உலகில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் விமான விபத்துக்களால் உலகளாவிய ரீதியில் மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலவுகின்றது. உயிரைக் கையில் பிடித்தவாறு மரணபயத்துடனேயே விமானப் பயணங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை இன்று ஏற்பட்டுள்ளது. மறுபுறம் இது நவீன தொழில்நுட்பத்துக்கு சவாலாகவும் மாறியுள்ளது. மேலும், விமானப் போக்குவரத்துத் துறையில் பல்வேறு நவீன தொழில்நுட்ப வசதிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், அவற்றால் விபத்துக்களை தடுக்க முடியவில்லை. அதுவும், அண்மைக்காலமாக இவ்வாறான சம்பவங்கள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன. அதில் ஓர் அங்கமாக ஏர் ஏசியா விமான விபத்தும் இடம்பெற்றுள்ளது.
கடந்த 28ஆம் திகதி மலேசியாவைச் சேர்ந்த ‘எயார் ஏசியா’ விமான நிறுவனத்தின் ‘ஏ320–200’ எயார் ஏசியா விமானம், இந்தோனேஷியாவில் உள்ள சுரபவா என்ற இடத்தில் இருந்து சிங்கப்பூரை நோக்கிச் சென்றுள்ளது. இந்த விமானத்தில் 162 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விமானம் புறப்பட்டு சுமார் 42 நிமிடங்களில், சிங்கப்பூர்–ஜகார்த்தா விமான தகவல் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து திடீரென மாயமானது. இதனையடுத்து சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படையினர் ஒன்றிணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதேவேளை காணாமற்போன எயார் ஏசியா 8501 விமானத்தை ஜாவா கடலின் அடித்தளத்தில் தேடுவதற்காக அனுப்பப்பட்ட தன்னியக்க நீர் மூழ்கி உபகரணமொன்று அந்த விமானத்தின் சிதைவை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விமானமானது கடற்மேற்பரப்பிலிருந்து 24 மீற்றரிலிருந்து 30 மீற்றர் வரையான ஆழத்தில் தலைகீழான நிலையில் காணப்பட்டதாக இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்பு முகவர் நிலையத்தில் உறுதிசெய்தனர். ஆரம்பத்தில் கடலிலிருந்து 40 சடலங்கள் வரை மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் 7 சடலங்கள் மீட்கப்பட்டதை அந்த அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
அதேசமயம் கடலின் கீழ் பகுதியில் விமானத்தின் உடல் பகுதியினது என நம்பப்படும் நிழற்தோற்றமொன்றும் மீட்பு உத்தியோகத்தர்களால் அடையாளம் காண ப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த விமானத்தில் பயணித்த ஏனையவர்களின் சடலங்கள் கடலின் கீழ் மூழ்கியுள்ள விமானத்துக்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. எயார் ஏசியா விமானத்தில் பயணித்த மூவரது சடலங்கள் ஒருவர் கையை ஒருவர் பற்றிய நிலையில் ஜாவா கடலில் மிதந்ததாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானமொன்றின் விமானி தெரிவித்தார்.
மேற்படி விமானம் காணாமல் போய் 3 நாட்கள் கடந்த நிலையில் பொர்னியோ தீவுக் கடற்கரைக்கு அப்பால் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அங்கிருந்து மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை குறித்து வெவ்வேறு அதிகாரிகள் வெவ்வேறு தகவல்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த விமானத்தை தேடும் நடவடிக்கையில் விமானங்கள் பலவும் ஈடுபட்டிருந்த நிலையில் அந்த சிதைவுகளை 38 வயதான இந்தோனேசியா மீனவரான மொஹமட் தஹா என்பவரே முதன் முதலாக கண்டு அது தொடர்பில் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடலில் உலோகப் பொருட்கள் மிதப்பதை தஹா கண்டபோதும் அவை விமானமொன்றுக்குறியவை என்பதை அவர் தனது கிராமமான பெலின்யுவிற்கு திரும்பும் வரை அறிந்திருக்கவில்லை. இது தொடர்பில் தஹா கூறுகையில், "கடலில் சிறிதும் பெரிதுமாக பாகங்கள் மிதந்தன. அவற்றுள் பெரியது சுமார் 4 மீற்றர் நீளமும் இரு மீற்றர் அகலமுமுடையதாக இருந்தது. அவை எயார் ஏசியா விமானத்தின் வர்ணத்தை ஒத்தவையாக இருந்தன" என்று கூறினார்.
விமானத்தின் கறுப்புப்பெட்டி இதுவரை மீட்கப்படாத போதும் சீரற்ற காலநிலையே இந்த விமான அனர்த்தத்திற்கு காரணம் என தான் நம்புவதாக எயார் ஏசியா நிறுவ குழுமத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி டோனி பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
அந்த விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிற நிலையில் கடல் பரப்பில் உயிர்காப்பு மிதவையொன்று மிதந்து வந்தமை விமானத்தில் பயணித்தவர்கள் எவராவது உயிர் தப்பியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் மீட்கப்பட்ட சடலங்களிலொன்று உயிர்க் காப்பு மேலங்கியை அணிந்த நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விமானத்தின் சிதைவுகளை தேடும் பணிகளில் இந்தோனேசியா, மலேஷியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 கப்பல்கள், 15 விமானங்கள், 7 ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டன.
அதேவேளை உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடா, மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் ஆகியோர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் திடீர் திருப்பம் என்னவென்றால், எயார் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகுமென்று முன்கூட்டியே தனது வலைப்பதிவில் எழுதிய நபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் ஏர் ஏசியா விமானத்தை ஒரு "கறுப்புக் கரம்" குறி வைத்துள்ளதாக டிசம்பர் 15ஆம் திகதி தனது வலைப்பதிவில் எழுதியுள்ளார். இவர் வெளியிட்ட ஒரு போஸ்டில், எயார் ஏசியாவை ஒரு நிழல் அமைப்பு குறி வைத்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும், இதற்கு முன்பு பாதிப்புக்குள்ளான எம்.எச் 17 மற்றும் எம்.எச் 370 ஆகிய விமானங்களையும் கூட, இதே குழுதான் குறி வைத்துத் தாக்கியதாகவும் இவர் கூறியுள்ளார். எனவே எயார் ஏசியாவில் செல்ல நினைக்கும் சீனர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எம்.எச். 17 காணாமல் போனது போல நீங்களும் காணாமல் போய் விடுவீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர் கறுப்புக் கரம் என கூறுவது தீவிரவாத அமைப்பையா? அல்லது ஏதாவது நாட்டையா? என்பது தெளிவாகவில்லை.
இது ஒருபுறம் இருக்க, எயார் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானத்திற்கு விமானியின் கவனயீனம் தான் காரணம் என அவுஸ்திரேலிய விமானப் படை போக்குவரத்து வல்லுனர் ஒருவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவுஸ்திரேலிய விமானப் போக்குவரத்து வல்லுனர் நீல் ஹேன்ஸ் போர்டு கூறுகையில்,
ஆபத்தான பகுதி என்று அறியப்பட்ட ஜாவா கடற்பகுதியின் மேல் பறந்ததன் காரணமாகவே குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாக அறியப்படுகின்றது.
அந்தப் பாதையின் வழியே பயணித்திருக்கக் கூடாது இந்த ஆபத்தான திட்டத்திற்கு விமானத்தில் பணிபுரிந்த இந்தோனேஷியக் விமானியோ அல்லது பிரெஞ்சு முதல் நிலை அதிகாரியோ காரணமாய் இருக்கலாம் என கூறியுள்ளார். மேலும் சுரபயா விமான நிலையத்தில் கொடுக்கப்பட்ட வானிலை ஆய்வியல் அறிக்கையை விமானிகள் படித்தனரா? எப்படி அவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, ஒருவருடைய தாய்மொழி பஹாசா, இன்னொருவருடையதோ பிரெஞ்சு. இந்நிலையில் பொது மொழியான ஆங்கிலம் எந்த அளவுக்கு இருவருக்கும் நல்ல தொடர்பை ஏற்படுத்தியிருக்கும்? எனவே இது விமானத்தை வழி நடத்தியவர்களின் தவறே இதற்கு காரணம் என அவர் வாதிடுகிறார்..
அதுமாத்திரமன்றி கடந்த மார்ச் 8ஆம் திகதி மலேசியாவிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற MH 370 என்ற விமானம் காணாமல் போன நிலையில் இன்றுவரையிலும் எவ்வித தகவலும் இல்லாமல் இருப்பதுவும் அனைவரையும் பெரும் வியப்பிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அடுத்தடுத்து மலேஷியா எயார் லயன்ஸுக்கு குறிவைப்பது ஏன்? யாரால் இச்செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன? தீவரவாதிகளா? அல்லது வேறு ஏதேனும் குழுக்களா? அல்லது தானாகவே இவை நிகழ்கின்றதா? என பல கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளன. கடந்த 28ஆம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து புறப்பட்ட QZ8501 ஏர் ஏசிய விமான விபத்தே உலகளவில் இன்னும் ஓயாத அலைகளாய் இருக்கும் நிலையில்,கடந்த புதன்கிழமை பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவிலிருந்து 159 பயணிகளுடன் பானே தீவில் உள்ள கலிபோவுக்கு சென்ற விமானமும் விபத்துக்குள்ளாகியது.
கலிபோ விமான நிலையத்தில் குறிப்பிட்ட ஓடுதளத்தில்(runway) விமானத்தை தரையிறக்கும்போது, திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக ஓடியுள்ளது. இதனால் ஓடுதளத்தை தாண்டி புல்வெளியில் விமானம் பாய்ந்துள்ளது. ஆனால் விமானத்தின் முன்பகுதி மண்ணில் குத்தி நின்றுவிட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது தான் உண்மை.
வரலாற்றில் அதிகமான விமான விபத்துக்களும் விமானக் கடத்தல்களும் உலகப்போர் நடைபெற்ற காலங்களில் இருந்தே இடம்பெற்று வந்துள்ளன. வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் விமான விபத்து 1925ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் USS Shenandoah என்ற விமானதிற்கு ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. பல முறைகளில் விமான விபத்துக்கள் ஏற்பட்டாலும் பிரதான காரணமாகக் கூறப்படுவது விமான ஓட்டியின் கவனக்குறைவு, வானிலை மாற்றங்கள், விமானம் தரையிறங்கும் போதோ அல்லது தரையிலிருந்து புறப்படும் போதோ பறவை மோதுதல் என்பவையாகும். இவை மூன்றையுமே பாதுகாப்பு கொள்கைகள் மூலம் தவிர்ப்பது கடினம்.
அதாவது 35 ஆயிரம் அடிகளுக்கு மேலேதான் பயணிகள் விமானம் இயக்கப்படுகின்றது. இங்கு ஆபத்துக்கள் அதிகம். திடீர் காற்றழுத்தம், வெற்றிடம் என்பவற்றால் விமானம் குலுங்கும், காற்றில்லாத வெற்றிடங்களில் விமானத்தின் இயந்திரம் உயிர் பெறுவதும் கடினமானது. காரணம் அப்படியே முற்றாக அணைந்து போய் விபத்து ஏற்படும்.
அண்மைக்காலமாக இடம்பெற்ற விமான விபத்துக்களை உற்றுநோக்கும் போது கடந்த2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் உலகின் பல நாடுகளிலும் மிக மோசமான 15 விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அந்தவகையில், ஜுன் மாதம் முதலாம் திகதி பாரிஸிலிருந்து ரி யோடி ஜெனிரோவிற்கு பறந்து கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்ததில் 228 பயணிகள் உயிரிழந்தனர். 2009ஆம் ஆண்டு 30ஆம் திகதி கெமரோஸ் நாட்டின் கடல் பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்ததில் 150 பேர் உயிரிழந்தனர். மேலும் 2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் 15ஆம் திகதி குவாஸ்வின் நகரில் ஏற்பட்ட விமான விபத்தில் 168 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி லெபனானின் பெய்ரூட் அருகே எத்தியோப்பியா விமானம் விபத்துக்குள்ளானதில் 90 பேர் உயிரிழந்தனர். 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ் நகரில் இடம் பெற்ற விமான விபத்தில் போலந்து அதிபர் லெக் காக்ஜின்ஸ்க் உட்பட 97 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு மே 12ஆம் திகதி லிபியாவின் திரிபோலி நகரில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 103 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்தியாவின் மங்களூர் விமான நிலையத்தில் எயார் இந்தியா விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர். மேலும் ஜுலை 28ஆம் திகதி பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் புறநகர் பகுதியில் மோதி 152 பேர் உயிரிழந்தனர்.
இத்தோடு நின்றுவிடவில்லை இந்த உயிர்ச் சேதம், 2011ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி ஈரானின் யூரேமியா நகரில் இடம்பெற்ற விமான விபத்தில் 77பேர் உயிரிழந்துள்ளனர். செப்டெம்பர் 7ஆம் திகதி ரஷ்யாவின் யாரோஸ்லாவ் நகரில் விமானம் விழுந்து நொறுங்கியதில் ஹாக்கி வீரர்கள் 43 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏப்ரல் 20ஆம் திகதி இஸ்லாமாபாத் அருகே இடம்பெற்ற விமான விபத்தில் 127 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மே 9ஆம் திகதி ஜகார்த்தா அருகே ரஷ்யாவின் சுகோய் சூப்பர் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து ஜுன், ஜுலை மாதங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 160 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் அதன்பிறகு நீண்ட இடைவெளியின் பின் கடந்த 2014ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாரிய விமான விபத்துக்கள் உலகையே ஆச்சரியத்தில் மூழ்கச் செய்துள்ளது.
இந்த விமான விபத்துக்கள் அனைத்தும் தரையில் நடந்த விபத்துக்கள். இதற்கான காரணங்கள் கூட தெளிவாக கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், பல விமானங்களோ இன்று வரையிலும் காணாமற்போன பட்டியல்களில் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. அதில் குறிப்பிட்டுக் கூறினால் இறுதியாக காணாமல் போன விமானங்களின் வரிசையில் இடம் பிடித்த MH 370 விமானத்தை குறிப்பிடலாம். மேலும் 1937, 1945, 1962போன்ற காலப் பகுதிகளில் காணாமல் போன விமானங்களின் விபரங்கள் இன்றுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தொகுப்பு :எஸ்.டொரின்
கடந்த 28ஆம் திகதி மலேசியாவைச் சேர்ந்த ‘எயார் ஏசியா’ விமான நிறுவனத்தின் ‘ஏ320–200’ எயார் ஏசியா விமானம், இந்தோனேஷியாவில் உள்ள சுரபவா என்ற இடத்தில் இருந்து சிங்கப்பூரை நோக்கிச் சென்றுள்ளது. இந்த விமானத்தில் 162 பேர் பயணம் செய்துள்ளனர்.
இந்நிலையில் குறித்த விமானம் புறப்பட்டு சுமார் 42 நிமிடங்களில், சிங்கப்பூர்–ஜகார்த்தா விமான தகவல் பிராந்தியத்தின் கட்டுப்பாட்டு மையத்துடனான தொடர்பை இழந்து திடீரென மாயமானது. இதனையடுத்து சிங்கப்பூர், மலேசியா, அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படையினர் ஒன்றிணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
இதேவேளை காணாமற்போன எயார் ஏசியா 8501 விமானத்தை ஜாவா கடலின் அடித்தளத்தில் தேடுவதற்காக அனுப்பப்பட்ட தன்னியக்க நீர் மூழ்கி உபகரணமொன்று அந்த விமானத்தின் சிதைவை கண்டுபிடித்துள்ளதாக இந்தோனேஷிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
அந்த விமானமானது கடற்மேற்பரப்பிலிருந்து 24 மீற்றரிலிருந்து 30 மீற்றர் வரையான ஆழத்தில் தலைகீழான நிலையில் காணப்பட்டதாக இந்தோனேஷிய தேடுதல் மற்றும் மீட்பு முகவர் நிலையத்தில் உறுதிசெய்தனர். ஆரம்பத்தில் கடலிலிருந்து 40 சடலங்கள் வரை மீட்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் 7 சடலங்கள் மீட்கப்பட்டதை அந்த அதிகாரிகள் உறுதிபடுத்தியுள்ளனர்.
அதேசமயம் கடலின் கீழ் பகுதியில் விமானத்தின் உடல் பகுதியினது என நம்பப்படும் நிழற்தோற்றமொன்றும் மீட்பு உத்தியோகத்தர்களால் அடையாளம் காண ப்பட்டுள்ளது.
இந்நிலையில் அந்த விமானத்தில் பயணித்த ஏனையவர்களின் சடலங்கள் கடலின் கீழ் மூழ்கியுள்ள விமானத்துக்குள் சிக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. எயார் ஏசியா விமானத்தில் பயணித்த மூவரது சடலங்கள் ஒருவர் கையை ஒருவர் பற்றிய நிலையில் ஜாவா கடலில் மிதந்ததாக தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த விமானமொன்றின் விமானி தெரிவித்தார்.
மேற்படி விமானம் காணாமல் போய் 3 நாட்கள் கடந்த நிலையில் பொர்னியோ தீவுக் கடற்கரைக்கு அப்பால் விமானத்தின் சிதைவுகள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அங்கிருந்து மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை குறித்து வெவ்வேறு அதிகாரிகள் வெவ்வேறு தகவல்களை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
அந்த விமானத்தை தேடும் நடவடிக்கையில் விமானங்கள் பலவும் ஈடுபட்டிருந்த நிலையில் அந்த சிதைவுகளை 38 வயதான இந்தோனேசியா மீனவரான மொஹமட் தஹா என்பவரே முதன் முதலாக கண்டு அது தொடர்பில் அறிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
கடலில் உலோகப் பொருட்கள் மிதப்பதை தஹா கண்டபோதும் அவை விமானமொன்றுக்குறியவை என்பதை அவர் தனது கிராமமான பெலின்யுவிற்கு திரும்பும் வரை அறிந்திருக்கவில்லை. இது தொடர்பில் தஹா கூறுகையில், "கடலில் சிறிதும் பெரிதுமாக பாகங்கள் மிதந்தன. அவற்றுள் பெரியது சுமார் 4 மீற்றர் நீளமும் இரு மீற்றர் அகலமுமுடையதாக இருந்தது. அவை எயார் ஏசியா விமானத்தின் வர்ணத்தை ஒத்தவையாக இருந்தன" என்று கூறினார்.
விமானத்தின் கறுப்புப்பெட்டி இதுவரை மீட்கப்படாத போதும் சீரற்ற காலநிலையே இந்த விமான அனர்த்தத்திற்கு காரணம் என தான் நம்புவதாக எயார் ஏசியா நிறுவ குழுமத்தின் தலைமை நிறைவேற்றதிகாரி டோனி பெர்னாண்டஸ் தெரிவித்தார்.
அந்த விமானத்தில் பயணித்த அனைவருமே உயிரிழந்திருக்கலாம் என நம்பப்படுகிற நிலையில் கடல் பரப்பில் உயிர்காப்பு மிதவையொன்று மிதந்து வந்தமை விமானத்தில் பயணித்தவர்கள் எவராவது உயிர் தப்பியிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பை தோற்றுவித்துள்ளதாக கூறப்படுகின்றது.
அதேசமயம் மீட்கப்பட்ட சடலங்களிலொன்று உயிர்க் காப்பு மேலங்கியை அணிந்த நிலையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி விமானத்தின் சிதைவுகளை தேடும் பணிகளில் இந்தோனேசியா, மலேஷியா, அவுஸ்திரேலியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த சுமார் 30 கப்பல்கள், 15 விமானங்கள், 7 ஹெலிகொப்டர்கள் ஈடுபட்டன.
அதேவேளை உயிரிழந்த பயணிகளின் குடும்பங்களுக்கு இந்தோனேஷிய ஜனாதிபதி ஜோகோ விடோடா, மலேசிய பிரதமர் நஜீப் ரஸாக் ஆகியோர் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளனர்.
இவ்விபத்தில் திடீர் திருப்பம் என்னவென்றால், எயார் ஏசியா விமானம் விபத்துக்குள்ளாகுமென்று முன்கூட்டியே தனது வலைப்பதிவில் எழுதிய நபர் ஒருவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த நபர் ஒருவர் ஏர் ஏசியா விமானத்தை ஒரு "கறுப்புக் கரம்" குறி வைத்துள்ளதாக டிசம்பர் 15ஆம் திகதி தனது வலைப்பதிவில் எழுதியுள்ளார். இவர் வெளியிட்ட ஒரு போஸ்டில், எயார் ஏசியாவை ஒரு நிழல் அமைப்பு குறி வைத்துள்ளது என கூறியுள்ளார்.
மேலும், இதற்கு முன்பு பாதிப்புக்குள்ளான எம்.எச் 17 மற்றும் எம்.எச் 370 ஆகிய விமானங்களையும் கூட, இதே குழுதான் குறி வைத்துத் தாக்கியதாகவும் இவர் கூறியுள்ளார். எனவே எயார் ஏசியாவில் செல்ல நினைக்கும் சீனர்கள் அதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எம்.எச். 17 காணாமல் போனது போல நீங்களும் காணாமல் போய் விடுவீர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால் இவர் கறுப்புக் கரம் என கூறுவது தீவிரவாத அமைப்பையா? அல்லது ஏதாவது நாட்டையா? என்பது தெளிவாகவில்லை.
இது ஒருபுறம் இருக்க, எயார் ஏசியா விமானம் விபத்துக்குள்ளானத்திற்கு விமானியின் கவனயீனம் தான் காரணம் என அவுஸ்திரேலிய விமானப் படை போக்குவரத்து வல்லுனர் ஒருவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவுஸ்திரேலிய விமானப் போக்குவரத்து வல்லுனர் நீல் ஹேன்ஸ் போர்டு கூறுகையில்,
ஆபத்தான பகுதி என்று அறியப்பட்ட ஜாவா கடற்பகுதியின் மேல் பறந்ததன் காரணமாகவே குறித்த விமானம் விபத்துக்குள்ளானதாக அறியப்படுகின்றது.
அந்தப் பாதையின் வழியே பயணித்திருக்கக் கூடாது இந்த ஆபத்தான திட்டத்திற்கு விமானத்தில் பணிபுரிந்த இந்தோனேஷியக் விமானியோ அல்லது பிரெஞ்சு முதல் நிலை அதிகாரியோ காரணமாய் இருக்கலாம் என கூறியுள்ளார். மேலும் சுரபயா விமான நிலையத்தில் கொடுக்கப்பட்ட வானிலை ஆய்வியல் அறிக்கையை விமானிகள் படித்தனரா? எப்படி அவர்கள் தங்களுக்குள் தொடர்பு கொண்டார்கள்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அதாவது, ஒருவருடைய தாய்மொழி பஹாசா, இன்னொருவருடையதோ பிரெஞ்சு. இந்நிலையில் பொது மொழியான ஆங்கிலம் எந்த அளவுக்கு இருவருக்கும் நல்ல தொடர்பை ஏற்படுத்தியிருக்கும்? எனவே இது விமானத்தை வழி நடத்தியவர்களின் தவறே இதற்கு காரணம் என அவர் வாதிடுகிறார்..
அதுமாத்திரமன்றி கடந்த மார்ச் 8ஆம் திகதி மலேசியாவிலிருந்து கோலாலம்பூர் நோக்கிச் சென்ற MH 370 என்ற விமானம் காணாமல் போன நிலையில் இன்றுவரையிலும் எவ்வித தகவலும் இல்லாமல் இருப்பதுவும் அனைவரையும் பெரும் வியப்பிலும் சோகத்திலும் ஆழ்த்தியுள்ளது.
அடுத்தடுத்து மலேஷியா எயார் லயன்ஸுக்கு குறிவைப்பது ஏன்? யாரால் இச்செயல்கள் முன்னெடுக்கப்படுகின்றன? தீவரவாதிகளா? அல்லது வேறு ஏதேனும் குழுக்களா? அல்லது தானாகவே இவை நிகழ்கின்றதா? என பல கேள்விகள் எழுந்த வண்ணமே உள்ளன. கடந்த 28ஆம் திகதி இந்தோனேஷியாவிலிருந்து புறப்பட்ட QZ8501 ஏர் ஏசிய விமான விபத்தே உலகளவில் இன்னும் ஓயாத அலைகளாய் இருக்கும் நிலையில்,கடந்த புதன்கிழமை பிலிப்பைன்ஸ் நாட்டின் தலைநகர் மணிலாவிலிருந்து 159 பயணிகளுடன் பானே தீவில் உள்ள கலிபோவுக்கு சென்ற விமானமும் விபத்துக்குள்ளாகியது.
கலிபோ விமான நிலையத்தில் குறிப்பிட்ட ஓடுதளத்தில்(runway) விமானத்தை தரையிறக்கும்போது, திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக ஓடியுள்ளது. இதனால் ஓடுதளத்தை தாண்டி புல்வெளியில் விமானம் பாய்ந்துள்ளது. ஆனால் விமானத்தின் முன்பகுதி மண்ணில் குத்தி நின்றுவிட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும் இச்சம்பவத்தால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பது தான் உண்மை.
வரலாற்றில் அதிகமான விமான விபத்துக்களும் விமானக் கடத்தல்களும் உலகப்போர் நடைபெற்ற காலங்களில் இருந்தே இடம்பெற்று வந்துள்ளன. வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் விமான விபத்து 1925ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் USS Shenandoah என்ற விமானதிற்கு ஏற்பட்டது. இதில் 14 பேர் உயிரிழந்துள்ளதாக வரலாற்று சான்றுகள் கூறுகின்றன. பல முறைகளில் விமான விபத்துக்கள் ஏற்பட்டாலும் பிரதான காரணமாகக் கூறப்படுவது விமான ஓட்டியின் கவனக்குறைவு, வானிலை மாற்றங்கள், விமானம் தரையிறங்கும் போதோ அல்லது தரையிலிருந்து புறப்படும் போதோ பறவை மோதுதல் என்பவையாகும். இவை மூன்றையுமே பாதுகாப்பு கொள்கைகள் மூலம் தவிர்ப்பது கடினம்.
அதாவது 35 ஆயிரம் அடிகளுக்கு மேலேதான் பயணிகள் விமானம் இயக்கப்படுகின்றது. இங்கு ஆபத்துக்கள் அதிகம். திடீர் காற்றழுத்தம், வெற்றிடம் என்பவற்றால் விமானம் குலுங்கும், காற்றில்லாத வெற்றிடங்களில் விமானத்தின் இயந்திரம் உயிர் பெறுவதும் கடினமானது. காரணம் அப்படியே முற்றாக அணைந்து போய் விபத்து ஏற்படும்.
அண்மைக்காலமாக இடம்பெற்ற விமான விபத்துக்களை உற்றுநோக்கும் போது கடந்த2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் முதலாம் திகதி முதல் உலகின் பல நாடுகளிலும் மிக மோசமான 15 விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.
அந்தவகையில், ஜுன் மாதம் முதலாம் திகதி பாரிஸிலிருந்து ரி யோடி ஜெனிரோவிற்கு பறந்து கொண்டிருந்த ஏர் பிரான்ஸ் விமானம் அட்லாண்டிக் கடலில் விழுந்ததில் 228 பயணிகள் உயிரிழந்தனர். 2009ஆம் ஆண்டு 30ஆம் திகதி கெமரோஸ் நாட்டின் கடல் பகுதியில் பயணிகள் விமானம் ஒன்று விழுந்ததில் 150 பேர் உயிரிழந்தனர். மேலும் 2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் 15ஆம் திகதி குவாஸ்வின் நகரில் ஏற்பட்ட விமான விபத்தில் 168 பேர் உயிரிழந்தனர்.
இதனைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி லெபனானின் பெய்ரூட் அருகே எத்தியோப்பியா விமானம் விபத்துக்குள்ளானதில் 90 பேர் உயிரிழந்தனர். 2010ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ரஷ்யாவின் ஸ்மோலென்ஸ் நகரில் இடம் பெற்ற விமான விபத்தில் போலந்து அதிபர் லெக் காக்ஜின்ஸ்க் உட்பட 97 பேர் உயிரிழந்தனர். அதே ஆண்டு மே 12ஆம் திகதி லிபியாவின் திரிபோலி நகரில் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் 103 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்தியாவின் மங்களூர் விமான நிலையத்தில் எயார் இந்தியா விபத்துக்குள்ளானதில் 158 பேர் உயிரிழந்தனர். மேலும் ஜுலை 28ஆம் திகதி பாகிஸ்தான் தலைநகரான இஸ்லாமாபாத் புறநகர் பகுதியில் மோதி 152 பேர் உயிரிழந்தனர்.
இத்தோடு நின்றுவிடவில்லை இந்த உயிர்ச் சேதம், 2011ஆம் ஆண்டு ஜனவரி 10ஆம் திகதி ஈரானின் யூரேமியா நகரில் இடம்பெற்ற விமான விபத்தில் 77பேர் உயிரிழந்துள்ளனர். செப்டெம்பர் 7ஆம் திகதி ரஷ்யாவின் யாரோஸ்லாவ் நகரில் விமானம் விழுந்து நொறுங்கியதில் ஹாக்கி வீரர்கள் 43 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏப்ரல் 20ஆம் திகதி இஸ்லாமாபாத் அருகே இடம்பெற்ற விமான விபத்தில் 127 பேர் உயிரிழந்தனர். தொடர்ந்து மே 9ஆம் திகதி ஜகார்த்தா அருகே ரஷ்யாவின் சுகோய் சூப்பர் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானதில் 45 பேர் உயிரிழந்தனர். அடுத்தடுத்து ஜுன், ஜுலை மாதங்களில் ஏற்பட்ட விபத்துக்களில் 160 பேர் உயிரிழந்திருந்தனர். ஆனால் அதன்பிறகு நீண்ட இடைவெளியின் பின் கடந்த 2014ஆம் ஆண்டில் ஏற்பட்ட பாரிய விமான விபத்துக்கள் உலகையே ஆச்சரியத்தில் மூழ்கச் செய்துள்ளது.
இந்த விமான விபத்துக்கள் அனைத்தும் தரையில் நடந்த விபத்துக்கள். இதற்கான காரணங்கள் கூட தெளிவாக கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், பல விமானங்களோ இன்று வரையிலும் காணாமற்போன பட்டியல்களில் அடுத்தடுத்த இடத்தை பிடித்துள்ளன. அதில் குறிப்பிட்டுக் கூறினால் இறுதியாக காணாமல் போன விமானங்களின் வரிசையில் இடம் பிடித்த MH 370 விமானத்தை குறிப்பிடலாம். மேலும் 1937, 1945, 1962போன்ற காலப் பகுதிகளில் காணாமல் போன விமானங்களின் விபரங்கள் இன்றுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தொகுப்பு :எஸ்.டொரின்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக