சுருங்கிய தோள், மங்கிய கண், நரைத்த முடி என முதுமை பருவம் எய்தி, 60 வயதுக்கு பின்னரும் ஓய்வெடுக்க முடியாமல் பசிக்காக உழைத்துக்கொண்டிருக்கும் சிரேஷ்ட பிரஜைகள் எனப்படும் முதியோர்கள் எம்மத்தியில் இன்னும் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றனர்.
20 வயதில் உழைக்க ஆரம்பிக்கும் ஒருவர் சுமார் 40 ஆண்டுகள் குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் நிர்வாகத்துக்காகவும் உழைத்து களைத்து போகின்றனர். உழைப்பின் பின் இளைப்பாற இவர்களுக்கு நிம்மதியான ஒரு இருப்பிடம் கூட இல்லாதுள்ளமையே கவலைக்குரிய விடயமாகும்.
மலையகத்தை பொறுத்தவரையில், அநேகர் பெருந்தோட்டங்களில் பணி புரிந்தவர்கள். அவர்கள் பணி புரியும் காலம் நிறைவுற்று ஓய்வு பெறும் வயதை அடைந்ததும் அவர்களை குடும்பமும் தோட்ட நிர்வாகங்களும் கண்டுகொள்வதில்லை. அரச ஊழியராக இருக்கும் பட்சத்தில் மாதாந்தம் அவர்களுக்கான ஓய்வூதிய சம்பளப்பணம் சாகும் வரை வந்துகொண்டிருக்கும்.
மலையகத்தை பொறுத்தவரை அரச ஊழியர்களாக இருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் மிகக்குறைந்த அளவினரேயாகும். பெரும்பாலானோர் தனியார் துறை அதுவும் தேயிலை தோட்டங்களிலேயே பணி புரிந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு எதிர்காலத்தில் இருக்கும் ஒரே சேமிப்பு ஓய்வூதிய நிதிகள்தான் (EPF/ETF) அது அவர்களுக்கு இலட்சக்கணக்கில் இருக்கும். ஆனால், அத்தொகை மாதாந்தம் இல்லாது ஒரே தடவையில் பெறும் நிலையே உள்ளது. அவர்கள் அதை அப்படியே பிள்ளைகளுக்கு தாரைவார்த்துவிடுகின்றனர். அல்லது பிள்ளையின் திருமணம், வாகனம் பெறல், முதலானவற்றுக்கு வழங்கிவிடுகின்றனர். ஆனால் அவர்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது அவர்களுக்கே புரியாத புதிராகிவிடுகிறது. பணம் கிடைக்கும் போது பிள்ளைகளின் முகத்தில் தெரியும் புன்முறுவல் போக போக மறைந்துவிடுவதும் வேதனைதான்.
பராமரிக்கப்படுவதில்லை
தனது குழந்தையை பராமரிக்கவே முதியவர்களான தமது தாய், தந்தை உள்ளனர் எனும் எண்ணத்தில் இருக்கும் நாளைய முதியவர்களான இன்றைய குடும்பஸ்தர்கள் தாம் அவர்களை பராமரிக்க வேண்டும் எனும் எண்ணப்பாட்டை பெரும்பாலும் கொண்டிருப்பதில்லை.
அதனால் உழைத்து ஓய்ந்த பின்னரும் இன்றும் வியாபார நிலையங்களிலும் செல்வந்தர்களின் வீடுகளிலும் கொழும்பு போன்ற இடங்களிலும் தள்ளாத வயதில் தொழில் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்படுகின்றது. சிலர் பாதையோரங்களில் பிறரிடம் கையேந்தும் நிலையில் யாசகம் செய்வதுதான் வேதனையின் உச்சம். அத்தோடு வீட்டை காக்கவும், வேலைகளை செய்யவும் என வீடுகளில் வேலைக்காரர்களாவிட்ட முதியோர்கள் மனதளவில் பாரிய பாதிப்பை எதிர்கொள்கின்றனர். சிலர் நடந்துசெல்ல முடியாத நிலையில், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதும் ஒரு பக்கம் வேதனைதரும் விடயமாகிறது.
கண்டு கொள்ளாத பெருந்தோட்ட நிறுவனங்கள்
தமது நிறுவனத்துக்காக இத்தனை காலம் கஷ்டப்பட்டு உழைத்த முதியவர்கள் வீடுகளில் அனுபவிக்கும் வேதனையையும் கொடுமைகளையும் அறிந்தும் அவர்களுக்கு மாற்றீடொன்றை வழங்க தோட்ட நிர்வாகங்கள் முன்வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தோட்டத்தில் ஓய்வூதியத்துக்கு பெயர் கொடுத்து முடிந்த அடுத்த கணமே அவர்களுக்கும் தோட்டத்துக்கும் உள்ள பந்தம் ,உறவு முடிந்துவிடுவதாக நினைக்கின்றது நிர்வாகம். ஆனால், சில நிறுவனங்கள் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் முதியோர் கழகங்கள், சங்கங்கள் அமைத்து அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு கலை நிகழ்வுகளையும், விளையாட்டு போட்டிகளையும் நடத்தினாலும் அது ஒரு வரையறைக்குள் இடம்பெறுகிறதே தவிர, முதியோருக்கு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிப்படுத்தும் தீர்வாக அது அமையாது.
சில தோட்டங்களில் நிர்வாகங்கள் அவர்களுக்கு தேயிலை தூள் வழங்குதல் உள்ளிட்ட சில அடிப்படை சலுகைகளைக் கூட வழங்க மறுக்கின்றன. அத்தோடு சில சிரேஷ்ட பிரஜைகள் ஓய்வூதியம் பெற்ற பின்னரும் தொழிலுக்கு அமர்த்தப் படுகின்றனர். அதாவது வயதெல்லை தாண்டி, ஓய்வு பெறும் வயதை அடைந்ததும் ஓய்வை பெறும் இவர்கள் தினக்கூலி (கைகாசு) தொழிலில் அமர்த்தப்படுகின்றனர்.
ஆனால் அவர்களுக்கான முதியோர் இல்லங்களோ, பொழுதை கழிப்பதற்கான கட்டிடங்களோ, அவர்களுக்கென தனித்துவம் வாய்ந்த இடங்களோ அமைக்கப்படுவதில்லை என்பதே உண்மை. குறிப்பாக சில விரல்விட்டு எண்ணக்கூடிய இடங்களில் மாத்திரமே குறித்த செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொத்மலை பிரதேச எல்பிட்டிய பெருந்தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட மடக்கும்பர தோட்டத்தில் அறிந்த வகையில் இவ்வாறானதொரு முதியோர் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. வேறெங்கும் அமைக்கப்பட்டதாகவோ, நிர்வாகத்தால் அத்தகைய செயற்பாட்டுக்கு அடிகோலிடப்பட்டதாகவோ அறிய முடியவில்லை. அப்படி எதுவும் இடம்பெறவில்லை என்பதே உண்மையாகும். எனவே இவ்வாறான செயற்பாடுகள் எல்லா தோட்டங்களுக்கும் பரவ வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.
முதியோர் தினத்தில் மட்டும் பேச்சு
குழந்தை மனம் கொண்டதாலோ என்னவோ சிறுவர் தினமும் முதியோர் தினமும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படும் முதியோர் தினத்தன்று மாத்திரம் முதியோர்கள் பற்றி எல்லா இடங்களிலும் கருத்து பகிரப்படுகிறது. அத்தினத்தில் முதியோர் என்பவர் யார்? அவர்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும்? எதிர்காலத்தில் எவ்வாறு அவர்கள் பராமரிக்கப்பட வேண்டும்? அவர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது? அவர்களுக்கென புதிய சில திட்டங்கள். என ஏகப்பட்ட விடயங்கள் இருக்கும் மறுநாளே எல்லாம் காணாமல் போய்விடும். பலத்து ஒலித்த விடயங்கள் புஸ்வானமாகிவிடும். அன்றே சிறுவர் தினமும் கொண்டாடப்படுவதால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அத்தினத்தை அனுபவிக்க முடியாத நிலைகூட இவர்களுக்கு தோன்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமூக தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு
இம் முதியோர்களை குடும்பமும் நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையில், தொண்டு நிறுவனமும் அரசும் அதிகமாக நோக்காமை வேதனையான விடயமாகும். குறிப்பாக, சமூக தொண்டு நிறுவனங்களும் பல்வேறு வேலைத்திட்டங்களை பல்வேறு வயதுப்பிரிவினருக்கு மேற்கொள்கிறது.
சிறுவர்,இளைஞர்,யுவதி ,தொழிலாளர்கள்,பெண்கள் என எல்லா வயதினருக்கும் வேலைத்திட்டங்களை முன்வைக்கிறது. பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் சமூக தனியார் நிறுவனங்கள் முன்னெடுக்கின்றன. அதில் ஒரு பிரிவாக முதியோர்களுக்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், குறுகிய கால அல்லது குறித்த சில நாட்களுக்கென முன்னெடுக்கப்படும் இவ் வேலைத்திட்டம் நீடித்து நிலைக்கும் படியானதாக இல்லை. முதியோர்களுக்கு என முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை நிறுவனங்கள் நீடிக்கவும் பெரும்பாலும் விரும்புவதில்லை. குறுகிய கால செயல்திட்டங்கள் தற்காலிகமாக அமையுமே தவிர, அவர்கள் வாழ்வில் வளம்பெற நிரந்தரமானதாக அது அமைவதில்லை. ஒரு விளையாட்டு போட்டி, கலைநிகழ்வு என அது குறுகியகால செயற்பாடாக அவர்களை மகிழ்விப்பது மாத்திரமே. அத்தோடு அது தவிர இதர செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிகழ்ச்சி திட்டமும் அவர்களிடம் இல்லை. அதை உருவாக்கவும் முடிவதில்லை காரணம் அவர்கள் ஒரு கட்டுக்குள் செயற்பட வேண்டிய நிலையிலும் குறுகியால செயல்திட்டங்களோடு குறித்தளவு நிதியை கொண்டு பயணிக்கின்றனர்.
அரசின் பங்களிப்பு
அரசாங்கம் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வேலைத்திட்டங்கள் , நிதி உதவி முதலான விடயங்களை முன்வைத்திருந்தாலும் மலையகத்தில் அதன் செயற்பாடுகள் குறித்த வளர்ச்சியை இன்னும் அடையவில்லை என்றே கூற வேண்டும். தற்போது அரசாங்கத்தால் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதாந்தம் 2000 ரூபா பணம் வழங்கும் நிகழ்வு குறித்த பிரதேச கிராம அலுவலரூடாக விண்ணப்பம் நிரப்பப்பட்டு, கூப்பன் வழங்கப்பட்டு அக்கூப்பனை கொண்டு சென்று தபாலகத்தில் செலுத்தி குறித்த பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சில இடங்களில் குறித்த திட்டம் நடைமுறை கோவையோடு சீராக இடம்பெறுவதில்லை. பல்வேறு இடங்களில் இது சிக்கல் நிறைந்ததாகவே காணப்படுகிறது. எல்லா முதியவர்களும் இதில் பதியப்படாமை, அத்தோடு பதியப்படாதவர்கள் கேட்டால் ஒருவர் இறந்தால் உங்கள் பெயரை சேர்க்கிறோம் என்பது, பணம் வழங்க குறித்த தினம் நிர்ணயிக்கப்படாமை, பிரதேச அடிப்படையில் வழங்காமல் அனைவரும் ஒரே தினத்தில் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை. என ஏகப்பட்ட பிரச்சினைகள், நடைமுறை சிக்கல்கள் இதில் இருக்கத்தான் செய்கின்றன. எனவே வழங்கப்படும் ஒரு சில திட்டங்களும் திருப்திகொள்ளத்தக்கதாக இல்லை.
எதிர்காலம் என்ன
சில காலங்களில் மரணத்தை எதிர்நோக்க இருக்கும் தற்கால முதியவர்களை தகுந்த முறையில் பாதுகாக்க வேண்டியது அனைத்து தரப்பினரதும் கடமையாகும். இன்றைய இளைஞர், யுவதிகளான நாம் நாளைய முதியவர்கள் எனும் எண்ணத்தில் தற்கால முதியவர்களை கரிசனையொடு பார்க்க வேண்டும்.
சில நாடுகளில் அவர்களுக்கு பல்வேறு இலவச திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக போக்குவரத்தின் போது கட்டணம் அறவிடாமை முதலானவை. ஆனால் எமது நாட்டில் இருக்கும் திட்டங்களும் சரியாக பயன்பாட்டில் இல்லை. அவர்களின் வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் வழியேற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இன்றைய சிறுவர்கள் தமது தாத்தா, பாட்டியான முதியோர்களை மதிக்கும் செயற்பாட்டிற்கு பழக்கப்படுத்த வேண்டும். இதை குடும்பமும் கல்வி கூடங்களும் பழக்கப்படுத்த வேண்டும்.
அனுபவம் வாய்ந்தவர்களின் படிப்பினைகள் அவசியம் என்பதை இளைஞர் சமுதாயம் உணர வேண்டும். அவர்களை மதித்து அரசும் பெருந்தோட்ட நிறுவனங்களும் பல்வேறு வசதியேற்பாடுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். நல்ல பல செயல்திட்டங்களை சமூக நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விடயத்தில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
20 வயதில் உழைக்க ஆரம்பிக்கும் ஒருவர் சுமார் 40 ஆண்டுகள் குடும்பத்துக்காகவும் குழந்தைகளுக்காகவும் நிர்வாகத்துக்காகவும் உழைத்து களைத்து போகின்றனர். உழைப்பின் பின் இளைப்பாற இவர்களுக்கு நிம்மதியான ஒரு இருப்பிடம் கூட இல்லாதுள்ளமையே கவலைக்குரிய விடயமாகும்.
மலையகத்தை பொறுத்தவரையில், அநேகர் பெருந்தோட்டங்களில் பணி புரிந்தவர்கள். அவர்கள் பணி புரியும் காலம் நிறைவுற்று ஓய்வு பெறும் வயதை அடைந்ததும் அவர்களை குடும்பமும் தோட்ட நிர்வாகங்களும் கண்டுகொள்வதில்லை. அரச ஊழியராக இருக்கும் பட்சத்தில் மாதாந்தம் அவர்களுக்கான ஓய்வூதிய சம்பளப்பணம் சாகும் வரை வந்துகொண்டிருக்கும்.
மலையகத்தை பொறுத்தவரை அரச ஊழியர்களாக இருந்து ஓய்வூதியம் பெறுபவர்கள் மிகக்குறைந்த அளவினரேயாகும். பெரும்பாலானோர் தனியார் துறை அதுவும் தேயிலை தோட்டங்களிலேயே பணி புரிந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு எதிர்காலத்தில் இருக்கும் ஒரே சேமிப்பு ஓய்வூதிய நிதிகள்தான் (EPF/ETF) அது அவர்களுக்கு இலட்சக்கணக்கில் இருக்கும். ஆனால், அத்தொகை மாதாந்தம் இல்லாது ஒரே தடவையில் பெறும் நிலையே உள்ளது. அவர்கள் அதை அப்படியே பிள்ளைகளுக்கு தாரைவார்த்துவிடுகின்றனர். அல்லது பிள்ளையின் திருமணம், வாகனம் பெறல், முதலானவற்றுக்கு வழங்கிவிடுகின்றனர். ஆனால் அவர்களின் அடுத்த கட்ட நகர்வு என்ன என்பது அவர்களுக்கே புரியாத புதிராகிவிடுகிறது. பணம் கிடைக்கும் போது பிள்ளைகளின் முகத்தில் தெரியும் புன்முறுவல் போக போக மறைந்துவிடுவதும் வேதனைதான்.
பராமரிக்கப்படுவதில்லை
தனது குழந்தையை பராமரிக்கவே முதியவர்களான தமது தாய், தந்தை உள்ளனர் எனும் எண்ணத்தில் இருக்கும் நாளைய முதியவர்களான இன்றைய குடும்பஸ்தர்கள் தாம் அவர்களை பராமரிக்க வேண்டும் எனும் எண்ணப்பாட்டை பெரும்பாலும் கொண்டிருப்பதில்லை.
அதனால் உழைத்து ஓய்ந்த பின்னரும் இன்றும் வியாபார நிலையங்களிலும் செல்வந்தர்களின் வீடுகளிலும் கொழும்பு போன்ற இடங்களிலும் தள்ளாத வயதில் தொழில் செய்ய வேண்டிய துர்ப்பாக்கிய நிலை அவர்களுக்கு ஏற்படுகின்றது. சிலர் பாதையோரங்களில் பிறரிடம் கையேந்தும் நிலையில் யாசகம் செய்வதுதான் வேதனையின் உச்சம். அத்தோடு வீட்டை காக்கவும், வேலைகளை செய்யவும் என வீடுகளில் வேலைக்காரர்களாவிட்ட முதியோர்கள் மனதளவில் பாரிய பாதிப்பை எதிர்கொள்கின்றனர். சிலர் நடந்துசெல்ல முடியாத நிலையில், கால்நடை வளர்ப்பில் ஈடுபடுவதும் ஒரு பக்கம் வேதனைதரும் விடயமாகிறது.
கண்டு கொள்ளாத பெருந்தோட்ட நிறுவனங்கள்
தமது நிறுவனத்துக்காக இத்தனை காலம் கஷ்டப்பட்டு உழைத்த முதியவர்கள் வீடுகளில் அனுபவிக்கும் வேதனையையும் கொடுமைகளையும் அறிந்தும் அவர்களுக்கு மாற்றீடொன்றை வழங்க தோட்ட நிர்வாகங்கள் முன்வருவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக தோட்டத்தில் ஓய்வூதியத்துக்கு பெயர் கொடுத்து முடிந்த அடுத்த கணமே அவர்களுக்கும் தோட்டத்துக்கும் உள்ள பந்தம் ,உறவு முடிந்துவிடுவதாக நினைக்கின்றது நிர்வாகம். ஆனால், சில நிறுவனங்கள் அவர்களுக்கு அங்கீகாரம் வழங்கும் வகையில் முதியோர் கழகங்கள், சங்கங்கள் அமைத்து அவர்களை மகிழ்விக்கும் பொருட்டு கலை நிகழ்வுகளையும், விளையாட்டு போட்டிகளையும் நடத்தினாலும் அது ஒரு வரையறைக்குள் இடம்பெறுகிறதே தவிர, முதியோருக்கு வாழ்நாள் முழுவதும் மகிழ்ச்சிப்படுத்தும் தீர்வாக அது அமையாது.
சில தோட்டங்களில் நிர்வாகங்கள் அவர்களுக்கு தேயிலை தூள் வழங்குதல் உள்ளிட்ட சில அடிப்படை சலுகைகளைக் கூட வழங்க மறுக்கின்றன. அத்தோடு சில சிரேஷ்ட பிரஜைகள் ஓய்வூதியம் பெற்ற பின்னரும் தொழிலுக்கு அமர்த்தப் படுகின்றனர். அதாவது வயதெல்லை தாண்டி, ஓய்வு பெறும் வயதை அடைந்ததும் ஓய்வை பெறும் இவர்கள் தினக்கூலி (கைகாசு) தொழிலில் அமர்த்தப்படுகின்றனர்.
ஆனால் அவர்களுக்கான முதியோர் இல்லங்களோ, பொழுதை கழிப்பதற்கான கட்டிடங்களோ, அவர்களுக்கென தனித்துவம் வாய்ந்த இடங்களோ அமைக்கப்படுவதில்லை என்பதே உண்மை. குறிப்பாக சில விரல்விட்டு எண்ணக்கூடிய இடங்களில் மாத்திரமே குறித்த செயற்பாடுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. கொத்மலை பிரதேச எல்பிட்டிய பெருந்தோட்ட நிறுவனத்துக்குட்பட்ட மடக்கும்பர தோட்டத்தில் அறிந்த வகையில் இவ்வாறானதொரு முதியோர் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. வேறெங்கும் அமைக்கப்பட்டதாகவோ, நிர்வாகத்தால் அத்தகைய செயற்பாட்டுக்கு அடிகோலிடப்பட்டதாகவோ அறிய முடியவில்லை. அப்படி எதுவும் இடம்பெறவில்லை என்பதே உண்மையாகும். எனவே இவ்வாறான செயற்பாடுகள் எல்லா தோட்டங்களுக்கும் பரவ வேண்டும் என்பதே எதிர்பார்ப்பாகும்.
முதியோர் தினத்தில் மட்டும் பேச்சு
குழந்தை மனம் கொண்டதாலோ என்னவோ சிறுவர் தினமும் முதியோர் தினமும் ஒரே நாளில் கொண்டாடப்பட்டு வருகிறது. ஒக்டோபர் முதலாம் திகதி கொண்டாடப்படும் முதியோர் தினத்தன்று மாத்திரம் முதியோர்கள் பற்றி எல்லா இடங்களிலும் கருத்து பகிரப்படுகிறது. அத்தினத்தில் முதியோர் என்பவர் யார்? அவர்கள் எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும்? எதிர்காலத்தில் எவ்வாறு அவர்கள் பராமரிக்கப்பட வேண்டும்? அவர்களை பராமரிக்க வேண்டிய பொறுப்பு யாருடையது? அவர்களுக்கென புதிய சில திட்டங்கள். என ஏகப்பட்ட விடயங்கள் இருக்கும் மறுநாளே எல்லாம் காணாமல் போய்விடும். பலத்து ஒலித்த விடயங்கள் புஸ்வானமாகிவிடும். அன்றே சிறுவர் தினமும் கொண்டாடப்படுவதால் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அத்தினத்தை அனுபவிக்க முடியாத நிலைகூட இவர்களுக்கு தோன்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.
சமூக தொண்டு நிறுவனங்களின் பங்களிப்பு
இம் முதியோர்களை குடும்பமும் நிர்வாகமும் கண்டுகொள்ளாத நிலையில், தொண்டு நிறுவனமும் அரசும் அதிகமாக நோக்காமை வேதனையான விடயமாகும். குறிப்பாக, சமூக தொண்டு நிறுவனங்களும் பல்வேறு வேலைத்திட்டங்களை பல்வேறு வயதுப்பிரிவினருக்கு மேற்கொள்கிறது.
சிறுவர்,இளைஞர்,யுவதி ,தொழிலாளர்கள்,பெண்கள் என எல்லா வயதினருக்கும் வேலைத்திட்டங்களை முன்வைக்கிறது. பல அபிவிருத்தி வேலைத்திட்டங்களையும் சமூக தனியார் நிறுவனங்கள் முன்னெடுக்கின்றன. அதில் ஒரு பிரிவாக முதியோர்களுக்கான வேலைத்திட்டமும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆனால், குறுகிய கால அல்லது குறித்த சில நாட்களுக்கென முன்னெடுக்கப்படும் இவ் வேலைத்திட்டம் நீடித்து நிலைக்கும் படியானதாக இல்லை. முதியோர்களுக்கு என முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களை நிறுவனங்கள் நீடிக்கவும் பெரும்பாலும் விரும்புவதில்லை. குறுகிய கால செயல்திட்டங்கள் தற்காலிகமாக அமையுமே தவிர, அவர்கள் வாழ்வில் வளம்பெற நிரந்தரமானதாக அது அமைவதில்லை. ஒரு விளையாட்டு போட்டி, கலைநிகழ்வு என அது குறுகியகால செயற்பாடாக அவர்களை மகிழ்விப்பது மாத்திரமே. அத்தோடு அது தவிர இதர செயற்பாடுகளை முன்னெடுக்கும் நிகழ்ச்சி திட்டமும் அவர்களிடம் இல்லை. அதை உருவாக்கவும் முடிவதில்லை காரணம் அவர்கள் ஒரு கட்டுக்குள் செயற்பட வேண்டிய நிலையிலும் குறுகியால செயல்திட்டங்களோடு குறித்தளவு நிதியை கொண்டு பயணிக்கின்றனர்.
அரசின் பங்களிப்பு
அரசாங்கம் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வேலைத்திட்டங்கள் , நிதி உதவி முதலான விடயங்களை முன்வைத்திருந்தாலும் மலையகத்தில் அதன் செயற்பாடுகள் குறித்த வளர்ச்சியை இன்னும் அடையவில்லை என்றே கூற வேண்டும். தற்போது அரசாங்கத்தால் 70 வயதுக்கு மேற்பட்டோருக்கு மாதாந்தம் 2000 ரூபா பணம் வழங்கும் நிகழ்வு குறித்த பிரதேச கிராம அலுவலரூடாக விண்ணப்பம் நிரப்பப்பட்டு, கூப்பன் வழங்கப்பட்டு அக்கூப்பனை கொண்டு சென்று தபாலகத்தில் செலுத்தி குறித்த பணத்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
சில இடங்களில் குறித்த திட்டம் நடைமுறை கோவையோடு சீராக இடம்பெறுவதில்லை. பல்வேறு இடங்களில் இது சிக்கல் நிறைந்ததாகவே காணப்படுகிறது. எல்லா முதியவர்களும் இதில் பதியப்படாமை, அத்தோடு பதியப்படாதவர்கள் கேட்டால் ஒருவர் இறந்தால் உங்கள் பெயரை சேர்க்கிறோம் என்பது, பணம் வழங்க குறித்த தினம் நிர்ணயிக்கப்படாமை, பிரதேச அடிப்படையில் வழங்காமல் அனைவரும் ஒரே தினத்தில் கால்கடுக்க நிற்க வேண்டிய நிலை. என ஏகப்பட்ட பிரச்சினைகள், நடைமுறை சிக்கல்கள் இதில் இருக்கத்தான் செய்கின்றன. எனவே வழங்கப்படும் ஒரு சில திட்டங்களும் திருப்திகொள்ளத்தக்கதாக இல்லை.
எதிர்காலம் என்ன
சில காலங்களில் மரணத்தை எதிர்நோக்க இருக்கும் தற்கால முதியவர்களை தகுந்த முறையில் பாதுகாக்க வேண்டியது அனைத்து தரப்பினரதும் கடமையாகும். இன்றைய இளைஞர், யுவதிகளான நாம் நாளைய முதியவர்கள் எனும் எண்ணத்தில் தற்கால முதியவர்களை கரிசனையொடு பார்க்க வேண்டும்.
சில நாடுகளில் அவர்களுக்கு பல்வேறு இலவச திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. குறிப்பாக போக்குவரத்தின் போது கட்டணம் அறவிடாமை முதலானவை. ஆனால் எமது நாட்டில் இருக்கும் திட்டங்களும் சரியாக பயன்பாட்டில் இல்லை. அவர்களின் வாழ்வுக்கும் பாதுகாப்புக்கும் வழியேற்படுத்தி கொடுக்க வேண்டும்.
இன்றைய சிறுவர்கள் தமது தாத்தா, பாட்டியான முதியோர்களை மதிக்கும் செயற்பாட்டிற்கு பழக்கப்படுத்த வேண்டும். இதை குடும்பமும் கல்வி கூடங்களும் பழக்கப்படுத்த வேண்டும்.
அனுபவம் வாய்ந்தவர்களின் படிப்பினைகள் அவசியம் என்பதை இளைஞர் சமுதாயம் உணர வேண்டும். அவர்களை மதித்து அரசும் பெருந்தோட்ட நிறுவனங்களும் பல்வேறு வசதியேற்பாடுகளை அவர்களுக்கு கொடுக்க வேண்டும். நல்ல பல செயல்திட்டங்களை சமூக நிறுவனங்கள் அறிமுகப்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் முதியவர்களுக்கு முன்னுரிமை கொடுக்கும் விடயத்தில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக