சார்ளி ஹெப்டோ என்ற பத்திரிகையின் பாரிஸ் அலுவலகம். அந்த அலுவலகத்தில் ஆசிரியர் பீடக் கூட்டம் நடந்து கொண்டிருக்கிறது. இரு ஆயுதபாணிகள் அலுவலக வளாகத்திற்குள் நுழைகிறார்கள். தாம் ஏந்தியிருந்த துப்பாக்கிகள் மூலம் அங்குள்ளவர்களை சரமாரியாக சுடுகிறார்கள். சுவர்களிலும் மேசைகளிலும் இரத்தம் தெறிக்கிறது. பத்து பேர் மரணத்தைத் தழுவுகிறார்கள். அவர்களில் எட்டுப் பேர் பத்திரிகையின் செய்தியாளர்கள்.
கட்டடத்தில் இருந்து வெளியே வரும் ஆயுதபாணிகள் கறுப்பு நிறக் காரை நோக்கித் திரும்புகிறார்கள். தாம் திரும்பும் வழியில் தம்மைத் தடுத்த பொலிஸாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் சுடுகிறார்கள். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் பொலிஸ் உத்தியோகத்தரை கைக்கெட்டிய தூரத்தில் சுட்டுத் தள்ளி, தமது வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்த ஆயுதபாணிகள் அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் என்பது தெரியவருகிறது. ஒருவர் செய்யத் கொவ்வாச்சி. மற்றவர் ஷெரிப் கொவ்வாச்சி.
இன்னொரு காரையும் கடத்தி பாரிஸ் நகரின் வடபகுதியை நோக்கி விரைகிறார்கள். பாரிஸ் நகரம் முழுவதிலும் அல்லோல கல்லோலம். ஆயுதபாணிகளைத் தேடி பொலிஸார் வலைவிரிக்கிறார்கள். பாரிஸ் நகரின் வடகிழக்கில் இருந்து தகவல் வருகிறது. அங்குள்ள எரிபொருள் நிலையத்திற்குள் பிரவேசித்த ஆயுதபாணிகள், உணவுப் பொருட்களையும் பெற்றோலையும் கொள்ளையிட்டுச் சென்றதை பொலிஸார் அறிகிறார்கள். கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சொல்லும் அடையாளங்களை விசாரித்தபோது, சார்ளி ஹெப்டோவைத் தாக்கிய ஆயுதபாணிகள் எரிபொருள் நிலையத்தையும் கொள்ளையிட்டமை தெரியவருகிறது. இங்கும் பொலிஸார் குவிக்கப்படுகிறார்கள்.
பாரிஸ் நகரில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம். பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தச் சம்பவம் பற்றி பொலிஸார் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் பாரிஸின் வடக்கிலுள்ள காட்டுப் பகுதியில் ஆயுதபாணி சகோதரர்களைத் தேடி வலைவிரிக்கிறார்கள். பாரிஸ் நகரில் இருள் சூழ்கிறது. பத்திரிகை அலுவலகத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.
பாரிஸ் நகரில் காரொன்று கடத்தப்படுகிறது. கடத்தப்பட்ட கார் நெடுஞ்சாலையில் விரைகிறது. பொலிஸார் பின்தொடர்ந்து செல்கிறார்கள். பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது. காரைக் கடத்தியவர்கள் ஆயுதபாணி முஸ்லிம் சகோதரர்கள் தானென்பது தெரியவருகிறது. பொலிஸார் விரட்டுகிறார்கள். ஆயுதபாணி சகோதரர்களின் கார் பாரிஸின் வடகிழக்கில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு விரைகிறது. அவர்கள் காரில் இருந்து இறங்கி, ஒரு அச்சகத்திற்குள் நுழைகிறார்கள். அதில் உள்ளவர்களைப் பணயக் கைதியாக பிடித்து வைக்கிறார்கள்.
பாரிஸ் நகரின் கிழக்குப் பிரதேசம். அங்குள்ள யூத பல்பொருள் அங்காடிக்குள் மற்றொரு ஆயுதபாணி நுழைகிறார். அதில் ஐந்து பேரை பணயக் கைதிகளாக பிடிக்கிறார். அங்கு இருந்தவர்களுக்கும் ஆயுதபாணிகளுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றுகிறது. அதன் முடிவில் துப்பாக்கி வெடிக்கிறது. இரண்டு பேர் பலியாகின்றனர். பொலிஸார் ஆயுதபாணி பற்றிய தகவல்களை வெளியிடுகிறார்கள். முன்னைய தினம் பாரிஸ் நகரில் பெண் பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டவர் இவர் தானென்பது தெரிய வருகிறது.
பல்பொருள் அங்காடி ஆயுதபாணியுடன் பொலிஸார் பேசுகிறார்கள். அச்சகத்தில் சிக்கியுள்ள முஸ்லிம் சகோதரர்களைத் தாக்க வேண்டாமென அவர் கூறுகிறார். சகோதரர்கள் தாக்கப்படும் பட்சத்தில், அங்காடியில் தடுத்து வைக்கப்பட்ட பணயக் கைதிகளில் ஐந்து பேர் கொல்லப்படுவார்கள் என்று ஆயுதபாணி எச்சரிக்கிறார். மறுபுறத்தில், அச்சகத்தை சுற்றி வளைத்த அதிரடிப் படைவீரர்கள் ஆயுதபாணியுடன் பேரம் பேசுகிறார்கள். அவர்களோ, தாம் ஜிஹாத் போராளிகளாக வீர மரணத்தைத் தழுவ விரும்புவதாகக் கூறுகிறார்கள்.
மணித்துளிகள் கழிகின்றன. அச்சகத்தில் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்கின்றன. குண்டுகள் வெடிக்கின்றன. சகோதரர்களைக் கொன்று விட்டு, பணயக் கைதியை மீட்டு விட்டதாக அதிரடிப்படை வீரர்கள் அறிவிக்கிறார்கள். பாரிஸ் நகர யூத பல்பொருள் அங்காடியிலும் குண்டு வெடிப்புச் சத்தங்கள். ஆயுதபாணி கொல்லப்படுகிறார். ஆயுதபாணியுடன் பணயக் கைதிகள் நால்வரும் பலியானதாக தகவல் வெளியாகிறது. தமக்கு அல்கைதாவிடம் இருந்து நிதி கிடைத்ததாக ஆயுதபாணியொருவர் கூறிய தகவலையும் பொலிஸார் வெளியிடுகிறார்கள். பிரெஞ்சுத் தொலைக்காட்சிகளில் காட்சிகள் மாறுகின்றன. ஜனாதிபதி பிரன்சுவா ஹொல்லந்தே பேசுகிறார். பிரான்ஸ் மீதான அச்சுறுத்தல்கள் ஓயவில்லை என்கிறார்.
கடந்த புதன்கிழமை ஆரம்பித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை பிரான்ஸில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பைப் பார்த்தோம். 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி ஒரு சில கணங்களில் அமெரிக்காவிற்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையிலான உறவுகளை திருப்பிப் போட்ட தாக்குதல்.
அந்தளவிற்குத் தீவிரமானதாக இல்லாவிட்டாலும், ஐரோப்பிய சமூகத்திற்கும் அங்கு வாழும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான சமூக உறவுகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக பாரிஸ் சம்பவங்கள் அமைந்திருந்தன.
அன்று உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்களும் பென்டகனும் இலக்கு வைக்கப்பட்டன. இவை அமெரிக்க பொருளாதாரத்தினதும், பாதுகாப்பினதும் மைய நாடிகளாகக் கருதப்படும் கட்டடங்கள். இன்று ஒரு ஊடக நிறுவனம் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. பிரெஞ்சு மக்களைப் பொறுத்தவரையில், கருத்துச் சுதந்திரம் என்பது மிகவும் உணர்வுபூர்வமான விடயமாக இருப்பதால், சமூகத்தி;ல் முடிந்தளவு உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆயுதபாணிகள் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். ஆயுதபாணி யூத பல்பொருள் அங்காடியை இலக்கு வைத்ததையும் எதேச்சையான விஷமாகக் கருதமுடியாது. இது யூத எதிர்ப்பின் ஊடாக இஸ்லாமிய கடும்போக்குவாதத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டக்கூடிய செயலெனக் கருதலாம்.
அமெரிக்கா மீதான தாக்குதல் மிகவும் சிக்கலான விஷயம். விமானங்களைக் கடத்திச் சென்று அதீத பாதுகாப்புடன் கூடிய இலக்குகள் மீது மோத வைப்பது லேசுப்பட்டதல்ல. அத்தகைய தாக்குதலுக்கு அதிக தயார்ப்படுத்தலும், கூர்மையான திட்டமிடலும், நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்பும் அவசியம். பிரான்ஸின் தலைநகரில் அமைந்துள்ள பத்திரிகை அலுவலகத்தைத் தாக்குதல் என்பது அத்தனை சிரமமான விஷயமல்ல. எதுவித திட்டமிடல்களும், பின்புல உதவிகளும் இன்றி தாக்குதலைக் கட்டவிழ்த்து விட முடியும். தாக்குதலை நடத்த தனிநபர்கள் போதும்.
யெமனில் இயங்கும் அல்கைதா வலைப்பின்னலுடன் தொடர்புடைய ஆயுதபாணிக் குழுவொன்று சார்ளி ஹெப்டோ பத்திரிகை மீதான தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. நபி பெருமானாரை கார்ட்டூனாக வரைந்து கேலி செய்தமைக்கு பழி வாங்கும் நோக்கத்துடன் தாக்குதலை நடத்தியதாக அரேபிய வளைகுடாவிற்கான அல்கைதா என்ற அமைப்பு அறிக்கை விடுத்திருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கையை புறக்கணித்து விட முடியாது. ஏனெனில், பத்திரிகை அலுவலகத்தைத் தாக்க வந்த ஆயுதபாணிகளில் ஒருவர், இது யெமனில் இயங்கும் அல்கைதாவின் வேலையென ஊடகங்களிடம் கூறுங்கள் என கோஷமிட்டிருந்தார்.
அது மாத்திரமன்றி, அச்சகத்தில் சிக்கியிருந்த சமயம் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்ட கொவ்வாச்சி சகோதரர்களும் அல்கைதா பற்றி பேசியதாக அறிவிக்கப்படுகிறது.
இத்தகைய தாக்குதல்கள் மூலம் இஸ்லாமிய கடும்போக்கு அமைப்புக்கள் அடைய முனையும் இலக்குகள் தெளிவானவை. இவை மேலைத்தேய நாடுகளில் வாழும் இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் கடும்போக்குவாதத்தை ஏற்படுத்துவதுடன் தொடர்புடையவை. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் முஸ்லிம்கள் பெரும்பாலும் வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் நிராகரிக்கிறார்கள். எந்த சமூகத்தில் தஞ்சம் கோரினார்களோ, அந்த சமூகத்தின் ஓரம்சமாக வாழ்வதை முஸ்லிம்கள் விரும்புகிறார்கள். ஐரோப்பிய சமூகங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வலைகளைத் தூண்டி விட்டு, அந்த சமூகத்தவர்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக தூண்டி விடுவது கடும்போக்கு சக்திகளின் நோக்கம்.
இத்தகைய நோக்கத்தில் ஒரு சூட்சுமம் மறைந்திருக்கிறது. ஈராக்கிலும், சிரியாவிலும், எகிப்திலும், மியன்மாரிலும் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற உணர்வில் வாடும் ஐரோப்பிய முஸ்லிம்கள் மத்தியில், தாம் வாழும் சமூகத்திலும் தாம் வெறுக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தின் வித்துக்களை விதைத்து விடுவது எளிது. இதன் மூலம், இஸ்லாமிய சமூகத்தை இலகுவான முறையில் ஐரோப்பியர்களுக்கு எதிராகத் திருப்பி விடலாம்.
செப்ரெம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து நிகழ்ந்த அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் மற்றும் தீவிரமான புலம்பெயர்தலின் விளைவுகளால் இன்;று ஐரோப்பிய சமூகம் பெரிதும் முனைவாக்கப்பட்டு இருக்கிறது. தமது இருப்பைக் கேள்விக்குறிக்கு உள்ளாக்க வந்தவர்களாக ஐரோப்பிய மக்கள் முஸ்லிம்களைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், சார்ளி ஹெப்டோ பத்திரிகை போன்ற கலாசார அடையாளங்களைத் தாக்குவதன் மூலம் முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்துவது இஸ்லாமிய கடும்போக்கு அமைப்புக்களின் நோக்கமாக இருக்கிறது.
இன்று ஐரோப்பிய தலைவர்கள் 'முஸ்லிம்கள் வேறு, இஸ்லாமிய கடும்போக்குவாதம் வேறு' என்பதை வலியுறுத்த முனைந்தாலும், இன்று ஐரோப்பிய சமூகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புணர்வு அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸையே உதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும். ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடு பிரான்ஸ் தான். இங்கு தீவிர வலதுசாரிக் கொள்கையை அனுசரிக்கும் மாரி லா பென் என்ற பெண்மணி, இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகளின் அடித்தளத்தில் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவரது பிரசாரத் தொனிப்பொருள் சார்ளி ஹெப்டோ ப்டோ தாக்குதல் என்ற விடயத்தை மையப்படுத்தியதாகத் தான் அமையும்.
இத்தகைய அரசியல் மாற்றங்கள் ஐரோப்பிய சமூகத்திற்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கும் பாதகமானதாகவே அமையும். இந்த விடயத்தை ஜனாதிபதி பிரான்ஸூவா ஹொல்லந்தே மாத்திரமன்றி, பிரான்ஸில் வாழும் ஒவ்வொரு இஸ்லாமியனும் புரிந்து கொள்வது அவசியம். சமூகத்தை முனைவாக்கப்படுத்துவதில் தான் அல்கொய்தாவின் நலனும், மாரி லா பென்னின் அரசியல் நலனும் அடங்கியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் பட்சத்தில், அத்தகைய முனைவாக்க முயற்சிகள் சாத்தி யப்படாமல் போகலாம்.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை
கட்டடத்தில் இருந்து வெளியே வரும் ஆயுதபாணிகள் கறுப்பு நிறக் காரை நோக்கித் திரும்புகிறார்கள். தாம் திரும்பும் வழியில் தம்மைத் தடுத்த பொலிஸாரையும் அவர்கள் விட்டு வைக்கவில்லை. அவர்களையும் சுடுகிறார்கள். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து நிலத்தில் வீழ்ந்து கிடக்கும் பொலிஸ் உத்தியோகத்தரை கைக்கெட்டிய தூரத்தில் சுட்டுத் தள்ளி, தமது வன்மத்தை வெளிப்படுத்துகிறார்கள். இந்த ஆயுதபாணிகள் அல்ஜீரிய வம்சாவளியைச் சேர்ந்த முஸ்லிம் சகோதரர்கள் என்பது தெரியவருகிறது. ஒருவர் செய்யத் கொவ்வாச்சி. மற்றவர் ஷெரிப் கொவ்வாச்சி.
இன்னொரு காரையும் கடத்தி பாரிஸ் நகரின் வடபகுதியை நோக்கி விரைகிறார்கள். பாரிஸ் நகரம் முழுவதிலும் அல்லோல கல்லோலம். ஆயுதபாணிகளைத் தேடி பொலிஸார் வலைவிரிக்கிறார்கள். பாரிஸ் நகரின் வடகிழக்கில் இருந்து தகவல் வருகிறது. அங்குள்ள எரிபொருள் நிலையத்திற்குள் பிரவேசித்த ஆயுதபாணிகள், உணவுப் பொருட்களையும் பெற்றோலையும் கொள்ளையிட்டுச் சென்றதை பொலிஸார் அறிகிறார்கள். கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை சொல்லும் அடையாளங்களை விசாரித்தபோது, சார்ளி ஹெப்டோவைத் தாக்கிய ஆயுதபாணிகள் எரிபொருள் நிலையத்தையும் கொள்ளையிட்டமை தெரியவருகிறது. இங்கும் பொலிஸார் குவிக்கப்படுகிறார்கள்.
பாரிஸ் நகரில் மீண்டும் துப்பாக்கிச் சூட்டு சம்பவம். பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொல்லப்படுகிறார். இந்தச் சம்பவம் பற்றி பொலிஸார் அதிகம் அலட்டிக் கொள்ளவில்லை. அவர்கள் பாரிஸின் வடக்கிலுள்ள காட்டுப் பகுதியில் ஆயுதபாணி சகோதரர்களைத் தேடி வலைவிரிக்கிறார்கள். பாரிஸ் நகரில் இருள் சூழ்கிறது. பத்திரிகை அலுவலகத் தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஐஃபிள் கோபுரத்தின் விளக்குகள் அணைக்கப்படுகின்றன.
பாரிஸ் நகரில் காரொன்று கடத்தப்படுகிறது. கடத்தப்பட்ட கார் நெடுஞ்சாலையில் விரைகிறது. பொலிஸார் பின்தொடர்ந்து செல்கிறார்கள். பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படுகிறது. காரைக் கடத்தியவர்கள் ஆயுதபாணி முஸ்லிம் சகோதரர்கள் தானென்பது தெரியவருகிறது. பொலிஸார் விரட்டுகிறார்கள். ஆயுதபாணி சகோதரர்களின் கார் பாரிஸின் வடகிழக்கில் அமைந்துள்ள கைத்தொழில் பேட்டைக்கு விரைகிறது. அவர்கள் காரில் இருந்து இறங்கி, ஒரு அச்சகத்திற்குள் நுழைகிறார்கள். அதில் உள்ளவர்களைப் பணயக் கைதியாக பிடித்து வைக்கிறார்கள்.
பாரிஸ் நகரின் கிழக்குப் பிரதேசம். அங்குள்ள யூத பல்பொருள் அங்காடிக்குள் மற்றொரு ஆயுதபாணி நுழைகிறார். அதில் ஐந்து பேரை பணயக் கைதிகளாக பிடிக்கிறார். அங்கு இருந்தவர்களுக்கும் ஆயுதபாணிகளுக்கும் இடையில் வாக்குவாதம் முற்றுகிறது. அதன் முடிவில் துப்பாக்கி வெடிக்கிறது. இரண்டு பேர் பலியாகின்றனர். பொலிஸார் ஆயுதபாணி பற்றிய தகவல்களை வெளியிடுகிறார்கள். முன்னைய தினம் பாரிஸ் நகரில் பெண் பொலிஸ் உத்தியோகத்தரை சுட்டவர் இவர் தானென்பது தெரிய வருகிறது.
பல்பொருள் அங்காடி ஆயுதபாணியுடன் பொலிஸார் பேசுகிறார்கள். அச்சகத்தில் சிக்கியுள்ள முஸ்லிம் சகோதரர்களைத் தாக்க வேண்டாமென அவர் கூறுகிறார். சகோதரர்கள் தாக்கப்படும் பட்சத்தில், அங்காடியில் தடுத்து வைக்கப்பட்ட பணயக் கைதிகளில் ஐந்து பேர் கொல்லப்படுவார்கள் என்று ஆயுதபாணி எச்சரிக்கிறார். மறுபுறத்தில், அச்சகத்தை சுற்றி வளைத்த அதிரடிப் படைவீரர்கள் ஆயுதபாணியுடன் பேரம் பேசுகிறார்கள். அவர்களோ, தாம் ஜிஹாத் போராளிகளாக வீர மரணத்தைத் தழுவ விரும்புவதாகக் கூறுகிறார்கள்.
மணித்துளிகள் கழிகின்றன. அச்சகத்தில் துப்பாக்கிச் சூட்டு சத்தங்கள் கேட்கின்றன. குண்டுகள் வெடிக்கின்றன. சகோதரர்களைக் கொன்று விட்டு, பணயக் கைதியை மீட்டு விட்டதாக அதிரடிப்படை வீரர்கள் அறிவிக்கிறார்கள். பாரிஸ் நகர யூத பல்பொருள் அங்காடியிலும் குண்டு வெடிப்புச் சத்தங்கள். ஆயுதபாணி கொல்லப்படுகிறார். ஆயுதபாணியுடன் பணயக் கைதிகள் நால்வரும் பலியானதாக தகவல் வெளியாகிறது. தமக்கு அல்கைதாவிடம் இருந்து நிதி கிடைத்ததாக ஆயுதபாணியொருவர் கூறிய தகவலையும் பொலிஸார் வெளியிடுகிறார்கள். பிரெஞ்சுத் தொலைக்காட்சிகளில் காட்சிகள் மாறுகின்றன. ஜனாதிபதி பிரன்சுவா ஹொல்லந்தே பேசுகிறார். பிரான்ஸ் மீதான அச்சுறுத்தல்கள் ஓயவில்லை என்கிறார்.
கடந்த புதன்கிழமை ஆரம்பித்து வெள்ளிக்கிழமை பிற்பகல் வரை பிரான்ஸில் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பைப் பார்த்தோம். 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி ஒரு சில கணங்களில் அமெரிக்காவிற்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையிலான உறவுகளை திருப்பிப் போட்ட தாக்குதல்.
அந்தளவிற்குத் தீவிரமானதாக இல்லாவிட்டாலும், ஐரோப்பிய சமூகத்திற்கும் அங்கு வாழும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான சமூக உறவுகளில் கணிசமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியதாக பாரிஸ் சம்பவங்கள் அமைந்திருந்தன.
அன்று உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்களும் பென்டகனும் இலக்கு வைக்கப்பட்டன. இவை அமெரிக்க பொருளாதாரத்தினதும், பாதுகாப்பினதும் மைய நாடிகளாகக் கருதப்படும் கட்டடங்கள். இன்று ஒரு ஊடக நிறுவனம் இலக்கு வைக்கப்பட்டிருக்கிறது. பிரெஞ்சு மக்களைப் பொறுத்தவரையில், கருத்துச் சுதந்திரம் என்பது மிகவும் உணர்வுபூர்வமான விடயமாக இருப்பதால், சமூகத்தி;ல் முடிந்தளவு உணர்வுபூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஆயுதபாணிகள் தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். ஆயுதபாணி யூத பல்பொருள் அங்காடியை இலக்கு வைத்ததையும் எதேச்சையான விஷமாகக் கருதமுடியாது. இது யூத எதிர்ப்பின் ஊடாக இஸ்லாமிய கடும்போக்குவாதத்தின் ஆதிக்கத்தை நிலைநாட்டக்கூடிய செயலெனக் கருதலாம்.
அமெரிக்கா மீதான தாக்குதல் மிகவும் சிக்கலான விஷயம். விமானங்களைக் கடத்திச் சென்று அதீத பாதுகாப்புடன் கூடிய இலக்குகள் மீது மோத வைப்பது லேசுப்பட்டதல்ல. அத்தகைய தாக்குதலுக்கு அதிக தயார்ப்படுத்தலும், கூர்மையான திட்டமிடலும், நிறுவனமயப்படுத்தப்பட்ட கட்டமைப்பும் அவசியம். பிரான்ஸின் தலைநகரில் அமைந்துள்ள பத்திரிகை அலுவலகத்தைத் தாக்குதல் என்பது அத்தனை சிரமமான விஷயமல்ல. எதுவித திட்டமிடல்களும், பின்புல உதவிகளும் இன்றி தாக்குதலைக் கட்டவிழ்த்து விட முடியும். தாக்குதலை நடத்த தனிநபர்கள் போதும்.
யெமனில் இயங்கும் அல்கைதா வலைப்பின்னலுடன் தொடர்புடைய ஆயுதபாணிக் குழுவொன்று சார்ளி ஹெப்டோ பத்திரிகை மீதான தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ளது. நபி பெருமானாரை கார்ட்டூனாக வரைந்து கேலி செய்தமைக்கு பழி வாங்கும் நோக்கத்துடன் தாக்குதலை நடத்தியதாக அரேபிய வளைகுடாவிற்கான அல்கைதா என்ற அமைப்பு அறிக்கை விடுத்திருக்கிறது. இந்தக் குழுவின் அறிக்கையை புறக்கணித்து விட முடியாது. ஏனெனில், பத்திரிகை அலுவலகத்தைத் தாக்க வந்த ஆயுதபாணிகளில் ஒருவர், இது யெமனில் இயங்கும் அல்கைதாவின் வேலையென ஊடகங்களிடம் கூறுங்கள் என கோஷமிட்டிருந்தார்.
அது மாத்திரமன்றி, அச்சகத்தில் சிக்கியிருந்த சமயம் தொலைபேசியின் ஊடாக தொடர்பு கொண்ட கொவ்வாச்சி சகோதரர்களும் அல்கைதா பற்றி பேசியதாக அறிவிக்கப்படுகிறது.
இத்தகைய தாக்குதல்கள் மூலம் இஸ்லாமிய கடும்போக்கு அமைப்புக்கள் அடைய முனையும் இலக்குகள் தெளிவானவை. இவை மேலைத்தேய நாடுகளில் வாழும் இஸ்லாமிய சமூகத்தின் மத்தியில் கடும்போக்குவாதத்தை ஏற்படுத்துவதுடன் தொடர்புடையவை. அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் முஸ்லிம்கள் பெரும்பாலும் வன்முறைகளையும், பயங்கரவாதத்தையும் நிராகரிக்கிறார்கள். எந்த சமூகத்தில் தஞ்சம் கோரினார்களோ, அந்த சமூகத்தின் ஓரம்சமாக வாழ்வதை முஸ்லிம்கள் விரும்புகிறார்கள். ஐரோப்பிய சமூகங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிரான உணர்வலைகளைத் தூண்டி விட்டு, அந்த சமூகத்தவர்களை இஸ்லாமியர்களுக்கு எதிராக தூண்டி விடுவது கடும்போக்கு சக்திகளின் நோக்கம்.
இத்தகைய நோக்கத்தில் ஒரு சூட்சுமம் மறைந்திருக்கிறது. ஈராக்கிலும், சிரியாவிலும், எகிப்திலும், மியன்மாரிலும் இஸ்லாமியர்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்ற உணர்வில் வாடும் ஐரோப்பிய முஸ்லிம்கள் மத்தியில், தாம் வாழும் சமூகத்திலும் தாம் வெறுக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தின் வித்துக்களை விதைத்து விடுவது எளிது. இதன் மூலம், இஸ்லாமிய சமூகத்தை இலகுவான முறையில் ஐரோப்பியர்களுக்கு எதிராகத் திருப்பி விடலாம்.
செப்ரெம்பர் 11 தாக்குதலைத் தொடர்ந்து நிகழ்ந்த அரசியல், சமூக, பொருளாதார மாற்றங்கள் மற்றும் தீவிரமான புலம்பெயர்தலின் விளைவுகளால் இன்;று ஐரோப்பிய சமூகம் பெரிதும் முனைவாக்கப்பட்டு இருக்கிறது. தமது இருப்பைக் கேள்விக்குறிக்கு உள்ளாக்க வந்தவர்களாக ஐரோப்பிய மக்கள் முஸ்லிம்களைப் பார்க்கத் தொடங்கியிருக்கிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், சார்ளி ஹெப்டோ பத்திரிகை போன்ற கலாசார அடையாளங்களைத் தாக்குவதன் மூலம் முனைவாக்கத்தைத் தீவிரப்படுத்துவது இஸ்லாமிய கடும்போக்கு அமைப்புக்களின் நோக்கமாக இருக்கிறது.
இன்று ஐரோப்பிய தலைவர்கள் 'முஸ்லிம்கள் வேறு, இஸ்லாமிய கடும்போக்குவாதம் வேறு' என்பதை வலியுறுத்த முனைந்தாலும், இன்று ஐரோப்பிய சமூகத்தில் இஸ்லாத்திற்கு எதிரான வெறுப்புணர்வு அரசியல்மயப்படுத்தப்பட்டுள்ளது. பிரான்ஸையே உதாரணமாக எடுத்துக் கொள்ள முடியும். ஐரோப்பிய நாடுகளில் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் நாடு பிரான்ஸ் தான். இங்கு தீவிர வலதுசாரிக் கொள்கையை அனுசரிக்கும் மாரி லா பென் என்ற பெண்மணி, இஸ்லாத்திற்கு எதிரான கொள்கைகளின் அடித்தளத்தில் தமது அரசியல் நடவடிக்கைகளை முன்னெடுக்கிறார். அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் அவரது பிரசாரத் தொனிப்பொருள் சார்ளி ஹெப்டோ ப்டோ தாக்குதல் என்ற விடயத்தை மையப்படுத்தியதாகத் தான் அமையும்.
இத்தகைய அரசியல் மாற்றங்கள் ஐரோப்பிய சமூகத்திற்கு மாத்திரமல்ல, ஒட்டுமொத்த உலகிற்கும் பாதகமானதாகவே அமையும். இந்த விடயத்தை ஜனாதிபதி பிரான்ஸூவா ஹொல்லந்தே மாத்திரமன்றி, பிரான்ஸில் வாழும் ஒவ்வொரு இஸ்லாமியனும் புரிந்து கொள்வது அவசியம். சமூகத்தை முனைவாக்கப்படுத்துவதில் தான் அல்கொய்தாவின் நலனும், மாரி லா பென்னின் அரசியல் நலனும் அடங்கியிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளும் பட்சத்தில், அத்தகைய முனைவாக்க முயற்சிகள் சாத்தி யப்படாமல் போகலாம்.
சதீஷ் கிருஷ்ணபிள்ளை






































































































































.jpg)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக