வியாழன், 16 அக்டோபர், 2014

எலியை கண்டு அல­றிய இள­வ­ரசி வாய்­விட்டு சிரித்தார் சசி­கலா - ஆறுதல் கூறினார் ஜெய­ல­லிதா

இது பெங்­களூர் சிறைச்­சா­லையில்....

சென்­னையை தவிர்த்து கொட­நாட்­டுக்கு அடுத்­த­ப­டி­யாக ஜெய­ல­லிதா அதிக நாட்கள் சென்று தங்­கி­யது பரப்­பன அக்­ர­ஹா­ரா­வாகத் தான் இருக்கும்! 'அம்மா... அம்மா...’ என்று உரு­கித் ­த­வித்த அர­சி­யல்­வா­தி­களின் வருகை குறைந்து ஜெய­ல­லிதா, சசி­கலா, சுதா­கரன், இள­வ­ரசி ஆகி­யோரின் உற­வி­னர்கள் வருகை அதி­க­மா­கி­யி­ருக்­கி­றது.

`செல்ஃபி வித் பரப்­பன அக்­ர­ஹாரா'



'பரப்­பன அக்­ர­ஹாரா...’ பெங்­க­ளூரில் உள்ள இந்த இடம் இப்­போது கர்­நா­டக மக்­க­ளை­விட தமி­ழக மக்­க­ளுக்கு நன்கு பரிச்­சயம் ஆகி­விட்­டது. ஜெய­ல­லி­தாவை விசா­ரித்த நீதி­மன்றம், இப்­போது அடைக்­கப்­பட்­டி­ருக்கும் சிறை­வ­ளாகம் அனைத்­தையும் அ.தி.மு.க நிர்­வா­கிகள் வியப்­புடன் பார்த்து வரு­கி­றார்கள். ஒவ்­வொ­ரு­வரும் 'இதுதான் அம்­மாவை விசா­ரிச்ச நீதி­மன்­றமாம். அந்த மாடிக் கட்­ட­டத்­து­லதான் அம்மா இருக்­காங்­களாம்...’ என்று ஒரு­வ­ருக்­கொ­ருவர் பேசிக்­கொள்­கி­றார்கள். அது­மட்­டு­மல்­லாமல், சோதனை கடவை அருகே இருக்கும் பரப்­பன அக்­ர­ஹாரா காவல் நிலை­யத்தின் பெயர் பலகை தெரி­வது மாதிரி நின்று `செல்ஃபி' எடுத்துக் கொள்­கி­றார்கள்.

முன்­னாளே முன்­னாலே...

ஜெய­ல­லி­தாவின் அமைச்­ச­ர­வையில் இருந்து பதவி பறிக்­கப்­பட்ட சில முன்னாள் அமைச்­சர்கள் சிறை வாசலில் இருந்து நகர்­வதே இல்லை. தினமும் காலையில் தூங்கி எழுந்து குளித்­து­விட்டு வந்தால், மாலைப்­பொ­ழுது சாய்ந்த பிற­குதான் ஹோட்­ட­லுக்குக் திரும்­பு­கி­றார்கள். செங்­கோட்­டையன், முன்னாள் சபா­நா­யகர் ஜெயக்­குமார், பச்­சைமால், மாத­வரம் மூர்த்தி, முனு­சாமி, நயினார் நாகேந்­திரன் ஆகி­யோரை எந்த நேரத்தில் சென்­றாலும் சிறை வாசலில் பார்க்­கலாம். ''அம்மா வெளியே வரும் வரைக்கும் நாங்க யாரும் ஊருக்குத் திரும்­பிப்­போகக் கூடாது என்று முடிவு செய்­தி­ருக்­கிறோம். அமைச்­சர்கள் தங்கள் பணி­களைக் கவ­னிக்­க­வேண்­டி­யி­ருப்­பதால், அவர்கள் சென்­னைக்குப் போவதும் பெங்­களூர் வரு­வ­து­மாக இருக்­கி­றார்கள். எங்­க­ளுக்கு அம்மா இருக்கும் இடமே கோயில். அவங்­களை இங்கே விட்­டுட்டு நாங்க எங்கே போக முடியும் சொல்­லுங்க...'' என்று வருத்­தத்­துடன் கேட்­கிறார் முன்னாள் அமைச்சர் ஒருவர். ஜெய­ல­லிதா வெளியே வந்­ததும் எப்­ப­டியும் தங்­க­ளுக்கு அமைச்­ச­ர­வையில் இடம்­கி­டைக்கும் என்­பது மட்­டும்தான் இவர்­களின் ஒரே நம்­பிக்கை.

'தீராத பகை!’

காலம்­கா­ல­மாக தீராத பகை­கொண்ட பங்­கா­ளி­கள்­கூட குடும்­பத்தில் ஏதா­வது பெரிய பிரச்­சினை ஏற்­பட்டால் ஒன்று கூடி­வி­டு­வார்கள். ஆனால், அர­சியல் கட்­சி­களில் அதெல்லாம் நடக்­கா­து­போல...

அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்­ச­ரான கே.பி.முனு­சா­மியும் உயர் கல்­வித்­துறை அமைச்சர் பழ­னி­யப்­பனும் தனித்­தனி கோஷ்­டி­க­ளா­கவே பிரிந்து நிற்­கி­றார்கள். முனு­சாமி நின்­றி­ருந்­ததைப் பார்த்த அமைச்சர் பழ­னி­யப்பன் அந்தப் பக்­கம்­கூட திரும்­ப­வில்லை. 'அம்­மாவே வந்­தாலும் இவர்­களின் சண்­டையைத் தீர்க்க முடி­யாது!’ என்று புலம்­பி­ய­படி சென்­றனர் கட்­சிக்­காரர்கள். 11-ஆம் திகதி காலையில் இருந்தே முனு­சா­மியும் பழ­னி­யப்­பனும் சிறை வளா­கத்­தில்தான் இருந்­தனர். மாலை அங்­கி­ருந்து செல்லும் வரை ஒரு­வ­ருக்­கொருவர் பேசிக்­கொள்­ளவே இல்லை.

இள­வ­ரசி அலற... சசி­கலா சிரிக்க...

பரப்­பன அக்­ர­ஹாரா சிறைச்­சா­லைக்குள் ஒரு கோடி ரூபா செலவில் வெதுப்­பக இயந்­தி­ரங்கள் அமைக்­கப்­பட்­டுள்­ளன. இதில் தினமும், பாண், பிஸ்கட், கேக் போன்ற பொருட்கள் கைதி­களால் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றன. இதில் வேண்டாம் என்று ஓரங்­கட்­டப்­படும் பொருட்­களைச் சாப்­பிட்டு எலிகள் ஏகத்­துக்கும் கொழுத்­துள்­ளன. அவை, சிறையில் உள்ள கைதி­களை எதுவும் செய்­வ­தில்லை. கைதி­களும், சாப்­பிட்­ட­து­போக மிஞ்சும் உணவை எலி­க­ளுக்கு வைத்­து­வி­டு­வார்­களாம். அதனால், சர்வ சாதா­ர­ண­மாக எலிகள் வரு­வதும் போவ­து­மாக இருக்­கின்­றன.

சில நாட்­க­ளுக்கு முன்பு இள­வ­ரசி தன் அறையில் இருந்து வெளியே வரும்­போது ஓர் எலியை மிதித்­து­விட்­டாராம். இதில் பயந்­து­போன அவர், அல­றித்­து­டித்து கத்­தி­ய­படி அறைக்குள் ஓடி­யி­ருக்­கிறார். இதைக் கவ­னித்த சசி­கலா வாய்­விட்டு சிரித்­தி­ருக்­கிறார். இந்த விட­யங்­களை ஜெய­ல­லி­தா­வி­டமும் சசி­கலா சொல்லிச் சிரித்­த­தாக சொல்­கி­றார்கள். 'அது விநா­யக பெரு­மா­னோட வாக­னம்­தானே... நம்மை எதுவும் செய்­யாது!’ என்று சொன்­னாராம் ஜெய­ல­லிதா.

ஊதுபத்­தி உருட்­டலை...

விசா­ரணைக் கைதி­க­ளாகச் சிறைக்குச் செல்லும் கைதி­களின் பிரத்­தி­யேக அட்­டையில் சிறைக்குள் அவர்கள் செய்யும் பணி பற்றி குறிப்­பிடத் தேவை­யில்லை. ஆனால், தண்­டனைக் கைதி­க­ளாகச் சிறைக்குள் செல்­ப­வர்­க­ளுக்கு என்ன பணி ஒதுக்­கப்­பட்­டுள்­ளது என்­பதைக் கட்­டாயம் அந்த அட்­டையில் குறிப்­பிட வேண்டும். அவர்­களின் தண்­டனைக் காலத்தைக் குறைப்­ப­தோடு, நன்­ன­டத்­தைக்கும் அதுதான் சான்­ற­ளிக்கும்.

பரப்­பன அக்­ர­ஹாரா சிறையில் கைதி­க­ளுக்கு 25 சிறு தொழில்கள் இருக்­கின்­றன. சமையல் வேலை­களில் சப்­பாத்தி உருட்­டுதல் தொடங்கி நூலக உத­வி­யாளர் பணி, தையல், `கார்பன்ஸ் வொர்க்', தச்சு வேலை, கூடை பின்­னுதல், தோட்­டத்தில் களை எடுத்தல், `பேக்­கரி', மெழு­கு­வத்தி தயா­ரித்தல், ஊது­பத்தி உருட்­டுதல், பொம்மை தயா­ரித்தல் போன்ற பணிகள் அடக்கம். அத­ன­டிப்­ப­டை­யில்தான் ஜெய­ல­லிதா, சசி­கலா, இள­வ­ரசி ஆகிய மூன்று பேர் ஊது­பத்தி உருட்டும் பணியில் இருப்­ப­தா­கவும், சுதா­கரன் அச்­சிடும் பகு­தியில் பிழை திருத்தம் பார்ப்­ப­தா­கவும் முதலில் செய்தி பர­வி­யது. இது­பற்றி பேசிய சிறைத்­துறை அதி­காரி ஜெய­சிம்ஹா, '`ஜெய­ல­லிதா உள்­ளிட்ட நால்­வ­ருக்கும் நீண்­ட­காலத் தண்­டனை கைதி இல்லை என்­பதால் இது­வரை வேலை எதுவும் ஒதுக்­க­வில்லை. ஜெய­ல­லிதா சிறைக்குள் அடைக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து இது­வரை யாரையும் சந்­திக்­கவே இல்லை’ என்று உறு­தி­யாகக் கூறி­யி­ருக்­கிறார்.

ஜெயாவின் உடல்­நிலை எப்­படி இருக்­கி­றது

பத்­தி­ரி­கை­யா­ளர்­களின் கூப்­பிட்ட குர­லுக்கு ஓடி­வந்து சிறை விட­யங்­களை சொல்லும் ஒரே நபர் சிறைத் துறை அதி­காரி ஜெய­சிம்ஹா. தினமும் மூன்று வேளையும் மறக்­காமல் பத்­தி­ரி­கை­யா­ளர்­க­ளுக்குப் பேட்டி கொடுப்­பதை இவர் வாடிக்­கை­யா­கவே வைத்­தி­ருக்­கிறார். எந்தப் பேட்­டி­யாக இருந்­தாலும் முதலில், ''குமாரி ஜெய­ல­லிதா ஹெல்த் கண்­டிஷன் ஸ்டேபுள்'' என்­றுதான் ஆரம்­பிக்­கிறார். ஜெய­ல­லிதா காலையில் என்ன சாப்­பிட்டார் என்­பதில் தொடங்கி எதையும் அவர் மறைப்­ப­தில்லை. தினமும் செய்­தித்­தாள்­க­ளிலும், டி.வி.யிலும் ஜெய­சிம்ஹா பேட்­டி­களைப் படித்தும், பார்த்தும் அதி­ருப்­தி­ய­டைந்­துள்­ளாராம் ஜெய­ல­லிதா. 'எனக்கு நீதி­மன்றம் தண்­டனை கொடுத்­தி­ருக்­கி­றது. அதனால், நான் சிறையில் இருக்­கிறேன். நீங்கள் அடிக்­கடி இங்கே வரக்­கூடாது. எனக்கு ஏதா­வது தேவைப்­பட்டால் நான் கூப்­பி­டு­கிறேன்’ என்று ஜெய­சிம்­ஹா­விடம், ஜெய­ல­லிதா கோபப்­பட்­ட­தா­கவும் சொல்­கி­றார்கள். ஆனால் ஜெய­சிம்­ஹாவோ, 'அவங்க இருக்­கி­றது என்­னு­டைய கட்­டுப்­பாட்டில் இருக்கும் சிறையில். என்னை வரக்­கூ­டாது என்று அவர் எப்­படிச் சொல்­லலாம்? நான் அவ­ருக்கு கீழே வேலை செய்யும் அதி­காரி இல்லை’ என்று கூறி வரு­கி­றாராம்.

'அத்தை ஏன் எங்­களைப் புரிஞ்­சுக்க மாட்­டேங்­கு­றாங்க...’

ஜெய­ல­லி­தாவின் அண்ணன் ஜெயக்­கு­மாரின் மகள் தீபாவும், மகன் தீபக்கும் குடும்­பத்­தோடு பெங்­களூர் `சௌத் எண்ட் சர்கில்' ஏரி­யாவில் உள்ள அவ­ரது சின்ன பாட்­டியும், ஜெய­ல­லி­தாவின் சித்­தி­யு­மான வித்யா வீட்டில் தங்­கி­யுள்­ளனர். ஜெய­ல­லிதா சிறையில் அடைக்­கப்­பட்­ட­தி­லி­ருந்து அவர்கள் இரு­வரும் அங்­கேதான் இருக்­கி­றார்கள். தினமும் சிறைக்கு வரும் தீபாவை பாது­காப்பு அதி­கா­ரிகள் சிறை வளா­கத்­துக்­குள்­கூட அனு­ம­திக்­காமல் சோதனை கட­வை­யுடன் திருப்பி அனுப்­பி­வி­டு­கி­றார்கள். இதனால், தீபா மிகவும் அதி­ருப்­தி­ய­டைந்­துள்ளார். `நாங்க என்ன பிழை செய்தோம். அத்தை நல்லா இருக்­கும்­போது பார்க்­கப்­போனா உத­விக்­காக வந்­துட்­டாங்­கன்னு நினைக்­கலாம். இந்தச் சூழ்­நி­லை­யிலும் எங்­களைப் பார்க்­காமல் தவிர்ப்­பது மன­சுக்கு வேத­னை­யாக இருக்கு. என் சொந்த இரத்தம் உள்ளே இருக்கு. என்னால் உள்ளே செல்ல முடி­யலை. தான் ஆடா­விட்­டாலும் தன் சதை ஆடும்னு சொல்­லு­வாங்க இல்­லையா... என்னால் அத்தை உள்ளே போனதில் இருந்து சாப்­பிட முடி­யலை... தூங்க முடி­யலை... என்­னுடன் பேசாம இருந்­தாலும் அத்தை நல்லா இருக்­காங்க என்ற செய்தி சந்­தோ­ஷமா இருந்­துச்சு. சிறைக்குள் அவர் எப்­படி இருப்­பார் என்று நினைத்­தாலே நெஞ்சு வெடிக்­குது. அத்தை ஏன் எங்­களைப் புரிஞ்­சுக்க மாட்­டேங்­கு­றாங்க...’ என்று தன் சின்ன பாட்டி வித்­யா­விடம் சொல்லி அழு­தி­ருக்­கிறார் தீபா.

அ.தி.மு.க வழக்­க­றி­ஞர்­க­ளுக்கு கண்­டனம்

சிறையில் இருக்கும் ஜெய­ல­லிதா உட்­பட நான்கு பேருக்கும் பிணை கேட்டு தாக்கல் செய்த மனுவை மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி ரத்­ன­கலா கடந்த 1-ஆம் திகதி சாதா­ரண அமர்­வுக்கு மாற்­றினார். பிறகு, 7-ஆம் திகதி மேல்­நீ­தி­மன்ற நீதி­பதி சந்­தி­ர­சே­கரா பிணை மனுவை நிரா­க­ரித்தார். அந்தச் சம­யங்­களில் சென்­னை­யி­லி­ருந்து வந்­தி­ருந்த வழக்­க­றி­ஞர்கள் கர்­நா­டக மேல்­நீ­தி­மன்ற வளா­கத்­தி­லேயே நீதி­மன்­றத்­துக்கு எதி­ரா­கவும், நீதி­ப­தி­க­ளுக்கு எதி­ரா­கவும் கோஷங்கள் எழுப்­பினர், ஆர்ப்­பாட்­டங்கள் செய்­தனர். இதைக் கண்­டித்து கடந்த 11-ஆம் திகதி கர்­நா­டக பார் கவுன்சில் ஆலோ­சனை கூட்டம் நடை­பெற்­றது. அப்­போது பேசிய கர்­நா­டக மேல்­நீ­தி­மன்ற பார் கவுன்சில் தலைவர் பி.பி.ஹெட்­ஜுவும், துணைத் தலைவர் அனில் குமாரும் தமி­ழக வழக்­க­றி­ஞர்­க­ளுக்கு கடும் கண்­ட­னத்தைத் தெரி­வித்­த­துடன் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்­யவும் ஆலோ­சித்து வரு­கி­றார்கள்.

'அம்மா... நாங்க இருக்­கோம்மா!’

பரப்­பன அக்­ர­ஹாரா பேருந்து நிறுத்­தத்தில் அமைக்­கப்­பட்­டுள்ள பிர­தான சோத­னைச்­சா­வடி வழி­யாக அமைச்­சர்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்­ளிட்ட சில வி.ஐ.பி.க்கள் மட்­டுமே சிறையின் நுழை­வா­யி­லுக்குச் செல்ல அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­றனர். மற்­ற­வர்கள் தடுத்து நிறுத்­தப்­ப­டு­கி­றார்கள். சிறையின் பின்­புறம் நமது புகைப்­ப­டக்­காரர் சென்று வேறு சில கோணங்­களில் சிறையின் படங்­களை எடுத்­தி­ருந்தார். அதைக்­க­டந்த இதழில் வெளி­யிட்டு இருந்தோம். அதன்­பி­றகு இடத்தைத் தேடி அ.தி.மு.க.வினர் படை­யெ­டுக்க ஆரம்­பித்­து­விட்­டனர். சிறைக்கு பின்­பக்­கத்தில் நின்­ற­படி, 'அம்மா... நாங்க இருக்­கோம்மா... அம்மா வாழ்க... அம்மா வாழ்க...’ என்­றெல்லாம் கோஷம் போட்­டுள்­ளனர். இதனால் பொலி­ஸாரின் பாது­காப்பு இப்­போது சிறை வளா­கத்தைச் சுற்­றிலும் பலப்­ப­டுத்­தப்­பட்டு உள்­ளது.

ஜெய­ல­லி­தாவின் முதன்மை பாது­காப்பு அதி­கா­ரி­யாக இருந்த பெரு­மாள்­சாமி, சில நாட்­க­ளுக்கு முன்பு சிறை வளா­கத்­துக்கு வந்தார். அவ­ரிடம் பாது­காப்­புக்கு நின்­றி­ருந்த பொலிஸார் சோதனை சாவ­டியில் தீவிர விசா­ர­ணைக்குப் பிறகே உள்ளே அனு­ம­தித்­தனர். 'அம்மா வெளியில் இருந்­த­வ­ரைக்கும் அவர் நம்மை நெருங்­க­விட மாட்டார்... இப்­போது அவ­ரு­டைய நிலை­மையைப் பாருங்க..’ என்று விமர்­சித்தார் முன்னாள் அமைச்சர் ஒருவர்.

கடந்த திங்­கட்­கி­ழமை மதியம் 3 மணி­ய­ளவில் பரப்­பன அக்­ர­ஹாரா பஸ் நிலை­யத்தில் புதிய குளி­ரூட்­டி­யுடன் ஒருவர், யாரையோ கைய­டக்­கத்­தொ­லை­பே­சியில் தொடர்­பு­கொள்ள முயற்­சித்­த­படி இருந்தார். அவ­ரிடம் விசா­ரித்­த­போது, பெங்­க­ளூ­ரி­லுள்ள ஒரு தனியார் குளி­ரூட்டி பொருத்தும் நிறு­வ­னத்தில் இருந்து வரு­வ­தா­கவும், தன்­னு­டைய பெயர் ஷெரிஃப் என்றும் சொன்னார். அடுத்து அவர் சொன்­ன­துதான் அதிர்ச்சி ரகம். ''தமிழ்­நாடு முன்னாள் முதல்வர் ஜெய­ல­லி­தாவை வைத்­தி­ருக்கும் அறைக்கு குளி­ரூட்­டியை பொருத்­து­வ­தற்­காக என்னை வரச் சொன்­னார்கள். நேற்றே (நேற்­று­முன்­தினம்) அந்த அறையைப் பார்­வை­யிட அழைத்துச் சென்­றார்கள். இன்­றைக்கு (நேற்று) வந்து குளி­ரூட்­டியை பொருத்தித் தரு­மாறு சிறையில் உள்ள ஜெய­ராமன் என்­பவர் சொன்னார். அதற்­கா­கத்தான் வந்தேன். இந்­நி­லையில், ''நேற்­றைக்கு (நேற்­று­முன்­தினம்) நீங்கள் சென்­ற­போது அந்த அறையில் யார் இருந்­தார்கள்... அது தனி அறையா? உள்ளே என்­னென்ன வச­திகள் இருக்­கின்­றன?'' என்று கேட்டோம்.

''அது கைதி­க­ளுக்­கான அறை இல்லை. பெண்கள் சிறையில் உள்ள ஒரு மருத்­து­வ­மனை கட்­டடம். அதில் உள்ள ஓர் அறை­யில்தான் ஜெய­ல­லிதா உள்­ளிட்ட மூன்று பேர்­களும் இருக்­கி­றார்கள். மூவ­ருக்கும் தனித்­தனி கட்­டில்கள் மெத்­தை­யுடன் போடப்­பட்­டி­ருக்­கின்­றன. ஒரு மேசையும் கதி­ரையும் இருக்­கி­றது. அதில் உட்­கார்ந்­த­ப­டிதான் ஜெய­ல­லிதா புத்­த­கங்கள் படித்­துக்­கொண்­டி­ருக்­கிறார். அவரின் மேசையின் மீது நிறைய புத்­த­கங்கள் இருக்­கின்­றன. அப்புறம் ஒரு தொலைக்காட்சிப்பெட்டி இருக்கிறது. அதில் தூர்தர்ஷன் அலைவரிசை தான் இயக்கப்படுகிறது. அந்த அறையில் `எயார்கூலர்' இருந்தது. அது போதுமானதாக இல்லையென்றுதான் குளிரூட்டியை பொருத்தச் சொல்லியிருக்கிறார்கள்'' என்று சொல்லிவிட்டு நகர்ந்துகொண்டார் ஷெரிஃப்.

''ஜெய­ல­லிதா, கைதி­க­ளுக்­கான சிறையில் அடைக்­கப்­பட்டால் இது­மா­தி­ரி­யான வச­தி­களை செய்து தர­மு­டி­யாது என்­ப­தால்தான் அவரை மருத்­து­வ­மனை அறையில் தங்­க­வைக்­கப்­பட்டு அங்கு குளி­ரூடட்டியை பொருத்தும் வேலைகள் நடக்­கி­றது'' என்­கி­றார்கள் சிறை வட்டாரத்தில்.

16 மெழுகுவர்த்திகள்

ஜெய­ல­லிதா சிறையில் அடைக்­கப்­பட்டு கடந்த ஞாயிற்­றுக்­கி­ழ­மை­யுடன் 16 நாட்கள் ஆகின்­றன. இதை நினை­வு­ப­டுத்தும் வகையில் தர்­ம­புரி மாவட்­டத்தைச் சேர்ந்த ஆறு­முகம் என்­பவர், 16 மெழு­கு­வர்த்­தி­க­ளுடன் வந்திருந்தார். அவருடன் வந்த 16 பேர்களின் கைகளிலும் மெழுகுவர்த்தியைக் கொடுத்து சிறையை நோக்கி நீட்டியபடி நின்றனர். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர்கள் ஒன்றுகூடி நடத்தும் சர்வமத பிரார்த்த­னையும் சிறை வாசலில் நடக்கிறது. பெங்களூரில் உள்ள சனீஸ்வரன் கோயிலில் பாடசாலை மாணவிகளை வைத்து சிறப்புப் பூஜையும், யாகமும் நடத்தப்பட்டுள்ளன.

(விகடன்)
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல