ஒரு பெண் இப்பூமியில் பிறந்து வளர்ந்து கல்வி, தொழில்நிலைகளில் உயர்நிலைகளை அடைந்து எவ்வளவு முன்னேறினாலும் ஒரு திருமணமும் அதனைத் தொடர்ந்து ஏற்படும் தாய்மைப் பேறுமே அவளது வாழ்வை முழுமையாக்குகின்றன. இதுவே இயற்கையும் இறைவனின் படைப்பும்.
தாய்மையடையும் பெண் ஒருவரின் உடல், மன நிலைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதாவது இவ்வளவு நாளும் சாதாரண ஒரு பெண்ணாக வலம்வந்த அந்தபெண் கர்ப்பமடைந்து இன்னொரு உயிரைச்சுமந்து இப்பூமிக்குக் கொண்டுவருவதானது அவளது வாழ்க்கையின் அடுத்த படிநிலை. இதனை சிலர் மறுஜென்மம் என்று கூட கூறுவர். இவ்வாறான ஒரு உயர்படிநிலைக்கு செல்லும் பெண் அதற்கேற்றவாறு அவளது உடல் உள மாற்றங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான மாற்றங்கள் எவை என்பதும் அவற்றை எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றியும் ஆராய்வோம்.
கருத்தரிப்பின் போது பெண்ணின் பாலுறுப்புகளில் மட்டுமன்றி ஏனைய உடல் உறுப்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் பிரசவம் நடைபெற்றபின் ஆறு கிழமைகளுக்குள் பழையபடி முன்புபோல் மாறிவிடுகின்றன. உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலானவை கருவைச் சேர்ந்துள்ள பிளசென்ராவிலிருந்து சுரக்கப்படும் ஹோர்மோன்களினால் ஏற்படுகின்றன.
இம்மாற்றங்களில் பெரும்பாலானவை கர்ப்பந்தரித்தவுடன் தொடங்கி தொடர்ந்து கர்ப்பகாலம் முடியும் வரை நடைபெறும்.
கருப்பையில் ஏற்படும் மாற்றங்கள்
சாதாரண பெண்களில் (கரு அற்ற நிலையில்) 50– 6-0 g நிறையுடைய அநேகமாக கெட்டியான ஒரு உறுப்பாக கர்ப்பப்பை உள்ளது.
கருத்தரித்ததும் இது மெலிவான உறுப்பாக மாறி ஒரு குழந்தை, தொப்புள்கொடி, குழந்தையை சுற்றியுள்ள பனிக்குடநீர் என்பவற்றை ஏற்று தாங்கிக் கொள்ளக்கூடிய ஒரு உறுப்பாக மாற்றமடைகிறது. ஹோர்மோன்களின் மாற்றங்களால் கருப்பை வளர்ச்சியடைவதால் இதன் நிறையும் அதிகரிக்கின்றது.
வழக்கமாக தலைகீழாக வைக்கப்பட்ட பியர்ஸ் பழத்தின் உருவத்திலிருக்கும் கர்ப்பப்பை 3 ஆம் மாதத்தில் உருண்டை உருவமாக மாறி நீள்வட்ட வடிவாக கர்ப்ப முடிவிலும் இருக்கும். இவ்வாறு பல மாற்றங்களுக்கும் உட்படும் கர்ப்பப்பை பிரசவத்தின் பின்னர் மீண்டும் பழைய நிலையை (பெரும்பாலும்) அடையும்.
கர்ப்பப்பை வாயிலில் ஏற்படும் மாற்றங்கள்
இது கரு அற்ற நிலையில் கெட்டியானதாக இருக்கும். பின்னர் கர்ப்பந்தரித்ததும் மென்மையடைவதுடன் இதன் நிறமும் சற்று நீலநிற சாயலை அடைகின்றது. இவை இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் ஏற்படுவன. கருத்தரிப்பு நடைபெற்றதும் ஒருவகை சளிகட்டி போன்ற திரவம் இதன் வாயை மூடுகின்றது. இது பிரசவம் தொடங்கும்போது சற்று இரத்தத்துடன் சேர்ந்து இரத்தக்கசிவாக வெளியேறுகின்றது. கர்ப்பகால முடிவில் கருப்பை வாய் இன்னும் மெதுமையாகி இலகுவாக விரிவடையக்கூடியதாக மாறுகின்றது. இதனால் பிரசவத்தின் போது முழுமையாக விரிவடைந்து குழந்தை வெளியேற உதவுகின்றது. இம்மாற்றங்கள் எல்லாம் ஹோர்மோன்களினால் ஏற்படுகின்றன.
யோனிக்குழலில் ஏற்படும் மாற்றங்கள்
யோனிக்குழலில் உள்மென்சவ்வு கருத்தரித்த பின்னர் கடினமாகின்றது. இதன் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது. இதன் விளைவாக இதிலிருந்து சுரக்கும் திரவம் அதிகரிக்கின்றது. இதனால் யோனிக்குழலின் நிறமும் மாற்றமடைகின்றது. யோனிக்குழலின் நீளம் அதிகரிப்பதுடன் சுவர்கள் விரிவடைகின்றன. இவ்வாறு விரிவடைவதனால்தான் இதன்மூலம் குழந்தை பிறக்கக் கூடியதாகவுள்ளது
கருப்பை வாயிலிருந்தும் யோனிக் குழலிலிருந்தும் உற்பத்தியாகும் திரவங்கள் கூடுதலால் கருவுற்ற பெண்களில் அதிகம் வெள்ளைப் படுதல் ஏற்படுகின்றது. இவ்வெள்ளை நிறத்திரவம் சற்று தடிப்பானதாக இருக்கும். இதனால் ஒரு தீமையும் ஏற்படாது. இது கருவுற்றிருப்பதனால் ஏற்படும் மாற்றங்களால் கருவுற்ற பெண்களில் சற்று கூடுதலாக இருக்கும்.
இதனைவிட ஏதேனும் கிருமித் தொற்றுக்களால் ஏற்படும் வெள்ளைபடுதலுக்கு வைத்திய ஆலோசனை பெறுதல் சிறந்தது.
மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்
கருத்தரித்த பெண்களில் மார்பகங்கள் பெரிதாகி அவற்றின் முலைக்காம்புகளும் பெரிதாகின்றன. இவற்றின் நிறமும் மாற்றமடைகின்றன. (மேலும் கருமையடைகின்றன)
இவை சற்று அதிகமாக நிமிர்ந்தும் சிலிர்ப்பும் தொடு வலியுணர்ச்சியும் ஏற்படுகின்றன.
சிலபெண்களில் முலைக்காம்பிலிருந்து ஒருவகையான திரவம் ஊறும். கருத்தரித்து 12 கிழமைகளிலிருந்து இது தொடங்கும் இதனை சீம்பால் என்பர். மார்பகங்களை சற்று அழுத்தினால் இத்திரவத்தை வெளியேற்றலாம்.
இருதயம்/இரத்தக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்கள்
கருத்தரித்த பெண்களில் இரத்த ஓட்டம் இதயத்துடிப்பு என்பன அதிகரிக்கின்றன. இரத்தத்தை கட்டிபடச்செய்யும் பொருட்கள் இரத்தத்தில் அதிகரிக்கின்றன. குழந்தைக்கு தேவையான இரும்புச்சத்து, பிராணவாயுவை கொண்டு செல்வதற்காக குருதியில் சிவப்பணுக்கள் அதிகரிக்கின்றன.
இக்காலப்பகுதியில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும் இரும்புச்சத்து மாத்திரைகளை
பெண்கள் ஒழுங்காக உள் எடுத்தல் அவசியம். கருத்தரிப்பின் போது ஏற்படும் மாற்றங்களை தாங்குவதற்காக இருதயமும் இரத்தக்குழாய்களும் அளவுக்கு சற்று அதிகமாகவே மாற்றமடைகின்றன. இதன்போது இரத்த அழுத்த நோயுடையவர்கள் தகுந்த வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகங்கள், தோல் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கருத்தரித்தவர்களில் உடம்பு சற்று சூடாக இருப்பதுடன் அதிகளவு வியர்வை வெளியேற்றமும் காணப்படும். சிலருக்கு மூக்கடைப்பு, முரசிலிருந்து இரத்தக்கசிவு போன்றனவும் ஏற்படலாம்.
சுவாசத்தொகுதியில் ஏற்படும் மாற்றங்கள்
கர்ப்பப்பை பெரிதாகும்போது பிரிப்புத்தசை மேலுயர்வதால் நீங்கள் மூச்சு விடும்போது அதனை உணரக்கூடியதாக உள்ளதோடு சற்று ஆழமாக மூச்சுவிடவேண்டியும் ஏற்படுகிறது. கர்ப்பத்திலுள்ள சிசுவிற்கும் சேர்த்து அதிக ஒட்சிசன் தேவைப்படுவதாலும் இவ்வாறான மாற்றங்கள் சுவாசத்தில் ஏற்படுகின்றன. இந்த சந்தர்ப்பங்களில் கிருமி நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டால் உடனடியாக தகுந்த வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரை வெளியேற்றும் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள்
இவை எல்லாவற்றினதும் பரிமாணங்கள் அதிகரிப்பதால் இவற்றின் இரத்த ஓட்டம், கழிவுகளை வடிகட்டுதல் என்பனவும் அதிகரிக்கின்றன. ஆகவே கருத்தரித்தவர்கள் அடிக்கடி சிறுநீர் வெளியேற்ற வேண்டியிருக்கும்.
சிறுநீரைச் சேகரிக்கும் பகுதிகள் விரிவடைவதால் சிறுநீர் தேங்குவது அதிகரித்து அதன்காரணமாக கிருமி நோய்களுக்குக் காரணமாகின்றது. கருத்தரித்த பெண்களில் சுருங்குதசைகள் சற்று தளர்வடைவதால் சிறுநீரை அடக்க முடியாமை, சிறுநீர் ஒழுக்கு, இருமல், சிரிப்பு, மூக்குச்சீறல் செய்யும்போது கட்டுப்பாடின்றி சிறியளவு சீறுநீர் வெளியேறுதல் போன்றன ஏற்படலாம்.
சிறுநீரக மாற்றங்கள் யாவும் பிரசவத்தின் பின் சிறிது காலத்தில் மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடுகின்றன.
வயிறு, குடல் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள்
வளர்ந்துவரும் கருப்பையால் வயிறு, குடல், பெருங்குடல் என்பன அவற்றின் வழமையான இடத்திலிருந்து சற்றுமேலே அல்லது பக்கங்களுக்கு தள்ளப்படுகின்றன. இவ்வாறு வயிற்றுத்தசைகள், இரைப்பை தசைகளில் ஏற்படும் மாற்றங்களால் நெஞ்செரிவு ஏற்படுகின்றது. பெருங்குடலில் ஏற்படும் மாற்றங்களால் மலச்சிக்கல் ஏற்படுகின்றது. இதனால் பெண்களில் மூலநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
நாளங்களுள் ஏற்படக் கூடிய இரத்த அழுத்தம் காரணமாக கருத்தரித்த பெண்களில் வெரிகோஸ் வெயின் ஏற்படலாம். ஹோர்மோன் மாற்றங்களால் பித்தப்பையில் தோன்றும் பித்தக் கற்களால் வயிற்றுவலி ஏற்படவும் வாய்ப்புண்டு.
இவை தவிர ஹோர்மோன்களின் தொழிற் பாட்டால் மார்பகங்களில் பால்சுரத்தல் தூண்டப் படுகின்றது.
சாதாரணமாக கருத்தரித்த பெண் ஒருவரின் நிறை அதிகரிக்கின்றது. அதிகரிக்கும் எடையின் அரைப்பங்கு பெரும்பாலும் குழந்தை, பனிக்குடநீர் போன்றவற்றால் ஏற்படு கின்றது.
எனவே பெண்களே! கர்ப்பம் என்பது இயற்கையான ஒரு நிகழ்வு. இதனை கவனத்துடனும் ஒழுங்கான வைத்திய பரிசோதனைகளுடனும் பராமரித்து பிரசவத்தை இலகுவாக்குவது உங்களது கடமை. பிரசவத்தின் பின்னும் ஒழுங்கான உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள் மூலமும் உங்கள் வைத்தியரின் அறிவுரையுடனும் உங்கள் உடல்நிலையைப் பேணுவதும் உங்கள் கடமை.
டாக்டர் கு.சுஜாகரன்
இலங்கை
தாய்மையடையும் பெண் ஒருவரின் உடல், மன நிலைகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன. அதாவது இவ்வளவு நாளும் சாதாரண ஒரு பெண்ணாக வலம்வந்த அந்தபெண் கர்ப்பமடைந்து இன்னொரு உயிரைச்சுமந்து இப்பூமிக்குக் கொண்டுவருவதானது அவளது வாழ்க்கையின் அடுத்த படிநிலை. இதனை சிலர் மறுஜென்மம் என்று கூட கூறுவர். இவ்வாறான ஒரு உயர்படிநிலைக்கு செல்லும் பெண் அதற்கேற்றவாறு அவளது உடல் உள மாற்றங்களுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது.
இவ்வாறான மாற்றங்கள் எவை என்பதும் அவற்றை எவ்வாறு முகங்கொடுப்பது என்பது பற்றியும் ஆராய்வோம்.
கருத்தரிப்பின் போது பெண்ணின் பாலுறுப்புகளில் மட்டுமன்றி ஏனைய உடல் உறுப்புகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு ஏற்படும் மாற்றங்கள் பிரசவம் நடைபெற்றபின் ஆறு கிழமைகளுக்குள் பழையபடி முன்புபோல் மாறிவிடுகின்றன. உடல் உறுப்புகளில் ஏற்படும் மாற்றங்கள் பெரும்பாலானவை கருவைச் சேர்ந்துள்ள பிளசென்ராவிலிருந்து சுரக்கப்படும் ஹோர்மோன்களினால் ஏற்படுகின்றன.
இம்மாற்றங்களில் பெரும்பாலானவை கர்ப்பந்தரித்தவுடன் தொடங்கி தொடர்ந்து கர்ப்பகாலம் முடியும் வரை நடைபெறும்.
கருப்பையில் ஏற்படும் மாற்றங்கள்
சாதாரண பெண்களில் (கரு அற்ற நிலையில்) 50– 6-0 g நிறையுடைய அநேகமாக கெட்டியான ஒரு உறுப்பாக கர்ப்பப்பை உள்ளது.
கருத்தரித்ததும் இது மெலிவான உறுப்பாக மாறி ஒரு குழந்தை, தொப்புள்கொடி, குழந்தையை சுற்றியுள்ள பனிக்குடநீர் என்பவற்றை ஏற்று தாங்கிக் கொள்ளக்கூடிய ஒரு உறுப்பாக மாற்றமடைகிறது. ஹோர்மோன்களின் மாற்றங்களால் கருப்பை வளர்ச்சியடைவதால் இதன் நிறையும் அதிகரிக்கின்றது.
வழக்கமாக தலைகீழாக வைக்கப்பட்ட பியர்ஸ் பழத்தின் உருவத்திலிருக்கும் கர்ப்பப்பை 3 ஆம் மாதத்தில் உருண்டை உருவமாக மாறி நீள்வட்ட வடிவாக கர்ப்ப முடிவிலும் இருக்கும். இவ்வாறு பல மாற்றங்களுக்கும் உட்படும் கர்ப்பப்பை பிரசவத்தின் பின்னர் மீண்டும் பழைய நிலையை (பெரும்பாலும்) அடையும்.
கர்ப்பப்பை வாயிலில் ஏற்படும் மாற்றங்கள்
இது கரு அற்ற நிலையில் கெட்டியானதாக இருக்கும். பின்னர் கர்ப்பந்தரித்ததும் மென்மையடைவதுடன் இதன் நிறமும் சற்று நீலநிற சாயலை அடைகின்றது. இவை இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் ஏற்படுவன. கருத்தரிப்பு நடைபெற்றதும் ஒருவகை சளிகட்டி போன்ற திரவம் இதன் வாயை மூடுகின்றது. இது பிரசவம் தொடங்கும்போது சற்று இரத்தத்துடன் சேர்ந்து இரத்தக்கசிவாக வெளியேறுகின்றது. கர்ப்பகால முடிவில் கருப்பை வாய் இன்னும் மெதுமையாகி இலகுவாக விரிவடையக்கூடியதாக மாறுகின்றது. இதனால் பிரசவத்தின் போது முழுமையாக விரிவடைந்து குழந்தை வெளியேற உதவுகின்றது. இம்மாற்றங்கள் எல்லாம் ஹோர்மோன்களினால் ஏற்படுகின்றன.
யோனிக்குழலில் ஏற்படும் மாற்றங்கள்
யோனிக்குழலில் உள்மென்சவ்வு கருத்தரித்த பின்னர் கடினமாகின்றது. இதன் இரத்த ஓட்டமும் அதிகரிக்கின்றது. இதன் விளைவாக இதிலிருந்து சுரக்கும் திரவம் அதிகரிக்கின்றது. இதனால் யோனிக்குழலின் நிறமும் மாற்றமடைகின்றது. யோனிக்குழலின் நீளம் அதிகரிப்பதுடன் சுவர்கள் விரிவடைகின்றன. இவ்வாறு விரிவடைவதனால்தான் இதன்மூலம் குழந்தை பிறக்கக் கூடியதாகவுள்ளது
கருப்பை வாயிலிருந்தும் யோனிக் குழலிலிருந்தும் உற்பத்தியாகும் திரவங்கள் கூடுதலால் கருவுற்ற பெண்களில் அதிகம் வெள்ளைப் படுதல் ஏற்படுகின்றது. இவ்வெள்ளை நிறத்திரவம் சற்று தடிப்பானதாக இருக்கும். இதனால் ஒரு தீமையும் ஏற்படாது. இது கருவுற்றிருப்பதனால் ஏற்படும் மாற்றங்களால் கருவுற்ற பெண்களில் சற்று கூடுதலாக இருக்கும்.
இதனைவிட ஏதேனும் கிருமித் தொற்றுக்களால் ஏற்படும் வெள்ளைபடுதலுக்கு வைத்திய ஆலோசனை பெறுதல் சிறந்தது.
மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள்
கருத்தரித்த பெண்களில் மார்பகங்கள் பெரிதாகி அவற்றின் முலைக்காம்புகளும் பெரிதாகின்றன. இவற்றின் நிறமும் மாற்றமடைகின்றன. (மேலும் கருமையடைகின்றன)
இவை சற்று அதிகமாக நிமிர்ந்தும் சிலிர்ப்பும் தொடு வலியுணர்ச்சியும் ஏற்படுகின்றன.
சிலபெண்களில் முலைக்காம்பிலிருந்து ஒருவகையான திரவம் ஊறும். கருத்தரித்து 12 கிழமைகளிலிருந்து இது தொடங்கும் இதனை சீம்பால் என்பர். மார்பகங்களை சற்று அழுத்தினால் இத்திரவத்தை வெளியேற்றலாம்.
இருதயம்/இரத்தக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்கள்
கருத்தரித்த பெண்களில் இரத்த ஓட்டம் இதயத்துடிப்பு என்பன அதிகரிக்கின்றன. இரத்தத்தை கட்டிபடச்செய்யும் பொருட்கள் இரத்தத்தில் அதிகரிக்கின்றன. குழந்தைக்கு தேவையான இரும்புச்சத்து, பிராணவாயுவை கொண்டு செல்வதற்காக குருதியில் சிவப்பணுக்கள் அதிகரிக்கின்றன.
இக்காலப்பகுதியில் சிவப்பணுக்களை அதிகரிக்கச் செய்யும் இரும்புச்சத்து மாத்திரைகளை
பெண்கள் ஒழுங்காக உள் எடுத்தல் அவசியம். கருத்தரிப்பின் போது ஏற்படும் மாற்றங்களை தாங்குவதற்காக இருதயமும் இரத்தக்குழாய்களும் அளவுக்கு சற்று அதிகமாகவே மாற்றமடைகின்றன. இதன்போது இரத்த அழுத்த நோயுடையவர்கள் தகுந்த வைத்திய ஆலோசனையைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
சிறுநீரகங்கள், தோல் பகுதிகளுக்கு இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் கருத்தரித்தவர்களில் உடம்பு சற்று சூடாக இருப்பதுடன் அதிகளவு வியர்வை வெளியேற்றமும் காணப்படும். சிலருக்கு மூக்கடைப்பு, முரசிலிருந்து இரத்தக்கசிவு போன்றனவும் ஏற்படலாம்.
சுவாசத்தொகுதியில் ஏற்படும் மாற்றங்கள்
கர்ப்பப்பை பெரிதாகும்போது பிரிப்புத்தசை மேலுயர்வதால் நீங்கள் மூச்சு விடும்போது அதனை உணரக்கூடியதாக உள்ளதோடு சற்று ஆழமாக மூச்சுவிடவேண்டியும் ஏற்படுகிறது. கர்ப்பத்திலுள்ள சிசுவிற்கும் சேர்த்து அதிக ஒட்சிசன் தேவைப்படுவதாலும் இவ்வாறான மாற்றங்கள் சுவாசத்தில் ஏற்படுகின்றன. இந்த சந்தர்ப்பங்களில் கிருமி நோய்த்தொற்றுக்கள் ஏற்பட்டால் உடனடியாக தகுந்த வைத்திய ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டும்.
சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரை வெளியேற்றும் பகுதிகளில் ஏற்படும் மாற்றங்கள்
இவை எல்லாவற்றினதும் பரிமாணங்கள் அதிகரிப்பதால் இவற்றின் இரத்த ஓட்டம், கழிவுகளை வடிகட்டுதல் என்பனவும் அதிகரிக்கின்றன. ஆகவே கருத்தரித்தவர்கள் அடிக்கடி சிறுநீர் வெளியேற்ற வேண்டியிருக்கும்.
சிறுநீரைச் சேகரிக்கும் பகுதிகள் விரிவடைவதால் சிறுநீர் தேங்குவது அதிகரித்து அதன்காரணமாக கிருமி நோய்களுக்குக் காரணமாகின்றது. கருத்தரித்த பெண்களில் சுருங்குதசைகள் சற்று தளர்வடைவதால் சிறுநீரை அடக்க முடியாமை, சிறுநீர் ஒழுக்கு, இருமல், சிரிப்பு, மூக்குச்சீறல் செய்யும்போது கட்டுப்பாடின்றி சிறியளவு சீறுநீர் வெளியேறுதல் போன்றன ஏற்படலாம்.
சிறுநீரக மாற்றங்கள் யாவும் பிரசவத்தின் பின் சிறிது காலத்தில் மீண்டும் பழைய நிலையை அடைந்துவிடுகின்றன.
வயிறு, குடல் போன்றவற்றில் ஏற்படும் மாற்றங்கள்
வளர்ந்துவரும் கருப்பையால் வயிறு, குடல், பெருங்குடல் என்பன அவற்றின் வழமையான இடத்திலிருந்து சற்றுமேலே அல்லது பக்கங்களுக்கு தள்ளப்படுகின்றன. இவ்வாறு வயிற்றுத்தசைகள், இரைப்பை தசைகளில் ஏற்படும் மாற்றங்களால் நெஞ்செரிவு ஏற்படுகின்றது. பெருங்குடலில் ஏற்படும் மாற்றங்களால் மலச்சிக்கல் ஏற்படுகின்றது. இதனால் பெண்களில் மூலநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.
நாளங்களுள் ஏற்படக் கூடிய இரத்த அழுத்தம் காரணமாக கருத்தரித்த பெண்களில் வெரிகோஸ் வெயின் ஏற்படலாம். ஹோர்மோன் மாற்றங்களால் பித்தப்பையில் தோன்றும் பித்தக் கற்களால் வயிற்றுவலி ஏற்படவும் வாய்ப்புண்டு.
இவை தவிர ஹோர்மோன்களின் தொழிற் பாட்டால் மார்பகங்களில் பால்சுரத்தல் தூண்டப் படுகின்றது.
சாதாரணமாக கருத்தரித்த பெண் ஒருவரின் நிறை அதிகரிக்கின்றது. அதிகரிக்கும் எடையின் அரைப்பங்கு பெரும்பாலும் குழந்தை, பனிக்குடநீர் போன்றவற்றால் ஏற்படு கின்றது.
எனவே பெண்களே! கர்ப்பம் என்பது இயற்கையான ஒரு நிகழ்வு. இதனை கவனத்துடனும் ஒழுங்கான வைத்திய பரிசோதனைகளுடனும் பராமரித்து பிரசவத்தை இலகுவாக்குவது உங்களது கடமை. பிரசவத்தின் பின்னும் ஒழுங்கான உணவுப்பழக்கங்கள், உடற்பயிற்சிகள் மூலமும் உங்கள் வைத்தியரின் அறிவுரையுடனும் உங்கள் உடல்நிலையைப் பேணுவதும் உங்கள் கடமை.
டாக்டர் கு.சுஜாகரன்
இலங்கை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக