நம்பிக்கைத் துரோகம், ஏமாற்று, மோசடி என்பவை இன்றைய அரசியலில் அடிப்படை பாலர்பாடமாகி விட்டன. நம்பிக்கை மோசடியும், ஏமாற்றுதலும் மனிதனோடு பிறந்த இரட்டைகள் என்று சொல்லலாம். சரித்திரத்தின் பக்கங்களைப் புரட்டினால் நம்பிக்கைத் துரோகம் பற்றிய சம்பவங்கள் ஏராளமாகக் குவிந்துகிடக்கின்றன.
கைகேயி: அயோத்தி நகரமே ராமர் பட்டாபிஷேகத்துக்காகக் காத்திருந்தபோது, கூனியின் சூழ்ச்சியால் ராமனைக் காட்டுக்கு அனுப்பித் தன் மகன் பரதன் நாடாள ஏற்பாடு செய்தாள் கைகேயி. அவள் எண்ணம் போல் பரதன் நாடாளவில்லை. ஆனால், இராமாயணம் என்ற காவியத்துக்கு அவளது சூழ்ச்சி வித்தானது.
புரூட்டஸ்: உலகத்தின் அழியாப் புகழ் பெற்ற சக்கரவர்த்திகளில் ஒருவர் ஜூலியஸ் சீசர். தாயின் வயிற்றைக் கிழித்து முதலில் பிறந்த மகன் என்பதால் இன்றைக்கு அது போன்ற அறுவைச் சிகிச்சைக்கு சிசேரியன் என்று பெயர் வந்துள்ளது. தன் வாள் வலிமையால் கிரேக்கம் தொடங்கி எகிப்து வரை தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்து எகிப்து அழகி கிளியோபாட்ராவை தன்வயமாக்கியவர். சீசரின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத செனட்டர்கள் அவருக்கெதிராக ஒன்று திரண்டனர்.
அவருடைய நம்பிக்கைக்குரிய புரூட்டஸின் மனதைக் கலைத்து, செனட் படிகளில் ஏறிக் கொண்டிருந்த சீசரை கொலைவெறியுடன் தாக்கினார்கள். அதிர்ந்த சீசர் திரும்பும்போது பின்னால் இருந்த புரூட்டஸ், சீசரின் முதுகில் குத்தினான். நீயுமா புரூட்டஸ் என்ற வேதனை வார்த்தைகளை உதிர்த்தபடி சீசரின் உயிர் பிரிந்தது. உலகில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் துரோகம் என இதை சொல்லலாம்.
ஜூதாஸ்: உலகின் தலையெழுத்தை மாற்றி எழுதிய ஒருவர் தேவகுமாரன் என்று போற்றப்படும் இயேசு. இவரின் முக்கியமாக இருந்த 12 சீடர்களில் ஒருவராக இருந்தும் சில வெள்ளிக் காசுகளுக்கு தன்னுடைய குருவையே யூதர்களுக்கு காட்டிக் கொடுத்த சீடன் ஜூதாஸின் துரோகம் சிலுவையில் ரத்தமாக வடிந்தது.
மீர் ஜாபர்: ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையைக் குலைத்துப் பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயர் வெற்றிகரமாக செயல்படுத்த ஆரம்பித்த இடம் பிளாசி போராகும். நவாபின் சேனாதிபதி மீர் ஜாபருக்கு வங்காளத்தின் ஆட்சி என்ற கனவை விதைத்து 1757இல் பிளாசி போருக்கு அவர் படையுடன் வராமல் தடுத்து ஆங்கிலேயர் வங்காளத்தைக் கைப்பற்றி இந்தியாவில் தங்கள் ஆட்சியை பலமாகப் பதித்தனர்.
நாகம்ம நாயக்கர்: பாண்டியர்களுக்குள் மதுரையில் நடந்த சகோதர யுத்தத்தின்போது, விஜயநகரப் படை சேனாதிபதி நாகம்ம நாயக்கர் தலைமையில் மதுரை வந்து கலகத்தை அடக்கியது.
ஒப்புக்கொண்டபடி பாண்டியர்களிடம் ஆட்சியை அளிக்காமல் தன்னையே அரசராக அறிவித்துக் கொண்டார் நாகம்ம நாயக்கர். இந்தத் துரோகத்தை யார் அடக்குவீர்களென கிருஷ்ணதேவராயர் அரசவையில் கர்ஜித்தபோது நாகம்ம நாயக்கரின் கோபத்துக்கு பயந்து அனைவரும் பின் வாங்கினர்.
நான் சென்று துரோகியைக் கைது செய்து வருகிறேன் என முழங்கியவர் விஸ்வநாத நாயக்கர். எந்த மகனுக்காக ஆட்சி அதிகாரம் விரும்பினாரோ அந்த மகன் விஸ்வநாதனிடமே கைதியாகி விஜயநகர அரசவையில் நிறுத்தப்பட்டார் நாகம்ம நாயக்கர். என்ன பரிசு வேண்டுமென்றார் மன்னர். மன்னரின் சேவகனாகி தந்தையைக் கைது செய்த விஸ்வநாதன், மகனாக தந்தையின் விடுதலையை யாசித்தார். மகிழ்ந்த மன்னன், மதுரையை ஆளும் உரிமையை விஸ்வநாதனுக்குத் தந்தார். தமிழ்நாட்டில் தெலுங்கர் ஆட்சி வந்த கதை இது.
பாஸ்கர ராவ்: எம்.ஜி.ஆரின் வழியில், தெலுங்கர்களின் பெருமையை மீட்க என்.டி.ராம ராவ் அரசியல் அவதாரம் எடுக்க 1983இல் ஆந்திரத்தில் ஆட்சி தெலுங்கு தேசம் கட்சிக்கு கைமாறியது. என்.டி.ஆர். அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் பாஸ்கர ராவ். முதல்வர் என்.டி.ஆர். இதய சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது ராவ் கலகக் கொடியை உயர்த்திப் பிடித்தார். இந்த நம்பிக்கைத் துரோகத்துக்குப் பரிசாக ஆந்திரத்தின் முதல்வராக அவர் ஆக்கப்பட்டார். வெகுண்டெழுந்த ராம ராவ் தர்ம யுத்தம் என்ற பெயரில் ஊர் ஊராகச் சென்று மக்களைத் திரட்டிப் போராடியதில் 31 நாட்களில் பதவியை இழந்தார் பாஸ்கர ராவ்.
மாஞ்சி: ஜிதன்ராம் மாஞ்சி நம்பிக்கைத் துரோகத்தின் சமீபத்திய வரவு. மக்களவைத் தேர்தலில் மோடி அலையில் பிகாரில் தோல்வியைச் சந்தித்தது ஐக்கிய ஜனதா தளம். உணர்ச்சிவசப்பட்ட நிதீஷ் குமார் முதல்வர் பதவியை இராஜினாமா செய்து, தன் கைப்பாவையாக இருப்பார் என்ற நம்பிக்கையில் ஜிதன்ராம் மாஞ்சியை முதல்வராக்கினார்.
தீட்டிய மரத்தை பதம் பார்ப்பதும், வளர்த்த கடா மார்பில் பாய்வதும் அரசியலில் சகஜம்தானே. பாஸ்கர ராவின் கதையை மறந்த மாஞ்சி தன் கொடியை உயர்த்திப் பிடித்தார். வெகுண்டெழுந்த நிதீஷ் குமார் கனலில் மாஞ்சி சாம்பலானார். பதவி இழந்தார்.
அதெல்லாம் சரி, இதற்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு என யோசிக்கிறீர்களா? இங்குதான் பன்னீர்செல்வம் தனித்து நிற்கிறார். பெரியகுளத்தில் பன்னீர்செல்வம் ஒரு டீக்கடை உரிமையாளராகவும், அ.தி.மு.க.வின் உறுப்பினராகவும் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். நகராட்சி வார்டு உறுப்பினர், நகர்மன்றத் தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் என வாழ்க்கையில் ஏறுமுகம்தான்.
அ.தி.மு.க.வுக்கும், ஜெயலலிதாவுக்கும் 2001இல் டான்சி வழக்கில் சோதனை வந்தது. தேர்தலில் நிற்க தடைபோட்டது சட்டம். ஜெயலலிதா தேர்தலைச் சந்திக்காதபோதும் அவரது கட்சி ஆட்சியைப் பிடித்தது. அமைச்சர் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்க வேண்டியதில்லை என்ற அடிப்படையில் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாவிட்டாலும் பெரும்பான்மை அடிப்படையில் ஜெயலலிதா முதல்வர் உரிமையைக் கோரினார்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியாக இருந்த ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்பேரவை உறுப்பினராகவே தகுதியில்லாத ஒருவர் முதல்வராக முடியுமா என தி.மு.க. நீதிமன்றத்துக்குப் போனது. நீதிமன்ற உத்தரவின்படி ஜெயலலிதா பதவியை இழந்தார்.
இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என அலாகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடனடியாக இந்திரா காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தீர்ப்புக்குத் தடை வாங்கினார். உச்சநீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ண ஐயர், இந்திரா காந்திக்கு ஒரு நிபந்தனையுடன் அலாகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தார். அதன்படி, பிரதமர் என்ற முறையில் அவர் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், பேசலாம். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தீர்மானங்களில் வாக்களிக்க முடியாது. ஊதியம் பெற முடியாது. அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத நபர் பிரதமராக இருக்க முடியுமா என ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை. இந்திரா காந்தி பிரதமர் பதவியை வேறு யாருக்கும் வழங்கவில்லை.
அந்தக் காலகட்டத்தில் மக்கள் தொகை நிபுணரான டாக்டர் சந்திரசேகர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிந்த பின்பும் கூட 6 மாத காலத்துக்கு அமைச்சராக நீடித்தார்.
ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் கூட அவரது தைரியத்தைப் பாராட்டத் தவறுவதில்லை. சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருந்தும், பதவியிழந்த ஜெயலலிதா கலங்கவில்லை. தனக்குப் பதிலாக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற நிலை ஏற்பட்டபோது அவர் தேர்ந்தெடுத்த நபர் ஓ.பன்னீர்செல்வம்.
அமைச்சர் பன்னீர்செல்வம், முதல்வர் பன்னீர்செல்வமாக மாறினார். பின்னாளில் டான்சி வழக்கில் நிலத்தை அரசுக்கு ஜெயலலிதா திரும்பக் கொடுத்துவிட்டால் அவரை விடுதலை செய்கிறோம் என உச்சநீதிமன்றம் சொல்ல, சொத்தை இழந்து மீண்டும் முதல்வர் ஆனார்
ஜெயலலிதா. மறு பேச்சில்லாமல் பதவி விலகினார் ஓ.பன்னீர்செல்வம்.
வரலாற்றைப் பற்றி அடிக்கடி சொல்லப்படும் ஒரு வாசகம் வரலாறு திரும்பும். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் வரலாறு திரும்பியது. நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை மட்டும் இழக்கவில்லை, முதல்வர் பதவியையும் சேர்த்து இழந்தார். தமிழக முதல்வராக இரண்டாம் முறை பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்.
பதவியேற்ற முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வர் அறைக்குப் போகவில்லை, முதல்வர் நாற்காலியில் உட்காரவில்லை. வனவாசம் போன ராமனின் பாதுகையை வைத்து அரசாண்ட பரதனைப் போல் அம்மாவின் பெயரில் ஆட்சி நடத்தினார். அடக்கி வாசித்தார்.
பந்தா இல்லாத ஆட்சி, பேனர் இல்லாத ஆட்சி. ஆட்சி எப்படி நடந்தது என்பது பிரச்சினையில்லை. ஆட்சி நடந்தது என்பதுதான் நிஜம். சட்டப்பேரவை இருமுறை கூடியது. முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தைப் பதற வைத்த ரத்தத்தின் ரத்தங்கள் இருந்தனர். ஆனால், பன்னீர்செல்வம் தனது தலைமையைப் பதற வைக்கவில்லை என்பது நிஜம்.
வந்தது நீதியரசர் குமாரசாமியின் தீர்ப்பு, காட்சி மாறியது. ஆட்சி மாறியது. மீண்டும் முதல்வர் ஆனார் ஜெயலலிதா. பதவியேற்கும்போது அழுதுகொண்டே பதவியேற்ற முதல்வரும், சிரித்துக் கொண்டே பதவி விலகிய முதல்வரும் பன்னீர்செல்வம்தான் என்று படத்துடன் கட்செவி அஞ்சலில் செய்தி வந்து விழுந்தது.
அரசியலில் விசுவாசம் மட்டுமே அளவுகோலாக ஆகிவிட்டது. அதில் உச்சத்தைத் தொட்டவர் பன்னீர்செல்வம். பன்னீர்செல்வத்தைப் பற்றி கருத்து சொல்ல ஜெயலலிதா தவிர யாருக்கு அதிகாரம் உண்டு? டான்சி வழக்குக்குப் பிறகு பதவியேற்ற ஜெயலலிதா அ.தி.மு.க. கூட்டத்தில் சொன்னார்: பன்னீர்செல்வத்தைப் போன்ற தொண்டரை நான் பெற்றது என் பாக்கியம் என்று. அது தமிழ்நாட்டின் பாக்கியமா என்பது அவரவர் பார்வையைப் பொருத்தது.
துரோகத்துக்குப் பல நபர்களைப் பட்டியலிடலாம். ஆனால், அரசியலில் விசுவாசம் என்பதற்குப் பட்டியலிட்டால் முதல் பெயர் பன்னீர்செல்வமாகத்தான் இருக்கும்.
கைகேயி: அயோத்தி நகரமே ராமர் பட்டாபிஷேகத்துக்காகக் காத்திருந்தபோது, கூனியின் சூழ்ச்சியால் ராமனைக் காட்டுக்கு அனுப்பித் தன் மகன் பரதன் நாடாள ஏற்பாடு செய்தாள் கைகேயி. அவள் எண்ணம் போல் பரதன் நாடாளவில்லை. ஆனால், இராமாயணம் என்ற காவியத்துக்கு அவளது சூழ்ச்சி வித்தானது.
புரூட்டஸ்: உலகத்தின் அழியாப் புகழ் பெற்ற சக்கரவர்த்திகளில் ஒருவர் ஜூலியஸ் சீசர். தாயின் வயிற்றைக் கிழித்து முதலில் பிறந்த மகன் என்பதால் இன்றைக்கு அது போன்ற அறுவைச் சிகிச்சைக்கு சிசேரியன் என்று பெயர் வந்துள்ளது. தன் வாள் வலிமையால் கிரேக்கம் தொடங்கி எகிப்து வரை தனது சாம்ராஜ்யத்தை விஸ்தரித்து எகிப்து அழகி கிளியோபாட்ராவை தன்வயமாக்கியவர். சீசரின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாத செனட்டர்கள் அவருக்கெதிராக ஒன்று திரண்டனர்.
அவருடைய நம்பிக்கைக்குரிய புரூட்டஸின் மனதைக் கலைத்து, செனட் படிகளில் ஏறிக் கொண்டிருந்த சீசரை கொலைவெறியுடன் தாக்கினார்கள். அதிர்ந்த சீசர் திரும்பும்போது பின்னால் இருந்த புரூட்டஸ், சீசரின் முதுகில் குத்தினான். நீயுமா புரூட்டஸ் என்ற வேதனை வார்த்தைகளை உதிர்த்தபடி சீசரின் உயிர் பிரிந்தது. உலகில் கிறிஸ்து பிறப்பதற்கு முன் வரலாற்றில் பதிவு செய்யப்பட்ட முதல் துரோகம் என இதை சொல்லலாம்.
ஜூதாஸ்: உலகின் தலையெழுத்தை மாற்றி எழுதிய ஒருவர் தேவகுமாரன் என்று போற்றப்படும் இயேசு. இவரின் முக்கியமாக இருந்த 12 சீடர்களில் ஒருவராக இருந்தும் சில வெள்ளிக் காசுகளுக்கு தன்னுடைய குருவையே யூதர்களுக்கு காட்டிக் கொடுத்த சீடன் ஜூதாஸின் துரோகம் சிலுவையில் ரத்தமாக வடிந்தது.
மீர் ஜாபர்: ஹிந்து, முஸ்லிம் ஒற்றுமையைக் குலைத்துப் பிரித்தாளும் கொள்கையை ஆங்கிலேயர் வெற்றிகரமாக செயல்படுத்த ஆரம்பித்த இடம் பிளாசி போராகும். நவாபின் சேனாதிபதி மீர் ஜாபருக்கு வங்காளத்தின் ஆட்சி என்ற கனவை விதைத்து 1757இல் பிளாசி போருக்கு அவர் படையுடன் வராமல் தடுத்து ஆங்கிலேயர் வங்காளத்தைக் கைப்பற்றி இந்தியாவில் தங்கள் ஆட்சியை பலமாகப் பதித்தனர்.
நாகம்ம நாயக்கர்: பாண்டியர்களுக்குள் மதுரையில் நடந்த சகோதர யுத்தத்தின்போது, விஜயநகரப் படை சேனாதிபதி நாகம்ம நாயக்கர் தலைமையில் மதுரை வந்து கலகத்தை அடக்கியது.
ஒப்புக்கொண்டபடி பாண்டியர்களிடம் ஆட்சியை அளிக்காமல் தன்னையே அரசராக அறிவித்துக் கொண்டார் நாகம்ம நாயக்கர். இந்தத் துரோகத்தை யார் அடக்குவீர்களென கிருஷ்ணதேவராயர் அரசவையில் கர்ஜித்தபோது நாகம்ம நாயக்கரின் கோபத்துக்கு பயந்து அனைவரும் பின் வாங்கினர்.
நான் சென்று துரோகியைக் கைது செய்து வருகிறேன் என முழங்கியவர் விஸ்வநாத நாயக்கர். எந்த மகனுக்காக ஆட்சி அதிகாரம் விரும்பினாரோ அந்த மகன் விஸ்வநாதனிடமே கைதியாகி விஜயநகர அரசவையில் நிறுத்தப்பட்டார் நாகம்ம நாயக்கர். என்ன பரிசு வேண்டுமென்றார் மன்னர். மன்னரின் சேவகனாகி தந்தையைக் கைது செய்த விஸ்வநாதன், மகனாக தந்தையின் விடுதலையை யாசித்தார். மகிழ்ந்த மன்னன், மதுரையை ஆளும் உரிமையை விஸ்வநாதனுக்குத் தந்தார். தமிழ்நாட்டில் தெலுங்கர் ஆட்சி வந்த கதை இது.
பாஸ்கர ராவ்: எம்.ஜி.ஆரின் வழியில், தெலுங்கர்களின் பெருமையை மீட்க என்.டி.ராம ராவ் அரசியல் அவதாரம் எடுக்க 1983இல் ஆந்திரத்தில் ஆட்சி தெலுங்கு தேசம் கட்சிக்கு கைமாறியது. என்.டி.ஆர். அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருந்தவர் பாஸ்கர ராவ். முதல்வர் என்.டி.ஆர். இதய சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றபோது ராவ் கலகக் கொடியை உயர்த்திப் பிடித்தார். இந்த நம்பிக்கைத் துரோகத்துக்குப் பரிசாக ஆந்திரத்தின் முதல்வராக அவர் ஆக்கப்பட்டார். வெகுண்டெழுந்த ராம ராவ் தர்ம யுத்தம் என்ற பெயரில் ஊர் ஊராகச் சென்று மக்களைத் திரட்டிப் போராடியதில் 31 நாட்களில் பதவியை இழந்தார் பாஸ்கர ராவ்.
மாஞ்சி: ஜிதன்ராம் மாஞ்சி நம்பிக்கைத் துரோகத்தின் சமீபத்திய வரவு. மக்களவைத் தேர்தலில் மோடி அலையில் பிகாரில் தோல்வியைச் சந்தித்தது ஐக்கிய ஜனதா தளம். உணர்ச்சிவசப்பட்ட நிதீஷ் குமார் முதல்வர் பதவியை இராஜினாமா செய்து, தன் கைப்பாவையாக இருப்பார் என்ற நம்பிக்கையில் ஜிதன்ராம் மாஞ்சியை முதல்வராக்கினார்.
தீட்டிய மரத்தை பதம் பார்ப்பதும், வளர்த்த கடா மார்பில் பாய்வதும் அரசியலில் சகஜம்தானே. பாஸ்கர ராவின் கதையை மறந்த மாஞ்சி தன் கொடியை உயர்த்திப் பிடித்தார். வெகுண்டெழுந்த நிதீஷ் குமார் கனலில் மாஞ்சி சாம்பலானார். பதவி இழந்தார்.
அதெல்லாம் சரி, இதற்கும் தலைப்புக்கும் என்ன தொடர்பு என யோசிக்கிறீர்களா? இங்குதான் பன்னீர்செல்வம் தனித்து நிற்கிறார். பெரியகுளத்தில் பன்னீர்செல்வம் ஒரு டீக்கடை உரிமையாளராகவும், அ.தி.மு.க.வின் உறுப்பினராகவும் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். நகராட்சி வார்டு உறுப்பினர், நகர்மன்றத் தலைவர், சட்டப்பேரவை உறுப்பினர், அமைச்சர் என வாழ்க்கையில் ஏறுமுகம்தான்.
அ.தி.மு.க.வுக்கும், ஜெயலலிதாவுக்கும் 2001இல் டான்சி வழக்கில் சோதனை வந்தது. தேர்தலில் நிற்க தடைபோட்டது சட்டம். ஜெயலலிதா தேர்தலைச் சந்திக்காதபோதும் அவரது கட்சி ஆட்சியைப் பிடித்தது. அமைச்சர் சட்டப்பேரவை உறுப்பினராக இருக்க வேண்டியதில்லை என்ற அடிப்படையில் சட்டப்பேரவை உறுப்பினராக இல்லாவிட்டாலும் பெரும்பான்மை அடிப்படையில் ஜெயலலிதா முதல்வர் உரிமையைக் கோரினார்.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதியாக இருந்த ஆளுநர் பாத்திமா பீவி, ஜெயலலிதாவுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். சட்டப்பேரவை உறுப்பினராகவே தகுதியில்லாத ஒருவர் முதல்வராக முடியுமா என தி.மு.க. நீதிமன்றத்துக்குப் போனது. நீதிமன்ற உத்தரவின்படி ஜெயலலிதா பதவியை இழந்தார்.
இந்திரா காந்தியின் தேர்தல் செல்லாது என அலாகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. உடனடியாக இந்திரா காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தீர்ப்புக்குத் தடை வாங்கினார். உச்சநீதிமன்ற விடுமுறைக் கால நீதிபதியாக இருந்த வி.ஆர். கிருஷ்ண ஐயர், இந்திரா காந்திக்கு ஒரு நிபந்தனையுடன் அலாகாபாத் நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு இடைக்காலத் தடை விதித்தார். அதன்படி, பிரதமர் என்ற முறையில் அவர் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், பேசலாம். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் என்ற முறையில் தீர்மானங்களில் வாக்களிக்க முடியாது. ஊதியம் பெற முடியாது. அப்போது பாராளுமன்ற உறுப்பினராக இல்லாத நபர் பிரதமராக இருக்க முடியுமா என ஒருவரும் கேள்வி எழுப்பவில்லை. இந்திரா காந்தி பிரதமர் பதவியை வேறு யாருக்கும் வழங்கவில்லை.
அந்தக் காலகட்டத்தில் மக்கள் தொகை நிபுணரான டாக்டர் சந்திரசேகர் மாநிலங்களவை உறுப்பினர் பதவி முடிந்த பின்பும் கூட 6 மாத காலத்துக்கு அமைச்சராக நீடித்தார்.
ஜெயலலிதாவின் அரசியல் எதிரிகள் கூட அவரது தைரியத்தைப் பாராட்டத் தவறுவதில்லை. சட்டப்பேரவையில் பெரும்பான்மை இருந்தும், பதவியிழந்த ஜெயலலிதா கலங்கவில்லை. தனக்குப் பதிலாக சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக ஒருவரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென்ற நிலை ஏற்பட்டபோது அவர் தேர்ந்தெடுத்த நபர் ஓ.பன்னீர்செல்வம்.
அமைச்சர் பன்னீர்செல்வம், முதல்வர் பன்னீர்செல்வமாக மாறினார். பின்னாளில் டான்சி வழக்கில் நிலத்தை அரசுக்கு ஜெயலலிதா திரும்பக் கொடுத்துவிட்டால் அவரை விடுதலை செய்கிறோம் என உச்சநீதிமன்றம் சொல்ல, சொத்தை இழந்து மீண்டும் முதல்வர் ஆனார்
ஜெயலலிதா. மறு பேச்சில்லாமல் பதவி விலகினார் ஓ.பன்னீர்செல்வம்.
வரலாற்றைப் பற்றி அடிக்கடி சொல்லப்படும் ஒரு வாசகம் வரலாறு திரும்பும். ஜெயலலிதாவின் வாழ்க்கையில் வரலாறு திரும்பியது. நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பில் ஜெயலலிதா சட்டப்பேரவை உறுப்பினர் பதவியை மட்டும் இழக்கவில்லை, முதல்வர் பதவியையும் சேர்த்து இழந்தார். தமிழக முதல்வராக இரண்டாம் முறை பதவியேற்றார் ஓ.பன்னீர்செல்வம்.
பதவியேற்ற முதல்வர் பன்னீர்செல்வம் முதல்வர் அறைக்குப் போகவில்லை, முதல்வர் நாற்காலியில் உட்காரவில்லை. வனவாசம் போன ராமனின் பாதுகையை வைத்து அரசாண்ட பரதனைப் போல் அம்மாவின் பெயரில் ஆட்சி நடத்தினார். அடக்கி வாசித்தார்.
பந்தா இல்லாத ஆட்சி, பேனர் இல்லாத ஆட்சி. ஆட்சி எப்படி நடந்தது என்பது பிரச்சினையில்லை. ஆட்சி நடந்தது என்பதுதான் நிஜம். சட்டப்பேரவை இருமுறை கூடியது. முதல்வராக இருந்த பன்னீர்செல்வத்தைப் பதற வைத்த ரத்தத்தின் ரத்தங்கள் இருந்தனர். ஆனால், பன்னீர்செல்வம் தனது தலைமையைப் பதற வைக்கவில்லை என்பது நிஜம்.
வந்தது நீதியரசர் குமாரசாமியின் தீர்ப்பு, காட்சி மாறியது. ஆட்சி மாறியது. மீண்டும் முதல்வர் ஆனார் ஜெயலலிதா. பதவியேற்கும்போது அழுதுகொண்டே பதவியேற்ற முதல்வரும், சிரித்துக் கொண்டே பதவி விலகிய முதல்வரும் பன்னீர்செல்வம்தான் என்று படத்துடன் கட்செவி அஞ்சலில் செய்தி வந்து விழுந்தது.
அரசியலில் விசுவாசம் மட்டுமே அளவுகோலாக ஆகிவிட்டது. அதில் உச்சத்தைத் தொட்டவர் பன்னீர்செல்வம். பன்னீர்செல்வத்தைப் பற்றி கருத்து சொல்ல ஜெயலலிதா தவிர யாருக்கு அதிகாரம் உண்டு? டான்சி வழக்குக்குப் பிறகு பதவியேற்ற ஜெயலலிதா அ.தி.மு.க. கூட்டத்தில் சொன்னார்: பன்னீர்செல்வத்தைப் போன்ற தொண்டரை நான் பெற்றது என் பாக்கியம் என்று. அது தமிழ்நாட்டின் பாக்கியமா என்பது அவரவர் பார்வையைப் பொருத்தது.
துரோகத்துக்குப் பல நபர்களைப் பட்டியலிடலாம். ஆனால், அரசியலில் விசுவாசம் என்பதற்குப் பட்டியலிட்டால் முதல் பெயர் பன்னீர்செல்வமாகத்தான் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக