புதன், 8 மார்ச், 2017

அமெரிக்காவில் வெளிநாட்டவர்களுக்கு அடுத்த 'அடி'.. தொடரும் டிரம்ப் இம்சை..!

அமெரிக்காவில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான அரசு, அந்நாட்டில் வெளிநாட்டவர்கள் கையில் இருக்கும் வேலைவாய்ப்புகளைத் திரும்பப் பெற்று அந்நாட்டுக் குடிமக்கள் அளிக்க வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோள் உடன் செயல்பட்டு வருகிறது.



இதற்காக வெளிநாட்டுப் பணியாளர்களையும், மக்களையும் அமெரிக்காவை விட்டு வெளியேற்ற பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வந்த டிரம்ப் அரசு, தற்போது எச்4 விசா பெற்ற வெளிநாட்டவர்களுக்கு முறையாக வழங்கப்பட்ட Work permit-ஐயும் ரத்துச் செய்யத் திட்டமிட்டு வருகிறது.

இதற்கான அறிக்கையை வாஷிங்டன் நீதிமன்றத்தில் டிரம்ப் தலைமையிலான அரசு விவரித்துள்ளது.

பிப்ரவரி 2015

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பராக் ஓபாமா அவர்களின் தலைமையிலான ஆட்சிக் காலத்தில் எச்-1பி விசா வைத்திருக்கும் நபரின் மனைவி அல்லது கணவனுக்கு (எச்-4 விசா வைத்திருப்போர்) அமெரிக்காவில் வேலை செய்ய அனுமதி (Work permit) அளிக்கப்பட்டது.

இத்திட்டத்தின் மூலம் உலக நாடுகளில் இருந்து அமெரிக்காவில் எச்-1பி விசா கொண்டு வேலை பார்க்கும் அனைத்து நபர்களும் தங்களின் கணவன் மற்றும் மனைவிக்கு Work permit பெற முயற்சி செய்து, அமெரிக்காவில் தங்களுக்கான உரிமையைப் பெற்றனர்.

ஓபாமா அரசு இந்த அறிவிப்பை வெளியிட்ட உடனேயே SAVE JOBS USA என்ற அமைப்பு இந்த அறிவிப்பிற்கு எதிராக வழக்குத் தொடுத்து. இந்த வழக்கில் எவ்வித உறுதியான மற்றும் பாதிப்புகள் அளிக்கும் குற்றச்சாட்டுகள் இல்லை என்ற காரணத்தால் நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிராகரிக்கப்பட்டது.

அமெரிக்காவில் டிரம்ப் தலைமையிலான கட்சி ஆட்சிக்கு வந்த உடனேயே SAVE JOBS USA அமைப்பு மீண்டும் இந்த வழக்கை வாஷிங்டன் நீதிமன்றத்தில் தொடுத்தது. தற்போது டிரம்ப் தலைமையிலான ஆட்சியின் சட்ட நிர்வாகத் துறை இந்த வழக்கிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது.

60 நாட்கள் தடை

2017 பிப்ரவரி 1ஆம் தேதி SAVE JOBS USA அமைப்பு இந்த வழக்கை மீண்டும் தொடுத்து, தற்காலிகமாக 60 நாட்களுக்கு இப்பிரிவின் கீழ் வழங்கப்படும் அனுமதிகளை நிறுத்த வேண்டும் எனக் கோரிக்கை வைத்துள்ளது.

அமெரிக்காவில் குடியுரிமை குறித்த பிரச்சனைகள் அனைத்தும் ஜெப் செஷன்ஸ் அமெரிக்கச் சென்னேட்டராக இருந்த காலத்தில் இருந்து துவங்கியது. எச்-4 விசா உடையவர்களுக்கு அளிக்க அனுமதிக்கப்பட்ட விதிகள் அமெரிக்கர்களின் வேலைவாய்ப்பை நேரடியாத பறிக்கும் ஒன்று என ஜெப் கூறினார்.

இப்புதிய வழக்கிற்கு இந்தியர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான எதிர்ப்பு கிளம்பி வருகிறது.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Related Posts with Thumbnails
செய்தித் தளங்கள்
மீனகம் A A பதிவு A A ஈழ நேசன் A A ஈழம் சூன் A A ஈழ தேசம் A A ஈழம் வெப்சைட் A A நெருடல் A A வருடல் A A தாய்நிலம் A A தாளம் நியூஸ் A A அதிர்வு A A உயர்வு A A புலர்வு A A சரிதம் A A சங்கதி..2 A A சங்கதி..1 A A சங்கமம் A A ஈழம் வெப் (மாவீரர்) A A புதினப் பலகை A A புதினம் நியூஸ் A A யாழ் இணையம் A A ஈழம் ரைம்ஸ் A A இன்போ தமிழ் A A லங்காசிறி A A நாம் தமிழர் A A சிறுத்தைகள் A A பொங்கு தமிழ் A A ரூ தமிழ் இணையம் A A உலகத்தமிழ்ச் செய்தி A A உலகத் தமிழ் இணையம் A A செம்பருத்தி A A தமிழ்வின் A A தமிழ் அரசு A A தமிழ்த்தாய் A A தமிழ் உலகம் A A தமிழ் மீடியா A A தரவு இணையம் A A எதிரி இணையம் A A B.B.C தமிழ் செய்தி A A புதிய யாழ்ப்பாணம் A A கூகிள் தமிழ் செய்திகள் A A பாரிஸ் தமிழ்




புதினம்

புதினப்பலகை

தமிழ்வின்

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (உலகம்)

Google செய்திகள் (பொழுதுபோக்கு)

சினிமா எக்ஸ்பிரஸ்

About This Blog

BBC News | South Asia | World Edition

Sri Lanka News via iNFoPiG

Google செய்திகள் (இந்தியா)

Google செய்திகள் (இலங்கை)

Oneindia.in - thatsTamil

Google செய்திகள் (விளையாட்டு)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP  

^ மேலே செல்ல