­டன. பெத்­த­லகேம் இஸ்­ரே­லி­யர்­களின் புனித நக­ரான ஜெரு­ச­லத்தின் ஒரு பகு­தி­யாகும். தமது புனித நிலை­ய­மான பெத்­தலே­கயத்து இஸ்­ரே­லி­யர்­க ளைத் தமது நண்­பர்­க­ளாக்கி அவர்­க­ளுக்கு ஒரு நாட்டை உரு­வாக்­கு­வதன் மூலம் தக்கவைத்துக் கொள்ள மேற்கு நாடுகள் திட்­ட­மிட்­டன. கடவுள் மோசஸ் மூலம் இஸ்­ரே­லி­யர்­க­ளுக்குக் கொடுத்த பூமி என்­பதும் இஸ்­ரே­லி­யர்கள் கட­வுளின் குழந்­தைகள் என்­பதும் இதற்­காக இட்டுக் கட்­டப்­பட்ட கதை­களே. தற்­போது பலஸ்­தீனம் எனப்­படும் மோசஸ் இஸ்­ரே­லி­யர்­ க­ளுக்கு கொடுத்த நாட்டில் இருந்து இஸ்­ரே­லி­யர்கள் தொடர்ந்து வந்த ஆட்­சி­யா­ளர்­களால் விரட்­டப்­பட்­ட­தாலும் அரபுக்­ களின் மக்கள் தொகைப்­பெ­ருக்கம் அதி­க ­மாக இருந்­த­தாலும் பலஸ்­தீ­னத்தின் பெரும்­பான்­மை­யி­ன­ரா­கவும் அதிக நிலப்­ப­ரப்பைக் கொண்­ட­வர்­க­ளாக இஸ்­லா­மிய மதத்தைப் பின்­பற்றும் அர­புக்­க­ளான பலஸ்­தீ­னி­யர்­களே இருந்­தனர். இருந்தும் மேற்கு நாடுகள் அங்கு யூதர்­க­ளுக்கு என ஒரு இஸ்­ரே­லிய அரசை உரு­வாக்­கினர்.

இஸ்­ரேலின் உரு­வாக்கம்

தான் ஆட்சி செய்த நாடு­க­ளுக்கு சுதந்­திரம் கொடுத்து அந்தந்த நாடு­களை அந்த நாட்டு மக்­களே ஆளும்­படி செய்த பிரித்­ தா­னியா பலஸ்­தீ­னத்தின் ஆட்சிப் பொறுப்பை ஐக்­கிய நாடுகள் சபை­யிடம் கைய­ளித்­தது. பலஸ்­தீ­னத்தில் ஒரு இஸ்­லா­மிய அரசு உரு­வா­காமல் தடுக்கும் நோக்­கத்­துடன் இப்­படிச் செய்­யப்­பட்­டது. புனித பெத்­த­லேகம் இஸ்­லா­மிய அர­சிடம் அகப்­ப­டக்­கூ­டாது என்­பதே எண்ணம். பலஸ்­தீ­னத்­திற்­கான சிறப்பு ஆணைக்­கு­ழுவின் (UNSCOP) பரிந்­து­ரையின் படி ஐ.நா. தீர்­மானம் 181இன் மூலம் பலஸ்­தீ னம் இரு நாடு­க­ளாகப் பிரிப்­ப­தாக முடிவு செய்­யப்­பட்­டது. அதன் படி யூதர்கள் இஸ்­ரேலை தனி நாடாகப் பிர­க­டனப்படுத்­ தினர். அப்­போது பலஸ்த்­தீ­னத்தின் 85 விழுக்­காடு நிலம் அரபு பலஸ்­தீ­னி­யர்­களி­டமும் 7 விழுக்­காடு நிலம் யூதர்­க­ளி­ட மும் இருந்­தது.

அர­புக்­களின் ஆத்­திரம்

இஸ்ரேல் என்ற நாடு தமக்கு மத்­தியில் உரு­வா­னதை அடுத்து அரபு நாட்டு ஆட்­சி­யா­ளர்கள் இஸ்­ரேலைக் கைப்­பற்ற முற்­பட்­டனர். 1948 மே மாதம் 15ஆம் திகதி அரபு லீக் உறுப்பு நாடு­க­ளான சிரியா, ஈராக், எகிப்து, ஜோர்தான் ஆகி­ய­வையும் புனிதப் போர்ப்­ப­டையும் அரபு விடு­தலைப் படையும் புதிய இஸ்ரேல் நாட்­டுக்கு எதி­ராகப் படை­யெ­டுத்­தன. இந்தப் போரின் போது பெத்­த­லகேம் நகரை ஒரு பகு­தி­யாகக் கொண்ட ஜெரு­ச­லத்தை ஜோர்தான் தன்­னுடன் இணைத்துக் கொண்­டது. 1964ஆம் ஆண்டு பலஸ்­தீ­னத்தில் வாழும் அரபு மக்­க­ளுக்கு ஒரு தனி அரசு உரு­வாக்கப் பட­வேண்டும் என்ற நோக்­கத்­துடன் பலஸ்­தீன விடு­தலை இயக்கம் ஆரம்­பிக்­கப்­பட்­டது. அது இஸ்­ரே­லுக்கும் அமெ­ரிக்­கா­விற்கும் எதி­ராகப் பல­தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டதால் அதை ஒரு பயங்­க­ர­வாத இயக்கம் என இஸ்­ரேலும் மேற்கு நாடு­களும் பிர­க­ட­னப்­ப­டுத்­தின.

உலக வரை­ப­டத்தில் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கக் கூடாது என 1960களில் அரபு நாட்டு ஆட்­சி­யா­ளர்கள் சூளு­ரைத்துக் கொண்­டி­ருந்­தனர். இதற்­காக அவர்கள் பெரு­ம­ளவு படைக்­க­லன்­களை சோவியத் ஒன்­றி­யத்­திடம் வாங்கிக் குவித்­தன. அரபு நாடுகள் தன் மீது படை எடுக்கப் போகின்­றன என உணர்ந்த இஸ்ரேல் தான் முந்திக் கொண்டு தாக்­கு­தலை ஆரம்­பித்­தது.

1967ஆம் ஆண்டு ஜூன் மாதம் 5ஆம் திகதி இஸ்ரேல் எகிப்தின் மீது அதி­ர­டி­யான தாக்­கு­தல்­களை மேற்­கொண்­டது. பல எகிப்­திய போர் விமா­னங்கள் அழிக்­கப்­பட்­டன. எகிப்­துடன் இணைந்து ஈராக், சிரியா, ஜோர்தான் ஆகிய நாடு­களும் போரிட்­டன.

இப் போரின் போது சினாய், காஸா ஆகிய பிர­தே­சங்­களை எகிப்­தி­ட­மி­ருந்தும் கிழக்கு ஜெரு­சலம் மேற்குக் கரை ஆகி­ய­வற்றை ஜோர்­தா­னி­ட­மி­ருந்தும் கோலான் குன்­று­களை சிரி­யா­வி­ட­மி­ருந்தும் இஸ்ரேல் பிடுங்கிக் கொண்­டது. 1973ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதம் இஸ்­ரே­லி­யர்கள் தமது பண்­டிகை ஒன்றைக் கொண்­டாடிக் கொண்­டி­ருக்­கையில் எகிப்தும் சிரி­யாவும் தமது இழந்த நிலங்­களை மீட்க இஸ்ரேல் மீது தாக்­குதல் நடத்­தின. முதலில் சில நிலப்­ப­ரப்­புக்­களை அவர்கள் கைப்­பற்­றி­னாலும் பின்னர் இஸ்­ரேலின் பதில் தாக்­கு­தலின் போது முன்பு இருந்­ததை விட அதிக பிர­தே­சங்­களை இஸ்­ரே­லிடம் அவர்கள் இழந்­தனர். பின்னர் ஏற்­பட்ட சமா­தான முயற்­சி­களில் இஸ்ரேல் தான் கைப்­பற்­றிய சில பிர­தே­சங்­களை எகிப்­திற்கும் சிரி­யா­விற்கும் விட்டுக் கொடுத்­தது.

ஒற்றைக் கண்­ணனின் இரட்­டைப்­பார்வை

1967ஆம் ஆண்டு இஸ்­ரேலின் போர் வெற்­றிக்குக் கார­ண­மாக இருந்­தவர் ஒரு கண்ணைப் போரில் இழந்த தள­பதி மோஸே தயான். 1967 போரில் அர­புக்கள் தோல்­வி­ய­டைந்த பின்னர் பலஸ்­தீன அர­புக்கள் மேற்குக் கரையில் இருந்தும் வெளி­யேறத் தொடங்­கினர்.

ஆனால் மோஸே தயான் அவர்­களைத் தடுத்து அங்­கேயே இருக்­கும்­படி செய்தார். அவர்­க­ளுக்கு வேண்­டிய கல்வி மற்றும் இருப்­பிட வச­தி­களைச் செய்து கொடுத்தார்.

இது அவர் செய்த பெரும் பிழை எனச் சில இஸ்­ரே­லி­யர்கள் வாதி­டு­கின்­றனர். அவர்­களை அப்­போது மேற்குக் கரையில் இருந்தும் காஸாவில் இருந்தும் முழு­மை­யாக விரட்­டி­யி­ருக்க வேண்டும் என்­கின்­றனர் அவர்கள். ஆனால் முழு­மை­யாக விரட்­டப்­பட்டால் அது இன்னும் பெரிய ஆபத்­தாக மாறி­யி­ருக்கும் என்­பது மோஸே தயானின் கணிப்­பாக இருந்­தி­ருக்­கலாம்.

ஓர­ரசுத் தீர்வா? ஈர­ரசுத் தீர்வா?

1967ஆம் ஆண்டுப் போரில் இருந்தே ஐக்­கிய அமெ­ரிக்கா பலஸ்­தீ­னத்தில் இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கு ஓர் அரசும் பலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு என்று ஓர் அரசும் இருக்க வேண்டும் என உதட்­ட­ளவில் சொல்லி வரு­கின்­றது. முதலில் இஸ்ரேல் என்று ஒரு நாடு இருக்கக் கூடாது எனச் சூளு­ரைத்த அரபு நாட்டு ஆட்­சி­யா­ளர்கள் ஈர­ரசுத் தீர்வை ஏற்றுக் கொண்­டுள்­ளார்கள் என்­கின்­றார்கள். இஸ்­ரேலும் ஈர­ரசுத் தீர்வை ஏற்றுக் கொள்­வ­தாகச் சொல்­கின்­றது.

எல்­லோரும் ஈர­ரசு என்ற ஒரே பதத்தைப் பாவித்­தாலும் அவர்­களின் எண்­ணங்கள் மலைக்கும் மடு­விற்கும் இடையில் உள்ள வித்­தி­யா­ச­மாகும். 2000ஆம் ஆண்டு இஸ் ரேல் பல ஈர­ரசு முன்­மொழி­வு­களை முன்­வைத்­தது. பெரும்­ப­குதி மேற்குக்கரையை யும் முழு காஸா நிலப்­ப­ரப்­பையும் விட்டுக் கொடுப்­ப­தா­கவும் கிழக்கு ஜெரு­சலத்தை பலஸ்­தீ­னி­யர்­களின் கட்­டுப்­பாட் டில் விடு­வ­தா­கவும் இஸ்ரேல் முன் மொழிந்­தது. மேலும் பலஸ்­தீன ஏதி­லிக­ளுக்கு முப்­பது பில்­லியன் டொலர்கள் பெறு­ம­தி­யான தீர்வை ஒத்துக் கொள்­வ­தா­கவும் இஸ்ரேல் தெரி­வித்­தி­ருந்­தது.

பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்­தினர் இதை ஏற்க மறுத்­தனர். பலஸ்த்­தீ­னத்தில் ஈர­ர­சு­களைக் கொண்ட ஒரு தீர்வு வேண் டும் என்ற முன் மொழிவு அரபு சமா­தான முனைப்பு என்னும் பெயரில் 2002ஆம் ஆண்டு பெய்ரூட் நகரில் கூடிய அரபு லீக் நாடு­களால் முன்­வைக்­கப்­பட்­டது. இதில் இஸ்ரேல் 1967ஆம் ஆண்டு கைப்­பற்­றிய எல்லா நிலப்­ப­ரப்­புக்­களில் இருந்தும் வெளி­யேற வேண்டும் என்­பது முக்­கி­ய­மா­ன­தாகும். அதை இஸ்ரேல் முழு­மை­யாக ஏற்றுக் கொள்­ள­வில்லை. பலஸ்­தீன விடு­தலை இயக்­கத்தின் தற்­போ­தைய தலைவர் அப்பாஸ் ஈர­ரசுக் கொள்­கையை ஏற்றுக் கொண்டார். பலஸ்­தீ­னி­யர்­க­ளுக்கு என ஓர் அரசு உரு­வானால் அது தனக்கு பேரா­பத்­தாக முடி­யு­மென இஸ்ரேல் உறு­தி­யாக நம்­பு­கி­றது.

உதட்­ட­ளவில் ஈர­ர­சுகள் கொண்ட ஒரு தீர்வை இஸ்ரேல் விரும்­பு­வ­தாகச் சொன்­னாலும் அது அதை விரும்­ப­வில்லை. பலஸ்­தீ­னத்தில் இஸ்­ரே­லி­யர்­க­ளுக்கு ஒரு அங்­குல நிலம் கூட ஆட்சி செய்ய அனு­ம ­திக்க மாட்டோம் என ஹமாஸ் அமைப்பி னர் சொல்லிக் கொண்­டி­ருக்கும் வரை ஈர­ர சுத் தீர்வு சாத்­தி­ய­மற்­ற­தாகும். இதனால் ஹமாஸ் அமைப்பின் தொடர்ச்­சி­யான இருப்பு இஸ்­ரே­லுக்குத் தேவை­யான ஒன்­றாகும்.

ஆனால் ஆனால் ஹமாஸ் அமைப்பு வலுப்பெறாமல் இருக்க அதன் மீது அடிக் கடி இஸ்ரேல் தாக்கியபடி இருக்கிறது.

– வேல் தர்மா
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல