image source: google
ஈராக்கிலும் லிபியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். அமைப்பினர் தற்போது லிபியாவில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். இந்த அக்கறைக்கு மூன்று காரணங்கள் உண்டு.
முதலாவது முஅம்மர் காடாஃபியின் கொலைக்குப் பின்னர் பல கூறுகளாகப் பிளவுபட்டிருக்கும் லிபியாவை கைப்பற்றுவது இலகு.
இரண்டாவது லிபியாவின் எரிபொருள் வளம். மூன்றாவது லிபியாவைக் கைப்பற்றினால் ஐ.எஸ். அமைப்பினரால் இலகுவாகத் தமது போராளிகளை ஐரோப்பாவிற்கு நகர்த்த முடியும்.
கடாஃபியின் கோட்டையில் ஐ.எஸ்.
முன்னாள் அதிபர் முஅம்மர் கடாஃபி யின் கோட்டையாகக் கருதப்பட்ட சேர்ட் நகரின் விமான நிலையத்தை ஐ.எஸ். என அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் மே மாதம் 29ஆம் திகதி வெள்ளிக் கிழமை கைப்பற்றினர்.
தலைநகர் திரிப்போலியில் ஆட்சியிலிருக்கும் பன்னாட்டு சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத மொஹமட் அல் ஷமியின் ஃபஜிர் லிபியாப் படையினர் ஐ.எஸ். படையினரின் தக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியா மல் ஓடினர்.
திரிப்போலியில் இருந்து 450 கிலோ மீற்றர் (280 மைல்கள்) தொலைவில் உள்ள சேர்ட் விமான நிலையத்துடன் ஒரு ஃபஜிர் லிபியப் படையினர் முகாமும் இருந்தது. படையினர் விமான நிலையத்திலிருந்து எல்லா உபகரணங்களையும் தம்முடன் கொண்டு சென்று விட்டனர்.
பாவனைக்கு உதவாத ஒரு விமானத்தை மட்டும் விட்டுவிட்டுச் சென்றனர். சேர்ட் நகரைக் கைப்பற்றிய ஐ.எஸ். அமைப்பி னர், லிபியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மிசுரட்டா நகரின் மீது தமது தாக்குதலைத் தீவிரப்படுத்தினர்.
லிபிய விடிவும் பெருமை நடவடிக்கையும்
கேர்ணல் முஅம்மர் கடாஃபி கொலை செய்யப் பட்ட பின்னர் லிபியாவில் உள்ள இனக் குழுமங்களிடையே மோதல்கள் தீவிரமாகின. தற்போது இரு பிரிவினர் லிபியாவின் எண்ணெய் வளங்களையும் மற்றும் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களையும் கைப்பற்றுவதில் போட்டி போடுகின்றனர்.
ஒரு பிரிவினர் திரிப்போலியிலிருந்து ஓர் அரசையும் மற்றப் பிரிவினர், டொப்ரக் நகரில் இருந்து ஓர் அரசையும் நடத்துகின்றனர். திரிப்போலியில் இருப்பவர்கள் தம்மை "லிபிய விடிவு" என அழைக்கின்றனர்.
இவர்களின் படையே ஃபஜிர் லிபியாப் படை. டொப்ராக்கில் இருப்பவர்கள் தம்மை "பெருமை நடவடிக்கை" என அழைக்கின் றனர். லிபிய விடிவினர் பெருமை நடவ டிக்கையினரை கடாஃபி ஆதரவாளர்கள் என்றும், பெருமை நடவடிக்கையினர் லிபிய விடிவினரை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்றும் அழைக்கின்றனர்.
கடாஃபியின் வீழ்ச்சிக்குப் பின்னர் தெரிவு செய்யப் பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மீண்டும் கடாஃபி ஆதரவாளர்கள்
டொப்ரக் நகரில் இருக்கும் "பெருமை நடவடிக்கை" அரசினர் முஅம்மர் கடாஃபியின் ஆட்சியில் உயர் பதவிகளில் இருந்தவர்களை மீண்டும் பதவியில் அமர்வதற்கான தடைகளை நீக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.
திரிப்போலியில் இருக்கும் அரசு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்குச் சார்பானது. இந்த அரசுக்கு துருக்கியும் கட்டாரும் ஆதரவு வழங்குகின்றன.
சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம், எகிப்து ஆகிய நாடுகள் டொப்ரக் நகரில் இருக்கும் "பெருமை நடவடிக்கை" அரசுக்கு ஆதரவு வழங்குகின்றன. சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதில் துருக்கியும் சவூதி அரேபியாவும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும், துருக்கியும் கட்டாரும் சிரியாவில் அல் அசாத்திற்குப் பின்னர் யார் அரசாள வேண்டும் என்பதில் சவூதி அரேபியாவின் கொள்கையுடன் முரண்படுகின்றன.
லிபிய அரபு வசந்தத்தின் போது கிளர்ந்து எழுந்த இளைஞர்கள் இப்போது யாருக்கு ஆதரவாகப் போராடுகிறோம், யாருக்கு எதிராகப் போராடுகின்றோம் என்பது தொடர்பாகக் குழப்ப நிலையில் உள்ளனர். முன்னாள் லிபிய அதிபர் கடாஃபியின் படையினர் அவரது மறைவிற்குப் பின்னர் லிபியாவிலும் எகிப்து போன்ற அயல் நாடுகளிலும் பதுங்கியிருந்தனர். அவர்கள் இப்போது ஐ.எஸ். அமைப்பினருடன் இணைந்து போராடுகின்றனர்.
சேர்ட் நகர் இப்போது கடாஃபியின் ஆட்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என மிஸ்ராட் நகரவாசிகள் நம்புகின்றனர்.
மே மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை பிரிகேட் -166 இன் படையினர் சேர்ட் நகரத்தின் மேற்குப் புறமாக உள்ள ஐ.எஸ். நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். ஞாயிறு காலைவரை சண்டை தொடர்ந்தது. ஐ.எஸ். போராளிகள்கார் வெடிகுண்டு மூலம் தற்கொலைத்தாக்குதல் நடத்தினர்.
பலப்பல இனக் குழுமங்கள் கொண்ட லிபியா
லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன.
இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாசார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது. இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன.
மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. முஅம்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது. இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது.
கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல்வாஹீர் ஆகிய இனக்குழுமங்கள் முக்கியமானவை. கடாஃபி யின் மனைவி வார்ஃல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். இதுதான் லிபியாவின் மிகப்பெரிய இனக்குழுமம். இதற்கு 54 உட்பிரிவுகள் இருக்கின்றன.
கடாஃபிக்கும் பின்னர் ஆட்சிப் போட்டி
கடாஃபிக்குப் பின்னரான ஆட்சிப் போட்டியில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்களும் இஸ்லாமிய மதவாதிகளும் கடுமையாக முரண்பட்டனர். ஈரான், மதவாதிகளிற்கு உதவியது. ஈரானின் நீண்டகாலக் கனவில் முக்கியமானது லிபியா, எகிப்து ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தில் கீழ் கொண்டுவருவதே. சவூதி அரேபியாவின் சில பிரதேசங்களை கைப்பற்றி தனது பொருளாதார வலிமையையும் மேம்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.
ஈரான், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற இஸ்லாமிய விடுதலைப் போராளி அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர் பைப் பேணிவருகிறது. அவர்களுக்கான நிதி மற்றும் படைக்கலன்கள் உதவிகளை வழங்கி வருகிறது. இவை இரண்டும் ஷியா முஸ்லிம்களின் அமைப்பாகும்.
ஆனால், அல்கைதா ஒரு ஸுன்னி முஸ்லிம்களின் அமைப்பாகும். அல்கைதாவிற் கும் ஈரானுக்கும் பகைமை எனக் கருதப்படுகிறது. ஆனால் அல்கைதாவிற்குத் தேவையான நிதி கட்டாரிலிருந்தும் குவைத்தில் இருந்தும் ஈரானுடாகவே வருகிறது. இதற்காக அல்கைதா ஈரானில் எந்தவித தீவிரவாத நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்ற உடன்பாடு இருக்கிறது. ஈரானுக்கும் அல்கைதாவிற்கும் பொதுவான எதிரி அமெரிக்கா.
இரண்டும் இணைந்து செயற்படுவதற்கான ஆதாரங்கள் தற்போது சிறிது சிறிதாக வெளிவருகின்றன. ஈரான் இப்போது எகிப்தில் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. மொஹமட் முர்சியின் ஆதரவாளர்களுக்கு ஈரான் உதவுவதாக நம்பப்படுகிறது. அத்துடன் அல்கைதாவும் எகிப்தில் ஊடுருவி உள்ளது. லிபியாவிலும் இதே நிலைமைதான். ஈரானும் அல்கைதாவும் அங்கு தங்கள் கைவரிசைகளைக் காட்டி வருகின்றன.
சிரியாவில் அல்கைதாவும் ஈரானும் எதிர் எதிர் அணிகளில் நின்று மோதுவது உண்மைதான். ஈரான் – லிபியா, எகிப்து, எதியோப்பியா ஆகிய மூன்று நாடுகளும் தனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்கவேண் டும் எனத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. ஈரானில் பயிற்சி பெற்ற அல்கைதாவினரே எகிப்தில் ஊடுருவியிருப்பதாக எகிப்தியக் காவற்றுறை கண்டறிந்துள்ளது.
2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நைஜீரியாவில் ஈரானில் தயாரான படைக்கலன்களை அல்கைதாவினர் கடத்திச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. யேமனிலும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைச் செலுத்திகளை அல்கைதா பாவிப்பது கண்டறியப்பட்டது. இவை யாவும் ஈரானிற்கும் அல்கைதாவிற்கும் இடையில் இருக்கும் ஒத்துழைப்பை உறுதி செய்கின்றன.
பிராந்திய முரண்பாடு
லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சைரெனைக்கா (Cyrenaica), லிபியா வில் இருந்து தன்னாட்சி பெற முயல்கின்றது. லிபியாவின் உயர்தர எண்ணெய் வளத்தில் எண்பது விழுக்காடு சைரெனைக்கா வில் இருந்து கிடைக்கின்றது.
லிபிய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் தலைநகர் திரிப்போலியிலும் ஃபெசான் மாகாணத்திலும் வசிக்கின்றனர். சைரெனைக்கா தனிநாடாகப் பிரிந்தால் அங்கிருக்கும் உலகிலேயே ஐந்தாவது பெரிய எண்ணெய் வளம், அதை உலகில் உள்ள மிகவும் செல்வந்த நாடுக ளில் ஒன்றாக ஆக்கிவிடுவதுடன், எஞ்சிய லிபியாவை உலகிலேயே வறிய நாடாக மாற்றிவிடும்.
சைரெனைக்கா தனக்கென ஒரு மத்திய வங்கியையும் உருவாக்கி உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும்படி பரப்புரை செய்ய ஒரு கனடிய நிறுவனத்தின் சேவையையும் பெற்றுள்ளது. சைரெனைக்கா எண்ணெயை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க லிபிய அரசு சைரெனைக்காவின் மீது ஒரு கடல் முற்றுகையைச் செய்துள்ளது.
கடாஃபியின் மகன்கள்
கடாஃபியின் ஆட்சிக் கவிழ்ப்பின் பின் னர் கைது செய்யப்பட்ட அவரது 40 வயதான கால்பந்தாட்ட வீரர் சாதி கடாஃபி மற்றும் சயிஃப் கடாபி மீதான வழக்கு விசாரணையின் போது அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமை பலரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதிக டாஃபி உட்பட 39 பேர் முஅம்மர் கடாஃபி யின் ஆட்சியில் முக்கிய பதவியில் இருந் தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் மட்டுமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முஅம்மர் கடாஃபியின் மகன்களையும் உதவியாளர்களையும் எப்படி புதிய அரசு நீதி விசாரணைக்கு உட்படுத்தப் போகிறார் கள் என்பது, புதிய அரசு எப்படி மக்களா ட்சி முறைமையை மதித்து நடக்கும் என்ப தற்கான அளவுகோலாகக் கருதப்படுகின் றது. இவர்கள் மீதான விசாரணை பகிரங் கமாக நடக்கும் என அறிவித்திருந்தது ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை.
லிபியாவின் படைத்துறைக் காவல் அதி பரும் (head of Libya's military police) சட்டத் துறை தலைமை வழக்குத் தொடுநரும் இந்திய மருத்துவர் ஒருவரும் இப்படிப் பலதரப்பட்டவர்களும் கொல்லப்படுகின் றார்கள். கடாஃபிக்குப் பிந்திய லிபியாவில் எவரும் பாதுகாப்பாக இல்லை.
வேல் தர்மா
ஈராக்கிலும் லிபியாவிலும் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றியுள்ள ஐ.எஸ். அமைப்பினர் தற்போது லிபியாவில் பெரு நிலப்பரப்பைக் கைப்பற்றுவதில் அதிக அக்கறை காட்டுகின்றனர். இந்த அக்கறைக்கு மூன்று காரணங்கள் உண்டு.
முதலாவது முஅம்மர் காடாஃபியின் கொலைக்குப் பின்னர் பல கூறுகளாகப் பிளவுபட்டிருக்கும் லிபியாவை கைப்பற்றுவது இலகு.
இரண்டாவது லிபியாவின் எரிபொருள் வளம். மூன்றாவது லிபியாவைக் கைப்பற்றினால் ஐ.எஸ். அமைப்பினரால் இலகுவாகத் தமது போராளிகளை ஐரோப்பாவிற்கு நகர்த்த முடியும்.
கடாஃபியின் கோட்டையில் ஐ.எஸ்.
முன்னாள் அதிபர் முஅம்மர் கடாஃபி யின் கோட்டையாகக் கருதப்பட்ட சேர்ட் நகரின் விமான நிலையத்தை ஐ.எஸ். என அழைக்கப்படும் இஸ்லாமிய அரசு அமைப்பினர் மே மாதம் 29ஆம் திகதி வெள்ளிக் கிழமை கைப்பற்றினர்.
தலைநகர் திரிப்போலியில் ஆட்சியிலிருக்கும் பன்னாட்டு சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத மொஹமட் அல் ஷமியின் ஃபஜிர் லிபியாப் படையினர் ஐ.எஸ். படையினரின் தக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியா மல் ஓடினர்.
திரிப்போலியில் இருந்து 450 கிலோ மீற்றர் (280 மைல்கள்) தொலைவில் உள்ள சேர்ட் விமான நிலையத்துடன் ஒரு ஃபஜிர் லிபியப் படையினர் முகாமும் இருந்தது. படையினர் விமான நிலையத்திலிருந்து எல்லா உபகரணங்களையும் தம்முடன் கொண்டு சென்று விட்டனர்.
பாவனைக்கு உதவாத ஒரு விமானத்தை மட்டும் விட்டுவிட்டுச் சென்றனர். சேர்ட் நகரைக் கைப்பற்றிய ஐ.எஸ். அமைப்பி னர், லிபியாவின் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மிசுரட்டா நகரின் மீது தமது தாக்குதலைத் தீவிரப்படுத்தினர்.
லிபிய விடிவும் பெருமை நடவடிக்கையும்
கேர்ணல் முஅம்மர் கடாஃபி கொலை செய்யப் பட்ட பின்னர் லிபியாவில் உள்ள இனக் குழுமங்களிடையே மோதல்கள் தீவிரமாகின. தற்போது இரு பிரிவினர் லிபியாவின் எண்ணெய் வளங்களையும் மற்றும் கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களையும் கைப்பற்றுவதில் போட்டி போடுகின்றனர்.
ஒரு பிரிவினர் திரிப்போலியிலிருந்து ஓர் அரசையும் மற்றப் பிரிவினர், டொப்ரக் நகரில் இருந்து ஓர் அரசையும் நடத்துகின்றனர். திரிப்போலியில் இருப்பவர்கள் தம்மை "லிபிய விடிவு" என அழைக்கின்றனர்.
இவர்களின் படையே ஃபஜிர் லிபியாப் படை. டொப்ராக்கில் இருப்பவர்கள் தம்மை "பெருமை நடவடிக்கை" என அழைக்கின் றனர். லிபிய விடிவினர் பெருமை நடவ டிக்கையினரை கடாஃபி ஆதரவாளர்கள் என்றும், பெருமை நடவடிக்கையினர் லிபிய விடிவினரை இஸ்லாமியப் பயங்கரவாதிகள் என்றும் அழைக்கின்றனர்.
கடாஃபியின் வீழ்ச்சிக்குப் பின்னர் தெரிவு செய்யப் பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இப்போது நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.
மீண்டும் கடாஃபி ஆதரவாளர்கள்
டொப்ரக் நகரில் இருக்கும் "பெருமை நடவடிக்கை" அரசினர் முஅம்மர் கடாஃபியின் ஆட்சியில் உயர் பதவிகளில் இருந்தவர்களை மீண்டும் பதவியில் அமர்வதற்கான தடைகளை நீக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள் எனக் குற்றம் சாட்டப்படுகின்றது.
திரிப்போலியில் இருக்கும் அரசு இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பிற்குச் சார்பானது. இந்த அரசுக்கு துருக்கியும் கட்டாரும் ஆதரவு வழங்குகின்றன.
சவூதி அரேபியா, ஐக்கிய அமீரகம், எகிப்து ஆகிய நாடுகள் டொப்ரக் நகரில் இருக்கும் "பெருமை நடவடிக்கை" அரசுக்கு ஆதரவு வழங்குகின்றன. சிரியாவின் அதிபர் பஷார் அல் அசாத்தைப் பதவியிலிருந்து அகற்ற வேண்டும் என்பதில் துருக்கியும் சவூதி அரேபியாவும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கின்ற போதிலும், துருக்கியும் கட்டாரும் சிரியாவில் அல் அசாத்திற்குப் பின்னர் யார் அரசாள வேண்டும் என்பதில் சவூதி அரேபியாவின் கொள்கையுடன் முரண்படுகின்றன.
லிபிய அரபு வசந்தத்தின் போது கிளர்ந்து எழுந்த இளைஞர்கள் இப்போது யாருக்கு ஆதரவாகப் போராடுகிறோம், யாருக்கு எதிராகப் போராடுகின்றோம் என்பது தொடர்பாகக் குழப்ப நிலையில் உள்ளனர். முன்னாள் லிபிய அதிபர் கடாஃபியின் படையினர் அவரது மறைவிற்குப் பின்னர் லிபியாவிலும் எகிப்து போன்ற அயல் நாடுகளிலும் பதுங்கியிருந்தனர். அவர்கள் இப்போது ஐ.எஸ். அமைப்பினருடன் இணைந்து போராடுகின்றனர்.
சேர்ட் நகர் இப்போது கடாஃபியின் ஆட்களின் கட்டுப்பாட்டில் உள்ளது என மிஸ்ராட் நகரவாசிகள் நம்புகின்றனர்.
மே மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை பிரிகேட் -166 இன் படையினர் சேர்ட் நகரத்தின் மேற்குப் புறமாக உள்ள ஐ.எஸ். நிலைகள் மீது தாக்குதல் நடத்தினர். ஞாயிறு காலைவரை சண்டை தொடர்ந்தது. ஐ.எஸ். போராளிகள்கார் வெடிகுண்டு மூலம் தற்கொலைத்தாக்குதல் நடத்தினர்.
பலப்பல இனக் குழுமங்கள் கொண்ட லிபியா
லிபியா ஆறரை மில்லியன் மக்களைக் கொண்டது. இதில் ஒன்றரை மில்லியன் பேர் வெளிநாட்டிலிருந்து வந்து குடியேறியவர்கள். லிபியாவில் 140 இனக் குழுமங்கள் இருக்கின்றன.
இந்த இனக் குழுமங்களின் அடையாளங்கள் லிபிய மக்களின் கலாசார அடையாளத்தின் முக்கிய அம்சமாகும். இனக்குழுமங்களின் பெயர்களையே தமது குடும்பப் பெயர்களாக லிபிய மக்கள் கொண்டுள்ளனர். மேற்கு லிபியாவில் ஒரு மில்லியன் பேரைக் கொண்ட வார்ஃபல்லா என்ற இனக்குழுமம் முக்கியமானது. இந்த இனக் குழுமத்தில் 52 உட்பிரிவுகள் இருக்கின்றன.
மத்திய லிபியாவில் கடாஃபி என்ற இனக் குழுமம் முக்கியமானது. முஅம்மர் கடாஃபி இந்த இனக் குழுமத்தைச் சேர்ந்தவர். இந்த இனக் குழுமத்தின் கையில் லிபியா இருந்தது என்று சொல்லலாம். அல் மாஹார்கா என்ற இன்னொரு இனக் குழுமம் மத்திய லிபியாவில் உள்ளது. இது கடாஃபி இனக் குழுமத்துக்கு நெருக்கமானது.
கிழக்கு லிபியாவில் ஜுவையா, பானி சலீம், மெஸ்ரத்தா, அல்வாஹீர் ஆகிய இனக்குழுமங்கள் முக்கியமானவை. கடாஃபி யின் மனைவி வார்ஃல்லா என்னும் இனக்குழுமத்தைச் சேர்ந்தவர். இதுதான் லிபியாவின் மிகப்பெரிய இனக்குழுமம். இதற்கு 54 உட்பிரிவுகள் இருக்கின்றன.
கடாஃபிக்கும் பின்னர் ஆட்சிப் போட்டி
கடாஃபிக்குப் பின்னரான ஆட்சிப் போட்டியில் மேற்கு நாடுகளுக்கு ஆதரவானவர்களும் இஸ்லாமிய மதவாதிகளும் கடுமையாக முரண்பட்டனர். ஈரான், மதவாதிகளிற்கு உதவியது. ஈரானின் நீண்டகாலக் கனவில் முக்கியமானது லிபியா, எகிப்து ஆகிய நாடுகளை தனது ஆதிக்கத்தில் கீழ் கொண்டுவருவதே. சவூதி அரேபியாவின் சில பிரதேசங்களை கைப்பற்றி தனது பொருளாதார வலிமையையும் மேம்படுத்த ஈரான் திட்டமிட்டுள்ளது.
ஈரான், ஹிஸ்புல்லா மற்றும் ஹமாஸ் போன்ற இஸ்லாமிய விடுதலைப் போராளி அமைப்புக்களுடன் நெருங்கிய தொடர் பைப் பேணிவருகிறது. அவர்களுக்கான நிதி மற்றும் படைக்கலன்கள் உதவிகளை வழங்கி வருகிறது. இவை இரண்டும் ஷியா முஸ்லிம்களின் அமைப்பாகும்.
ஆனால், அல்கைதா ஒரு ஸுன்னி முஸ்லிம்களின் அமைப்பாகும். அல்கைதாவிற் கும் ஈரானுக்கும் பகைமை எனக் கருதப்படுகிறது. ஆனால் அல்கைதாவிற்குத் தேவையான நிதி கட்டாரிலிருந்தும் குவைத்தில் இருந்தும் ஈரானுடாகவே வருகிறது. இதற்காக அல்கைதா ஈரானில் எந்தவித தீவிரவாத நடவடிக்கைகளும் எடுப்பதில்லை என்ற உடன்பாடு இருக்கிறது. ஈரானுக்கும் அல்கைதாவிற்கும் பொதுவான எதிரி அமெரிக்கா.
இரண்டும் இணைந்து செயற்படுவதற்கான ஆதாரங்கள் தற்போது சிறிது சிறிதாக வெளிவருகின்றன. ஈரான் இப்போது எகிப்தில் தனது கைவரிசையைக் காட்டத் தொடங்கிவிட்டது. மொஹமட் முர்சியின் ஆதரவாளர்களுக்கு ஈரான் உதவுவதாக நம்பப்படுகிறது. அத்துடன் அல்கைதாவும் எகிப்தில் ஊடுருவி உள்ளது. லிபியாவிலும் இதே நிலைமைதான். ஈரானும் அல்கைதாவும் அங்கு தங்கள் கைவரிசைகளைக் காட்டி வருகின்றன.
சிரியாவில் அல்கைதாவும் ஈரானும் எதிர் எதிர் அணிகளில் நின்று மோதுவது உண்மைதான். ஈரான் – லிபியா, எகிப்து, எதியோப்பியா ஆகிய மூன்று நாடுகளும் தனது கட்டுப்பாட்டின்கீழ் இருக்கவேண் டும் எனத் திட்டமிட்டுச் செயற்படுகிறது. ஈரானில் பயிற்சி பெற்ற அல்கைதாவினரே எகிப்தில் ஊடுருவியிருப்பதாக எகிப்தியக் காவற்றுறை கண்டறிந்துள்ளது.
2011ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் நைஜீரியாவில் ஈரானில் தயாரான படைக்கலன்களை அல்கைதாவினர் கடத்திச் செல்வது கண்டு பிடிக்கப்பட்டது. யேமனிலும் ஈரானில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைச் செலுத்திகளை அல்கைதா பாவிப்பது கண்டறியப்பட்டது. இவை யாவும் ஈரானிற்கும் அல்கைதாவிற்கும் இடையில் இருக்கும் ஒத்துழைப்பை உறுதி செய்கின்றன.
பிராந்திய முரண்பாடு
லிபியாவின் கிழக்குப் பிராந்தியத்தில் உள்ள சைரெனைக்கா (Cyrenaica), லிபியா வில் இருந்து தன்னாட்சி பெற முயல்கின்றது. லிபியாவின் உயர்தர எண்ணெய் வளத்தில் எண்பது விழுக்காடு சைரெனைக்கா வில் இருந்து கிடைக்கின்றது.
லிபிய மக்கள் தொகையின் மூன்றில் இரண்டு பங்கினர் தலைநகர் திரிப்போலியிலும் ஃபெசான் மாகாணத்திலும் வசிக்கின்றனர். சைரெனைக்கா தனிநாடாகப் பிரிந்தால் அங்கிருக்கும் உலகிலேயே ஐந்தாவது பெரிய எண்ணெய் வளம், அதை உலகில் உள்ள மிகவும் செல்வந்த நாடுக ளில் ஒன்றாக ஆக்கிவிடுவதுடன், எஞ்சிய லிபியாவை உலகிலேயே வறிய நாடாக மாற்றிவிடும்.
சைரெனைக்கா தனக்கென ஒரு மத்திய வங்கியையும் உருவாக்கி உலக நாடுகள் தம்மை அங்கீகரிக்கும்படி பரப்புரை செய்ய ஒரு கனடிய நிறுவனத்தின் சேவையையும் பெற்றுள்ளது. சைரெனைக்கா எண்ணெயை ஏற்றுமதி செய்வதைத் தடுக்க லிபிய அரசு சைரெனைக்காவின் மீது ஒரு கடல் முற்றுகையைச் செய்துள்ளது.
கடாஃபியின் மகன்கள்
கடாஃபியின் ஆட்சிக் கவிழ்ப்பின் பின் னர் கைது செய்யப்பட்ட அவரது 40 வயதான கால்பந்தாட்ட வீரர் சாதி கடாஃபி மற்றும் சயிஃப் கடாபி மீதான வழக்கு விசாரணையின் போது அவர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தாமை பலரையும் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. சாதிக டாஃபி உட்பட 39 பேர் முஅம்மர் கடாஃபி யின் ஆட்சியில் முக்கிய பதவியில் இருந் தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 23 பேர் மட்டுமே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர்.
முஅம்மர் கடாஃபியின் மகன்களையும் உதவியாளர்களையும் எப்படி புதிய அரசு நீதி விசாரணைக்கு உட்படுத்தப் போகிறார் கள் என்பது, புதிய அரசு எப்படி மக்களா ட்சி முறைமையை மதித்து நடக்கும் என்ப தற்கான அளவுகோலாகக் கருதப்படுகின் றது. இவர்கள் மீதான விசாரணை பகிரங் கமாக நடக்கும் என அறிவித்திருந்தது ஆனால் அப்படிச் செய்ய முடியவில்லை.
லிபியாவின் படைத்துறைக் காவல் அதி பரும் (head of Libya's military police) சட்டத் துறை தலைமை வழக்குத் தொடுநரும் இந்திய மருத்துவர் ஒருவரும் இப்படிப் பலதரப்பட்டவர்களும் கொல்லப்படுகின் றார்கள். கடாஃபிக்குப் பிந்திய லிபியாவில் எவரும் பாதுகாப்பாக இல்லை.
வேல் தர்மா

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக