நிறக்கோடுகள் இணைந்த வானவில்லாய் அமைய வேண்டிய என் வாழ்க்கை கறுப்பை மாத்திரம் கொண்ட இருளாய் மாறிப்போனது. சிறகடித்தபடி வானில் பறக்கும் பறவையாக சுற்றித்திரிய வேண்டியவள், இப்படி நான்கு சுவருக்குள் இருளை உடையாகக்கொண்டு வருந்திக்கொண்டிருக்கிறேன்.
சிறைக்கம்பிகளுக்குள் சிதைந்து போன மனத்தோடு நிரோஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் வாழ்வை எண்ணிக்கொண்டு நொந்து கொண்டிருக்கிறாள். அவள் தன் வாழ்வில் கடந்து வந்த பாதைதனை உலகுக்குக் காட்ட எத்தனிக்கிறாள்.
பிறந்தது முதல் எனக்கு மகிழ்ச்சியென்பது அத்திப்பூ பூப்பதுபோலவே அமைந்திருந்தது. இரண்டு வயதில் தாய் என்னை விட்டு விட்டுப் போய்விட்டாள். தந்தையின் அரவணைப்பில் அறியாத வயதில் காலம் தள்ளினேன். எனது எதிர்காலத்தை எண்ணி எனது தந்தை வெளிநாட்டுக்குப் பணிபுரியப் போனாராம். அப்போது எனக்கு வயது மூன்று. போகும்போது என்னையென் அத்தை வீட்டில் விட்டுச்சென்றுள்ளார்.
அதற்குப் பின்னர் நான் ஐந்து வயதாக இருக்கும் போது அப்பா திரும்பி வந்துள்ளார். நான் அவரைப்பார்த்தவுடன் பயந்து அழுததாகவும் பின்னர் அவரே என்னை சமாதானப்படுத்தி நான் தான் உன் அப்பா என்று புரியவைக்க இரண்டு நாட்களானது என்றும் பின்னர் மாமா கூறியது நினைவிருக்கிறது. அப்போது நான் அம்மா எங்கே என்று கேட்டதற்கு அம்மா நம்மை விட்டு சாமியிடம் போய்விட்டதாக எனக்கு கூறினார்.
அவர் வந்து மூன்று மாதங்களுக்கு பின்னர் மீண்டும் வெளிநாட்டுக்கே சென்றுவிட்டார். அத்தை என்னை அன்பாக பார்த்துக்கொள்வார் என்று கூறியே அப்பா விடைபெற்றுச்சென்றார். எனினும், அத்தை என்னை ஓர் வேலைக்காரியைப்போன்றே நடத்தினார். அத்தையின் வீட்டில் மாமாவும் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் இருந்தனர். மூத்தவனுக்கு என்னையொத்த வயது. கடைக்குட்டி என்னைவிட இளையவன். வீட்டில் இவர்கள் இருவரது வேலைகளையும் நானே செய்யவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டேன். எனது தந்தை எனது செலவுக்காக அனுப்பிய பணத்தை அத்தை தனக்கும் தன் குடும்பத்திற்கும் பயன்படுத்திக்கொண்டு சுகபோக வாழ்வை வாழ்ந்தார். எனக்கு கிழிந்த ஆடைகளும் கண்ணீருமே எஞ்சின. அன்பிற்கும் பாசத்திற்கும் ஏங்கிய கண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
காலவோட்டத்தில் நான் பருவமடைந்தேன். அதேவேளை, தந்தையும் நாடு திரும்பினார். என்னைப் பார்த்ததும் அழுதேவிட்டார்.
'மகளே நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா? உன் அம்மாவைப் பார்த்தது போல இருக்கிறது. உன்னைப்பார்க்க அவளுக்கு கொடுத்து வைக்கவில்லையே நீ நீடூழி வாழவேண்டுமென்று'' வாழ்த்தினார். அவருடன் நான் கழித்த பொழுதுகள் தான் என் வாழ்வில் நான் பெற்ற பொற்சுவடுகள். அவரும் குறித்த காலத்தினுள் வெளிநாட்டுக்கே திரும்பிச் சென்றுவிட்டார். எனக்கோ மீண்டும் இருட்டுக்குள் தள்ளப்பட்ட ஓர் உணர்வு. தந்தை இருக்கும் வரை அத்தை என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். இல்லை இல்லை பார்த்துக்கொண்டது போல நடித்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
தந்தை போன பிறகு அத்தையின் மகன்களுடன் நான் பேசுவதைத் தடுத்து வந்தாள். எனக்கு அப்போது காரணம் விளங்கவில்லை நாட்கள் செல்லச் செல்ல என்னைப் பார்ப்பவர்களின் கண்களில் நான் ஒரு மாற்றத்தைக் கண்டேன். அதோடு எனக்குள்ளும் மாற்றங்கள் நடந்தன. என்னை நானே இரசிக்கத் தொடங்கினேன். சில வேளைகளில் எனது அழகை கண்ணாடியில் பார்க்கவே நேரக்கணக்கில் செலவிடுவேன்.
இதன் போதுதான் சாதாரண தரப் பரீட்சைத்தேர்வை நான் எழுதினேன். பரீட்சை முடிந்த பிறகு முடிவுகள் வரும்வரை வீட்டில் இருந்தேன். அத்தை வேலைக்கு போய்விடுவார். அத்தையின் மூத்த மகனும் என்னுடன் தேர்வை எழுதிவிட்டு வேறு வேலைக்கு சென்றான். தம்பியும் பள்ளிக்கூடம் சென்று விடுவான்.
நான் மட்டும் தான் தனியே வீட்டில் இருந்தேன். வேலைக்கு போகும் மாமாவும் அதன்பிறகு வீட்டில் இருக்க ஆரம்பித்தார். போகப்போகத்தான் அவரது சுயரூபம் எனக்கு தெரிந்தது. அவர் என்னை அடைய நெருங்கிவந்தார். அவரிடமிருந்து விடுபட முயற்சித்தேன். அந்த வீட்டிலிருந்து தப்பித்துப்போகவும் முடிவு செய்தேன்.
ஆனால், அதற்குள் எல்லாமே நடந்துமுடிந்து விட்டது. மாமாவோடு கொண்ட உறவின் காரணமாக நான் கருவுற்றேன். அதற்கு பின்னர் எனக்கு அத்தை வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் தந்தைக்கு கடிதமொன்றை எழுதி தபால் செய்துவிட்டு இரவோடிரவாக வீட்டைவிட்டு வந்துவிட்டேன்.
கருவுற்ற சிசுவும் வயிற்றில் தங்கவில்லை. அதற்கு பிறகு வீடுகளில் வேலை செய்யத்தொடங்கினேன். ஆனாலும் தொடர்ந்து என்னால் ஒரு வீட்டில் வேலைசெய்ய முடியவில்லை. குறித்த வீட்டில் இருக்கும் ஏதாவது ஆண்மகனால் பாலியல் தொல்லைகள் தொடர்ந்த வண்ணமேயிருந்தன. எனக்கே ஏன் பிறந்தோம் என்ற அளவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. எந்தவொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்கமுடியவில்லை.
இறுதியில் வயதான பாட்டியொருவரை கவனிக்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. அந்த பாட்டியும் அவரது மகளும் என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டனர். நானும் அவர்களது பராமரிப்பில் நலமாக வாழ்ந்துவந்தேன். அவர்களது வீட்டில் இருந்த என் வயது மதிக்கத்தக்க சாரதியும் என்னோடு அன்பாக பழகினார். அன்பிற்கும் பாசத்திற்கு பாதுகாப்பிற்கும் ஏங்கித் தவித்த எனக்கு அனைத்தும் அவ்வீட்டில் கிடைத்தன. எனது பழைய கால கசப்பான சம்பவங்களை மறந்தேன், அந்த வீட்டில் என்னை நான் புதிதாய் உணர்ந்தேன். அன்பாகப் பழகிய சாரதி திலங்கவுக்கும் எனக்கும் இடையில் காதல் மலர்ந்தது. நான் அவரை ஆத்மார்த்தமாக நேசித்தேன். என்னுடைய கடந்த கால விடயங்கள் அனைத்தையும் அவருக்கு கூறினேன்.
அவரும் எனக்கு ஆறுதலாய் பேசினார். என்னை திருமணம் செய்வதாகவும் வாக்களித்தார். இவ்வாறிருக்க, இவ்விடயம் பாட்டிக்கும் அவரது மகளுக்கும் தெரியவந்தது அவர்களும் அவனை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறினர். திடீரென ஒருநாள் திலங்க காணாமல் போனார். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
''நீ பயப்பட வேண்டாம் நாங்கள் உன்னைப்பார்த்துக்கொள்வோம்'' என்று பாட்டி கூறிய வார்த்தைகளில் சமாதானமாகினேன். ஒருமாத காலத்திற்கு பின்னர் திலங்க என்னை வந்து சந்தித்தார். தான் அம்மாவைப் பார்க்கப்போனதாக அவர் கூறினார். திலங்க வந்த சில நாட்களுக்கு பிறகு என்னிடம் வந்து நாம் இருவரும் இங்கிருந்து சென்று திருமணம் செய்து கொள்வோம் என்றார். நான் முதலில் அதற்கு மறுத்தேன். அப்போது எனக்கு வெறும் இருபது வயதுதான் ஆகியிருந்தது.
பாட்டிக்கும் மகளுக்கும் சொல்லாமல் என்னால் வரமுடியாது என்றேன். இருந்தும் திலங்க தொடர்ந்து என்னை கட்டாயப்படுத்தி அவருடைய அக்காவின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். ஒருவாரம் வரை அங்கு அவருடன் தங்கியிருந்தேன். அங்கு அவரது அக்கா என்னுடன் அன்பாகப் பழகினார். பின்னர் ஒருநாள் அவரது சொந்த ஊருக்கு போய் இரண்டு நாட்களில் வந்து விடுவதாக கூறிச்சென்றார். போனவர் போனது தான் திரும்பவே இல்லை.
அந்த அக்காவும் நீ இங்க தங்க வேண்டுமானால் வாடகை தரவேண்டும் என்று அதட்டினார். அதற்கு நான் ஏன் வாடகை தரவேண்டும் எனக் கேட்டேன். பின்னர் அவர் கூறியவற்றை கேட்டதும் தான் நான் மீண்டும் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டேன். அவர் திலங்கவைப் பற்றிய உண்மைகளைக் கூறினார். அவன் ஏற்கனவே திருமணமானவன் என்றதும் எனக்கு தலையே சுற்றியது. என்ன செய்வதென்றே புரியவில்லை. தலையில் கைவைத்தபடி கட்டிலில் அமர்ந்து எண்ணிக்கொண்டிருந்தேன். மீண்டும் பாட்டியின் வீட்டிற்கு செல்லவும் மனம் வரவில்லை.
அந்த அக்கா கூறினார். "உன்னைப் பற்றி திலங்க என்னிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டான். உன்னிடம் தற்போது இழப்பதற்கு ஒன்றுமில்லை. நான் கூறுவது போல நீ நடந்துகொண்டால் சாகும் வரை நீ இங்கே இருக்கலாம். மீண்டும் தெருத்தெருவாக சென்று சீரழிய வேண்டியதில்லை" என்றார். அப்போது எனக்கு அவர் கூறியதை மறுக்க முடியவில்லை. அங்கிருந்து தப்பித்துபோகவும் வழியில்லை. விதியை நொந்துகொண்டு அவர் பேச்சைக்கேட்டு நடைபிணமாய் வாழ ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் நேரம் காலமில்லாமல் விலைமாதுவாக பொழுதைக் கழித்தேன். நிறைய பணம் சேர்ந்தது. கொடுப்பதற்கு யாருமில்லை. அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு சிறிய வீடொன்றைக் கட்டினேன்.
அதற்குப் பின்னர் மேர்வின் என்பவரை சந்தித்தேன். அதன் தொடர்ச்சியாக பெரிய ஹோட்டல்களில் விலைமாதுவாக தொழில்புரிய ஆரம்பித்தேன். பணக்காரர்களோடு உறவுகள் வைத்துக்கொள்ளவேண்டிய நிலை வந்தது. எனினும், சில வேளைகளில் பொலிஸாரின் சுற்றி வளைப்புகளிலும் சிக்கி சில நாட்கள் சிறைச்சாலைகளிலும் அடைபட்டு கிடந்தேன். அங்கிருந்து வெளியே வந்து மீண்டும் விலைமாதுவாக பயணத்தைத் தொடர்ந்தேன். என் வாழ்க்கையை எண்ணி நான் கண்ணீர் விடாத நாளில்லை. இதிலிருந்து விடுபடப் போய் போதைவஸ்துவுக்கு அடிமையாகிப் போனேன். அதுவே என் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது. போதை வஸ்துக்காக மீண்டும் விபசாரத்தில் ஈடுபட்டேன். நான் சம்பாதித்த அனைத்தையும் போதைவஸ்துக்காக செலவு செய்தேன்.
இறுதியில் இரண்டு கிராம் போதைவஸ்துடன் பொலிஸாரிடம் அகப்பட்டு சிறைக் கம்பிகளுக்குள் வாழ்க்கையை சுருக்கிக்கொண்டுள்ளேன்.
நான் பார்த்த கண்களுக்கு மற்றவர் என்னை பாலியல் பொம்மையாகவே பார்ப்பது போலவே தென்பட்டது. தந்தை என்னவானார்? என்றும் தெரியவில்லை. அவரை எண்ணி தினம் தினம் கண்ணீர் துளிகள் சொரிந்துகொண்டிருக்கிறேன். அவரை போய்ப்பார்க்கவும் எந்நிலைக் கூறியழவும் மனம் ஏங்குகிறது.
பிள்ளைகளை கவனிக்காது போன தாய் தந்தையர்க்கு என் வாழ்வு பாடமாக அமையவேண்டும். பணம் என்பது தேவைதான். இருந்தாலும், பிள்ளைகளின் பாதுகாவலராக அவர்கள் எப்போதும் அருகே இருக்கவேண்டும்.
சுகநலன்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.
நான் ஒரு விலைமாதுவாக முத்திரைக் குத்தப்பட்டுவிட்டேன். குடுகாரியாக முத்திரை குத்தப்பட்டு விட்டேன். இதிலிருந்து மீள்வேனா? இல்லை மூழ்கி விடுவேனா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இ.சதீஸ்
சிறைக்கம்பிகளுக்குள் சிதைந்து போன மனத்தோடு நிரோஷா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தன் வாழ்வை எண்ணிக்கொண்டு நொந்து கொண்டிருக்கிறாள். அவள் தன் வாழ்வில் கடந்து வந்த பாதைதனை உலகுக்குக் காட்ட எத்தனிக்கிறாள்.
பிறந்தது முதல் எனக்கு மகிழ்ச்சியென்பது அத்திப்பூ பூப்பதுபோலவே அமைந்திருந்தது. இரண்டு வயதில் தாய் என்னை விட்டு விட்டுப் போய்விட்டாள். தந்தையின் அரவணைப்பில் அறியாத வயதில் காலம் தள்ளினேன். எனது எதிர்காலத்தை எண்ணி எனது தந்தை வெளிநாட்டுக்குப் பணிபுரியப் போனாராம். அப்போது எனக்கு வயது மூன்று. போகும்போது என்னையென் அத்தை வீட்டில் விட்டுச்சென்றுள்ளார்.
அதற்குப் பின்னர் நான் ஐந்து வயதாக இருக்கும் போது அப்பா திரும்பி வந்துள்ளார். நான் அவரைப்பார்த்தவுடன் பயந்து அழுததாகவும் பின்னர் அவரே என்னை சமாதானப்படுத்தி நான் தான் உன் அப்பா என்று புரியவைக்க இரண்டு நாட்களானது என்றும் பின்னர் மாமா கூறியது நினைவிருக்கிறது. அப்போது நான் அம்மா எங்கே என்று கேட்டதற்கு அம்மா நம்மை விட்டு சாமியிடம் போய்விட்டதாக எனக்கு கூறினார்.
அவர் வந்து மூன்று மாதங்களுக்கு பின்னர் மீண்டும் வெளிநாட்டுக்கே சென்றுவிட்டார். அத்தை என்னை அன்பாக பார்த்துக்கொள்வார் என்று கூறியே அப்பா விடைபெற்றுச்சென்றார். எனினும், அத்தை என்னை ஓர் வேலைக்காரியைப்போன்றே நடத்தினார். அத்தையின் வீட்டில் மாமாவும் அவர்களுக்கு இரண்டு பிள்ளைகளும் இருந்தனர். மூத்தவனுக்கு என்னையொத்த வயது. கடைக்குட்டி என்னைவிட இளையவன். வீட்டில் இவர்கள் இருவரது வேலைகளையும் நானே செய்யவேண்டிய நிலைக்கும் தள்ளப்பட்டேன். எனது தந்தை எனது செலவுக்காக அனுப்பிய பணத்தை அத்தை தனக்கும் தன் குடும்பத்திற்கும் பயன்படுத்திக்கொண்டு சுகபோக வாழ்வை வாழ்ந்தார். எனக்கு கிழிந்த ஆடைகளும் கண்ணீருமே எஞ்சின. அன்பிற்கும் பாசத்திற்கும் ஏங்கிய கண்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
காலவோட்டத்தில் நான் பருவமடைந்தேன். அதேவேளை, தந்தையும் நாடு திரும்பினார். என்னைப் பார்த்ததும் அழுதேவிட்டார்.
'மகளே நீ எவ்வளவு அழகாக இருக்கிறாய் தெரியுமா? உன் அம்மாவைப் பார்த்தது போல இருக்கிறது. உன்னைப்பார்க்க அவளுக்கு கொடுத்து வைக்கவில்லையே நீ நீடூழி வாழவேண்டுமென்று'' வாழ்த்தினார். அவருடன் நான் கழித்த பொழுதுகள் தான் என் வாழ்வில் நான் பெற்ற பொற்சுவடுகள். அவரும் குறித்த காலத்தினுள் வெளிநாட்டுக்கே திரும்பிச் சென்றுவிட்டார். எனக்கோ மீண்டும் இருட்டுக்குள் தள்ளப்பட்ட ஓர் உணர்வு. தந்தை இருக்கும் வரை அத்தை என்னை நன்றாக பார்த்துக்கொண்டார். இல்லை இல்லை பார்த்துக்கொண்டது போல நடித்தார் என்றுதான் சொல்லவேண்டும்.
தந்தை போன பிறகு அத்தையின் மகன்களுடன் நான் பேசுவதைத் தடுத்து வந்தாள். எனக்கு அப்போது காரணம் விளங்கவில்லை நாட்கள் செல்லச் செல்ல என்னைப் பார்ப்பவர்களின் கண்களில் நான் ஒரு மாற்றத்தைக் கண்டேன். அதோடு எனக்குள்ளும் மாற்றங்கள் நடந்தன. என்னை நானே இரசிக்கத் தொடங்கினேன். சில வேளைகளில் எனது அழகை கண்ணாடியில் பார்க்கவே நேரக்கணக்கில் செலவிடுவேன்.
இதன் போதுதான் சாதாரண தரப் பரீட்சைத்தேர்வை நான் எழுதினேன். பரீட்சை முடிந்த பிறகு முடிவுகள் வரும்வரை வீட்டில் இருந்தேன். அத்தை வேலைக்கு போய்விடுவார். அத்தையின் மூத்த மகனும் என்னுடன் தேர்வை எழுதிவிட்டு வேறு வேலைக்கு சென்றான். தம்பியும் பள்ளிக்கூடம் சென்று விடுவான்.
நான் மட்டும் தான் தனியே வீட்டில் இருந்தேன். வேலைக்கு போகும் மாமாவும் அதன்பிறகு வீட்டில் இருக்க ஆரம்பித்தார். போகப்போகத்தான் அவரது சுயரூபம் எனக்கு தெரிந்தது. அவர் என்னை அடைய நெருங்கிவந்தார். அவரிடமிருந்து விடுபட முயற்சித்தேன். அந்த வீட்டிலிருந்து தப்பித்துப்போகவும் முடிவு செய்தேன்.
ஆனால், அதற்குள் எல்லாமே நடந்துமுடிந்து விட்டது. மாமாவோடு கொண்ட உறவின் காரணமாக நான் கருவுற்றேன். அதற்கு பின்னர் எனக்கு அத்தை வீட்டில் இருக்க பிடிக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் தந்தைக்கு கடிதமொன்றை எழுதி தபால் செய்துவிட்டு இரவோடிரவாக வீட்டைவிட்டு வந்துவிட்டேன்.
கருவுற்ற சிசுவும் வயிற்றில் தங்கவில்லை. அதற்கு பிறகு வீடுகளில் வேலை செய்யத்தொடங்கினேன். ஆனாலும் தொடர்ந்து என்னால் ஒரு வீட்டில் வேலைசெய்ய முடியவில்லை. குறித்த வீட்டில் இருக்கும் ஏதாவது ஆண்மகனால் பாலியல் தொல்லைகள் தொடர்ந்த வண்ணமேயிருந்தன. எனக்கே ஏன் பிறந்தோம் என்ற அளவுக்கு வெறுப்பு ஏற்பட்டது. எந்தவொரு வீட்டிலும் ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு மேல் இருக்கமுடியவில்லை.
இறுதியில் வயதான பாட்டியொருவரை கவனிக்கும் பொறுப்பு எனக்கு கிடைத்தது. அந்த பாட்டியும் அவரது மகளும் என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டனர். நானும் அவர்களது பராமரிப்பில் நலமாக வாழ்ந்துவந்தேன். அவர்களது வீட்டில் இருந்த என் வயது மதிக்கத்தக்க சாரதியும் என்னோடு அன்பாக பழகினார். அன்பிற்கும் பாசத்திற்கு பாதுகாப்பிற்கும் ஏங்கித் தவித்த எனக்கு அனைத்தும் அவ்வீட்டில் கிடைத்தன. எனது பழைய கால கசப்பான சம்பவங்களை மறந்தேன், அந்த வீட்டில் என்னை நான் புதிதாய் உணர்ந்தேன். அன்பாகப் பழகிய சாரதி திலங்கவுக்கும் எனக்கும் இடையில் காதல் மலர்ந்தது. நான் அவரை ஆத்மார்த்தமாக நேசித்தேன். என்னுடைய கடந்த கால விடயங்கள் அனைத்தையும் அவருக்கு கூறினேன்.
அவரும் எனக்கு ஆறுதலாய் பேசினார். என்னை திருமணம் செய்வதாகவும் வாக்களித்தார். இவ்வாறிருக்க, இவ்விடயம் பாட்டிக்கும் அவரது மகளுக்கும் தெரியவந்தது அவர்களும் அவனை திருமணம் செய்துகொள்ளுமாறு கூறினர். திடீரென ஒருநாள் திலங்க காணாமல் போனார். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.
''நீ பயப்பட வேண்டாம் நாங்கள் உன்னைப்பார்த்துக்கொள்வோம்'' என்று பாட்டி கூறிய வார்த்தைகளில் சமாதானமாகினேன். ஒருமாத காலத்திற்கு பின்னர் திலங்க என்னை வந்து சந்தித்தார். தான் அம்மாவைப் பார்க்கப்போனதாக அவர் கூறினார். திலங்க வந்த சில நாட்களுக்கு பிறகு என்னிடம் வந்து நாம் இருவரும் இங்கிருந்து சென்று திருமணம் செய்து கொள்வோம் என்றார். நான் முதலில் அதற்கு மறுத்தேன். அப்போது எனக்கு வெறும் இருபது வயதுதான் ஆகியிருந்தது.
பாட்டிக்கும் மகளுக்கும் சொல்லாமல் என்னால் வரமுடியாது என்றேன். இருந்தும் திலங்க தொடர்ந்து என்னை கட்டாயப்படுத்தி அவருடைய அக்காவின் வீட்டிற்கு அழைத்துச்சென்றார். ஒருவாரம் வரை அங்கு அவருடன் தங்கியிருந்தேன். அங்கு அவரது அக்கா என்னுடன் அன்பாகப் பழகினார். பின்னர் ஒருநாள் அவரது சொந்த ஊருக்கு போய் இரண்டு நாட்களில் வந்து விடுவதாக கூறிச்சென்றார். போனவர் போனது தான் திரும்பவே இல்லை.
அந்த அக்காவும் நீ இங்க தங்க வேண்டுமானால் வாடகை தரவேண்டும் என்று அதட்டினார். அதற்கு நான் ஏன் வாடகை தரவேண்டும் எனக் கேட்டேன். பின்னர் அவர் கூறியவற்றை கேட்டதும் தான் நான் மீண்டும் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்டேன். அவர் திலங்கவைப் பற்றிய உண்மைகளைக் கூறினார். அவன் ஏற்கனவே திருமணமானவன் என்றதும் எனக்கு தலையே சுற்றியது. என்ன செய்வதென்றே புரியவில்லை. தலையில் கைவைத்தபடி கட்டிலில் அமர்ந்து எண்ணிக்கொண்டிருந்தேன். மீண்டும் பாட்டியின் வீட்டிற்கு செல்லவும் மனம் வரவில்லை.
அந்த அக்கா கூறினார். "உன்னைப் பற்றி திலங்க என்னிடம் எல்லாவற்றையும் கூறிவிட்டான். உன்னிடம் தற்போது இழப்பதற்கு ஒன்றுமில்லை. நான் கூறுவது போல நீ நடந்துகொண்டால் சாகும் வரை நீ இங்கே இருக்கலாம். மீண்டும் தெருத்தெருவாக சென்று சீரழிய வேண்டியதில்லை" என்றார். அப்போது எனக்கு அவர் கூறியதை மறுக்க முடியவில்லை. அங்கிருந்து தப்பித்துபோகவும் வழியில்லை. விதியை நொந்துகொண்டு அவர் பேச்சைக்கேட்டு நடைபிணமாய் வாழ ஆரம்பித்தேன். ஒவ்வொரு நாளும் நேரம் காலமில்லாமல் விலைமாதுவாக பொழுதைக் கழித்தேன். நிறைய பணம் சேர்ந்தது. கொடுப்பதற்கு யாருமில்லை. அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு சிறிய வீடொன்றைக் கட்டினேன்.
அதற்குப் பின்னர் மேர்வின் என்பவரை சந்தித்தேன். அதன் தொடர்ச்சியாக பெரிய ஹோட்டல்களில் விலைமாதுவாக தொழில்புரிய ஆரம்பித்தேன். பணக்காரர்களோடு உறவுகள் வைத்துக்கொள்ளவேண்டிய நிலை வந்தது. எனினும், சில வேளைகளில் பொலிஸாரின் சுற்றி வளைப்புகளிலும் சிக்கி சில நாட்கள் சிறைச்சாலைகளிலும் அடைபட்டு கிடந்தேன். அங்கிருந்து வெளியே வந்து மீண்டும் விலைமாதுவாக பயணத்தைத் தொடர்ந்தேன். என் வாழ்க்கையை எண்ணி நான் கண்ணீர் விடாத நாளில்லை. இதிலிருந்து விடுபடப் போய் போதைவஸ்துவுக்கு அடிமையாகிப் போனேன். அதுவே என் அழிவுக்கு பிள்ளையார் சுழி போட்டது. போதை வஸ்துக்காக மீண்டும் விபசாரத்தில் ஈடுபட்டேன். நான் சம்பாதித்த அனைத்தையும் போதைவஸ்துக்காக செலவு செய்தேன்.
இறுதியில் இரண்டு கிராம் போதைவஸ்துடன் பொலிஸாரிடம் அகப்பட்டு சிறைக் கம்பிகளுக்குள் வாழ்க்கையை சுருக்கிக்கொண்டுள்ளேன்.
நான் பார்த்த கண்களுக்கு மற்றவர் என்னை பாலியல் பொம்மையாகவே பார்ப்பது போலவே தென்பட்டது. தந்தை என்னவானார்? என்றும் தெரியவில்லை. அவரை எண்ணி தினம் தினம் கண்ணீர் துளிகள் சொரிந்துகொண்டிருக்கிறேன். அவரை போய்ப்பார்க்கவும் எந்நிலைக் கூறியழவும் மனம் ஏங்குகிறது.
பிள்ளைகளை கவனிக்காது போன தாய் தந்தையர்க்கு என் வாழ்வு பாடமாக அமையவேண்டும். பணம் என்பது தேவைதான். இருந்தாலும், பிள்ளைகளின் பாதுகாவலராக அவர்கள் எப்போதும் அருகே இருக்கவேண்டும்.
சுகநலன்களை பகிர்ந்துகொள்ள வேண்டும்.
நான் ஒரு விலைமாதுவாக முத்திரைக் குத்தப்பட்டுவிட்டேன். குடுகாரியாக முத்திரை குத்தப்பட்டு விட்டேன். இதிலிருந்து மீள்வேனா? இல்லை மூழ்கி விடுவேனா? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.
இ.சதீஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக