திங்கள், 11 ஜூலை, 2016

ஒரே மாதத்தில் மெலிந்த முடியை அடர்த்தியாக்க வேண்டுமா? இந்த ட்ரிக்ஸ்களை ட்ரை பண்ணுங்க...

தற்போது தலைமுடி பிரச்சனை என்பது பெரும்பாலான மக்கள் சந்திக்கும் ஒன்றாக உள்ளது. தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணிகள் உள்ளன. அதில் அளவுக்கு அதிகமாக உடல் மற்றும் மனம் அழுத்தத்திற்குள்ளாவது, ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், ஊட்டச்சத்துக் குறைபாடுகள், அலர்ஜி, மோசமான தலைமுடிப் பராமரிப்பு மற்றும் தவறான தலைமுடி பராமரிப்புப் பொருட்களைப் பயன்படுத்துவது போன்றவை குறிப்பிடத்தக்கவை.



என்ன தான் கடைகளில் தலைமுடி உதிர்வதற்கான பொருட்கள் விற்கப்பட்டாலும், அவற்றில் சேர்க்கப்படும் கெமிக்கல்களால் தற்காலிகமாக தலைமுடி உதிர்வது நிற்குமே தவிர, அதன் உபயோகத்தை நிறுத்தினால் அதன் உண்மையான சுயரூபம் தெரியும்.

ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள 3 வழிகளைப் பின்பற்றினால், முடி அதிகம் உதிர்ந்து மெலிந்திருப்பது நீங்கி, தலைமுடி ஒரே மாதத்தில் அடர்த்தியாகி இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.


வெண்ணெய் பழம்/அவகேடோ

பாதி அவகேடோ பழத்தை எடுத்து, அதில் உள்ள சதைப்பகுதியை தனியாக ஒரு பௌலில் எடுத்துக் கொண்டு, பின் அத்துடன் 2 டேபிள் ஸ்பூன் கோதுமை எண்ணெய் சேர்த்து கலந்து, தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி 20 நிமிடம் ஊற வைத்து, பின் சீகைக்காய் போட்டு அலச வேண்டும்.

மற்றொரு முறை

இல்லாவிட்டால், ஒரு அவகேடோ பழத்தின் சதைப்பகுதியை எடுத்து, அத்துடன் 1 வாழைப்பழத்தை மசித்து சேர்த்து, அதோடு 1 டேபிள் ஸ்பூன் ஆலிவ் ஆயில் சேர்த்து கலந்து, தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும்.

முட்டை

முட்டை கூட தலைமுடி அடர்த்தியாக வளர உதவும். அதற்கு தலைமுடியின் நீளத்திற்கு ஏற்ப 1-2 முட்டையை ஒரு பௌலில் உடைத்து ஊற்றி நன்கு அடித்து, தலைமுடியில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து, பின் ஷாம்பு போட்டு வெதுவெதுப்பான நீரில் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 2 முறை மேற்கொள்ள வேண்டும்.

இரண்டாம் முறை

மற்றொரு முறை

இல்லையெனில், ஒரு முட்டையின் மஞ்சள் கருவுடன் 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து, அதோடு 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் தடவி நன்கு மசாஜ் செய்து, பின் ஷாம்பு போட்டு அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால், ஒரு மாதத்தில் முடி அடர்த்தியாகி இருப்பதைக் காணலாம்.

மூன்றாம் முறை


ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயிலை வெதுவெதுப்பாக சூடேடற்றி, அந்த எண்ணெயைக் கொண்டு தலையை நன்கு மசாஜ் செய்து, 30-45 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு போட்டு அலச வேண்டும். வேண்டுமானால் இந்த இரவு முழுவதும் நன்கு ஊற வைத்து, மறுநாள் காலையில் கூட அலசலாம்.

thatstamil
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல