உலகிலேயே உயரமான நத்தார் மரத்தை அமைக்கும் பணிகள் மீண்டும் காலி முகத்திடலில் ஆரம்பிக்கப் படவுள்ளதாக துறைமுகங் கள் மற்றும் கப்பல்துறை அமைச்சு அறிவித்துள்ளது.
எதிர்வரும் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நத்தார் மரம் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படுமென்றும் அமைச்சு கூறியுள்ளது.
இது தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் மேலும் தெரிவிக்கையில்;
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கர்தினால் பேராயர் வண. மல்கம் ரஞ்சித் ஆண்டகையை கடந்த சனிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.
இப் பேச்சுக்களின் போது கொழும்பு காலி முகத்திடலில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சும் சுற்றுலாத்துறை அமைச்சும் இணைந்து அமைப்பதற்கு தீர்மானித்த உலகிலேயே உயரமான நத்தார் மரம் கர்தினாலின் வேண்டுகோளுக்கு இணங்க நிறுத்தப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது நத்தார் மரம் அமைப்பதற்கான தனது எதிர்ப்பை கர்தினால் மீளப் பெற்றுக் கொண்டு மரம் அமைப்பதற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிற்கு அறிவித்துள்ளார்.
இதற்கமைய காலி முகத்திடலில் உயரமான நத்தார் மரம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாவும் எதிர்வரும் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று மக்கள் பார்வைக்காக நத்தார் மரம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ள அதேவேளை இந்த நத்தார் மரம் பரோபகாரிகளின் உதவிகளுடனேயே அமைக்கப்படுகின்றது. இதற்காக பணம் செலவிடப்படவில்லை என்றார்.
இதேவேளை, கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்காக காலி முகத்திடலில் அமைக்கப்படும் உலகிலேயே உயரமான நத்தார் மரம் அமைப்பதை நிறுத்துமாறும், அதற்கு செலவாகும் பணத்தை இல்லாதவர்களுக்கு வழங்குமாறும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த 6 ஆம் திகதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க இப்பணிகள் நிறுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
எதிர்வரும் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நத்தார் மரம் மக்கள் பார்வைக்காக திறந்து வைக்கப்படுமென்றும் அமைச்சு கூறியுள்ளது.
இது தொடர்பாக துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சின் உயரதிகாரியொருவர் மேலும் தெரிவிக்கையில்;
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவும் கர்தினால் பேராயர் வண. மல்கம் ரஞ்சித் ஆண்டகையை கடந்த சனிக்கிழமை சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தினார்கள்.
இப் பேச்சுக்களின் போது கொழும்பு காலி முகத்திடலில் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சும் சுற்றுலாத்துறை அமைச்சும் இணைந்து அமைப்பதற்கு தீர்மானித்த உலகிலேயே உயரமான நத்தார் மரம் கர்தினாலின் வேண்டுகோளுக்கு இணங்க நிறுத்தப்பட்டமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.
இதன்போது நத்தார் மரம் அமைப்பதற்கான தனது எதிர்ப்பை கர்தினால் மீளப் பெற்றுக் கொண்டு மரம் அமைப்பதற்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.
இதனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உடனடியாக அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவிற்கு அறிவித்துள்ளார்.
இதற்கமைய காலி முகத்திடலில் உயரமான நத்தார் மரம் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாவும் எதிர்வரும் 20 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையன்று பணிகள் அனைத்தும் நிறைவுபெற்று மக்கள் பார்வைக்காக நத்தார் மரம் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ள அதேவேளை இந்த நத்தார் மரம் பரோபகாரிகளின் உதவிகளுடனேயே அமைக்கப்படுகின்றது. இதற்காக பணம் செலவிடப்படவில்லை என்றார்.
இதேவேளை, கின்னஸ் சாதனை புத்தகத்தில் பதிவதற்காக காலி முகத்திடலில் அமைக்கப்படும் உலகிலேயே உயரமான நத்தார் மரம் அமைப்பதை நிறுத்துமாறும், அதற்கு செலவாகும் பணத்தை இல்லாதவர்களுக்கு வழங்குமாறும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கடந்த 6 ஆம் திகதி கேட்டுக் கொண்டதற்கு இணங்க இப்பணிகள் நிறுத்தப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக