ஓர் நேரடி ரிப்போட்
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள வீமன்காமம் தையசிட்டி ஞானவைரவரின் ஆலயத்தைப் பார்வையிடச் சென்ற மக்கள் அழிவுற்று சிதைந்துபோயுள்ள தமது குடியிருப்புக்களை நேரில் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் பிரிய மனமின்றி மனவேதனையுடன் வெளியேறினர்.
கடந்த ெவள்ளியன்று காலை 11 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து, குறித்த ஆலய நிர்வாகத்தினர் கீரிமலை நகுலேஸ்வரக்குருக்கள் தலைமையில் ஆறு மதகுருமார் மற்றும் கிராமத்தவர்கள் உட்பட சுமார் 15 பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனுடன் வலி. வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்தனர்.
பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சிடம் இதற்கான எழுத்துமூல அனுமதி ஏலவே பெறப்பட்டிருந்தது.
யாழ் – காங்கேசன்துறை வீதியில் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்திலிருந்து சுமார் 500 மீற்றரிலுள்ள இராணுவத்தடையை தாண்டி உள்ளே சென்ற வாகனங்கள் காங்கேசன்துறை வீதியில் மேலும் 400 மீற்றருக்கும் குறைந்த தூரம் பயணித்து பாதுகாப்பு வேலியோரம் அமைக்கப்பட்டுள்ள புதிய வீதியின் ஊடாக சென்றவேளையில் வீதியோரங்களில் ஒரே பற்றைக்காடுகள் மட்டுமே காட்சியளித்தன.
பயணத்தின்போது எங்கும் நிசப்தம் நிலவியது. இதேவேளை, கட்டட சிதைவுகளை புகைப்படம் பிடிக்க முயன்ற போது, அதற்கு கூடவே பயணித்த இரணுவ பொலிஸ் பிரிவைச் சேர்ந்தவர்கள் அனுமதிக்கவில்லை. இருப்பினும் ஓரிரு படங்களை எடுக்க அனுமதி கிட்டியது. அதேவேளை, குறிப்பிட்ட அளவு தூரம் சென்று ஓர் திருப்பத்தின்மூலம் மாவிட்டபுரம் – மயிலிட்டி வீதியான வி.சி. றோட்டை அடைந்து, தொடர்ந்தும் பயணிக்கும்போது வீதியின் மையப்பகுதியை உள்ளடக்கியதாக ஓர் பெரிய இராணுவமுகாம் நீண்டு சென்றது. அதன் எல்லை கண்ணுக்கு எட்டிய தூரம் வரை புலப்படவேயில்லை.
இவ்வீதியின் இடது பக்கமாக தொடர்ந்து செல்வதற்காக இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட பாதையின் வழியே பயணித்தவேளை, ஓர் பெரிய வனப்பகுதியின் ஊடாக பயணிப்பது போன்ற தோற்றமே கண்முன் விரிந்தது. எங்கும் ஒரே பற்றைக்காடுகள். எத்திசையிலும் போதிய அடையாளமற்ற தன்மையாகவேயிருந்தது. அதேவேளை, கொட்டித் தீர்த்த மழையின் விளைவால் சேறும் சகதியும் எம்மை வழியனுப்ப மறுத்து வாகனச் சக்கரங்களை இறுகப்பிடித்து நின்றது. அதனால் சகல வாகனங்களையும் அவ்விடத்திலேயே நிறுத்திவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தோம். புதிதாக மரங்களை வெட்டி ஏற்படுத்தப்பட்ட பாதையே அன்றி அது ஓர் நிரந்தர வீதி அல்ல என்பதையும் புரிந்துகொண்டோம். கூடவே பயணித்த அந்தப் பிரதேசத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள், "ஆகா இதுதான் டீசல் கிணறு வாத்தியாரின் காணி" எனவும் "இது தபால் ஊழியரின் வளவு" எனவும் அடையாளமிட்டவாறே வந்தனர்.
அவ்வாறே பேசியபடி 10 நிமிடங்கள் சென்றவேளை, ஓர் பெரிய பழைமைவாய்ந்த ஆலயம் யாருமே அற்ற நிலை யில் பூட்டப்பட்டு பாழடைந்து காணப்பட்டது.
அனைவரும் வாசல் முன் நின்றோம். அந்தணர்கள் முன்சென்று வேத மந்திரங்கள் ஓதி, தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்திய பின் ஆலய வாசல் திறக்கப்படடது. போரின் வடு ஆலயத்திலும் தென்படத் தவறவில்லை. யுத்தத்திற்கு முன்பு ஓங்கி ஒலித்த காண்டாமணியின் ஓர் எச் சம் மட்டுமே இருந் தது
உட்சென்ற அந்தணர்கள் வேகமாகத் தமது பணியை ஆரம்பித்து சுமார் 15 நிமி டங்களிற்குள் ஓர் பூசையை நடத்தி முடித்தனர்.
அனைத்தும் நிறைவுற்று மீண்டும் ஆலயம் பூட்டப்பட்டு வந்த வழியே திரும்பிச் செல்ல முடிவாகிய போது, சில முதியவர்களின் மனம் கனத்து பிரிய மனமின்றியே, கூடப்பயணித்தவர்களின் வற்புறுத்தலினால் நடக்க ஆரம்பித்தனர். ஒருவாறு வாகனம் நிறுத்திய இடத்தை அடைந்தோம்
வண்டி காட்டுவழிபோல் உள்ள பாதையின் ஊடாகப் பயணித்து பிரதான பாதையை அடைந்தபோது வீதியின் இருமருங்கிலும் உள்ள வீட்டின் உரிமையாளர்கள் மனம் பொறுக்காது பாராளுமன்ற உறுப்பினர் ஊடாக இராணுவ உத்தியோகத்தரிடம் தங்கள் இருப்பிடங்கள் இருந்த இடங்களை பார்வையிட அனுமதி கேட்டபோது, வாகனத்தை நிறுத்தி கீழே இறங்காது பார்வையிடுங்கள் என்ற அனுமதி மட்டும் கிடைத்தது.
பார்வையிட்டவர்களில் ஒரு சிலர் மனம் பொறுக்காது வாகனங்களை விட்டு இறங்கி ஓடிச்சென்று தமது வீட்டின் எஞ்சியுள்ள சிதைவுகள் மூலம் இருப்பிடங்களை இனங்கண்டுகொண்டதோடு நினைவுச்சின்னமாக புகைப்படம் எடுக்கவும் தவறவில்லை.
தொடர்ந்து சுமார் அரை மணிநேரம் 300 மீற்றர் நடைபயணத்தின் பின் இராணுவ உத்தியோகத்தரின் கண்டிப்பான உத்தரவின் பெயரில் அனைவரும் தமது சொந்த நிலங்களைப் பிரிய மனமின்றி ஏக்கத்துடன் வாகனங்களில் ஏறி, என்றோ ஒருநாள் எமது மண்ணில் வந்து நிம்மதி யாகப் படுத்து உறங்குவோம் என்ற மனக் குமுறலுடன் திரும்பினர்.
கடந்த 24 வருடங்களுக்குப் பின் தமது சொந்த மண்ணைப் பார்த்த நிம்மதி பலருக்கு. இறுதியாக மனவேதனையுடன் பயணித்து வீமன் காமம் வழியாக மாவிட்டபுரம் புகையிரத நிலையத்தை அடைந்தோம். பின்னர் வீமன் காமம் பாடசாலை அருகில் உள்ள சோதனைச் சாவடியின் வழியாக உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருந்து வெளியேறி னோம்.
(ந.லோகதயாளன்)
வலி. வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள வீமன்காமம் தையசிட்டி ஞானவைரவரின் ஆலயத்தைப் பார்வையிடச் சென்ற மக்கள் அழிவுற்று சிதைந்துபோயுள்ள தமது குடியிருப்புக்களை நேரில் பார்த்து பெரும் அதிர்ச்சியடைந்துள்ளதுடன் பிரிய மனமின்றி மனவேதனையுடன் வெளியேறினர்.
கடந்த ெவள்ளியன்று காலை 11 மணியளவில் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலய முன்றலில் இருந்து, குறித்த ஆலய நிர்வாகத்தினர் கீரிமலை நகுலேஸ்வரக்குருக்கள் தலைமையில் ஆறு மதகுருமார் மற்றும் கிராமத்தவர்கள் உட்பட சுமார் 15 பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் திருமதி விஜயகலா மகேஸ்வரனுடன் வலி. வடக்கின் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் பிரவேசித்தனர்.
பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சிடம் இதற்கான எழுத்துமூல அனுமதி ஏலவே பெறப்பட்டிருந்தது.
யாழ் – காங்கேசன்துறை வீதியில் மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயத்திலிருந்து சுமார் 500 மீற்றரிலுள்ள இராணுவத்தடையை தாண்டி உள்ளே சென்ற வாகனங்கள் காங்கேசன்துறை வீதியில் மேலும் 400 மீற்றருக்கும் குறைந்த தூரம் பயணித்து பாதுகாப்பு வேலியோரம் அமைக்கப்பட்டுள்ள புதிய வீதியின் ஊடாக சென்றவேளையில் வீதியோரங்களில் ஒரே பற்றைக்காடுகள் மட்டுமே காட்சியளித்தன.

இவ்வீதியின் இடது பக்கமாக தொடர்ந்து செல்வதற்காக இராணுவத்தினரால் புதிதாக அமைக்கப்பட்ட பாதையின் வழியே பயணித்தவேளை, ஓர் பெரிய வனப்பகுதியின் ஊடாக பயணிப்பது போன்ற தோற்றமே கண்முன் விரிந்தது. எங்கும் ஒரே பற்றைக்காடுகள். எத்திசையிலும் போதிய அடையாளமற்ற தன்மையாகவேயிருந்தது. அதேவேளை, கொட்டித் தீர்த்த மழையின் விளைவால் சேறும் சகதியும் எம்மை வழியனுப்ப மறுத்து வாகனச் சக்கரங்களை இறுகப்பிடித்து நின்றது. அதனால் சகல வாகனங்களையும் அவ்விடத்திலேயே நிறுத்திவிட்டு இறங்கி நடக்க ஆரம்பித்தோம். புதிதாக மரங்களை வெட்டி ஏற்படுத்தப்பட்ட பாதையே அன்றி அது ஓர் நிரந்தர வீதி அல்ல என்பதையும் புரிந்துகொண்டோம். கூடவே பயணித்த அந்தப் பிரதேசத்திலேயே பிறந்து வளர்ந்தவர்கள், "ஆகா இதுதான் டீசல் கிணறு வாத்தியாரின் காணி" எனவும் "இது தபால் ஊழியரின் வளவு" எனவும் அடையாளமிட்டவாறே வந்தனர்.
அவ்வாறே பேசியபடி 10 நிமிடங்கள் சென்றவேளை, ஓர் பெரிய பழைமைவாய்ந்த ஆலயம் யாருமே அற்ற நிலை யில் பூட்டப்பட்டு பாழடைந்து காணப்பட்டது.
அனைவரும் வாசல் முன் நின்றோம். அந்தணர்கள் முன்சென்று வேத மந்திரங்கள் ஓதி, தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்திய பின் ஆலய வாசல் திறக்கப்படடது. போரின் வடு ஆலயத்திலும் தென்படத் தவறவில்லை. யுத்தத்திற்கு முன்பு ஓங்கி ஒலித்த காண்டாமணியின் ஓர் எச் சம் மட்டுமே இருந் தது
உட்சென்ற அந்தணர்கள் வேகமாகத் தமது பணியை ஆரம்பித்து சுமார் 15 நிமி டங்களிற்குள் ஓர் பூசையை நடத்தி முடித்தனர்.
அனைத்தும் நிறைவுற்று மீண்டும் ஆலயம் பூட்டப்பட்டு வந்த வழியே திரும்பிச் செல்ல முடிவாகிய போது, சில முதியவர்களின் மனம் கனத்து பிரிய மனமின்றியே, கூடப்பயணித்தவர்களின் வற்புறுத்தலினால் நடக்க ஆரம்பித்தனர். ஒருவாறு வாகனம் நிறுத்திய இடத்தை அடைந்தோம்

பார்வையிட்டவர்களில் ஒரு சிலர் மனம் பொறுக்காது வாகனங்களை விட்டு இறங்கி ஓடிச்சென்று தமது வீட்டின் எஞ்சியுள்ள சிதைவுகள் மூலம் இருப்பிடங்களை இனங்கண்டுகொண்டதோடு நினைவுச்சின்னமாக புகைப்படம் எடுக்கவும் தவறவில்லை.
தொடர்ந்து சுமார் அரை மணிநேரம் 300 மீற்றர் நடைபயணத்தின் பின் இராணுவ உத்தியோகத்தரின் கண்டிப்பான உத்தரவின் பெயரில் அனைவரும் தமது சொந்த நிலங்களைப் பிரிய மனமின்றி ஏக்கத்துடன் வாகனங்களில் ஏறி, என்றோ ஒருநாள் எமது மண்ணில் வந்து நிம்மதி யாகப் படுத்து உறங்குவோம் என்ற மனக் குமுறலுடன் திரும்பினர்.
கடந்த 24 வருடங்களுக்குப் பின் தமது சொந்த மண்ணைப் பார்த்த நிம்மதி பலருக்கு. இறுதியாக மனவேதனையுடன் பயணித்து வீமன் காமம் வழியாக மாவிட்டபுரம் புகையிரத நிலையத்தை அடைந்தோம். பின்னர் வீமன் காமம் பாடசாலை அருகில் உள்ள சோதனைச் சாவடியின் வழியாக உயர் பாதுகாப்பு வலயப் பகுதிக்குள் இருந்து வெளியேறி னோம்.
(ந.லோகதயாளன்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக