புங்குடுதீவில் வித்தியா என்ற மாணவி கூட்டு வன்புணர்வுக்குப் பலியாக்கப்பட்ட கோரம், தமிழ்ச் சமூகத்தில், பல்வேறு தாக்கங்கள்- – விளைவுகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தச் சம்பவத்தின் விளைவாக, மக்களிடையே எழுந்த கோபம், ஆற்றாமை, போராட்டம் போன்றவற்றைப் பற்றியே இதுவரை வெளிப்படையாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இன்னொரு பக்கத்தில் இந்தக் கோர நிகழ்வின் விளைவாக, புங்குடுதீவில் இருந்து பல குடும்பங்கள் வெளியேறும் நிலை ஒன்று உருவாகியுள்ளதாக அறியமுடிகிறது. ஆயுதமோதல்கள் நிகழ்ந்த காலத்தில், தமிழ்ச் சமூகத்துக்கு இடம்பெயர்வு ஒன்றும் புதிய அனுபவமாக இருக்கவில்லை.
ஒரு காலத்தில் தாம் பத்து, பதினைந்து இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றதாகப் - பேசிக்கொள்ளும் வழக்கமும் இருந்தது.
பலருக்குத் தாம் எங்கெங்கு இருந்தோம் என்பது கூட நினைவில்லாதளவுக்கு, இடப்பெயர்வு அவலங்களைச் சந்திக்க நேரிட்டது.
தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடத்தை- வீட்டை விட்டு வெளியேற்றப்படும் போது அல்லது வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் போது, ஏற்படும் வலி, அதை அனுபவித்த தமிழ்மக்களுக்கே தெளிவாகத் தெரியும்.
ஆனால், ஆயுதமோதல், 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர், மீள் குடியேற்றம் பெரும்பாலும் முடிந்து விட்டதாகவே அரசாங்கத்தினால் கூறப்படும் நிலையில், புங்குடுதீவை விட்டு சில குடும்பங்கள் இடம்பெயர்ந்து ஓடும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
அச்சம், பழிவாங்கல் பற்றிய பீதி, பாதுகாப்பற்ற உணர்வு என்பனவே இத்தகைய இடம்பெயர்வுக்கு காரணமாகியிருக்கிறது.
ஒரு சம்பவத்தின் பாதிப்பு எந்தளவுக்கு சமூகத்தில் மாற்றத்தை- தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்த இடப்பெயர்வு ஒரு சிறிய உதாரணம். சமூகத்துக்கு விரோதமான - நீதிக்கு முரணான ஒரு செயலின் பாதிப்பை ஒரு சமூகம் எவ்வாறு அனுபவிக்க நேரிடுகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு அத்தாட்சியாக அமைந்திருக்கிறது.
வித்தியா என்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம் தனியே அந்தக் குடும்பத்தை மட் டும் துரத்தவில்லை- அவர்களைச் சுற்றியுள்ள, சூழவுள்ள மக்களையும் துரத்திக் கொண்டிருக்கிறது. ஆயுத மோதலுக்குப் பின்னர், தறிகெட்ட ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறியமைக்கு அல்லது மாற்றப்பட்டமையே, இந்த சமூக அவலத்துக்கான காரணமாகக் கூறப்படுகிறது.
ஆயுதமோதல் தமிழ்ச் சமூகத்துக்கு பல வழிகளை அடைத்து விட்ட அதேவேளை, சில தேவையற்ற வழிகளைத் திறந்தும் விட்டது. அந்த தேவையற்ற வழிகளின் ஊடாக நுழைந்த அல்லது நுழைக்கப்பட்ட விடயங்கள் தான் இன்றைய நிலைமைக்கு காரணமாகக் கூறப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தை வலுவற்ற சமூகமாக்க வேண்டும் என்று திட்டமிட்டே, போதைப்பொருள் பழக்கத்துக்கு தமிழ் இளைஞர்கள் அடிமையாக்கப்பட்டதாக அண்மையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்ச் சமூகத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில், வெளியிலிருந்து நுழைக்கப்பட்ட இந்தக் காரணிகள் மட்டும், இன்றைய நிலைமைக்குக் காரணம் அல்ல. தமிழ்ச் சமூகத்துக்குள்ளேயும் இதற்குச் சாதகமாக இருந்த பல காரணங்களும் துணைபோயிருக்கின்றன. ஆயுதமோதல் ஒன்றுக்குப் பின்னர், எந்தவொரு சமூகத்திலும், குற்றச்செயல்களும், குரூரத்தனங்களும் அதிகரிப்பது வழமையே.
அது சர்வதேச அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவு. ஆயுதமோதல்களின் போது ஏற்பட்ட மன வடுக்களும், ஆற்றாமைகளும், கோபங்களும், அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளும், ஆயுத மோதலின் பின்னர் வெடித்துக் கிளம்புவது வழமை.
அதுவும், தமிழ்ச் சமூகத்தின் ஆயுதப் போராட்டம், அவலங்களையும் பின்னடைவுகளையும் கொண்ட ஒன்றாக முடிவுற்ற சூழலில், ஆயுதமோதலுக்குப் பிந்திய சமூகத் தாக்கங்கள் அதிகமாகவே இருக்கும் என்று உணரப்பட்டது.
2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், இத்தகைய தாக்கங்கள் குறித்து எதிர்வு கூறப்பட்ட போதிலும், அவற்றைக் கவனத்தில் எடுத்துச் செயற்படுகின்ற சூழல் தமிழ்ச் சமூகத்துக்கோ, சமூகத்தை வழி நடத்தியவர்களுக்கோ அல்லது துறைசார் வல்லுனர்களுக்கோ ஏற்பட்டிருக்கவில்லை. மீள்குடியமர்வு, சிறைக் கைதிகளின் விடுதலை, காணாமற்போனவர்களைக் கண்டு பிடித்தல் போன்றவற்றில் தான் கவனம் செலுத்தப்பட்டதே தவிர, ஆயுத மோதலுக்குப் பிந்திய சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பு சரியாக கையாளப்படவில்லை.
மேற்படி விடயங்களும் முக்கியமானவையே என்றாலும், சமூக ஒழுக்கத்தை வழிப்படுத்துதல் மிக முக்கியமானதாக இருந்தது. ஆயுத மோதலுக்குப் பின்னர், சமூகக் கட்டமைப்பை, குடும்பங்களின் கட்டமைப்பை முறையாகப் பேணத் தவறியதும், இளம் சமூகத்தை, வெளிநாட்டுச் சந்தைக்கு அனுப்புகின்றவர்களாக வளர்த்து விட்டதும், கல்வி, ஒழுக்கத்தின் மீது கவனம் செலுத்தத் தவறியதும், இத்தகைய மோசமான நிலைக்கு வழிகோலியது.
வேலையின்மை உள்ளிட்ட சமூக காரணிகள் சமூக கட்டமைப்மைப் பெயர்த்துவிடக் கூடியவை. பல்கலைக்கழக கல்வியை முடித்தவர்கள் அனைவருக்கும் அரசாங்க வேலை தரப்பட வேண்டும் என்று உரிமையோடு போராட்டம் நடத்துகின்ற அளவுக்கு, தமிழ்ச் சமூகத்தில் முட்டாள்த்தனம் ஆழ வேரோடியிருக்கிறது.
இத்தகைய போராட்டங்கள் யாழ்ப்பாண சமூகத்தில் காலம் காலமாக நடந்து வரும் ஒன்றாக மாறியிருக்கிறது. பல்கலைக்கழகத்தை ஒரு கல்விக் கூடமாக பார்க்கின்ற – அறிவுசார் சமூகமாக தமிழ்ச் சமூகம் இருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அரச வேலைக்கான வேலையாட்களை பயிற்றுவிக்கும் பட்டறையாகவே அதைப் பார்ப்பதால் தான், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், அரச வேலை கிடைக்கும் வரை ஆண்டுக்கணக்காக வீதியில் காத்திருக்கின்றனர். அலைகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுபவர்கள் அனைவருக்கும் அரச வேலை தரப்பட வேண்டும் என்ற விசித்திரமான போராட்டங்கள் இலங்கையைத் தவிர உலகில் வேறெங்கும் நடப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 546 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டுக்கு ஒன்றரை இலட்சம் வரையான பொறியியலாளர்கள் வெளிவருகின்றனர்.
அவ்வளவு பேரும் அரச வேலையை எதிர்பார்த்தால், தமிழ்நாட்டின் கதி என்னவாகும்? இளம் சமூகம் அரசின் கையை எதிர்பார்க்காத ஒன்றாக மாறியிருப்பதால் தான், அங்கு தொழில்கள், புதிய தொழில் முயற்சிகள் வளர்ச்சி கண்டுள்ளன.
ஆயுதமோதலுக்குப் பின்னர் வேலையின்மை என்பது முக்கிய பிரச்சினையாகவே இருந்தாலும், மாற்று வேலையை செய்யத் தயாராக இல்லாமல் வளர்க்கப்பட்ட இளம் சமூகம், நீண்ட காத்திருப்புக்கு உள்ளாக நேரிட்டுள்ளது. படிப்புக்கும் வேலைக்கும் இடையில் கிடைக்கின்ற கால இடைவெளி அவர்களை இலகுவில் தவறான வழியில் கொண்டு செல்கிறது.
படிப்பு முடிந்ததும் வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கு தவறான வழியில் செல்வதற்கோ அல்லது வேறு நபர்களால் தவறாக வழிநடத்திச் செல்லப்படுவதற்கோ நேரம் கிடைக்காது. ஆயுத மோதலுக்குப் பின்னர், வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிபரங்களில் இருந்து அறிய முடிகிறது.
அத்துடன் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதும் அதிகரித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும், பாடசாலையை விட்டு விலகிய 186 மாணவர்கள் இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியான அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருந்தது.
ஓமந்தையில் 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்தவாரம் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். பாடசாலை செல்ல வேண்டிய வயதில் அந்தச் சிறுமி, வீட்டில் இருந்து சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்திருப்பதாகத் தகவல்.
அந்தச் சிறுமி பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தால், அந்தச் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கலாம். பரந்தன் பகுதியில் இரு வாரங்களுக்கு முன்னர், 7 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட 16 வயதுச் சிறுவன், பாடசாலையை விட்டு இடைவிலகிய ஒருவர் என்று தெரியவந்திருக்கிறது.
அந்தச் சிறுவன் பாடசாலையை விட்டு இடைவிலகும் சூழல் ஒன்று ஏற்படாதிருந்தால், இதுபோன்ற சம்பவங்களில் அவன் ஈடுபட்டிருப்பதற்கு வாய்ப்புகள் நிச்சயம் குறைந்திருக்கும். ஆயுத மோதலுக்குப் பின்னர், குடும்பங்களில் ஏற்பட்ட இழப்புகள், பிரிவுகள் என்பனவும் இளம் சந்ததியின் மீது பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
இளம் சந்ததி வழிதவறிப் போய்க் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டுபவர்கள், அவர்கள் வழிதவறுவதை தடுப்பதற்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். வித்தியாவின் படுகொலைக்குப் பின்னர் தான், இவை பற்றியெல்லாம் அலச வேண்டும், ஆராய வேண்டும் என்ற எண்ணமே தமிழ்ச் சமூகத்துக்கு தோன்றியிருக்கிறது.
இப்போதாவது, தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய சமூக அவலங்கள் பற்றிய கருத்தாடல்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளன என்பது நல்லதொரு அறிகுறி. ஆனால், இவற்றினால் மட்டும், இத்தகைய சமூக குற்றங்களை களைந்துவிட முடியாது. கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்துக்குள் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏற்றப்பட்டு வந்துள்ளது.
இந்த விஷத்தை முறிக்க ஒரேயடியாக வைத்தியம் செய்ய முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் செய்ய வேண்டும். படிப்படியாகத் தான் நிலைமைகளை மாற்ற முடியும்.
மீண்டும் தமிழ்ச் சமூகம் தனது சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு எந்தளவுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கிறதோ, அந்தளவுக்கு விரைவாக, இந்த அவலநிலையில் இருந்து வெளிவர முடியும் என்றே தோன்றுகிறது.
இந்தச் சம்பவத்தின் விளைவாக, மக்களிடையே எழுந்த கோபம், ஆற்றாமை, போராட்டம் போன்றவற்றைப் பற்றியே இதுவரை வெளிப்படையாகப் பேசப்பட்டு வருகிறது. ஆனால், இன்னொரு பக்கத்தில் இந்தக் கோர நிகழ்வின் விளைவாக, புங்குடுதீவில் இருந்து பல குடும்பங்கள் வெளியேறும் நிலை ஒன்று உருவாகியுள்ளதாக அறியமுடிகிறது. ஆயுதமோதல்கள் நிகழ்ந்த காலத்தில், தமிழ்ச் சமூகத்துக்கு இடம்பெயர்வு ஒன்றும் புதிய அனுபவமாக இருக்கவில்லை.
ஒரு காலத்தில் தாம் பத்து, பதினைந்து இடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றதாகப் - பேசிக்கொள்ளும் வழக்கமும் இருந்தது.
பலருக்குத் தாம் எங்கெங்கு இருந்தோம் என்பது கூட நினைவில்லாதளவுக்கு, இடப்பெயர்வு அவலங்களைச் சந்திக்க நேரிட்டது.
தாம் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த இடத்தை- வீட்டை விட்டு வெளியேற்றப்படும் போது அல்லது வெளியேற வேண்டிய நிலை ஏற்படும் போது, ஏற்படும் வலி, அதை அனுபவித்த தமிழ்மக்களுக்கே தெளிவாகத் தெரியும்.
ஆனால், ஆயுதமோதல், 2009ஆம் ஆண்டு முடிவுக்கு வந்த பின்னர், மீள் குடியேற்றம் பெரும்பாலும் முடிந்து விட்டதாகவே அரசாங்கத்தினால் கூறப்படும் நிலையில், புங்குடுதீவை விட்டு சில குடும்பங்கள் இடம்பெயர்ந்து ஓடும் அவலம் ஏற்பட்டிருக்கிறது.
அச்சம், பழிவாங்கல் பற்றிய பீதி, பாதுகாப்பற்ற உணர்வு என்பனவே இத்தகைய இடம்பெயர்வுக்கு காரணமாகியிருக்கிறது.
ஒரு சம்பவத்தின் பாதிப்பு எந்தளவுக்கு சமூகத்தில் மாற்றத்தை- தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கு இந்த இடப்பெயர்வு ஒரு சிறிய உதாரணம். சமூகத்துக்கு விரோதமான - நீதிக்கு முரணான ஒரு செயலின் பாதிப்பை ஒரு சமூகம் எவ்வாறு அனுபவிக்க நேரிடுகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு அத்தாட்சியாக அமைந்திருக்கிறது.
வித்தியா என்ற மாணவிக்கு நேர்ந்த கொடூரம் தனியே அந்தக் குடும்பத்தை மட் டும் துரத்தவில்லை- அவர்களைச் சுற்றியுள்ள, சூழவுள்ள மக்களையும் துரத்திக் கொண்டிருக்கிறது. ஆயுத மோதலுக்குப் பின்னர், தறிகெட்ட ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறியமைக்கு அல்லது மாற்றப்பட்டமையே, இந்த சமூக அவலத்துக்கான காரணமாகக் கூறப்படுகிறது.
ஆயுதமோதல் தமிழ்ச் சமூகத்துக்கு பல வழிகளை அடைத்து விட்ட அதேவேளை, சில தேவையற்ற வழிகளைத் திறந்தும் விட்டது. அந்த தேவையற்ற வழிகளின் ஊடாக நுழைந்த அல்லது நுழைக்கப்பட்ட விடயங்கள் தான் இன்றைய நிலைமைக்கு காரணமாகக் கூறப்படுகிறது. தமிழ்ச் சமூகத்தை வலுவற்ற சமூகமாக்க வேண்டும் என்று திட்டமிட்டே, போதைப்பொருள் பழக்கத்துக்கு தமிழ் இளைஞர்கள் அடிமையாக்கப்பட்டதாக அண்மையில் முதலமைச்சர் விக்னேஸ்வரனும் குறிப்பிட்டிருந்தார்.
தமிழ்ச் சமூகத்தைப் பலவீனப்படுத்தும் நோக்கில், வெளியிலிருந்து நுழைக்கப்பட்ட இந்தக் காரணிகள் மட்டும், இன்றைய நிலைமைக்குக் காரணம் அல்ல. தமிழ்ச் சமூகத்துக்குள்ளேயும் இதற்குச் சாதகமாக இருந்த பல காரணங்களும் துணைபோயிருக்கின்றன. ஆயுதமோதல் ஒன்றுக்குப் பின்னர், எந்தவொரு சமூகத்திலும், குற்றச்செயல்களும், குரூரத்தனங்களும் அதிகரிப்பது வழமையே.
அது சர்வதேச அளவில் செய்யப்பட்ட ஆய்வுகளின் முடிவு. ஆயுதமோதல்களின் போது ஏற்பட்ட மன வடுக்களும், ஆற்றாமைகளும், கோபங்களும், அடக்கி வைக்கப்பட்ட உணர்ச்சிகளும், ஆயுத மோதலின் பின்னர் வெடித்துக் கிளம்புவது வழமை.
அதுவும், தமிழ்ச் சமூகத்தின் ஆயுதப் போராட்டம், அவலங்களையும் பின்னடைவுகளையும் கொண்ட ஒன்றாக முடிவுற்ற சூழலில், ஆயுதமோதலுக்குப் பிந்திய சமூகத் தாக்கங்கள் அதிகமாகவே இருக்கும் என்று உணரப்பட்டது.
2009இல் போர் முடிவுக்கு வந்த பின்னர், இத்தகைய தாக்கங்கள் குறித்து எதிர்வு கூறப்பட்ட போதிலும், அவற்றைக் கவனத்தில் எடுத்துச் செயற்படுகின்ற சூழல் தமிழ்ச் சமூகத்துக்கோ, சமூகத்தை வழி நடத்தியவர்களுக்கோ அல்லது துறைசார் வல்லுனர்களுக்கோ ஏற்பட்டிருக்கவில்லை. மீள்குடியமர்வு, சிறைக் கைதிகளின் விடுதலை, காணாமற்போனவர்களைக் கண்டு பிடித்தல் போன்றவற்றில் தான் கவனம் செலுத்தப்பட்டதே தவிர, ஆயுத மோதலுக்குப் பிந்திய சமூகத்தை வழிநடத்தும் பொறுப்பு சரியாக கையாளப்படவில்லை.
மேற்படி விடயங்களும் முக்கியமானவையே என்றாலும், சமூக ஒழுக்கத்தை வழிப்படுத்துதல் மிக முக்கியமானதாக இருந்தது. ஆயுத மோதலுக்குப் பின்னர், சமூகக் கட்டமைப்பை, குடும்பங்களின் கட்டமைப்பை முறையாகப் பேணத் தவறியதும், இளம் சமூகத்தை, வெளிநாட்டுச் சந்தைக்கு அனுப்புகின்றவர்களாக வளர்த்து விட்டதும், கல்வி, ஒழுக்கத்தின் மீது கவனம் செலுத்தத் தவறியதும், இத்தகைய மோசமான நிலைக்கு வழிகோலியது.
வேலையின்மை உள்ளிட்ட சமூக காரணிகள் சமூக கட்டமைப்மைப் பெயர்த்துவிடக் கூடியவை. பல்கலைக்கழக கல்வியை முடித்தவர்கள் அனைவருக்கும் அரசாங்க வேலை தரப்பட வேண்டும் என்று உரிமையோடு போராட்டம் நடத்துகின்ற அளவுக்கு, தமிழ்ச் சமூகத்தில் முட்டாள்த்தனம் ஆழ வேரோடியிருக்கிறது.
இத்தகைய போராட்டங்கள் யாழ்ப்பாண சமூகத்தில் காலம் காலமாக நடந்து வரும் ஒன்றாக மாறியிருக்கிறது. பல்கலைக்கழகத்தை ஒரு கல்விக் கூடமாக பார்க்கின்ற – அறிவுசார் சமூகமாக தமிழ்ச் சமூகம் இருக்கவில்லை என்பதையே இது காட்டுகிறது.
அரச வேலைக்கான வேலையாட்களை பயிற்றுவிக்கும் பட்டறையாகவே அதைப் பார்ப்பதால் தான், ஆயிரக்கணக்கான இளைஞர்கள், அரச வேலை கிடைக்கும் வரை ஆண்டுக்கணக்காக வீதியில் காத்திருக்கின்றனர். அலைகின்றனர்.
பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறுபவர்கள் அனைவருக்கும் அரச வேலை தரப்பட வேண்டும் என்ற விசித்திரமான போராட்டங்கள் இலங்கையைத் தவிர உலகில் வேறெங்கும் நடப்பதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், 546 பொறியியல் கல்லூரிகளில் இருந்து ஆண்டுக்கு ஒன்றரை இலட்சம் வரையான பொறியியலாளர்கள் வெளிவருகின்றனர்.
அவ்வளவு பேரும் அரச வேலையை எதிர்பார்த்தால், தமிழ்நாட்டின் கதி என்னவாகும்? இளம் சமூகம் அரசின் கையை எதிர்பார்க்காத ஒன்றாக மாறியிருப்பதால் தான், அங்கு தொழில்கள், புதிய தொழில் முயற்சிகள் வளர்ச்சி கண்டுள்ளன.
ஆயுதமோதலுக்குப் பின்னர் வேலையின்மை என்பது முக்கிய பிரச்சினையாகவே இருந்தாலும், மாற்று வேலையை செய்யத் தயாராக இல்லாமல் வளர்க்கப்பட்ட இளம் சமூகம், நீண்ட காத்திருப்புக்கு உள்ளாக நேரிட்டுள்ளது. படிப்புக்கும் வேலைக்கும் இடையில் கிடைக்கின்ற கால இடைவெளி அவர்களை இலகுவில் தவறான வழியில் கொண்டு செல்கிறது.
படிப்பு முடிந்ததும் வேலைக்குச் செல்லும் இளைஞர்களுக்கு தவறான வழியில் செல்வதற்கோ அல்லது வேறு நபர்களால் தவறாக வழிநடத்திச் செல்லப்படுவதற்கோ நேரம் கிடைக்காது. ஆயுத மோதலுக்குப் பின்னர், வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக புள்ளிவிபரங்களில் இருந்து அறிய முடிகிறது.
அத்துடன் மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகுவதும் அதிகரித்துள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும், பாடசாலையை விட்டு விலகிய 186 மாணவர்கள் இருப்பதாக கடந்த ஏப்ரல் மாதம் வெளியான அறிக்கை ஒன்றில் கூறப்பட்டிருந்தது.
ஓமந்தையில் 14 வயதுச் சிறுமி ஒருவர் கடந்தவாரம் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார். பாடசாலை செல்ல வேண்டிய வயதில் அந்தச் சிறுமி, வீட்டில் இருந்து சமையல் உள்ளிட்ட வேலைகளை செய்திருப்பதாகத் தகவல்.
அந்தச் சிறுமி பாடசாலைக்குச் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தால், அந்தச் சம்பவம் தடுக்கப்பட்டிருக்கலாம். பரந்தன் பகுதியில் இரு வாரங்களுக்கு முன்னர், 7 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கைது செய்யப்பட்ட 16 வயதுச் சிறுவன், பாடசாலையை விட்டு இடைவிலகிய ஒருவர் என்று தெரியவந்திருக்கிறது.
அந்தச் சிறுவன் பாடசாலையை விட்டு இடைவிலகும் சூழல் ஒன்று ஏற்படாதிருந்தால், இதுபோன்ற சம்பவங்களில் அவன் ஈடுபட்டிருப்பதற்கு வாய்ப்புகள் நிச்சயம் குறைந்திருக்கும். ஆயுத மோதலுக்குப் பின்னர், குடும்பங்களில் ஏற்பட்ட இழப்புகள், பிரிவுகள் என்பனவும் இளம் சந்ததியின் மீது பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன.
இளம் சந்ததி வழிதவறிப் போய்க் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டுபவர்கள், அவர்கள் வழிதவறுவதை தடுப்பதற்கு என்ன செய்திருக்கிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். வித்தியாவின் படுகொலைக்குப் பின்னர் தான், இவை பற்றியெல்லாம் அலச வேண்டும், ஆராய வேண்டும் என்ற எண்ணமே தமிழ்ச் சமூகத்துக்கு தோன்றியிருக்கிறது.
இப்போதாவது, தமிழ்ச் சமூகத்தில் இத்தகைய சமூக அவலங்கள் பற்றிய கருத்தாடல்கள் இடம்பெறத் தொடங்கியுள்ளன என்பது நல்லதொரு அறிகுறி. ஆனால், இவற்றினால் மட்டும், இத்தகைய சமூக குற்றங்களை களைந்துவிட முடியாது. கடந்த ஆறு ஆண்டுகளாக தமிழ்ச் சமூகத்துக்குள் கொஞ்சம் கொஞ்சமாக விஷம் ஏற்றப்பட்டு வந்துள்ளது.
இந்த விஷத்தை முறிக்க ஒரேயடியாக வைத்தியம் செய்ய முடியாது. கொஞ்சம் கொஞ்சமாகத் தான் செய்ய வேண்டும். படிப்படியாகத் தான் நிலைமைகளை மாற்ற முடியும்.
மீண்டும் தமிழ்ச் சமூகம் தனது சமூகக் கட்டமைப்பை வலுப்படுத்திக் கொள்வதற்கு எந்தளவுக்கு விரைவாக நடவடிக்கை எடுக்கிறதோ, அந்தளவுக்கு விரைவாக, இந்த அவலநிலையில் இருந்து வெளிவர முடியும் என்றே தோன்றுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக