கல்வியைத் தொடர காத்திருக்கும் ஒரு யுவதி
இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பது முதுமொழி. அந்தவகையில் எமது நாடு எழுத்தறிவு வீதத்தில் ஆசியாவில் முன்னிலையில் திகழும் நாடாக விளங்கிக்கொண்டிருக்கின்றது. இருப்பினும் தமது இளமைக்காலத்தில் முழுமையான கல்வியைப் பெறமுடியாத நிலைமையும் காணப்படுகின்றமை துரதிர்ஷ்டவசமானது. கடந்த காலங்களில் காணப்பட்ட அசாதாரணச் சூழலால் அனைத்தையும் இழந்து வறுமையில் வாடுபவர்களாக உருமாற்றப்பட்டிருக்கும் பல குடும்பங்களில் இந்த நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆம், நிறைவான சாதரண வாழ்வை தொடர்ந்துகொண்டிருந்த சிவபாதசுந்தரம் சிவகுமாரின் குடும்பத்தில் பெண்பிள்ளை மலர்ந்தது. சிறுவயது முதல் கல்வியில் ஆர்வத்துடன் திறமையை வெளிப்படுத்தி வந்த அப்பிள்ளை அசாதாரண சூழலில் ஏற்பட்ட இடப்பெயர்வால் நோயாளியாக்கிவிட்டது. இருப்பினும் சுயமாக தனியார் வகுப்புக்களை வழங்கி கல்விச் செல்வத்தை நிறைவாகப் பெற்றுவிடவேண்டும் எனத் துடித்த அந்த யுவதிக்கு நோயாளிப் பட்டம் கிடைத்தது. மறுபுறுத்தில் பெற்றோரின் இயலாமை அதனால் ஏற்பட்ட குடும்ப வறுமை இவை அனைத்துமே வாழ்க்கைக் கடலில் துடுப்பில்லாத ஓடமாக மாற்றிவிட்டது.
அந்த யுவதியின் நிலைமையை அவருடைய தந்தையார் சிவபாதசுந்தரம் சிவகுமார் இவ்வாறு விவரித்தார்.
பிரச்சினை வலுவடைகிறது. குமர்ப்பிள்ளையோட இருக்கிற நாங்கள் பாதுகாப்பை தேடி முன்னுக்கே பாதுகாப்பு வலயத்துக்குப் போவம் என்று லான்மாஸ்டரில போகும் போது எங்கிருந்தோ வந்த ஷெல் மரத்தில பட்டு வெடிச்சு மரக்கிளை முறிந்து விழுந்து என்ர இரண்டு கண்ணின் நரம்பையும் பாதிச்சதுடன் முகம் முழுக்க சிராம்பு காயம் ஏற்பட்டு விட்டது. நான் காயப்பட்டு ஹொஸ்பிட்டலுக்கு போட்டன். மகளும் மனிசியும் முகாமுக்குப் போட்டினம். முகாமில இருக்கும் போது என்ர பிள்ளை நான் இருக்கிறனோ இல்லையோ என்று தகவல் ஏதும் இல்லாமல் மாதக்கணக்கில் யோசித்து வலிப்பு நோயாளி ஆகி விட்டா. இப்ப 20 வயது குமர்ப்பிள்ளையை நம்பி நானும் தொய்வுக்கார மனுசியும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறம்
எனது சொந்த இடம் யாழ்ப்பாணம். ஆனால் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டனான் 1983இல் ஏற்பட்ட இனக்கலவரத்துடன் வன்னிக்குப் போனேன். அங்கு ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனத்தில் வேலை கிடைத்தது. சரி அடிபட்டு வந்தாலும் நல்ல வேலை கிடைத்து விட்டது என எண்ணி வன்னி மண்ணிலேயே திருமணம் செய்து என் வாழ்வை ஆரம்பித்தேன். துரத்திய காலம் விடவில்லை. 7 வருடங்கள் சந்தோஷமாக கழிந்த என் வாழ்வில் மீண்டுமொரு பேரிடி விழுந்தது. அது தான் ஆனையிறவு பிரச்சினை ஆரம்பமானது. இதையடுத்து உப்புக் கூட்டுத்தாபனம் மூடப்பட்டது.
7 வருடம் வேலை செய்து கொஞ்சக் காசு கிடைத்தது. அதோட வளவில தோட்டம் செய்து வாழப் பழகிக் கொண்ட எனக்கு வாழ்க்கை சவாலாக அமைந்தாலும் பல சந்தர்ப்பங்களில் தடை தாண்டல் பரீட்சையில் வெற்றி பெற்றவனாகவே என் வாழ்வை நகர்த்தினேன்.
ஒரே ஒரு மகள். அவளை நன்றாக படிப்பிச்சு அரச உத்தியோகம் பார்க்கச் செய்வதே என் குறிக்கோளாக இருந்தது. அதற்காக இரவும் பகலும் பாடுபட்டேன். பலா பலனை எதிர்பார்த்திருக்கும் போது என்ர இரண்டு கண்ணும் போட்டுது. மனிசியும் நிரந்தர நோயாளியாகி விட்டா. ஆனால் யாருக்காக இரவு பகலாக கஷ்டப்பட்டேனோ அந்தப்பிள்ளை கூட ஒரு வலிப்பு நோயாளி ஆகிவிட்டா. இது எல்லாத்தையும் பார்க்கும் போது ஆண்டவனால் கொடுக்கப்பட்ட சித்து விளையாட்டா? இல்லை. கடவுளுக்கு பிடிக்காதவர்களுக்கு கடவுளால் வழங்கப்படுகின்ற தண்டனையா? என எனக்கு தெரியவில்லை.
சரி அது தான் போகட்டும் 1983இல் இடம்பெயர்ந்து உடுத்த உடுப்போட வரும் போது வன்னி மண் எங்களை வரவேற்று வாழ வைச்சது. ஆனால் 2009 இல் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தம் இஷ்ட தெய்வங்களை தியானித்து கொண்டு இடம்பெயர்ந்த போது கடவுள் மௌனமாக இருக்க காரணம் தான் என்ன?
இடம்பெயர்ந்து வீடு வாசல் சொத்து சுகம் ஏன் அவையவத்தையே இழந்த எமக்கு 6 மாத நிவாரணமும் (P.M.P.) காசு 350 ரூபாவும் மஹிந்த சிந்தனை திட்டத்தால் 3000 ரூபாவும் சமுர்த்தியால வரும் 590ரூபாவும் தான் கிடைக்கிறது.
4940 ரூபாவில மூன்று பேர் 1 மாதத்திற்கு சாப்பிடுவது என்றால் என்ன செய்ய முடியும்? இதனால் கயில கழுத்தில இருந்ததெல்லாம் அடவு வைச்சு மாரிக்கும் கோடைக்கும் பயந்து வீட்டைத்திருத்தினேன். திருத்தும் போது இந்திய வீட்டுத்திட்டம் கிடைக்கும். கிடைத்தால் திருத்தின காசை வாங்கி அடவு எடுப்பம் என்று நினைச்சு பதிஞ்ச நாளில இருந்து மாதம் மாதம் போய் வீட்டைப்பற்றி கேட்பேன். உங்கட பெயருக்கு கட்டாயம் வருமய்யா. நீங்கள் போங்கோ என்பார்கள். நான் வீணாக பஸ் காசைக் கொடுத்துப் போய் ஏமாந்து வந்த சந்தர்ப்பம் தான் அதிகம். இதற்கு அப்பால பரந்தன் விழிப்புலனற்றோர் சங்கம் எனது கஷ்டங்களை பார்த்து மாதா மாதம் நிவாரணம் தாரவை. இப்ப 2, 3 மாதமாக அங்கு மீளாய்வு நடப்பதால எங்களுக்கு எந்தவொரு சாமானும் இல்லை.
உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு என்ர மகள் கணினி வகுப்புக்கு போறவா. எங்கட இடத்தில இருந்து வகுப்புக்கு போறதென்றால் 15 கிலோ மீற்றர் தூரம் போக வேணும். வலிப்பு வாரதால அவாவுக்கு சைக்கிள் ஓட ஏலாது. இதனால் பஸ்ஸிலதான் போறது. கடந்த 3 மாதமாக பஸ்ஸில போறதுக்கு கூட காசில்லாததால போகவில்லை. ஆக கடவுள் புண்ணியத்தில தருமபுரம் AGA office ஆல மனைவி கிளினிக் போரதுக்கு மாதா மாதம் 100 ரூபா தாரவை. அதால அவா ஒழுங்கா கிளினிக் போறா. 14 வயசில இருந்து என்ர மகள் ரியுஷன் கொடுத்து தான் படிச்சதுடன் வீட்டையும் பார்த்துக் கொண்டா. ஆனால் இனி என்ன செய்யப் போகிறோம் என்றே எனக்கு தெரியாது.
இப்படியே நாளுக்கு நாள் எங்கட கஷ்டம் அதிகரிக்குதே தவிர குறைந்த பாடு இல்லை. எனவே எங்கட கஷ்டத்தை கருத்தில கொண்டு யாராவது எமக்கு உதவி செய்ய முன்வருவீர்களானால் காலமுள்ளவரை நாம் மகிழ்வோடு இருப்போம். இன்றைக்கு அனைத்தையும் இழந்தும் நான் வாழ வேண்டும் என நினைப்பதற்கு பிரதான காரணம் என்ர மகள்தான். கண் தெரியா விட்டாலும் கிணத்தில தண்ணி அள்ளிறதுல இருந்து சகல வேலைகளையும் நானே செய்து வருகிறேன். என்ர பிள்ளையளுக்கு நல்ல ஒரு உத்தியோகத்தை பெற்றுக் கொடுத்து விட்டா அவா தன்ர வாழ்க்கையில இனியாவது நிறைவாக வாழுவா. 14 வயசில இருந்து ரியுஷன் கொடுத்து தன்னையும் பார்த்து எங்களையும் பார்த்த பிள்ளையை கடனாளியாக இல்லாது தொழிலாளி ஆக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
எனவே நாங்கள் 4 ஆயிரம் ரூபாவோடும் ஒரு நேரச் சாப்பாடோடும் வாழப்பழகி விட்டோம். இனி எங்களுக்கு பட்டுப்புடவை கட்ட வேண்டுமென்றோ நகை போட வேண்டுமென்றோ ஆசையில்லை. யாராவது என்ர பிள்ளையை மேற்படிப்பு படிப்பிக்க உதவி செய்தால் போதும். அவாக்கு கம்பியூட்டர் படிக்க வேண்டும். அதே போல் வெளிவாரியாக பட்டப்படிப்பு படிக்க விருப்பம். அதற்கு பஸ்ஸில போரதுக்கே எங்களிட்ட காசு இல்லை. இதால பட்டத்தையோ பதவியையோ நினைக்கலாமே தவிர பெற முடியாது.
நான் அங்கவீனமாக்கப்பட்டு விட்டேன். மனைவியும் நிரந்தர வருத்தக்காரி ஆகி விட்டா. உறவுகள் என்று சொல்லிக் கொள்ள ஆட்கள் இருந்தாலும் அவர்களுக்கு எம்மிடம் உறவாட பயம் .காரணம் தாம் எம்முடன் சேர்ந்தால் நாம் அவர்களிடம் பல உதவிகளை எதிர்பார்ப்போம் என்று. இதனால் நான் இன்றுவரை உறவுகள் எவரிடமும் உதவி கேட்டதில்லை. ஆனால் இன்று பகிரங்கமாக என் பிள்ளையை வாழ வைக்க கல்விக்கு உதவி செய்யுங்கோ எனக் கேட்கிறேன்.
கல்வியை தொடர்ந்து தனது சொந்தக்காலில் நிற்பதற்கு முயற்சி செய்யும் யுவதிக்கும் துணையாக இருக்கும் பெற்றோருக்கும் எம்மாலான உதவிகளை வழங்க முன்வருவோமாக.
சிந்துஜா பிரசாத்
யாருக்காக இரவு பகலாக கஷ்டப்பட்டேனோ அந்தப்பிள்ளை கூட ஒரு வலிப்பு நோயாளி ஆகிவிட்டா. இது எல்லாத்தையும் பார்க்கும் போது ஆண்டவனால் கொடுக்கப்பட்ட சித்து விளையாட்டா? இல்லை. கடவுளுக்கு பிடிக்காதவர்களுக்கு கடவுளால் வழங்கப்படுகின்ற தண்டனையா?"
இளமையில் கல்வி சிலையில் எழுத்து என்பது முதுமொழி. அந்தவகையில் எமது நாடு எழுத்தறிவு வீதத்தில் ஆசியாவில் முன்னிலையில் திகழும் நாடாக விளங்கிக்கொண்டிருக்கின்றது. இருப்பினும் தமது இளமைக்காலத்தில் முழுமையான கல்வியைப் பெறமுடியாத நிலைமையும் காணப்படுகின்றமை துரதிர்ஷ்டவசமானது. கடந்த காலங்களில் காணப்பட்ட அசாதாரணச் சூழலால் அனைத்தையும் இழந்து வறுமையில் வாடுபவர்களாக உருமாற்றப்பட்டிருக்கும் பல குடும்பங்களில் இந்த நிலைமை தொடர்ந்து கொண்டிருக்கின்றது.
ஆம், நிறைவான சாதரண வாழ்வை தொடர்ந்துகொண்டிருந்த சிவபாதசுந்தரம் சிவகுமாரின் குடும்பத்தில் பெண்பிள்ளை மலர்ந்தது. சிறுவயது முதல் கல்வியில் ஆர்வத்துடன் திறமையை வெளிப்படுத்தி வந்த அப்பிள்ளை அசாதாரண சூழலில் ஏற்பட்ட இடப்பெயர்வால் நோயாளியாக்கிவிட்டது. இருப்பினும் சுயமாக தனியார் வகுப்புக்களை வழங்கி கல்விச் செல்வத்தை நிறைவாகப் பெற்றுவிடவேண்டும் எனத் துடித்த அந்த யுவதிக்கு நோயாளிப் பட்டம் கிடைத்தது. மறுபுறுத்தில் பெற்றோரின் இயலாமை அதனால் ஏற்பட்ட குடும்ப வறுமை இவை அனைத்துமே வாழ்க்கைக் கடலில் துடுப்பில்லாத ஓடமாக மாற்றிவிட்டது.
அந்த யுவதியின் நிலைமையை அவருடைய தந்தையார் சிவபாதசுந்தரம் சிவகுமார் இவ்வாறு விவரித்தார்.
பிரச்சினை வலுவடைகிறது. குமர்ப்பிள்ளையோட இருக்கிற நாங்கள் பாதுகாப்பை தேடி முன்னுக்கே பாதுகாப்பு வலயத்துக்குப் போவம் என்று லான்மாஸ்டரில போகும் போது எங்கிருந்தோ வந்த ஷெல் மரத்தில பட்டு வெடிச்சு மரக்கிளை முறிந்து விழுந்து என்ர இரண்டு கண்ணின் நரம்பையும் பாதிச்சதுடன் முகம் முழுக்க சிராம்பு காயம் ஏற்பட்டு விட்டது. நான் காயப்பட்டு ஹொஸ்பிட்டலுக்கு போட்டன். மகளும் மனிசியும் முகாமுக்குப் போட்டினம். முகாமில இருக்கும் போது என்ர பிள்ளை நான் இருக்கிறனோ இல்லையோ என்று தகவல் ஏதும் இல்லாமல் மாதக்கணக்கில் யோசித்து வலிப்பு நோயாளி ஆகி விட்டா. இப்ப 20 வயது குமர்ப்பிள்ளையை நம்பி நானும் தொய்வுக்கார மனுசியும் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறம்
எனது சொந்த இடம் யாழ்ப்பாணம். ஆனால் கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்டனான் 1983இல் ஏற்பட்ட இனக்கலவரத்துடன் வன்னிக்குப் போனேன். அங்கு ஆனையிறவு உப்புக் கூட்டுத்தாபனத்தில் வேலை கிடைத்தது. சரி அடிபட்டு வந்தாலும் நல்ல வேலை கிடைத்து விட்டது என எண்ணி வன்னி மண்ணிலேயே திருமணம் செய்து என் வாழ்வை ஆரம்பித்தேன். துரத்திய காலம் விடவில்லை. 7 வருடங்கள் சந்தோஷமாக கழிந்த என் வாழ்வில் மீண்டுமொரு பேரிடி விழுந்தது. அது தான் ஆனையிறவு பிரச்சினை ஆரம்பமானது. இதையடுத்து உப்புக் கூட்டுத்தாபனம் மூடப்பட்டது.
7 வருடம் வேலை செய்து கொஞ்சக் காசு கிடைத்தது. அதோட வளவில தோட்டம் செய்து வாழப் பழகிக் கொண்ட எனக்கு வாழ்க்கை சவாலாக அமைந்தாலும் பல சந்தர்ப்பங்களில் தடை தாண்டல் பரீட்சையில் வெற்றி பெற்றவனாகவே என் வாழ்வை நகர்த்தினேன்.
ஒரே ஒரு மகள். அவளை நன்றாக படிப்பிச்சு அரச உத்தியோகம் பார்க்கச் செய்வதே என் குறிக்கோளாக இருந்தது. அதற்காக இரவும் பகலும் பாடுபட்டேன். பலா பலனை எதிர்பார்த்திருக்கும் போது என்ர இரண்டு கண்ணும் போட்டுது. மனிசியும் நிரந்தர நோயாளியாகி விட்டா. ஆனால் யாருக்காக இரவு பகலாக கஷ்டப்பட்டேனோ அந்தப்பிள்ளை கூட ஒரு வலிப்பு நோயாளி ஆகிவிட்டா. இது எல்லாத்தையும் பார்க்கும் போது ஆண்டவனால் கொடுக்கப்பட்ட சித்து விளையாட்டா? இல்லை. கடவுளுக்கு பிடிக்காதவர்களுக்கு கடவுளால் வழங்கப்படுகின்ற தண்டனையா? என எனக்கு தெரியவில்லை.
சரி அது தான் போகட்டும் 1983இல் இடம்பெயர்ந்து உடுத்த உடுப்போட வரும் போது வன்னி மண் எங்களை வரவேற்று வாழ வைச்சது. ஆனால் 2009 இல் இருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் தம் இஷ்ட தெய்வங்களை தியானித்து கொண்டு இடம்பெயர்ந்த போது கடவுள் மௌனமாக இருக்க காரணம் தான் என்ன?
இடம்பெயர்ந்து வீடு வாசல் சொத்து சுகம் ஏன் அவையவத்தையே இழந்த எமக்கு 6 மாத நிவாரணமும் (P.M.P.) காசு 350 ரூபாவும் மஹிந்த சிந்தனை திட்டத்தால் 3000 ரூபாவும் சமுர்த்தியால வரும் 590ரூபாவும் தான் கிடைக்கிறது.
4940 ரூபாவில மூன்று பேர் 1 மாதத்திற்கு சாப்பிடுவது என்றால் என்ன செய்ய முடியும்? இதனால் கயில கழுத்தில இருந்ததெல்லாம் அடவு வைச்சு மாரிக்கும் கோடைக்கும் பயந்து வீட்டைத்திருத்தினேன். திருத்தும் போது இந்திய வீட்டுத்திட்டம் கிடைக்கும். கிடைத்தால் திருத்தின காசை வாங்கி அடவு எடுப்பம் என்று நினைச்சு பதிஞ்ச நாளில இருந்து மாதம் மாதம் போய் வீட்டைப்பற்றி கேட்பேன். உங்கட பெயருக்கு கட்டாயம் வருமய்யா. நீங்கள் போங்கோ என்பார்கள். நான் வீணாக பஸ் காசைக் கொடுத்துப் போய் ஏமாந்து வந்த சந்தர்ப்பம் தான் அதிகம். இதற்கு அப்பால பரந்தன் விழிப்புலனற்றோர் சங்கம் எனது கஷ்டங்களை பார்த்து மாதா மாதம் நிவாரணம் தாரவை. இப்ப 2, 3 மாதமாக அங்கு மீளாய்வு நடப்பதால எங்களுக்கு எந்தவொரு சாமானும் இல்லை.
உயர்தரப் பரீட்சை எழுதிவிட்டு என்ர மகள் கணினி வகுப்புக்கு போறவா. எங்கட இடத்தில இருந்து வகுப்புக்கு போறதென்றால் 15 கிலோ மீற்றர் தூரம் போக வேணும். வலிப்பு வாரதால அவாவுக்கு சைக்கிள் ஓட ஏலாது. இதனால் பஸ்ஸிலதான் போறது. கடந்த 3 மாதமாக பஸ்ஸில போறதுக்கு கூட காசில்லாததால போகவில்லை. ஆக கடவுள் புண்ணியத்தில தருமபுரம் AGA office ஆல மனைவி கிளினிக் போரதுக்கு மாதா மாதம் 100 ரூபா தாரவை. அதால அவா ஒழுங்கா கிளினிக் போறா. 14 வயசில இருந்து என்ர மகள் ரியுஷன் கொடுத்து தான் படிச்சதுடன் வீட்டையும் பார்த்துக் கொண்டா. ஆனால் இனி என்ன செய்யப் போகிறோம் என்றே எனக்கு தெரியாது.
இப்படியே நாளுக்கு நாள் எங்கட கஷ்டம் அதிகரிக்குதே தவிர குறைந்த பாடு இல்லை. எனவே எங்கட கஷ்டத்தை கருத்தில கொண்டு யாராவது எமக்கு உதவி செய்ய முன்வருவீர்களானால் காலமுள்ளவரை நாம் மகிழ்வோடு இருப்போம். இன்றைக்கு அனைத்தையும் இழந்தும் நான் வாழ வேண்டும் என நினைப்பதற்கு பிரதான காரணம் என்ர மகள்தான். கண் தெரியா விட்டாலும் கிணத்தில தண்ணி அள்ளிறதுல இருந்து சகல வேலைகளையும் நானே செய்து வருகிறேன். என்ர பிள்ளையளுக்கு நல்ல ஒரு உத்தியோகத்தை பெற்றுக் கொடுத்து விட்டா அவா தன்ர வாழ்க்கையில இனியாவது நிறைவாக வாழுவா. 14 வயசில இருந்து ரியுஷன் கொடுத்து தன்னையும் பார்த்து எங்களையும் பார்த்த பிள்ளையை கடனாளியாக இல்லாது தொழிலாளி ஆக்க வேண்டும் என்பதுதான் என் விருப்பம்.
எனவே நாங்கள் 4 ஆயிரம் ரூபாவோடும் ஒரு நேரச் சாப்பாடோடும் வாழப்பழகி விட்டோம். இனி எங்களுக்கு பட்டுப்புடவை கட்ட வேண்டுமென்றோ நகை போட வேண்டுமென்றோ ஆசையில்லை. யாராவது என்ர பிள்ளையை மேற்படிப்பு படிப்பிக்க உதவி செய்தால் போதும். அவாக்கு கம்பியூட்டர் படிக்க வேண்டும். அதே போல் வெளிவாரியாக பட்டப்படிப்பு படிக்க விருப்பம். அதற்கு பஸ்ஸில போரதுக்கே எங்களிட்ட காசு இல்லை. இதால பட்டத்தையோ பதவியையோ நினைக்கலாமே தவிர பெற முடியாது.
நான் அங்கவீனமாக்கப்பட்டு விட்டேன். மனைவியும் நிரந்தர வருத்தக்காரி ஆகி விட்டா. உறவுகள் என்று சொல்லிக் கொள்ள ஆட்கள் இருந்தாலும் அவர்களுக்கு எம்மிடம் உறவாட பயம் .காரணம் தாம் எம்முடன் சேர்ந்தால் நாம் அவர்களிடம் பல உதவிகளை எதிர்பார்ப்போம் என்று. இதனால் நான் இன்றுவரை உறவுகள் எவரிடமும் உதவி கேட்டதில்லை. ஆனால் இன்று பகிரங்கமாக என் பிள்ளையை வாழ வைக்க கல்விக்கு உதவி செய்யுங்கோ எனக் கேட்கிறேன்.
கல்வியை தொடர்ந்து தனது சொந்தக்காலில் நிற்பதற்கு முயற்சி செய்யும் யுவதிக்கும் துணையாக இருக்கும் பெற்றோருக்கும் எம்மாலான உதவிகளை வழங்க முன்வருவோமாக.
சிந்துஜா பிரசாத்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக