வெள்ளி, 4 மார்ச், 2016

உங்களுக்கு ஒன்று சொல்வேன்

வர­வி­ருக்கும் தமி­ழக சட்­ட­சபைத் தேர்­த­லுக்­காக திரா­விட முன்­னேற்றக் கழகம் காங்­கிரஸ் கட்­சி­யுடன் மீண்டும் கூட்டுச் சேர்ந்­தி­ருப்­ப­தை­ய­டுத்து இலங்கைத் தமிழர் பிரச்­சினை தேர்தல் பிர­சா­ரங்­களின் முக்­கிய பேசுபொருள்­களில் ஒன்­றாக இருக்­கப்­போ­கி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.



இலங்கைப் போரின் இறுதிக் கட்­டங்­களின் போது தமி­ழ­கத்தில் தி.மு.க.வும் டில்­லியில் காங்­கிரஸ் கட்­சி­யுமே ஆட்­சியில் இருந்­தன. தமி­ழர்­க­ளுக்கு ஏற்­பட்ட அழிவைத் தடுக்கத் தவ­றி­ய­தாக கலைஞர் மீதும் சோனியா மீதும் ஏற்­க­னவே கடு­மை­யான குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்­தி­ருக்கும் தமி­ழ­கத்தின் ஏனைய கட்­சிகள் சிறப்­பாக, ஜெய­ல­லி­தாவின் அண்ணா தி.மு.க., தமி­ழர்­க­ளுக்கு துரோகம் செய்­த­வர்கள் மீண்டும் சேர்ந்துகொண்­டுள்­ளார்கள் என்று சூடுபறக்கப் பிர­சாரம் செய்ய போகின்­றன.

ராஜீவ்­காந்தி கொலை வழக்கில் தண்­டனை பெற்­ற­வர்­களை விடு­தலை செய்­வ­தற்கு முடிவு செய்­தி­ருக்கும் ஜெய­ல­லிதா அர­சாங்கம், மோடி அர­சிடம் கருத்­துக்­கேட்டு கடிதம் எழு­தி­யி­ருப்­ப­தை­ய­டுத்து தோன்­றி­யி­ருக்கும் சூழ்­நிலை தேர்தல் பிர­சா­ரங்­களை மேலும் பர­ப­ரப்­பாக்கப் போகி­றது என்­பதில் சந்­தே­க­மில்லை.

முன்­ன­தாக, 2014 பெப்­ர­வ­ரி­யிலும் இந்­திய பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்கு முன்­ன­தாக ராஜீவ் கொலை வழக்கு கைதி­களை விடு­தலை செய்­வ­தற்கு முடி­வெ­டுத்த ஜெய­ல­லிதா அர­சாங்கம் மத்­திய அர­சாங்­கத்­திடம் அபிப்­பி­ரா­யத்தைக் கேட்டி­ருந்­தது. அவ்­வேளை காங்­கிரஸ் தலைமை­யி­லான அரசே மத்­தியில் ஆட்­சியில் இருந்­தது. தமி­ழக அர­சாங்­கத்தின் முடிவை எதிர்த்து மத்­திய அரசு உச்ச நீதி­மன்­றத்தில் வழக்குத் தொடர்ந்­தது.
அன்று மூன்று நாள் அவ­கா­சத்தில் பதில் தரு­மாறு காங்­கிரஸ் அரசை கேட்­டி­ருந்த ஜெய­ல­லிதா அர­சாங்கம் இப்­போது எத்­த­கைய கால அவ­கா­சத்­தையும் குறிப்­பி­டாமல் எமது அர­சிடம் கருத்துக் கேட்­கி­றது.

மோடி அரசு என்ன பதில் தெரி­விக்­கப்­போ­கி­றது என்­பதை அறிய இந்­தி­யாவில் உள்­ள­வர்கள் மட்­டு­மல்ல, இலங்­கை­யிலும் உள்­ள­வர்­களும் ஆவ­லுடன் காத்துக் கொண்­டி­ருக்­கி­றார்கள். ஜெய­ல­லிதா அர­சாங்­கத்தின் முடி­வுக்கு எதி­ராக காங்­கிரஸ் டில்­லியில் ஏற்­க­னவே போர்க்­கொடி தூக்­கி­யி­ருக்­கி­றது.

கலை­ஞரைப் பெறுத்தவரை இது ஒரு திரி­சங்கு நிலை, ராஜீவ் கொலை வழக்கு கைதி­களை விடு­தலை செய்­வதை ஆத­ரித்துக் கருத்துக் கூறினால் காங்­கி­ரஸின் கோபத்­துக்கு ஆளாக வேண்­டி­வரும். எதி­ராகக் கருத்துச்சொன்னால் தமி­ழக கட்­சி­களின் கண்­ட­னத்­துக்­குள்­ளாக வேண்டிவரும். ஏதா­வது ஒரு சட்ட ரீதி­யான பிரச்­சி­னையை சுட்டிக் காட்­டித்தான் கலைஞர் கருத்து வெளி­யி­ட­கூடும்.

எது எவ்­வா­றி­ருந்­தாலும், இலங்கைத் தமிழர் பிரச்­சி­னை­யுடன் தொடர்­பு­டைய விவ­கா­ரங்­களை கலை­ஞ­ருக்கு எதி­ரான வலி­மை­யான ஆயு­த­மாகப் பயன்­ப­டுத்­து­வதில் பெரிய கெட்­டிக்­கா­ரி­யாக ஜெய­ல­லிதா செயற்­ப­டு­கிறார் என்­றுதான் சொல்ல வேண்டும்.

கலை­ஞ­ருக்கு எதி­ராகப் பயன்­ப­டுத்த முடி­யு­மென்றால் ஜெய­ல­லிதா எந்­தவொரு பிரச்­சி­னை­யையும் அதன் விளை­வு­களைப் பொருட்­ப­டுத்­தாமல் பயன்­ப­டுத்­துவார். ஜெய­ல­லி­தா­வுக்கு எதி­ராகப் பயன்­ப­டுத்த முடி­யு­மென்றால் கலை­ஞரும் எந்­த­வொரு பிரச்­சி­னை­யையும் அதன் விளை­வு­க­ளையும் பொருட்­ப­டுத்­தாமல் பயன்­ப­டுத்தத் தவ­ற­மாட்டார். இதுவே தமி­ழக திரா­விட அர­சி­யலில் எழு­தப்­ப­டாத ஒரு விதி­யாக இருந்து வரு­கி­றது. இலங்கைத் தமிழர் பிரச்­சி­னையும் இதற்கு விதி­வி­லக்கு அல்ல.

ராஜீவ்­காந்தி கொலை செய்­யப்பட்ட போது தமி­ழ­கத்தில் இருந்த சகல இலங்கைத் தமிழ் அதி­க­ளையும் உட­ன­டி­யாக திருப்­பி­ய­னுப்ப வேண்­டு­மென்று எந்­த­வி­த­மான முன் யோச­னை­யு­மின்றிக் கோரிக்கை முன்­வைத்­தவர் ஜெய­ல­லிதா.

இப்­போது அதே ராஜீவ்­காந்தி கொலை வழக்கின் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான முடி­வையும் அவரே எடுத்து மோடி அர­சாங்­கத்­துக்கு கடிதம் எழு­தி­யி­ருக்­கிறார்.

இந்தக் கைதி­களின் ஆயுட்­காலச் சிறைத் தண்­ட­னையின் எஞ்­சிய காலத்தை ரத்துச் செய்­வ­தற்கு ஜெய­ல­லிதா அர­சாங்கம் முடி­வு­களை எடுத்த இரு சந்­தர்ப்­பங்­க­ளுமே தேர்தல் கால­கட்­டங்­க­ளே­யாகும்.
மோடி அரசு கொடுக்­கக்­கூ­டிய பதிலில் தமிழக தேர்தல் களத்தில் அவரின் பாரதிய ஜனதா கட்சிக்கும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியது என்பதிலும் சந்தேகமில்லை.

என்னதான் இருந்தாலும், இலங்கை தமிழர் பிரச்சினையை பயன்படுத்தி தமிழகத்தில் தன்னை யாருமே முட்டி முந்தாமல் இருப்பதை ஜெயலலிதா வெகு சாதுரியமாக உறுதிசெய்து கொண்டிருக்கிறார் என்பது உண்மை. தமிழே தன் மூச்சு என்று முழங்குகிற கலைஞர் கூட இதில் அடக்கம். வைகோ, சீமான், நெடுமாறன் எந்த மாத்திரம்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல