சாத்திரி “கௌரிபால்” படம். கூகிள்
மண்டையில் போட்ட மரண தேவனின் ஊழியர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் இருக்கிறார். அவர் பெயர் சாத்திரி “கௌரிபால்” அவரது உண்மையான பெயர். சண்டிலிப்பாயைச் சேர்ந்தவர். ஆனால் அவர் தனது இடம் மானிப்பாய் என்றுதான் கூறுவார். “ஆயுத எழுத்து” என்ற புத்தகம் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார். தான் 13 பேரை மண்டையில் போட்டதாகவும் அதில் ஒருவர் தனது நெருங்கிய நண்பர் என்று பெருமையாகக் கூறுகிறார். இவர் கொலை செய்த நெருங்கிய நண்பர் யார் என்று விசாரித்துப் பார்த்ததில் இவர் மரண தண்டனை கொடுத்த அந்த மனிதர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த திரு வினோதன் அவர்கள்.வினோதனைக் கொன்றது புத்தூரைச் சேர்ந்த புலி உறுப்பினர் என்று தனக்குத் தெரிந்தவர்களுக்குச் சொல்லிவருகிறார். ஆனால் இவருக்கு நெருங்கியவர்கள் இவர்தான் வினோதனைக் கொன்றவர் என்று உறுதியாகக் கூறுகிறார்கள். ஆனால் தான் நெருங்கிய நண்பனைக் கொன்றேன் குறிப்பிடும் இவர் வினோதனைத்தான் தான் கொன்றேன் என்று சொல்ல முடியாததற்குக் காரணம் இருக்கிறது. வினோதனின் ஆதரவாளர்கள் பலர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். சிறிலங்கா சுதந்திரக்கட்சியில் செல்வாக்கான ஒரு மனிதரைத் தான் கொன்றேன் என்று சொன்னால் இவர் இலங்கைக்கு நாடு கடத்தப்படலாம். வினோதனுக்கு நெருக்கமானவர்கள் இவரைச் சும்ம விடமாட்டார்கள்.
வினோதன் மிகவும் அரசியல் செல்வாக்கு உள்ளவர். ஒரு நல்ல மனிதர். அவரால் நன்மையடைந்த தமிழர்கள் பலர். சண்டிலிப்பாயைச் சேர்ந்த வினோதன் மிகவும் வசதியானவர். சாத்திரி என்கிற கௌரிபாலின் குடும்பம் வினோதனின் காணியில் குடியிருந்தார்கள். வினோதன் அவர்களுக்கு சாத்திரி மிகவும் நெருக்கமானவர் என்பதால் வினோதனுக்கு மரணதண்டனையை நிறைவேற்ற சாத்திரியால் மட்டுமே முடியும். காரணம் அரசாங்கத்தில் மிகவும் செல்வாக்கு மிக்க வினோதனை அவருக்கு நெருக்கமானவர்களால் மட்டும்தான் நெருங்க முடியும். அண்ணனைக் கொண்டு தம்பியைக் கொல்லுதல் தம்பியைக் கொண்டு அண்ணனைக் கொல்லுதல் புலிப்பயங்கரவாதிகளுக்கு இலகுவான விடயம்.
வினோதனுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்து. சாத்திரி கொழும்பில் வினோதனின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்தார். வினோதனுக்கு தன்மீது நம்பிக்கை ஏற்படும் விதத்தில் நடந்து கொண்டார். ஒருநாள் சாத்திரி வினோதனிடம் பாதுகாப்புக்கு நிற்கும் பொலிசார் தன்னை ஒவ்வொரு தடவையும் சோதனை செய்து துன்புறுத்துவதாகக் கூறினார். இதனால் வினோதன் தன்னுடைய பாதுகாவலர்களிடம் சாத்திரியைச் சோதனையிட வேண்டாமென்று உத்தரவிட்டார். சந்தர்ப்பம் பார்த்திருந்த சாத்திரி துப்பாக்கியைக் கொண்டுவந்து வினோதனைச் சுட்டுக் கொன்றிருக்கிறார். வினோதனின் குடும்பத்தினர் இந்தியாவில் இருந்ததனால் சாத்திரியால் வினோதனைக் கொல்ல முடிந்தது.
சாத்திரி இன்று ஞானம் பெற்றவராக புலிகளின் தவறுகளை எழுதிக்கொண்டிருக்கிறார். ஆயுத எழுத்து இவர் எழுதிய புத்தம் பல நாடுகளில் அந்தப் புத்தகத்தை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். ஆயுத மோகத்தால் புலிகள் இயக்கத்தில் இணைந்தவர்தான் சாத்திரி. மற்ற இயக்கங்களுக்கு இணையச் சென்றபோது அவர்கள் இவருக்கு ஆயுதம் கொடுக்கவில்லையாம். அரசியல் படிக்கும்படி புத்தகம் ஒன்றைக் கொடுத்தார்களாம். ஆனால் புலிகளிடம் சென்றபோது அவர்கள் உடனேயே இவருக்கு துப்பாக்கியைக் கையில் கொடுத்தார்களாம். இப்போது சாத்திரி ஆயுதத்தைப் போட்டுவிட்டு போதி மரத்து ஞானியாக புத்தகம் எழுதிக்கொண்டிருக்கிறார்.
(சடகோபன்)
(Salasalappu)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக