பெண்களின் கர்ப்பப்பையில் ஏற்படக்கூடிய பைப்புரோயிட் கட்டிகளும் சூலகத்தில் ஏற்படக்கூடிய லுவரியன் சிஸ்ற் எனப்படும் சூலகக் கட்டிகளும் இன்று நாம் அடிக்கடி கேள்விப்படும் விடயமாக உள்ளது. இதற்கு பெண்களது வயதானது பருவமடைந்த வயதில் இருந்து மாதவிடாய் நிரந்தரமாக நின்று போகும் வயதுவரை அதாவது மெனோபோஸ் பருவம் வரை இவ்வாறான கட்டிகள் கண்டறியும் காலமாக உள்ளது. இதன் போது பலரும் இவ்வாறான கட்டிகள் ஏன் வந்தன என்று கேட்பதும் இதனை கரைக்க மருந்துகள் இல்லையா என்பதும் இவற்றால் பயம் இல்லையா என்பதும் பொதுவான கேள்விகளாக நேயர்களிடம் இருந்து வருகின்றது. இதற்கு விடைகாண பலரும் ஆவலாக இருப்பார்கள்.
கர்ப்பப்பையிலோ சூலகத்திலோ கட்டிகள் ஏன் வந்தன என்று கேட்டால் சரியான விடை காண முடியாது. அதாவது இவ்வாறான கட்டிகள் பெண்களது தனிப்பட்ட இயல்புகள் காரணமாக அதாவது அவர்களுக்கே உரிய பரம்பரை இயல்புகள் காரணமாக ஏற்படுகின்றன. இவை நீங்கள் உட்கொண்ட உணவு வகைகளால் அல்லது மருந்து வகைகளால் ஏற்பட்டது என நினைக்க வேண்டாம். ஆனால் பைப்புரோயிட் கட்டிகள் என்பது கூடுதலாக மணம் முடிக்க தாமதமாக இருந்து வரும் 40 வயது பெண்களிலும் மணம் முடித்தும் 40 வயதை தாண்டியும் குழந்தைப் பாக்கியம் இல்லாத பெண்களிலும் கூடுதலாக காண முடிகின்றது. இதிலிருந்து பார்த்தால் தொடர்ச்சியாக ஹோர்மோன்களின் தூண்டுதலும் இவை ஏற்பட காரணமாக இருக்க முடியும். அப்படியே பார்த்தாலும் பைப்புரோயிட் கட்டிகள் ஏற்படுவதையோ சூலகக் கட்டிகள் ஏற்படுவதையோ பெண்களோ மருத்துவர்களோ தடுக்க முடியாது. ஆனால் ஒழுங்கான ஆரம்ப பரிசோதனைகள் மூலம் அவற்றை ஆரம்பத்தில் கண்டறிந்து சரியான சிகிச்சைகள் எடுப்பதே சிறந்த வழி முறையாகும்.
கர்ப்பப்பை மற்றும் சூலகக் கட்டிகளை கண்டறிய சிறந்த பரிசோதனை என்ன?
நோய் அறிகுறிகள் மாதவிடாய் கோளாறுகள் அடி வயிற்று வலி என்பவற்றையும் வயிற்றை அமத்திப் பார்த்து கட்டித்தன்மையையும் வைத்து ஓரளவுக்கு எம்மால் கட்டிகள் இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறினாலும் ஸ்கான் பரிசோதனை மூலம்தான் உறுதிப்படுத்த முடியும். ஸ்கான் பரிசோதனை என்றால் பல வகைகள் உண்டு. அவற்றில் US (ULTRA SOUND ) ஸ்கான் CT MRT ஸ்கான் என பல வகைகள் உண்டு. இதில் மிகவும் எளிமையான இலாபகரமான US ஸ்கான் மூலம் இவ்வாறான கட்டிகளை கண்டறிய முடியும். அதிலும் சில சந்தர்ப்பங்களில் CT ஸ்கான் MRT ஸ்கான் உதவிகள் தேவைப்படும். ஸ்கான் பரிசோதனைகள் மூலம் கட்டியை உறுதிப்படுத்திய பின்னர் அவை எந்த அளவுக்கு ஆபத்தானது என அறிய இரத்த பரிசோதனைகள் சில செய்ய வேண்டும். இதனை CA 125 என்ற இரத்த பரிசோதனை பெறுபேறுகளை வைத்து கட்டியின் வகையையும் அதன் தீவிர தன்மையையும் அறிந்து கொள்ள முடியும்.
கர்ப்பப்பை கட்டிகளை கண்டறிந்தால் கரைக்க மருந்துகள் உண்டா ?
கர்ப்பப்பையிலோ சூலகத்திலோ கட்டிகள் இருப்பது அறிவிக்கப்பட்டதும் பெண்கள் கேட்கும் கேள்வி இவற்றை கரைக்க மருந்துகள் உண்டா? என்பதாகும். பைப்புரோயிட் கட்டிகள் மருந்துகள் மூலம் கரைக்க முடியாது.என்ற ஊசி மூலம் இக்கட்டிகள் தற்காலிகமாக கருக்கலைக்கப்பட்டாலும் சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் பழைய பருமனுக்கு வளரக் கூடும். ஆகையால் ஊசி மூலம் கட்டிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பெரிய அளவில் வெற்றியளிக்கும் எனக் கூற முடியாது. அது போலவே சூலகக்கட்டிகளுக்குமான சிகிச்சைகள் மருந்துகள் ஊசிகள் மூலம் வெற்றிகரமாக வழங்க முடியாது. தற்காலிக பலனைத்தான் இந்த சிகிச்சைகள் தருகின்றது.
கர்ப்பப்பை கட்டிகளுக்கு சத்திர சிகிச்சைகள் அவசியம் தானா?
கர்ப்பப்பையில் பைப்புரோயிட் கட்டிகள் கண்டறிந்தாலோ சூலகத்தில் சூலகக்கட்டிகள் கண்டறிந்தாலோ அடுத்து சத்திர சிகிச்சை தான் என நினைக்க வேண்டாம். சத்திர சிகிச்சை எடுத்த எடுப்பிலேயே கட்டிகள் உள்ள எல்லோருக்கும் செய்ய வேண்டும் என்பதில்லை. அதாவது கட்டிகள் பருமன் அதன் நோய் அறிகுறிகளின் தீவிரம் மற்றும் இரத்த பரிசோதனைகளின் பெறுபேறுகளின் அளவுகள் குழந்தைப் பாக்கியத்தின் தேவை பெண்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் என பல விடயங்களை கருத்தில் கொண்டே சத்திர சிகிச்சை ஒன்று உடன் அவசியம் அல்லது சில காலம் பொறுத்திருந்து பார்க்கலாம் என முடிவு செய்யப்படுகின்றது. ஆகையால் பெண்களில் கர்ப்பப்பையிலும் சூலகத்திலும் கட்டிகள் வருவது ஒரு சகஜமான நிகழ்வாகவே காணப்படுகின்றது.
இதற்கு கரைக்க மருந்துகள் உள்ளன என சொல்ல முடியாது.
அதற்காக கட்டிகளுக்கு எல்லாம் சத்திர சிகிச்சை தேவை என்றும் கூற முடியாது. கட்டிகள் எல்லாம் புற்று நோய் தொடர்புகள் உள்ளவை என்றும் நினைக்க வேண்டாம். பல காரணிகள் கலந்தாலோசித்து விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ற வகையில் சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.
கர்ப்பப்பையிலோ சூலகத்திலோ கட்டிகள் ஏன் வந்தன என்று கேட்டால் சரியான விடை காண முடியாது. அதாவது இவ்வாறான கட்டிகள் பெண்களது தனிப்பட்ட இயல்புகள் காரணமாக அதாவது அவர்களுக்கே உரிய பரம்பரை இயல்புகள் காரணமாக ஏற்படுகின்றன. இவை நீங்கள் உட்கொண்ட உணவு வகைகளால் அல்லது மருந்து வகைகளால் ஏற்பட்டது என நினைக்க வேண்டாம். ஆனால் பைப்புரோயிட் கட்டிகள் என்பது கூடுதலாக மணம் முடிக்க தாமதமாக இருந்து வரும் 40 வயது பெண்களிலும் மணம் முடித்தும் 40 வயதை தாண்டியும் குழந்தைப் பாக்கியம் இல்லாத பெண்களிலும் கூடுதலாக காண முடிகின்றது. இதிலிருந்து பார்த்தால் தொடர்ச்சியாக ஹோர்மோன்களின் தூண்டுதலும் இவை ஏற்பட காரணமாக இருக்க முடியும். அப்படியே பார்த்தாலும் பைப்புரோயிட் கட்டிகள் ஏற்படுவதையோ சூலகக் கட்டிகள் ஏற்படுவதையோ பெண்களோ மருத்துவர்களோ தடுக்க முடியாது. ஆனால் ஒழுங்கான ஆரம்ப பரிசோதனைகள் மூலம் அவற்றை ஆரம்பத்தில் கண்டறிந்து சரியான சிகிச்சைகள் எடுப்பதே சிறந்த வழி முறையாகும்.
கர்ப்பப்பை மற்றும் சூலகக் கட்டிகளை கண்டறிய சிறந்த பரிசோதனை என்ன?
நோய் அறிகுறிகள் மாதவிடாய் கோளாறுகள் அடி வயிற்று வலி என்பவற்றையும் வயிற்றை அமத்திப் பார்த்து கட்டித்தன்மையையும் வைத்து ஓரளவுக்கு எம்மால் கட்டிகள் இருக்க வாய்ப்புள்ளதாகக் கூறினாலும் ஸ்கான் பரிசோதனை மூலம்தான் உறுதிப்படுத்த முடியும். ஸ்கான் பரிசோதனை என்றால் பல வகைகள் உண்டு. அவற்றில் US (ULTRA SOUND ) ஸ்கான் CT MRT ஸ்கான் என பல வகைகள் உண்டு. இதில் மிகவும் எளிமையான இலாபகரமான US ஸ்கான் மூலம் இவ்வாறான கட்டிகளை கண்டறிய முடியும். அதிலும் சில சந்தர்ப்பங்களில் CT ஸ்கான் MRT ஸ்கான் உதவிகள் தேவைப்படும். ஸ்கான் பரிசோதனைகள் மூலம் கட்டியை உறுதிப்படுத்திய பின்னர் அவை எந்த அளவுக்கு ஆபத்தானது என அறிய இரத்த பரிசோதனைகள் சில செய்ய வேண்டும். இதனை CA 125 என்ற இரத்த பரிசோதனை பெறுபேறுகளை வைத்து கட்டியின் வகையையும் அதன் தீவிர தன்மையையும் அறிந்து கொள்ள முடியும்.
கர்ப்பப்பை கட்டிகளை கண்டறிந்தால் கரைக்க மருந்துகள் உண்டா ?
கர்ப்பப்பையிலோ சூலகத்திலோ கட்டிகள் இருப்பது அறிவிக்கப்பட்டதும் பெண்கள் கேட்கும் கேள்வி இவற்றை கரைக்க மருந்துகள் உண்டா? என்பதாகும். பைப்புரோயிட் கட்டிகள் மருந்துகள் மூலம் கரைக்க முடியாது.என்ற ஊசி மூலம் இக்கட்டிகள் தற்காலிகமாக கருக்கலைக்கப்பட்டாலும் சிறிது காலத்தின் பின்னர் மீண்டும் பழைய பருமனுக்கு வளரக் கூடும். ஆகையால் ஊசி மூலம் கட்டிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் பெரிய அளவில் வெற்றியளிக்கும் எனக் கூற முடியாது. அது போலவே சூலகக்கட்டிகளுக்குமான சிகிச்சைகள் மருந்துகள் ஊசிகள் மூலம் வெற்றிகரமாக வழங்க முடியாது. தற்காலிக பலனைத்தான் இந்த சிகிச்சைகள் தருகின்றது.
கர்ப்பப்பை கட்டிகளுக்கு சத்திர சிகிச்சைகள் அவசியம் தானா?
கர்ப்பப்பையில் பைப்புரோயிட் கட்டிகள் கண்டறிந்தாலோ சூலகத்தில் சூலகக்கட்டிகள் கண்டறிந்தாலோ அடுத்து சத்திர சிகிச்சை தான் என நினைக்க வேண்டாம். சத்திர சிகிச்சை எடுத்த எடுப்பிலேயே கட்டிகள் உள்ள எல்லோருக்கும் செய்ய வேண்டும் என்பதில்லை. அதாவது கட்டிகள் பருமன் அதன் நோய் அறிகுறிகளின் தீவிரம் மற்றும் இரத்த பரிசோதனைகளின் பெறுபேறுகளின் அளவுகள் குழந்தைப் பாக்கியத்தின் தேவை பெண்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள் என பல விடயங்களை கருத்தில் கொண்டே சத்திர சிகிச்சை ஒன்று உடன் அவசியம் அல்லது சில காலம் பொறுத்திருந்து பார்க்கலாம் என முடிவு செய்யப்படுகின்றது. ஆகையால் பெண்களில் கர்ப்பப்பையிலும் சூலகத்திலும் கட்டிகள் வருவது ஒரு சகஜமான நிகழ்வாகவே காணப்படுகின்றது.
இதற்கு கரைக்க மருந்துகள் உள்ளன என சொல்ல முடியாது.
அதற்காக கட்டிகளுக்கு எல்லாம் சத்திர சிகிச்சை தேவை என்றும் கூற முடியாது. கட்டிகள் எல்லாம் புற்று நோய் தொடர்புகள் உள்ளவை என்றும் நினைக்க வேண்டாம். பல காரணிகள் கலந்தாலோசித்து விருப்பு வெறுப்புக்களுக்கு ஏற்ற வகையில் சிகிச்சைகள் தீர்மானிக்கப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக